Aggregator

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

3 days 3 hours ago
பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ? ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார். குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது: வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53411

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

3 days 3 hours ago

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

ஞாயிறு, 21 டிசம்பர் 2025 04:09 AM

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது. 

யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது. 

அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார்.

குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது:

வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது. 

முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://jaffnazone.com/news/53411

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

3 days 3 hours ago
13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து 21 Dec, 2025 | 09:20 AM (நமது நிருபர்) 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன். இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும். இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும். பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன். தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார். https://www.virakesari.lk/article/233967

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

3 days 3 hours ago

13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிருங்கள் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண வலியுறுத்து

21 Dec, 2025 | 09:20 AM

image

(நமது நிருபர்)

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்க வேண்டும் என்று லங்கா சமசமாஜக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

இலங்கையின் பழமையான மற்றும் முதன்மையான இடதுசாரிக்கட்சியான லங்கா சமசமாஜக், தனது 90ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு கொழும்பில் விசேட மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முன்னெடுத்த விதாத்த  வேலைத்திட்டத்தின்; மூலம் நாடு தழுவிய ரீதியில் சுமார் 50,000க்கும் மேற்பட்ட சிறு தொழில்முயற்சியாளர்களை உருவாக்கி, நவீன தொழில்நுட்பத்தைக் கிராமங்களுக்குக் கொண்டு சேர்த்த வெற்றியின் அனுபவத்தை பெருமையோடு கூறுகிறேன்.

இவ்வாறான உற்பத்தி சார்ந்த பொருளாதார முன்னெடுப்புகளே நாட்டின் தற்போதைய அந்நியச் செலாவணி நெருக்கடிக்கும், வேலையின்மைக்கும் தீர்வாக அமைய முடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக, சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகத் நான் முன்னெடுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டங்கள் இன்றும் காலாவதியாகவில்லை. 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று, நாட்டின் அனைத்து இன மக்களும் கௌரவத்துடனும், சம உரிமையுடனும் வாழக்கூடிய ஒரு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்குவதே சமசமாஜக் கட்சியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று 1950களிலேயே இக்கட்சி தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்றுத் தூரநோக்கை மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

தற்போதைய அரசியல் சவால்களை எதிர்கொள்ள இடதுசாரி சக்திகளின் ஒற்றுமை மிக அவசியமானது. 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பை உருவாக்குவதில் கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா ஆற்றிய வரலாற்றுப் பணியைப் போன்றே, தற்போதைய காலத்திலும் புதியதொரு அரசியல் கலாசாரத்தை உருவாக்க இடதுசாரிகள் கைகோர்க்க வேண்டும். 90 ஆண்டுகால அரசியல் அனுபவமும், நேர்மையும் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகத் தொடர்ந்து ஒலிக்கும் என்பதை இம்மாநாடு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது என்றார்.

https://www.virakesari.lk/article/233967

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

3 days 3 hours ago
புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள் 21 Dec, 2025 | 09:26 AM (நா.தனுஜா) நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம். அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம். அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம். எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/233968

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

3 days 3 hours ago

புதிய பயங்கரவாத்தடைச்சட்ட வரைவு: 2026 பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் யோசனைகள் அனுப்பிவையுங்கள் நீதி அமைச்சர்ஹர்ஷன நாணயக்கார மக்களிடம் வேண்டுகோள்

21 Dec, 2025 | 09:26 AM

image

(நா.தனுஜா)

நீதியமைச்சின் இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் மேலும் கூறியிருப்பதாவது:

இப்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கி, மனித உரிமைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் என்பன பாதுகாக்கப்படக்கூடிய வகையில் புதியதொரு சட்டம் கொண்டுவரப்படும் என நாம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னர் வாக்குறுதியளித்தோம்.

அதற்கமைய புதிய சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையில் 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தோம்.

அக்குழுவினர் சுமார் 11 மாதங்களாக அவ்வரைவைத் தயாரித்து என்னிடம் கையளித்தனர். அவ்வரைவு இப்போது நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது நாடளாவிய ரீதியில் மிகுந்த கரிசனைக்குரிய சட்டம் என்பதனால், அதனை நேரடியாக அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சமர்ப்பிக்காமல், முதலில் பொதுமக்களிடம் அபிப்பிராயம் கோரவேண்டியது அவசியம் என்று கருதுகிறோம்.

எனவே இப்புதிய சட்ட வரைவு தொடர்பான யோசனைகள் மற்றும் கருத்துக்களை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/233968

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

3 days 3 hours ago
காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! 21 Dec, 2025 | 12:58 PM வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; https://www.virakesari.lk/article/234005

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

3 days 3 hours ago

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

21 Dec, 2025 | 12:58 PM

image

வடக்கு ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, யாழ்ராணி ரயிலில் இருந்து காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை - அநுராதபுரம் இடையிலான ரயில் சேவைகளின் நேர அட்டவணை பின்வருமாறு ; 

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-

Train_Shedulle_Jafna_-_Anuradhapura__1_-


https://www.virakesari.lk/article/234005

கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

3 days 3 hours ago
கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல் 21 December 2025 2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41,575,585 ஆக உள்ளது. இந்தநிலையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்பொழுது தான், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன https://hirunews.lk/tm/436880/canada-in-crackdown-19000-people-deported-so-far-in-2025

கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

3 days 3 hours ago

கடும் நடவடிக்கையில் கனடா : 2025 இல் இதுவரை 19,000 பேர் நாடுகடத்தல்

21 December 2025

1766281060_6086270_hirunews.jpg

2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக, கனடாவின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐத் தாண்டும் எனக் கருதப்படுகிறது. 

2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும், கனடா நாடுகடத்தியுள்ளது. 

கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 

ஒக்டோபர் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள் தொகை 41,575,585 ஆக உள்ளது. 

இந்தநிலையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்பொழுது தான், தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

https://hirunews.lk/tm/436880/canada-in-crackdown-19000-people-deported-so-far-in-2025

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

3 days 3 hours ago

நாளை இலங்கை வருகிறார் எஸ்.ஜெய்சங்கர் - ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு

21 December 2025

1766283521_4172941_hirunews.jpg

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். 

நாட்டிற்கு வருகைதரவுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 

பேரிடர் மீட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட செய்தியை, வெளிவிவகார அமைச்சர் , ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், பேரிடர் மீட்புக்கான இந்தியாவின் விசேட பொதி தொடர்பிலும் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடினமான நிலையில் இந்தியா வழங்கிய உதவிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய உயர்மட்டக் குழுவுடன் நாட்டிற்கு வருகைதரவுள்ள வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன், தமிழ்த் தரப்பினரும் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

https://hirunews.lk/tm/436883/s-jaishankar-to-arrive-in-sri-lanka-tomorrow-important-meeting-with-the-president

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

3 days 3 hours ago

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக, நடுத்தர அளவிலான சுமார் 52 குளங்களும் வான் பாய்ந்து வருவதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். 

இந்த வான் பாய்தல் காரணமாக வெள்ள நிலைமையோ அல்லது அத்தகைய நிலைக்கு நீர் வெளியேற்றப்படுவதோ இடம்பெறாது என்றும், இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், எதிர்கால பருவமழை நிலைமைகளுக்கு ஏற்ப ஆறுகளின் நீர் மட்டங்கள் மாற்றமடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிலைமைகள் குறித்து அவதானம் செலுத்திச் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த நதிப் படுக்கையை அண்டிய பகுதிகளில் ஆங்காங்கே 50-100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

ஈரவலயத்தின் பல இடங்களை அண்டி 25 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

மத்திய மலைநாடு மற்றும் களனி கங்கை படுக்கையை அண்டிய சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கு அண்மித்த மழைவீழ்ச்சியும், கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 25-50 மில்லிமீற்றருக்கு இடைப்பட்ட மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. 

இந்த நிலைமையின் அடிப்படையில் நில்வலா நதியின் நீர் மட்டம் சிறிய அதிகரிப்பைக் காட்டினாலும், கிடைத்த மழையின் அடிப்படையில் அது வெள்ள நிலைமை ஏற்படும் அபாயம் வரை செல்லவில்லை என பொறியியலாளர் குறிப்பிட்டார். 

அத்துடன் மஹாவலி கங்கையை அண்டிய மனம்பிட்டி நீர் மட்டம் உயர் நிலையில் காணப்பட்டாலும் அதுவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும், ஏனைய நீர்நிலைகளை அண்டி மழை பெய்தாலும் வெள்ள நிலைமை ஏற்படும் அளவிற்கு நீர் மட்டங்கள் அதிகரிப்பைக் காட்டவில்லை என்றும் பொறியியலாளர் சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjf3u29102ypo29n4225nb7n

இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம்

3 days 4 hours ago
இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம் 21 Dec, 2025 | 11:13 AM (நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரவிக்குமாரினால் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியினால் பல உயிர்கள் பறிபோயிருப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், வாழ்வாதாரம், சூழலியல் மற்றும் நீர் வளங்கள் என மிகப்பாரியளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த அரசாங்கத்துக்கு, சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலை மேலும் சவால் மிகுந்ததாக மாறியிருக்கின்றது. இவ்வேளையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறும் அதேவேளை, நிலையான மீட்சியை அடைவதற்கு உள்ளக ஆட்சியியல் கட்டமைப்பு தொடர்பான இறுக்கமான மீள்மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி நாட்டுமக்கள் மத்தியில் அதிகாரமும், பொறுப்பும் நியாயமான முறையில் பகிரப்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை வெற்றிகரமாக மீளக்கட்டியெழுப்பமுடியும். ஒரு காலத்தில் ஆசியப்பிராந்திய அபிவிருத்தியின் முன்மாதிரியாக நோக்கப்பட்ட இலங்கை, இன்று தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் “தித்வா” சூறாவளி காரணமாக அந்நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு சுமார் 7 பில்லியன் டொலர் நிதி தேவை என மதிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, மொத்த வெளியகக் கடன்களின் பெறுமதி 57 பில்லியன் டொலராகவும், 2025 இல் வர்த்தகப்பற்றாக்குறை 7 பில்லியன் டொலராகவும் பதிவாகியிருக்கின்றது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணை முடிவுக்குவரும் நிலையில், நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்களும், அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடன் சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் கருத்திற்கொள்ளப்படவும், ஒடுக்குமுறை கலாசாரம் முடிவுக்குக்கொண்டுவரப்படவும் வேண்டும். அத்தகைய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிடின், இலங்கை வன்முறைகள், இனவழிப்பு மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றுக்குள் மீண்டும் சிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலைக்குள்ளேயே இருக்கும். எனவே சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை விரைந்து ஆரம்பிக்குமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233984

இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம்

3 days 4 hours ago

இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம்

21 Dec, 2025 | 11:13 AM

image

(நா.தனுஜா)

தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரவிக்குமாரினால் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியினால் பல உயிர்கள் பறிபோயிருப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், வாழ்வாதாரம், சூழலியல் மற்றும் நீர் வளங்கள் என மிகப்பாரியளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த அரசாங்கத்துக்கு, சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலை மேலும் சவால் மிகுந்ததாக மாறியிருக்கின்றது.

இவ்வேளையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறும் அதேவேளை, நிலையான மீட்சியை அடைவதற்கு உள்ளக ஆட்சியியல் கட்டமைப்பு தொடர்பான இறுக்கமான மீள்மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி நாட்டுமக்கள் மத்தியில் அதிகாரமும், பொறுப்பும் நியாயமான முறையில் பகிரப்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை வெற்றிகரமாக மீளக்கட்டியெழுப்பமுடியும்.

ஒரு காலத்தில் ஆசியப்பிராந்திய அபிவிருத்தியின் முன்மாதிரியாக நோக்கப்பட்ட இலங்கை, இன்று தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் “தித்வா” சூறாவளி காரணமாக அந்நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது.

நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு சுமார் 7 பில்லியன் டொலர் நிதி தேவை என மதிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, மொத்த வெளியகக் கடன்களின் பெறுமதி 57 பில்லியன் டொலராகவும், 2025 இல் வர்த்தகப்பற்றாக்குறை 7 பில்லியன் டொலராகவும் பதிவாகியிருக்கின்றது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணை முடிவுக்குவரும் நிலையில், நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்களும், அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடன் சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் கருத்திற்கொள்ளப்படவும், ஒடுக்குமுறை கலாசாரம் முடிவுக்குக்கொண்டுவரப்படவும் வேண்டும்.

அத்தகைய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிடின், இலங்கை வன்முறைகள், இனவழிப்பு மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றுக்குள் மீண்டும் சிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலைக்குள்ளேயே இருக்கும். எனவே சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை விரைந்து ஆரம்பிக்குமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233984

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

3 days 4 hours ago
சர்ச்சைக்குரிய மருந்தை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுங்கள் - மான் பார்மாசூட்டிகல்ஸ் கோரிக்கை 21 Dec, 2025 | 11:09 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “ஒன்டன் செட்ரான்”மருந்து தயாரிப்பு நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) , சர்ச்சைக்குரிய குறித்த மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் (International accredited laboratory) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த நிறுவனம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA), அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு (MSD) ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. சர்வதேச ரீதியிலான இந்தப் பரிசோதனைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார். பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான், மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வகையான ஊசி மருந்துகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233982

வரைவு வாக்காளர் பட்டியல்: தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் நீக்கம் - முழு விவரம்

3 days 4 hours ago
'கொளத்தூரில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்' - நயினார் நாகேந்திரன் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/H.RAJA தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்காதவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வரைவுப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக ஏன் பயப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "எஸ்.ஐ.ஆரில் இறந்து போனவர்கள், இடம் மாறி போனவர்கள் தான் நீக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் யாரும் நீக்கப்படவில்லை. திமுகவினர் அவ்வளவு கள்ள ஓட்டு சேர்த்து வைத்துள்ளார்கள். அதைத்தான் நீக்கியுள்ளனர். சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர்." என்றார். கொளத்தூர் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து பேசிய நயினார் நாகேந்திரன், "கொளத்தூரில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். 1 லட்சம் பேர் தப்பான ஓட்டு போட்டு முதல்வர் ஜெயித்திருக்கிறார் என்று தான் அர்த்தம்." என்று கூறினார். https://www.bbc.com/tamil/live/cm28x9rjepet?post=asset%3A5d5baa64-df78-445b-959e-0b73ef93bf2c#asset:5d5baa64-df78-445b-959e-0b73ef93bf2c

அசாமில் ரயிலுடன் மோதி எட்டு யானைகள் பலி!

3 days 5 hours ago
அசாமில் ரயிலுடன் மோதி எட்டு யானைகள் பலி! 20 Dec, 2025 | 10:29 AM இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில், ரயிலுடன் யானைக் கூட்டம் மோதியதில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குட்டி யானை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து சனிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, ரயிலின் இயந்திரங்கள் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டதுடன், பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தடத்தில் யானைகளின் உடல் பகுதிகள் சிதறி கிடந்ததாலும், ரயில் தடம் புரண்டதாலும், அப்பர் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/233912

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

3 days 5 hours ago
யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 21 Dec, 2025 | 07:50 AM யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு குருநகர் - பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடியுள்ளார். இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/233959

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

3 days 5 hours ago

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

Published By: Digital Desk 1

21 Dec, 2025 | 07:50 AM

image

யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு குருநகர் - பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடியுள்ளார்.

இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

https://www.virakesari.lk/article/233959

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்

3 days 5 hours ago
அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான் Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 11:46 AM தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான். 1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது. ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது. இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது. இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது. மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது. எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233980