Aggregator

தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்

2 days 15 hours ago
தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வத்தல் 1900கள் வத்தல்/ பாய் வத்தல் என்பது வத்தையை விடப் பெரியது ஆகும். நிறை அதிகமாகக் கொள்ளக்கூடியது

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 days 15 hours ago
முஸ்லிம்களை வெளியேற்றியது இன சுத்திகரிப்பு என்றவரின் தற்போதைய அமைதி பற்றிதான் சுட்டிகாட்டபட்டது .

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 days 15 hours ago
பெருமாள்... ஒரு கருத்தில் நின்று பேசலாமே. வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை தேசிய தலைவர் காலத்திலேயே அவர்களை மீள வந்து குடியிருக்கும் செயல்பாடுகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்தாயிற்றே. இனி புதிதாக ஒரு அறிக்கை விட நீங்களோ, நானோ யார்? அது தவிர ஓரளவுக்கு விருப்பமும், ஆர்வமும் கொண்ட முஸ்லீம் மக்கள் மீளவும் வடக்கில் வந்து தமது வாழ்வை ஆரம்பித்து விட்டார்கள் தானே? வினயமாக கேட்கிறேன், இது உண்மையில் சுமந்திரன் சொன்னார் என்பதற்காக இப்படி 6, 7 பக்கம் கடந்து இந்த திரி ஓடுகிறதா?

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

2 days 15 hours ago
டெல்லி இன்னும் கனவு கண்டு கொண்டு இருக்கிறது புலி மீளுருவாக்கம் நடைபெறும் என்றும் தனது அரசியல் பிழைக்காது எனவும் நம்பிக்கொண்டு உள்ளது .

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்

2 days 15 hours ago
இந்தக் கொடுப்பனவு ஏற்கனவே பல்கலைக்கழங்களுக்கு போனவர்களுக்கும் கிடைக்குமா ஏராளன்.ஏன் எனில் உதவி திட்டங்களில் படிப்பவர்கள் இப்படியான கொடுப்பனவுகள் பற்றி சொல்ல மாட்டார்கள்.உதவி திட்டங்களை பெற்றுக் கொண்டு, கொடுப்பனவுகளையும் எடுத்து செலவு செய்து கொண்டு திரிவார்கள் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே தான் கேட்கிறேன்.🖐

தமிழ் அரசியல் பிரமுகர்கள் இன்று சென்னைக்கு பயணம்

2 days 15 hours ago
இந்தியாவை இப்பொழுதும் நம்பவில்லை.புட்டின் இந்தியா போன அடுத்த நாளே அமெரிக்க அதன் மிகப்பெரிய விமானத்தை அதுவும் புயலால் பெரிதும் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத்தில் தரையிறக்குகிறது.யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியதூதரகம் அகற்றப்படவேண்டும் என போராட்டங்கள் நடக்கிறது.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைந்து தமிழரசுக்கட்சியும் உடைந்து என்பிபி வடமாகாணத்தில் வலுவாக காலூன்ற அடித்தளம் போடுகிறது. தனக்குள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்து ஒற்றையாட்சிக்குள்ளே அரசியலைமப்பு மாற்றத்தை நிறைவேற்ற ஆயத்தமாகிறது. இது ஒரு ஆபத்தான நிலை தமிழர்களுக்கு அதே வேளை இந்தியாவுக்குப் பிடிக்காத சார்பு நிலைகளை அனுரஅரசு எடுக்கிறது.இந்தப் புறச்சூழலில் தான் அதுவும் தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் அடிக்கும் நேரத்தில் இப்ப தும்முனாத்தான் அது தேர்தல் மேடைகளில் ஊறுகாயாக அவது பயன்படுத்தப்படலாம். மற்றும்படி தமிழக அரசியல் கட்சிகளில் நாம்தமிழர் பாமக தவிர யாரும் ஈழத்தமிழர் விகாரததைக் கையில் எடுக்கப் போவதில்லை. அன்பு மணி பாமக தலைமைப் பொறுப்பில் இருப்பதால் பாமகவும் இந்த விவகாரத்தை கவனத்தில் பெரிதாக எடுக்காது.சீமானை மட்டும் சந்திப்பது தமிழக மக்களை உதாசீனம் செய்வதாகும்.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 days 16 hours ago
முஸ்லிம்களை வடகிழக்கை விட்டு புலிகள் அனுப்பியது இன சுத்திகரிப்பு என்று சொல்லியவர் தற்போது அவர்களை மீள் குடியேற அழைப்பு விடலாமே ? புயலால் அவர்களும் பாதிக்க பட்டு உள்ளார்கள் இங்கு முஸ்லிம்களுக்கு ஆதரவாய் கருத்து எழுதுபவர்கள் எங்கு போனார்கள் ? இங்கு இதய சுத்தியுடன் கருத்துக்கள் வருவதில்லை முஸ்லிம் ஆதரவாளர் போன்று நடிப்பவர்களுக்கு குழம்பிய குட்டையை மேலும் மேலும் குழப்புவதே நோக்கம் அன்றி வேறொன்றும் இல்லை . தற்போதைய நிலையில் பலபக்கமும் அடிவாங்கிய அரசியல்வாதி சுமத்திரன் முஸ்லிம்களுக்கு ஆதரவாய் இந்த நேரம் அறிக்கை விட்டு பார்க்கட்டுமே பார்க்கலாம் . தனது சுயநல அரசியலுக்காக சுமத்திரன் பிச்சைகாரனை விட கேவலமாய் நடந்து கொள்ள கூடியவர் நடந்து கொள்பவர் . பசிக்கு யாசகம் பெறுபவர்களை கூட அனுதாபம் காட்டலாம் சுமத்திரன் போன்றவர்கள் திருட்டு யாசகம் பெறுபவர்களில் ஒருத்தர் .

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

2 days 16 hours ago
முதலில் புரையோடி போன சிங்கள புத்த சிலைகளை வடகிழக்கில் வைப்பதை நிறுத்தனும் அதன் பின் ஆலய வழிபாடுகள் மேற்கொள்ளும் நடிப்பை தொடர்வது நல்லது .

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்

2 days 16 hours ago
ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு Published By: Vishnu 21 Dec, 2025 | 07:39 PM க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது. அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற 274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது. நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார். மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும். எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள். நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர். கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234041

உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா பிரதமர் வழங்கினார்

2 days 16 hours ago

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

Published By: Vishnu

21 Dec, 2025 | 07:39 PM

image

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற 274 மாணவர்களுக்கு தலா 100,000 ரூபா வழங்கப்பட்டது.

அனைத்து மாகாணங்களிலும் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை கௌரவிக்கும், இந்த ஆண்டின் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் சிறந்த  பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் கலாநிதி  ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (21) முற்பகல் கிளிநொச்சி நெலும் பியச வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களைச் சேர்ந்த  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயர் சித்தி பெற்ற  274 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு தலா 100,000 ரூபா ஊக்கவிப்புக் கொடுப்பனவு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், இதற்காக ஜனாதிபதி நிதியம் 27.4 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.

நாட்டில் மாகாண மட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்ச்சி இதுவாகும். இதன் மூலம் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 3,000 மாணவர்களை ஜனாதிபதி நிதியம் கௌரவித்துள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளுக்கு இடையில் வேறுபாடு இன்றி, நாட்டின் ஒவ்வொரு பாடசாலையிலும் உள்ள பிள்ளைகள் தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மக்களுக்கு உரிய ஜனாதிபதி நிதியம், மேலும் மக்களை  நெருங்கச் செய்வதிலும், இந்நாட்டுப் பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதிலும் ஆற்றிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்தில் தொடங்கியது. இன்று, இந்த நிகழ்ச்சித்திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே, க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் இறுதி நிகழ்வு, யாழ் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைபெறுவதில்  மகிழ்ச்சியடைகிறேன். ஜனாதிபதி நிதியம் என்பது மக்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதியமாகும். தற்போதைய அரசாங்கம் இந்த நிதியத்தை  மக்களிடம் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

யாழ் மாவட்டத்தை கல்வியின் மையமாக மாற்ற வேண்டும். வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், எமது மக்களும் எமது பிள்ளைகளுமே இருக்கின்றனர். ஒவ்வொரு பாடசாலையும் எமது பாடசாலை. தேசிய-மாகாண பிளவை மறந்துவிடுங்கள். அந்த அனைத்து பாடசாலைகளிலும் இருப்பது நமது பிள்ளைகள். அந்த பிள்ளைகள் அனைவரும் தரமான கல்வியைப் பெறும் உரிமையை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எனவே, ஆசிரியர்களை நியமிக்கும்போதும், அவர்களை இடமாற்றம் செய்யும்போதும், அதிகாரிகளை நியமிக்கும்போதும், யாழ்ப்பாணத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காதீர்கள். ஏனைய  மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் பற்றி சிந்தித்து, அவ்வாறே இங்கும் செயல்படுங்கள்.

நீங்கள் உண்மையிலேயே திறமையானவர்கள். இங்குள்ள நீங்கள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று வடக்கு மாகாணத்திற்கு சேவை செய்ய மீண்டும் வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், வட மாகாணம் குறித்த முடிவுகளை எடுப்பவர்கள் நீங்கள்தான். அப்போதுதான், வட மாகாணத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நீங்கள் தலையிடுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு அரசாங்கமாக, அந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்தத் தலையீட்டைச் செய்கிறோம் என்பதைக் கூற வேண்டும்.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் தங்கள் கருத்துக்களை இதன்போது தெரிவித்தனர்.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், மாவட்ட செயலாளர்கள், வட மாகாண அரச அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

IMG-20251221-WA0073.jpg

IMG-20251221-WA0076.jpg

IMG-20251221-WA0072.jpg

IMG-20251221-WA0070.jpg

IMG-20251221-WA0069.jpg

IMG-20251221-WA0064.jpg

IMG-20251221-WA0068.jpg

https://www.virakesari.lk/article/234041

நியூஸிலாந்து மெற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் செய்திகள்

2 days 16 hours ago
இரண்டு இன்னிங்ஸ்களிலும் லெதம், கொன்வே சதங்கள் குவித்து தனித்துவ சாதனை, மே. தீவுகளின் வெற்றிக்கு 419 ஓட்டங்கள் தேவை 21 Dec, 2025 | 02:39 PM (நெவில் அன்தனி) மவுன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அசத்தினர். இதன் மூலம் சகல விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்த முதலாவது ஜோடி என்ற தனித்துவமான சாதனை ஒன்றை நிலைநாட்டினர். மேலும் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் குவித்த டெவன் கொன்வே நியூஸிலாந்து சார்பாக இந்த சாதனையை நிகழ்த்திய முதலாவது வீரரானார். இப் போட்டியில் மிகவும் கடினமான 462 ஓட்டங்ககளை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்திற்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்தன. நியூஸிலாந்து ஒரு படி மேல் சென்று 500 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது. நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 381 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் சகல விக்கெட்களையும் இழந்து 420 ஓட்டங்களைப் பெற்றது. கவெம் ஹொஜ் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி 123 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 155 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் போன்றே இரண்டாவது இன்னிங்ஸில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டொம் லெதம், டெவன் கொன்வே சதங்கள் குவித்து அசத்தினர். முதல் இன்னிங்ஸில் ஆரம்ப விக்கெட்டில் 323 ஓட்டங்களைப் பகிர்ந்த அவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர். அவர்கள் இருவரும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆரம்ப விக்கெட்டில் மொத்தமாக 515 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினர். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முச்சத இணைப்பாட்டத்தையும் இரண்டாவது இன்னிங்ஸில் சத இணைப்பாட்டத்தையும் பகிர்ந்த முதலாவது ஜோடி என்ற சாதனையை டொம் லெதமும் டெவன் கொன்வேயும் நிலைநாட்டினர். இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் சதங்கள் குவித்தவுடன் ஆட்டம் இழந்தனர். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 575 - 8 விக். டிக்ளயார்ட் (டெவன் கொன்வே 227, டொம் லெதம் 137, ரச்சின் ரவிந்த்ரா 72 ஆ.இ., கேன் வில்லியம்சன் 31. அஜாஸ் பட்டேல் 30, ஜஸ்டின் க்றீவ்ஸ் 83 - 2 விக்., ஜேடன் சீல்ஸ் 100 - 2 விக்., அண்டர்சன் பிலிப்ஸ் 154 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (கவெம் ஹொஜ் 123 ஆ.இ., ப்றெண்டன் கிங் 63, ஜோன் கெம்பெல் 45, அலிக் அத்தானேஸ் 45, ஜஸ்டின் க்றீவ்ஸ் 43, உதிரிகள் 36, ஜேக்கப் டவி 86 - 4 விக்., அஜாஸ் பட்டேல் 113 - 3 விக்., மிச்செல் ரே 89 - 2 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: 306 - 2 விக். டிக்ளயார்ட் (டொம் லெதம் 101, டெவன் கொன்வே 100, ரச்சின் ரவிந்த்ரா 46 ஆ.இ., கேன் வில்லியம்ஸ் 40 ஆ.இ., கவெம் ஹொஜ் 80 - 2 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: வெற்றி இலக்கு 462 ஓட்டங்கள் - விக்கெட் இழப்பின்றி 43 ஓட்டங்கள் (ப்றெண்டன் கிங் 37 ஆ.இ. https://www.virakesari.lk/article/234014

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

2 days 16 hours ago
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி! Published By: Vishnu 21 Dec, 2025 | 07:17 PM கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார். ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார். இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/234040

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

2 days 16 hours ago

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி!

Published By: Vishnu

21 Dec, 2025 | 07:17 PM

image

கிளிநொச்சி மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (21) சென்று விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்.

21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கிளிநொச்சியில் நடைபெற்ற பல்வேறு அபிவிருத்தி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரதமர், அதன் ஒரு பகுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்துக்கும் வருகை தந்தார்.

ஆலயத்துக்கு வருகை தந்த பிரதமரை ஆலய நிர்வாகத்தினரும் பொதுமக்களும் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளில் பிரதமர் பக்திபூர்வமாகப் பங்கேற்றார். வழிபாடுகளைத் தொடர்ந்து, மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் வரலாற்றுப் பின்னணி, ஐதீகங்கள் மற்றும் ஆலயத்தின் சிறப்புக்கள் குறித்து பிரதமர் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமருடன் இணைந்து, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோரும் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/234040