Aggregator

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்

3 days 8 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்

Published By: Digital Desk 2

21 Dec, 2025 | 11:46 AM

image

தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான்.

1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது.

ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது.

இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது.

இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது.

மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

articles2FyhcQv2tc5mrONQG5EBIs.webp

சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது.  எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. 

இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/233980

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

3 days 8 hours ago
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை 20 Dec, 2025 | 02:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. எம். எல். பொன்சேகா, வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். ஆர்.பி. கிறிஸ்டினாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233980

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 days 8 hours ago
ரி20 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க Published By: Vishnu 19 Dec, 2025 | 08:32 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் (ரி20) தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதி சிறந்த 15 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உப்புல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுக் குழுவில் பிரமோதய விக்ரமசிங்க (தலைவர்), வினோதன் ஜோன், இந்திக்க டி சேரம், தரங்க பரணவித்தான, ரசஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரமோதய விக்ரமசிங்க, 'முந்தைய தெரிவுக் குழு மற்றும் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய ஆகியோர் வகுத்த திட்டத்தை ரி20 உலகக் கிண்ணம் வரை மாற்றாமல் தொடரவுள்ளோம். திடீர் மாற்றங்கள் செய்வதால் பலன் கிடைக்காது. ரி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு அவர்கள் 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தை பெயரிட்டுள்ளனர். எமது முதலாவது பணி என்னவெனில் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு மிகச் சிறந்த வீரர்களைத் தெரிவுசெய்வதாகும். இதுதான் எமது குறுகிய கால திட்டமாகும். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் இலங்கை 6 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அத்துடன் இலங்கை குழாத்திற்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இரண்டு பயிற்சிப் போட்டிகளும் நடத்தப்படும்' என்றார். சரித் அசலன்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் தசுன் ஷானக்கவை ரி20 அணித் தலைவராக நீயமித்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரமோதய விக்ரமசிங்க, 'நான் தெரிவுக் குழுத் தலைவராக இருந்த முதலாவது தவணையின்போது தசுன் ஷானக்க தலைவராக இருந்தார். அவர் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சரித் அசலன்கவை தலைவராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அப்போதைய தெரிவுக் குழுவினர் விரும்பினர். அதன் படி அவர் இரண்டுவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் திறமையை வெளிப்படுத்தி வந்தபோதிலும் அண்மைக்காலமாக ரி20 போட்டிகளில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயுள்ளது. தலைவராக அழுத்தங்களை எதிர்கொள்வதால் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொண்டே அவரை நீக்கிவிட்டு தசுன் ஷானக்கவை ரி20 அணியின் தலைவராக நியமித்துள்ளோம். இது முந்தைய தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே அடுத்துவரும் போட்டிகளில் சரித் அசலன்கவுக்கு சுதந்திரமாக விளையாடக்கூடியதாக இருக்கும். மேலும் 3 உலகக் கிண்ணப் போட்டிகள், 2 ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபசாலியான தசுன் ஷானக்க சகலதுறை வீரராக அணியில் இடம்பெறுவார்' என்றார். இதேவேளை, இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும் அவர் வெளியிட்டார். 'ரி20 உலகக் கிண்ணம் முடிவடைந்தவுடன் இடைக்காலத் திட்டம் ஆரம்பமாகும். தற்போது தேசிய அணி வாயிலைத் தட்டிக்கொண்டிருக்கும் பல வீரர்கள் இலங்கை குழாத்திற்குள் ஈர்க்கப்படுவார்கள். இந்த வீரர்களின் குறைகளை பயிற்றுநர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உயர்ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் அதிஉயர் பயிற்சிகளை வழங்கவேண்டும். வீரர்களின் திறமை மேம்படாவிட்டால் அதற்கான பொறுப்பை பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் பொறுப்பேற்கவேண்டும். பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் கடமையில் தவறினால் அது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம் எடுக்க வேண்டும்' எனவும் தெரிவுக் குழுத் தலைவர் கூறினார். 'நீண்டகாலத் திட்டத்திதின்கீழ் பாடசாலைகள் கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் 45 பேரை வருடா வருடம் தெரிவு செய்து அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி முகாம் நடத்தப்படும். இதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் பெறவுள்ளோம். இந்த ஒரு வருட பயிற்சி முகாமின்போது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு, தொழில்நுட்பம், ஆளுமை உருவாக்கம், ஒழுக்கம், கிரிக்கெட் விதிகள் என்பன போதிக்கப்படும். அத்துடன் அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களை கழக மட்டப் போட்டிகளில் விளையாடச் செய்து உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் மேலதிக பயிற்சிகளில் ஈடுபட அனுப்புவோம்' எனவும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/233877

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

3 days 8 hours ago
நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும் Dec 20, 2025 - 10:12 PM - 0 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும். அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார். எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார். https://adaderanatamil.lk/news/cmjej0snj02yko29nd30ixnco

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

3 days 8 hours ago

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

Dec 20, 2025 - 10:12 PM -

0

நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 

அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. 

எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும். 

அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். 

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார். 

எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார்.

https://adaderanatamil.lk/news/cmjej0snj02yko29nd30ixnco

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

3 days 8 hours ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்! 20 Dec, 2025 | 03:37 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, Containers Transport Owners Association இனால் 15 இலட்சம் ரூபா மற்றும் Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers இனால் 13.5 இலட்சம் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டன. இதற்கான காசோலைகள் வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் Containers Transport Owners Association பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் டபிள்யூ.எம்.எஸ்.கே. மஞ்சுள, திலீப் நிஹால் என்ஸ்லம் பெரேரா மற்றும் ஜயந்த கருணாதிபதி ஆகியோருடன், Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers பிரதிநிதித்துவப்படுத்தி தேஷான் ராஜபக்ஷ, சமுதிக பெரேரா மற்றும் தேவ்ஷான் ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233945

அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா

3 days 8 hours ago
அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா Dec 21, 2025 - 08:44 AM உலகப்புகழ் பெற்ற கவித்துவக் கலைஞர் அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா நேற்று (20) மாலை இணுவில் அறிவாலயத்தில், இணுவில் கலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாகீஸ்பரன், அவரது பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன்போது, இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து வாகீஸ்பரனுக்கு வேல் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து இணுவில் அறிவாலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjf5ln0g02yqo29n8cwlsfb2

சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

3 days 8 hours ago

சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

21 Dec, 2025 | 09:17 AM

image

(நா.தனுஜா)

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டில்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர்.

அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேற்று முன்தினம் (19) பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை நேற்று முன்தினம் (19) அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர்.

அதேவேளை நேற்று சனிக்கிழமை (20) பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள்,  தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றித் தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

https://www.virakesari.lk/article/233964

சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து

3 days 8 hours ago
சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து 21 Dec, 2025 | 09:17 AM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டில்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேற்று முன்தினம் (19) பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை நேற்று முன்தினம் (19) அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர். அதேவேளை நேற்று சனிக்கிழமை (20) பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தினர். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றித் தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/233964

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

3 days 8 hours ago
தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது Dec 21, 2025 - 11:18 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. "இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

3 days 8 hours ago

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

Dec 21, 2025 - 11:18 AM

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

"இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

3 days 9 hours ago
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஏரிப்புறக்கரை & அதிராம்பட்டினத்தில் பாவிக்கப்பட்ட வத்தை 1900+ பண்டகர்(Dr.) புளூ(blue) என்னும் ஆங்கிலேயர் வத்தையினை இவ்வாறு சித்தரிக்கின்றார். Dr. Blue Says, "Vattai, are flat-bottomed, have a box-like transverse section and are near-wall-sided over much of their length. "They range in size from around 13.72m long, with a beam of 2.13m and a depth of 1.37m, to the smallest vessels of c. 5.18m x 1.07m x 0.76m. However, irrespective of their size, they are all similar in shape with very high bows, and two or three masts each with a settee-lateen sail, a balan"

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

3 days 9 hours ago
தலைநகர் திருமலையின் மாவலி கங்கையில் வள்ளங்கள் நிற்கின்றன 1940கள் இதை ஒத்த வடிவமுடைய வள்ளமொன்று தமிழ்நாட்டிலும் இருந்துள்ளது.

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

3 days 9 hours ago
யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்பட்ட வள்ளங்கள் இரண்டு இது போன்ற வள்ளங்களின் மேல் பாய் கட்டி ஓடுவதும் உண்டு. ஆதாரம்: