Aggregator

'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இ‍தை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 day 10 hours ago
இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்

'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இ‍தை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 day 10 hours ago
நல்லதொரு நேர்காணல். இணைப்புக்கு நன்றி ஏராளன்.

மரச் சிற்பம் - ஷோபாசக்தி

1 day 10 hours ago
//குற்றத்தைவிடத் தண்டனையே வெறுக்கத்தக்கது’// அப்படியானால் குற்றம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை? ஊரில் தான் பார்த்த மரண தண்டனை அனுபவங்களை எந்தவகையில் இப்படியான(ஹமிடா போன்ற மற்றும் இந்த மாதிரிக் குற்றங்களை செய்பவர்களை) ஒப்பிட நினைக்கிறார்..? // மரண தண்டனையின் கொடூரத்தைப் பேசும் போது, ‘குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப் பார்க்க வேண்டாமா?’ என்ற கேள்விகளை நாம் கடந்த காலங்களில் அதிகமாக எதிர்கொண்டிருக்கிறோம் அல்லவா. மரண தண்டனை விஷயத்தைப் பொறுத்தவரை இந்த வகைக் கேள்விகளில் உள்ளுறைந்திருப்பது மரண தண்டனை ஆதரவே// மரண தண்டனை கொடியது ..ஆனால் இந்த ஹமிடா போல Daher போல Night Stalker போல Ted Bundy போல இன்னமும் இவர்களைப் போன்ற கொலையாளிகளை என்ன செய்யச் சொல்கிறார்??

சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்

1 day 10 hours ago
நேற்று படித்தேன்! பாஸ்போர்ட்டில் எண் சும்மா மாறாது. ஆசான் கிழித்துவிட்டார் போலிருக்கு பாஸ்போர்ட்இல் பக்கத்தைக் காணோம் என்று முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.

"வன்முறைகளில் வனிதையர்"

1 day 11 hours ago
"வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும். அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகி விட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க, வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்? உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட, 'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்? வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு? நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில், தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால் குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள் விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன் ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்

"வன்முறைகளில் வனிதையர்"

1 day 11 hours ago
"வன்முறைகளில் வனிதையர்"
 
 
 
 
பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும்,  அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம்  அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால்,  வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது.
 
 
 
அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும்.
 
 
 
அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு  கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது.
 
 
 
ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா 
சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து 
கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும்.
 
 
 
"யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, ...... "
 
 
 
என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி 
என்றாகி விட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 
ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க,  வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக 
முதலில் அமைந்தது எனலாம்?
 
 
 
உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை?
 
 
 
இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட,  'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்?
 
 
இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா?
 
 
இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?
 
 
வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு?
 
 
நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில்,  தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை  வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
 
 
 
வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால்  குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள்  விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்
 
 
 
ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து  வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் !
 
 
 
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
277000696_10220761000837649_8510015818740363711_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=i36tWYfQBXoQ7kNvgHeVSYi&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDApq1pjPi1r3cTBGPd8piVca_af3Cfw71z-icSWl15GQ&oe=664D3AE3 276321669_10220761001117656_1702345077335484839_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=l0a34xe2rhkQ7kNvgFvtAzs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYApRYcUfTjuzicsm7nAljv381VVWr-j2dSMuxZ2_5r28Q&oe=664D3B2F
 
 
 
 

சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்

1 day 11 hours ago
பாஸ்போட்டில் ஏதாவது பிழை இருப்பது தெரிந்தவுடன், அதற்குப் பொறுப்பானவர்களுடன் கதைத்து, பாஸ்போட்டிலேயே ஒரு பக்கத்தில் குறிப்பு ஒன்றை எழுதி, அதன் கீழே உத்தியோக முத்திரை ஒன்றை குத்தக் கூடிய வசதி ஏதும் இருக்கும் என்றே நினைக்கின்றேன். அறிவு அதிகமாகச் சுடர் விட்டாலும், ஒரு சின்ன இருட்டும் அதன் கீழேயே இருக்கும் போல.......

" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]

1 day 11 hours ago
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற்போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள் ” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]

1 day 11 hours ago
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
 
 
ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் 
தீவீரம் அடைந்தது.
 
ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட  வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது.
 
எனவே,  திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். 
 
முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி 
 
"கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். 
விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக  எடுத்து
 
"ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற்போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார்.
 
"இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர்  எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில்  என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே"
 
தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது.   
 
"வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே"  
 
என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி 
 
"காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே  - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள்.
 
ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். 
 
"போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட  மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். 
அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு  குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். 
 
அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. 
 
"2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை,  வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன்  ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள் ” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். 
 
"நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா  அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு?  அதை விட்டு நட்டஈடு அல்ல" 
 
அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது.
 
இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே  ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. 
 
போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. 
 
"விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும்,
பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்
கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?"
 
காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது.  
 
‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது"  என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? 
நன்றி 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்] 
419389294_10224549547748954_1215692888455989140_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=Irs4JNvm0UEQ7kNvgEv9V5r&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYBcNOsW-G9VF7IQTu_2Okyk4EM1Tt3Cb3TMHZzk-scv_Q&oe=664D259F No photo description available.
 
 
 

படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று

1 day 11 hours ago
கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை பற்றி அங்கே வேலை செய்த ஒரு வைத்தியர் சில விடயங்களை முன்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். வெறும் அடிப்படை சிகிச்சை ஒன்றை அளித்து நோயாளியை அப்படியே வைத்திருப்பது போன்றே அவர் சொல்வதாகத் தெரிந்தது. எல்லா வைத்தியசாலைகளும் இப்படியே என்றால், நோயாளிகள் எங்கு தான் நம்பிப் போவார்கள்? அமெரிக்கா மருத்துவம் இன்னொரு வகை. மருத்துவ காப்புறுதி நிறுவனங்களே ஏறக்குறைய எல்லா பெரிய முடிவுகளையும் கட்டுப்படுத்துகின்றன. என்ன மருத்துவம், சிகிச்சை, எந்த மருத்துவமனை, எப்ப செய்வது என்று எல்லாமே அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. ஆனால், ஒரெயொரு நல்ல விடயம், பெரும்பாலும் முடிவுகளை உடனேயே எடுத்து, சிகிச்சைகளை ஆரம்பித்து விடுகின்றனர். கனடாவில் நண்பன் ஒருவன் ஒரு எம்ஆர்ஐ எடுக்க மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. இப்பொழுது அங்கே வேறொரு சிகிச்சைக்காக அவனை ஒரு வருடம் காத்திருக்கச் சொல்லியிருக்கின்றனர். அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற கதைகளைக் கேட்டிருக்கின்றேன்.

[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்"

1 day 11 hours ago
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும் 18 வயது ரவியும், சாதாரண வகுப்பு பயிலும் 16 வயது மாயாவும் தங்கள் குடும்பத்தின் தலைவிதியைச் சுற்றியுள்ள மர்மத்தை அறிய, அவிழ்க்க உறுதியாக இருந்தனர். அவர்களின் கொஞ்ச கொஞ்ச நினைவுகளுடனும் மற்றும் அவர்களுக்கு இன்று தெரிந்த மூத்தவர்களால் சொல்லப்பட்ட அல்லது சமூக ஊடங்களுக் கூடாக அறிந்த செய்திகள் மற்றும் கதைகளுடனும், அவ்வற்றை தங்களின் தேடுதலுக்கான ஆயுதமாக ஏந்திய அவர்கள், நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் 'வேரைத் தேடும் தளிர்களாக', தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அவர்களின் பயணம் பல இடையூறுகளை மற்றும் வசதியின்மைகளை சந்திக்க நேரிட்டாலும், ரவியும் மாயாவும் தங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கக்கூடிய பல அன்பான உள்ளங்களின் ஆதரவுகளையும் பெற்றனர். அவர்கள் முல்லைத்தீவில் கிராமம் கிராமமாகச் சென்ற போது, உள்ளூர் கிராமவாசிகளைச் சந்தித்து கதைத்தனர். அவர்கள் மீள்தன்மை மற்றும் உயிர்வாழ்வதற்கான கதைகளைப் பகிர்ந்து அவர்களை சோர்வில் இருந்தும் கவலையிலும் இருந்தும் மீட்டு எடுக்க பலவகையில் முயற்சித்தனர். சிலர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கினர், மற்றவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றில் தாம் அனுபவித்த சொல்லமுடியாத துயரங்களை, கொடுமைகளை பகிர்ந்தனர். அதேவேளை அந்த இறுதி மே மாத நாளில் உயிர் பிழைத்தவர்கள், தற்காலிக அகதிகள் முகாம்களில், அவர்களைப் போன்ற துயரங்களைச் சந்தித்தவர்களுடன் அவர்கள் நட்புறவைக் கண்டனர். அவர்களுடன் தங்களின் இழப்பு மற்றும் வேர்களைத் தேடும் நம்பிக்கையின் கதைகளை பரிமாறிக் கொண்டனர், ஒருவருக் கொருவர் அங்கு ஆறுதல் கண்டனர். முல்லைத்தீவில் உள்ள முதியவர்களுடனும் அல்லது அந்த நேரம் எதோ ஒரு வகையில் அங்கு பணியாற்றியவர்களுடனும், தங்கள் வேர்களுக்கான பதில்களைத் தேடுவதில் முனைப்பாக இருந்தார்கள். பலவேளைகளில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கா விட்டாலும், ஓர் இருவரிடம் இருந்து தங்கள் குடும்பத்தின் சில ஆரம்ப தடயங்களை பெற்றனர். அது அவர்களின் முதல் வெற்றியும் மகிழ்ச்சியும் ஆகும், இந்த சந்திப்புகள் மூலம், ரவியும் மாயாவும் தங்கள் பயணம் தங்களுடையது என்றாலும், அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை அறிந்து கொண்டனர். ஏனென்றால், வழியில் சந்தித்தவர்களின் இதயங்களில், அவர்கள் தொடர்வதற்கான வலிமையையும் ஆதரவையும் கண்டார்கள். ஒவ்வொரு தங்கள் அடியிலும், அவர்கள் தங்கள் வேர்களாகிய, பெற்றோர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணரும் முயற்சியில் நெருங்கி நெருங்கி வந்தனர். சமூக ஊடங்களும் அவர்களுக்கு துணை இருந்தனர். இதனால் சிலவேளை அரச அமைப்புகளில் இருந்தும் சில தடைகளும் பயமுறுத்தலும் அவர்களுக்கு நேர்ந்தது. ரவியும் மாயாவும் ஆகிய தளிர்கள், தாங்கள் இது வரை பெற்ற தரவுகளின் அடிப்படையில், வேரைத் தேடும் முதல் முயற்சியாக அவர்களின் குடும்ப வீட்டின் இடிபாடுகள் நிறைந்த, தாம் பிறந்த மண்ணை கண்டுபிடித்தனர், அது ஒரு காலத்தில் அழகாக வசதியாக இருந்த வீட்டின் மிஞ்சிய பகுதிகளாகும், இன்று பற்றைகளும் புதருமாக அதைச் சூழ்ந்து இருந்தது. இடிபாடுகளுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் சில தடயங்களைக், அவர்களின் அம்மா நேசித்த உடைந்த தேநீர் கோப்பை மற்றும் ஒரு காலத்தில் தங்கள் தந்தையின் விருப்பமான நாற்காலியை அலங்கரித்த ஒரு கிழிந்த துணி, ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து, தடை செய்யத பகுதியாக, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அண்மையில் தான் விட்டு விட்டு சென்றது என அறிந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது ரவிக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அது இப்போதும் எங்கேயாவது இந்த உடைந்த இடிபாடுகளுக்கிடையில் இருக்கும் என்று அவன் நினைத்தான். அவனின் தந்தை அதை அடிக்கடி தூசி தட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, தங்களது சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை அவனின் அப்பா எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும்? இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். பனை வடலி பதினான்கு பரப்பு, தோட்டக் காணி பத்துப் பரப்பு, தென்னங் காணி இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார் என்பது அவன் மனத்தில் நிழற் படமாக ஓடியது. அந்த நேரம் ஒரு முதியவர் ஒரு பழைய துவிச் சக்கர வண்டியில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து அங்கு இவர்களைக் கண்டு வந்தார். அவரைக் கண்டதும் ரவிக்கு, முன்பு அவன் சிறுவர் பாடசாலை [nursery] போகும் காலத்தில், அவனின் ஊரைச் சேர்ந்த கந்தையா என்ற ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அவர் அப்பொழுது தினம் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். பின் கொஞ்சம் பொறுத்து மதியத்துக்கு முன், பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி பொருட்களுடன் போவார். எனவே, அவன் அவரை, நீங்கள் கந்தையா தாத்தாவை என்று கேட்க, ஆமாம், நீ ரவியோ ? என்று அவரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். கந்தையா, தான் உறுதி, புகைப்பட ஆல்பம் மற்றும் முக்கிய தப்பிய ஆவணங்களும் பெறுமதியான சில பொருட்களும் எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, உடனடியாகவே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். என்றாலும் அம்மா, அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்கிறார் ரவியும் மாயாவும் மகிழ்ச்சியின் தருணங்களைக் காட்டும் அந்த புகைப்பட ஆல்பத்தை ஆவலாக வாங்கி பார்த்தார்கள். அதில் அம்மா, அப்பா மற்றும் தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஒழுகியது. ஒவ்வொரு கண்டு பிடிப்பும் தங்கள் அன்புக்குரிய அப்பா, அம்மாவைக் கண்டுபிடிப்பதற்கான உறுதியைத் மேலும் மேலும் அவர்களுக்குத் தூண்டியது. அவர்களின் தேடலானது அவர்களை தற்காலிக அகதி முகாம்களுக்கும் அழைத்துச் சென்றது. அங்கே, அவர்கள் இழப்பு மற்றும் துயரங்களுடன் உயிர்வாழும் ஏனையவர்களின் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் பெற்றோரை படையினரால் அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்தனர், மற்றவர்கள் கொடிய குண்டுவெடிப்புகளிலிருந்து அதிசயமாக தப்பித்ததை விவரித்தார்கள். ஒவ்வொரு கதையும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது, ஆனால் அவர்களின் சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு அது அவர்களை நெருங்கவில்லை. மனம் தளராமல், ரவியும் மாயாவும் முல்லைத்தீவின் சிக்கலான குழப்பமான பாதைகள் நிறைந்த தெருக்களில் பயணித்து, ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அவர்களின் இதயங்கள் துக்கத்தால் பாரமாக இருந்தாலும், நம்பிக்கையை கைவிட வில்லை. நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அவர்களின் தேடல் ஒரு பயனற்றதாகத் அவர்களுக்குத் தோன்றியது, மேலும் அவநம்பிக்கை அவர்களைத் தின்றுவிடும் போல இருந்தது, அத்தனை இடையூறுகள் அவர்களுக்கு வந்தது. அதனால் அவர்கள் சோர்வு அடைந்து விட்டுக் கொடுக்கும் விளிம்பில் இருந்தபோது, ஒரு திடீர் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது. ஒரு நாள் ரவியும் மாயாவும் ஒரு கோவிலில் அடைக்கலம் தேடும்போது வயதான துறவியை அங்கு கண்டனர். அவர் அமைதியான தியானத்தில் அப்பொழுது அமர்ந்தார், ஒளிரும் கற்பூர வெளிச்சத்தில் அவரது அமைதியான நடத்தையால் கவரப்பட்ட அவர்கள் அவரை எச்சரிக்கையுடன், மெதுவாக அணுகினர். ரவி: "மன்னிக்கவும் குரு. நாங்கள் எங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை தேடி சில வாரங்களாகத் திரிகிறோம். எங்களுக்கு ஏதாவது அறிவுரை இருக்கிறதா?" என்றான். வயதான துறவி: (கண்களைத் திறந்து, மென்மையான புன்னகையுடன் அவர்களைப் பார்த்து) "ஆ, உண்மையான பற்றுடன் தேடும் குழந்தைகளே, . என்னுடன் உட்கார்ந்து, வேர்கள் மற்றும் தளிர்கள் பற்றி பேசுவோம்" என்கிறார். மாயா: (ஆர்வத்துடன்) "ஐயா, வேர்கள் மற்றும் தளிர்கள்?" ஆச்சரியத்துடன் துறவியை பார்த்தாள். முதிய துறவி: (ஆமா என்று தலையசைத்து) "ஆம், என் குழந்தைகளே. தளிர்கள் வளர பூமியில் இருந்து ஊட்டத்தை தேடுவது போல, உங்கள் குடும்ப மரத்தின் வேர்களை நீங்கள் தேட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பயணம் நீண்ட மற்றும் கடினமானதாக இருக்கலாம்? சோதனைகள் மற்றும் இன்னல்கள் நிறைந்ததாக இருக்கலாம்? இருப்பினும், உங்கள் இந்த இருண்ட காலங்களில், உங்கள் அன்பு மற்றும் உறுதி உங்களை வழிநடத்தும்." என்றார் ரவி: (உத்வேகத்துடன்) "நன்றி ஐயா. கட்டாயம் இனி என்ன தடைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்." என்றான் முதிய துறவி: (ஒரு மென்மையான தொடுதலால் அவர்களை ஆசீர்வதித்து) "தைரியத்துடனும் அன்புடனும் செல்லுங்கள், என் குழந்தைகளே. நீங்கள் தேடும் பதில்கள் நீங்கள் நினைப்பதை விட நெருக்கமாக இருக்கலாம்? விரைவில் அது வரட்டும்" என்றார். துறவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ரவியும் மாயாவும் தங்கள் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர், விரக்தியுடன் அல்ல, ஆனால் உறுதியையும் அன்பையும் ஆயுதம் ஏந்தி, ஒன்றாக, அவர்கள் உள்ளூர் கோவிலின் காப்பகங்களைத் தேடி, பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பதிவுககளில் தங்கள் பெற்றோரின் உறவினர்கள் பற்றிய தடயங்களைத் தேடினர். பின்னர், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மங்கலான காகிதத் குறிப்பில் தடுமாறினர், அது காலப்போக்கில் மையில் பொறிக்கப்பட்டது. நடுங்கும் கைகளுடன், அவர்கள் தங்கள் குடும்ப மரத்தின் கோடுகளைக் கண்டுபிடித்தனர், ஒவ்வொரு பெயரும் அவர்களின் இரத்த வழி உறவிற்கு சான்றாக இருந்தது அவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அந்த இரத்த உறவுகளின் பெயர்களுக்கு மத்தியில், அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒளியைக் கண்டனர். ஒரு தொலைதூர உறவினர், போரில் தப்பிப்பிழைத்து இப்போது பக்கத்து கிராமத்தில் வசிக்கிறார் என அறிந்தனர். எனவே புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், நீண்ட காலமாக இழந்த இந்த உறவினரைக் கண்டுபிடிக்க அவர்கள் புறப்பட்டனர், அவர்களின் இதயங்கள் எதிர்பார்ப்புகளால் நிறைந்தன. பல மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, ரவியும் மாயாவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தங்கள் வயதான அத்தையைக் கண்டுபிடித்தனர். உணர்ச்சியில் மூழ்கிய அவர்கள் அவளை இறுகத் தழுவிக் கொண்டனர், கண்ணீர் வழிந்தோடியது. அத்தை: (அழுகையுடன்) "என் அன்பான குழந்தைகளே, உங்களை கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி" என்று கூறி அவர்களை அன்புடன் அணைத்தார். ரவி: "அத்தை, நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணி விட்டோம். எங்கள் பெற்றோரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று மிக ஆவலுடன் கேட்டான் அத்தை: (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) "உங்கள் பெற்றோர் ... அவர்கள் தைரியமான ஆத்மாக்கள், என் அன்புக்கு என்றும் உரியவர்கள். அந்த இருண்ட நாட்களில், எங்கள் குடும்பத்தைக் காக்க பல வழிகளில் முன்னின்று செயல்பட்டார்கள். ஆனால் ஐயோ, அவை மிக விரைவில் எங்களிடமிருந்து பிரிக்கப் பட்டன." என்றாள். மாயா: (குரல் நடுங்கி) "என்ன நடந்தது? ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்களா?" என்றாள். அத்தை: (சோகத்துடன் தலையசைத்து) "ஆமாம், என் குழந்தை. ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் உங்களில் வாழ்கிறார்கள் - உங்கள் வலிமை, உங்கள் நெகிழ்ச்சி, உங்கள் அன்பில்." என்றார். ரவி: (மாயாவின் கையை பிடித்துக்கொண்டு) "நாம் அவர்களை மறக்க மாட்டோம் அத்தை. அவர்களின் பாரம்பரியத்தை எப்போதும் எங்களுடன் எடுத்துச் செல்வோம். ஆனால் இப்ப எங்கே எங்கள் அம்மா, அப்பாவை வைத்திருக்கிறார்கள்?" ஆவலுடன் கேட்டான். அத்தை: (அவள் கண்ணீரில் சிரித்துக்கொண்டே) என் குழந்தைகளே, இப்ப அரச நிர்வாகம் தங்களுக்கு தெரியாது என்று கைவிரித்து விட்டார்கள். அவர்களும் வலிந்து காணாமல் போனவர்களின் பட்டியலில் போய்விட்டார்கள்? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தனியாக இல்லை. எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீண்டு, அன்பு மற்றும் இரத்தத்தால் இன்று நாம் ஒன்றாகிவிட்டோம் . இனி ஒன்றாக, எந்த புயலையும் எதிர்கொள்வோம். நியாயமான பதில் வரும் மட்டும்" என்றார். அவர்கள் அதன் பின் அத்தையின் சமையல் அறையில், அடுப்பின் நெருப்புப் பகுதிக்கு கிட்ட அமர்ந்து, தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களைப் பற்றிய அத்தையின் கதைகளைக் கேட்டபோது, ரவியும் மாயாவும் போர்க் காற்றால் தங்கள் வேர்கள் அசைந்திருந்தாலும், அவர்கள் பிடுங்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். ஏனென்றால், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை இன்னும் சுமந்து கொண்டு இருப்பதைக் உணர்ந்தனர். எனவே, முல்லைத்தீவின் இடிபாடுகளுக்கு மத்தியில், வேரைத் தேடும் இரண்டு தளிர்களாக தங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, தைரியம் மற்றும் குடும்பத்தின் நீடித்த பந்தம் நிறைந்த எதிர்காலத்தையும் கண்டுபிடித்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

"வீழ்ந்தாலும் வித்தாகிடு!"

1 day 11 hours ago
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]

"வீழ்ந்தாலும் வித்தாகிடு!"

1 day 11 hours ago
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!"
 
 
"வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு
வீரம் நிறைந்த தமிழன் நீயடா!
வீசும் காற்றின் பக்கம் சாயாதே
வீறு கொண்டு எழுந்து நில்லடா!"
 
"தோல்வி கண்டு மனதில் குழம்பாதே
தோழன் இருக்கிறான் துணை தர!
தோரணம் கட்டி பின்னால் போகாதே
தோண்டிப் பார் அவனின் நடத்தையை!"
 
"மாண்டாலும் உன் நோக்கம் வாழனும்
மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்!
மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும்
மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
317997504_10222127995651665_1743922213086653498_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=6F5XItwWr5YQ7kNvgGe3xRs&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYCJ8Zkok21Do_tw3B_hmasPRcugujs2VSAYgG14-tQ1aw&oe=664D4546 317972098_10222127995251655_8078013282735934558_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=5jolQk6g19cQ7kNvgHRSzsr&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYDyWpA4AbBrajrCgJBPyYdGiL7gkXnzO_3AmRMde04IKQ&oe=664D3085
 
 

"சமாதானம்" [அந்தாதிக் கவிதை]

1 day 11 hours ago
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

"சமாதானம்" [அந்தாதிக் கவிதை]

1 day 11 hours ago
"சமாதானம்"
[அந்தாதிக் கவிதை]
 
 
"சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர்
போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்!
கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர்
மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!"
 
"தலைகுனிந்து உலகமும் கண் மூடியது
மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்!
சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான்
தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!"
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. 394293565_10224200890392738_750020505758437484_n.jpg?_nc_cat=107&ccb=1-7&_nc_sid=5f2048&_nc_ohc=fRS7p-ae7HcQ7kNvgGfyzL_&_nc_ht=scontent.fxds1-1.fna&oh=00_AYAwDRr1ApATybTmwmzjDa1t9fzBH8MtrZk7tjODzbRoaw&oe=664D3D5E