Aggregator

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 days 7 hours ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 101 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 101 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை மேகவர்ண அபயன் ஒரு கிளர்ச்சியாளராக மாறி, மலைநாட்டுக்குச் [Malaya] சென்று ஒரு கிளர்ச்சிப் படையை உருவாக்கினார். பின், அவன் மன்னனுடன் சண்டையிடத் திரும்பி வந்து ஒரு முகாமை அமைத்தான். மன்னன் மகாசேனனும் சண்டையிடத் தயாராக வந்தான். இருப்பினும் இருவரும் சமரசம் ஆனார்கள், மேகவர்ண அபயன் மகாவிகாரை இடிப்பை ஏற்கவில்லை என்று மன்னனிடம் கூறினான். மகாவிகாரையை மீண்டும் கட்டுவதாக மன்னன் உறுதியளித்தான். மன்னனின் மனைவிகளில் ஒருவர் தேரர் சங்கமித்தா மற்றும் சோனாவை ஒரு தொழிலாளியின் உதவியுடன் கொன்றாள். மகாவிகாரை மீண்டும் கட்டப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு பிக்குகள் அங்கு குடியேறினர். பின்னர் மன்னர் பிராமணக் கடவுளின் கோயில்களை அழித்தார். முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் என்ற பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ... According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth '] ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று மறைமுகமாக சுட்டிக் காட்டுவதை காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம் [CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டு கோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இராச குமாரியையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் இலங்கை வரலாற்றுப் பதிவுகளின் அல்லது நாளாகமம்களின் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து எமது இந்த பயணம் தொடர்கிறது Part: 101 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 He became a rebel and went to Malaya to raise a rebel army. He returned to fight the king and pitched a camp. The king Mahasena too came ready to fight. Both however became reconciled, and Meghavannabhaya told the king that he did not approve the demolition of the Mahavihara. The king promised to rebuild the Mahavihara. One of the king’s wives killed the Thera Samghamitta and Sona with the help of a labourer. Mahavihara was rebuilt and bhikkhus came to dwell there after nine years. The king then destroyed the brahmanical temples of god. The foot note 5 on verse 45 says, quote” According to the Tika the Gokanna Vihara is situated on the coast of the Eastern Sea, the two others Viharas in Rohana. The Tika then adds ……. everywhere in the island of Lanka he established the doctrine of Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth”. He destroyed the temples in Trincomalee, in the Brahamanical village Kalanda (the present day Kanthalai). The king Mahasena destroyed temples of Lord Siva in the middle of the fourth century A.D. The Colas were not at all a powerful kingdom at this time, probably not even a small vassalage. The historians of Tamil Nadu used to say this period as the dark period in the history of Tamil Nadu. Cola and Pandya kingdoms were won over by Kalapers who were not Tamils. They ruled approximately from 300 A. D. to 600 A. D. They favoured Buddhism and Jainism. The Pali language was predominant over Tamil and Sanskrit. Buddhism lost its following among the Sinhalese, perhaps due to hard times. They remained Buddhists, but might not have spare money or time to spend on ecclesiastical matter. People in the process forgot about the Dipavamsa and the Mahavamsa. Very few copies of these remained, but forgotten, in very few monasteries. The British Colonial officer in Ceylon, George Turnour, happened to receive a copy of the Mahavamsa from a monk. He translated and published it in 1837. Turnour thus brought the Mahavamsa to the attention of the European scholars. Turnour considered the Mahavamsa his baby and considered it a genuine history of Lanka. Many Europeans followed Turnour. While the British Colonial officers in India Princep, Cunningam etc brought the hidden or the deliberately forgotten Buddhism, the India’s gift to the world, and the forgotten Buddhist Emperor Asoka, to the entire world. We do not have any issue with the pious Buddhist people believing in it for their religious purpose. We only reject the historical legitimacy of it as advanced by the politicians for their political advancement at the cost of Tamils. North Indian Hindus genuinely believe that Hanuman and his monkey brigade built the Adams Bridge connecting Rameswaram and Talai-Mannar. They also seriously believe that Rama won the war over Rawana. They could, therefore, say Lanka belong to them by conquest. Would Sinhalese concede their request? They believe that Rama returned home after his victory over Rawana and ruled for eleven thousand years. Assuming that the war between Rama and Rawana took place before the Buddha, then the war must have taken place about fourteen to fifteen thousand years ago. Rameswaram and Talai-Mannar was connected by land at that time, and there was no need for a bridge. The last ice age ended about seven to ten thousand years ago, and melting of the accumulated snow to mountain heights raised the sea level to separate India and Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 102 தொடரும் / Will follow பகுதி Part: 101 https://www.facebook.com/groups/978753388866632/posts/33759906486991232/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 7 hours ago
வெஸ்சின்டீஸ் அணியின் தொட‌க்க‌ம் ச‌ரி இல்லை ந‌டுத்த‌ர‌ வீர‌ர்க‌ள் தான் அதிர‌டியா ஆடி ர‌ன்ஸ்ச‌ கூட்டின‌வை..............வெஸ்சின்டீஸ் அணி இன்று மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து விளையாடின‌வை..............................

கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / [பத்து பகுதிகள்]

3 days 7 hours ago
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 ✈️ பாகம் 10 – வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புதல் துபாயின் கடைசி நாளின் காலையில், ஹோட்டல் திரைகள் வழியாக காலைச் சூரியன் மெதுவாக உள்நுழைந்து, தங்க நிற அழகைப் பரப்பியது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் — மூவருமே உற்சாகத்துடன் இருந்தனர் என்றாலும் ஓரளவு வருத்தத்தோடும் காணப்பட்டனர். இன்று அவர்கள் வெல்வின் கார்டன் சிட்டிக்கு திரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் இதயத்தில் துபாய் பற்றிய நிறைந்த நினைவுகள் இன்னும் ஒரு பொக்கிஷமாக, அவர்களுடன் பயணித்தன. “தாத்தா… எனக்கு துபாயை விட்டுப் போக மனசில்லை!” என்று தனது சிறிய சூட்­கேஸை அணைத்தபடி நிலன் சொன்னான். தாத்தா அன்பாகச் சிரித்தார். "எனக்குத் தெரியும், சின்னப் பயணி. ஆனால் ஒவ்வொரு சாகசத்திற்கும் ஒரு முடிவு உண்டு - வீட்டில் கட்டாயம் ஒரு புதிய கதை காத்திருக்கும்." என்றார் நிலன் தனக்குப் பிடித்த நினைவுப் பொருளான, மர்ஜன் தீவில் [Marjan Island] இருந்து வாங்கப்பட்ட ஒரு சிறிய மணல் கோட்டை [sandcastle] மாதிரியை வைத்திருந்தான், அதே நேரத்தில் திரேன் துபாய் மால் ஒட்டக சவாரியிலிருந்து வாங்கப்பட்ட தனது சிறிய [மினியேச்சர்] டிராகனைக் கையில் பிடித்திருந்தான். மிராக்கிள் கார்டனில் இருந்து வாங்கப்பட்ட மலர் வடிவங்களைக் கொண்ட ஒரு சிறிய, மென்மையான பொம்மை ஒன்றை பேபி ஆரின் கையில் வைத்திருந்தான். மூவரும் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு, விமான நிலையத்துக்கு சென்றனர்.நிலன் கோபுரத்தின் மேலிருந்து “மேகங்களைத் தொட்ட” அனுபவத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தான். திரேன் ஒட்டகப் பந்தயத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். குட்டி ஆரின் தன் மழலை மொழியில் ஒவ்வொரு சாகசத்திற்கும் தனக்கே உரிய சிறிய பெயரைச் சொல்வது போல், ஏதேதோ சொல்லி சொல்லி, மகிழ்ச்சியாக கூவி விளையாடினான். விமான நிலையத்தில், அவர்கள் பயண ஆயத்தம் [செக்-இன்] மற்றும் பாதுகாப்பு சோதனை — எல்லாவற்றையும் நிதானமாக முடித்தனர். நிலன் தன் கடவுச்சீட்டை [பாஸ்போர்ட்டை] பெரியவரைப் போல கவனமாகப் பிடித்துக் கொண்டிருந்தான். திரேன் கன்வேயர் பெல்ட்கள் மற்றும் ஸ்கேனர்களில் தங்கள் சாமான்கள் சீராக நகர்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான். குட்டி ஆரின் தாத்தாவின் கையில் பாதுகாப்பாக இருந்தபடி, ஒவ்வொரு ஒளி, ஒலி, அசைவையும் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்த்தான். அவர்கள் எல்லோரும் புறப்படும் அறையில் காத்திருக்கும் போது, நிலன் ஜன்னலுக்குப் பக்கத்தில் தனது முகத்தை ஒட்டி வைத்துக் கொண்டு, வெளிய புறப்படும் விமானங்களுக்கு கையை அசைத்தான். திரேன், அங்கே எத்தனை விமானங்கள் வெளியே நிற்கின்றன என்று ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருந்தான். அதேபோல, ஒவ்வொரு விமானமும் என்ஜின் சத்தத்துடன் நகரும் போது ஆரின் தனது இரு கைகளையும் தட்டினான். விரைவில், விமானத்தில் ஏற வேண்டிய நேரம் வந்தது. குழந்தைகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர், அவர்களின் உற்சாகம் தூக்க கலக்கத்துடன் கலந்திருந்தது. விமானம் வானத்தில் உயர்ந்ததும், நிலன் கிசுகிசுத்தான், “தாத்தா... நாங்கள் எப்போதாவது திரும்பி வருவோமா?” "நிச்சயமா, சின்ன சாகசக்காரனே," என்று தாத்தா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார். பின், "அதுவரை, அந்த மாயாஜாலத்தை எங்கள் இதயங்களில் உயிரோடு வைத்திருப்போம்." என்றார். மேகங்களுக்கு மேலே விமானம் பறந்த போது, குழந்தைகள் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்து, தங்களுக்குக் கீழே நகரம் சுருங்குவதைக் கண்டார்கள். துபாயின் கோபுரங்கள் ரத்தினங்களைப் போல மின்னின, பாலைவனம் தங்க மணலைப் போல பரவியிருந்தது, மிராக்கிள் கார்டன் கீழே ஒரு வண்ணமயமான ஒட்டுவேலை போல் அல்லது ஒரு வண்ண பட்டு விரிப்பு போலத் தெரிந்தது. மேகங்கள் தங்களுக்கு போய் வருகிறோம் என விடைபெற்று செல்வது போல், நிலன் கற்பனை செய்தான், திரேன் மீண்டும் தான் ஒட்டகத்தை ஓட்டிச் செல்வதை கற்பனை செய்தான், சிறிய ஆரின் பூக்கள் மற்றும் கோபுரங்களைக் கனவு கண்டு தூங்கச் சென்றான். விமானம் இறுதியாக லண்டனைத் தொட்டு, வெல்வின் கார்டன் நகரத்துக்கு காரில் அவர்கள் சென்றபோது, குடும்பத்தினர் குளிர்ந்த காலைக் காற்றில் காலடி எடுத்து வைத்தனர், அங்கு பழக்கமான தெருக்கள், நட்பு அண்டை வீட்டார் மற்றும் வீட்டின் தாராளமான வசதி அவர்களை வரவேற்றது. திரேன், நிலன் மற்றும் குட்டி ஆரின் ஆகியோர் தங்கள் நினைவுகளை ஒரு பொக்கிஷம் போல சுமந்து கொண்டு வீட்டிற்குள் ஓடினார்கள். தாத்தா தனது சிறிய ஆய்வாளர்களைப் பார்த்து சிரித்தார். "இதயம் இருக்கும் இடம் தான் வீடு," என்று அவர் மெதுவாகச் சொன்னார். "இப்போது, நம் இதயங்கள் - சாகசங்கள், சிரிப்பு மற்றும் மந்திரத்தால் நிறைந்துள்ளன. ஆனால் நினைவில் கொள்ளுங்கள் ... ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாகசத்தை, வீட்டில் கூட நடத்த முடியும்." என்றார். அன்று மாலை, குழந்தைகள் நினைவுப் பொருட்களை அவிழ்த்து, துபாயின் படங்களை வரைந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிலன் தனது சிறிய மணல் கோட்டையை அலமாரியில் கவனமாக வைத்தான், திரேன் தனது ஒட்டக உருவங்களை வரிசையாக அடுக்கி வைத்தான், ஆரின் தனது பளபளப்பான மலர் பொம்மையை, முகத்தில் ஒரு திருப்தியான புன்னகையுடன் இறுக்கமாகக் கட்டிப் பிடித்தான். இரவு வந்தபோது, தாத்தா குழந்தைகளைப் படுக்கையில் படுக்க வைத்தார். "இனிய இரவு, என் சிறிய சாகசக்காரர்களே," என்று அவர் கிசுகிசுத்தார். "மேகங்கள், அரண்மனைகள், ஒட்டகங்கள் மற்றும் தோட்டங்களைப் பற்றிய கனவு உலகம் ... எப்போதும் நீங்கள் ஆராய்வதற்காகக் காத்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்." என்று அவர்களுக்கு கூறினார். அத்துடன், ஆச்சரியம், சிரிப்பு மற்றும் துபாய்க்கான அவர்களின் மறக்க முடியாத பயணத்தின் மாயாஜாலம் நிறைந்த இதயங்களுடன் குழந்தைகள் அமைதியான தூக்கத்தில் மூழ்கினர்கள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/33756943097287571/?

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 7 hours ago
மேற்கு இந்திய தீவுகளின் துடுப்பாட்டம் பார்க்கவில்லை, ஆனால் பந்து வீச்சினை பார்த்தேன். பவர் பிளேயில் செப்பர்ட்டின் பந்து வீச்சிற்கு எல்லை கோட்டில் நிற்கும் இரண்டு வீரர்களிற்கு டீப் ஸ்குயார் லெக்கில் ஒரு வீரரும், டீப் மிட் விக்கெட்டிற்கு ஒரு விரரும் நின்றார்கள், மிக தெளிவாக லெக் ஸ்டம்ப் லைன், ஸோர்ட் பைன் லெக்கில் ஒரு வீரரை வைத்தன் மூலம் லெந்தினையும் தெளிவாக காட்டப்பட்டிருந்தது, ஆக லைனும் லெந்தும் தெளிவாக துடுப்பாட்ட வீரருக்கு தெரியும் நிலை, துடுப்பாட்ட வீரர் விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுத்து ஒப் சைட்டில் அடிக்க தூண்டினார்கள். சாமர் ஜோசப்பிற்கு அந்த இரண்டு எல்லைக்கோட்டு வீரர்களும் டீப் பைன் லெக், டீப் ஸ்குயார் லெக் அத்துடன் ஸோர்ட் தேர்ட் மான். சுழல் பந்து வீச்சிற்கு ஸோர்ட் பைன்லெக் டீப் ஸ்குயார்லெக். முக்கியமாக 7 -14 ஓவர்களில் பந்து வீச்சாளர்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளத்தடுப்பு சுழலிற்கு லெக் சைடில் உரிய பாதுகாப்பு மூலம் துடுப்பாட்ட வீரர்களை விக்கெட்டிலிருந்து விலகி ரிஸ்க் எடுக்க தூண்டிய்து, வேகப்பந்து வீச்சிற்கு பலமான பாக்வேர்ட் பீல்டிங். மேற்கிந்தியதீவுகளின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரவி ராம்போல் உள்ளார். மேற்கிந்திய தீவுகள் மிக சிறந்த திட்டமிடல்.

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

3 days 7 hours ago
குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..! 11 Feb, 2026 | 05:18 PM மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் . நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர். குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது. இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238418

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

3 days 7 hours ago

குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..!

11 Feb, 2026 | 05:18 PM

image

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் .

நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20260211-WA0166.jpg

IMG-20260211-WA0168.jpg

IMG-20260211-WA0173.jpg

https://www.virakesari.lk/article/238418

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 7 hours ago
பெரிய‌ப்பு ஜ‌ந்து நாள் ப‌ரிட்சையும் பாஸ் ஆகியாச்சு நாளையான் ப‌ரிட்சையும் பாஸ் ப‌ண்ணுவேன் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு லொள்😁😄................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 days 8 hours ago
மேற்கிந்தியா அமோக வெற்றி. இங்கிலாந்து சுழலில் மாட்டுப் பட்டு சுருண்டது. குடகேஸ் மோத்தி எப்போதும் அவர்களை சுழட்டி அடிப்பார். இன்றும் அதே நடந்தது.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 days 8 hours ago
யாழ். துப்பாக்கி சூட்டு சம்பவம் ; சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் - பவானந்தராஜா எம்.பி! 11 Feb, 2026 | 04:23 PM யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவற்றை நாங்கள் எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். புதன்கிழமை (11) வட்டுக்கோட்டை - இன்பச்சோலை வீதி புனரமைப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரியவருகையில், சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என ஜனாதிபதியும் சொல்லியிருந்தார். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ நாங்கள் அதை எடுப்போம். யாரில் பிழை இருக்கிறதோ அவர்களுக்கான தண்டனையை நாங்கள் கொடுப்போம். இந்த விடயத்தில் சட்டம் தனது வேலையை சரியாக செய்யும். பொலிஸாரோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பிரதேச சபை உறுப்பினர்களோ யார் பிழை செய்தாலும், யார் பிழை செய்தது என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம். எனவே நீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுக்கும் என்றார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், "சங்கானை பிரதேச செயலர் பிரிவில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளதாகவும், அவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வலி மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கூறினீர்கள். அது தொடர்பான முன்னேற்றம் என்ன?" என் கேள்வி எழுப்பினார். அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில் தெரிவிக்கையில், நாங்கள் இது தொடர்பான சில விபரங்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு இரவிலோ அல்லது ஒரு கிழமையிலோ நடவடிக்கையை எடுக்க முடியாது. ஆறுதலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/238406

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

3 days 8 hours ago
அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர் Published By: Digital Desk 3 11 Feb, 2026 | 05:09 PM அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர். லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது. அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர். இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது. வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர். "இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/238415

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

3 days 8 hours ago

அமைதிக்கான நடைப்பயணம்: 2,300 மைல் பயணத்திற்குப் பின்னர் பௌத்த தேரர்கள் வொஷிங்டனை சென்றடைந்தனர்

Published By: Digital Desk 3

11 Feb, 2026 | 05:09 PM

image

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து சுமார் 108 நாட்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புத்த துறவிகளின் 2,300 மைல் (3,700 கி.மீ.) நீள 'அமைதி நடைபயணம்' (Walk for Peace), செவ்வாய்க்கிழமை (10) நாட்டின் தலைநகரான வொஷிங்டன் டி.சி.யை சென்றடைந்துள்ளனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த் நகரிலுள்ள ஹுவாங் தாவோ விபாசனா மையத்தில் இருந்து 19 தேரர்கள் இந்தப் பயணத்தைத் ஆரம்பித்தனர்.

லூசியானா, அலபாமா, ஜோர்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா மற்றும் வர்ஜீனியா உள்ளிட்ட 8 மாகாணங்களைக் கடந்து இந்த நடைபயணம் வொஷிங்டனை அடைந்துள்ளது.

அரசியல் பிளவுகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மத்தியில், 'அமைதி என்பது நமக்குள் இருந்து தொடங்க வேண்டும்' என்ற செய்தியை இவர்கள் அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்த நடைபயணத்தில் தேரர்களுடன் இணைந்து 'அலோகா' என்றழைக்கபடும் இந்திய தெருநாய் இனத்தைச் சேர்ந்த நாயும் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2022-இல் இந்தியாவில் துறவிகள் மேற்கொண்ட நடைபயணத்தின் போது அவர்களைப் பின்தொடர்ந்த இந்த நாயை, தேரர்கள் தத்தெடுத்து அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது அலோகா காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதிலும், குணமடைந்த பின் மீண்டும் தேரர்களுடன் இணைந்து தனது பயணத்தைத் தொடர்ந்துள்ளது.

இந்த நீண்ட பயணத்தில் பெரும் விபத்து ஒன்றும் நேரிட்டது. நவம்பர் மாதம் ஹூஸ்டன் அருகே சென்றபோது, துறவிகளின் வாகனத்தின் மீது ஒரு லொறி மோதியதில் மகா தம் போமசான் (Maha Dam Phommasan) என்ற தேரர் தனது காலை இழந்தார். இருப்பினும், தனது உறுதியைக் கைவிடாத அவர், நேற்று வொஷிங்டனில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி மீண்டும் தேரர்களுடன் இணைந்தது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியடையச் செய்தது.

வொஷிங்டன் தேசிய தேவாலயத்தில் நடைபெற்ற மதாந்தர கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பௌத்த தேரர்களும், பிற மதத் தலைவர்களும் இவர்களை வரவேற்றுள்ளனர்.

"இது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அமைதி என்பது வெறும் வார்த்தை அல்ல, அது ஒவ்வொரு அடியிலும் உணரப்பட வேண்டிய ஒன்று," எனத் தேரர்களின் தலைவர் பிகுக் பன்னாகாரா (Bhikkhu Pannakara) நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை (11) இந்தத் தேரர்கள் கேபிட்டல் ஹில் (Capitol Hill) வழியாக நடந்து சென்று, லிங்கன் நினைவிடத்தில் நடைபெறும் நிறைவு விழாவில் பங்கேற்கவுள்ளனர். பின்னர் இவர்கள் பஸ்ஸில் மீண்டும் டெக்சாஸ் நோக்கிய பயணிக்கவுள்ளனர்.

https://www.virakesari.lk/article/238415

முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்

3 days 8 hours ago
வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு 3 தடவைகளாக 50000 ரூபா வீதம் 150000 ரூபா மொத்தமாக மலசலகூடத்தை பூரணப்படுத்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளோம். இருப்பு 178,803.62 +50025=128,778.62 தற்போதைய வங்கி மீதி. வட்டு.தெற்கு பரராஜசிங்கம் ஐயாவிற்கு மூன்றாவது தடவையாக 50000 ரூபா வைப்பிடப்பட்டது. காரைநகர் புதிய மலசலகூடம் மற்றும் குழி வெட்டிக் கட்டும் பணிக்கு ஒப்பந்தகாறர் 4 லட்ச ரூபா கேட்கிறார் என திட்டமிடல் உத்தியோகத்தர் தெரிவித்தார், எழுத்தில் வாங்கித்தர கேட்டுள்ளேன். வேறு சிலரை கேட்கச் சொல்லி உள்ளேன்.