Aggregator

முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

5 days 15 hours ago

10 Sep, 2025 | 12:03 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், தம்மால் வெளிச்சவீடு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (09)  இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப்பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது.

இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74 கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டிவரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர்.

குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர்.

இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில்கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், குறித்த வெளிச்ச வீடு அமைப்பது தொடர்பில் தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/224710#google_vignette

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

5 days 15 hours ago

ஒரு விவசாய சந்தையில் வைக்கப்பட்டிருக்கும் தக்காளிகள் மற்றும் உருளைக்கிழங்குகளின் காட்சி

Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • டலியா வென்சுரா

  • பிபிசி முண்டோ

    10 செப்டெம்பர் 2025, 04:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT

சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை.

அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார்.

அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார்,

நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன.

உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை.

தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது.

"சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும்.

அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது.

ஒரு சோலனம் எட்யூபெரோசம் (Solanum etuberosum) தாவரம் அருகே ஒரு சோலனம் லைகோபெர்சிகம் (Solanum lycopersicum) தாவரத்தின் விளக்கப்படம்

LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின.

"நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார்.

"தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார்.

நீண்டகால மர்மம் எப்படி அகன்றது?

சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார்.

அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான்.

"நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின."

ஒரு நீளமான டாம்டேடோ தாவரம், அதன் மேல் தக்காளிப் பழங்களும், கீழே உருளைக்கிழங்குகளும் உள்ளன.

Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது.

பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.

உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன.

எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின.

உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார்.

அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

"இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார்.

உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள்.

கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது.

சிறிய தக்காளி போன்ற பழங்களைக் கொண்ட ஒரு Solanum tuberosum (உருளைக்கிழங்கு) தாவரத்தின் விளக்கப்படம்.

Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது.

நடந்திருக்கும் மரபணு குலுக்கல்

விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது.

அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன.

ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின.

நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது.

"அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை."

உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது.

அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது.

பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது.

இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார்.

எடூபரோசம் மற்றும் டியூபரோசம் தாவரங்கள் அருகருகே உள்ள ஒரு புகைப்படம்.

Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன.

மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள்

இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது.

"அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார்.

மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது.

இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது.

காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

"இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார்.

"எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

தக்காளியின் கலப்பு இனப்பெருக்கத்தில் உருளைக்கிழங்கு உருவானது எப்படி? சுவாரஸ்யமான அறிவியல் கதை

5 days 15 hours ago
Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் டலியா வென்சுரா பிபிசி முண்டோ 10 செப்டெம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை. அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solanum etuberosum) எனப்படும் ஒரு தாவர வகையின் முன்னோடிகள். இதன் தற்போதைய மூன்று இனங்கள் சிலி மற்றும் ஜுவான் ஃபெர்னாண்டஸ் தீவுகளில் காணப்படுகின்றன," என்று லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் தாவரவியல் நிபுணர் சாண்ட்ரா நாப் கூறினார். அவற்றின் பெயர்களில் இருந்து அவை தொடர்புடையவை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், அவை ஒன்றோடொன்று கலந்து இனப்பெருக்கம் அடைந்தன. "இவ்வாறு உருவாகியது புதிய தாவரம் ஒன்றை உருவாக்கிய மரபணுக்களின் மறுசீரமைப்பு," என்றும் இது "அந்த தாவரத்தை குளிர் மற்றும் வறண்ட ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் செழித்து வளர அனுமதித்தது" என்றும் நாப் கூறுகிறார், நிபுணர்கள் இதை இனங்களுக்கு இடையிலான கலப்பு இனப்பெருக்கம்( இன்டர்ஸ்பெசிஃபிக் ஹைப்ரிடைசேஷன் - interspecific hybridisation) என்று அழைக்கிறார்கள், இவ்வகை இனப்பெருக்கம் அடிக்கடி நிகழ்கிறது, சில சமயங்களில் இதன் விளைவுகள் துரதிர்ஷ்டவசமாக இருந்தன. உதாரணமாக, பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் இடையிலான இனச்சேர்க்கை காரணமாக கோவேறு கழுதை பிறக்கிறது. இது வெற்றிகரமான கலப்பினமாக இருந்தாலும், பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அதற்கே தம்மை இனப்பெருக்கம் செய்யும் திறன் இல்லை. தாவர உலகில், இனங்களுக்கிடையேயான கலவைகள் அடிக்கடி நிகழ்கின்றன என்று நாப் கூறுகிறார் - இப்படித்தான் நாம் தோட்டத் தாவரங்களைப் பெரும்பாலும் பெற்றுள்ளோம். இந்த கலப்பு இயற்கையாகவோ அல்லது மனிதர்களின் தலையீட்டாலோ நடக்கலாம், இரண்டு வகை பெற்றோரின் கலவையான தாவரங்களை உருவாக்குகிறது. "சில சமயங்களில் அவை மலட்டுத்தன்மை கொண்டவையாக இருக்கும், எனவே அவை ஒரு புதிய இனமாக உருவாகாது," என்று அவர் கூறுகிறார். ஆனால் சூழ்நிலைகளின் சேர்க்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது, அந்த கலவையின் விளைவு எதிர்பார்ப்புகளை விஞ்சுவதாக அமையும். அப்படித்தான் அன்று நடந்தது. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சோலானேசியே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு இனங்களுக்கு இடையிலான தற்செயலான கலப்பில் இருந்து உருளைக்கிழங்கு பிறந்தது. LOC/Biodiversity Heritage Library சோலனம் லைகோபெர்சிகம்(இடது) மற்றும் சோலனம் எட்யூபெரோசம் (வலது), இவை உருளைக்கிழங்கை உருவாக்கின. "நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமாக உள்ள உருளைக்கிழங்குக்கு இப்படி ஒரு பழமையான, அசாதாரணமான துவக்கம் இருப்பது மிகவும் சுவாரஸ்யமானது," என்று நாப் கூறுகிறார். "தக்காளி அதன் தாய், எடூபரோசம் தந்தை" என்று சீன வேளாண் அறிவியல் அகாடமியின் பேராசிரியர் சான்வென் ஹுவாங் அறிவித்தார், அவர் ஜூலை மாதம் செல் (Cell) இதழில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வுக்கு தலைமை தாங்கினார். நீண்டகால மர்மம் எப்படி அகன்றது? சந்தையில் பார்க்கும்போது, கடினமான, மாவுத்தன்மை கொண்டதாக அமைந்த உருளைக்கிழங்கு, சிவப்பான, சாறுள்ள தக்காளியைப் போன்று தெரியவில்லை என்றாலும், "அவை மிகவும், மிகவும் ஒத்தவை," என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த நாப் கூறுகிறார். அந்த விஞ்ஞானியின் கூற்றுப்படி, இரண்டு தாவரங்களின் இலைகளும் பூக்களும் மிகவும் ஒத்தவை, மேலும் உருளைக்கிழங்கு தாவரத்தின் பழம் கூட ஒரு சிறிய பச்சை தக்காளி போலத் தெரிகிறது. எனவே, இந்த ஆராய்ச்சியின் தொடக்கத்திலேயே இது எதிர்பார்க்கப்பட்டதுதான். "நாம் பார்ப்பதைத் தாண்டி, உருளைக்கிழங்குகள், தக்காளிகள் மற்றும் எடூபரோசம் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை என்று நமக்கு நீண்ட காலமாகத் தெரியும்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் உருளைக்கிழங்குக்கு எது மிக நெருக்கமானது என்பது நமக்குத் தெரியாது, ஏனென்றால் வெவ்வேறு மரபணுக்கள் நமக்கு வெவ்வேறு தகவல்களைக் கூறின." Thompson & Morgan உருளைக்கிழங்குகளும் தக்காளிகளும் மிகவும் ஒத்தவை, அவற்றை ஒட்டுவதால், இந்த டாம்டேடோ (TomTato) என்று அழைக்கப்படும் தாவரம் போன்ற இரண்டையும் உருவாக்கும் ஒரு தாவரம் பிறக்கிறது. இதை தாம்சன் & மோர்கன் என்ற தோட்டக்கலை நிறுவனம் உருவாக்கியது. பிரபலமான உருளைக் கிழங்கின் தோற்றம் குறித்த புதிரை அவிழ்க்க விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக முயற்சித்துள்ளனர், ஆனால் அவர்கள் ஒரு சிக்கலை எதிர்கொண்டனர். உருளைக்கிழங்கின் மரபியல் அசாதாரணமானது. மனிதர்கள் உட்பட பெரும்பாலான உயிரினங்களுக்கு ஒவ்வொரு செல்லிலும் இரண்டு குரோமோசோம்களின் நகல்கள் இருக்கும் நிலையில், உருளைக்கிழங்குக்கு நான்கு உள்ளன. எனவே, இந்த முரண்பாட்டைத் தீர்க்க, ஆராய்ச்சியாளர்கள் குழு, உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் எடூபரோசம் உட்பட டஜன் கணக்கான இனங்களிலிருந்து 120க்கும் மேற்பட்ட மரபணுக்களை (ஒரு செல்லில் உள்ள மரபணுக்களின் முழுமையான தொகுப்பு) பகுப்பாய்வு செய்தனர். அவர்கள் வரிசைப்படுத்திய உருளைக்கிழங்கு மரபணுக்கள் கிட்டத்தட்ட அதே தக்காளி-எடூபரோசம் பிளவைக் காட்டின. உருளைக் கிழங்கின் முன்னோடி "இதுவும் இல்லை, அதுவும் இல்லை: அது இரண்டும்," என்று நாப் வலியுறுத்துகிறார். அப்படியாகத்தான், தென் அமெரிக்க மலைகளின் அடிவாரத்தில் லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த காதல் உறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். "இது ஒரு வெற்றிகரமான கலவையாகும், ஏனென்றால் இது ஆண்டிஸ் மலைத்தொடரின் புதிதாக உருவாக்கப்பட்ட உயரமான வாழ்விடங்களில் இந்த புதிய இனம் செழிக்க அனுமதித்த மரபணு சேர்க்கைகளை உருவாக்கியது" என்று நாப் விளக்குகிறார். உருளைக்கிழங்கு தாவரத்தின் தரைக்கு மேல் இருக்கும் பகுதி அதன் பெற்றோரை ஒத்திருந்தாலும், அதில் ஒரு அம்சம் மறைந்திருந்தது, அது வேறு எந்த தாவரத்திற்கும் இல்லை: அதுதான் கிழங்குகள். கிழங்குகள் இருப்பது என்பது எப்போதும் கைவசமாக ஒரு உணவுக் கூடை வைத்திருப்பது போன்றது: அவை ஆற்றலைச் சேமித்து, குளிர்காலம், வறட்சி அல்லது வேறு எந்தச் சாதகமற்ற சூழ்நிலைகளிலும் உயிர்வாழ உதவுகிறது. Getty Images வரைகலையில் உள்ள "c" எழுத்து, சிறிய தக்காளிகள் போன்ற உருளைக்கிழங்கின் பழங்களைக் காட்டுகிறது. நடந்திருக்கும் மரபணு குலுக்கல் விஞ்ஞானிகள் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தையும் கண்டுபிடித்தனர்: கிழங்குகளை உருவாக்கிய தாவரம், ஒரு மரபணு குலுக்களில் வென்றதன் மூலம் அவ்வாறு செய்தது. அவற்றின் முன்னோடிகளில் ஒவ்வொன்றும் கிழங்குகள் உருவாக முக்கியமான ஒரு மரபணுவைக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றில் எதுவுமே தனியாகப் போதுமானதாக இல்லை, எனவே அவை இணைந்தபோது, அவை நிலத்தடி தண்டுகளை சுவையான உருளைக்கிழங்குகளாக மாற்றுகிற செயல்முறையைத் தூண்டின. நாப் உடன் பணிபுரிந்த சீனக் குழுவால் இதை நிரூபிக்கவும் முடிந்தது. "அவர்கள் தங்கள் கருதுகோளை உறுதிப்படுத்த இந்த மரபணுக்களை நீக்கி, பல நேர்த்தியான பரிசோதனைகளைச் செய்தனர்," என்று அவர் கூறுகிறார், "அவை இல்லாமல், கிழங்குகள் உருவாகவில்லை." உருளைக்கிழங்கை உருவாக்கிய இனக்கலப்பு ஒரு மகிழ்ச்சியான விபத்தை விடவும் கூடுதலானதாகும். அது ஒரு புதிய உறுப்பையே உருவாக்கியது. உருளைக்கிழங்கு என்ற இந்த உறுப்பு ஒரு பரிணாம சாதனையாகக் கருதப்படுகிறது. அந்த கிழங்கின் இருப்பு காரணமாக விதை அல்லது மகரந்தச் சேர்க்கைகளின் தேவை இல்லாமல் தாவரம் இனப்பெருக்கம் செய்துகொள்ள அனுமதித்தது. பல்வேறு உயரங்களுக்கும், சூழ்நிலைகளுக்குத் தகவமைத்துக் கொள்ள முடிந்தது, இது பன்முகத்தன்மையில் ஒரு அதிரடிக்கு வழிவகுத்தது. இன்றும், "அமெரிக்காவில் மட்டுமே தென்மேற்கு ஐக்கிய மாகாணங்கள் முதல் சிலி மற்றும் பிரேசில் வரை 100க்கும் மேற்பட்ட காட்டு இனங்கள் காணப்படுகின்றன" என்று நாப் கூறுகிறார். Shenzhen Institute of Agricultural Genomics, Chinese Academy of Agricultural Sciences மேலோட்டமாகப் பார்த்தால், எடூபரோசம் (இடது) மற்றும் டியூபரோசம் (வலது) ஆகியவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பிந்தையதின் மாவுத்தன்மை கொண்ட கிழங்குகள்தான் உருளைக்கிழங்கை மிகவும் பிரபலமான பயிராக மாற்றுகின்றன. மரபணுவால் ஏற்படும் பலவீனங்கள் இருப்பினும், பாலின தொடர்பு இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் இந்த திறன் உருளைக்கிழங்கிற்கு தீங்கையும் விளைவித்துள்ளது. "அவற்றை வளர்க்க, நீங்கள் ஒரு உருளைக்கிழங்கின் சிறிய துண்டுகளை நடவு செய்கிறீர்கள், அதாவது நீங்கள் ஒரே வகையை கொண்ட ஒரு வயலை வைத்திருந்தால், அவை அடிப்படையில் பிரதிகள்," என்று டாக்டர் நாப் விளக்குகிறார். மரபணு ரீதியாக ஒரே மாதிரியாக இருப்பதால், உருளைக்கிழங்கு தாவரங்களில் புதிய நோய்க்கு எதிராக எந்தத் தடுப்பு சக்தியும் இருக்காது. இது விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை நடத்தியதற்கான காரணத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நாப்பின் கூற்றுப்படி, சீனக் குழு, விதைகளிலிருந்து இனப்பெருக்கம் செய்யக்கூடிய மற்றும் மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்படக்கூடிய உருளைக்கிழங்குகளை உருவாக்க விரும்புகிறது. காட்டு இனங்களிலிருந்து மரபணுக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் சவால்களை சிறப்பாகத் தாங்கக்கூடிய வகைகளை உருவாக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். "இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்ற பரிணாம உயிரியலாளர்களும் நானும், உருளைக்கிழங்குகளின் மிக நெருங்கிய உறவு எது என்பதையும், அவை ஏன் இவ்வளவு பன்முகத்தன்மை கொண்டவை என்பதையும் கண்டறிய விரும்பினோம்," என்று அவர் கூறுகிறார். "எனவே, நாங்கள் மிகவும் மாறுபட்ட கண்ணோட்டங்களில் இருந்து ஆராய்ச்சியை அணுகினோம், மேலும் எங்கள் ஒவ்வொரு கண்ணோட்டத்திலிருந்தும் கேள்விகளைக் கேட்க முடிந்தது, இது ஆய்வில் பங்கேற்கவும் பணியாற்றவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dq30qlzreo

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது - உலக வங்கி

5 days 15 hours ago
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. முதன்மை இருப்பானது 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.9 சதவீதத்தால் குறைந்த நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த கால கொள்கை தவறுகளை மாற்றியமைத்தல் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகளால் இது உந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 9.6 சதவீத மொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் சுமார் 5 சதவீதம் பொருளாதாரம் மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 வரை பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தபோதிலும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான நிதி மற்றும் பணவியல் முயற்சிகள் குடும்பங்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு பயனளித்துள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்தவுடன் கடன் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசிய படியாகும். வளர்ச்சி அல்லது சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் 2029 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை வருவாயை அதிகரிக்க முடியும் என்பதை இந்த மதிப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. பொது செலவினங்களை சிறப்பாக இலக்கு வைப்பதும் நிர்வகிப்பதும் தற்போதைய வரவு செலவு திட்ட வரம்புகளுக்குள் மேம்பட்ட விளைவுகளை வழங்க முடியும் என்பதையும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfdz9ky600bcqplp45ysbrdu

இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது - உலக வங்கி

5 days 15 hours ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது.

முதன்மை இருப்பானது 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.9 சதவீதத்தால் குறைந்த நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த கால கொள்கை தவறுகளை மாற்றியமைத்தல் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகளால் இது உந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 9.6 சதவீத மொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் சுமார் 5 சதவீதம் பொருளாதாரம் மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 வரை பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தபோதிலும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான நிதி மற்றும் பணவியல் முயற்சிகள் குடும்பங்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு பயனளித்துள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்தவுடன் கடன் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இது நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசிய படியாகும்.

வளர்ச்சி அல்லது சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் 2029 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை வருவாயை அதிகரிக்க முடியும் என்பதை இந்த மதிப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது.

பொது செலவினங்களை சிறப்பாக இலக்கு வைப்பதும் நிர்வகிப்பதும் தற்போதைய வரவு செலவு திட்ட வரம்புகளுக்குள் மேம்பட்ட விளைவுகளை வழங்க முடியும் என்பதையும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfdz9ky600bcqplp45ysbrdu

Tamil Genocide Illustrations

5 days 15 hours ago
AI was used to create these illustrations, which offer a glimpse of the Mullivaikkal massacre and the Eelam Tamil Genocide. I, Nanni Chozhan, used a variety of AI picture production technologies to create all of the images on this page. However, I make them available under free copyrights, so anyone can use them for educational purposes. Only those who are 18 years of age or older are advised to view these photographs.

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

5 days 15 hours ago
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? Reuters 10 செப்டெம்பர் 2025, 10:05 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு "பச்சைக்கொடி காட்டினார்" என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது. மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது. "தோல்வியடைந்த தாக்குதல்" என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது. இந்த தாக்குதல் இஸ்ரேலின் தவறான மதிப்பீடு மற்றும் உளவுத்துறை தோல்வியைக் காட்டுகிறது அல்லது பேச்சுவார்த்தை குழுவினருக்கு உளவியல் அழுத்தம் கொடுத்து பயத்தை ஏற்படுத்தி, அவர்களை சமரசம் செய்யத் தள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என கஹ்வாஜி கூறினார். அல் அரேபியா, தொடர்ச்சியாக வெளியிட்ட முக்கிய செய்திகளில், இந்த தாக்குதல் குறித்து செளதி அரேபியா தெரிவித்த கண்டனத்தையும் பதிவு செய்தது "கத்தார் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஆதரிக்க எங்களின் திறன் அனைத்தையும் வழங்குவோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என செளதி அரசு எச்சரித்ததாகவும் அந்த தொலைக்காட்சி கூறியது. AL ARABIYA TV கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன 'அமெரிக்காவை நம்ப வேண்டாம்' இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஆரம்பத் தகவல்களின்படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது. இதற்கிடையில், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு நிபுணர், அரபு நாடுகளின் பங்கைப் பற்றி பேசினார். "ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அல்-உதீத் ராணுவத் தளத்தை குறிவைத்த இரானிய ராக்கெட்டுகளைத் தடுத்த அரபு பாதுகாப்பு அமைப்புகள் இப்போது எங்கே?" என்று கேள்வி எழுப்பினார் அவர் மேலும், அரபு நாடுகள் வெளியிடும் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, "'நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் கோருகிறோம்' போன்ற வார்த்தைகளே அதிகம் உள்ளது" என்றார் அவர். ஹூத்தி உச்ச அரசியல் கவுன்சில் (SPC) தலைவர் மஹ்தி அல்-மஷாத், "குற்றவாளி டிரம்பின் அனுமதி இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்காது" என்று கூறி, அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சியோனிச எதிரி (இஸ்ரேல்) இருக்கும் வரை பிராந்தியத்தில் அமைதியோ, நிலைத்தன்மையோ இருக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபித்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். Reuters மேலும், இது அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றும், "தாமதமாகிவிடும் முன் எச்சரிக்கையாக இருங்கள். சியோனிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபடாவிட்டால், தோஹாவில் நடந்தது மற்ற நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நடக்கும்" என்றும் மஷாத் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமியர்களே, அமெரிக்காவை நம்பாதீர்கள். அது சியோனிசத்தின் ஆதரவாளரும், பணியாளரும் ஆகும்'' என்றார். லெபனானின் ஹெஸ்பொலா இயக்கத்தின் அல்-மனார் டிவி, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உட்பட பல பிராந்திய தலைவர்களின் கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது. அந்த சேனல், கத்தாரின் மத்தியஸ்தர் பங்கு குறித்து ஒரு நிபுணருடன் விவாதித்தது. "அரபு நாடுகளின் பங்கு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். எங்களுக்கு இப்போது உண்மையான, தீவிரமான பங்கு தேவை. பாதிக்கப்பட்டவருக்கும் தண்டனை வழங்குபவருக்கும் இடையில் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க முடியாது" என்றார் அந்த நிபுணர். லெபனான் அரசு செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA), அதிபர் அவுனின் அறிக்கையை மேற்கோள் காட்டியது. கத்தார், அதன் தலைமை மற்றும் மக்களுடன் தனது நாட்டின் ஒற்றுமையை அதில் வலியுறுத்தினார் அதிபர் அவுன். மேலும், ''இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். இது, பிராந்திய நாடுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் நடவடிக்கை" என்று கூறியிருந்தார். ஹெஸ்போலா சார்பு கொண்ட அல்-அக்பர் பத்திரிகையும், இந்த தாக்குதலுக்கு எதிராக வெளியான பரவலான சர்வதேச மற்றும் அரபு கண்டனங்களை முன்னிலைப்படுத்தியது. இது, "பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விரிவாக்கமாக கருதப்படுகிறது" என்று அது குறிப்பிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd72dxe9d2eo

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

5 days 15 hours ago
எங்கட வீட்டு பெண் நாயைப் பிடித்தால் தகுந்த சன்மானம் தருவோம் அண்ணை! இலவச விசர்நாய்த் தடுப்பூசி போட அம்பிடுதில்லை(தண்டப் பணம் 25000 ரூபாவாம்), மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்திருக்கிறார்கள் யாரோ புண்ணியவான்.

மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!

5 days 15 hours ago
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல் 10 Sep, 2025 | 11:38 AM மட்டக்களப்பு சத்துருக்கொண்டானன் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் செவ்வாய்க்கிழமை (09) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். கடந்த 1990 ம் ஆண்டு செட்டெம்பர் 9 ம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 186 பேரை போயிஸ் ரவுண் இராணுவமுகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும் துப்பாக்கியால் சட்டும் படுகொலை செய்து ரயர்கள் போட்டு எரித்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்வர்களின் நினைவேந்தல் நினைவு தூபியில் இடம்பெற்றது அதில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் படுகொல செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து 4 கிராமங்களை சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொது சுடர் ஏற்றியதையடுத்து அங்கிருந்த அனைவரம் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வர்களின் ஆத்மசாந்திவேண்டி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பினனர் படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை அகழ்வு பணி முன்னெடுக்குமாறும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்தனர். https://www.virakesari.lk/article/224706

குருக்கல் மடம் சடலங்களை மீள தோண்டி எடுத்து இஸ்லாமிய மத முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

5 days 15 hours ago
10 Sep, 2025 | 06:50 PM (எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு குருக்கல் மடம் சம்பவத்தில் மரணித்தவர்களின் சடலங்களை மீள தோண்டி எடுத்து, அந்த சடலங்களை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் மக்கா யாத்திரைக்கு பின்னர் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் தங்களின் வீடுகளுக்கு வாகனத்தில் திரும்பும்போது அங்கிருந்த சிறுவர்கள், முதயோர்கள் இளைஞர்கள் என அனைவரையும் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர். அது தொடர்பில் அவர்களின் உறவினர் ஒருவரினால் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டுக்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது வழக்கு விசாரணைகளின் பின்னர் புதைக்கப்பட்ட அனைத்து சடலங்களையும்தோண்டி எடுத்து, சர்வதேச நியதிகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த பிரதேசத்தை முற்றாக பாதுகாப்பாக வைக்குமாறும் இந்த நடவடிக்கைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவத்தின்போது 170 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. எனவே நிதிமன்ற உத்திரவின் பிரகாரம் இந்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்குமா? இந்த நடவடிக்கையை நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? இங்கு மரணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்த பின்னர், அவற்றை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்கிறேன் என்றார். குருக்கல் மடம் சடலங்களை மீள தோண்டி எடுத்து இஸ்லாமிய மத முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் | Virakesari.lk

குருக்கல் மடம் சடலங்களை மீள தோண்டி எடுத்து இஸ்லாமிய மத முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ்

5 days 15 hours ago

10 Sep, 2025 | 06:50 PM

image

(எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மட்டக்களப்பு குருக்கல் மடம் சம்பவத்தில் மரணித்தவர்களின் சடலங்களை மீள தோண்டி எடுத்து, அந்த சடலங்களை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் மக்கா யாத்திரைக்கு பின்னர் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் தங்களின் வீடுகளுக்கு வாகனத்தில்  திரும்பும்போது  அங்கிருந்த சிறுவர்கள், முதயோர்கள் இளைஞர்கள் என அனைவரையும் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர்.

அது தொடர்பில் அவர்களின் உறவினர் ஒருவரினால் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டுக்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது வழக்கு விசாரணைகளின் பின்னர் புதைக்கப்பட்ட அனைத்து சடலங்களையும்தோண்டி எடுத்து,  சர்வதேச நியதிகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த பிரதேசத்தை முற்றாக பாதுகாப்பாக வைக்குமாறும் இந்த நடவடிக்கைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின்போது 170 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே நிதிமன்ற உத்திரவின் பிரகாரம் இந்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்குமா?

இந்த  நடவடிக்கையை நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா?  இங்கு மரணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்த பின்னர், அவற்றை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்கிறேன் என்றார்.

குருக்கல் மடம் சடலங்களை மீள தோண்டி எடுத்து இஸ்லாமிய மத முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் | Virakesari.lk

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா

5 days 15 hours ago
10 Sep, 2025 | 06:21 PM தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தவேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்றபோது 15 - 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு, நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெடி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சுட்டு கொன்றுவிட்டார்கள். அதன் பிறகு நாங்கள் நெடுந்தீவு பிரதேசத்தை கைப்பற்றினோம். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகத்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வரமாட்டேன் என கூறியதும் அவரை அடித்து சித்திரவதை செய்தவேளை, அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்கவிட்டனர். டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாவலராக இருந்தவரை புலிகளுடன் தொடர்பு என கொலை செய்தனர். நெல்லியடியை சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை கொலை செய்தனர். தம்முடன் முரண்பட்ட ரமேஷ் என்கிற தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை கொலை செய்தனர். அந்த கொலைகளை புலிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்யவில்லை. இவர்களே கொலை செய்தனர். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர் கே.எஸ்.ராஜா என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து தமது ஊடக பணிகளுக்காக வைத்திருந்தனர். அவரும் இவர்களுடன் முரண்பட்டபோது, காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் மதுபானத்திற்குள் சைனட் கலந்து கொடுத்து அவரை படுகொலை செய்தனர். மலையகத்தை சேர்ந்த மோகன் மற்றும் விஜி எனும் இருவரையும் கொலை செய்தனர். அவர்களை மலசலகூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொசுக்கினார்கள். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து, கடற்கரையில் அவரின் உடலை போடும்போது அப்பகுதி மக்கள் கண்ணுற்று அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமையால் உடலை போட வந்தவர்களை அந்நேரம் பொலிஸார் கைது செய்திருந்தனர். ஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொலைகள் இடம்பெற்றன. இந்த படுகொலைகளுக்கு சாட்சியங்களாக நான் இருக்கிறேன். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், துணிந்து சாட்சி சொல்ல நான் தயார் என்றார். அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - சதா | Virakesari.lk

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா

5 days 15 hours ago

10 Sep, 2025 | 06:21 PM

image

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி  கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தவேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்றபோது 15 - 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு, நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெடி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சுட்டு கொன்றுவிட்டார்கள். 

அதன் பிறகு நாங்கள் நெடுந்தீவு பிரதேசத்தை கைப்பற்றினோம். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகத்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர்.  

அவர் தான் நேரில் வரமாட்டேன் என கூறியதும் அவரை அடித்து சித்திரவதை செய்தவேளை, அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்கவிட்டனர். 

டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாவலராக இருந்தவரை புலிகளுடன் தொடர்பு என கொலை செய்தனர். நெல்லியடியை சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை கொலை செய்தனர். 

தம்முடன் முரண்பட்ட ரமேஷ் என்கிற தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை கொலை செய்தனர். அந்த கொலைகளை புலிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்யவில்லை. இவர்களே கொலை செய்தனர். 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர் கே.எஸ்.ராஜா என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து தமது ஊடக பணிகளுக்காக வைத்திருந்தனர். 

அவரும் இவர்களுடன் முரண்பட்டபோது, காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் மதுபானத்திற்குள் சைனட் கலந்து கொடுத்து அவரை படுகொலை செய்தனர்.

மலையகத்தை சேர்ந்த மோகன் மற்றும் விஜி எனும் இருவரையும் கொலை செய்தனர். அவர்களை மலசலகூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொசுக்கினார்கள். 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து, கடற்கரையில் அவரின் உடலை போடும்போது அப்பகுதி மக்கள் கண்ணுற்று அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமையால் உடலை போட வந்தவர்களை அந்நேரம் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

ஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொலைகள் இடம்பெற்றன. இந்த படுகொலைகளுக்கு சாட்சியங்களாக நான் இருக்கிறேன். 

விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், துணிந்து சாட்சி சொல்ல நான் தயார் என்றார். 

அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - சதா | Virakesari.lk

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

5 days 15 hours ago
இப்படி அங்கிருந்து முழங்கிவிட்டு ஜெனீவா வந்து தனிப்பட்ட முறையில் மூடிய அறைகளுக்குள் கூட்டம் நடத்திவிட்டுப் போன எத்தனையோ தமிழ் அரசியல்வாதிகளைப் பார்த்துவிட்டோம்.

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

5 days 15 hours ago
என்ர பெடியன் சைனிஸ் காரியை கட்டியிருக்கிறான், என்ர பிள்ளை டொமினிகன்காரனை கட்டியிருக்கிறாள் என்று சொன்னால் அதுக்குமேல் கேள்வியில்லை. ஆனால் சிறிலங்காவில கட்டியிருக்கிறார் என்றால்தான் அடிமடியில கைவைக்கும் ஆயிரம் கேள்வி. எந்த இடம், என்னசாதி, ஏன் அந்தச்சாதி, ஏன் இந்தச்சாதி ?வடக்கா ? கிழக்கா? வேற இடம் கிடைக்கலியா ? ஐயையோ . “தமிழர் என்றோர் இனமுண்டு , தனியே அவர்க்கோர் குணமுண்டு “

ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு!

5 days 16 hours ago
எல்லோரும் ஏறிய குதிரையில் அர்ச்சுனாவும் ஏறி விழப் போகிறார். அங்கே போய் முறையிட்டு பிரச்சனை தீர்க்க முடியுமா?

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!

5 days 16 hours ago
இப்போதும் வந்திருக்க மாட்டீர்கள். ஊசி போட்டுக் கொண்டு இருந்திருப்பீர்கள். இதுவே கடேசி பயணம் என்று பிள்ளைகளும் சொல்லியிருப்பினம்.

'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?

5 days 16 hours ago

டிஎஸ்பி சங்கர் கணேஷ்

UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT

    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

என்ன பிரச்னை?

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார்.

அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார்.

அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர்.

பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார்.

'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார்.

டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது?

டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது

UGC

கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார்.

அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார்.

இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார். அவரைக் கிளைச் சிறையில் காவலர்கள் அடைத்தனர்.

டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார்.

'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு'

மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார்.

''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்''

அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி'

செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார்.

செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார்.

இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார்.

மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார்.

வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன்

மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது.

" எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார்.

"எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன்.

ஹரிபரந்தாமன்

Hariparandaman எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன்

'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது'

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார்.

"காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98dy3q2vyjo

'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?

5 days 16 hours ago
UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார். அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார். அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர். பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார். 'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார். டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது? UGC கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார். இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார். அவரைக் கிளைச் சிறையில் காவலர்கள் அடைத்தனர். டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார். 'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு' மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார். ''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்'' அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார். 'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி' செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார். செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார். இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். 'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது. " எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன். Hariparandaman எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன் 'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது' காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார். "காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98dy3q2vyjo

பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை

5 days 16 hours ago
Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது. அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. https://www.virakesari.lk/article/224686