Aggregator

மக்களைத் தவறாக வழிநடத்தும் சுகாஸ்; சுமந்திரன் சாடல்

2 days 11 hours ago
பத்திரிகைகளை குறை கூறி தப்பித்து விடலாம் என்கிற நோக்கில் எது வேண்டுமானாலும் பேசுவார், பின் பத்திரிகைகளை சாடுவார். எடுத்ததெற்கெல்லாம் கோட்டுக்குப்போவேன் என எச்சரிப்பவர், இதற்கு எதிராக ஏன் போகவில்லை? ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று பலதடவை கூறியிருக்கிறார். சிங்களவருடன் வாழ்வது தனது அதிஷ்டம் என்று கூறியவர், அவர்களிடமே வாக்கைப்பெற்று பாராளுமன்றம் போயிருக்கலாமே? வடக்கு கிழக்கில் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி சிங்கள படையினரின் பாதுகாப்பை பெற்று வடக்கில் அரசியல் செய்ய வேண்டிய தேவை என்ன இவருக்கு? எப்படி வெட்கம் இல்லாமல் வாக்கு கேட்டார்?

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 12 hours ago
தன் பக்கமும் தமிழர் இருக்கிறார்கள் என காட்ட விடும் புலுடாவா அல்லது நீங்கள் சொல்வதுபோல் பினாமியாகவுமிருக்கலாம். அனுரா அதையும் விசாரணை செய்தால்; அது விசுவாசியா பினாமியா என்பது தெரிந்துவிடும். மக்களுக்கு துரோகம் செய்தவர்கள், அவர்களுக்காக மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்றால், இவர்களது மனச்சாட்சி உறுத்தவில்லையா இவர்களை?

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 12 hours ago
மகிந்தவின் பினாமி வரிசையில் இருக்கும் ஒரு கோடாரி காம்பாக இருக்கலாம் உண்மையில் அந்த வீட்டு உரிமையாளரே மகிந்த ஆக இருக்கலாம் . கத்தரி விளைந்தால் சந்தைக்கு வரத்தானே வேணும் இதுவரைக்கும் அந்த பினாமி பற்றி விபரங்கள் வராமலா போயிருக்கும் .

அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்

2 days 12 hours ago
இந்த தொந்தரவு வேணாம் என்றுதான் அநேகர்லண்டனில் இருந்து சென்னை போய் காலையில் இறங்கி அப்படியே பலாலி 1 மணி நேரத்தில் யாழில் மதியம் சாப்பட்டுக்கு வீட்டில் நிக்கினம் என்ன 2௦ கிலோ நிறைக்கு மேல் கொண்டு போக முடியாது அவசர பிரியர்களுக்கு இந்த ரூட் மிகவும் வசதியானது . அல்லது சென்னையில் இறங்கி ஆசுவாசமாய் சொப்பிங் பண்ணி 9௦கிலோ வுக்கு நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு கப்பல் போய் வருகிறது நாலு மணி நேர பயணமே ஒரு வழி பாதை நேரத்துக்கு ஆகுது . a9 ல் இரவிரவாய் 8௦மைல் வேகத்தில் மாவா போதை பாக்கு போட்டு ஓடும் சாகச வாகன ஓட்டிகளின் தொல்லை வேண்டாம் .

தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த

2 days 13 hours ago
உலகில் உள்ள அரசியல் களத்தில் முன்னேற வேண்டுமாயின் இனவாதம் பேசினால் உச்சத்தை தொடலாம்.அபிவிருத்தி பணிகள் எல்லாம் இரண்டாம் பட்சம். இது மேற்குலகிற்கும் தகும்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

2 days 13 hours ago
கொலையாளியை ஜீரணித்தவர் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபொழுது அவர்களுடன் பயணித்த ரிஷி லோமேசர், ஒரு கட்டத்தில் அவர்களுடன் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினார். அவரின் ஆலோசனைப்படி தங்களுடன் பயணித்த பலருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு ஒரு சிறு குழுவுடன் தங்களது யாத்திரையை பாண்டவர்கள் தொடர்ந்தனர். அப்பொழுது ரிஷிகளில் சிறந்தவரான அகஸ்தியரின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு ரிஷி லோமேசர் கூறலானார். அகஸ்தியர் வனத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது ஒரு இடத்தில் சிலர் ஆவிகளாய் தலைகீழாய் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டார். அவர்கள் அவ்வாறு தொங்கிக் கொண்டிருப்பதன் காரணத்தை அவர்களிடம் வினவினார். “அகஸ்தியா! நாங்கள் உன் முன்னோர்கள். நீ இன்னும் திருமணம் செய்து கொள்ளாதக் காரணத்தினால், எங்களுக்கு நீத்தார் கடன் செய்ய உனக்கு பிள்ளை இல்லை. நீ திருமணம் செய்து பிள்ளை பெறும் வரை நாங்கள் இப்படித்தான் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்” என பதில் உரைத்தனர். சில காலம் கழித்து குழந்தைப் பேறு இல்லாத விதர்ப அரசன் அவரிடம் வந்து குழந்தை பெற ஆசி வழங்குமாறு வேண்டினான். இணையற்ற அழகும் , சிறந்த குணமும் கொண்ட பெண் பிறப்பாள் என அகஸ்தியர் ஆசிர்வதித்தார். அந்த பெண்ணுக்குத் திருமண வயது ஆனவுடன் தனக்கே அவளை மணமுடித்து தரவேண்டும் என நிபந்தனை விதித்தார். அவ்வாறே தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லோபாமுத்ரா என பெயரிட்டு வளர்த்து வந்தான் விதர்ப்ப அரசன். இணையற்ற அழகியாய் விளங்கிய லோபாமுத்ராவை திருமணம் செய்து கொள்ள பல தேசத்து அரசர்கள் விரும்பினாலும் அகஸ்தியர் மேல் இருந்த பயத்தால் யாரும் பெண் கேட்டு செல்ல துணியவில்லை. அகஸ்தியர் ஒரு நாள் விதர்ப்ப தேசத்துக்கு சென்று லோபாமுத்ராவை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டினார். அவரது வயதையும் அவர் வாழும் எளிய வாழ்வையும் எண்ணி அவருக்கு தனது மகளை மணமுடிக்க தயங்கினான் அரசன். ஆனால் லோபாமுத்ராவோ அவரது ஞானத்தையும் அறிவையும் எண்ணி அவரை மணமுடிக்க சம்மதித்தாள். தனது ஆடம்பரமான உடைகளை துறந்து துறவிகள் அணியும் காவி உடை அணிந்து அகஸ்தியருடன் சென்று எளிய வாழ்வை வாழத் துவங்கினாள். நாளடைவில் இருவரிடையே அன்பு பெருகத் துவங்கியது. ஆனால், தன் விருப்பத்தை நேரடியாக சொல்ல நாணி, குடியிருக்க நல்ல வீடும், உடுத்திக் கொள்ள ஆடம்பர உடைகளும் வேண்டும் என அவரிடம் கேட்டார். அகஸ்தியரும் பல அரசர்களிடம் சென்று தானம் கேட்டார். ஆனால், அன்றைய சூழலில் அவர் கேட்கும் தனத்தை தர எந்த அரசரிடமும் வழியில்லாமல் இருந்தது. வில்வலன் மற்றும் வாதாபி என்று இரண்டு அசுரர்கள் இருந்தனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை விருந்துக்கு அழைப்பார்கள். வாதாபி ஆடாய் மாற அவனை வெட்டி கறியாக விருந்துப் படைப்பர். விருந்தினர் உண்டவுடன், வில்வலன் “வாதாபி! வெளியே வா!” என அழைக்க விருந்தினரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான் வாதாபி. விருந்தினரின் செல்வம் அனைத்தையும் அபகரித்துக் கொள்வர் இருவரும். ஒரு முறை அகஸ்தியர் அவ்வழியே வர, அவரை விருந்துக்கு அழைத்தான் வில்வலன். அவரும் சம்மதித்து விருந்தை உண்டார். அவர் உண்டு முடித்தவுடன் வாதாபி வெளியே வருவான் என வில்வலன் காத்திருக்க அவனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. வாதாபியை தான் ஜீரணித்து விட்டதாக அகஸ்தியர் கூறினார். அதைக் கேட்டு பயந்த வில்வலன், அவரை சரணடைந்து தான் கைப்பற்றிய செல்வங்கள் அனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்து உயிர் பிச்சைப் பெற்றான். தன் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவருக்கு தேவையான செல்வமும் கிடைத்தது. சிலகாலம் கழித்து, லோபாமுத்ராவிற்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. அதன் மூலம், அவர்களது முன்னோர்களின் கடன் தீர்க்க வழியும் பிறந்தது. சிறுமையும் பெருந்தன்மையும் ரிஷி ரைபாயாவிற்கு இரு மகன்கள் இருந்தனர். ப்ரத்யும்னன் என்ற அரசன் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்தை நடத்தி வைக்க அவரது மகன்களான பரவசு மற்றும் அர்வவசு இருவரையும் அனுப்பித் தர வேண்டினான். ரைபாயாவும் சம்மதித்து தனது மகன்களை யாகம் நடத்த அனுப்பினார். யாகம் நடத்த முன்னேற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்த சமயத்தில், பரவசுவிற்கு தனது மனைவியை காண வேண்டும் என ஆவல் எழுந்தது. எனவே, தனது ஆசிரமத்திற்கு திரும்பி சென்றான். அவன் ஆசிரமத்தை நெருங்கிய நேரம், சூரியன் முழுவதும் வராத கருக்கல் நேரம். ஏதோ ஒரு கொடிய வனவிலங்கு ஆசிரமத்தை நெருங்குவது போல் தோன்ற, தன் கையில் இருந்த கனத்த தடியை அந்த உருவத்தை நோக்கி வீசினான். அதை நெருங்கி பார்த்தப்பொழுதுதான் அவனுக்கு புரிந்தது மரவுரி தரித்திருந்த தன் தந்தையை தான் தவறுதலாக கொன்றுவிட்டது. அப்பொழுதுதான் பாரத்வாஜ முனிவரின் சாபம் நினைவிற்கு வந்தது. பரத்வாஜ முனிவரின் மகன் யவக்ரீதா செய்த தவறுக்காக ரிஷி ரைபயா அவனை கொன்றார். மகனை இழந்த கோபத்தில் உன் மகனின் கையாலே இறப்பாய் என ரிஷி ரைபயாவிற்கு சாபமிட்டிருந்தார். அது இப்பொழுது உண்மையாகிவிட்டிருந்தது. வேகவேகமாய் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்த பரவசு, அர்வவசு தங்கி இருந்த இடத்திற்கு சென்று நடந்ததை விவரித்தான். பின், தந்தையை கொன்ற பாபம் விலக நாம் பரிகாரம் செய்ய வேண்டும். அதே நேரத்தில், அரசன் நடத்தும் யாகமும் தடையின்றி நடக்க வேண்டும் எனக் கூறி அதற்கு ஒரு தீர்வையும் கூறினான். அரசனின் யாகத்தை தன்னால் தனியாக நடத்த முடியும் ஆனால் அர்வவசுவால் அவ்விதம் செய்ய முடியாது எனக் கூறி தனக்காக காட்டிற்கு சென்று பரிகாரம் செய்யக் கூறினான். அவன் மேல் எந்தவித சந்தேகமும் கொள்ளாத அர்வவசு அதற்கு சம்மதித்து பரிகாரம் செய்ய சென்றான். இங்கே பரவசு யாகத்தை துவங்கினான். செய்ய வேண்டிய பரிகாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய அர்வவசுவை பார்த்தவன் பொறாமையில் பொசுங்கினான். காரணம் , தான் செய்ய வேண்டிய பரிகாரத்தை வேறொருவரை செய்ய சொன்னதால் அவன் பாவம் தீரவில்லை. அதன் விளைவாய், அவன் மனதில் தீய எண்ணம் மூண்டது. அர்வவசுவை பார்த்து “தன் தந்தையை கொன்றவன் வருகிறான். யாகம் நடக்கும் இந்த புண்ணிய இடத்தில் இத்தகைய தீய குணம் உள்ளவனை எப்படி அனுமதிக்கலாம்?” எனக் கூறினான். அர்வவசுவின் விளக்கங்களை கேட்க அங்கே யாரும் தயாராக இல்லை. தனது சகோதரனுக்காக பரிகாரம் செய்ததே அவனுக்கு எதிராய் திரும்ப அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டான். அங்கிருந்து திரும்பிய அர்வவசு, காட்டிற்குள் சென்று அகோரமாக தவம் புரியத் துவங்கினான். பலகாலம் அவன் புரிந்த தவத்தினால் மகிழ்ந்த தேவர்கள் பிரசன்னமாகி அவனிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். தவத்தினால் மனதில் இருந்த க்ரோதம் நீங்கியிருக்க “தேவர்களே! எனது தந்தையை தாங்கள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். மேலும் , என் சகோதரனின் மனதில் உள்ள க்ரோதங்கள் நீங்கி , அவனது பாபங்களையும் நீக்க வேண்டும்” என கேட்டான். அவனது பெருந்தன்மையை கண்டா தேவர்களும் அவன் கேட்ட வரத்தை வழங்கின https://solvanam.com/2025/04/13/கொலையாளியை-ஜீரணித்தவர்/

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

2 days 14 hours ago
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளின் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது. படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக ITJP அண்மையில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு, நிமலராஜனின் படுகொலைக்குப் பின்னணியில் உள்ள அரசியல் சூழல், உத்தியோகபூர்வ விசாரணையில் ஏற்பட்ட திட்டமிட்ட தோல்விகள், மற்றும் இலங்கையின் நீதிப் பொறிமுறை நீதி வழங்கத் தவறியதன் பரந்த தாக்கங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தனிநபரின் துயரத்தை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தப் படுகொலை ஏன் ஒரு மையப் புள்ளியாகத் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆய்வு தொடர்பாக சுருக்கமான ஓர் அலசல் கீழே தரப்பட்டுள்ளது. கொலைக்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை ஒரு தற்செயலான தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, அது 2000ஆம் ஆண்டில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவச் சூழலின் தவிர்க்க முடியாத விளைவாகும். அரசின் பாதுகாப்புப் படைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தண்டனையின்மையுடன் பெரும் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலகட்டத்தில், ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஏன் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு இலக்கானார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணியை ஆராய்வது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது. 2000ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை 1995இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், மோதல்கள் தொடர்ந்து நீடித்தன. யாழ்ப்பாணம் ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 512ஆவது பிரிகேட்டின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நகரம் முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டிருந்ததுடன், இரவு நேரங்களில் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒட்டுக் குழுக்கள்’ என்று அழைக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. இவை அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரச படைகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பங்கு அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மிக முக்கியமான அரச ஆதரவு துணை இராணுவக் குழு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆகும். அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருள் ஆதரவுடன், தண்டனையின்மையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அவர்களை அச்சுறுத்துதல் மற்றும் இலக்கு வைத்துக் கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக ஈ.பி.டி.பி மீது பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பின்னர் வந்த அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாகவும் பதவிகளை வகித்தனர். இது அவர்களின் அரசியல் செல்வாக்கையும், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்ற பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 2000 பொதுத் தேர்தல் அக்டோபர் 10, 2000 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தல், நிமலராஜனின் கொலைக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் போர்க்காலத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் வன்முறைகள், வாக்காளர் மோசடி மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாக நிமலராஜன் தனது செய்திகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்தச் செய்திகள், கொலைக்கான நேரடி நோக்கத்தை நிறுவுவதில் முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க எச்சரிக்கையின் பின்னணியில். தேர்தலில் ஈ.பி.டி.பி. நான்கு ஆசனங்களை வென்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கு நிமலராஜனின் செய்திகளே ஒரு காரணம் என அக்கட்சி கருதியதாக நிமலராஜனே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு நேர்காணலில், “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிமலராஜன் தனது விவகாரங்களை நடத்திக் கொண்டிருப்பதாக” அவர் எச்சரித்திருந்தார். இந்த அரசியல் சூழல், நிமலராஜனின் ஊடகப் பணிக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறி, அவரது படுகொலைக்கு வழிவகுத்தது. யாழ்ப்பாணத்தின் குரல்: மயில்வாகனம் நிமலராஜன் மயில்வாகனம் நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள், தமிழ் நாளிதழான வீரகேசரி, சிங்கள வார இதழான ராவய மற்றும் தமிழ்நெற் இணையதளம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிய ஒரு பன்மொழி ஊடகவியலாளர் ஆவார். போரினால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய மிகச் சில சுயாதீனக் குரல்களில் ஒருவராக அவர் விளங்கினார். குண்டுவெடிப்புகள், இராணுவ நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள், அரசியல் ஊழல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும் போருக்கு மத்தியில் தமிழ் மக்களின் அன்றாடப் போராட்டங்கள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அவர் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், சைக்கிளில் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, தொலைபேசி மூலம் லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு தனது செய்திகளை வாசித்துக் காட்டுவார். அவரது பணி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சென்ற ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது. அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் அவரது படுகொலைக்கு முன்னதாக, நிமலராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலமுறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான அவரது செய்திகளுக்குப் பிறகு, ஈ.பி.டி.பியினரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். “தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், அந்த அழைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவருக்குப் பதில் கிடைத்தது. கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, இராணுவத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று, தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புகைப்படங்களை அனுப்பத் திட்டமிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியபோது, கொழும்பில் உள்ள ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் கேட்டதற்காகவே அவற்றைச் சேகரித்ததாக நிமலராஜன் விளக்கினார். படுகொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கூட, அவர் இராணுவத்தினரால் மீண்டும் விசாரிக்கப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக அவரை அமைதியாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் முன்னறிவிப்புகளாகவே இருந்தன. தாக்குதல் மற்றும் படுகொலை: நிகழ்வுகளின் காலவரிசை தாக்குதல் நடந்த இரவின் விவரங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அரசின் பாதுகாப்புப் பொறிமுறை எவ்வளவு படுமோசமாகத் தோல்வியடைந்தது என்பதை அம்பலப்படுத்துகின்றன. இது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சந்தித்த அதிர்ச்சியையும், நீதிக்காக அவர்கள் எதிர்கொண்ட நீண்ட போராட்டத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது. தாக்குதலின் இரவு அக்டோபர் 19, 2000 அன்று இரவு, யாழ்ப்பாணம் கடுமையான ஊரடங்குச் சட்டத்தின் கீழ் இருந்தது. திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக நகரம் இருளில் மூழ்கியிருந்தது. இரவு சுமார் 9:45 மணியளவில், நிமலராஜன் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தனது படிக்கும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், வானொலியில் பிபிசி தமிழோசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம், இரண்டு ஆயுததாரிகள் வீட்டினுள் நுழைந்தனர். ஒருவன் நிமலராஜனின் தந்தையை ஒரு கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினான். அதே நேரத்தில், மற்றொருவன் நிமலராஜனின் அறைக்குள் நுழைந்து அவரை நோக்கி மூன்று முறை சுட்டான். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயது மருமகன் பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் தப்பிச் செல்லும் போது ஒரு கைக் குண்டினை வீசினர், அது பொது அறையின் நடுவே வெடித்துச் சிதறியது. இதில் நிமலராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடிப் பின்விளைவுகள் தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நிமலராஜனின் மைத்துனர் உடனடியாக அருகிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 15-20 நிமிடங்கள் ஆனது. ஆனால், அவர்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வாகன உதவியை வழங்கவில்லை. இறுதியில், ஒரு அயலவரின் சிறிய உழவு இயந்திரத்தின் (லாண்ட் மாஸ்டர்) பெட்டியில் நிமலராஜனின் உடலையும், படுகாயமடைந்த மூன்று குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சென்றடைய அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கடுமையான ஊரடங்கு மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரத்தில், அரச படைகளின் தலையீடு இன்றி தாக்குதல் நடத்துவதும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதும் எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்தத் துயர நிகழ்வு, நீதியை வழங்கும் நோக்கம் கொண்டிராத ஒரு தோல்வியுற்ற விசாரணைக்கே வழிவகுத்தது. விசாரணை நிமலராஜன் படுகொலையில் விசாரணை என்பது நீதிக்கான ஒரு கருவியாகச் செயல்படவில்லை; மாறாக, அது அரச ஆதரவு பெற்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலைத் திட்டமிட்டுச் சிதைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே விளங்கியது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு மரணம் தொடர்பான விசாரணை சுயாதீனமாகவும், முழுமையாகவும், உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். நிமலராஜன் வழக்கில், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டன. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பகட்ட தோல்விகள் விசாரணையின் முதல் சில மணி நேரங்களிலேயே மிக மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன. இதுவே வழக்கின் அடித்தளத்தைச் சிதைத்தது. குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பாதுகாக்கத் தவறியது: உயர் பாதுகாப்பு வலயத்தில் கொலை நடந்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வலையத்தை அமைக்கவில்லை. இதனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆவணப்படுத்தத் தவறியது: குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது பிற்காலப் பகுப்பாய்வுகளுக்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை இல்லாமற் செய்தது. தடயவியல் சான்றுகளைச் சேகரிக்கத் தவறியது: கைரேகைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டின் பாகங்கள் உடனடியாகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவில்லை. இந்த ஆரம்பகட்டத் தவறுகள், விசாரணை ஒருபோதும் தீவிரமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும். சாட்சியங்கள் மற்றும் சாட்சியங்களை கையாண்ட விதம் விசாரணையின் போது சாட்சியங்களும் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டன. இது நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்தது. தாமதமான விசாரணைகள்: கொலை நடந்த இரவில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த பல ஆண்டுகள் ஆனது. நிமலராஜனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெற விசாரணையை மேற்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். தடயவியல் தாமதங்கள்: சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டின் பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பகுப்பாய்வு முடிவுகள் வெளிவர மேலும் பல மாதங்கள் தாமதமானது. தவறான முன்னுரிமைகள்: நிமலராஜனுக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விசாரணையாளர்கள் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்வது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சந்தேக நபர்கள்: கைதுகளும் தண்டனையின்மையும் விசாரணை இறுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது திரும்பியது. ஜெகன், முரளி, பாஷா மற்றும் நெப்போலியன் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டத் தவறின. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதன் மூலம் சட்டரீதியாக பயனற்றதாகிவிட்டன, இது மேலதிக விசாரணையின்றி அவற்றை நிராகரிக்க அதிகாரிகளுக்கு ஒரு வசதியான காரணத்தை வழங்கியது, இதன் மூலம் வழக்கின் ஒரு முக்கிய தூண் தகர்க்கப்பட்டது. ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கொலைக்கான நோக்கம் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒருபோதும் பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. இது விசாரணையின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்தது. முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான நெப்போலியன் போன்றவர்கள், பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இது அரச தரப்பினரின் உடந்தையை உறுதிசெய்து, இலங்கையில் வேரூன்றியிருந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்தது. நீதியின் தேக்கம் (2004-2021) 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 நவம்பரில், சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்தது. இதன் விளைவாக, கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 21 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் முழுமையான தோல்வியை உறுதிப்படுத்தியது. “நிமலராஜன் படுகொலை விசாரணையின் விளைவு”: ஒரு அச்சமூட்டும் முன்னுதாரணம் நிமலராஜன் படுகொலை கொலையாளிகள் தண்டிக்கப்படாதது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தக் கொலைக்குப் பிறகு, 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்புக்கூறப்படவில்லை. இந்தத் தண்டனையின்மைக் கலாச்சாரம், ஊடகவியலாளர்களிடையே ஒரு ஆழமான அச்சத்தை விதைத்தது. இதன் விளைவாக, பலர் சுய தணிக்கையை மேற்கொண்டனர், சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இது சுயாதீன ஊடகவியலத்தின் குரல்வளையை நெரித்தது. நிமலராஜனின் கொலை, அவரது துணிச்சலான ஊடகப் பணியை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் படுகொலையாகும். ஆரம்பம் முதலே, விசாரணை வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது: குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடம் பாதுகாக்கப்படவில்லை, சாட்சியங்கள் தாமதமாக விசாரிக்கப்பட்டன, மேலும் முக்கிய சந்தேக நபர்கள், குறிப்பாக அரசியல் செல்வாக்குள்ளவர்கள், ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு, அரசு மற்றும் அரசு ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாகத் தவறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமது மகன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்காத நிலையில் நிமலராஜனின் பெற்றோர் வெளிநாட்டிலேயே இறந்துபோனார்கள் என்பது, இந்த நீதியின்மையின் தலைமுறை கடந்த துயரத்தின் சான்றாகும். ஆசிரியர் குறிப்பு: NotebookLM உதவியுடன் ITJP அறிக்கையைக் கொண்டு வீடியோ பதிவு மற்றும் அறிக்கையின் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://maatram.org/articles/12294

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

2 days 14 hours ago

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல்

KILLING-SRI-LANKAN-JOURNALISTS_THE-CASE-

Photo, ITJP

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளின் ஒரு முக்கியத் திருப்புமுனையாகவும், தசாப்தங்களாக நீடிக்கும் தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் குறியீடாகவும் மாறியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் நிமலராஜன் மயில்வாகனத்தின் படுகொலை வழக்கு தொடர்பாக ITJP அண்மையில் விரிவான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இந்த ஆய்வு, நிமலராஜனின் படுகொலைக்குப் பின்னணியில் உள்ள அரசியல் சூழல், உத்தியோகபூர்வ விசாரணையில் ஏற்பட்ட திட்டமிட்ட தோல்விகள், மற்றும் இலங்கையின் நீதிப் பொறிமுறை நீதி வழங்கத் தவறியதன் பரந்த தாக்கங்களை ஆழமாக ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு தனிநபரின் துயரத்தை ஆவணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் இந்தப் படுகொலை ஏன் ஒரு மையப் புள்ளியாகத் தொடர்கிறது என்பதையும் இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. ஆய்வு தொடர்பாக சுருக்கமான ஓர் அலசல் கீழே தரப்பட்டுள்ளது.

கொலைக்கான அரசியல் மற்றும் சமூகச் சூழல்

மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை ஒரு தற்செயலான தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக, அது 2000ஆம் ஆண்டில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் மற்றும் இராணுவச் சூழலின் தவிர்க்க முடியாத விளைவாகும். அரசின் பாதுகாப்புப் படைகளும், அவற்றுடன் இணைந்து செயல்பட்ட துணை இராணுவக் குழுக்களும் யாழ்ப்பாணத்தில் தண்டனையின்மையுடன் பெரும் செல்வாக்குச் செலுத்திய ஒரு காலகட்டத்தில், ஒரு சுயாதீன ஊடகவியலாளர் ஏன் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு இலக்கானார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பின்னணியை ஆராய்வது மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.

2000ஆம் ஆண்டில், இலங்கையின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டை 1995இல் இலங்கை இராணுவம் கைப்பற்றியிருந்தாலும், மோதல்கள் தொடர்ந்து நீடித்தன. யாழ்ப்பாணம் ஒரு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 512ஆவது பிரிகேட்டின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. நகரம் முழுவதும் இராணுவச் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டிருந்ததுடன், இரவு நேரங்களில் கடுமையான ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், அரசாங்கத்தின் ஆதரவுடன் ‘ஒட்டுக் குழுக்கள்’ என்று அழைக்கப்பட்ட துணை இராணுவக் குழுக்கள் பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயல்பட்டன. இவை அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கும், தகவல்களைச் சேகரிப்பதற்கும், அரச படைகளின் நலன்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) பங்கு

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட மிக முக்கியமான அரச ஆதரவு துணை இராணுவக் குழு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) ஆகும். அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். ஈ.பி.டி.பி. அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருள் ஆதரவுடன், தண்டனையின்மையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தமிழ் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்தல், அவர்களை அச்சுறுத்துதல் மற்றும் இலக்கு வைத்துக் கொலை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக ஈ.பி.டி.பி மீது பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. டக்ளஸ் தேவானந்தா மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள் பின்னர் வந்த அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாகவும் பதவிகளை வகித்தனர். இது அவர்களின் அரசியல் செல்வாக்கையும், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்ற பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது.

அக்டோபர் 2000 பொதுத் தேர்தல்

அக்டோபர் 10, 2000 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தல், நிமலராஜனின் கொலைக்கான உடனடித் தூண்டுதலாக அமைந்தது. இந்தப் போர்க்காலத் தேர்தலின் போது, ஈ.பி.டி.பி.யினர் தேர்தல் வன்முறைகள், வாக்காளர் மோசடி மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதாக நிமலராஜன் தனது செய்திகளின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். இந்தச் செய்திகள், கொலைக்கான நேரடி நோக்கத்தை நிறுவுவதில் முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா விடுத்த பகிரங்க எச்சரிக்கையின் பின்னணியில். தேர்தலில் ஈ.பி.டி.பி. நான்கு ஆசனங்களை வென்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் எதிர்பார்த்த பெரும்பான்மையைப் பெறத் தவறியதற்கு நிமலராஜனின் செய்திகளே ஒரு காரணம் என அக்கட்சி கருதியதாக நிமலராஜனே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். தேர்தலுக்குப் பின்னர், டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஒரு நேர்காணலில், “உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நிமலராஜன் தனது விவகாரங்களை நடத்திக் கொண்டிருப்பதாக” அவர் எச்சரித்திருந்தார். இந்த அரசியல் சூழல், நிமலராஜனின் ஊடகப் பணிக்கு நேரடி அச்சுறுத்தலாக மாறி, அவரது படுகொலைக்கு வழிவகுத்தது.

யாழ்ப்பாணத்தின் குரல்: மயில்வாகனம் நிமலராஜன்

மயில்வாகனம் நிமலராஜன், பிபிசி தமிழ் மற்றும் ஆங்கில சேவைகள், தமிழ் நாளிதழான வீரகேசரி, சிங்கள வார இதழான ராவய மற்றும் தமிழ்நெற் இணையதளம் உள்ளிட்ட பல ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து பணியாற்றிய ஒரு பன்மொழி ஊடகவியலாளர் ஆவார். போரினால் சிதைக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிய மிகச் சில சுயாதீனக் குரல்களில் ஒருவராக அவர் விளங்கினார். குண்டுவெடிப்புகள், இராணுவ நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள், அரசியல் ஊழல்கள், தேர்தல் முறைகேடுகள் மற்றும் போருக்கு மத்தியில் தமிழ் மக்களின் அன்றாடப் போராட்டங்கள் எனப் பலதரப்பட்ட விடயங்களை அவர் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தார். கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிக் குறைபாடுகளுக்கு மத்தியிலும், சைக்கிளில் பயணம் செய்து செய்திகளைச் சேகரித்து, தொலைபேசி மூலம் லண்டனில் உள்ள பிபிசி அலுவலகத்திற்கு தனது செய்திகளை வாசித்துக் காட்டுவார். அவரது பணி, யாழ்ப்பாணத்தில் நடக்கும் நிகழ்வுகளை வெளி உலகிற்கு கொண்டு சென்ற ஒரு முக்கிய இணைப்பாக இருந்தது.

அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும்

அவரது படுகொலைக்கு முன்னதாக, நிமலராஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலமுறை மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடர்பான அவரது செய்திகளுக்குப் பிறகு, ஈ.பி.டி.பியினரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாக அவரே தனது நண்பர்களிடம் தெரிவித்திருந்தார். “தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு ஈ.பி.டி.பி.யே காரணமாக இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அவர் பொலிஸாரிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தும், அந்த அழைப்புகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே அவருக்குப் பதில் கிடைத்தது.

கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு, இராணுவத்தினர் அவரது வீட்டிற்குச் சென்று, தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை அவர் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புகைப்படங்களை அனுப்பத் திட்டமிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியபோது, கொழும்பில் உள்ள ‘ராவய’ பத்திரிகையின் ஆசிரியர் கேட்டதற்காகவே அவற்றைச் சேகரித்ததாக நிமலராஜன் விளக்கினார். படுகொலைக்கு சில மணித்தியாலங்களுக்கு முன்பு கூட, அவர் இராணுவத்தினரால் மீண்டும் விசாரிக்கப்பட்டதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF) பதிவு செய்துள்ளது. இந்த நிகழ்வுகள் தற்செயலானவை அல்ல, மாறாக அவரை அமைதியாக்குவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் முன்னறிவிப்புகளாகவே இருந்தன.

தாக்குதல் மற்றும் படுகொலை: நிகழ்வுகளின் காலவரிசை

தாக்குதல் நடந்த இரவின் விவரங்கள், உயர் பாதுகாப்பு வலயத்தில் அரசின் பாதுகாப்புப் பொறிமுறை எவ்வளவு படுமோசமாகத் தோல்வியடைந்தது என்பதை அம்பலப்படுத்துகின்றன. இது பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் சந்தித்த அதிர்ச்சியையும், நீதிக்காக அவர்கள் எதிர்கொண்ட நீண்ட போராட்டத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

தாக்குதலின் இரவு

அக்டோபர் 19, 2000 அன்று இரவு, யாழ்ப்பாணம் கடுமையான ஊரடங்குச் சட்டத்தின் கீழ் இருந்தது. திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக நகரம் இருளில் மூழ்கியிருந்தது. இரவு சுமார் 9:45 மணியளவில், நிமலராஜன் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் தனது படிக்கும் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அவரது தந்தை, கணபதிப்பிள்ளை மயில்வாகனம், வானொலியில் பிபிசி தமிழோசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம், இரண்டு ஆயுததாரிகள் வீட்டினுள் நுழைந்தனர்.

ஒருவன் நிமலராஜனின் தந்தையை ஒரு கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கினான். அதே நேரத்தில், மற்றொருவன் நிமலராஜனின் அறைக்குள் நுழைந்து அவரை நோக்கி மூன்று முறை சுட்டான். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயது மருமகன் பிரசன்னா ஆகியோர் காயமடைந்தனர். தாக்குதல்தாரிகள் தப்பிச் செல்லும் போது ஒரு கைக் குண்டினை வீசினர், அது பொது அறையின் நடுவே வெடித்துச் சிதறியது. இதில் நிமலராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தந்தை, தாய் மற்றும் மருமகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

உடனடிப் பின்விளைவுகள்

தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த குடும்ப உறுப்பினர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நிமலராஜனின் மைத்துனர் உடனடியாக அருகிலுள்ள இராணுவச் சோதனைச் சாவடிக்கு ஓடிச் சென்று உதவி கோரினார். இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 15-20 நிமிடங்கள் ஆனது. ஆனால், அவர்கள் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல வாகன உதவியை வழங்கவில்லை.

இறுதியில், ஒரு அயலவரின் சிறிய உழவு இயந்திரத்தின் (லாண்ட் மாஸ்டர்) பெட்டியில் நிமலராஜனின் உடலையும், படுகாயமடைந்த மூன்று குடும்ப உறுப்பினர்களையும் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததால், வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருந்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சென்றடைய அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. கடுமையான ஊரடங்கு மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு நகரத்தில், அரச படைகளின் தலையீடு இன்றி தாக்குதல் நடத்துவதும், பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதும் எவ்வளவு எளிதாக இருந்தது என்பதை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்தத் துயர நிகழ்வு, நீதியை வழங்கும் நோக்கம் கொண்டிராத ஒரு தோல்வியுற்ற விசாரணைக்கே வழிவகுத்தது.

விசாரணை

நிமலராஜன் படுகொலையில் விசாரணை என்பது நீதிக்கான ஒரு கருவியாகச் செயல்படவில்லை; மாறாக, அது அரச ஆதரவு பெற்ற குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பொறுப்புக்கூறலைத் திட்டமிட்டுச் சிதைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாகவே விளங்கியது. சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ், ஒரு மரணம் தொடர்பான விசாரணை சுயாதீனமாகவும், முழுமையாகவும், உடனடியாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். நிமலராஜன் வழக்கில், விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த அடிப்படைக் கோட்பாடுகள் மீறப்பட்டன.

குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஆரம்பகட்ட தோல்விகள்

விசாரணையின் முதல் சில மணி நேரங்களிலேயே மிக மோசமான தவறுகள் இழைக்கப்பட்டன. இதுவே வழக்கின் அடித்தளத்தைச் சிதைத்தது.

  • குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பாதுகாக்கத் தவறியது: உயர் பாதுகாப்பு வலயத்தில் கொலை நடந்த போதிலும், பொலிஸார் சம்பவ இடத்தைச் சுற்றிப் பாதுகாப்பு வலையத்தை அமைக்கவில்லை. இதனால், முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம்.

  • ஆவணப்படுத்தத் தவறியது: குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புகைப்படங்கள் அல்லது வரைபடங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது பிற்காலப் பகுப்பாய்வுகளுக்கு அவசியமான அடிப்படைத் தகவல்களை இல்லாமற் செய்தது.

  • தடயவியல் சான்றுகளைச் சேகரிக்கத் தவறியது: கைரேகைகள் மற்றும் பிற தடயவியல் சான்றுகள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டின் பாகங்கள் உடனடியாகப் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படவில்லை.

இந்த ஆரம்பகட்டத் தவறுகள், விசாரணை ஒருபோதும் தீவிரமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கான தெளிவான அறிகுறிகளாகும்.

சாட்சியங்கள் மற்றும் சாட்சியங்களை கையாண்ட விதம்

விசாரணையின் போது சாட்சியங்களும் மிகவும் மோசமாகக் கையாளப்பட்டன. இது நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மேலும் குறைத்தது.

  • தாமதமான விசாரணைகள்: கொலை நடந்த இரவில் கடமையில் இருந்த இராணுவ வீரர்களிடம் விசாரணை நடத்த பல ஆண்டுகள் ஆனது. நிமலராஜனுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் குறித்து அவரது குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமும் வாக்குமூலம் பெற விசாரணையை மேற்கொள்பவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர்.

  • தடயவியல் தாமதங்கள்: சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டின் பாகங்கள் பகுப்பாய்வுக்காக அனுப்பப்படுவதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது. பகுப்பாய்வு முடிவுகள் வெளிவர மேலும் பல மாதங்கள் தாமதமானது.

  • தவறான முன்னுரிமைகள்: நிமலராஜனுக்கு வந்த அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகளைப் பற்றி விசாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விசாரணையாளர்கள் அவரது வங்கிக் கணக்கை ஆய்வு செய்வது போன்ற பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

சந்தேக நபர்கள்: கைதுகளும் தண்டனையின்மையும்

விசாரணை இறுதியில் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் மீது திரும்பியது. ஜெகன், முரளி, பாஷா மற்றும் நெப்போலியன் போன்ற முக்கிய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டத் தவறின.

  • கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், தாங்கள் பொலிஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதன் மூலம் சட்டரீதியாக பயனற்றதாகிவிட்டன, இது மேலதிக விசாரணையின்றி அவற்றை நிராகரிக்க அதிகாரிகளுக்கு ஒரு வசதியான காரணத்தை வழங்கியது, இதன் மூலம் வழக்கின் ஒரு முக்கிய தூண் தகர்க்கப்பட்டது.

  • ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, கொலைக்கான நோக்கம் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், ஒருபோதும் பொலிஸாரால் விசாரிக்கப்படவில்லை. இது விசாரணையின் நம்பகத்தன்மையை முற்றிலுமாகச் சிதைத்தது.

  • முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான நெப்போலியன் போன்றவர்கள், பாதுகாப்புப் படைகளின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இது அரச தரப்பினரின் உடந்தையை உறுதிசெய்து, இலங்கையில் வேரூன்றியிருந்த தண்டனையின்மைக் கலாச்சாரத்தின் தெளிவான எடுத்துக்காட்டாக அமைந்தது.

நீதியின் தேக்கம் (2004-2021)

2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த வழக்கு கிட்டத்தட்ட முழுமையாக முடங்கியது. விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 நவம்பரில், சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்தது. இதன் விளைவாக, கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் பிணையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 21 வருடங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இறுதி முடிவு, இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் முழுமையான தோல்வியை உறுதிப்படுத்தியது.

“நிமலராஜன் படுகொலை விசாரணையின் விளைவு”: ஒரு அச்சமூட்டும் முன்னுதாரணம்

நிமலராஜன் படுகொலை கொலையாளிகள் தண்டிக்கப்படாதது, இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணத்தை உருவாக்கியது. இந்தக் கொலைக்குப் பிறகு, 2000 முதல் 2010 வரையான காலப்பகுதியில் குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு யாரும் பொறுப்புக்கூறப்படவில்லை. இந்தத் தண்டனையின்மைக் கலாச்சாரம், ஊடகவியலாளர்களிடையே ஒரு ஆழமான அச்சத்தை விதைத்தது. இதன் விளைவாக, பலர் சுய தணிக்கையை மேற்கொண்டனர், சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறினர்.இது சுயாதீன ஊடகவியலத்தின் குரல்வளையை நெரித்தது.

நிமலராஜனின் கொலை, அவரது துணிச்சலான ஊடகப் பணியை அமைதியாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அரசியல் படுகொலையாகும். ஆரம்பம் முதலே, விசாரணை வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது: குற்றச்சம்பவம் இடம்பெற்ற இடம் பாதுகாக்கப்படவில்லை, சாட்சியங்கள் தாமதமாக விசாரிக்கப்பட்டன, மேலும் முக்கிய சந்தேக நபர்கள், குறிப்பாக அரசியல் செல்வாக்குள்ளவர்கள், ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கு, அரசு மற்றும் அரசு ஆதரவு துணை இராணுவக் குழுக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை நீதிப் பொறிமுறை தொடர்ச்சியாகத் தவறி வருவதை எடுத்துக்காட்டுகிறது. இதன் விளைவாக, இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரானவன்முறைகளுக்கு ஒரு அபாயகரமான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டுள்ளது. தமது மகன் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கிடைக்காத நிலையில் நிமலராஜனின் பெற்றோர் வெளிநாட்டிலேயே இறந்துபோனார்கள் என்பது, இந்த நீதியின்மையின் தலைமுறை கடந்த துயரத்தின் சான்றாகும்.

ஆசிரியர் குறிப்பு: NotebookLM உதவியுடன் ITJP அறிக்கையைக் கொண்டு வீடியோ பதிவு மற்றும் அறிக்கையின் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

https://maatram.org/articles/12294

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

2 days 14 hours ago
காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி Photo, TAMILGUARDIAN சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன். புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே. சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025). செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்? நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்? பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது. 1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம். காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது. மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது. வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும். நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது. பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் * கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை * 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி https://maatram.org/articles/12285

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

2 days 14 hours ago

காணாமலாக்கப்பட்ட 158 பேர் பற்றிய உண்மைக்கான நம்பிக்கை ஒளி

190912-EE-Eastern-University-massacre5.j

Photo, TAMILGUARDIAN

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நான் செம்மணியில் நின்று அகழ்வாராய்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு மேலதிக செயல்முறைகளுக்காக பொதி செய்யப்பட்டிருந்தன. மிகவும் கடினமான மற்றும் சிரமமான பணி. என்னைச் சுற்றி நீதிபதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை குழுக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொலிஸார், பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும், “இங்கு புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?” என்ற புதிரைத் தீர்க்க முயற்சிப்பதைப் பார்த்தேன்.

புதைக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இப்படியொரு நாள் வரும் என்று எப்போதாவது நினைத்திருப்பார்களா என்று நான் நினைத்தேன். அவர்களில் சிலர் இன்னும் தங்களின் பாடசாலைப் பைகளை சுமந்து கொண்டு செல்லும் குழந்தைகள் மட்டுமே.

சிறையில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் இந்த மனித புதைகுழியைப் பற்றியும் அதன் கீழ் புதைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் நீதிமன்றில் வைத்து அம்பலப்படுத்தினார். இது உண்மையா? இல்லையா? அவர் சொல்வது சரியா? இன்னும் பலர் நிலத்தின் கீழே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? இன்று வரை, தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூட்டுத்தொகுதிகள் எண்ணிக்கை 231 என அறிவிக்கப்பட்டுள்ளது (வீரகேசரி, செப்டம்பர் 04, 2025).

செப்டம்பர் 5, 1990 அன்று நான் கிழக்குப் பல்கலைக்கழக அகதிகள் முகாமில் நூற்றுக்கணக்கானோருடன் நான் இருந்தபோது என்ன உணர்வோடு இருந்தேன் என்பதில் என் மனம் அலைவதை என்னால் தடுக்க முடியவில்லை. அங்கிருந்து 158 பேர் ஆயுதப்படைகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று வரை, அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அவர்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தபோது, அவர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பற்றி அவர்களின் மனங்களில் என்ன கடந்து சென்றிருக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை வருடங்களாக அவர்களது குடும்பங்கள் தங்களின் கனத்த இதயங்களில் என்ன சுமந்துகொண்டிருப்பார்கள் என்பது பற்றியும் நான் நினைக்கிறேன். நான் என்னையே கேட்டுக் கொள்கிறேன் – என்னைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

நான் எப்போதாவது அவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்படுவதைப் பார்ப்பேனா அல்லது அவர்கள் உயிருடன் திரும்பி வருவதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேனா? ஆதாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வரலாறு எப்போதாவது எங்கள் கதைகளைச் சொல்லும். நீதி நிஜமாக நிறைவேறாவிட்டால், பின்னர் தெய்வீகமாகவோ அது நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். அதைப் பார்ப்பதற்கு நான் உயிருடன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் வந்தாறுமூலையிலிருந்து அழைத்துச் சென்ற அந்த 158 பேரின் பாரம்பரியம் தொடரும். அரசாங்க அறிக்கைகளிலும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் அவர்கள் இன்னும் ‘காணாமல் போன நபர்கள்’ என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

கிழக்கு மாகாணத்தின் காணாமல் போனவர்கள் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி நான் பட்டியலிட்ட நபர்களிடம் அதிகாரிகள் எப்போதாவது விசாரணை நடத்தியிருக்கிறார்களா? விசாரணை நடாத்தியிருந்தால் விசாரணை முடிவுகள் எங்கே? விசாரணை நடாத்தவில்லை என்றால் ஏன்? வேறொரு வழக்கில் ரத்நாயக்கே போன்ற ஒருவர் விரல் நீட்டி இது தான் நடந்தது என்று சொல்லக்கூடியவராக இருப்பாரா, அவர்களின் கடைசி நாட்களில் கூட ஆறுதல் பெற காத்திருக்கிறேன். வேறொரு வழக்கில் ரத்னாயக்கா அம்பலப்படுத்தியது போல ஒருவர், அவரது வாழ்க்கையின் இறுதியிலும் கூட, ஏதேனும் ஆறுதல் பெற முடியும் வகையில் விரல் நீட்டி உண்மையில் என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா? அந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன்.

செப்டம்பர் 5, 1990 மற்றும் அந்த நாட்களைச் சுற்றி எதையாவது பார்த்த மற்றவர்கள் அப்பகுதியில் உள்ளனரா, அன்றைய நாட்களின் என்ன நடந்தது என்பது பற்றி தகவல்களை  கொடுத்துதவ முடியுமா? வதந்திகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத கதைகளிலிருந்து நாம் கேள்விப்பட்டது என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் முதலில் வாழைச்சேனை காகித தொழிற்சாலை முகாமில் வைக்கப்பட்டு பின்னர் நாவலடி முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? சம்பவம் இடம்பெற்று மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 8, 1990 அன்று அகதிகள் முகாமுக்கு வந்த ஜெனரல் என்னிடம் சொன்னார், “அவர்கள் அனைவரும் எல்.ரி.ரி.ஈ. அவர்களைப் பற்றி கேட்காதே.” அவர் அவ்வாறு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? நான் இதை ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், விசாரணையில் வேறு எதுவும் வெளிவராதது ஏன்?

பல சந்தர்ப்பங்களில், சிறுபான்மையினர், நாட்டில் எந்த உரிமையும் இல்லாத வெளியாட்கள் என்று கருதப்படுகிறார்கள். உதாரணமாக, முஸ்லிம்கள் அரேபியாவுக்கு செல்ல வேண்டும் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு முன்னாள் அமைச்சர் ஒருமுறை கூறியது என் நினைவில் உள்ளது. வெறுப்புப் பேச்சு சட்டங்களின் கீழ் கூட அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்போது காணாமல் போனவர்கள் பற்றிய புதிய அலுவலகம் ஒன்று இருப்பதாக நான் பார்க்கிறேன். ஆனால் ஆரம்பத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுக்களிடமும் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்திடமும் செய்யப்பட்ட முறைப்பாடுகள் இன்னும் ஏன் நிலுவையில் உள்ளன அல்லது அதிகாரப்பூர்வமாக முத்திரையிடப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படுகிறேன். இது சில சர்வதேச சட்டங்கள் அல்லது ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே செய்யப்படுகிறதா? புதிய அரசாங்கம் வித்தியாசமானதாக இருக்கலாம். எனவே, நான் ஓரளவு நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களைப் புறக்கணித்து, மாகாண உரிமைகளை நிராகரித்து மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் தயக்கம் காட்டுவது சந்தேகத்தை எழுப்புகிறது. இது புதிய பெயரின் கீழ் இயங்கும் அதே பழைய முறைமையா? இருப்பினும், 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை விசாரிப்பதாக ஜனாதிபதியின் சமீபத்திய வாக்குறுதி, காணாமல் போன 158 பேர் மற்றும் பல பேரின் குடும்பங்களுக்கு சிறிது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

1990 கிழக்குக்கு பயங்கரமான ஆண்டாக இருந்தது. முஸ்லிம் கிராமங்கள் இரண்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது, கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அகதிகள் முகாம் உருவாக்கப்பட்டது. தன்னாமுனை உட்பட தமிழ் பகுதிகளில் ஏராளமான கடத்தல்கள் மற்றும் கைதுகள் நடந்தன. இந்தச் சம்பவங்களைப் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, சித்தாண்டி மற்றும் பங்குடாவெளி போன்ற இடங்களும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களின் உடலங்களை கண்டுபிடிப்பது ஒரு பணியாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வ கோப்புகளை திறப்பது மற்றொரு பணியாகும். நாம் உடலங்களை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். அப்படி இடம்பெறாவிட்டால் கோப்புகளை ஒருபோதும் திறக்க முடியாது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செம்மணியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களைப் போல, மனித புதைக்குழிகளைக் கண்டுபிடிப்பதற்கு அதிக ரேடார் உபகரணங்களைப் பயன்படுத்துவது ஒரு பரிந்துரையாகும். உண்மையைத் தேடுவதை விரைவுபடுத்தும் அத்தகைய முயற்சிகளுக்கு புலம்பெயர் சமூகம் நிதி வழங்கலாம்.

காணாமல் போனவர்களுடன் பணிபுரிபவர்கள் எல்லா பக்கங்களிலும் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்று அவர்களோடு பணிபுரிபவர்கள் எனக்குக் கூறினார்கள். குடும்பத்தின் வருமான மார்க்கமாக இருந்த, உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மைக்காக காத்திருக்கும் இந்த குடும்பங்களுக்கு OMP இடைக்கால மனிதாபிமான உதவியாக இழப்பீடுகளைக் கருத்தில் கொள்வது நல்லது.

மரண சான்றிதழுக்கு பதிலாக குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணாமல் போனவர்களின் சான்றிதழைப் பயன்படுத்தி நில பரிமாற்றங்கள், EPF மற்றும் ETF பணம் பெறுவதில் நிர்வாக இடையூறுகள் உள்ளன என்றும் எனக்கு அறியக்கிடைத்தது. இவற்றைத் தீர்க்குமாறு நான் அரசாங்கத்திடம் பணிவுடன் கோருகிறேன். ஏனென்றால், இந்த மக்கள் கடந்த 35 ஆண்டுகளாக காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடி வருகிறார்கள், அவர்கள் அனுபவித்துவரும் வேதனைக்கு மேலதிகமாக அவர்கள் மற்றொரு சுமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடாது.

வீடுகளை இழந்த எம்.பி.க்களுக்கு சில மாதங்களுக்குள் மில்லியன் கணக்கான இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வது பொருத்தமானது. மோதலில் வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான சாதாரண மக்கள் இன்னும் கொடுப்பனவுகளுக்காக பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையான அரசியல் விருப்பம் இருந்தால், எப்போதும் ஒரு வழி இருக்கிறது. ஏற்கனவே 35 ஆண்டு சாதாரண வாழ்க்கையை இழந்த இந்த குடும்பங்களுக்கு அரசு அதை செய்து காட்ட வேண்டும்.

நான் எதையும் கேட்கவில்லை. ஆனால், பாடசாலை நாட்களில் நான் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. “கடவுள் உண்மையைப் பார்க்கிறார். ஆனால், காத்திருக்கிறார்.” நான் இதை நம்புகிறேன். என்றாவது ஒரு நாள், ஆணைக்குழு மூலமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை வெளியே வரும், செம்மணியில் நடந்ததைப் போல உலகம் உண்மையான கதையை அறியும். இந்த ‘மரகத தீவில்’ இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் வேதனை என்றென்றும் மறைக்கப்படாது.

Jeyasingam.jpg?resize=100%2C129&ssl=1பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம்
* கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
* 1990 கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை அகதி முகாம் பொறுப்பதிகாரி

https://maatram.org/articles/12285

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

2 days 14 hours ago
ஜீவனின் கமரா பாலுமகேந்திராவை நினைவூட்டும்…..! September 11, 2025 — அழகு குணசீலன் — புலம்பெயர்ந்த தேசங்களில் பலர் இயற்கை மரணத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் ஒரு பல்துறை ஆர்வலனாக ஜீவனின் மரணம் பெற்றிருக்கின்ற ஈர்ப்பு அதிகமானது. அதிசயிக்கத்தக்கது. புலம்பெயர்ந்த தேசங்களையும் கடந்து, இலங்கை, இந்தியா, சிங்கப்பூரிலும் ஜீவன் தனது கலைப்பயணத்தின் ஊடாகப் பேசப்படுகிறார். இதற்கு என்ன காரணம்? ஜீவன் ஒரு முன்னாள் ஈழப்போராளி. ஒரு ஊடகவியலாளர். ஒலி, ஒளி பரப்பாளர், படப்பிடிப்பாளர். நாடக, குறுந்திரை தயாரிப்பாளர். சிறந்த தொடர்பாளர். கட்டுரையாளர், பேச்சாளர், விமர்சகர். சினிமாவிலும் தேர்ச்சி பெற்ற பல்துறை ஆற்றல் கொண்டவர். இவற்றின் பிரதிபலிப்பாக மரணித்தும், மறக்காத நினைவுகளோடு பலரும் அவருடனான நினைவுகளை இரைமீட்கின்றனர். எனக்கும் ஜீவனுக்குமான முதல் சந்திப்பு எப்போது, எங்கு ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாக சொல்லமுடியவில்லை. எனது நினைவு சரியென்றால் 1990 நடுப்பகுதியில் சூரிச்சில் இடம்பெற்ற இரு கவிதை நூல்களின் விமர்சன நிகழ்வு என்று நினைக்கிறேன். சுவிஸ் ரவியின் “செட்டை கழற்றிய நாங்கள்”, மற்றும் காத்தான்குடி என்.ஆத்மாவின் “அதிகாலை நீல இருள்” கவிதை நூல்கள் அவை. அந்த நிகழ்வுதான் சுவிஸில் நான் கலந்து கொண்ட முதலாவது கலை, இலக்கிய நிகழ்வு. ஜீவனின், போராட்ட பின்னணி, கலை, இலக்கிய ஆர்வம், அப்போது மாற்றுக்கருத்தாளர்கள் ஒன்று கூடுவதற்கான சந்தர்ப்பம் என்பனவற்றின் அடிப்படையில் இதனை குறிப்பிடுகிறேன். அதற்கு பின்னர் பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகள், அரசியல் கலந்துரையாடல்களில் இந்த உறவு தொடர்ந்தது. எங்களை ஜீவனுடன் நெருக்கமாக பிணைத்த சில விடயங்களை குறிப்பிட்டால், அவற்றினூடாக அவரின் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும். தமிழ் ஏடு பத்திரிகை, லண்டன் ரி.பி.சி.வானொலி, பாரிஸ் ரி.ஆர்.ரி வானொலி, தொலைக்காட்சி என்பன அவற்றுள் சில. மேலும் “FLUCHT” அமைப்பினால் நடாத்தப்பட்ட சிறார்களுக்கான ஓவியப்போட்டி, ஜீவனின் குறும்படங்கள் போன்ற வற்றையும் குறிப்பிடலாம். (FLUCHT: ஜேர்மன் மொழியில் அகதியாதல், தப்பித்த்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டது) ஓவியப்போட்டிக்கு பிரதான நடுவராக ஈரான் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஒருவரை அழைத்திருந்தோம். மற்றைய இரு நடுவர்களுள் ஓவியக்கலை அழகியலில் ஈடுபாடு கொண்ட ஜீவனும் ஒருவர் என்று நினைக்கிறேன். எனினும் எனக்கு நிச்சயமாக குறிப்பிட முடியாதுள்ளது. அன்றைய சூழலில் மாற்று சினிமா, மாற்று மொழி சினிமா குறித்த சிறந்த விமர்சகர்களாக ஐரோப்பாவில் இருந்த சில தமிழர்களுள் ஜீவனும் ஒருவர். அச்சுறுத்தல்களுக்கும், ஜனநாயகத்திற்கு முரணான கருத்துச்சுதந்திர தடைகளுக்கும் மத்தியிலும் ‘பரம்’ என்று அறியப்பட்ட பாலசுப்பிரமணியத்தை ஆசிரியராகக் கொண்ட ‘தமிழ்ஏடு’ பத்திரிகையில் சினிமா விமர்சனம், அறிமுக கட்டுரைகளை ஜீவன் தொடர்ந்து எழுதினார். அப்போது தமிழ் ஏட்டில் என்னால் அரசியல் விமர்சனக்கட்டுரைகள் எழுதப்பட்டன. பண்டமாற்று போன்று இருவரும் ஒருவருக்கொருவர் எங்களுக்குள் விமர்சனங்களைச் செய்து கொள்வோம். நான் எழுதி, ஜெயந்தி மாலாவின் குரலில், ராம் ராஜ்ஜின் ரி.பி.சி. வானொலியில் ஒலிபரப்பப்பட்ட “பூகோளம்” நிகழ்ச்சி நிறைவுறும் போது எங்கள் வீட்டு தொலைபேசி அலறும். அந்த அழைப்பில் வருபவர்களுள் ஜீவன் முதன்மையானவர். அவர் நிகழ்சி குறித்த கருத்துக்களை சூடு ஆறுமுன் சொல்லுவார். ஜீவன் மூன்று குறும்படங்களையும் போட்டிக்கு தயாரித்தார். ‘எச்சில் போர்வை’, ‘நிழல் யுத்தம்’ என்பன இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை பரிசுகளையும் பெற்றுக்கொண்டன. ஜீவனை ஒரு அழகியல் கலைஞன் என்றும் குறிப்பிடலாம். காட்சிகளை அவர் படமாக்கும் விதம் அற்புதமானது. அவை வெறும், காட்சிகளோ, படங்களோ அல்ல. மனித எண்ணங்களை பிரதிபலிக்கின்ற – பார்வையாளர்களோடு நேரடியாக பேசுகின்ற கைவண்ணங்கள். அதனால்தான் ஜீவனின் கமரா மொழி பாலுமகேந்திரா பாணி என்று குறிப்பிட்டேன். ஜீவன் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய தலைசிறந்த கமராக்கலைஞன். இந்தப் பண்புகளை சிங்கப்பூரில் அவரே குறிப்பிடுகின்ற கோபாலு அண்ணர் முதல் பாலச்சந்தர் -பாலுமகேந்திராவின் அனுபவங்கள் வரை பெற்று தன்னை புடம்போட்டுக்கொண்டு சிறந்த கமராக்கலைஞனாக உயர்ந்தவர். பாரிஸ் ரி.ஆர்.ரி. தொலைக்காட்சியில் பிலிப் தேவா தயாரித்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றிலும் ஜயந்தியும், நானும் பங்களிப்பு செய்தோம். எங்கள் கதைக்கும், குரலுக்குமான காட்சியை படமாக்குவதில் ஜீவனின் கமரா மிகவும் அற்புமாக பேசியது. சுமார் 25- 30 ஆண்டுகளுக்கு முன்னரான ஒப்பீட்டளவில் இன்றையதை விடவும் தொழில்நுட்ப வசதிகள் குறைந்த அந்த காலத்தில் ஜீவனின் கைவரிசை குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. தமிழ், ஆங்கிலம், சிங்களம் பின்னர் டொச் மொழியிலும் புலமை பெற்றிருந்த ஜீவன் தனது உறவுகளை தமிழ்பரப்புக்கும் அப்பால் விரிவுபடுத்தியது வியப்புக்குரியதல்ல. அவர் எண்ணற்ற நண்பர்களை கொண்டிருந்தார். அவரது சிங்கள மொழியாற்றல், செய்தித்தொகுப்பு, ஊடக நுணுக்கங்கள் ஊடாக தமிழ்மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அமைப்பினரால் 1980 களில் நடாத்தப்பட்ட “தமிழ் ஈழத்தின் குரல்” வானொலியில் செய்தி தொகுப்பாளராகவும், வாசிப்பவராகவும் இருந்தார். சிங்கள மக்கள் மத்தியில் ஈழப்போராட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைப்பதற்கும் இந்த பணி உதவியது. இலங்கையின் இருதயம் என்று கருதப்படுகின்ற குருநாகல் மாவட்டத்தில் “புளொட்” அமைப்பு நடாத்திய நிக்கவரெட்டிய வங்கிக்கொள்ளையிலும் ஜீவன் பங்கேற்றார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்று இயக்கத்திற்கு போனதால் தான் தனது வாழ்வு தொலைந்தது என்று கவலைப்படும், எல்லா இயக்கங்களினதும் ஆயிரக்கணக்கான அன்றைய இளைஞர்களுள் ஜீவனும் ஒருவர். இறுதியாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்ட “உதயம்” கிழக்கின் வருடாந்த ஒன்று கூடலுக்கான நடன நிகழ்வொன்றை அவரே ஏற்பாடு செய்தும் தந்திருந்தார். நாங்கள் அறிந்த வகையில் வீரகீர்த்தி தமிழ்ச்செல்வம் என்ற பிரசாத்/ ஜீவன்/ அஜீவன் இன, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். அந்த வகையில் எந்த மத நம்பிக்கையின் அடிப்படையிலான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஜீவனை மதங்களோடு கட்டிப்போட விரும்பவில்லை. அஞ்சலிகள் ஜீவன். https://arangamnews.com/?p=12315

வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு

2 days 14 hours ago
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது. எனவே கற்ககோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குறித்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கோரியுள்ளனர் அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். https://jaffnazone.com/news/50542

வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு

2 days 14 hours ago

வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு

சனி, 13 செப்டம்பர் 2025 09:08 AM

வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் , வடமராட்சி பகுதியில்  சட்டவிரோத மணல் கடத்தல் கும்பல்களால் மீனவர்களின் வாடிகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டு , தீ வைக்கப்பட்டுள்ளதுடன் , மீனவர்கள் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த இரு மீனவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வடமராட்சி கற்கோவளம் சந்தைக்கு அண்மித்த பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. 

இவ்வாறு மணல் அகழப்படும் இடங்களில் ஏற்படும் பாரிய குழிகளில் மழை நீர் தேங்குவதன் ஊடாக பல்வேறு அசௌகரியங்களுக்கு அப்பகுதி மக்கள் முகம் கொடுத்து வந்த நிலையில் கடந்த மாரி காலத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த வெள்ள நீரில் விழுந்து ஒருவர் உயிரிழந்திருந்தார். 

அத்துடன் இவ்வாறான சட்டவிரோத மணில் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுமாக இருந்தால் இந்த பகுதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காண்ப்படுகிறது. 

எனவே கற்ககோவளம்- புனிதநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இவ்வாறான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் சட்டவிரோத மணல் கடத்தலில் இந்த பகுதியை சேர்ந்த குறிப்பிட்ட சிலரே ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் குறித்த நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று இனிமேல் இவ்வாறான சட்டவிரோத மணல் கடத்தல் செயற்பாட்டில் ஈடுபடவேண்டாம் என அப்பகுதியை சேர்ந்த சிலர் கோரியுள்ளனர் 

அதனை அடுத்து, அவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களை வரும் வழியிலேயே வழிமறித்து அச்சுறுத்தப்பட்ட நிலையில், இரவு மீன்பிடி வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் வாள்களுடன் வந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு பருத்தித்துறை பிரதேச செயலாளர் ந.திரிலிங்கநாதன் சென்று பார்வையிட்டு பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பருத்தித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமரா பதிவுகளின் அடிப்படையில் ஏனையவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

https://jaffnazone.com/news/50542