Aggregator

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

2 days 23 hours ago

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09)  மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (a)

image_35581e455e.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/முல்லைத்தீவில்-யாழ்-பல்கலைக்கழகப்-பீடம்/175-372256

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

2 days 23 hours ago
அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு! adminFebruary 10, 2026 சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன. கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது. 💡 இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 🌍 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228778/

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

2 days 23 hours ago

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

adminFebruary 10, 2026

u2-1.jpg?fit=1170%2C658&ssl=1

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.

கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது.

💡 இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

🌍 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2026/228778/

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

3 days ago
ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! Feb 10, 2026 - 08:50 AM கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlg18hlu0003356n122qorhm

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

3 days ago

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Feb 10, 2026 - 08:50 AM

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. 

இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlg18hlu0003356n122qorhm

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 days ago
வாகனத்தை ஓடியவர் 17 வயது சிறுவன் போலுள்ளது. இலங்கையில் எத்தனை வயதில், வாகன அனுமதிப் பத்திரம் கொடுப்பார்கள்? இங்கு 16 வயதில் அனுமதி எடுத்தாலும், 18 வயது வரை அவர் தனியே ஓட முடியாது. அருகில் வாகன அனுமதி பத்திரம் உள்ள ஒருவர் இருக்க வேண்டும்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 days ago
கனடாவுடனான போட்டியில் தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 09 Feb, 2026 | 11:47 PM (நெவில் அன்தனி) அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவை தனது ஆரம்பப் போட்டியில் எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா 57 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஏய்டன் மார்க்ராம் குவித்த அரைச் சதம், லுங்கி நிகிடி பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. கனடா சார்பாக தனித்து போராடிய நவ்நீத் தாலிவல் அரைச் சதம் பெற்று பலத்த பாராட்டைப் பெற்றார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைக் குவித்தது. இந்த மொத்த எண்ணிக்கையானது இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும். அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் அரைச் சதம் குவித்ததுடன் தனது ஆரம்ப ஜோடி குவின்டன் டி கொக்குடன் முதலாவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தர்ர். குவின்டன் டி கொக் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து 33 ஓட்டங்களைப் பெற்ற ரெயான் ரிக்ல்டனுடன் இரண்டாவது விக்கெட்டில் மேலும் 56 ஓட்டங்களை ஏய்டன் மார்க்ராம் பகிர்ந்தார். மார்க்ராம் 32 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 59 ஓட்டங்களைப் பெற்றார். ஏய்டன் மார்க்ராமின் மிகவும் கடினமான பிடியை இடதுபுறமாகத் தாவி டிலொன் ஹேலிகர் பிடித்த விதம் முழு அரங்கையும பிரமிப்பில் ஆழ்த்தியது. அடுத்து களம் புகுந்த டிவோல்ட் ப்ரவிஸ் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார். ஆனால், டேவிட் மில்லர், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர். டேவிட் மில்லர் 23 பந்துகளில் ஒரு பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 39 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 19 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 34 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 214 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தத் தோல்விக்கு மத்தியிலும் 20 ஓவர்களையும் தாக்குப் பிடித்த கனடா சர்வதேச ரி20 அரங்கில் தனது முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது. லுங்கி நிகிடி தனது முதல் பந்தில் அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவை ஆட்டம் இழக்கச் செய்ததுடன் 3ஆவது ஓவரில் யுவ்ராஜ் சம்ரா (12), நிக்கலஸ் கேர்ட்டன் (4) ஆகியோரை களம் விட்டகழச் செய்து கனடாவை திணறவைத்தார். ஆனால், நவ்நீத் தாலிவல், ஹார்ஷ் தக்கர் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவின் வெற்றியைத் தாமதிக்க செய்தனர். ஹார்ஷ் தக்கர் 29 பந்துகளில் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 33 ஓட்டங்களைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து சாத் பின் ஸபார் 11 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். (133 - 6 விக்.) மறுபக்கத்தில் மூன்றாம் இலக்க வீரர் நவ்நீத் தாலிவல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 49 பந்துகளில் 7 பவண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்று எட்டாவதாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் லுங்கி நிகிடி 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லுங்கி நிகிடி https://www.virakesari.lk/article/238262

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 days ago
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு Feb 10, 2026 - 06:33 AM பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது. அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlfwcg2k0001356n42mmgnrq

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 days ago

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

Feb 10, 2026 - 06:33 AM

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று (10) அதிகாலை ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்றை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போதிலும், அந்த வேன் பொலிஸாரின் கட்டளையை மீறி மண்டைதீவு திசை நோக்கிச் சென்றுள்ளது.

அந்த நேரத்தில் மண்டைதீவு வீதித் தடையைப் பரிசோதித்துவிட்டு அல்லைப்பிட்டி நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஜீப் வண்டிக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த ஜீப் வண்டி அந்த வேனை நிறுத்த முயற்சித்த போதிலும், அது தொடர்ந்தும் நிறுத்தாமல் தப்பிச் சென்றதால், பொலிஸார் வேனை நிறுத்துவதற்காக வானத்தை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அப்போதும் நிறுத்தாமல் தப்பிச் சென்ற வேனை நிறுத்துவதற்காகப் பொலிஸார் வேன் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேனின் பின் இருக்கைகள் கழற்றி அகற்றப்பட்டிருந்த நிலையில், வேனில் இருந்த மேலும் இருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரும் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlfwcg2k0001356n42mmgnrq

குற்றவியல் குற்றச்சாட்டில் கனடாவில் இலங்கையர் கைது!

3 days ago
நானா இப்போது கொரியாவில் கம்பி என்னும் ஜானி சோமாலியின் பிசினஸ் மாடலை பின்பற்றி (அடுத்தவர்களை கடுப்பேற்றி,தரக்குறைவாக பேசி,மட்டம்தட்டி ) வியூஸ் ஏற்றி காசு பார்த்தவர். ஆனாலும் நானாவோட எந்த வீடியோவிலும் முக்காடு அணிந்த அவரது தீன் குல மாணிக்கங்கள் வராது. காபீர்களாக தேடி தேடி வீடியோ எடுப்பார். அவாளை விட மோசமானவர்கள் இந்த பச்சை சங்கிகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 3 hours ago
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே😀. 😀 தெனாலியில் டொக்டரிண்ட எச்சிலும் மருத்துதானே எண்டு கமல் சொன்ன மாரி போகுது கதை😂

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

3 days 3 hours ago
நான் எழுதிய தொனி பிழைத்து விட்டது. தமிழ் தேசியத்தில் நம்பிக்கை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம், அது தமிழருக்கு தேவையே இல்லாத அரசியல் வழி எனவும் வாதிடலாம், தப்பே இல்லை, ஆனால் தமிழ் தேசியத்தை நம்புவோருக்க்குத்தான் அதை தொடர்ந்து என்ன மாற்றங்களோடு முன்னெடுக்க வேண்டும் என சொல்லும் உரிமை இருக்க முடியும். முற்று முழுதாக முதலாளிதுவத்தை நம்பும் ஒருவர், கம்யூனிசத்தை எப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப reform பண்ணலாம் என்பதை தீர்மானிக்க முடியாது - அப்படி நடந்தால் அவர் கம்யூனிசத்தை, முதலாளித்துவத்தின் இன்னொரு வடிவம் ஆக்கி விடுவார். இதைத்தான் நான் சொன்னேன். கருத்து சொல்வதை அல்ல.