Aggregator

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

4 days 5 hours ago
நேபாளத்தில் பல்பொருள் அங்காடி கடைகளுக்குள் புகுந்து வாஷிங்மெஷின்கள், குளிர்சாதன பெட்டிகள், தொலைகாட்சிகள் , AC மெசின்களை கொள்ளையடித்தவர்கள் பொதுச் சொத்துகள் ,பாராளுமன்றம், உச்ச நீதிமன்றம், முன்னாள் பிரதமர் வீட்டுக்கு தீ வைத்தவர்கள் அவர் மனைவியை எரித்தவர்கள் அடங்கிய Gen-Z Protests குழு நேபாளத்தை இனி சிறப்புற ஆட்சி செய்யும்.

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

4 days 5 hours ago
கவலை வேண்டாம். கொலையாளி விரைவில் உயிருடனோ அல்லது உயிர் இல்லாமலோ கண்டுபிடிக்கப்பட்டு விடுவார்.

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

4 days 6 hours ago
கொழும்பில் மஹிந்தவுக்கு 4 வீடுகள் Thursday, September 11, 2025 செய்திகள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பில் வீடு வழங்க நான்கு பேர் ஏற்கனவே முன்வந்துள்ளதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். குறித்த 4 வீடுகளில் ஒன்றைப் பார்வையிட வருமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும் அவர் அங்கு சென்று பார்வையிடவில்லை. மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வீடு வழங்க முன்வந்தோரில் தமிழர் ஒருவர் அடங்குவதாகவும் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டார். இந்த 4 வீடும் அவருடைய காசில் வாங்கினதுதான் ...இந்த தமிழர் ஆரெண்டு அறிந்தால் ..அவர்தான் கனடானிலை திருமண மண்டபம் நடத்திற ஆளோ தெரியாது..ஒன்றல்ல கன ஆதனங்கள் ...கோட்டாவின்...மகிந்தவின் காசில் ஓடுது..

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

4 days 7 hours ago
நாம் வாழும் காலத்திலே இவற்றையெல்லாம் பார்க்க காணக் கண் கோடி வேண்டும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று.....கொல்லும். ...இப்போது எல்லாம் சுடச்சுட ....

குட்டிக் கதைகள்.

4 days 9 hours ago
💐💐💐பிரியாத உறவு நம் நட்பு🥰❤🥰 Best Friends For Ever💐💐💐 Sujatha Jaganathan ·teonSpodsr 0au5ug3221739g036h5cg8392fh9af7l5f665f4uuhc1h7ial · படித்து ரசித்த ஒரு அருமையான கதை. ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர் . அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக்கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான் . ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும் , கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை . பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையேகூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர் . பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார் . கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப்படுத்திவிட்டன. ''இதோ உடனே செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே, "அவர் தர்க்க சாஸ்'திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு." அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா ! இன்னிக்கு நீ பொழுது போக்க நான்தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா?" என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திர மூட்டியது. "அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி "அடேய் அறிவு கெட்ட வனே ! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித அறிவு இவ்வளவுதானா ? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப்படுத்தினேன் ? " அவமானம் பொங்கியது . கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான் . ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார், " என்னப்பா ! சவப்பெட்டி அடிச்சாச்சா?" அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலை கனத்துக்கு." ஆசிரியர் சொன்னார், "செல்லமே! என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரந்தான். இதை உணர்ந்து பணிவுடன் நடப்பதே உண்மையான ஞானம்...!💝" Voir la traduction

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

4 days 10 hours ago
இந்தியாவின் அண்டைநாடுகளில் மக்கள் புரட்சியின் மூலம் ஊழல்ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அதற்கான முதல்விதையை சிறிலங்கா துவக்கியிருக்கிறது. பெரும் ஊழல் பெருச்சாளிகள் அரசியிலில் கோலோச்சும் இந்திய அரசியலில் எப்போது மக்கள் புரட்சி வெடிக்கும். மன்னராட்சி நடத்திவரும்குடும்ப ஆட்சியாளர்கள் எப்போது துரத்தப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தில் குடும்ப ஆட்சியாளர்களுக்கு எப்போது முடிவுக்கு வரும். தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லியே குடும்ப ஆட்சிநடத்திவருபவர்களை ஆட்சியலிருந்து அகற்றுவதுமட்டுமல்ல அவர்களால் நிர்வகிக்கப்படும் முறையற்ற சொத்துக்களைப் பறிமுதல்செய்யும் காலம் எப்போது வரும்? தமிழகம் இதற்கு பிள்ளையார் சுழி போடுமா?

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

4 days 10 hours ago
பல்லக்கு ஏறுவதும் வாயாலே! பல்லுடைபடுவதும் வாயாலே! அவருடைய இனவாதப் பேச்சுக்கள் சகிக்க முடியாத ஒருவரே அவரைச் சுட்டிருக்கிறார். அமெரிக்க காவல்துறையால் சுட்டவரைப் இன்னும் பிடிக்க முடிவில்லை என்பது யாரும் அவரைக்காட்டிக் கொடுக்க விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

4 days 10 hours ago
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தால் எதிராக இரண்டு வாக்குகள் பதிவாகி, வாக்கு என்ற ஒருமை நீங்கிப் பன்மையாகி, அதற்கொரு மரியாதை கிடைத்திருக்கும். 🤔

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

4 days 11 hours ago
இருந்திருந்தால் ரம் இளைப்பாறிய பின் அவரது இடத்தைப் பிடித்திருப்பார். ரம் 8 அடி பாய்ந்தால் இவர் 16 அடி பாயந்திருப்பார். ஒரு காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக வரக் கூடியவர்.

இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?

4 days 11 hours ago
நேபாளத்தில் கொந்தளிப்பு இந்தியாவின் நெருக்கடியை அதிகரிப்பது ஏன்? Getty Images இந்தியாவும் நேபாளமும் வரலாற்று ரீதியாகப் பகிரப்பட்ட வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன . கட்டுரை தகவல் அன்பரசன் எத்திராஜன் உலக விவகார செய்தியாளர் 11 செப்டெம்பர் 2025, 13:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது. சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது. நேபாளத்தில் நடந்த சம்பவங்கள், கடந்த ஆண்டு வங்கதேசத்தையும், 2022 இல் இலங்கையையும் ஆட்டிப்படைத்த கொந்தளிப்பை பலருக்கும் நினைவூட்டின. தெற்காசியாவில் வங்கதேசமும் இலங்கையும் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகள், பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த உறவுகளின் காரணமாக நேபாளத்துடனான இந்தியாவின் உறவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான எல்லையை, நேபாளம் பகிர்ந்து கொள்கிறது. எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார். "நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதைப் பிளக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது," என்று மோதி செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். Getty Images நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். "நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை" என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோதி, "நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதியை ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். செவ்வாயன்று, சூழலை மதிப்பீடு செய்வதற்காக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கும் மோதி தலைமையேற்றார். 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் போலவே, நேபாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவமும் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக, டெல்லிக்குப் பயணம் செய்ய நேபாள பிரதமர் ஒலி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது. "சீனாவின் பெரிய ராணுவ தளமான Western Theatre Command நேபாளத்தின் மறுபக்கத்தில்தான் உள்ளது. இந்தோ - கங்கை சமவெளிகளுக்கான (வட இந்தியாவின் சமவெளி) நேரடி வழி நேபாளம்தான்," என்று நேபாளம் தொடர்பான நிபுணரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா பிபிசி-க்கு தெரிவித்தார். Getty Images நேபாள கூர்க்காக்கள் ஒரு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்தியாவில் நேபாளத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் இந்த அமைதியின்மை பாதிக்கிறது. இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் நேபாளிகள் வேலை செய்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நேபாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எல்லையைத் தாண்டிய சமூகங்கள் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளுக்குமிடையே மக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறார்கள். 1950 ஒப்பந்தத்தின் கீழ் நேபாளிகள் இந்தியாவில் எந்தத் தடையும் இன்றி வேலை செய்யலாம். இந்த ஏற்பாடு பூட்டானுடன் சேர்த்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மட்டுமே உள்ளது. மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 32,000 புகழ்பெற்ற கூர்க்கா வீரர்கள், பல ஆண்டுகளாக அமலில் உள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். "எல்லை திறந்திருப்பதால், சமூகங்கள் ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றன. இரு தரப்பிலும் உள்ள குடும்பங்கள் தினமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன" என்கிறார் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா தப்லியால். இமயமலைக்கு அப்பால் அமைந்துள்ள முக்திநாத் கோயில் உட்பட பல முக்கிய இந்து புனிதத் தலங்களும் நேபாளத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்து யாத்திரிகர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றனர். இதற்கிடையில், நேபாளம் இந்திய ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பெரிதும் சார்ந்துள்ளது. இந்தியா– நேபாளத்தின் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. Getty Images நேபாளம் முக்திநாத் கோயில் உட்பட பல முக்கியமான இந்து புனிதத் தலங்களைக் கொண்டுள்ளது. புதன்கிழமை காத்மாண்டுவில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தாலும், நாட்டை ஆண்ட மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் மீதும் போராட்டக்காரர்களிடையே கோபம் நிலவி வருவதால், இந்தியா மிக எச்சரிக்கையுடன் ஒரு ராஜ்ஜிய சமநிலையைப் பேண வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவுக்கு, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN–UML), ஷேர் பகதூர் தியூபாவின் நேபாள காங்கிரஸ், பிரசந்தா (புஷ்ப கமல் தஹால்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய மூன்று கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. இமயமலையால் பெரிதும் சூழப்பட்ட நாடான நேபாளத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை முன்னிட்டு, இந்தியாவும் சீனாவும் அங்குள்ள செல்வாக்குக்காக போட்டியிடுகின்றன. இதனால், வலிமையான இந்த இரண்டு ஆசிய நாடுகளும் நேபாளத்தின் உள்நாட்டுக் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. புதிய அரசாங்கத்தின் வடிவம் நிச்சயமற்றதாக இருப்பதால், "இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்" என்றும் "நேபாளத்தில் வங்கதேசம் போன்ற இன்னொரு சூழ்நிலை அவர்கள் விரும்பவில்லை"என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது. ஆனால், ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கிய முடிவால், தற்போதைய வங்கதேச இடைக்கால நிர்வாகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் முன்பே சில வேறுபாடுகள் இருந்துள்ளன. அவற்றையும் இப்போது மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நேபாளம் உரிமை கோரிய பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா இணைத்தது. இதனால் நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. பின்னர், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கொண்ட தனது சொந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராஜ்ஜிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன. சமீபத்தில், நேபாளம் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லிபுலேக் கணவாயில் இந்தியா – சீனா வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, இந்தக் கணவாயை வர்த்தகப் பாதையாக பயன்படுத்துவதை எதிர்த்து, சீனத் தலைமையிடம் ஓலி இந்த பிரச்னையை எழுப்பியிருந்தார். எந்தவொரு முரண்பாடுகளையும் சரி செய்ய இந்தியா புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் அரசியல் அமைப்பின் மீது கோபமாக இருக்கும் நேபாள இளைஞர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். "நேபாளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நேபாள மாணவர்களுக்கு உதவித் திட்டங்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்," என்று பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார். இந்நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருப்பது, அண்டை நாடுகளில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உறுதியின்மையை கையாள்வதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா ஏற்கனவே அண்டை நாடுகளுடன் சந்தித்து வரும் சிக்கல்களின் நடுவே வெடித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன நிலையில், ஒருபுறம் வங்கதேசத்துடனான உறவுகள் பதற்றத்தில் உள்ளன, மறுபுறம் மியான்மர் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது. "இந்தியா தனது பெரும் அதிகாரக் கனவுகளில் கவனம் செலுத்தி, அண்டை நாடுகளை புறக்கணித்துவிட்டது. ஆனால் அந்த இலக்கை அடைய விரும்பினால், முதலில் ஒரு பாதுகாப்பான, நிலையான அண்டை நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் அசோக் மேத்தா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2lx0rjkpk9o