4 days 17 hours ago
கத்தாரில் இஸ்ரேல் குறிவைத்த ஹமாஸ் தலைவர் எங்கே? - உலக நாடுகளை பகைத்து நடத்திய தாக்குதல் தோல்வியா? Getty Images ஹமாஸின் பேச்சுவார்த்தை குழு தலைவர் கலீல் அல்-ஹய்யா கட்டுரை தகவல் டேவிட் கிரிட்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாயன்று தோஹாவில் மூத்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காணாமல் போன இரண்டு பேரைத் தேடி வருவதாகவும், மனித எச்சங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலத்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் தெரிவித்த ஐந்து கீழ்மட்ட உறுப்பினர்களில் மூவரின் உடல்களை, கத்தார் உள்துறை அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, அவர்களோடு ஒரு கத்தார் பாதுகாப்பு அதிகாரியும் கொல்லப்பட்டுள்ளார். தனது பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்த இந்த தாக்குதல் தோல்வியடைந்ததாக ஹமாஸ் கூறியுள்ளது. சின்என்-க்கு அளித்த பேட்டியில், ஹமாஸின் தலைமை பேச்சுவார்த்தையாளர் கலீல் அல்-ஹய்யாவின் நிலை குறித்து கத்தார் பிரதமர் எதையும் வெளிப்படுத்தவில்லை. "இதுவரை... எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை," என்று ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி புதன்கிழமை மாலையில் தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் நடவடிக்கை "அரச பயங்கரவாதம்" எனக் கருதப்பட வேண்டியதாகவும், கத்தாரின் பிராந்திய கூட்டாளிகள் "கூட்டாகப் பதில்" அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் "பயங்கரவாத மூளையாக இருந்தவர்களை" குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நியாயமானது என்று தெரிவித்தார். அக்டோபர் 7 தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போரில், காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 64,656 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. AFP மிகவும் சர்ச்சைக்குரிய இந்த தாக்குதல் வெற்றி பெறவில்லை என்ற கவலை இஸ்ரேல் ராணுவ வட்டாரங்களில் உள்ளது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் முக்கிய பிராந்தியக் கூட்டாளியாக இருக்கும் கத்தாரில், பெரிய அமெரிக்க விமானத் தளம் அமைந்துள்ளது. 2012 முதல் ஹமாஸ் அரசியல் பணியகம் அங்கு செயல்பட்டு வருகிறது. மேலும், அமெரிக்கா மற்றும் எகிப்துடன் இணைந்து, ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் கத்தார் மத்தியஸ்தராகவும் இருந்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு தோஹாவில் நடந்த வான்வழித் தாக்குதல், ஹமாஸ் அரசியல் பணியகத்தின் பல உறுப்பினர்கள் வசித்த குடியிருப்பு வளாகத்தை குறிவைத்ததாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள், அமெரிக்கா முன்மொழிந்த சமீபத்திய போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்தைப் பற்றி ஆலோசித்து வந்தனர். இந்த நடவடிக்கையை "ஆபரேஷன் சம்மிட் ஆஃப் ஃபயர்" என அழைத்த இஸ்ரேலிய அதிகாரிகள், அதன் முடிவுகள் குறித்து தொடக்கத்தில் நம்பிக்கையுடன் இருந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர். ஆனால் புதன்கிழமை வந்த தகவல்கள், அந்த தாக்குதல் அவர்கள் நினைத்த அளவுக்கு வெற்றிகரமாக அமையவில்லை என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தின. சில அதிகாரிகள், ஹமாஸ் தலைவர்கள் கட்டிடத்தின் வேறு பகுதியில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹமாஸ், இந்த "கொடூரமான குற்றத் தாக்குதலில்" தனது ஐந்து உறுப்பினர்கள் உயிரிழந்ததாகக் கூறியது. கலீல் அல்-ஹய்யாவின் மகன் ஹுமாம், ஹய்யாவின் அலுவலக இயக்குநர் ஜிஹாத் லபாத், மற்றும் பாதுகாப்பு வீரர்கள் மோமன் ஹசௌனா, அப்துல்லா அப்துல் வாஹித், அகமது அல்-மம்லுக் ஆகியோர் தான் அந்த ஐவர். "பேச்சுவார்த்தைக் குழுவில் உள்ள எங்கள் சகோதரர்களை கொல்லும் முயற்சி தோல்வியடைந்தது," என்று ஹமாஸ் கூறியிருந்தாலும், அதற்கான எந்த ஆதாரத்தையும் அது வெளியிடவில்லை. புதன்கிழமை மாலை, ஹுமாம் அல்-ஹய்யா, லபாத், ஹசௌனா, மேலும் கத்தார் உள்நாட்டு பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கார்ப்ரல் பத்ர் அல்-ஹுமைடி ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. "காணாமல் போனதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன," என்றும், "பல்வேறு இடங்களில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கலீல் அல்-ஹய்யாவின் இருப்பிடத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளிப்படவில்லை. அவர் இன்னும் பொதுவெளியிலும் தோன்றவில்லை. கத்தார் ஹமாஸ் தலைவர்களுக்கு "பாதுகாப்பான புகலிடத்தை" வழங்கியதால், அவர்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தியதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். "பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் கத்தார் உட்பட அனைத்து நாடுகளுக்கும் நான் கூறுகிறேன், அவர்களை வெளியேற்றுங்கள் அல்லது நீதியின் முன் நிறுத்துங்கள். இல்லையெனில், நாங்களே நடவடிக்கை எடுப்போம்," என்று அவர் எச்சரித்தார். இதற்கு பதிலளித்த கத்தார் பிரதமர் ஷேக் முகமது, "நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது நெதன்யாகு தான். அவர் தான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தேடப்பட்டு வருபவர்," என்று சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த ஆண்டு, காஸாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்கு நெதன்யாகுவும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்டும் குற்றவியல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளதாகக் கூறி, ஐசிசி நீதிபதிகள் இருவருக்கும் கைது வாரண்டுகளை பிறப்பித்தனர். ஆனால் இஸ்ரேலிய அரசும், அந்த இருவரும் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தனர். இஸ்ரேலின் சமீபத்தியத் தாக்குதல், காஸாவில் மீதமுள்ள 48 பணயக்கைதிகள் மீதான நம்பிக்கையை "கொன்றுவிட்டது" என தாம் அஞ்சுவதாகவும், அதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுவதாகவும் ஷேக் முகமது தெரிவித்தார். தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ஒரு பணயக்கைதியின் குடும்பத்தினரை சந்தித்ததாகவும், அவர்கள் "இந்த போர்நிறுத்த மத்தியஸ்தத்தையே முழுமையாக நம்பியிருந்தனர், அவர்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை" எனக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் நடவடிக்கை "போருக்கு முடிவு காணும் கதவைத் திறக்கக்கூடும்" என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறினார். மேலும், அமெரிக்கா முன்மொழிந்த போர்நிறுத்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாகவும் உறுதிப்படுத்தினார். அதேசமயம் காஸா மக்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். கத்தார் இப்போது ஹமாஸ் அலுவலகத்தை மூடுமா என்ற கேள்விக்கு, தனது அரசு "எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வருகிறது" என்றும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவுடன் "விரிவான உரையாடல்" நடத்தி வருவதாகவும் ஷேக் முகமது கூறினார். இந்தத் தாக்குதலின் ஒவ்வொரு அம்சத்திலும் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியும் இறையாண்மை கொண்ட நாடான கத்தாருக்குள் ஒருதலைப்பட்சமாக குண்டுவீசுவது, அமைதியை நிலைநாட்ட எங்களுடன் கடினமாகவும் துணிச்சலாகவும் ஆபத்துகளை எதிர்கொண்டு செயல்படும் ஒரு நாட்டுக்கு எதிராகச் செய்யப்படும் நடவடிக்கை. இது இஸ்ரேலின் இலக்குகளையோ அல்லது அமெரிக்காவின் இலக்குகளையோ முன்னேற்றாது", "ஆனால், காஸாவில் வாழும் மக்களின் துயரத்திலிருந்து லாபம் ஈட்டிய ஹமாஸை ஒழிப்பது ஒரு நியாயமான குறிக்கோள்"என்று டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க ராணுவத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வரவிருக்கும் தாக்குதல் குறித்து கத்தாருக்குத் தெரிவிக்குமாறு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அது "மிகவும் தாமதமாகிவிட்டது" என்றும் டிரம்ப் கூறினார். அமெரிக்கா "தாக்குதல் நடந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு தான்" கத்தாரைத் தொடர்பு கொண்டதாக ஷேக் முகமது தெரிவித்தார். கத்தாரின் சக அரபு நாடுகளும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதன்கிழமை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஒற்றுமையை வெளிப்படுத்த தோஹாவிற்கு விமானம் மூலம் சென்றார். கத்தாரின் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியிடம், இஸ்ரேலின் "குற்றவியல் தாக்குதல்" மத்திய கிழக்கின் "பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் அமைதிக்கான வாய்ப்புகளை" அச்சுறுத்துவதாக கூறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டபுள்யூஏஎம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்தது. வியாழக்கிழமையன்று தோஹாவுக்கு வரவிருக்கும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத், இஸ்ரேலின் "கொடூரமான ஆக்கிரமிப்பு" நடவடிக்கைக்கு பதில் தேவைப்படுவதாகக் கூறினார். ஷேக் முகமதுவின் கூற்றுப்படி, பிராந்திய ரீதியான பதிலை விவாதிக்க விரைவில் கத்தாரில் ஒரு உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c931lw7e8zwo
4 days 18 hours ago
மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறினார் Published By: Digital Desk 3 11 Sep, 2025 | 02:24 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர். சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர். முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். இதேவேளை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224815
4 days 18 hours ago
11 Sep, 2025 | 10:12 AM யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/224784
4 days 18 hours ago
11 Sep, 2025 | 10:12 AM

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆவரங்கால் பகுதியில் நேற்று புதன்கிழமை (10) இரவு இராணுவத்தினரின் கன்ரர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு , அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
https://www.virakesari.lk/article/224784
4 days 18 hours ago
நாங்கள் பிடிக்காதந கட்டாகாலி மாடுகளா, எத்தனை மாடுகளை பிடித்து கொடுத்து பெடியாள தண்ணி அடிச்சிருப்பம், அப்படியை மாட்டை கலைத்து கொண்டு போய் நான் வலை பிடித்து ஒரு சுற்று சுற்ற மற்றவர் கழுத்தில் கயிறு போட்டு பிடிப்பதே ஒரு திரில்தான், அது ஒரு காலம்
4 days 18 hours ago
சார்லி கக்: டிரம்பின் கூட்டாளி சுட்டுக் கொலை - 3000 பேர் முன்னிலையில் நடந்த சம்பவம் Reuters கொல்லப்படுவதற்கு முன், யூட்டா பல்கலைகழகத்தில் சார்லி கக் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் கட்டுரை தகவல் ஜூட் ஷீரின், ஆனா ஃபகே 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் யூட்டா பகுதியில் உள்ள யூட்டா வேலி பல்கலைகழகத்தில், அதிபர் டிரம்பின் கூட்டாளியான சார்லி கக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்கலைகழக வளாகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் பேசி வந்தார். பல்கலைகழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கொலையாளியை தேடும் பணி வீடு வீடாக நடைபெறுவதாக போலீஸார் கூறுகின்றனர். சார்லி கக் இறப்பை தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப் பட்டது. அவரது இறப்புக்கு ஜோ பைடன், ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உட்பட முன்னாள் அதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டிரம்ப் கூறியது என்ன? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான சார்லி கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். 2012 ஆம் ஆண்டில், 18 வயதில், அவர் தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாணவர் அமைப்பான டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ (TPUSA) ஐ நிறுவினார். அவரது சமூக ஊடக பதிவுகள் மற்றும் தினசரி போட்காஸ்ட் பெரும்பாலும் திருநங்கை அடையாளம், காலநிலை மாற்றம், குடும்பம் போன்றவை குறித்ததாக இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வீடியோ பதிவில், "சார்லி கக்கின் கொடூரமான படுகொலை குறித்து வருத்தமும் கோபமும் கொண்டுள்ளேன்" என்று கூறியுள்ளார் சார்லி கக் - தனது 18 வயதில் டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ என்ற பழமைவாத குழுவை நிறுவினார், அவர் ஒரு தேசபக்தர், அவரது மரணம் "அமெரிக்காவிற்கு ஒரு இருண்ட தருணம்" என்று டிரம்ப் கூறினார். யூட்டா பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சார்லி கக் பங்கேற்று பேசி வந்தார். யூட்டா பல்கலைகழக காவல் தலைமை அதிகாரி ஜெஃப் லாங், இந்நிகழ்வு திறந்த வெளியில் நடைபெற்றதாகவும், 3 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் ஆறு அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம் முழுவதும் கட்டடங்களால் சூழப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சார்லி கக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் இருந்ததாக ஒக்லஹாமா மாகாண பிரதிநி மார்க்வேனே முல்லின்ஸ் கூறினார். சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் பல்கலைகழக வளாகத்தில் ஒரு கட்டடத்தின் மாடியில் இருந்து ஒருவர் கிர்கை சுட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. அந்த காட்சிகளை பிபிசி ஆராய்ந்த போது, அந்த கட்டிடம் சார்லி கக் சுடப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருப்பது தெரிய வந்தது. எனினும் அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலை உறுதி செய்ய முடியவில்லை. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், அவர் துப்பாக்கிச் சூடுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருக்கும் போது, சுடப்பட்டதாக கூறுகின்றனர். சுடப்பட்டவுடன், மேடையில் அவர் கீழே விழுந்தார். கூடியிருந்த மாணவர்களும், இளைஞர்கள் அங்கிருந்து ஓட தொடங்கினர். சார்லி கக் சுடப்பட்ட பிறகு, அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார். சார்லி கக் சுடப்பட்ட உடனே ஒரு நபர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை என்று அவர் விடுவிக்கப்பட்டார். சிசிடிவி காட்சிகளில் சுட்டவர் பதிவாகியுள்ளார். அவர் முழுவதும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதும், பல்கலைகழக வளாகத்தில் ஒரு மேற்கூரையிலிருந்து சுட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. யூட்டா ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார், சார்லி கக்கின் மரணத்தை "அரசியல் கொலை" என்று அவர் குறிப்பிட்டார். தலைவர்கள், முன்னாள் அதிபர்கள் அஞ்சலி சார்லி கக்கின் உயிரிழப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், அமெரிக்க முன்னாள் அதிபர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் கீயர் ஸ்டார்மர், "நாம் திறந்த மனதுடன் விவாதிக்கவும், பயம் இல்லாமல் பேசவும் முடிய வேண்டும். அரசியல் வன்முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார். இத்தாலி பிரதமர் ஜிராஜியா மெலோனி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலேய் ஆகியோரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ளனர். சார்லி கக் யார்? சார்லி கக் அமெரிக்காவில் மிகவும் முக்கியமான பழமைவாத ஆர்வலர்களில் ஒருவர் , ஊடக பிரபலம், அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பகமான கூட்டாளியாக இருந்தார். யூட்டா கல்லூரியில் புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த 31 வயதான கக், நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் திறந்தவெளி விவாதங்களை நடத்தியதற்காக அறியப்பட்டவர். சிகாகோவின் புறநகர்ப் பகுதியான ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸில் வளர்ந்த ஒரு கட்டிடக் கலைஞரின் மகன் கக். அரசியல் செயல்பாட்டில் தன்னை அர்ப்பணிப்பதற்கு முன்பு சிகாகோவுக்கு அருகிலுள்ள ஒரு சமூகக் கல்லூரியில் பயின்று, பாதியில் நின்று விட்டார். உயர்மட்ட அமெரிக்க ராணுவ அகாடமியான வெஸ்ட் பாயிண்டிற்கு தேர்வாக முயன்று தோல்வியுற்றார். பின்நவீனத்துவம் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் விவாதங்களில் ஈடுபடும்போது கக் கல்லூரி பட்டம் கூட பெறாதவர் என்று குறிப்பிடப்பட்டார். Reuters 2024-ம் ஆண்டு அரிசோனாவில் சார்லி கக் ஒரு மாநாட்டில் பேசினார். 2012 -ல் அதிபர் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் TPUSA -ல் அவரது பங்களிப்பு தொடங்கியது. லாப நோக்கற்ற அந்த அமைப்பின் நோக்கம் "நிதிப் பொறுப்பு, சுதந்திர சந்தைகள் மற்றும் வரையறுக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகளை மேம்படுத்த" மாணவர்களை ஒழுங்கமைப்பதாகும். TPUSA இப்போது 850 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் தனது செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. கக் குடியரசுக் கட்சி நிகழ்வுகளில் பேசி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார், அதிதீவிர பழமைவாதிகளிடையே பிரபலமாக இருந்தார். அவரது தினசரி பழமைவாத பேச்சு வானொலி நிகழ்ச்சி, சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தது என்று சிபிஎஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. Getty Images டொனால்ட் டிரம்ப் ஜூனியர், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜே டி வான்ஸ் ஆகியோருடன் ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சார்லி கக் பங்கேற்றார். ஒரு ஆர்வமுள்ள மேடை பேச்சாளரான, சார்லி கக் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றினார். ட்ரம்பின் மேக் அமெரிக்கா கிரேட் எனும் பிரசாரத்தைக் குறிக்கும் வகையில், அவர் எழுதிய தி மாகா கோட்பாடு 2020 ஆம் ஆண்டின் சிறந்த விற்பனையான நூலாக இருந்தது. கடந்த ஆண்டு தேர்தலில் டிரம்ப் மற்றும் பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் TPUSA முக்கிய பங்கு வகித்தது. பல்லாயிரக்கணக்கான புதிய வாக்காளர்களை பதிவு செய்ய உதவியதற்கும், ட்ரம்புக்கு ஆதரவாக அரிசோனா மாகாணத்தில் நிலைமைகளை மாற்றியதற்கும் அவர் வெகுவாக பாராட்டப்பட்டார். சார்லி கக் ஜனவரி மாதம் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த டிரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். டிரம்ப் ஆட்சிக் காலங்களில் வெள்ளை மாளிகைக்கு அவர் அடிக்கடி வருவது வழக்கம். புதன்கிழமை, கக்கின் மரணத்தை அறிவித்த டிரம்ப் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்: "தி கிரேட், மற்றும் லெஜண்டரி, சார்லி கக் இறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள இளைஞர்களின் இதயத்தை சார்லியை விட யாரும் புரிந்து கொள்ளவில்லை" என்றார். Reuters 2018-ம் ஆண்டு சார்லி கிர்குடன் அதிபர் டிரம்ப். அதிபரும் அவரது உதவியாளர்களும் டிரம்பின் பிரசாரத்துக்கு சார்லி கக்கின் பங்கை அங்கீகரித்தனர். அவர் குடியரசுக் கட்சி மாநாடுகளில் பேசினார். கக்கின் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் அரிசோனாவில் கக் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அவர் டொனால்ட் டிரம்ப் உடன் கிரீன்லாந்திற்கு பயணம் செய்தார். டிரம்ப் அப்போது ஆர்க்டிக் பிராந்தியத்தை அமெரிக்கா சொந்தமாக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார். சார்லி கக்கின் சுவிசேஷ கிறிஸ்தவ மதம் மற்றும் குடும்பம் அவரது அரசியலில் முக்கிய பங்காற்றியது என்று கூறலாம். அவர் ஒரு முன்னாள் மிஸ் அரிசோனாவை திருமணம் செய்து கொண்டார், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பழமைவாத செயல்பாடுகளின் எதிர்காலமாகவும், தீவிர பிரிவினைவாத நபராகவும் பார்க்கப்பட்டார். குடியரசுக் கட்சி அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்குக்கு மிகப்பெரிய பாராட்டு டிரம்பிடமிருந்தே வந்தது என்று கூறலாம். டிரம்பின் இந்த வார்த்தைகள் சார்லி கக்கின் பாட்காஸ்டின் தொடக்கத்தில் ஒலிபரப்பட்டது. அதில் டிரம்ப், "நான் சார்லிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், அவர் ஒரு நம்பமுடியாத இளைஞர், அவரது உணர்வு, இந்த நாட்டின் மீதான அவரது அன்பு, இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த இளைஞர் அமைப்புகளில் ஒன்றை உருவாக்குவதில் அவர் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளார்." என்று கூறியுள்ளார். சார்லி கக் தனது நிகழ்வுகள் மற்றும் அவரது பாட்காஸ்ட்களில் பல அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை விவாதித்துள்ளார் - துப்பாக்கி கட்டுப்பாடு அவற்றில் ஒன்றாகும். சில மாதங்களுக்கு முன்பு, "துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு ஆண்டும் சில துப்பாக்கி இறப்புகள் நிகழ்ந்தாலும், இரண்டாவது சட்டத் திருத்தத்தை (துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்குகிறது) தக்க வைத்துக் கொள்ள அந்த விலையை கொடுக்க வேண்டியுள்ளது" என்று அவர் பேசியிருந்தார். அவரது சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்டன. அவர் கோவிட் -19 தொற்றுநோய் குறித்து சந்தேகத்தையும் பரப்பினார், திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களையும் பரப்பினார் என்று பிபிசியின் செய்தி கூட்டாளியான சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 2020 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் தவறான கூற்றையும் அவர் வழிமொழிந்தார். சிபிஎஸ் செய்தியின் படி, வெள்ளை மக்களின் இடத்தை சிறுபான்மையினர் பிடித்துக் கொள்வார்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட கிரேட் ரிப்ளேஸ்மென்ட் சதி கோட்பாட்டையும் அவர் முன்னிலைப்படுத்தினார். சார்லி கக் சுடப்பட்டது குறித்து பேசும் போது, அவர் வெவ்வேறு கருத்துகள் குறித்த விவாதங்களை ஊக்குவித்தார் என்று சிலர் வலியுறுத்தினர். "அவரது செயல்பாடுகள் பிளவைக் கடந்து மக்களை அணுகுவது, பிரச்னைகளை தீர்க்க வன்முறைக்கு பதில் பேச்சைப் பயன்படுத்து என்ற நோக்கில் இருந்தது. " என பாப்டிஸ்ட் தலைமைத்துவ மையத்தின் நிர்வாக இயக்குனர் வில்லியம் வொல்ஃப் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3rvw7434v9o
4 days 18 hours ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
4 days 18 hours ago
இவர்தான் அண்மையில் நாமலை புகழ்ந்து, அடுத்த ஜனாதிபதி அவர் என்றும் முன்புபோல் தமிழருக்கு நடவாதென்றும், தனது அப்பாவை காணாமல் ஆக்கியதை மன்னித்து விட்டதாகவும் கூறியிருந்தார். தேர்தல் காலத்திலேயே மாறி மாறி கதைத்தவர், இவரும் தேர்தலை முன்னிட்டே அப்பப்போ கதையை மாற்றுகிறார். தையிட்டி விகாரை உடைக்கப்படாதென்றும் அதற்காக வேறொரு காணி கொடுக்கப்படலாம் என்றும் கருத்துரைத்தவர், ஆனால் தன் காணிக்கு யார் அதிக விலை தருகிறார்களோ அவர்களுக்கு விற்று விடுவேன், அது யாராகவும் இருக்கலாமென சொன்னவர், நாளைக்கு இன்றைய கருத்தையும் மாற்றிச்சொல்வார். ஒரு கொள்கை இல்லாதவர்கள். இவர்கள் பின்னால் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அலைகிறார்கள்.
4 days 18 hours ago
ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம் 2025 – இலங்கை அணி அறிவிப்பு Published By: Digital Desk 1 11 Sep, 2025 | 12:54 PM சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டி 2025க்கான இலங்கை மகளிர் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு தெரிவு செய்துள்ளது. மகளிருக்கான உலகக் கிண்ணப்போட்டி செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. குவஹாத்தியில் நடைபெறும் ஆரம்ப போட்டியில்; இலங்கை அணி இந்தியாவை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணப்போட்டியின் தலைவராக சாமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், துணைத்தலைவராக அனுஷ்கா சஞ்சீவனி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில், ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே,ஹர்ஷித சமரவிக்ரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, இமேஷா துலானி, தேவ்மி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரணவீர, சுகந்திகா குமாரி, உதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூரிய ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/224808
4 days 18 hours ago
ஆசிய கோப்பை: இந்தியாவிடம் சண்டையின்றி சரணடைந்தது யுஏஇ - பாகிஸ்தானுக்கு போக்கு காட்டிய அணியை சுருட்டியது எப்படி? Getty Images கட்டுரை தகவல் தினேஷ்குமார்.எஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, யூஏஇ அணிகள் மோதின. நீண்ட காலத்துக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. ஓப்பனர் இடத்தை கில்லுக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சாம்சன், விக்கெட் கீப்பராக தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். சாம்சனுக்கு பதிலாக விக்கெட் கீப்பராக அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக பும்ரா மட்டும் சேர்க்கப்பட்டு, பேட்டிங் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார். துபாய் ஆடுகளத்தில் 175 - 180 ரன்களே வெற்றிக்கு போதுமானது எனக் கூறப்படும் நிலையில், டாஸ் வென்ற சூர்யகுமார் யாதவ் சரியான முடிவெடுத்தார். நெருக்கடி கொடுத்த பும்ரா SAJJAD HUSSAIN/AFP via Getty Images பும்ராவின் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது ஹார்திக் பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் யூஏஇ அணி, 10 ரன்கள் எடுத்து நேர்மறையாக இன்னிங்ஸை தொடங்கியது. முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விளாசிய ஷரஃபு, பும்ரா, அக்சர் படேல் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்சர் அடித்து அதகளப்படுத்தினார். 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த ஷரஃபு, பும்ராவின் அற்புதமான யார்க்கரில் தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 2024 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பிய பும்ரா, சில பவுண்டரிகளை விட்டுக்கொடுத்தாலும் பிரமாதமாக பந்துவீசினார். யூஏஇ அணியின் டாப் ஆர்டருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக பவர்பிளே கட்டத்திலேயே பும்ராவை மூன்று ஓவர்களை சூர்யகுமார் யாதவ் வீசச் செய்தார். ஒரு விக்கெட் மட்டுமே பும்ரா எடுத்தாலும், அவர் ஒருமுனையில் கொடுத்த நெருக்கடியாலே பிற வீரர்கள் விக்கெட் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய முகமது ஸோஹைப், வருண் சக்கரவர்த்தியின் முதல் ஓவரிலேயே, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் ஃபிலைட் செய்து வீசப்பட்ட பந்தை இன்சைட் அவுட் ஆட முயன்று, பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பேட்டிங் வரிசையை நொறுக்கிய குல்தீப் SAJJAD HUSSAIN/AFP via Getty Images அதுவரை பெரும்பாலும் எதிர்முனையிலேயே அமைதியாக நின்றுகொண்டிருந்த கேப்டன் முகமது வாசீம், பும்ரா வீசிய ஆட்டத்தின் ஆறாவது ஓவரில், மூன்று பவுண்டரிகள் அடித்து, இரட்டை இலக்கத்துக்கு நகர்ந்தார். 47 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்த யூஏஇ அணியின் பேட்டிங் முதுகெலும்பை குல்தீப் யாதவ் மொத்தமாக உடைத்துப்போட்டார். இன்னிங்ஸின் ஒன்பதாவது ஓவரில் ராகுல் சோப்ரா, முகமது வாசீம், ஹர்ஷிட் கௌசிக் என மூன்று விக்கெட்களை கைப்பற்றி, 50 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழக்கும் நிலைக்கு யூஏஇ அணியை தள்ளினார். முதலில் அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தில் பெரிய ஷாட் ஆட முயன்று, லாங் ஆன் திசையில் கில்லிடம் கேட்ச் கொடுத்து சோப்ரா ஆட்டமிழந்தார். அடுத்ததாக, ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட பந்தில் ஸ்வீப் ஷாட் ஆடப் பார்த்து, கேப்டன் வாசீம் எல்பிடபிள்யூ ஆனார். ஓவரின் கடைசி பந்தில் கூக்ளி வீசி, ஹர்ஷிட் கௌசிக்கின் ஸ்டம்புகளை பதம்பார்த்தார். Getty Images குல்தீப் யாதவ் கடைசி கட்டத்தில் அணியை கரைசேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் கான், 2 ரன்கள் மட்டுமே எடுத்து பேட்டிங் ஆல்ரவுண்டர் துபேவின் மிதவேகப் பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார். அடுத்தடுத்த ஓவர்களில் யூஏஇ அணியின் டெயிலெண்டர்கள் விளையாடிய விதம், அதுவொரு கத்துக்குட்டி அணி என்பதை நிரூபித்தது. எந்தவொரு திட்டமிடலும் இன்றி, மனம்போன போக்கில் பேட்டை சுழற்றி விக்கெட்டை கோட்டைவிட்டனர். இந்திய வம்சாவளி வீரரான சிம்ரன்ஜீட் சிங், 1 ரன்னில் அக்சர் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில், பராசர், ஜுனைட் சித்திக் ஆகியோரின் விக்கெட்டை துபே கைப்பற்ற, கடைசி விக்கெட்டாக ஹைதர் அலியை ஆட்டமிழக்க செய்து இன்னிங்ஸை முடித்துவைத்தார். ஒருகட்டத்தில் 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த யூஏஇ அணி, மோசமான பேட்டிங்கால் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையின் முதல் ஆட்டத்தில், யூஏஇ அணி 13.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து, 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக குறைந்த ரன் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை யூஏஇ அணி படைத்தது. Getty Images ஜஸ்ப்ரித் பும்ரா சூர்யகுமாரின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் தருணம் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சைனாமேன் சுழலர் குல்தீப் யாதவ், 4 விக்கெட்களை கைப்பற்றி, தனது திறமையை நிரூபித்தார். குல்தீப் மட்டுமின்றி, அக்சர், வருண் சக்கரவர்த்தி என அனைத்து சுழலர்களும் விக்கெட் கைப்பற்றி அசத்தினர். பும்ரா, ஹார்திக் பாண்ட்யாவுடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக களமிறங்கிய துபே, மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். துபே வீசிய இரண்டாவது ஓவரில், கிரீஸுக்கு வெளியே சென்ற ஜுனைட் சித்திக்கை சாம்சன் ரன் அவுட் செய்தார். ஆனால், பந்துவீச ஓடி வருகையில், துபேவின் துண்டு (rag) கீழே விழுந்தால், கவனம் தொலைத்ததாக ஜுனைட் சித்திக் முறையிடவே, அப்பீலை வாபஸ் பெற்றார் சூர்யகுமார் யாதவ். Getty Images வருண் சக்ரவர்த்தி 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய ஓப்பனர்கள் அபிஷேக் சர்மாவும் கில்லும் தொடக்கம் முதலே பேயாட்டம் ஆடினர். ஹைதர் அலி வீசிய இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு, புயல் வேகத்தில் இலக்கை விரட்டினார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய டி20 அணிக்கு மறுவருகை நிகழ்த்திய கில்லும் தன் பங்குக்கு, அதிரடியை வெளிப்படுத்தினார். ஜுனைட் சித்திக் பந்தில் பிரமாண்டமான சிக்ஸர் விளாசிய அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலும் பெரிய ஷாட்டுக்கு முயன்று 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். நெட் ரன் ரேட்டை (NRR) அதிகப்படுத்தும் நோக்கத்துடன் விளையாடிய இந்திய அணி, 4.3 ஓவரில், வெற்றிக்கான ரன்களை எட்டியது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அதிவேகமான சேஸாக, இந்த ஆட்டம் மாறியது. சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடிய யூஏஇ அணி, மோசமான முறையில் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது. 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் கைப்பற்றிய குல்தீப் யாதவ், ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி, 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை(செப். 14) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆட்டமான அதில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ஆதிக்கத்தை பறைசாற்றுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலாக உள்ளது. 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு, இரு அணிகளும் முதல்முதலில் மோதும் கிரிக்கெட் ஆட்டம் என்பதால், உலகம் முழுக்க இந்த ஆட்டத்துக்கு எதிர்பார்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylwlk5wewo
4 days 21 hours ago
சம்பந்தன் இப்ப உயிருடன் இருந்திருந்தாலும்.... இப்போ... அரச மாளிகையை விட்டு வில்லங்கமாக வெளியேற்றப் பட்டிருப்பார். எதிர்க்கட்சி தலைவர் பதவி பறி போன பின்பும்... ஏழு, எட்டு வருசமாக அடாத்தாக அரச மாளிகையில் இருந்து அனுபவித்து விட்டுத்தான் செத்துப் போன ஆள்.
4 days 21 hours ago
4 days 21 hours ago
உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்தார் மைத்திரி! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நேற்று (10) ஜனாதிபதிகளின் சிறப்பு உரிமைகளை நீக்குதல் சட்டம் மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். https://athavannews.com/2025/1446773
4 days 22 hours ago
4 days 22 hours ago
4 days 22 hours ago
வேத வியாசரின் தீர்க்க தரிசனம் ..........!
4 days 22 hours ago
உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா! முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தான் பயன்படுத்திவந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளார். நேற்று (10) நாடாளுமன்றில் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை சபாநாயகர் நேற்றைய தினமே சான்றுரைப் படுத்தியிருந்தார். இதன்படி குறித்த சட்டம் நேற்றுமுதல் அமுலுக்கு வந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இல்லங்களை விட்டு வெளியேறியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறவுள்ளார். https://athavannews.com/2025/1446792
4 days 22 hours ago
உள்ளக மற்றும் கலப்புப்பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 11 Sep, 2025 | 04:19 AM (நா.தனுஜா) பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் என கூட்டாக எச்சரித்திருக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் தகவல் நடுவம், தமிழ் ஆய்வு நிலையம், இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் இளையோர் அமைப்பு, சர்வதேச ஈழத்தமிழர் பேரவை, கனேடியத் தமிழ்த்தேசிய அவை, உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிலும் இயங்கிவரும் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளுக்குக் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏதுவான பலதரப்பட்ட வழிமுறைகள் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் எனவும் அக்கடிதத்தில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை தமிழ்மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படுவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்கும் வழிகோலும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், உள்ளகப்பொறிமுறையை நிராகரிக்குமாறும், இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. https://www.virakesari.lk/article/224771
4 days 23 hours ago
To achieve an effective western toilet sitting position, keep your knees higher than your hips, sit up straight, and lean forward slightly with your elbows resting on your thighs or knees, similar to a squat. A footstool can be used to raise your feet to achieve the ideal knee elevation. This posture lengthens the rectum and relaxes the pelvic floor, facilitating a bowel movement. ஒரு பயனுள்ள மேற்கத்திய கழிப்பறை உட்கார்ந்த நிலையை அடைய, உங்கள் முழங்கால்களை உங்கள் இடுப்பை விட உயரமாக வைத்து, நேராக உட்கார்ந்து, உங்கள் முழங்கைகள் உங்கள் தொடைகள் அல்லது முழங்கால்களில் ஊன்றி, குந்துகை போல, சற்று முன்னோக்கி சாய்ந்து கொள்ளுங்கள். சிறந்த முழங்கால் உயரத்தை அடைய உங்கள் கால்களை உயர்த்த ஒரு கால் ஸ்டூலைப் பயன்படுத்தலாம். இந்த ஆசனம் மலக்குடலை நீட்டி, இடுப்புத் தளத்தை தளர்த்தி, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. எனது நண்பரும் மாணவப் பருவத்தில் முதன்முதல் அவ்வாறு இருந்ததாக கூறுவார். நார்ச்சத்து அதிகம் உள்ள சில உணவுகள்: பழங்கள்: ஆப்பிள், கொய்யா, பீச், ஆரஞ்சு, பெர்ரி வகைகள் காய்கறிகள்: கேரட், ப்ரோக்கோலி, கீரைகள், பீன்ஸ் பருப்பு வகைகள்: கருப்பு பீன்ஸ், பயறு வகைகள், கொண்டைக்கடலை முழு தானியங்கள்: ஓட்ஸ், குயினோவா, பழுப்பு அரிசி, முழு கோதுமை கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள், ஆளி விதைகள் நார்ச்சத்துள்ள உணவுகளின் நன்மைகள்: செரிமான ஆரோக்கியம்: செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடை மேலாண்மை: அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி, நிறைவாக உணர உதவுகிறது. இரத்த சர்க்கரை கட்டுப்பாடு: இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் குறைப்பு: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து இதில் உள்ளது. இந்த நார்ச்சத்துள்ள உணவுகளை உங்கள் உணவில் சேர்த்து, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
4 days 23 hours ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 15 | நெறிகளை மீறிய ‘மூர்க்கம்’ என்று சாடப்பட்ட ஒரு காவிய ஆக்கம் அ. குமரேசன் நான்கு திரைப்படங்களாக, நான்கு தொலைக்காட்சித் தொடர்களாக, பல முறை மேடை நாடகங்களாக, ஒரு நாட்டிய நாடகமாக வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல் அது. கதையைத் தழுவி இந்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்கள் வந்திருக்கின்றன (கதையைப் படிக்கிறபோது அதே சாயலில் தமிழில் வந்த படங்களும் உங்கள் நினைவுக்கு வரும்). ஆனால், நாவல் வெளியானபோது கடுமையான மூன்று வகை எதிர்ப்புகளைச் சந்தித்தது. ஒன்று –அதுவரை வழக்கத்தில் இருந்த நேர்கோட்டு முறையிலிருந்து வெகுவாக விலகிய தனித்துவமான புதிய கதை சொல்லல் நடை படிப்பதற்குக் கடினமாக இருக்கிறது. இரண்டு –வன்முறையையும் பழிவாங்கல் உணர்வையும் நியாயப்படுத்துகிறது. மூன்று –திருச்சபையால் அறிவுறுத்தப்பட்டு வந்துள்ள சமூக நெறிகளை மீறுகிறது. இந்த எதிர்மறை விமர்சனங்களைக் கடந்து, இங்கிலாந்து நாட்டு இலக்கியத்தில் சிறந்ததொரு காவியப் படைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அந்த நாவல் ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ (மூர்க்கச் சிகரங்கள்). 1847இல் வெளியான இந்த நூலை எழுதியவர் எமிலி பிரான்ட்டே. அவர் எழுதிய முதல் நாவல் மட்டுமல்ல, இதுவே அவருடைய கடைசி நாவலும் கூட. ஆம், ‘எல்லிஸ் பெல்’ என்ற புனைப் பெயரில் எழுதி வந்த அவரது ஒரே நாவல் இதுதான். மற்றபடி அதே புனைப் பெயரில் கவிதைகளும், உலகத்தைப் பற்றிய கருத்துக் குறிப்புகளும் எழுதியிருக்கிறார். 1818இல் பிறந்த எமிலி பிரான்ட்டே ஏன் அடுத்த நாவலை எழுதவில்லை என்றால், அவருடைய இலக்கிய மேதைமையைக் காட்டிய இந்த நாவல் வெளியான அடுத்த ஆண்டிலேயே, 30 வயதில், காசநோய்க்கு பலியாகிவிட்டார். நாவலின் மூர்க்கக் காட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக எழுத்தாளர் தொடர்பான இன்னொரு சுவையான தகவலைத் தெரிந்துகொள்வோம். சகோதரிகளான எமிலி பிரான்ட்டே, சார்லோட் பிரான்ட்டே, ஆன் பிரான்டே மூவருமே எழுத்தாளர்கள். தமிழகக் கல்லூரிகளுக்கும் வந்த ‘ஜேன் அயர்’ நாவலை எழுதியவர் சார்லோட். ‘தி டெனன்ட் ஆஃப் ஒயில்டுஃபெல் ஹால்’ நாவலை வழங்கியவர் ஆன். மற்றுமொரு தகவல் – மூவருமே காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள். நாவலின் சுருக்கம் ‘வுதரிங் ஹெய்ட்ஸ்’ இங்கிலாந்தின் யோர்க்ஷைர் மூர்ஸ் எனப்படும் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த எர்ன்ஷா, லின்டன் என்ற இரண்டு குடும்பங்களின் உறவுகள் பற்றிய கதை. வன்முறைகள் நிறைந்த ஆனால் உணர்வுப்பூர்வமான உறவுகளை அது சித்தரிக்கிறது. லாக்வுட் என்ற ஒரு பண்ணைக் குத்தகைதாரரின் அனுபவங்களிலிருந்து தொடங்குகிறது கதை. அவர் த்ரஷ்க்ராஸ் க்ரேன்ஜ் என்ற பண்ணையைக் குத்தகைக்கு எடுக்கிறார். அந்தப் பண்ணையின் உரிமையாளரான ஹீத்கிளிஃப் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள வுதரிங் ஹெய்ட்ஸ் பண்ணை வீட்டில் வசிக்கிறார். சூறாவளி போல் எப்போது வேண்டுமானாலும் கடுமையான காற்று வீசுகிற, எளிதில் நடமாட இயலாத உயரமான மேடுகள் நிறைந்த ஒரு மூர்க்கத்தனமான சூழலில் அந்தப் பண்ணையும் வீடும் இருக்கின்றன. அங்கே செல்கிற லாக்வுட் அந்த விசித்திரமான சூழலால் ஈர்க்கப்படுகிறார். ஆனால் அந்த வீட்டில் உள்ள கேத்தி, படிப்பறிவில்லாத பணியாளர் போல நடந்துகொள்ளும் ஹெர்ட்டன் பணியாளர் ஜோசப் ஆகியோர் லாக்வுட்டுடன் இணக்கமின்றி நடந்துகொள்கிறார்கள். வெளியே கடும் பனிப்பொழிவு காரணமாக அந்த வீட்டிலேயே இரவு தங்குகிற லாக்வுட், தனக்குத் தரப்பட்ட அறையில் இருந்த ஒரு நாட்குறிப்பேட்டைப் படிக்கிறார். அது, அந்த அறையில் முன்பு இருந்தவளும், பண்ணைவீட்டின் முன்னாள் உரிமையாளர் எர்ன்ஷா மகளுமான கேத்தரின் எழுதி வைத்தது. இரவில் கேத்தரின் சன்னலுக்கு வெளியே ஆவியாக வந்து, கதவைத் திறந்துவிடுமாறு கெஞ்சுகிறாள். அலறியடித்து உறக்கத்திலிருந்து எழுகிறார் லாக்வுட். அவருடைய அலறலால் தனது அறையில் இருக்கும் ஹீத்கிளிஃப் உளைச்சலடைகிறார். காலையில் கடும் பனியிலேயே தனது பண்ணைக்குத் திரும்பும் லாக்வுட்டின் உடல்நலம் குன்றிப் படுக்கையில் விழுகிறார். வீட்டைப் பராமரிக்கும் பெண்ணான நெல்லி டீன் அவருக்கு, வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டின் கடந்த காலக் கதையைக் கூறுகிறார். அந்தக் கதை முப்பது ஆண்டுகள் பின்னாலிருந்து தொடங்குகிறது. எர்ன்ஷாவின் மகன் ஹிண்ட்லி, மகள் கேத்தரின். ஒருநாள் எர்ன்ஷா நகரத்திலிருந்து ஆதரவற்ற ஒரு சிறுவனைத் தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவன்தான் ஹீத்கிளிஃப். அவனுடைய பிறப்பு மூலம் தெரியவில்லை, அநேகமாக ஒரு நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைக் கவனிக்கத் தவறும் எர்ன்ஷா அவனிடம் அன்பு காட்டுகிறார். அது ஹிண்ட்லிக்கு அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் கேத்தரினுக்கு அவனைப் பிடித்துப் போகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்களாகக் காட்டிலும் காற்றிலும் சுற்றித் திரிகிறார்கள். ஹிண்ட்லி படிப்புக்காக வெளியூர் செல்கிறான். மூன்று ஆண்டுகளில் எர்ன்ஷா இறந்துவிட, அவன் மாளிகையின் உரிமையாளராகிறான். திருமணத்திற்குப் பிறகு ஹிண்ட்லி, அவனுடைய மனைவி பிரான்சஸ் இருவரும் ஹீத்கிளிஃபை மேலும் அவமதிக்கிறார்கள். வேலைக்காரர்களில் ஒருவனாக நடத்துவதுடன் தினமும் மோசமான சொற்களால் வசவுகளை வீசுகிறார்கள். த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணை வீட்டில் எட்கர் லிண்டன், அவனுடைய தங்கை இசபெல்லா வாழ்கிறார்கள். கேத்தரினும் ஹீத்கிளிஃபும் அவர்களை சிறுவயதுக் குறுகுறுப்புடன் வேவு பார்க்கிறார்கள். கேத்தரினை நாய் கடித்துவிட, வெளியே வரும் எட்கர் அவளை மட்டும் வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறான். வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டுக்கு எட்கரும் இசபெல்லாவும் வருகிறார்கள். அங்கே எட்கரும் ஹிண்ட்லியும் சேர்ந்து ஹீத்கிளிஃபை இழிவாகப் பேசிச் சிரிக்கிறார்கள். ஒரு மோதல் ஏற்படுவதைத் தொடர்ந்து, அழுக்கு நிறைந்த, சூடுபடுத்திக்கொள்ளும் வசதி இல்லாத மாடியறையில் தங்கவைக்கப்படுகிறான். அப்போதே அவனுக்குள் இவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் முளைவிடுகிறது. வயது வளர வளர கேத்தரின் மீது அவன் கொண்ட நட்பு ஆழ்ந்த காதலாக வளர்கிறது. ஹிண்ட்லி, பிரான்சஸ் இணையருக்கு ஒரு மகன் – ஹேர்டன் – பிறக்கிறான். நீண்ட காலமாக காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரான்சஸ் குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்துவிடுகிறாள். கேத்தரின் சமூகப் பெருமைக்காகவும் வசதியான வாழ்க்கைக்காகவும் எட்கரை மணக்க முடிவு செய்கிறாள். ஆனாலும் அவள் மனம் ஹீத்கிளிஃபையே நேசிக்கிறது. இதை அவள் நெல்லியிடம் பகிர்ந்துகொள்கிறாள். அவனுக்கு உதவ விரும்புவதாகக் கூறும் அவள், ஆனால் அவனுடைய தாழ்ந்த சமூக நிலை காரணமாக அவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாதவளாக இருப்பதையும் தெரிவிக்கிறாள். அவனைப் போன்றவனுடன் பழக வேண்டாம் என்கிறாள் நெல்லி. அறைக்கு வெளியே இருந்து அரைகுறையாக இந்த உரையாடலைக் கேட்கும் ஹீத்கிளிஃப் ஏக்கமும் ஆத்திரமுமாக அந்த ஊரிலிருந்தே வெளியேறுகிறான். கேத்தரின்–எட்கர் இருவருக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அவள் பெயர் கேத்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஹீத்கிளிஃப் திரும்பி வருகிறான். இப்போது அவன் ஒரு பெரும் பணக்காரன். எப்படிப் பணக்காரனானான்? அவனுடைய பிறப்பு மூலத்தைப் போலவே சொத்து மூலத்தையும் புதிராகவே விட்டிருக்கிறார் நாவலாசிரியர். அவன் வெளிநாட்டுக்குப் போய் சம்பாதித்திருக்கலாம் அல்லது ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம் என்று நெல்லி தன் ஊகங்களைக் கூறுகிறாள். ஆனால், தாழ்வான சமூகத்தைச் சேர்ந்தவனாகக் கருதும் மேட்டுக்குடியினர் அவன் தவறான முறையிலேயே பொருளீட்டியிருப்பான் என்று கருதுகிறது. பிற்பகுதியில் அவன் இரக்கமற்ற பழிவாங்கலில் இறங்குவதன் பின்னணியில் தவறான வழியில் பணம் ஈட்டியதும் இருக்கக்கூடும் என்ற ஊகத்திற்கும் இடமளிக்கிறார் எமிலி பிரான்டே. தன்னை அவமானப்படுத்தியவர்களையும், தனது காதலைப் பிரித்தவர்களையும் பழிவாங்கத் தொடங்குகிறான் ஹீத் கிளிஃப். இசபெல்லாவுக்குத் தன் மீது இருக்கும் மோகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறான். அடிக்கடி அவன் வீட்டுக்கு வருவதைக் கண்டு அவனை விரட்டியிடிக்கிறான் எட்கர். அதை ஏற்காத கேத்தரின் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே உணவின்றி இருக்கிறாள். அவளுடைய உடல் நலம் சரிவடைகிறது. ஹிண்ட்லியின் சூதாட்ட மோகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் ஹீத்கிளிஃப் பெருந்தொகையைக் காட்டி, ஆட்டத்துக்கு இழுத்துத் தோற்கடிக்கிறான். அதற்காகக் கொடுக்க ஒப்புக்கொண்ட பெருந்தொகைக்குப் பதிலாக பண்ணை வீட்டை ஒப்படைக்க வற்புறுத்தி வசப்படுத்திக்கொள்கிறான். எட்கரைப் பழி வாங்குவதற்காக, இசபெல்லாவைத் தன்னோடு ஓடிவர வைத்து, பின்னர் அவளை மணந்துகொண்டு உளவியலாகவும் உடலளவிலும் பல வகைகளில் துன்புறுத்துகிறான். கேத்தரின் நலிந்துகொண்டிருப்பதை அறியும் ஹீத்க்ளிஃப் அவளை ரகசியமாகச் சந்திக்கிறான். அவனைப் பார்த்தபின், பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் கேத்தரின் மரணமடைகிறாள். கொந்தளிக்கும் ஹீத்கிளிஃப், அவள் ஆவியாக வந்து தன்னைக் கடைசிவரை ஆட்டுவிக்க வேண்டும் என்று வேண்டுகிறான். செத்துப்போனவள் மீது அவன் காட்டும் விசுவாசத்தைப் பார்த்துக் கசப்படையும் இசபெல்லா வேறு ஊருக்குப் போய்விடுகிறாள். அங்கே அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது, தன் அண்ணன–கணவன் இருவர் பெயரையும் இணைத்து லிண்டன் ஹீத்கிளிஃப் என்று பெயர் வைக்கிறாள். ஒரு நோயாளியாக அவன் வளர்கிறான். ஹிண்ட்லி மதுப்பழக்கத்தால் மரணமடைகிறான். அவனுடைய மகன் ஹேர்டன் படிப்பறிவற்றவனாகச் சுற்றிவருகிறான். ஹீத்கிளிஃப் வெறிபிடித்தவனாக அடுத்த தலைமுறையினரையும் தனது பழிவாங்கும் படலத்திற்கு இலக்காக்குகிறான். கேத்தி, லிண்டன் இருவரும் நேசத்துடன் பழகுகிறார்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்டால் த்ரஷ்கிராஸ் கிரேஞ்ச் பண்ணையையும் வளைத்துப் போடலாம் என்று ஹீத்கிளிஃப் திட்டமிடுகிறான். இதனிடையே லிண்டன் ஹீத்கிளிஃப் அவனுடைய மாமன் எட்கர் வீட்டில் வளர அனுப்பி வைக்கப்படுகிறான். தன்னுடைய மகன் தன்னுடன்தான் இருக்க வேண்டுமென்று தகராறு செய்கிறான் ஹீத்கிளிஃப். சில மாதங்களில் எட்கர் இறந்துவிட, கேத்தியையும் லிண்டனையும் கட்டாயப்படுத்தித் தன்னோடு இருக்கச் செய்கிறான். உடல்நிலை மோசமடையும் லிண்டன் திடீரென இறந்துவிட, கேத்தி வேறு வழியின்றி ஹீத்கிளிஃபுடன் வுதரிங் ஹெய்ட்ஸ் வீட்டில் இருக்க வேண்டியதாகிறது. நாளுக்கு நாள் அவனுடைய வெறித்தனம் முற்றுகிறது. கேத்தரின் இறந்தபோது, அவளுக்கான கல்லறையை வெட்டியது தானேதான் எனத் தெரிவிக்கும் அவன், அதன் பிறகு தினமும் அவளுடைய ஆவி தன்னைப் பின்தொடர்வதாகவும் கூறுகிறான். காலப்போக்கில் கேத்திக்கும் ஹேர்டனுக்கும் காதல் மலர்கிறது. அவனுக்கு அவள் படிப்புச் சொல்லிக்கொடுக்கிறாள். அவர்களுடைய காதல் பழைய தலைமுறையின் காழ்ப்புணர்வு வன்மமும், மேலாதிக்கப் புத்தியும், பாகுபாட்டு வக்கிரமும், பழிவாங்கல் வேட்கையுமான மூர்க்கச் சுழற்சியை முறியடிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஹீத்க்ளிஃப் தன் பழிவாங்கல் செயல்களாலும், கேத்தரினின் ஆவி பற்றிய எண்ணங்களாலும் மன அமைதி குலைந்தவனாகத் திரிந்து மடிகிறான். அவனுடைய மரணத்திற்குப் பின்னரும் சில நாட்களுக்குப் புதிரான, அமானுட நிகழ்வுகள் தொடர்கின்றன. பகை வளர்த்த பழைய தலைமுறையின் கதை முடிந்து, குடும்ப ரகசியங்களால் துரத்தப்பட்ட புதிய தலைமுறையின் அமைதியான வாழ்க்கை தொடங்குகிறது. மூர்க்கம் கேத்தரின், ஹீத்கிளிஃப் இடையேயான காதல் அன்றைய சமூக விதிகளை மீறிய, ஆழமான, உடைக்க முடியாத, கிட்டத்தட்ட மூர்க்கத்தனமான ஒரு பிணைப்பு. காதல் நிறைவேறாமல் போனதால், ஹீத்கிளிஃபுக்கு ஏற்படும் பழியுணர்வும் மூர்க்கத்தனமானது. அந்த இரண்டுமாகச் சேர்ந்து அடுத்த தலைமுறைகளையும் அலைக்கழிக்கின்றன. உச்சத்தைத் தொடும் அந்த இரண்டு மூர்க்கங்கள்தான் நாவலின் மைய விசைகள். வுத்தரிங் ஹெய்ட்ஸ் வட்டாரத்தின் இயற்கைச் சூழல் சார்ந்த மூர்க்கம், அந்த இரண்டு பண்ணை வீடுகளின் கதாபாத்திரங்கள் சார்ந்த மூர்க்கத்திற்கு ஒப்புவமையாகிறது. நாவல் சமூகக் கட்டுப்பாடும், வர்க்க வேறுபாடும் சார்ந்த மூர்க்கங்களையும் தொடுகிறது. விக்டோரிய காலச் சமூகப் படிநிலைகள் தனிமனித உணர்வுகளைச் சூறையாடுவதைச் சித்தரித்ததன் மூலம் அன்றைய மதிப்புகளைச் சாடுகிறது. அந்த நிலைமைகள் எப்படி மனித மனங்களில் வஞ்சத்தை வளர்க்கின்றன என்று யோசிக்க வைக்கிறது. அமானுடம், ஆவி நாவல் ஒரு கட்டத்தில் கேத்தரின் ஆவியாக ஹீத்கிளிஃபை நெருங்க முயல்வதாகவும், மானுடத்திற்கு அப்பாற்பட்ட சக்திகள் ஆட்டுவிப்பதாகவும் சித்தரிக்கிறது. இது அமானுடம், ஆவி ஆகிய பகுத்தறிவுக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதரிப்பதாக இருக்கிறது என்ற விமர்சனமும் அப்போது எழுந்தது. ஆனால், அந்தச் சித்தரிப்புகள் சூழ்நிலைகளாலும் நிகழ்ச்சிப் போக்குகளாலும் சிதைந்துபோன மனநிலைகள் பற்றிய உளவியல் வெளிப்பாடுகளே என்று இலக்கியத் திறனாய்வாளர்கள் வாதிட்டனர். இப்போதும் அந்த இரு வாதங்களும் தொடர்கின்றன. ஆயினும், அந்த அமானுடங்கள் உளவியல் சித்தரிப்புகள்தான் என்ற கருத்திற்கே பெரும்பான்மை ஆதரவு கிடைத்திருக்கிறது. இவ்வாறு உணர்ச்சிப் பெருக்கான, மானுடத்திற்கு அப்பாற்பட்ட விளைவுகளையும், புதிரான முறையில், வியக்க வைக்கும் வகையில் சித்தரிக்கும் இலக்கிய வகைப்பாட்டிற்கு “கோதிக் புனைவு” என்று பெயர். கோதிக் என்பது மையக் காலத்திய கட்டடக் கலை. கோட்டைகளும் தேவாலாயங்களும் அந்தக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்டன. ஒரு வியத்தகு அமைப்புடன் இருந்த அந்தக் கட்டங்கள் சிதைந்தபோது ஒரு புதிரான தோற்றத்தைப் பெற்றன. அவற்றால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளில் அந்தப் புதிரையும், வியப்பையும், சிதைவையும் கொண்டுவர முயன்றனர். அந்த முயற்சிக்கு “கோதிக் புனைவு” என்ற இலக்கிய அடையாளம் கிடைத்தது. நாவல் வெளியான புதிதில், சமூக விதிகளை மீறி, பாலியல், வன்முறை மற்றும் தீவிரமான உணர்வுகளை வெளிப்படையாகப் பேசியதால், “காட்டுமிராண்டித்தனமானது” என்றும் “ஒழுக்கமற்றது” என்றும் கூறி அதைப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்தன. மதம் அறிவுறுத்தும் சமூக ஏற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தியதால், நாவலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மதவாதிகள் பேசினார்கள். ஆயினும், கடுமையான வாக்குவாதங்களுக்குத்தான் நாவல் உள்ளாக்கப்பட்டதேயன்றி தடை விதிக்கப்படும் அளவுக்குப் போகவில்லை. மாறாக, எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகு, தனித்துவமான கதைசொல்லல், ஆழமான உளவியல் பார்வை, கதாபாத்திரங்களின் நுட்பமான சித்தரிப்பு ஆகியவற்றிற்காக ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாகப் பாராட்டுப் பெற்றது. காதலின் ஆக்க சக்தி–அழிவு சக்தி, மனித உறவுகளின் சிக்கல்கள், மனதின் இருண்ட பகுதிகள் ஆகியவற்றை எமிலி பிரான்ட்டே ஆராய்ந்திருக்கிறார். அந்த வகையில் ஒரு புதுமையான, துணிச்சலான படைப்புகளுக்கான ஓர் எடுத்துக்காட்டு என்று இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது இந்த நாவல். https://bookday.in/books-beyond-obstacles-15-wuthering-heights-based-article-written-by-a-kumaresan/