Aggregator

யாழில் முதியவர் உயிர்மாய்ப்பு

1 day 18 hours ago

Published By: DIGITAL DESK 3

17 MAY, 2024 | 10:26 AM
image
 

யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். 

ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/183748

டைபொய்ட் அபாயம் குறித்து சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

1 day 18 hours ago
இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது. வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். டைபொய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301826

டைபொய்ட் அபாயம் குறித்து சுகாதார தரப்பினர் எச்சரிக்கை

1 day 18 hours ago

இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது.

வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது.
எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
டைபொய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/301826

வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்

1 day 18 hours ago
15 வருடத்துக்கு பிறகாவது இவர் பங்குபற்றுவது ஒரு பெரிய ஆறுதல் . கொஞ்ச மாறுதலின் ஒரு படியாக சொல்லலாம் .

ஐ.பி.எல் 2024 - செய்திகள்

1 day 18 hours ago
சன்ரைசர்ஸ் 3ஆவது அணியாக ப்ளே ஓவுக்கு தகுதி : நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூருக்கு இடையில் போட்டி 16 MAY, 2024 | 11:43 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிரமமின்றி முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை (16) இரவு நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 66ஆவது போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதிபெற்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன. இதேவேளை, இந்த மூன்று அணிகளைத் தொடர்ந்து 4ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பதை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி தீர்மானிக்கவுள்ளது. அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும். இப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒருவேளை, அப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளைப் பெற்ற ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். https://www.virakesari.lk/article/183735

தமிழ்க்கட்சிகளின் பிளவு குறித்து அமெரிக்கத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ள விடயம்

1 day 18 hours ago
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடுறது அமெரிக்காவின் கைவண்ணம் , இந்த வாத்தி என்னத்த செய்றது , சுமாவின் *** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனத்துக்கு முன்னாள் இவர் சண்டித்தனம் எடுபடாது.

இன்றைய வானிலை

1 day 18 hours ago
இன்றைய வானிலை முன்னறிவித்தல் இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் காலி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் https://thinakkural.lk/article/301800

வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்

1 day 18 hours ago
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்கிறார் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 05:33 PM (நா.தனுஜா) முதன்முறையாக இலங்கைக்கு வருகைதந்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது. அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு நாளைய தினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், முதன்முறையாக தெற்காசியப் பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், வியாழக்கிழமை (16) நாட்டை வந்தடைந்துள்ளார். அதன்படி வெள்ளிக்கிழமை (17) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், அங்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். இன்று மாலை 5.00 மணியளவில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 8 மாவட்டங்களினதும் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்பர் என அறியமுடிகிறது. இச்சந்திப்பின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், போரில் உயிரிழந்தோரை நினைவுகூருவதற்குத் தடைவிதிக்கப்படல், இந்துக்களின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளடங்கலாக வட, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைக்கவிருப்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளவிருக்கும் மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், போரில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவுகூரும் மக்களுடன் இணைந்து தனது உடனிற்பை வெளிப்படுத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/183709

வீராணம் ஏரி: வறண்டு விளையாட்டு மைதானமாக மாறிய பிரமாண்ட ஏரி - தூர்வாரக் கோரும் விவசாயிகள்

1 day 18 hours ago
வீராணம் ஏரி
படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.மாயகிருஷ்ணன்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 16 மே 2024

சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும்.

கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது.

இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காணப்படுவது ஏன்?

'வீர நாராயணப் பேரேரி'

இந்த ஏரியின் வரலாற்றையும் அது தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள, கடந்த வாரம் ஒரு காலைப் பொழுதில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து வீராணம் ஏரிக்கரையைச் சென்றடைந்தோம்.

அங்கு கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறையின் வருகைதரு பேராசிரியருமான இரா.கோமகன் பிபிசி தமிழுடன் இணைந்து கொண்டார். வீராணம் ஏரியை நோக்கித் தொடங்கிய பயணத்தின் நடுவே அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை நம்மிடம் அவர் விவரிக்கத் தொடங்கினார்.

 
வீராணம் ஏரி

"முதலாம் பராந்தக சோழன் காலத்தில் – அதாவது கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் - இந்த ஏரி அமைக்கப்படதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன."

"சிதம்பரம் அருகே திருச்சின்னபுரம் என்ற ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் ரிஷப மண்டபக் கூரையில் உள்ள கல்வெட்டில் இந்த ஏரி பராந்தக ஏரி எனக் குறிப்பிட்டுள்ளது," என்கிறார் கோமகன்.

வீராணம் ஏரிக்கு, வீரநாராயணப் பேரேரி (பராந்தக சோழனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு) என்று குறிப்பிடும் செய்தி ஆவணம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை என்று அழைக்கப்படும் திருகுரங்காடுதுறை என்னும் ஊரில் உள்ளது.

"இதற்கு ராஜேந்திர சோழப் பேராறு என்ற பெயரும் உள்ளதை கீழப்பழூர் ஆலந்துரையார் கோவில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். இது கி‌.பி.1124ஆம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டாகும். கங்கைகொண்ட சோழபுரத்திலும் இந்த ஏரி தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன," என்று கோமகன் பிபிசி தமிழிடம் விளக்கினார்.

 
சோழ இளவரசன் ராஜாதித்தன் அமைத்த ஏரி
வீராணம் ஏரி
படக்குறிப்பு,வீராணம் ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் (10 மாதங்களுக்கு முன்பு)

ஏரியின் பெயர் குறித்த வரலாற்றை விவரித்த பிறகு, பேராசிரியர் கோமகன் வீராணம் ஏரி வெட்டப்பட்ட வரலாற்றை விவரித்தார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை நீண்டு காணப்படும் வீராணம் ஏரி, "முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்தன், தக்கோலப் போருக்குச் செல்லும் வழியில் வட காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தந்தை முதலாம் பராந்தக சோழனின் ஆணைக்கிணங்க இந்த ஏரியை அமைப்பதற்கு முடிவு செய்தார்."

பேராசிரியர் கோமகனின் கூற்றுப்படி, ராஷ்டிரகூடர்களின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கவே, தந்தை பராந்தக சோழனால் இந்தப் பகுதிக்கு இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

 
தக்கோலப் போரில் மரணம்
வீராணம் ஏரி
படக்குறிப்பு,வீரநாராயணன் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் பேராசிரியர் கோமகன்.

வரலாற்றை மேற்கொண்டு விவரித்த கோமகன், "ராஷ்டிரகூடர்கள் மீது போர் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அப்போது வீரர்களின் உடல் உழைப்பை மக்களின் பயன்பாட்டிற்குச் செலவிடத் திட்டமிட்ட ராஜாதித்தன், ஏரி ஒன்றை அமைக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார்."

"இதற்கிடையே தக்கோலப் போரும் தொடங்கியது. ஏரி அமைக்கப் பாதி வீரர்களை விட்டுவிட்டு மீதிப் படையுடன் போருக்குச் சென்ற ராஜாதித்தன் போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன."

யானை மீது அமர்ந்து போரிட்டு மடிந்த ராஜாதித்தன் 'யானை மேல் துஞ்சியத் தேவன்' என் அழைக்கப்படுவதாகவும் பின்னாளில் அவரது விருப்பப்படி தந்தை முதலாம் பராந்தக சோழனின் மற்றொரு பெயரான வீரநாராயணன் என்பது ஏரிக்கு சூட்டப்பட்டதாகவும்," என்று விவரித்தார் கோமகன்.

இந்தப் பெயர்தான் காலப்போக்கில் வீராணம் ஏரி என மருவியதாகவும் கூறுகிறார் பேராசிரியர் கோமகன்.

 
வறண்டு காணப்படும் ஏரி
வீராணம் ஏரி
படக்குறிப்பு,"முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் வீராணம் ஏரி வெட்டப்பட்டதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன," என்கிறார் பேராசிரியர் இரா.கோமகன்.

வரலாற்றை விவரித்தபடியே சென்ற பயணத்தின் இறுதியில், வீராணம் ஏரி இருக்கும் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு கண்ட காட்சிகள், வீராணம் ஏரியின் இன்றைய நிலையை விளக்கின.

ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் ஏரியின் இருகரைகளும் வறண்டு காணப்பட்டன. ஏரியின் மண் பாளம் பாளமாக வெடித்திருந்தது. ஏரியில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட படகுகள் ஏரியின் தரையில் கிடந்தன. தண்ணீரின்றி இறந்த சில மீன்களின் மிச்சங்களையும் அங்கு பார்க்க முடிந்தது.

`ராதா வாய்க்கால்` ரங்கநாயகி என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலரும், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான ரங்கநாயகி பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்துப் பேசினார்.

“வீராணம் ஏரி மழைக்காலத்திற்கு முன்பாக முறையாகத் தூர்வாரப்படவில்லை. அதனால்தான் தற்போது வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாகத் தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களின் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். ஏரியை முழுமையாகத் தூர்வாருவதால் அதிகமாக தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்,” என்றார்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக வீராணம் ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியிலிருந்து குழாய் மூலமாக சென்னை மாநகராட்சிக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகத் திகழ்கிறது.

மாவட்ட நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில், குடிநீர் தேவை மட்டுமின்றி, இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள 40,669 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்தச் சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்கள். இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடி. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடி.

ஏரியின் கிழக்குக் கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்குக் கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாயப் பாசனத்துக்கு நீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.

நீர்வளத்துறையின் தரவுகள்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றியுள்ளது.

 
'தூர்வார நடவடிக்கை வேண்டும்'
வீராணம் ஏரி
படக்குறிப்பு,ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார் வீரத்தமிழன்

ஏரி முழுமையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், அதை நம்பியிருக்கும் பலதரப்பு மக்களும் பாதிப்படுவதாகச் சொல்கின்றனர் பிபிசியிடம் பேசிய விவசாயச் சங்க நிர்வாகிகளான சுரேஷ் மற்றும் மாறன்.

“நீர்வளத்துறை மூலமாக வீராணம் ஏரியைத் தூர்வாரும் பணி இந்த ஆண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடந்தால் தண்ணீரின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்படாது,” என்றார் மாறன்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான வீரத்தமிழன், ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார்.

“விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், ஏரியைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர்.

 
விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம்
வீராணம் ஏரி

மேலும் தற்போது ஏரி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகக் கூறுகிறார் விவசாயியான வீரத்தமிழன்.

அதேபோல், மூன்று போகம் செயப்பட்டு வந்த விவசாயம் இரண்டு போகமாகக் குறைந்து, இப்போது ஒரு போகத்திற்கும் வழியில்லாமல் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்ததாகக் கூறும் வீரத்தமிழன், அதனால் தங்களுக்கு அதிக பலன் இல்லையென்றும் கூறினார். அதோடு, தற்போதைய அரசிடமும் மனு அளித்துவிட்டுப் பலன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

 
ரூ.270 கோடியில் தூர்வாரும் திட்டம்
வீராணம் ஏரி
படக்குறிப்பு,'ஏரியைத் தூர் வாருவதற்காக ரூபாய் 270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என்றார் காந்தரூபன்.

கொள்ளிடம் வடிநில கோட்டச் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) முனைவர் காந்தரூபன் பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்து விவரித்தார்.

"நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வீராணம் ஏரியைத் தூர்வார கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேத்தியாத்தோப்பு கரையிலிருந்து லால்பேட்டை கரை வரை ஒரு பகுதி மட்டும் தூர்வாரப்பட்ட நிலையில், வேறு சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன," என்றார்.

"ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் முடிக்கப்படாததால் ரூ.4 கோடி நிதி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தூர்வாரும் சூழல் உருவாகவில்லை. தண்ணீர் இருந்ததால் அப்பணியைச் செய்ய இயலவில்லை. தற்போது தூர்வாருவதற்காக ரூ.270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்று கூறினார் காந்தரூபன்.

"ஒவ்வோர் ஆண்டும் 3% அளவு வண்டல் மண் ஏரியில் படிகிறது. எனவே குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரினால் ஏரி நன்றாக இருக்கும். எனவே வண்டல் மண் எடுக்கும் பணிக்காகவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

 
விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை
வீராணம் ஏரி

பட மூலாதாரம்,ARUNTHAMBURAJ

படக்குறிப்பு,"அரசு விதி 50இன் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என அருண் தம்புராஜ் கூறினார்.

இந்த ஆண்டு வீராணம் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது தூர்வாருவதற்கு உகந்த நேரம் என்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.

இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியுள்ளதாகவும் அவர்களும் முன்மொழிவு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"விவசாயிகளின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன."

"அரசு விதி 50இன் கீழ் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cyrl4rmnpxro

வீராணம் ஏரி: வறண்டு விளையாட்டு மைதானமாக மாறிய பிரமாண்ட ஏரி - தூர்வாரக் கோரும் விவசாயிகள்

1 day 18 hours ago
படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காணப்படுவது ஏன்? 'வீர நாராயணப் பேரேரி' இந்த ஏரியின் வரலாற்றையும் அது தற்போது வறண்டு காணப்படுவதற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள, கடந்த வாரம் ஒரு காலைப் பொழுதில், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருந்து வீராணம் ஏரிக்கரையைச் சென்றடைந்தோம். அங்கு கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவரும் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் தொல்லியல் துறையின் வருகைதரு பேராசிரியருமான இரா.கோமகன் பிபிசி தமிழுடன் இணைந்து கொண்டார். வீராணம் ஏரியை நோக்கித் தொடங்கிய பயணத்தின் நடுவே அதுகுறித்த வரலாற்றுக் குறிப்புகளை நம்மிடம் அவர் விவரிக்கத் தொடங்கினார். "முதலாம் பராந்தக சோழன் காலத்தில் – அதாவது கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் - இந்த ஏரி அமைக்கப்படதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன." "சிதம்பரம் அருகே திருச்சின்னபுரம் என்ற ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் ரிஷப மண்டபக் கூரையில் உள்ள கல்வெட்டில் இந்த ஏரி பராந்தக ஏரி எனக் குறிப்பிட்டுள்ளது," என்கிறார் கோமகன். வீராணம் ஏரிக்கு, வீரநாராயணப் பேரேரி (பராந்தக சோழனுக்கு வீரநாராயணன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு) என்று குறிப்பிடும் செய்தி ஆவணம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு.ஆடுதுறை என்று அழைக்கப்படும் திருகுரங்காடுதுறை என்னும் ஊரில் உள்ளது. "இதற்கு ராஜேந்திர சோழப் பேராறு என்ற பெயரும் உள்ளதை கீழப்பழூர் ஆலந்துரையார் கோவில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டு மூலம் அறியலாம். இது கி‌.பி.1124ஆம் ஆண்டு விக்கிரம சோழன் காலத்திய கல்வெட்டாகும். கங்கைகொண்ட சோழபுரத்திலும் இந்த ஏரி தொடர்பான கல்வெட்டுகள் உள்ளன," என்று கோமகன் பிபிசி தமிழிடம் விளக்கினார். சோழ இளவரசன் ராஜாதித்தன் அமைத்த ஏரி படக்குறிப்பு,வீராணம் ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் (10 மாதங்களுக்கு முன்பு) ஏரியின் பெயர் குறித்த வரலாற்றை விவரித்த பிறகு, பேராசிரியர் கோமகன் வீராணம் ஏரி வெட்டப்பட்ட வரலாற்றை விவரித்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சேத்தியாதோப்பில் இருந்து காட்டுமன்னார்கோவில் வரை நீண்டு காணப்படும் வீராணம் ஏரி, "முதலாம் பராந்தக சோழனின் மகனான ராஜாதித்தன், தக்கோலப் போருக்குச் செல்லும் வழியில் வட காவிரி என அழைக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் தண்ணீர் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தந்தை முதலாம் பராந்தக சோழனின் ஆணைக்கிணங்க இந்த ஏரியை அமைப்பதற்கு முடிவு செய்தார்." பேராசிரியர் கோமகனின் கூற்றுப்படி, ராஷ்டிரகூடர்களின் தாக்குதல்களில் இருந்து நாட்டைக் காக்கவே, தந்தை பராந்தக சோழனால் இந்தப் பகுதிக்கு இளவரசர் ராஜாதித்தன் தலைமையில் படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தக்கோலப் போரில் மரணம் படக்குறிப்பு,வீரநாராயணன் ஏரி என்பதே காலப்போக்கில் மருவி வீராணம் ஏரி என அழைக்கப்படுவதாகக் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வரலாற்றை மேற்கொண்டு விவரித்த கோமகன், "ராஷ்டிரகூடர்கள் மீது போர் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. அப்போது வீரர்களின் உடல் உழைப்பை மக்களின் பயன்பாட்டிற்குச் செலவிடத் திட்டமிட்ட ராஜாதித்தன், ஏரி ஒன்றை அமைக்க வீரர்களுக்கு உத்தரவிட்டார்." "இதற்கிடையே தக்கோலப் போரும் தொடங்கியது. ஏரி அமைக்கப் பாதி வீரர்களை விட்டுவிட்டு மீதிப் படையுடன் போருக்குச் சென்ற ராஜாதித்தன் போரில் கொல்லப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன." யானை மீது அமர்ந்து போரிட்டு மடிந்த ராஜாதித்தன் 'யானை மேல் துஞ்சியத் தேவன்' என் அழைக்கப்படுவதாகவும் பின்னாளில் அவரது விருப்பப்படி தந்தை முதலாம் பராந்தக சோழனின் மற்றொரு பெயரான வீரநாராயணன் என்பது ஏரிக்கு சூட்டப்பட்டதாகவும்," என்று விவரித்தார் கோமகன். இந்தப் பெயர்தான் காலப்போக்கில் வீராணம் ஏரி என மருவியதாகவும் கூறுகிறார் பேராசிரியர் கோமகன். வறண்டு காணப்படும் ஏரி படக்குறிப்பு,"முதலாம் பராந்தக சோழன் காலத்தில் கி.பி. 910 முதல் 950க்கும் இடைப்பட்ட காலத்தில் வீராணம் ஏரி வெட்டப்பட்டதைப் பல்வேறு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன," என்கிறார் பேராசிரியர் இரா.கோமகன். வரலாற்றை விவரித்தபடியே சென்ற பயணத்தின் இறுதியில், வீராணம் ஏரி இருக்கும் பகுதியைச் சென்றடைந்தோம். அங்கு கண்ட காட்சிகள், வீராணம் ஏரியின் இன்றைய நிலையை விளக்கின. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் ஏரியின் இருகரைகளும் வறண்டு காணப்பட்டன. ஏரியின் மண் பாளம் பாளமாக வெடித்திருந்தது. ஏரியில் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட படகுகள் ஏரியின் தரையில் கிடந்தன. தண்ணீரின்றி இறந்த சில மீன்களின் மிச்சங்களையும் அங்கு பார்க்க முடிந்தது. `ராதா வாய்க்கால்` ரங்கநாயகி என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலரும், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரான ரங்கநாயகி பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்துப் பேசினார். “வீராணம் ஏரி மழைக்காலத்திற்கு முன்பாக முறையாகத் தூர்வாரப்படவில்லை. அதனால்தான் தற்போது வறண்டுள்ளது. இந்த நேரத்தில் ஏரியை முழுமையாகத் தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களின் ஷட்டர்களை சீரமைக்க வேண்டும். ஏரியை முழுமையாகத் தூர்வாருவதால் அதிகமாக தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும்,” என்றார். கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக வீராணம் ஏரி உள்ளது. மேலும் இந்த ஏரியிலிருந்து குழாய் மூலமாக சென்னை மாநகராட்சிக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதாரங்களில் வீராணம் ஏரியும் ஒன்றாகத் திகழ்கிறது. மாவட்ட நிர்வாகத் தரவுகளின் அடிப்படையில், குடிநீர் தேவை மட்டுமின்றி, இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுமட்டுமின்றி சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஆகிய பகுதிகளில் உள்ள 40,669 ஏக்கர் விளைநிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்தச் சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் அதிகபட்ச அகலம் 5.6 கி.மீ. இந்த ஏரியின் பரப்பளவு 15 சதுர மைல்கள். இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடி. ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 1,465 மில்லியன் (1.465 டி.எம்.சி) கன அடி. ஏரியின் கிழக்குக் கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்குக் கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாயப் பாசனத்துக்கு நீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 500க்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். நீர்வளத்துறையின் தரவுகள்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வீராணம் ஏரியில் 712 மில்லியன் கனஅடி நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு வீராணம் ஏரி முற்றிலுமாக வற்றியுள்ளது. 'தூர்வார நடவடிக்கை வேண்டும்' படக்குறிப்பு,ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார் வீரத்தமிழன் ஏரி முழுமையாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால், அதை நம்பியிருக்கும் பலதரப்பு மக்களும் பாதிப்படுவதாகச் சொல்கின்றனர் பிபிசியிடம் பேசிய விவசாயச் சங்க நிர்வாகிகளான சுரேஷ் மற்றும் மாறன். “நீர்வளத்துறை மூலமாக வீராணம் ஏரியைத் தூர்வாரும் பணி இந்த ஆண்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி நடந்தால் தண்ணீரின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்படாது,” என்றார் மாறன். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான வீரத்தமிழன், ஆண்டுதோறும் வீராணம் ஏரியில் இருக்கும் நீர் இருப்பு குறைவதால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறுகிறார். “விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி விவசாயிகள் செல்லாமல் இருக்கும் வகையில், ஏரியைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் அவர். விளையாட்டு மைதானமாக மாறிய வீராணம் மேலும் தற்போது ஏரி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டதாகக் கூறுகிறார் விவசாயியான வீரத்தமிழன். அதேபோல், மூன்று போகம் செயப்பட்டு வந்த விவசாயம் இரண்டு போகமாகக் குறைந்து, இப்போது ஒரு போகத்திற்கும் வழியில்லாமல் நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவித்ததாகக் கூறும் வீரத்தமிழன், அதனால் தங்களுக்கு அதிக பலன் இல்லையென்றும் கூறினார். அதோடு, தற்போதைய அரசிடமும் மனு அளித்துவிட்டுப் பலன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார். ரூ.270 கோடியில் தூர்வாரும் திட்டம் படக்குறிப்பு,'ஏரியைத் தூர் வாருவதற்காக ரூபாய் 270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது' என்றார் காந்தரூபன். கொள்ளிடம் வடிநில கோட்டச் செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) முனைவர் காந்தரூபன் பிபிசி தமிழிடம் வீராணம் ஏரியின் நிலை குறித்து விவரித்தார். "நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வீராணம் ஏரியைத் தூர்வார கடந்த 2018-19ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சேத்தியாத்தோப்பு கரையிலிருந்து லால்பேட்டை கரை வரை ஒரு பகுதி மட்டும் தூர்வாரப்பட்ட நிலையில், வேறு சில பணிகள் முடிக்கப்படாமல் இருந்தன," என்றார். "ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் முடிக்கப்படாததால் ரூ.4 கோடி நிதி மீண்டும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு தூர்வாரும் சூழல் உருவாகவில்லை. தண்ணீர் இருந்ததால் அப்பணியைச் செய்ய இயலவில்லை. தற்போது தூர்வாருவதற்காக ரூ.270 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்று கூறினார் காந்தரூபன். "ஒவ்வோர் ஆண்டும் 3% அளவு வண்டல் மண் ஏரியில் படிகிறது. எனவே குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூர்வாரினால் ஏரி நன்றாக இருக்கும். எனவே வண்டல் மண் எடுக்கும் பணிக்காகவும் அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது," என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை பட மூலாதாரம்,ARUNTHAMBURAJ படக்குறிப்பு,"அரசு விதி 50இன் கீழ் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது" என அருண் தம்புராஜ் கூறினார். இந்த ஆண்டு வீராணம் ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது தூர்வாருவதற்கு உகந்த நேரம் என்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ். இதுகுறித்துப் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசியுள்ளதாகவும் அவர்களும் முன்மொழிவு தயாரித்து வழங்கியுள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "விவசாயிகளின் கோரிக்கையை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." "அரசு விதி 50இன் கீழ் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயனடையும் வகையில் இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்," என்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cyrl4rmnpxro

காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே

1 day 18 hours ago
காலம் கோருவது வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே May 16, 2024 — கருணாகரன் — “முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப் பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. பெண் பொலிசார் அங்கே சென்றபோதும் ஆண் பொலிசாரே பெண்களைக் கைகளில் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். இந்த நடவடிக்கையைத் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்களவர்கள் என நாட்டிலுள்ள அனைவரும் வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும். மட்டுமல்ல, மனித உரிமைவாதிகள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கூடிய அக்கறையைக் கொண்டு செயற்படுவது அவசியம். இந்த நாட்டிலே நீதியும் அமைதியும் முன்னேற்றமும் கிட்ட வேண்டும் என்போர் அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும். ஏனென்றால், பொலிஸ் அராஜகத்தை எந்த நிலையிலும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொலிஸ் அராஜகம் வளர்ந்தால், அது தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பார்க்காது. எல்லோரிலும் தயக்கமின்றிக் கை வைக்கும். கஞ்சி கொடுக்கும் அரசியலைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். முள்ளிவாய்க்காலில் இறுதி வரையிலிருந்து உயிர் தப்பி வந்தவர்களில் ஒருவரான லதா கந்தையா இந்த அரசியலைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் பார்வையையும் சொல்கிறார். “முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தேங்காய்களுமில்லை. தேங்காய்ச்சிரட்டைகளும் இல்லை. இதற்கென தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும் சாமிகளும் ஆசாமிகளும் அடக்கம். ஒரு போராட்டத்தின் முடிவு சிரட்டை ஏந்த வைத்ததென்பதை வெளிப்படுத்துவதும், இறந்தவர்களின் அர்ப்பணிப்பை இழிவுபடுத்துவதுமான குறியீடு இது” என்று. இதை ஒத்ததாக இன்னொருவரான அன்பழகி சொல்கிறார், “நானும் மனம் வருந்தினேன். சிலர் சிரட்டையை அடையாளப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தலைவர் (பிரபாகரன்) கடைசியாக சிரட்டையேந்த வைத்தார் என நாசூக்காக பரப்பி இறந்தோரை, உயிர்த்தியாகங்களை இழிவுநடுத்துகிறார்கள்”என. இறுதிப் போர்க்காலத்தில் அங்கேயிருந்து மீண்டவர்களில் ஒருவராக நானும் சொல்வேன், “முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிலைப்பாடும் வேறு. கஞ்சி வழங்குவதாலோ கஞ்சி குடிப்பதாலோ உள ஆற்றுப்படுத்தல் நிகழ்கிறது எனவும் நான் கருதவில்லை. அதை ஒருசிலர் முன்னெடுத்து, இன்று பலரும் பின்பற்றுகிறார்கள். ஆகவே அது அந்த நெருக்கடி நாட்களை நினைவு கொள்வதற்கான சமூக நிகழ்வாக உள்ளது. அந்த நெருக்கடி, அதன் பின்னணி பற்றிய பல பார்வைகள் உண்டென்பதையும் அறிவேன். ஆனாலும் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட நெருக்கடி, வன்முறை, அழிவு என்பது மறுக்கப்பட முடியாது. ஆகவே அந்த மக்கள் அதை நினைவிற் கொள்ளவே முயற்சிப்பர். அந்தக் கொடிய நினைவுகளைக் கடந்து செல்வதற்கு இலங்கைத் தீவின் ஆட்சிமுறையும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. உண்மையான ஆற்றுப்படுத்தலை தீர்வின் மூலம் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அதுவரையிலும் கொந்தளிக்கும் மனநிலையுடைய மக்கள் இப்படித்தான் தங்கள் நினைவுகளை மீட்டுக் கொண்டிருப்பர். அதை பிற சக்திகள் வாய்ப்பாகக் கையாண்டு கொண்டேயிருக்கும்”. முள்ளிவாய்க்கால் கஞ்சியை முன்னெடுப்போரோ “இதொரு நினைவு கூரல் செயற்பாடு”என்கிறார்கள். அதனைத் தடுக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம். அது ஒரு போராட்ட வழிமுறையாகவோ போராட்டத்துக்கான ஒரு அடையாளமாகவே இருக்கலாம். அதை போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகமே தீர்மானிப்பது. இப்படிப் பல்வேறு பார்வைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். அது வேறு விடயம். இதை அரசியல் ரீதியாகவே அரசாங்கம் அணுக வேண்டும். நினைவு கூரலுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே கடந்த ஆண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துமிருந்தார். அடிப்படையில் இதொரு அரசியற் செயற்பாடு என்றே முன்னெடுக்கப்படுகிறது. இப்பொழுது காட்சி மாறியுள்ளதா? சரி இது குற்றம்தான் என்றாலும் அதைச் சட்டரீதியாக – முறைப்படிதானே அரசாங்கம் அணுக வேண்டும். இப்படி வெறித்தனமாக இல்லையே! எப்பொழுதும் தனக்கு வெளியே உள்ள எத்தகைய அரசியற் செயற்பாட்டையும் அரசு அரசியற் கண்கொண்டு பார்ப்பதை விட சட்டத்தின் துணைகொண்டு அடக்க முயற்சிப்பதே அதனுடைய இயல்பு. அதிகாரத் தரப்பின் வழமை இது. அதனால் அது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. அதற்குப் பொலிஸையும் படையையும் பயன்படுத்துகிறது. போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுண்டு. பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என பின்னர் அவர்களும் உறவினர்களும் அலைவார்கள். தலைவர்களும் ஆலாசகர்களும் ஊடக முதலாளிகளும் அவற்றை அரசியலாக்கிக் கொள்வர். இது ஒரு வகையில் அயோக்கியத்தனம். பிற நாடுகளில் தலைவர்களும் கருத்துருவாக்கிகளுமே முதலில் களத்தில் நிற்பர். அவர்களே முன்னணிப்படையாகச் செயற்படுவர். இங்கோ தலைவர்களும் ஆலோசகர்களும் கருத்துருவாக்கிகளும் பாதுகாப்பு வலயங்களில் (Safty Zoon) சௌகரியமாக இருந்து விடுகிறார்கள். ஒடுக்குமுறை அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் செயற்படும். இதொன்றும் புதியதல்ல. இன்னும் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லாத அரசும் ஆட்சியும்தான் நடைமுறையில் உள்ளது. ஆகவே, ஒரு போராட்டத்தை அல்லது போராட்ட வடிவமொன்றைத் திட்டமிடும்போது, அதை நிச்சயமாக அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எதிர்க்கும். முறியடிக்க முயற்சிக்கும். ஒடுக்கும். இதெல்லாம் வன்முறையினாலேயே மேற்கொள்ளப்படும் என்ற புரிதலும் முன் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும். இதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது என்ற அனுபவமும் அறிவும் நமக்கு உண்டல்லவா! அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், அதாவது அரசு இப்படி நடக்க முற்படாமல் இருக்க வேண்டுமானால் இவ்வாறான அடாவடி, அத்துமீறல், முறையின்மைகளுக்கு எதிராகப் பல ஆயிரக்கணக்கான மக்களாக நாம் திரண்டு நிர்வாக முடக்கம், பொலிசுக்கு எதிராக போராடுவதாக இருக்க வேண்டும். அதுவே அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். ஆகவே இதை எப்படி எதிர்கொள்வது, முறியடிப்பது என்று முன்திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். அதாவது திட்டம் 1, திட்டம் 2, திட்டம் 3 என தொடர் போராட்டத்துக்கான திட்டமிடலாக. இன்னும் இதை தெளிவாக விளக்க வேண்டுமென்றால், கஞ்சி கொடுக்கும்போது படைகள் எதிர்த்தால் அல்லது தடுத்தால் அல்லது கைது செய்தால், அடுத்த கட்டமாக என்ன செய்வது? அதை ஒரு பெருமெடுப்பிலான மக்கள் எதிர்பாக வளர்த்தெடுப்பது எவ்வாறு? அதில் எல்லோரையும் எப்படிப் பங்கெடுக்க வைப்பது? தாம் அதில் எப்படி இணைந்திருப்பது என்றெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். அப்படியில்லாமல்தான் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் “பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல் போய் விடுகிறது. இதற்குக் காரணம், போராட்டங்களுக்கு ஐடியா கொடுக்கின்ற ஐயாமணிகளுக்கு அதன் தாற்பரியம் தெரியாது. அவர்கள், இராணுவத்தையோ பொலிசையோ, சிறைச்சாலையையோ, ஏன் போராட்டக்களங்களையோ வாழ்நாளில் கண்டதும் இல்லை. எதிர்கொண்டதும் இல்லை. அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசாங்கத்தையும் படைகளையும் சீண்டுவது மட்டும்தான். அதிலே தங்களுக்கான உயிர்ச் சூட்டைத் தக்க வைத்துக் கொள்வது. அவ்வளவுதான். கைது செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தங்களுடைய குடும்ப விடயங்களை மிகக் கச்சிதமாகக் கவனித்துக் கொள்வார்கள். பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புகளுக்குக் கொண்டு செல்வார்கள். வலு சந்தோசமாகப் பிறந்த நாள் கொண்டாட்டங்களைச் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களைப் பார்ப்பார்கள். வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துவார்கள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்…. இதையெல்லாம் செய்து கொண்டே மாலையில் அல்லது முன்னிரவில் அல்லது விடுமுறை தினங்களில் (தங்களுடைய வருமானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி நிரலும் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேர) அரசியலைச் செய்வார்கள். அந்த அரசியல் கூட மக்களுக்கானதாக இருக்காது. பிறத்தியாரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இருக்கும். சில தூதரகங்களின் நிகழ்ச்சி நிரல், அதற்கான அனுசரணை, நிதியூட்டம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டே இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதாவது சொந்த மக்களை பிறத்தியாருக்காகப் பலி கொடுக்கிறார்கள். இதொன்றும் ஊகநிலைத் தகவல்களில்லை. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற வலிமையான கருத்துகள். தாங்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் இறங்காமல், முன்னிற்காமல் பிறரைத் தூண்டி விடுவதன் மூலம் இதெல்லாம் நிகழ்த்தப்படுகிறது. என்பதாலேயே தமிழ்ச்சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவரப் பலவீனப்பட்டு, தமிழ்த்தேசிய அரசியலே வங்குரோத்தான நிலைக்கு வந்திருக்கிறது. போராட்டத்துக்கு தூண்டுகின்றவர்கள், ஆலோசனைகளை வழங்குவோர் அவற்றுடன் கூட நிற்க வேண்டும். அதற்கு விழுகின்ற ஒவ்வொரு அடிடையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் போராட்டங்களும் அந்த அரசியலும் பலமாகுமும். திருகோணமலையில் நடைபெற்ற கைதுகளுக்கு அறிக்கை விடுவது, ஆவேசமாகப் பேசுவதற்கு அப்பால், இந்தப் பெண்களை விடுவிக்கச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீட்டெடுக்க வேண்டும். அப்படி எடுப்பதோடு, பொலிசின் அராஜகத்துக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தை நடத்த வேண்டும். இந்தக் கைதுக் காணொலியையே இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் (சிங்களர், முஸ்லிம்கள், தமிழர்கள், மலையக மக்கள்) பகிர்ந்து ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு அரச வன்முறை என்பதை உணர வைக்க முடியும். அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஜனநாயகச் சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், அவ்வாறான அமைப்புகளுக்கு பகிர்ந்து, அவர்களுடன் இது தொடர்பாக உரையாடி ஒரு தூண்டலையும் அழுத்தத்தையும் கொடுக்கலாம். பல்லாயிரக்கணக்கான மக்களாகத் திரண்டு பொலிஸ் நிலையங்கள், அரச பணிமனைகள் போன்றவற்றை அமைதி வழியில் முற்றுகையிட்டிருக்கலாம். தொடர் மக்கள் போராட்டமாக அதை விரித்திருக்க முடியும். இதற்கு திட்டமிடலும் கடுமையான உழைப்பும் களத்தில் நிற்கக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வும் தேவை. அதற்கு யார் தயார்? கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களும்(?) இப்படித்தான் தொடங்கப்பட்டது. இப்படித்தான் சூம்பிப் போனது. நாளை சூம்பிப்போன…போராட்டங்களாகவும் சூம்பிப்போன தமிழ்த்தேசியமாகவும்தான் எல்லாம் இருக்கும். https://arangamnews.com/?p=10751

காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே

1 day 18 hours ago

காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே
காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை  அல்ல, களப்பணியாளர்களையே

— கருணாகரன் —

“முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப்  பொலிஸார்  கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம். 

இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. பெண் பொலிசார் அங்கே சென்றபோதும் ஆண் பொலிசாரே பெண்களைக் கைகளில் பிடித்து இழுத்துச் செல்கின்றனர். 

இந்த நடவடிக்கையைத் தமிழர்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள், மலையக மக்கள், சிங்களவர்கள் என நாட்டிலுள்ள அனைவரும் வேறுபாடின்றிக் கண்டிக்க வேண்டும். மட்டுமல்ல, மனித உரிமைவாதிகள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இந்த விடயத்தில் கூடிய அக்கறையைக் கொண்டு செயற்படுவது அவசியம். இந்த நாட்டிலே நீதியும் அமைதியும் முன்னேற்றமும் கிட்ட வேண்டும் என்போர் அனைவரும் இதற்கு எதிராகப் போராட வேண்டும்.

ஏனென்றால், பொலிஸ் அராஜகத்தை எந்த நிலையிலும் யாரும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொலிஸ் அராஜகம் வளர்ந்தால், அது தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் என்றெல்லாம் பார்க்காது. எல்லோரிலும் தயக்கமின்றிக் கை வைக்கும்.

கஞ்சி கொடுக்கும் அரசியலைப் பற்றி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். முள்ளிவாய்க்காலில் இறுதி வரையிலிருந்து உயிர் தப்பி வந்தவர்களில் ஒருவரான லதா கந்தையா இந்த அரசியலைப் பற்றிய தன்னுடைய அனுபவத்தையும் பார்வையையும் சொல்கிறார். “முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தேங்காய்களுமில்லை. தேங்காய்ச்சிரட்டைகளும் இல்லை. இதற்கென தயார்படுத்தப்பட்ட அரசியல்வாதிகளும் சாமிகளும் ஆசாமிகளும் அடக்கம். ஒரு போராட்டத்தின் முடிவு சிரட்டை ஏந்த வைத்ததென்பதை வெளிப்படுத்துவதும், இறந்தவர்களின் அர்ப்பணிப்பை இழிவுபடுத்துவதுமான குறியீடு இது” என்று. 

இதை ஒத்ததாக இன்னொருவரான அன்பழகி சொல்கிறார், “நானும் மனம் வருந்தினேன். சிலர் சிரட்டையை அடையாளப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர். தலைவர் (பிரபாகரன்) கடைசியாக சிரட்டையேந்த வைத்தார் என நாசூக்காக பரப்பி இறந்தோரை,  உயிர்த்தியாகங்களை இழிவுநடுத்துகிறார்கள்”என. 

 இறுதிப் போர்க்காலத்தில் அங்கேயிருந்து மீண்டவர்களில் ஒருவராக நானும் சொல்வேன், “முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய என்னுடைய பார்வையும் நிலைப்பாடும் வேறு. கஞ்சி வழங்குவதாலோ கஞ்சி குடிப்பதாலோ உள ஆற்றுப்படுத்தல் நிகழ்கிறது எனவும் நான் கருதவில்லை. அதை ஒருசிலர் முன்னெடுத்து, இன்று பலரும் பின்பற்றுகிறார்கள். ஆகவே அது அந்த நெருக்கடி நாட்களை நினைவு கொள்வதற்கான சமூக நிகழ்வாக உள்ளது. அந்த நெருக்கடி, அதன் பின்னணி பற்றிய பல பார்வைகள் உண்டென்பதையும் அறிவேன். ஆனாலும் மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட நெருக்கடி, வன்முறை, அழிவு என்பது மறுக்கப்பட முடியாது. ஆகவே அந்த மக்கள் அதை நினைவிற் கொள்ளவே முயற்சிப்பர். அந்தக் கொடிய நினைவுகளைக் கடந்து செல்வதற்கு இலங்கைத் தீவின் ஆட்சிமுறையும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை. உண்மையான ஆற்றுப்படுத்தலை தீர்வின் மூலம் அரசாங்கம் செய்திருக்க வேண்டும். அதுவரையிலும்  கொந்தளிக்கும் மனநிலையுடைய  மக்கள் இப்படித்தான் தங்கள் நினைவுகளை மீட்டுக் கொண்டிருப்பர். அதை பிற சக்திகள் வாய்ப்பாகக் கையாண்டு கொண்டேயிருக்கும்”.  

முள்ளிவாய்க்கால் கஞ்சியை முன்னெடுப்போரோ “இதொரு நினைவு கூரல் செயற்பாடு”என்கிறார்கள். அதனைத் தடுக்க முடியாது என்பது அவர்களுடைய வாதம். 

அது ஒரு போராட்ட வழிமுறையாகவோ போராட்டத்துக்கான ஒரு அடையாளமாகவே இருக்கலாம். அதை போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகமே தீர்மானிப்பது.

இப்படிப் பல்வேறு பார்வைகள் ஒவ்வொருவருக்கும் இருக்கும்.  அது வேறு விடயம்.

இதை அரசியல் ரீதியாகவே அரசாங்கம் அணுக வேண்டும். நினைவு கூரலுக்கு எந்தத் தடையும் இல்லை என்றே கடந்த ஆண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துமிருந்தார். அடிப்படையில் இதொரு அரசியற் செயற்பாடு என்றே முன்னெடுக்கப்படுகிறது. 

இப்பொழுது காட்சி மாறியுள்ளதா? சரி இது குற்றம்தான் என்றாலும் அதைச் சட்டரீதியாக – முறைப்படிதானே அரசாங்கம் அணுக வேண்டும். இப்படி வெறித்தனமாக இல்லையே!

எப்பொழுதும் தனக்கு வெளியே உள்ள எத்தகைய அரசியற் செயற்பாட்டையும் அரசு அரசியற் கண்கொண்டு பார்ப்பதை விட சட்டத்தின் துணைகொண்டு அடக்க முயற்சிப்பதே அதனுடைய இயல்பு.  அதிகாரத் தரப்பின் வழமை இது. அதனால் அது அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. அதற்குப் பொலிஸையும் படையையும் பயன்படுத்துகிறது. 

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் கைது செய்யப்படுவதுண்டு. பொலிஸ் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை என பின்னர் அவர்களும் உறவினர்களும் அலைவார்கள். தலைவர்களும் ஆலாசகர்களும் ஊடக முதலாளிகளும் அவற்றை அரசியலாக்கிக் கொள்வர். இது ஒரு வகையில் அயோக்கியத்தனம். பிற நாடுகளில் தலைவர்களும் கருத்துருவாக்கிகளுமே முதலில் களத்தில் நிற்பர். அவர்களே முன்னணிப்படையாகச் செயற்படுவர்.

இங்கோ தலைவர்களும் ஆலோசகர்களும் கருத்துருவாக்கிகளும் பாதுகாப்பு வலயங்களில் (Safty Zoon) சௌகரியமாக இருந்து விடுகிறார்கள். 

ஒடுக்குமுறை அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எப்போதும் மக்களுக்கு எதிராகத்தான் செயற்படும். இதொன்றும் புதியதல்ல. இன்னும் உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளத் தயாரில்லாத அரசும் ஆட்சியும்தான் நடைமுறையில் உள்ளது. 

ஆகவே, ஒரு போராட்டத்தை அல்லது போராட்ட வடிவமொன்றைத் திட்டமிடும்போது, அதை நிச்சயமாக அரசும் அதனுடைய படைக்கட்டமைப்பும் எதிர்க்கும். முறியடிக்க முயற்சிக்கும். ஒடுக்கும். இதெல்லாம் வன்முறையினாலேயே மேற்கொள்ளப்படும் என்ற புரிதலும் முன் எச்சரிக்கையும் நமக்கு வேண்டும்.

இதுதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது என்ற அனுபவமும் அறிவும் நமக்கு உண்டல்லவா!

அப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், அதாவது அரசு இப்படி நடக்க முற்படாமல் இருக்க வேண்டுமானால் இவ்வாறான அடாவடி, அத்துமீறல், முறையின்மைகளுக்கு எதிராகப் பல ஆயிரக்கணக்கான மக்களாக நாம் திரண்டு நிர்வாக முடக்கம், பொலிசுக்கு எதிராக போராடுவதாக இருக்க வேண்டும். அதுவே அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்கும்.

ஆகவே இதை எப்படி எதிர்கொள்வது, முறியடிப்பது என்று முன்திட்டமிடல் இருந்திருக்க வேண்டும். அதாவது திட்டம் 1, திட்டம் 2, திட்டம் 3 என தொடர் போராட்டத்துக்கான திட்டமிடலாக.  

இன்னும் இதை தெளிவாக விளக்க வேண்டுமென்றால், கஞ்சி கொடுக்கும்போது படைகள் எதிர்த்தால் அல்லது தடுத்தால் அல்லது கைது செய்தால், அடுத்த கட்டமாக என்ன செய்வது? அதை ஒரு பெருமெடுப்பிலான மக்கள் எதிர்பாக வளர்த்தெடுப்பது எவ்வாறு? அதில் எல்லோரையும் எப்படிப் பங்கெடுக்க வைப்பது? தாம் அதில் எப்படி இணைந்திருப்பது என்றெல்லாம் தெளிவாகத் திட்டமிட்டிருக்க வேண்டும்.

அப்படியில்லாமல்தான் பல போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதனால் “பலிக்கடா”க்களாவது மெய்யான உணர்வோடு போராட்டக்களத்தில் குதிக்கின்ற மக்கள் அல்லது மாணவர்களாக இருக்கின்றனர். அவர்களுடைய குடும்பங்களே பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் பின்னர் பலருக்கு தெரியாமல்  போய் விடுகிறது. 

இதற்குக் காரணம், போராட்டங்களுக்கு ஐடியா கொடுக்கின்ற ஐயாமணிகளுக்கு அதன் தாற்பரியம் தெரியாது.

அவர்கள், இராணுவத்தையோ பொலிசையோ, சிறைச்சாலையையோ, ஏன் போராட்டக்களங்களையோ வாழ்நாளில் கண்டதும் இல்லை. எதிர்கொண்டதும் இல்லை. 

அவர்களுடைய நோக்கமெல்லாம் அரசாங்கத்தையும் படைகளையும் சீண்டுவது மட்டும்தான். அதிலே தங்களுக்கான உயிர்ச் சூட்டைத் தக்க வைத்துக் கொள்வது. அவ்வளவுதான். 

கைது செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்கள் தங்களுடைய குடும்ப விடயங்களை மிகக் கச்சிதமாகக் கவனித்துக் கொள்வார்கள். பாதுகாப்பான எதிர்காலத்தை நோக்கிச் செயற்பட்டுக் கொண்டிருப்பார்கள். பிள்ளைகளைப் பிரத்தியேக வகுப்புகளுக்குக் கொண்டு செல்வார்கள். வலு சந்தோசமாகப் பிறந்த நாள் கொண்டாட்டங்களைச் செய்வார்கள். தொலைக்காட்சிகளில் தொடர் நாடகங்களைப் பார்ப்பார்கள். வகுப்புகளைத் தொடர்ச்சியாக நடத்துவார்கள். வருமானத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்….

இதையெல்லாம்  செய்து கொண்டே மாலையில் அல்லது முன்னிரவில் அல்லது விடுமுறை தினங்களில் (தங்களுடைய வருமானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சி நிரலும் கெட்டுவிடாமல் பார்த்துக் கொண்டு, ஓய்வு நேர) அரசியலைச் செய்வார்கள். 

அந்த அரசியல் கூட மக்களுக்கானதாக இருக்காது. பிறத்தியாரைத் திருப்திப்படுத்துவதற்காகவே இருக்கும். சில தூதரகங்களின் நிகழ்ச்சி நிரல், அதற்கான அனுசரணை, நிதியூட்டம் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டே இந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். அதாவது சொந்த மக்களை பிறத்தியாருக்காகப் பலி கொடுக்கிறார்கள். 

இதொன்றும் ஊகநிலைத் தகவல்களில்லை. சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற வலிமையான கருத்துகள். 

தாங்கள் நேரடியாக எந்தப் போராட்டத்திலும் இறங்காமல், முன்னிற்காமல் பிறரைத் தூண்டி விடுவதன் மூலம் இதெல்லாம் நிகழ்த்தப்படுகிறது. 

என்பதாலேயே தமிழ்ச்சமூகத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கைகள் வரவரப் பலவீனப்பட்டு, தமிழ்த்தேசிய அரசியலே வங்குரோத்தான நிலைக்கு வந்திருக்கிறது. 

போராட்டத்துக்கு தூண்டுகின்றவர்கள், ஆலோசனைகளை வழங்குவோர் அவற்றுடன் கூட நிற்க வேண்டும். அதற்கு விழுகின்ற ஒவ்வொரு அடிடையும் தாங்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் போராட்டங்களும் அந்த அரசியலும் பலமாகுமும்.

திருகோணமலையில் நடைபெற்ற கைதுகளுக்கு அறிக்கை விடுவது, ஆவேசமாகப் பேசுவதற்கு அப்பால், இந்தப் பெண்களை விடுவிக்கச் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை மீட்டெடுக்க வேண்டும். அப்படி எடுப்பதோடு, பொலிசின் அராஜகத்துக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தை நடத்த வேண்டும். 

இந்தக் கைதுக் காணொலியையே இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் (சிங்களர், முஸ்லிம்கள், தமிழர்கள், மலையக மக்கள்) பகிர்ந்து ஜனநாயக உரிமைக்கு எதிரான ஒரு அரச வன்முறை என்பதை உணர வைக்க முடியும். அத்துடன் நாடு முழுவதிலும் உள்ள ஜனநாயகச் சக்திகள், மனித உரிமை ஆர்வலர்கள், அவ்வாறான அமைப்புகளுக்கு பகிர்ந்து, அவர்களுடன் இது தொடர்பாக உரையாடி ஒரு தூண்டலையும் அழுத்தத்தையும் கொடுக்கலாம்.

பல்லாயிரக்கணக்கான மக்களாகத் திரண்டு பொலிஸ் நிலையங்கள், அரச பணிமனைகள் போன்றவற்றை அமைதி வழியில் முற்றுகையிட்டிருக்கலாம். தொடர் மக்கள் போராட்டமாக அதை விரித்திருக்க முடியும். 

இதற்கு திட்டமிடலும் கடுமையான உழைப்பும் களத்தில் நிற்கக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வும் தேவை.

அதற்கு யார் தயார்?

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல போராட்டங்களும்(?) இப்படித்தான் தொடங்கப்பட்டது. இப்படித்தான் சூம்பிப் போனது. 

நாளை சூம்பிப்போன…போராட்டங்களாகவும்  சூம்பிப்போன தமிழ்த்தேசியமாகவும்தான் எல்லாம் இருக்கும்.

 

https://arangamnews.com/?p=10751

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – ஆஷு மாரசிங்க

1 day 18 hours ago
மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதனால் சட்டமூத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன. அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது. என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்காக இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது. இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரையும் நன்மை கிடைக்கிறது. அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது என்றார். https://thinakkural.lk/article/301844

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை – ஆஷு மாரசிங்க

1 day 18 hours ago

மாணவர்களுக்கு நன்மை பயக்கும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்துக்கு அடுத்த வாரம் சமர்ப்பிக்க இருக்கும் பொருளாதார மேம்பாட்டு சட்டமூலம் ஊடாக மக்களுக்கு பல பொருளாதார சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

அதனால் சட்டமூத்துக்கு அனைவரும் ஆதரவளித்து மக்களுக்கு பொருளாதார சலுகைகளை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும். இந்த சட்டமூலம் அனுமதிக்கப்பட்டதும் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் இதன் மூலம் இரத்தாகின்றன.

அதேநேரம் மாணவர்களின் நலன் கருதி 2017ஆம் ஆண்டு எமது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த சுரக்ஷா காப்புறுதி 2022 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது.

என்றாலும் குறித்த சட்டமூலம் ஊடாக மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை ஆரம்பிக்க இருக்கிறோம். பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை கட்டியெழுப்புவதற்காக இது பெரிதும் உதவியாக இருந்து வந்துள்ளது.

இந்த காப்புறுதியின் கீழ் அரச அல்லது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக 3இலட்சம் ரூபாவரையும் வெளிக்கள சிகிச்சைக்காக 20ஆயிரம் ரூபா வரையும் மோசமான நோய் நிலைமைகளுக்காக 15இலட்சம் ரூபா வரையும் நன்மை கிடைக்கிறது.

அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், பிரிவெனா மற்றும் விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்காக இந்த சுரக்ஷா காப்புறுதி உரித்தாகிறது என்றார்.

https://thinakkural.lk/article/301844

புலிகளும் எலிகளும்

1 day 18 hours ago
புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலாம்). தேர்தல் அரசியலையே தமது வழிமுறையாகவும் வாழ்முறையாகவும் கொண்ட தரப்புகள் இதில் ஈடுபடுவது வேறு. விடுதலைக்கான அரசியலில் ஈடுபட்ட, இரத்தம் சிந்திய போராட்ட வழிமுறையில் வந்தவர்கள் ஈடுபடுவது வேறு. முதலாவது தரப்பினர் காலாகாலமாகத் தமிழ் வாக்காளர்களைக் கவரும் தந்திரோபயங்களில் கைதேர்ந்தவர்கள். அதற்கேற்றவாறு அவர்கள் அவ்வப்போது எடுபடக் கூடிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளைச் செய்வார்கள். பிரகடனங்களை விடுப்பார்கள். பிறகு அந்தப் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் தாமே மறந்தும் மீறியும் செயற்படுவார்கள். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்று தொடங்கிய வீரப்பிரகடனம் இப்பொழுது “சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்”, “தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்”என்பது வரையில் வந்துள்ளது. “இதற்காகத்தான் 2024 செப்ரெம்பரில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்” என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு என்ன சொல்வார்களோ! இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்றவர்கள், இப்பொழுது எங்கே தேர்தலில் ஈடுபடுகிறார்கள்? என்பதை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை. இப்போதுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும் இதையெல்லாம் கேள்வி கேட்பதில்லை. 1977 இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் என்ற தமிழரசியற் தலைவர்கள், 1981 இல் அதை மறந்து விட்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிடத் துணிந்தனர். இந்த ஏமாற்றை உணர்ந்த அன்றைய இளைஞர்கள் அப்போதைய தமிழரசியற் தலைவர்களை எதிர்த்தனர். அதற்குப் பிறகு நடந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழரசியற் தலைவர்களின் இடம் இல்லாமற்போனது. அல்லது மங்கலாக இருந்தது. ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு எழுச்சியடைந்த மிதவாதத் தமிழரசியற் தலைமை மறுபடியும் தேர்தலுக்கான அரசியலில் மையங்கொண்டது. அதற்காகத் தனது பழைய பாணியிலான மக்களை ஏமாற்றும் அரசியற் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்யத் தொடங்கியது. 2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சில பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்தது. 1. சர்வதேச ரீதியிலான போர்க்குற்ற விசாரணை. 2. காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத் தீர்வு. 3. அரசியற் கைதிகளை விடுவித்தல். 4. படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்டெடுப்பது. 5. இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படுதல். 6. இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு. 7. பொருளாதார ரீதியாக எம்மை நாமே கட்டியெழுப்புதல் 8. நாமொரு தேசமாக எழுதல் இப்படிப் பல. ஆனால் இவை எதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வந்த 15 ஆண்டுகளிலும் நிறைவேற்றவில்லை. இவற்றைப் பற்றிப் பாராளுமன்றத்திலும் மாகாணசபை, உள்ளுராட்சி சபைகளிலும் பேசியதோடு சரி. மட்டுமல்ல, மாகாணசபை, பிரதேச சபைகளின் மூலம் செய்யக் கூடிய, செயற்படுத்த வேண்டிய பணிகளைக் கூடச் செய்யாமல், அங்கெல்லாம் இந்தப் பிரகடனங்களைத் தீர்மானமாக்கி நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்தான். போதாக்குறைக்கு “சில பிரகடனங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஜெனீவாவுக்குச் செல்கிறோம்” என்று வருடாவருடம் படையெடுத்துப் போகிறார்கள். அப்படியே உலகம் சுற்றுகிறார்கள். அப்படியே தங்களை நன்றாக வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால் போராட்டத்தில் இணைந்து நின்று, அளப்பரிய தியாகங்களைச் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையோ மிகப் பரிதாபமானதாக இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை மேலுயர்த்திக் கொள்வதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கோ யாருமே முன்வரவில்லை. எங்கும் எவரும் மக்களோடு நின்ற எத்தகைய களப்பணிகளையும் ஆற்றவில்லை. அதற்கு இன்னும் தயாராகவும் இல்லை. இதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ. சுமந்திரன். இது தொடர்பாக அவர் 11.05.2024 இல் விடுத்துள்ள அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதனுடைய சாராம்சம் இதுதான்,“கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன்” என்று. ஆனால், இன்று தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் இயங்குகின்ற பத்துக்கு மேற்பட்ட கட்சிகளில் எத்தனை கட்சிகள் இத்தகைய சுயவிசாரணைக்குத் தயாராக உள்ளன? அல்லது அவற்றில் இயங்கும் பல நூற்றுக்கணக்கானே அரசியலாளர்களில் எத்தனை பேர் இப்படித் துணிவோடு தம்மைச் சுயவிசாரணைக்குட்படுத் தயாராக உள்ளனர்? அரசியற் கட்சிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, எதிர்ப்பு அரசியலை அல்லது விடுதலை அரசியலுக்கான தமிழ்த்தேசியவாதக் கருத்தியலை வலியுறுத்துகின்ற அரசியற் பத்தியாளர்கள், ஊடகங்கள், அவ்வப்போது அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்ச்சிவில் அமைப்புகள் என எந்தத் தரப்புமே தம்மைத் திரும்பிப் பார்க்கத் தயாரில்லாத நிலையிற்தான் உள்ளன. பதிலாக, தொடர்ந்தும் தமது விருப்பங்களையும் கனவுகளையும் மக்களின் மீது சுமத்துவதிலேயே தீவிரமாக உள்ளன. இதற்கெல்லாம் மக்களே பரிசோதனை எலிகள். இது எவ்வளவு அநீதியானது? அப்படியான ஒன்றுதான் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற தமிழ்ப்பொது வேட்பாளர் விடயமும். 2010 க்குப் பிறகு நடந்த மாகாணசபைகளுக்கான தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும் இதேபோன்ற வெற்றுப் பிரகடனங்களுக்கு அலங்காரப் பூச்சுகளைச் செய்து மக்களிடத்திலே உலாவ விடப்படுகிறது. அட, குறைந்த பட்சம், தாம் வலியுறுத்துகின்ற, தாம் பிரகடனப்படுத்தும் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செயற்படுத்துவதற்காவது பாடுபட வேண்டாமா? அந்தப் பொறுப்புணர்வு கூட இவர்களுக்கில்லை. உண்மையில் இவர்கள் தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு பத்திகளையும் திரும்ப எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கட்சியும் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மக்களின் முன்னே வைத்த பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் அமர்ந்திருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் வெறும் வரிகளும் வெறும் வார்த்தைகளும் இல்லை. அவை மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள். சத்திய வார்த்தைகள். ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதும் சத்திய வார்த்தைகளை மீறிச் செல்வதும் மிகப் பெரிய தவறு. துரோகம். அப்படித்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், மாணவர்களாகிய தங்களுடைய வரையறை என்ன? பொறுப்பென்ன? செயற்பாட்டுப் பரப்பென்ன? என்பதை அறிவது நல்லது. (இதைக் குறித்தும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்). தொகுத்துச் சொன்னால், முதலில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உண்மையாக இருங்கள். போராடிய மக்களுக்கும் தியாயகங்களைச் செய்த மக்களுக்கும் விசுவாசமாயிருங்கள். அவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் அபிலாஷைகளுக்கு நீங்கள்தான் முதலில் முன்னின்று உழைப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்பே பிறருக்கு வழியைக்காட்டுவதாக இருக்க வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களைப் பின்தொடர்வர். இதற்கு மக்கள் மத்தியில் களப்பணிகள் அவசியமாகும். அரசியலை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகும். நடைமுறைகள் உருவாகும்போதே அரசியல் வெற்றிகளை அடையலாம். பதிலாக ஊடக மையங்களில் கூடுவதோ, தங்கள் தங்கள் அலுவலங்களில் இருந்து கொண்டு அறிக்கை விடுவதோ, நான்குபேர் சேர்ந்து கொண்டு புதுப்புது அமைப்புகளை உருவாக்குவதோ, அப்படி இப்படி என நான்கு, ஆறு அமைப்புகள் இணைந்து கொண்டு அறிக்கைகளைத் தயாரிப்பதோ, தூதுவரங்களுக்குக் காவடி எடுப்பதோ இல்லை. தெற்கிலே பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் இப்படித்தான், தங்களோடு 100 க்கு மேற்பட்ட அமைப்புகள் இணைந்திருக்கின்றன என்று அரசியல் செய்ய முற்பட்டார்கள். அந்த அரசியலின் பெறுமதியை உலகம் நன்கறியும். அதை வரலாறு பழித்துரைக்கிறது. விடுதலைக்கான அரசியல் என்பது வேறு. தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு. இரண்டையும் இணைத்துச் செய்வதும் செயற்படுத்தும் செல்வதும் வேறு. அது அதுக்கென அடிப்படைகளும் வேறுபாடுகளும் உண்டு. இதற்கான அரசியற் கணிதங்களை நாம் அறிய வேண்டும். விடுதலை அரசியலுக்கு நாம் யாராக இருக்கிறோம் என்பது, நம்முடைய செயல்களின் மூலமே அடையாளப்படுத்தப்படும். வார்த்தைகளின் மூலமாக அல்ல. இதற்கு அண்மைய செழிப்பான உதாரணம், தமிழ் மக்கள் பேரவையாகும். மிக ஊக்கத்துடன், உற்சாகமாகத் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை மூன்று ஆண்டுகளால் காணாமற்போனவைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியை மறைப்பதற்காக அதன் உற்பத்தியாளர்கள் வேறு மார்க்கங்களில் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பொதுவேட்பாளர் பற்றிய அறிவிப்புமாகும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எலிகள் பல சேர்ந்து வளையெடுக்கும் முயற்சிகள். ஆம் புலிகளின் காலம் முடிந்தது. இது செயற்படும் எலிகளின் காலமாகியிருக்கிறது. செயற்படுவோரின் காலம் போயொழிந்தது. செயற்படாதோரின் அரங்கு திறந்திருக்கிறது. என்பதால்தான் தாய் மண்ணை விட்டு ஆயிரமாயிரமாய்த் தினமும் வெளியேறிச் செல்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இந்தச் சீரில்தான் “தேசமாய்த் திரள்வோம்” என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். https://arangamnews.com/?p=10741

புலிகளும் எலிகளும்

1 day 18 hours ago

புலிகளும் எலிகளும்
புலிகளும் எலிகளும் 

 — கருணாகரன் —

ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது  வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. 

அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். 

தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலாம்). 

தேர்தல் அரசியலையே தமது வழிமுறையாகவும் வாழ்முறையாகவும் கொண்ட தரப்புகள் இதில் ஈடுபடுவது வேறு. விடுதலைக்கான அரசியலில் ஈடுபட்ட, இரத்தம் சிந்திய போராட்ட வழிமுறையில் வந்தவர்கள் ஈடுபடுவது வேறு. 

முதலாவது தரப்பினர் காலாகாலமாகத் தமிழ் வாக்காளர்களைக் கவரும் தந்திரோபயங்களில் கைதேர்ந்தவர்கள். அதற்கேற்றவாறு அவர்கள் அவ்வப்போது எடுபடக் கூடிய கவர்ச்சிகரமான அறிவிப்புகளைச் செய்வார்கள். பிரகடனங்களை விடுப்பார்கள்.  பிறகு அந்தப் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் தாமே மறந்தும் மீறியும் செயற்படுவார்கள். 

1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்று தொடங்கிய வீரப்பிரகடனம் இப்பொழுது “சர்வதேச சமூகத்துக்கு தமிழ் மக்களின் அபிலாஷையை வெளிப்படுத்திக் காட்ட வேண்டும்”, “தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்”என்பது வரையில் வந்துள்ளது. “இதற்காகத்தான் 2024 செப்ரெம்பரில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்”  என்று இப்பொழுது சொல்லப்படுகிறது. இதற்குப் பிறகு என்ன சொல்வார்களோ!

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். 1977 இல் “தமிழீழத்தில்தான் அடுத்த தேர்தல்” என்றவர்கள், இப்பொழுது எங்கே தேர்தலில் ஈடுபடுகிறார்கள்? என்பதை. இதையிட்டெல்லாம் இவர்கள் வெட்கப்படுவதேயில்லை. இப்போதுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும் இதையெல்லாம் கேள்வி கேட்பதில்லை. 

1977 இல் அடுத்த தேர்தல் தமிழீழத்தில்தான் என்ற தமிழரசியற் தலைவர்கள், 1981 இல் அதை மறந்து விட்டு மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் போட்டியிடத் துணிந்தனர்.  இந்த ஏமாற்றை உணர்ந்த அன்றைய இளைஞர்கள் அப்போதைய தமிழரசியற் தலைவர்களை எதிர்த்தனர். அதற்குப் பிறகு நடந்த ஆயுதப்போராட்டத்தில் தமிழரசியற் தலைவர்களின் இடம் இல்லாமற்போனது. அல்லது மங்கலாக இருந்தது.

ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பிறகு எழுச்சியடைந்த மிதவாதத் தமிழரசியற் தலைமை மறுபடியும் தேர்தலுக்கான அரசியலில் மையங்கொண்டது. அதற்காகத் தனது பழைய பாணியிலான மக்களை ஏமாற்றும் அரசியற் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்யத் தொடங்கியது. 

2010 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சில பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செய்தது. 

1.      சர்வதேச ரீதியிலான போர்க்குற்ற விசாரணை.

2.       காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத்  தீர்வு.

3.      அரசியற் கைதிகளை விடுவித்தல்.

4.      படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை மீட்டெடுப்பது.

5.      இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படுதல்.

6.      இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு.

7.      பொருளாதார ரீதியாக எம்மை நாமே கட்டியெழுப்புதல்

8.      நாமொரு தேசமாக எழுதல்

இப்படிப் பல. 

ஆனால் இவை எதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்வந்த 15 ஆண்டுகளிலும் நிறைவேற்றவில்லை. இவற்றைப் பற்றிப் பாராளுமன்றத்திலும் மாகாணசபை, உள்ளுராட்சி சபைகளிலும் பேசியதோடு சரி. மட்டுமல்ல, மாகாணசபை, பிரதேச சபைகளின் மூலம் செய்யக் கூடிய, செயற்படுத்த வேண்டிய பணிகளைக் கூடச் செய்யாமல், அங்கெல்லாம் இந்தப் பிரகடனங்களைத் தீர்மானமாக்கி நிறைவேற்றுவதையே தொழிலாகக் கொண்டது. 

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும்தான். 

போதாக்குறைக்கு “சில பிரகடனங்களைப் பற்றிப் பேசுவதற்காக ஜெனீவாவுக்குச் செல்கிறோம்” என்று வருடாவருடம் படையெடுத்துப் போகிறார்கள். அப்படியே உலகம் சுற்றுகிறார்கள். அப்படியே தங்களை நன்றாக வளர்த்துக் கொள்கின்றனர்.

ஆனால் போராட்டத்தில் இணைந்து நின்று, அளப்பரிய தியாகங்களைச் செய்து பாதிக்கப்பட்ட மக்களின் நிலையோ மிகப் பரிதாபமானதாக இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அதை மேலுயர்த்திக் கொள்வதற்கோ அல்லது பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கட்டியெழுப்புதற்கோ யாருமே முன்வரவில்லை. எங்கும் எவரும் மக்களோடு நின்ற எத்தகைய களப்பணிகளையும் ஆற்றவில்லை. அதற்கு இன்னும் தயாராகவும் இல்லை.

இதைப் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ. சுமந்திரன். இது தொடர்பாக அவர் 11.05.2024 இல் விடுத்துள்ள அறிக்கையில் விரிவாகச் சொல்லியிருக்கிறார். அதனுடைய சாராம்சம் இதுதான்,“கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள்  வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அவசியம் எனக் கருதுகிறேன்” என்று.

ஆனால், இன்று தமிழ்த்தேசிய அரசியற் பரப்பில் இயங்குகின்ற பத்துக்கு மேற்பட்ட கட்சிகளில் எத்தனை கட்சிகள் இத்தகைய சுயவிசாரணைக்குத் தயாராக உள்ளன? அல்லது அவற்றில் இயங்கும் பல நூற்றுக்கணக்கானே அரசியலாளர்களில் எத்தனை பேர் இப்படித் துணிவோடு தம்மைச் சுயவிசாரணைக்குட்படுத் தயாராக உள்ளனர்?

அரசியற் கட்சிகள், அரசியல்வாதிகள் மட்டுமல்ல, எதிர்ப்பு அரசியலை அல்லது விடுதலை அரசியலுக்கான தமிழ்த்தேசியவாதக் கருத்தியலை வலியுறுத்துகின்ற அரசியற் பத்தியாளர்கள், ஊடகங்கள், அவ்வப்போது அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்ற யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், தமிழ்ச்சிவில் அமைப்புகள் என எந்தத் தரப்புமே தம்மைத் திரும்பிப் பார்க்கத் தயாரில்லாத நிலையிற்தான் உள்ளன. 

பதிலாக, தொடர்ந்தும் தமது விருப்பங்களையும் கனவுகளையும் மக்களின் மீது சுமத்துவதிலேயே தீவிரமாக உள்ளன. இதற்கெல்லாம் மக்களே பரிசோதனை எலிகள். இது எவ்வளவு அநீதியானது?  அப்படியான ஒன்றுதான் இப்போது மேற்கொள்ளப்படுகின்ற தமிழ்ப்பொது வேட்பாளர் விடயமும். 

2010 க்குப் பிறகு நடந்த மாகாணசபைகளுக்கான தேர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும் இதேபோன்ற வெற்றுப் பிரகடனங்களுக்கு அலங்காரப் பூச்சுகளைச் செய்து மக்களிடத்திலே உலாவ விடப்படுகிறது. அட, குறைந்த பட்சம், தாம் வலியுறுத்துகின்ற, தாம் பிரகடனப்படுத்தும் பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் செயற்படுத்துவதற்காவது பாடுபட வேண்டாமா? அந்தப் பொறுப்புணர்வு கூட இவர்களுக்கில்லை. 

உண்மையில் இவர்கள் தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளையும் ஒவ்வொரு பத்திகளையும் திரும்ப எடுத்துப் படித்துப் பார்க்க வேண்டும். அவ்வாறே ஒவ்வொரு கட்சியும் கடந்த காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் மக்களின் முன்னே வைத்த பிரகடனங்களையும் அறிவிப்புகளையும் அமர்ந்திருந்து வாசித்துப் பார்க்க வேண்டும். அவை ஒவ்வொன்றும் வெறும் வரிகளும் வெறும் வார்த்தைகளும் இல்லை. அவை மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள். சத்திய வார்த்தைகள். ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறுவதும் சத்திய வார்த்தைகளை மீறிச் செல்வதும் மிகப் பெரிய தவறு. துரோகம். 

அப்படித்தான் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், மாணவர்களாகிய தங்களுடைய வரையறை என்ன? பொறுப்பென்ன? செயற்பாட்டுப் பரப்பென்ன? என்பதை அறிவது நல்லது. (இதைக் குறித்தும் அடுத்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்). 

தொகுத்துச் சொன்னால், முதலில், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு உண்மையாக இருங்கள். போராடிய மக்களுக்கும் தியாயகங்களைச் செய்த மக்களுக்கும் விசுவாசமாயிருங்கள். அவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்பை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் அபிலாஷைகளுக்கு நீங்கள்தான் முதலில் முன்னின்று உழைப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த உழைப்பே பிறருக்கு வழியைக்காட்டுவதாக இருக்க வேண்டும். அதன் பிறகே மக்கள் உங்களைப் பின்தொடர்வர். 

இதற்கு மக்கள் மத்தியில் களப்பணிகள் அவசியமாகும். அரசியலை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று கற்றுக் கொள்ள முயற்சிப்பதாகும். நடைமுறைகள் உருவாகும்போதே அரசியல் வெற்றிகளை அடையலாம். 

பதிலாக ஊடக மையங்களில் கூடுவதோ, தங்கள் தங்கள் அலுவலங்களில்  இருந்து கொண்டு அறிக்கை விடுவதோ, நான்குபேர் சேர்ந்து கொண்டு புதுப்புது அமைப்புகளை உருவாக்குவதோ, அப்படி இப்படி என நான்கு, ஆறு அமைப்புகள் இணைந்து கொண்டு அறிக்கைகளைத் தயாரிப்பதோ, தூதுவரங்களுக்குக் காவடி எடுப்பதோ இல்லை. 

தெற்கிலே பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் இப்படித்தான், தங்களோடு 100 க்கு மேற்பட்ட அமைப்புகள்  இணைந்திருக்கின்றன என்று அரசியல் செய்ய முற்பட்டார்கள். அந்த அரசியலின் பெறுமதியை உலகம் நன்கறியும். அதை வரலாறு பழித்துரைக்கிறது.

விடுதலைக்கான அரசியல் என்பது வேறு. தேர்தலுக்கான அரசியல் என்பது வேறு. இரண்டையும் இணைத்துச் செய்வதும் செயற்படுத்தும் செல்வதும் வேறு. அது அதுக்கென அடிப்படைகளும் வேறுபாடுகளும் உண்டு. இதற்கான அரசியற் கணிதங்களை நாம் அறிய வேண்டும். 

விடுதலை அரசியலுக்கு நாம் யாராக இருக்கிறோம் என்பது, நம்முடைய செயல்களின் மூலமே அடையாளப்படுத்தப்படும். வார்த்தைகளின் மூலமாக அல்ல. இதற்கு அண்மைய செழிப்பான உதாரணம், தமிழ் மக்கள் பேரவையாகும். மிக ஊக்கத்துடன், உற்சாகமாகத் தொடங்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை மூன்று ஆண்டுகளால் காணாமற்போனவைகளின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. தமிழ் மக்கள் பேரவையின் தோல்வியை மறைப்பதற்காக அதன் உற்பத்தியாளர்கள் வேறு மார்க்கங்களில் முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் பொதுவேட்பாளர் பற்றிய அறிவிப்புமாகும். 

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது எலிகள் பல சேர்ந்து வளையெடுக்கும் முயற்சிகள். 

ஆம் புலிகளின் காலம் முடிந்தது. இது செயற்படும் எலிகளின் காலமாகியிருக்கிறது. செயற்படுவோரின் காலம் போயொழிந்தது. செயற்படாதோரின் அரங்கு திறந்திருக்கிறது. 

என்பதால்தான் தாய் மண்ணை விட்டு ஆயிரமாயிரமாய்த் தினமும் வெளியேறிச் செல்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். இந்தச் சீரில்தான் “தேசமாய்த் திரள்வோம்” என்று கனவு கண்டு கொண்டிருக்கிறோம். 

 

https://arangamnews.com/?p=10741

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்

1 day 18 hours ago
டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமையான காயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்போது வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார். https://www.battinatham.com/2024/05/blog-post_468.html

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்

1 day 18 hours ago

டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல்
Vhg மே 17, 2024
1000243405.jpg

புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார்.

டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.

கடுமையான காயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்போது வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.

 

https://www.battinatham.com/2024/05/blog-post_468.html

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்தியாவில் கைது

1 day 18 hours ago
Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 11:03 AM யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183756

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்தியாவில் கைது

1 day 18 hours ago

Published By: DIGITAL DESK 3

17 MAY, 2024 | 11:03 AM
image
 

யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும் காரைக்கால் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் இந்திய எல்லைக்குள் சென்று சிலிண்டர்களுடன் அட்டை பிடித்துக்கொண்டு இருந்த வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/183756