Aggregator

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!

4 days 23 hours ago

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!

537952-pmk-leaders-780x470.webp

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.

கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் 10ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் கட்சி ஒழுங்குக்கு கட்டுப்படாதவராகவும், அரசியல்வாதி என்ற தகுதி அற்றவராகவும் நடந்துகொண்டார். எனவே, பா.ம.க. செயல்தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=340417

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு! தனிக் கட்சி தொடங்க அறிவுரை!

11 Sep 2025, 10:25 AM

Ramadoss Anbumani (3)

பாமகவில் இருந்து தமது மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அதிரடியாக அறிவித்துள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், பாமகவில் அன்புமணி தனி அணியாக செயல்பட்டார்; அவரிடம் 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இரு முறை விளக்கம் கேட்டோம். ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என ஏற்றுக் கொள்கிறோம்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்

இதனையடுத்து பாமகவின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் 10 அல்லது 15 பேர்தான் உள்ளனர். அன்புமணியுடன் தொடர்பு வைத்திருந்தால் அவர்களும் பாமகவில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணியுடன் உள்ளவர்கள் திருந்த வாய்ப்பு கொடுப்போம்; அவர்கள் திருந்தினால் அவர்களை சேர்த்து கொள்ளவும் தயார். நான் இல்லாமல் அன்புமணியோ அவருடன் இருப்பவர்களோ இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. என்றார்,

என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது

மேலும், பாமக தொடங்கியது முதல் இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் அன்புமணி. அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அன்புமணி. இன்று முதல் எனது பெயரின் முதல் எழுத்தான ‘இரா’ என்பதை மட்டுமே அன்புமணி பயன்படுத்த வேண்டும்; இராமதாஸ் என்ற என் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம்

அதேபோல, அன்புமணி தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்தலாம். இதை ஏற்கனவே 3 முறை அன்புமணியிடம் கூறியிருக்கிறேன். இப்போதும் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்கிறேன்.

என் கட்சி பாமக- உரிமை கோர முடியாது

பாமக என்பது ராமதாஸ் என்ற தனிநபர் தொடங்கிய கட்சி. பாமக என்ற என் கட்சிக்கு உரிமை கொண்டாட என் மகன் உட்பட யாருக்குமே உரிமை கிடையாது. பாமகவில் இருந்து களை நீக்கப்பட்டுவிட்டது.

அன்புமணி தனி கட்சி தொடங்கினாலும் வளராது

அன்புமணியை நீக்கிவிட்டதால் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அன்புமணி தனிக்கட்சியை தொடங்கினாலும் அது வளராது. என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறி வருவது எல்லாம் பொய். அன்புமணியின் பொய் என்பது அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு. என் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது என்றும் ராமதாஸ் கூறினார்.

பின்னணி என்ன?

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் அன்புமணியை செயல் தலைவர் எனவும் அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதனை ஏற்க மறுத்தார்.

பாமகவின் தலைவராகவே தாம் தொடருகிறேன்; இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி தாமே பாமக தலைவர் என்றார் அன்புமணி.

இதனையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரையும் ராமதாஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அன்புமணியோ அவர்களே கட்சிப் பதவிகளில் நீடிப்பர் எனவும் அறிவித்தார். பாமகவின் பொதுக்குழுவை அன்புமணியும் ராமதாஸும் தனித்தனியே கூட்டி இருந்தனர். இதன் பின்னர் அன்புமணிக்கு எதிராக பாமக விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொண்டார். இதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் இன்று பாமகவில் இருந்தே அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை

https://minnambalam.com/wp-content/uploads/2025/09/Ayya-Arivippu-11.9.25.pdf

https://minnambalam.com/anbumani-expelled-from-pmk-dr-ramadoss/

பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு!

4 days 23 hours ago
பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம்!; ராமதாஸ் அறிவிப்பு! பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும், செயற்பாட்டுத் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் இடையேயான கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அதற்கான விளக்கத்திற்காக 31ஆம் திகதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மீண்டும் 10ஆம் திகதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தாலும், அதற்கும் பதில் கிடைக்கவில்லை. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர் கட்சி ஒழுங்குக்கு கட்டுப்படாதவராகவும், அரசியல்வாதி என்ற தகுதி அற்றவராகவும் நடந்துகொண்டார். எனவே, பா.ம.க. செயல்தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார்” என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=340417 பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்- ராமதாஸ் அதிரடி அறிவிப்பு! தனிக் கட்சி தொடங்க அறிவுரை! 11 Sep 2025, 10:25 AM பாமகவில் இருந்து தமது மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான அன்புமணி ராமதாஸ் (PMK Anbumani Ramadoss) நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) அதிரடியாக அறிவித்துள்ளார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ராமதாஸ், பாமகவில் அன்புமணி தனி அணியாக செயல்பட்டார்; அவரிடம் 16 குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இரு முறை விளக்கம் கேட்டோம். ஆனால் இந்த நோட்டீஸுக்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என ஏற்றுக் கொள்கிறோம். பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் இதனையடுத்து பாமகவின் செயல் தலைவர், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் 10 அல்லது 15 பேர்தான் உள்ளனர். அன்புமணியுடன் தொடர்பு வைத்திருந்தால் அவர்களும் பாமகவில் இருந்து நீக்கப்படுவர். அன்புமணியுடன் உள்ளவர்கள் திருந்த வாய்ப்பு கொடுப்போம்; அவர்கள் திருந்தினால் அவர்களை சேர்த்து கொள்ளவும் தயார். நான் இல்லாமல் அன்புமணியோ அவருடன் இருப்பவர்களோ இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது. என்றார், என் பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது மேலும், பாமக தொடங்கியது முதல் இதுவரை யாருமே செய்யாத அளவுக்கு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் அன்புமணி. அரசியலுக்கே தகுதி இல்லாதவர் அன்புமணி. இன்று முதல் எனது பெயரின் முதல் எழுத்தான ‘இரா’ என்பதை மட்டுமே அன்புமணி பயன்படுத்த வேண்டும்; இராமதாஸ் என்ற என் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி தனிக் கட்சி தொடங்கலாம் அதேபோல, அன்புமணி தனியாக ஒரு கட்சியை தொடங்கி நடத்தலாம். இதை ஏற்கனவே 3 முறை அன்புமணியிடம் கூறியிருக்கிறேன். இப்போதும் அன்புமணி தனிக்கட்சி ஆரம்பிக்கலாம் என்கிறேன். என் கட்சி பாமக- உரிமை கோர முடியாது பாமக என்பது ராமதாஸ் என்ற தனிநபர் தொடங்கிய கட்சி. பாமக என்ற என் கட்சிக்கு உரிமை கொண்டாட என் மகன் உட்பட யாருக்குமே உரிமை கிடையாது. பாமகவில் இருந்து களை நீக்கப்பட்டுவிட்டது. அன்புமணி தனி கட்சி தொடங்கினாலும் வளராது அன்புமணியை நீக்கிவிட்டதால் பாமகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை. அன்புமணி தனிக்கட்சியை தொடங்கினாலும் அது வளராது. என்னுடன் 40 முறை பேசியதாக அன்புமணி கூறி வருவது எல்லாம் பொய். அன்புமணியின் பொய் என்பது அண்டப் புளுகு; ஆகாசப் புளுகு. என் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்தது குறித்து விசாரணை நடைபெறுகிறது. அன்புமணியின் செயலால் இரும்பு போன்ற என் இதயம் நொறுங்கிவிட்டது என்றும் ராமதாஸ் கூறினார். பின்னணி என்ன? பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ். மேலும் அன்புமணியை செயல் தலைவர் எனவும் அறிவித்தார் ராமதாஸ். ஆனால் அன்புமணி இதனை ஏற்க மறுத்தார். பாமகவின் தலைவராகவே தாம் தொடருகிறேன்; இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி தாமே பாமக தலைவர் என்றார் அன்புமணி. இதனையடுத்து அன்புமணியின் ஆதரவாளர்கள் பலரையும் ராமதாஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார். அன்புமணியோ அவர்களே கட்சிப் பதவிகளில் நீடிப்பர் எனவும் அறிவித்தார். பாமகவின் பொதுக்குழுவை அன்புமணியும் ராமதாஸும் தனித்தனியே கூட்டி இருந்தனர். இதன் பின்னர் அன்புமணிக்கு எதிராக பாமக விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கையை ராமதாஸ் மேற்கொண்டார். இதற்கு அன்புமணி பதில் அளிக்கவில்லை. இதனால் இன்று பாமகவில் இருந்தே அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணியை நீக்கி டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை https://minnambalam.com/wp-content/uploads/2025/09/Ayya-Arivippu-11.9.25.pdf https://minnambalam.com/anbumani-expelled-from-pmk-dr-ramadoss/

பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

4 days 23 hours ago
பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு 11 Sep, 2025 | 10:19 AM பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர். பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மெக்ரோன் அரசின் 'ரினைசன்ஸ்' கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார். இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பிரான்சில் மேலும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/224787

பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

4 days 23 hours ago

பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

11 Sep, 2025 | 10:19 AM

image

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ரோன் அரசின் 'ரினைசன்ஸ்' கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார்.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பிரான்சில் மேலும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

541972946_1542160723863410_4829917892319

546843924_1321512489315953_3327159823400

547315015_1074527644458937_3074777169177


https://www.virakesari.lk/article/224787

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

4 days 23 hours ago
நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம் 11 Sep, 2025 | 10:38 AM நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால், காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இன்று (11) விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து காத்மண்டுக்கு யூ.எல்-181 என்ற விமானம் புறப்பட்டதன் மூலம் நேபாளத்திற்கு மீண்டும் சேவைகளை ஆரம்பித்துள்ளது. நேபாளத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளை நேற்று (10) நிறுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். காத்மண்டுக்கு பயணிக்க எதிர்பார்த்து நேற்று வந்த 35ற்கும் அதிகமான பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 8.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.41 மணிக்கு காத்மண்டுவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. காத்மண்டுவிலிருந்து திரும்பும் விமானம் மாலை 4.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்புக்கும் காத்மண்டுவுக்கும் இடையில் விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயங்கும். அதன்படி, ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறித்த விமானசேவை இடம்பெறும் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224785#google_vignette

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

4 days 23 hours ago

நேபாளத்திற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

11 Sep, 2025 | 10:38 AM

image

நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழுவினால், காத்மண்டு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இன்று (11) விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து காத்மண்டுக்கு யூ.எல்-181 என்ற விமானம் புறப்பட்டதன் மூலம் நேபாளத்திற்கு மீண்டும் சேவைகளை ஆரம்பித்துள்ளது.

நேபாளத்தில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளை நேற்று (10) நிறுத்தப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

காத்மண்டுக்கு பயணிக்க எதிர்பார்த்து நேற்று வந்த 35ற்கும் அதிகமான பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகளை விமான நிறுவனம் வழங்கியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விமான சேவை இன்று காலை 8.15 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.41 மணிக்கு காத்மண்டுவில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

காத்மண்டுவிலிருந்து திரும்பும் விமானம் மாலை 4.40 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்புக்கும் காத்மண்டுவுக்கும் இடையில் விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானசேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு இயங்கும்.

அதன்படி,  ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் குறித்த விமானசேவை இடம்பெறும் என  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மேலாளர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224785#google_vignette

நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் !

4 days 23 hours ago
நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் ! 11 Sep, 2025 | 10:55 AM நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொடர்புடைய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த இடமாற்றங்கள் நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சன அபேவிக்ரம வீரசிங்க மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர்.பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், காலி நீதவான், ஐ.என்.என். குமார கமகே கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண பலபிட்டிய நீதவானாகவும், பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக கொழும்பு மேலதிக நீதவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேலும், நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 பேர் குறித்த இடமாற்றங்களின் கீழ் நீதவான்களாகவும் மேலதிக மாவட்ட நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/224789

நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் !

4 days 23 hours ago

நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் !

11 Sep, 2025 | 10:55 AM

image

நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள் உட்பட 106 நீதித்துறை உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தொடர்புடைய இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த இடமாற்றங்கள் நீதவான்கள், மேலதிக நீதவான்கள், மாவட்ட நீதிபதிகள், மேலதிக மாவட்ட நீதிபதிகள் மற்றும் பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இடமாற்றங்களின் கீழ், மாளிகாகந்த நீதவான் லோச்சன அபேவிக்ரம வீரசிங்க மஹர நீதவான் நீதிமன்றத்திற்கும், மஹர நீதவான் எச்.ஜி.ஜே.ஆர்.பெரேரா, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அதேநேரம், காலி நீதவான், ஐ.என்.என். குமார கமகே கோட்டை நீதவானாகவும், குருநாகல் நீதவான் என்.டி. குணரத்ன கம்பஹா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேலதிக நீதவான் பி.எஸ். பத்திரண பலபிட்டிய நீதவானாகவும், பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக கொழும்பு மேலதிக நீதவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளதாக நீதிச் சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், நீதித்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 17 பேர் குறித்த இடமாற்றங்களின் கீழ் நீதவான்களாகவும் மேலதிக மாவட்ட நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/224789

செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

4 days 23 hours ago
செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு 11 September 2025 அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, மக்கள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர், நகரம் புகையால் மூடப்பட்டிருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மணி நேரத்திற்குள், 110 மாடி கோபுரங்கள் இரண்டும் பெரிய தூசி மேகங்களுடன் இடிந்து விழுந்தன. மூன்றாவது விமானம் வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் மேற்கு முகப்பை அழித்தது. பயணிகள் எதிர்த்துப் போராடிய பிறகு, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளானது. கடத்தல்காரர்கள் வாஷிங்டனில் உள்ள கட்டிடத்தைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. மொத்தத்தில், 2,977 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள். நான்கு விமானங்களில் இருந்த 246 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இறந்தனர். மேலும் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் 2,606 பேர் அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலதிகமாக பென்டகனில் 125 பேர் உயிரிழந்திருந்தனர். முதல் விமானம் மோதியபோது, இரண்டு கோபுரங்களிலும் 17,400 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/419538/24th-anniversary-of-the-september-11-attacks

செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

4 days 23 hours ago

செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

11 September 2025

1757566327_7797468_hirunews.jpg

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. 

பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. 

கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, மக்கள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர், நகரம் புகையால் மூடப்பட்டிருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு மணி நேரத்திற்குள், 110 மாடி கோபுரங்கள் இரண்டும் பெரிய தூசி மேகங்களுடன் இடிந்து விழுந்தன. 

மூன்றாவது விமானம் வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் மேற்கு முகப்பை அழித்தது. 

பயணிகள் எதிர்த்துப் போராடிய பிறகு, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளானது. 

கடத்தல்காரர்கள் வாஷிங்டனில் உள்ள கட்டிடத்தைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. 

மொத்தத்தில், 2,977 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள். 

நான்கு விமானங்களில் இருந்த 246 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இறந்தனர். 

மேலும் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் 2,606 பேர் அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலதிகமாக பென்டகனில் 125 பேர் உயிரிழந்திருந்தனர். 

முதல் விமானம் மோதியபோது, இரண்டு கோபுரங்களிலும் 17,400 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/419538/24th-anniversary-of-the-september-11-attacks

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

4 days 23 hours ago
டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 31 வயதான சார்லி கிர்க், காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி கிர்க் உயிரிழந்தார். சமீபகாலமாகவே அமெரிக்காவில் தொடர்ந்து வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ‘டர்னிங் பாயிண்ட் யுஎஸ்ஏ’ என்ற இளைஞர் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfep0fxd00cuo29npaxdayu9

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

4 days 23 hours ago
புதிய சட்டத்தின் கீழ் உத்தியோகப்பூர்வ இல்லங்களை இழக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதிகள்! “ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டத்தின்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் திருப்பித் தர வேண்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தின்படி, அவர்கள் அந்த சலுகையை இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், “ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி எதிர்காலத்தில் செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கூறுகிறது. ஜனாதிபதியின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது, தொடர்புடைய வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன. ஜனாதிதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நேற்று (10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் பதிவாகின. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் 2025 ஓகஸ்ட் 07ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க சனாதிபதிகளின் உரித்துரிமைகள் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலமாகும். நீக்கப்பட்ட சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் சனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வதிவிடம் அல்லது செலுத்தப்பட்ட மாதாந்த படி, நீக்கப்பட்ட சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிக்கு அல்லது முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த செயலகப் படித்தொகை, வழங்கப்பட்ட அலுவலக போக்குவரத்து மற்றும் அத்தகைய வேறு வசதிகள், நீக்கப்பட்ட சட்டத்தின் 4 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் நியதிகளின்படி முன்னாள் ஜனாதிபதியின் கைம்பெண்ணுக்கு செலுத்தப்பட்ட மாதாந்த ஓய்வூதியம் என்பன இரத்துச் செய்யப்படும். அத்துடன், “ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் நீக்குதல்” சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று பிற்பகல் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் சிறப்பு ரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவரும். https://athavannews.com/2025/1446719

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

5 days ago
அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இதனால் இந்த மாளிகை தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியில் பெரியளவு பேசுபொருளானது. இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கு தற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற் றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம். அரசியல் கோட்டை,அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ] https://newuthayan.com/article/அரசமாளிகையில்_இருந்து_வெளியேறுகிறார்_மஹிந்த!

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

5 days ago

அரசமாளிகையில் இருந்து வெளியேறுகிறார் மஹிந்த!

1778256177.jpg

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள அரசமாளிகையில் இருந்து இன்று வெளியேறவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அரசமாளிகையில் இருந்து தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில்-மஹிந்த குடியேறவுள்ளார் எனவும், இதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது. 

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. 

இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள் மூலம் வலியுறுத்தப்பட்டது. 

எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 

இதனால் இந்த மாளிகை தொடர்பான விவகாரம் அரசியல் ரீதியில் பெரியளவு பேசுபொருளானது.

இவ்வாறான பின்னணியில், ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்கு தற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற் றப்பட்டுள்ளது. 

இதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று வெளியேறுவதற்கு மஹிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம். 

அரசியல் கோட்டை,அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம் கூட ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ]

https://newuthayan.com/article/அரசமாளிகையில்_இருந்து_வெளியேறுகிறார்_மஹிந்த!

உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்

5 days ago
உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக் காரணமாகும். இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும் எலோன் மஸ்கின் வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1446745

உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்

5 days ago

Elon-musk-Uranus.webp?resize=750%2C375&s

உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக்  காரணமாகும்.

இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும் எலோன் மஸ்கின் வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446745

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

5 days ago
டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு! அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். 31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார். அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை. எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது. 18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது. கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார். அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார். https://athavannews.com/2025/1446727

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

5 days ago

New-Project-146.jpg?resize=750%2C375&ssl

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை.

எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.

கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார்.

அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1446727

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

5 days 2 hours ago
ஒழிக்கப்படமுடியாது. ஒழிக்கப்படவிடார்கள். புலம்பெயர் தேசங்களில் வேண்டுமென்றால் 3 , 4 சந்ததிகள் கடந்த பிறகு சாத்தியப்படலாம். ஆனால் தாயகத்தில் அது சாத்தியமில்லை.