Aggregator

யாழில் துப்பாக்கியுடன் சந்தைப்பகுதியில் நடமாடிய நபரால் பரபரப்பு!

2 days 12 hours ago
மருதனார்மடம் சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டது போலித் துப்பாக்கியாம்! - நபர் கைது 10 Feb, 2026 | 05:49 PM யாழ்ப்பாணம் மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் சென்ற நபர் வைத்திருந்தது போலித் துப்பாக்கி எனக் கூறியுள்ள பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள சந்தையொன்றுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) துப்பாக்கியுடன் பச்சை மிளகாய் வாங்கச் சென்றவரால் சந்தையில் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த நபர் தலைக்கவசம் அணிந்து, கைகளுக்கு கையுறை அணிந்தவாறு, பை ஒன்றுடன் சந்தைக்கு சென்று, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் பச்சை மிளகாயை கொள்வனவு செய்துகொண்டே, "சந்தைக்குள் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் யார்?" என கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி தனக்கு தெரியாது என கூறியதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த நபர் கையிலிருந்த பையினுள் ரி 56 ரக துப்பாக்கி காணப்பட்டதாகவும், அவரது இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்துவைக்கப்பட்டிருப்பதைப் போல் இருந்ததாகவும் சுன்னாகம் பொலிஸாருக்கு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சந்தையில் இருந்த கண்காணிப்பு கெமரா பதிவுகளை சோதனையிட்டு, துப்பாக்கியுடன் சென்ற நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை கைது செய்துள்ளதுடன், அவர் சந்தைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர். அதன்போது அது போலித் துப்பாக்கி என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/238345

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

2 days 12 hours ago
கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை 10 Feb, 2026 | 05:34 PM கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றp நிகழ்வில் பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் "இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுயினரையும் காண்கிறீர்கள். ( படப்பிடிப்பு ; எஸ்.எம். சுரேந்திரன்) https://www.virakesari.lk/article/238338

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

2 days 12 hours ago

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை

10 Feb, 2026 | 05:34 PM

image

கம்யூனிஸ்ட் தலைவர் என். சண்முகதாசன் நினைவுப் பேருரை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் வடபகுதி கம்யூனிஸ்ட் இயக்க முக்கியஸ்தர் எம்.ஏ.சி.இக்பால் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ. முத்துலிங்கம், எம். ஏ. சி. இக்பால், பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றp

நிகழ்வில்  பிரதம பேச்சாளரான சமூக அரசியல் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான சுவஸ்திகா அருலிங்கம் "இலங்கை எதிர்நோக்கும் உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் சவால்கள்" என்ற தலைப்பில் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதையும் கலந்துகொண்டோரில் ஒரு பகுயினரையும் காண்கிறீர்கள்.

_DSC1030.JPG

_DSC0989.JPG

_DSC0998.JPG

_DSC1025.JPG

_DSC1005.JPG

_DSC0991.JPG

( படப்பிடிப்பு ; எஸ்.எம். சுரேந்திரன்) 

https://www.virakesari.lk/article/238338

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 12 hours ago
பாக்கிஸ்தான் ப‌ந்து வீச்சு மிக‌ அருமை ச‌ட‌ப் ஹான் மீண்டும் அணிக்கு திரும்பின‌து பாக்கிஸ்தான் அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்...........................................

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 days 12 hours ago
துப்பாக்கிச் சூட்டால் தலையில் காயம் உள்ளதாக கூறுகிறார்கள். காலின் கீழ் அல்லது வாகன ரயரிற்கு சுடலாம்.

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

2 days 12 hours ago
விசேடதேவையுடையவர்களுக்கு மட்டுமல்ல முதியவர்கள், சிறுவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பொதுப்போக்குவரத்து முழுவதுமே (பேருந்து, தொடரூந்து) விசேடதேவையுடையவர்கள், முதியவர்கள், சிறுவர்கள் எல்லோரும் இலகுவில் ஏறி இறங்கக்கூடிய வகையில் தாழ்தள/சமதள அணுகலை உடையதாக இருக்கவேண்டும்.

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

2 days 12 hours ago
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது 10 புதிய பேருந்துகள்! Feb 10, 2026 - 03:23 PM 'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, விசேட தேவையுடையவர்களுக்கான வசதிகளுடன் கூடிய, குளிரூட்டப்பட்ட தாழ்தள பேருந்து சேவையை ஒரு முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக 10 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி குறித்த பேருந்துகள் நாட்டை வந்தடையவுள்ளன. இந்தப் பேருந்துகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும்த் தேவையான பௌதீக மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இயலுமை இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனவே, பேருந்துப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் முதற்கட்டமாக, நவீன வசதிகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 100 பேருந்துகளைக் கொழும்பு நகரில் சேவையில் ஈடுபடுத்தும் திட்டத்திற்காக, கடந்த வருடம் ஜூலை 21 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட லங்கா மெட்ரோ ட்ரான்சிட் (தனியார்) நிறுவனத்திடம் இந்த 10 பேருந்துகளையும் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பேருந்துகளையும் அவற்றின் இயக்க நடவடிக்கைகளையும் அந்த நிறுவனத்தின் கீழ் முன்னெடுப்பதற்குப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlgf9akv0002356njssbopgi

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

2 days 12 hours ago
குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?

இரகசிய அணு ஆயுத சோதனைகள்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு

2 days 12 hours ago
இரகசிய அணு ஆயுத சோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு Published By: Digital Desk 3 10 Feb, 2026 | 02:30 PM இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை செயலாளர் தாமஸ் டினானோ குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்கா சாக்குப்போக்குகளை புனைய முயற்சிக்கிறது. அமெரிக்கா அதன் பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபரில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்து வருகின்றன. எனவே அமெரிக்காவும் அவர்களுக்குச் சமமான அளவில் அணு ஆயுதச் சோதனைகளைத் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டிற்காக இருந்த கடைசி முக்கிய ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த வியாழக்கிழமையுடன் காலாவதியானது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனா-ரஷ்யா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என சீனா ஏற்கனவே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் ஒரு புதிய அணு ஆயுதப் உருவாகுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/238278

இரகசிய அணு ஆயுத சோதனைகள்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு

2 days 12 hours ago

இரகசிய அணு ஆயுத சோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு

Published By: Digital Desk 3

10 Feb, 2026 | 02:30 PM

image

இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது.

ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை செயலாளர் தாமஸ் டினானோ குற்றம் சாட்டினார்.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்கா சாக்குப்போக்குகளை புனைய முயற்சிக்கிறது. அமெரிக்கா அதன் பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபரில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்து வருகின்றன. எனவே அமெரிக்காவும் அவர்களுக்குச் சமமான அளவில் அணு ஆயுதச் சோதனைகளைத் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டிற்காக இருந்த கடைசி முக்கிய ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த வியாழக்கிழமையுடன் காலாவதியானது.

இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனா-ரஷ்யா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது.

ஆனால், தற்போதைய நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என சீனா ஏற்கனவே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் ஒரு புதிய அணு ஆயுதப் உருவாகுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

https://www.virakesari.lk/article/238278

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 days 12 hours ago
பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க நமிபியாவை இலகுவாக வெற்றிகொண்டது நெதர்லாந்து 10 Feb, 2026 | 03:46 PM (நெவில் அன்தனி) நெதர்லாந்துக்கும் நமிபியாவுக்கும் இடையில் டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நெதர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வருட ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்த நெதர்லாந்துக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 26 வயதான பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள், லோகன் வென் பீக்கின் துல்லியமான பந்துவீச்சு என்பன நெதர்லாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தாலும் இரண்டு அணியினரும் 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைப் பெற்றமை விசேட அம்சமாகும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. நமிபியா சார்பாக நால்வர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் லொவ்டி-ஈட்டன் மாத்திரமே கணிசமான எண்ணிக்கையைப் பெற்றார். அவர்களைவிட மற்றைய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். ஜான் ப்ரைலின்க் (30), ஜான் நிக்கல் லொவ்டி-ஈட்டன் (42) ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேத்துடன் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர். தொடர்ந்து அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 18 ஓட்டங்களையும் ஜே.ஜே. ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லோகன் வென் பீக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நெதர்லாந்தின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'தௌத் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் மைக்கல் லெவிட் 28 ஓட்டங்களைப் பெற்றார். (46 - 2 விக்.) இதனைத் தொடர்ந்து பாஸ் டி லீட், கொலின் அக்கமன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கொலின் அக்கமன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் பாஸ் டி லீட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். பாஸ் டி லீட் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: பாஸ் டி லீட். https://www.virakesari.lk/article/238321

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 13 hours ago
இந்தியாவால் என்றும் மாற்றலாம் போலிருக்கே.....மைதானத்தை..சுற்றி பச்சை மயம் ..ஒரே ஜிந்தாபாத்...4 பில்லியன் அள்ளிக்கொடுத்த மோடிஜிக்கு அலுவாதான் ...

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

2 days 14 hours ago
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் கம்பனிகள் கூடுதல் வேலைவாங்க முயற்சி செய்வதாகவும் ஒரு செய்தி வந்தது. அதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

2 days 14 hours ago
மிக மகிழ்ச்சியான செய்தி. மாதத்தில் 22 நாட்களாவது இவர்களுக்கு வேலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனுர அரசு, வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மலையக தமிழ் கட்சிகளுக்கும் ஆப்பு அடித்துக் கொண்டு இருக்கின்றது. மனோ, இராதாகிருஷ்ணன் போன்ற பம்மாத்து அரசியல்வாதிகளுக்கு இனி கடின காலம் தான்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 days 15 hours ago
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ….. இன்னும் ஒரு போட்டி உள்ளது. பொறுமை பொறுமை பொறுமை.