Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 22 hours ago
இர‌ண்டு ஓவ‌ர் இருக்க‌ த‌க்க‌ நெத‌ர்ந்லாந் ம‌ச்சை வென்று விட்டின‌ம்.................அமோக‌ வெற்றி....................... ச‌கோத‌ர‌ர் @ஏராளன் இன்று முத‌ல‌மைச்ச‌ர் ஆகிறார் ஹா ஹா😍......................

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

2 days 22 hours ago
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி! ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர். https://athavannews.com/2026/1464002

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

2 days 22 hours ago

New-Project-22.jpg?resize=600%2C300&ssl=

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நோர்வூட் எல்படை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 1550 ரூபா அடிப்படை சம்பளமாகவும், வரவுக்கான கொடுப்பனவாக 200 ரூபாவும் வழங்கப்படுவதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, நோர்வூட் எல்படை தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பூஜைகள் செய்ததுடன், பாற்சோறு சமைத்து நன்றியை தெரிவித்தனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த தொழிலாளர்கள், கடந்த காலங்களில் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், ஆனால் இந்த முறை எந்தவித போராட்டமும் இன்றி, மக்களை வீதிக்கு இறக்காமல், ஜனாதிபதி உறுதியளித்தபடி சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதற்காக ஜனாதிபதிக்கும் பெருந்தோட்டத் துறை அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் சிலர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்த போதிலும், அது போதியளவில் அமையவில்லை என்றும், வரவுக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

தற்போதைய ஜனாதிபதி எந்தவித போராட்டமும் இன்றி கூடுதல் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது எனவும், இதற்காக ஜனாதிபதிக்கும் அவரது அரசாங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்ததாகவும் கூறினர்.

https://athavannews.com/2026/1464002

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 days 22 hours ago
உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோசான். ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன். தமிழ்த் தேசிய போர்வையை போர்ததியதன் மூலம் தமது வண்டவாளங்களை அந்த போர்வைக்குள் மறைத்து, நல்ல தமிழன், நல்ல அரசியல்வாதி, நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகளில் பலர் உண்டு. அன்றும் இன்றும் அது தான் உண்மை. எவ்வளவு இறுக அந்த போர்வையை போர்கிறர்களோ அந்தளவுக்கு அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாது காப்பாற்றப்படும் கேடயமாக அது செயற்படும் என்பதை புரிந்தவர்கள் அவர்கள். உதாரணங்கள் தந்தால் அதுவே நீண்ட விவாதம் ஆகும் என்பதால் தவிர்ககிறேன். டக்லஸ் நீண்ட காலம் அரசாங்கத்தில் அமைசராக இருந்தாரே தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டு தவிர ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஏதாவது திட்டங்கள் ஏதாவது செய்தாரா? எனது பார்வையில் அப்படி இல்லை. ஒரு வேளை எனது கண்ணுக்கு அது தெரியவில்லையோ? அவ்வாறு செய்தார் என்பதை நீங்கள் நிரூபித்தால் அவரது அந்த செயலை நான் ஆதரித்து எழுதுவேன். (கவனிக்க அந்த செயலை மட்டும்)

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 22 hours ago
டெல்லி மைதான‌த்துக்கு இது சின்ன‌ ஸ்கோர் நெத‌ர்லாந் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு............... நெத‌ர்லாந் தோத்தால் என‌க்கு முட்டை உங்க‌ளுக்கு புள்ளி நெத‌ர்லாந் வென்றால் என‌க்கு புள்ளி.........................

மணிபல்லவம்: இறகைப் போல விழும் வெடிகுண்டு- சிறில் அலெக்ஸ்

2 days 23 hours ago
மணிபல்லவம்: இறகைப் போல விழும் வெடிகுண்டு- சிறில் அலெக்ஸ் அன்புள்ள ஜெ, வாசு முருகவேல் எழுதிய மணிபல்லவம் நாவல் சென்னை புத்தகக் கண்காட்சியில் நீலம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு சிறப்பான கவனத்தை பெற்றிருக்கிறது. நாவல் மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு The Zone of Interest என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். ஆஷ்விட்ச்சின் (Auschwitz) தலைமை அதிகாரியான ரூடால்ஃப் ராஸ், அவரது குடும்பத்தினருடன் ஆஷ்விட்சை ஒட்டியிருந்த குடியிருப்பில் தங்கள் அன்றாட குடும்பவாழ்க்கையில் சாதாரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருப்பதுதான் படத்தின் கதையின் சாரம். பின்னணியில் உயர்ந்து நிற்கும் புகைபோக்கிகளில் என்னேரமும் கரும்புகை பொங்கி வானை நிறைத்துக்கொண்டிருக்கிறது. அவர் தன் பணியை ஒரு அரசாங்க சிப்பந்தியைப் போல செய்துகொண்டிருக்கிறார், வேலை போய்விடுமோ என கவலை கொள்கிறார். அங்கிருக்கும் கொலைக்கூடங்களின் திறனை அதிகரிப்பது குறித்து திட்டஙளிடுகிறார். அரசுக்கு அறிக்கைகளை அனுப்பி வைக்கிறார். வீட்டில் கணவனும் மனைவியும் குடும்ப சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். சமையல், துணி துவைப்பது, தோட்டத்தை பராமரிப்பது பிள்ளை வளர்ப்பு என அன்றாடப் பணிகள் அதனதன் போக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பின்னணியில் புகைபோக்கிகள் ஓய்வின்றி வானைக் கரியாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த திரைப்படத்திற்கும் மணிபல்லவத்திற்கும் இரு தொடர்புகள் உள்ளன. முதலில் இரண்டாம் உலகப்போர் குறித்து இன்னும் சொல்லி முடிக்கப்படாத கதைகள் இருப்பதைப் போலவே ஈழப் போரும் இன்னும் சொல்லித் தீராத ஒன்றாகவே உள்ளது. வாசு வருடத்திற்கு ஒரு நாவல் என்பதற்குப் பதில் அன்றாடம் ஒன்று என எழுதினாலும் அதன் கதைகள் தீரப் போவதில்லையோ என்று தோன்றுகிறது. அவருடன் ஷோபா சக்தியும், அகரமுதல்வனும், சயந்தனும், காலம் செல்வமும் எனப் பலரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் எழுதுவார்கள். இரண்டாவது தொடர்பு அல்லது ஒற்றுமை இரண்டிலும் பெருங்கொடுமைகள் அன்றாட வாழ்க்கையைச் சுற்றி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது. (The Zone of Interest படம் ஹானா ஆரண்ட்டின் Banality of violence உடன் ஒப்பிடப் படுகிறது.) உண்மையில் ஒரு விபத்து அல்லது கொடூரம் நிகழும் ஒரு நொடிக்கு முன்புவரை வாழ்க்கை இயல்பானதாகவே உள்ளது. நம் அன்றாடங்களுக்கு மத்தியில்தான் ஒரு போரின் முதல் குண்டு வந்து விழுகிறது, ஒரு கொலைக்கு முன்பான முதல் சலசலப்பு நிகழ்கிறது. காலையில் எழுந்து முகம் கழுவி உடை மாற்றி சாப்பிட்டு விட்டு ஒரு படகிலேறும் தீவுவாசிகளின் அன்றாடத்தில் நேவி நுழைகிறது. வாசு இந்த நாவலில் அதிகம் சொல்லியிருப்பது ‘நயினாத் தீவின்’ அன்றாட வாழ்க்கையை, அங்கிருந்த ‘ஆமி காம்பின்’ அன்றாடத்தை, கதைநாயகி ஷோபாவின் அன்றாடத்தை. இவற்றை இத்தனை இயல்பானதாகச் சொல்லியிருப்பதால் நாவலின் பிற முக்கிய நிகழ்வுகள் தனித்து தெரிகின்றன போலும். அதாவது வாசு நாவலை எதை நோக்கியும் செலுத்தவில்லை. அவர் சில நிகழ்வுகளைச் சொல்லிக் கொண்டு செல்கிறார். அந்த அன்றாடம் அசாதரணாமக மாறிய நாட்கள்கூட அதே நிதானத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றன. வாசுவின் ஒடுக்கமான உடலிலிருந்து கூக்குரல் எழுவதில்லை அவர் நம்முடன் சாதாரணமாக உரையாட மட்டுமே செய்கிறார். அதுவும் தனக்கேயுரிய தயக்கத்துடன்… இந்த நாவலை வாசு எப்படி திட்டமிட்டிருபார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை. என்னால் இந்த வடிவத்தை புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் வாசு ‘ஏன் எடுத்த மாட்டிலேயே ஒரு நாடகத்தைப் பின்னவில்லை? ஏன் அவர் படைத் தளபதிகள் திட்டங்கள் தீட்டும் காட்சிகளை எழுதவில்லை, எதிரியின் கொக்கரிப்பை ‘ஹ ஹ ஹ’ என்று எழுதவில்லை? ஏன் அவர் கொல்லப்படுபவர்களின் பரிதாபப் பின்னணிகளைச் சொல்லவில்லை?, அவர் ஏன் அவர்களை குற்றமற்றவர்களாகக் கூட காண்பிக்க முயலவில்லை?’ என்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஒரு குறைந்த பட்ச கொந்தளிப்புகூட இல்லாமல் ஒரு கொடுமையை எழுதிவிட முடியுமா! வாசு அதைத்தான் செய்திருக்கிறார். ஷோபா காலையில் எழுகிறாள், மீன்வாங்குகிறாள், குளம்பு வைக்கிறாள், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள், தெருவில் சைக்கிளோடு விழுந்து கிடப்பவனுக்கு உதவுகிறாள், தன் வீட்டுக்கு வருபவர்களுக்கு கசந்த தேனிரைத் தந்து உபசரிக்கிறாள், அவர்களது அறிவுரைகளைக் கேட்கிறாள் (காதில் மட்டும்) ஒரு நாள் கிளம்பி குழந்தையை எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் செல்கிறாள். அன்றாட, சாதாரண, தினசரி நிகழ்வுகள்… சிலர் பழைய தினசரித் தாளில் பலகாரத்தைப் பொதிந்து எடுத்துச் செல்வார்கள், சிலர் தங்கத்தைப் பொதிந்து கொண்டு செல்வார்கள், வாசு இரத்தம் தோய்ந்த கொடுவாள் ஒன்றைப் பொதிந்து வைத்துள்ளார். வாசுவும் அவர் படைப்புகளும் அரசியலற்றவை அல்ல என்பதும் நமக்குத் தெரியும். அதில் அவர் வெளிப்படையானவர். ஆனால் அரசியல் எத்தனை கவனத்துடனும், நயத்துடனும் பேசப்படுகிறது என்பது மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. நாவலின் முதல் சில வரிகள் இவை… ‘ஷோபா அன்றைக்குக் காலையில் எழும்பும்போது மணி அதிகாலை ஐந்தரைதான். ஆறு மணிக்கு வழமை போல இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மின்சாரம் நிறுத்தப்படும். ஓம், ஊரில் மின்சாரமும் அவர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.’ அந்த கடைசி வரியில் அவர் பல பக்கங்களில் எழுதப்பட வேண்டியவற்றை எழுதிவிடுகிறார். உண்மையில் இந்த நாவல் இருனூறு முன்னூறு பக்கங்களாக விரித்து எழுதப்படும் சாத்தியங்களை உள்ளடக்கியது. மணிபல்லவம் வாசக இடைவெளி மிகுந்த படைப்பாக உள்ளது. எனவே சிறிய நாவலாக இருந்தாலும் அதை ஒரே வாசிப்பில் முடிக்க இயல்வதில்லை. நாவலின் நிகழ்வுகளும் இடம், காலம் இன்றி முன்னும் பின்னுமாக அடுக்கப்பட்டுள்ளன எனவே சீரிய, தீவிர வாசிப்பைக் கோரும் நாவலாக அமைந்துள்ளது, அதே நேரம் மிக எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக எளிய வகையிலேயே சொல்லிச் செல்கிறார். இந்த அம்சம் நாவலுக்கு ஒரு தனித்துவத்தை அளிக்கிறது. சில இடங்களில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்கத்தான் முடிகிறது, ஆனாலும் சுவாரஸ்யம் குறைவதில்லை உதாரணமாக கொத்தலாவ பாத்திரத்தின் இறுதிப் பகுதியைச் சொல்லலாம். மணிபல்லவம் பேசும் அரசியலை நான் இப்படி புரிந்து கொள்கிறேன் தமிழர்கள் புத்தரையும் வணங்கியவர்கள். பின்னர் புத்தரை அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக ‘பிரித்தெடுத்தவர்கள் வந்தார்கள்’. நாகர்கள் மத்தியில் இருந்த பதவிப் போரை நிறுத்தி அமைதியைக் கொண்டு வந்த புத்தரின் கதையை உள்ளடக்கிய இந்த நாவல் தமிழர் சிங்களவர் ஒற்றுமைக்கும் புத்தரே காரணமாய் அமைந்திருக்கக் கூடும் எனும் ஏக்கத்தை முன்வைப்பதைப் போல உள்ளது. அதே நேரம் புத்த பிக்குகளே நேரடியாக அரசியலிலும் அரசியல் கொலைகளிலும் ஈடுபட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறது. அரசியல் கலந்த கதைகளை எழுதும்போது ஒற்றைப் படையான கதாபாத்திரங்களை முன்னிறுத்துவது எளிதானது. பல நேரங்களில் இது ஆசிரியர் அறியாமலேகூட நடந்துவிடுகிறது. ஆனால் வாசு இதை மிகச் சரியாக கையாண்டிருக்கிறார். இரு பக்கங்களிலும் சுற்றி நடக்கும் அரசியலை விரும்பியும் விரும்பாமலும் கவனித்தும் கவனிக்காமலும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை நமக்குக் காண்பிக்கிறார். சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் இந்தப் போர் அரசியலுக்குள் தள்ளப்படும் சில முக்கிய கதை மாந்தர்களும் உள்ளனர். இரு பக்கமும் தீவிர ஆதரவாளர்களும், கடும்போக்காளர்களும் உள்ளனர், இரு பக்கமும் சூழ்நிலைக் கைதிகள் உள்ளனர் இரு பக்கமும் தங்கள் இன அரசியலின் கடும்போக்குகளை ஆதரிக்காதவர்களும் உள்ளனர், இரு பக்கமுமே போருக்கு மத்தியில் தன் அன்றாட, சாதாரண வாழ்க்கையை நடத்திக்கொள்ளும் அப்பாவி மக்களும் உள்ளனர். இது நாவலுக்கும், நாவல் சொல்லும் அரசியலுக்கும் சமநிலையை அளிக்கிறது. ஒரு நியாயத் தராசில் எடைபோட்டதைப் போன்ற இந்த அமைப்பு நாவலுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது, கதை மாந்தர்கள் மீது ஈடுபாட்டைக் கொண்டு வருகிறது. வாசு ஒரு யுக்தியை சரியாகக் கையாண்டிருக்கிறார். அரசியலை நேரடியாக எழுதாமல் கதைமாந்தர்களின் பின்னணியில் சேர்த்து விடுகிறார். உதாரணமாக சிங்களம் கட்டாயமாக்கப்பட்டதால் ‘கவுரவமான’ அரசு வேலையை இழந்துவிட்ட ஒரு பாத்திரம் அவ்வாறு பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையைச் சொல்கிறது. ஆனால் அது அரசியல் என்று நம்மால் நேரடியாக உணர்ந்துவிட முடியாதபடி வாசு எழுதியுள்ளார். வேலை இழந்து வீட்டில் உள்ளவர்கள் மீது எரிச்சல் அடைந்து கிட்டத்தட்ட மன நலம் குன்றி அவர் சென்று சேரும் இடம் கவுரவமற்ற இன்னொரு ‘அரசுப்’ பணியில். இதே போல இயக்கத்துக்கு ஓடிச் செல்லும் மனிதர்களின் குடும்பங்களின் தவிப்பையும், சிறுவர்களை கடத்திச் சென்று போர்ப் பயிற்சி தரும் இயக்கத்தைக் குறித்தும் எழுதியிருக்கிறார். நாவலின் துவக்க வரிகளைச் சுட்டிக்காட்டியதுபோல நாவல் முழுவதும் வரும் ஆசிரியரின் கூற்றுக்கள் பலவும் அரசியலையும் சில வியப்பூட்டும் கண்ணோட்டங்களையும் முன்வைக்கின்றன. வாசுவின் எழுத்தில் இந்த முதிர்ச்சி வந்திருப்பதை அவரது முந்தைய நாவல்களை வாசித்தவர்கள் உணர முடியும். ‘வேறுபடுத்துபவர்கள் வந்தார்கள். அவர்கள் சிங்களவரில் இருந்துதான் வந்தார்கள், பவுத்தர்களில் இருந்து வந்திருக்க முடியாது இல்லையா!’ ‘உலகத்துக்கு இலங்கையும் ஒரு குட்டித் தீவுதான் என்பது குறித்துச் சிந்திக்கும் யாரும் இன்னும் இலங்கையை ஆண்டதாகத் தெரியவில்லை.’ ‘பண்டாரவின் உழைப்புக்கும் இலங்கையின் அத்தியாவசிய பொருட்களின் விலைக்குமான வித்தியாசம் கூடிக்கொண்டேதான் இருந்தது.’ ‘சமாதானத்தில்தான் சந்தேகங்களும் கேள்விகளும் அதிகம் தோன்றுகின்றன.’ ‘பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் வாழ்க்கை பலநேரம் ஒற்றையடிப் பாதையாகவே மாறிவிடுகிறது’ இதுபோன்ற பல வரிகளைச் சொல்ல முடியும். ‘போர்க்களத்தில் எல்லோருக்கும் சம பங்குதான். அது ஆணின் இரத்தமானாலும் பெண்ணின் சதையானாலும்.’ இந்த வரியில் பெண்ணின் ‘சதை’ என்ற பதம் சொல்லும் நுட்பமான செய்தி அல்லது அரசியலை ஒரு தேர்ந்த வாசகர் எளிதில் புரிந்து கொள்வார். அது வெறுமனே சொல் நயத்துக்காக எழுதப்பட்டதல்ல. மீண்டும் மீண்டும் எழுதப்பட்டாலும் முன்னர் நாம் அறிந்தேயிராத நிகழ்வுகள் பல ஈழத்தில் இருக்கின்றன என்பதை மணிபல்லவம் நினைவூட்டுகிறது. போரை பல நூற்றாண்டு வரலாற்றை துரிதப்படுத்தும் ஒரு நிகழ்வாகப் பார்க்கலாம். எல்லாப் போர்களுக்கும் நீண்ட வரலாற்றுக் காரணங்கள் அளிக்கப்படுகின்றன. பல காரணங்கள் புராண காலத்திலிருந்தே துவங்கவும் செய்கின்றன. அதேபோல நீண்ட வரலாற்றில் நிகழ்ந்த பிழைகளை அல்லது பிழைகள் என தான் கருதுவதை தன் தலைமுறையிலேயே தீர்த்துவிட வேண்டும் என்று செயல்படும் தலைவர்கள் வருகின்றனர். போர்களின்போது வரலாற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தீவிரச் செயல்கள் ஒரு குறுகிய காலத்திலேயே நிகழ்ந்துவிடுகின்றன. எனவே போர் குறித்த இலக்கியங்கள் மீண்டும் மிண்டும் எழுதப்படுகின்றன. பல நிகழ்வுகள், பல கோணங்கள், பல மரணங்கள், பல பாடல்கள். மேலும் போர் மனிதனின் ஆதி குணங்களை மீட்டெடுக்கிறது. தன் விலங்கியல்பைக் கண்டு அவனே மலைத்துப் போகிறான். அதை மறுக்க பல காரணங்களைத் தேடிக் கொள்கிறான், அல்லது அtதை ஆராய்கிறான். எனவே போர் ஒரு முக்கிய பாடுபொருளாக இன்றும் இருந்து வருகிறது. மணிபல்லவத்தில் வாசு மனிதர்களை மட்டுமல்ல சில பொருட்களையும் மறக்க முடியாத படிமங்களாக மாற்றியுள்ளார். ‘தண்ணி நீலம்’ என்றொரு புதிய வண்ணத்தை அறிமுகப் படுத்துகிறார். அவ்வண்ணத்தில் ஒரு ‘கடுதாசிப் பூ’ உள்ளது. கடுதாசிப் பூக்கள் (போகைன் வில்லா) நாவலில் ஆங்காங்கே வந்துவிடுகின்றன. ஷோபாவுக்கு அவற்றைப் பிடிக்கும் இல்லையா? இப்பக்கமோ அப்பக்கமோ, வீசும் காற்றில் இழுபடும் பூக்கள். ஒரு தொப்பி, ஒரு சைக்கிள், சில மரச் சாமான்கள். ஒரு கண்காணிப்பு கோபுரம், அம்மாள் கோவிலில் கட்டப்படும் பச்சைக் கயிறு புத்த விகாரத்தில் கட்டப்படும் வெள்ளைக் கயிறு. நான் ஏன் இவற்றை நியாபகத்தில் வைத்துள்ளேன்! The Zone of Interest படத்தில் அகச்சிவப்பு கதிர் கொண்டு படம்பிடிக்கப்பட்ட ஒரு பகுதியில் யூத கைதிகள் நடந்து செல்லும் பாதையில் ஒரு சிறுமி பழங்களையும் ரொட்டித் துண்டுகளையும் மறைத்து வைக்கிறாள், ஆஷ்விட்ச்சின் உலையிலிருந்து தப்பியவர்கள் தந்த சாட்சியங்களின் அடிப்படையில் அந்த பெயர் தெரியாதவரின் இரக்கம், கரிசனை பதிவாக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் தனக்கு பணிக்கப்பட்டதை, அது எத்தகையக் கொடூரமான செயலாக இருந்தாலும், செவ்வனே செய்து முடிக்கும் ஒரு அதிகாரி, அவனது குடும்பம். இன்னொருபுறம் ஒரு மாபெரும் கொலை எந்திரமாக மாறியிருந்த ஒட்டு மொத்த நாட்டையும் பற்றி கவலை கொள்ளாமல் தன் ‘எதிரியான’ சக மனிதனைக் குறித்த கவலை கொண்ட்ட அச்சிறுமி. போர் மனிதர்களுள் இருக்கும் விலங்குகளை மட்டுமல்ல தெய்வங்களையும் வெளிக் காட்டுகிறது. பெர்லின் சுவர் அருகே இருந்த அருங்காட்சியகத்திற்கு நாம் சென்றிருந்தபோது அங்கே பல புகைப்படங்களில் யூதர்களுக்கு உதவிய பிற ஜெர்மானியர்கள் மொட்டையடிக்கப்பட்ட பொதுவில் அவமானப் படுத்தப் பட்டதைக் கண்டது நினைவுக்கு வருகிறது. ஹிட்லரின் வதை முகாம்களில் 30,000 கிறித்தவர்கள் இதே காரணத்திற்காக கொல்லப்பட்டிருக்கிறார்கள். மணிபல்லவம் இந்த திரைக்கதையை ஒத்த அடிச் சரடுகளைக் கொண்டது. இரண்டுக்கும் அளவில் வித்தியாசம் இருந்தாலும் வீரியத்தில் இல்லை. நாவலின் அட்டைப்படத்தைக் குறிப்பிட வேண்டும். கதையைச் சரியாக உள்வாங்கி அதனால் தீவிரமாக உந்தப் பட்ட ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு அட்டைப் படத்தை வடிவமைக்க முடியும். சந்தோஷ் நாராயணன் பல புத்தகங்களுக்கும் சிறப்பாக வடிவமைப்பைச் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை மணிபல்லவத்தின் அட்டைப்படமே ஒரு தனித்த படைப்பாக உள்ளது என்பேன். நாவலைப் போலவே தொன்மத்தையும் நவீனத்தையும், அமைதியையும் வன்முறையையும், கடலையும் இரத்தத்தையும் அட்டைப்படம் காண்பிக்கிறது. மானுடத்தின் சில அடிப்படை விதிகள் எல்லா பண்பாடுகளிலும் உள்ளன. அவற்றில் ஒன்று ‘வலிமை மிகுந்தவன் எளியவனை தாக்கக் கூடாது’ என்பது. எல்லா பண்பாடுகளும் அதை மாபெரும் கோழைத்தனமாகவே கருதுகின்றன. அப்படி ஒரு நிகழ்வை நாவலின் மையமாக வைத்து ஒரு சிற்றுயிரை இரத்தச் சகதியில் உருளவிட்டு, அதுவும் அதற்கு முந்தைய பத்தி எந்த தொனியில், ஒரு நிகழ்வாக, எழுதப்பட்டிருந்ததோ அதே தொனியில் சொல்லிச்செல்லும் வாசு நினைத்திருந்தால் ஒரு கூக்குரலை எழுப்பியிருக்க முடியும், ஒரு ஒப்பாரியை நிகழ்த்தியிருக்கலாம், அறம் பாடியிருக்கலாம் நான்கு வார்த்தைகளில் ஒரு சாபத்தையாவது விட்டிருக்கலாம். கவலை வேண்டாம் வாசு மணிபல்லவத்தின் வாசகர்கள் அப்படிச் செய்யக் கூடும் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் மணிபல்லவமோ மிக இயல்பாகத் தன் எதிரிக்கு அன்பு செய்த ஒரு பெண் ஒரு சிறு தெய்வமாக மாறிய கதை. வாசு முருகவேலுக்கு வாழ்த்துக்களும் அன்பின் முத்தங்களும். சிறில் அலெக்ஸ் மணிபல்லவம் வாங்க https://www.jeyamohan.in/228072/

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

2 days 23 hours ago
வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

2 days 23 hours ago

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். 

இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். 

திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 

'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

2 days 23 hours ago
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது Feb 10, 2026 - 10:53 AM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

2 days 23 hours ago

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

Feb 10, 2026 - 10:53 AM

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. 

ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 

பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. 

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

2 days 23 hours ago
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:49 AM திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார். அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர். தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238270

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

2 days 23 hours ago

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:49 AM

image

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார்.

அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238270

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

2 days 23 hours ago
LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்! செய்திகள் இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

2 days 23 hours ago

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 23 hours ago
156 ஓட்டங்கள். அடிக்கடி விக்கட்டை இழந்ததால், நமீபியாவால் கூடுதாலாகப் பெற முடியவில்லை. பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். 157 நல்ல ஒரு இலக்கு.

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

2 days 23 hours ago
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:45 AM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர். அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன. அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார். இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது. இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார். அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது. அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238269

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

2 days 23 hours ago

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:45 AM

image

(நா.தனுஜா)

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.

அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது.

இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது.

அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238269

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

2 days 23 hours ago
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முல்லைத்தீவில்-யாழ்-பல்கலைக்கழகப்-பீடம்/175-372256