Aggregator

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
வெளி நாட்டு மோகத்தை தூண்டி, ஒரு அப்பாவியை பலிக்கடா ஆக்கியுள்ளார்கள். பாவம் செய்திகளில் குடு கும்பலோடு ஒருவராக படம் எல்லாம் வந்து அசிங்கபட்டுள்ளார் தக்‌ஷி. இதற்கு துணைபோன ஜப்னா சுரேஸ்சுக்கு உண்மை தெரிந்தும், இந்த பெண்ணை இப்படி ஏமாற்றி உள்ளான் என எண்ணுகிறேன்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
“கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்ய உடந்தையாக இருந்ததற்கு காரணம் இதுதான் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 04:09 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்கான காரணத்தை இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். “எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கெஹெல்பத்தர பத்மே' என்பவர் என்னை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் பணத்தை பெற்றுக்கொள்ளாமல் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன்“ என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “நேபாளத்தில் தலைமறைவாக இருக்கும் போது ஐரோப்பாவுக்கு செல்வதற்காக போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது“ எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228222

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம் உலகப் பொருளாதாரத்தையே மாற்றியது எப்படி? 3 தருணங்கள்

2 weeks 4 days ago
பட மூலாதாரம், AFP via Getty Images கட்டுரை தகவல் நிக் மார்ஷ் பிபிசி செய்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர். சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும். இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும். 2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும். முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும். ஆனால், வரும் புதன்கிழமை அதிகாரிகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். அதன் பிறகு ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "மேற்கத்திய நாடுகளில், கொள்கைகள் தேர்தல் சுழற்சிகளால் இயங்குகின்றன. ஆனால், சீனாவில் திட்டமிடல், அடிப்படையில் இயங்குகிறது," என்கிறார் ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ். "ஐந்தாண்டுத் திட்டங்கள், சீனா எதை அடைய விரும்புகிறது என்பதையும், தலைமை எந்த திசையில் செல்ல விரும்புகிறது என்பதையும் காட்டுகின்றன. அரசின் வளங்கள் இந்த குறிக்கோள்களை அடைய வடிவமைக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறுகிறார். மேலோட்டமாகப் பார்த்தால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கைகுலுக்கி கூட்டம் நடத்துவது சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது. சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை மாற்றிய மூன்று முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம். 1981-84: "சீர்திருத்தம் மற்றும் புதுமை" சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எப்போது மாறத் தொடங்கியது என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால், பலர் 1978 டிசம்பர் 18-ஐ முக்கியமான தருணமாகக் கருதுகின்றனர். அதற்கு முன், 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத் பாணியில் அமைந்த திட்டமிடல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. பலர் வறுமையில் வாடினர். மாவோ சேதுங்கின் கடுமையான ஆட்சியிலிருந்து சீனா மெதுவாக மீண்டு வந்த சமயம் அது. மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன. பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீனாவின் புதிய தலைவர் டெங் ஜியோ பிங், 'சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்க வேண்டிய நேரம் இது' என்று அறிவித்தார். அவரது "சீர்திருத்தமும் புதுமையும்" (Reform and Opening Up) என்ற கொள்கை, 1981-இல் தொடங்கிய அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியது. சுதந்திர வர்த்தகத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, சீன மக்களின் வாழ்க்கையை மாற்றின. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டெங் ஜியோ பிங் தொடங்கிய சீனாவின் பொருளாதார திட்டம், 1979ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் கார்டருடன் கையெழுத்தான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது. அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை இதைவிட சிறப்பாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறார் தாமஸ் . "மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சீனா வளர்ந்தது. தேசிய பெருமையையும், உலக வல்லரசுகளில் தனது இடத்தையும் சீனா உறுதிப்படுத்தியது," என்கிறார் நீல் தாமஸ். இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மாற்றின. 21-ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான உற்பத்தி தொழில்கள் சீனாவின் கடலோர தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டன. பொருளாதார வல்லுநர்கள் இதை "சீன அதிர்வு" (The China Shock) என்று அழைக்கிறார்கள். இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பழைய தொழில்துறை மையங்களில் சில கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. உதாரணமாக, டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அவரது சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள், கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க உற்பத்தி பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 2011-15: "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" 2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, 'உலகின் உற்பத்தி மையம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டது. சீனா "நடுத்தர வருமானப் பொறி"யில் (Middle Income Trap) சிக்க விரும்பவில்லை. இது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த, அதேநேரம் மேம்பட்ட பொருளாதார நாடுகளைப் போல உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் புதுமைத் திறன் இல்லாதபோது ஏற்படும் சிக்கல். எனவே, மலிவான உற்பத்திக்கு பதிலாக, சீனா "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" (Strategic Emerging Industries) என்ற கருத்தை 2010-இல் அறிமுகப்படுத்தியது. இதில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியமாக இருந்தன. மேற்கத்திய நாடுகளில் காலநிலை மாற்றம் முக்கியத்துவம் பெற்ற போது, சீனா இந்தத் துறைகளில் மிகப்பெரிய வளங்களை முதலீடு செய்தது. இன்று, சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இவற்றை உருவாக்கத் தேவையான அரிய தாதுக்களின் (Rare Earth Elements) விநியோகச் சங்கிலியில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டையும் சீனா பெற்றுள்ளது. இந்த அரிய தாதுக்கள் சிப் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கு முக்கியமானவை. இந்த வளங்களின் மீதான சீனாவின் கட்டுப்பாடு, அதனை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சமீபத்தில், அரிய தாதுக்களின் ஏற்றுமதியைக் சீனா கட்டுப்படுத்தியது. இந்த முடிவை, டொனால்ட் டிரம்ப் "உலகை சிறைப்பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்தார். "உத்தி சார்ந்து எழுச்சி பெறும் சக்திகள்" (Strategic Emerging Forces) என்ற கருத்து 2011-ஆம் ஆண்டு ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தாலும், பசுமை தொழில்நுட்பத்தை வளர்ச்சி மற்றும் உலக அரசியல் சக்தியின் புதிய இயந்திரமாகப் பார்க்கும் சிந்தனையை சீனாவின் அப்போதைய தலைவர் ஹு ஜின்டாவோ 2000-களின் தொடக்கத்திலேயே முன்வைத்திருந்தார். "சீனா தனது பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், தன்னம்பிக்கையுடனும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் புதிது அல்ல. அது சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் அடிப்படை கூறாகவே உள்ளது," என்று நீல் தாமஸ் விளக்குகிறார். 2021-2025: "உயர்தர மேம்பாடு" 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" (High Quality Development) என்ற கருத்து, சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்று விளக்குகின்றன. தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சீனாவை அந்த துறையில் முன்னிலை பெறச் செய்வது தான் இதன் நோக்கம். வீடியோ பகிர்வு செயலியான டிக்‌டாக் (TikTok), தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் (Huawei), மற்றும் டீப்சீக் (DeepSeek) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், இந்த நூற்றாண்டில் சீனாவின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் சீன தொழில்நுட்பத்தை அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன. இதனால், சீன தொழில்நுட்பங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது உலகளவில் கோடிக்கணக்கான இணையப் பயனர்களைப் பாதித்ததுடன், கடுமையான ராஜ்ஜீய மோதல்களையும் உருவாக்கியது. பட மூலாதாரம், Grigory Sysoev/RIA Novosti/Pool/Anadolu via Getty Images படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" என்ற கருத்து இதுவரை சீனா தனது தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகள், குறிப்பாக என்விடியாவின் மேம்பட்ட செமிகன்டக்டர்கள் (advanced semiconductors) மூலம் முன்னெடுத்தது. தற்போது அவற்றை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா தடுத்து விட்டதால், "உயர்தர வளர்ச்சி" என்ற பழைய முழக்கம், 2023ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "புதிய தரமான உற்பத்தி" என்ற புதிய முழக்கமாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த புதிய முழக்கம், உள்நாட்டு பெருமையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாகக் கொண்டது. அதாவது, மேற்கத்திய தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் , தடைகளால் பாதிக்கப்படாமல், சிப் தயாரித்தல், கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் சீனாவை முன்னணியில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம். இந்நிலையில், அனைத்து துறைகளிலும், குறிப்பாக புதுமையான கண்டுபிடிப்புகளில் தன்னிறைவு (self-sufficiency) அடைவது, அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "தேசிய பாதுகாப்பும் சுயாதீனமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இப்போது சீனாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளன," என்று நீல் தாமஸ் விளக்குகிறார். "இது, மீண்டும் சீனாவில் கம்யூனிசத்துக்கு அடிப்படையாக உள்ள தேசியவாத கருத்துக்குத் திரும்பி, வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு சீனா மீண்டும் இடமளிக்காது என்பதை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yp7kx1z5eo

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டம் உலகப் பொருளாதாரத்தையே மாற்றியது எப்படி? 3 தருணங்கள்

2 weeks 4 days ago

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • நிக் மார்ஷ்

  • பிபிசி செய்தி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர்.

சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும்.

2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும்.

முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும்.

ஆனால், வரும் புதன்கிழமை அதிகாரிகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். அதன் பிறகு ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"மேற்கத்திய நாடுகளில், கொள்கைகள் தேர்தல் சுழற்சிகளால் இயங்குகின்றன. ஆனால், சீனாவில் திட்டமிடல், அடிப்படையில் இயங்குகிறது," என்கிறார் ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ்.

"ஐந்தாண்டுத் திட்டங்கள், சீனா எதை அடைய விரும்புகிறது என்பதையும், தலைமை எந்த திசையில் செல்ல விரும்புகிறது என்பதையும் காட்டுகின்றன. அரசின் வளங்கள் இந்த குறிக்கோள்களை அடைய வடிவமைக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கைகுலுக்கி கூட்டம் நடத்துவது சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை மாற்றிய மூன்று முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம்.

1981-84: "சீர்திருத்தம் மற்றும் புதுமை"

சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எப்போது மாறத் தொடங்கியது என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால், பலர் 1978 டிசம்பர் 18-ஐ முக்கியமான தருணமாகக் கருதுகின்றனர்.

அதற்கு முன், 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத் பாணியில் அமைந்த திட்டமிடல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. பலர் வறுமையில் வாடினர்.

மாவோ சேதுங்கின் கடுமையான ஆட்சியிலிருந்து சீனா மெதுவாக மீண்டு வந்த சமயம் அது.

மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீனாவின் புதிய தலைவர் டெங் ஜியோ பிங், 'சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்க வேண்டிய நேரம் இது' என்று அறிவித்தார்.

அவரது "சீர்திருத்தமும் புதுமையும்" (Reform and Opening Up) என்ற கொள்கை, 1981-இல் தொடங்கிய அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியது.

சுதந்திர வர்த்தகத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, சீன மக்களின் வாழ்க்கையை மாற்றின.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெங் ஜியோ பிங் தொடங்கிய சீனாவின் பொருளாதார திட்டம், 1979ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் கார்டருடன் கையெழுத்தான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது.

அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை இதைவிட சிறப்பாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறார் தாமஸ் .

"மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சீனா வளர்ந்தது. தேசிய பெருமையையும், உலக வல்லரசுகளில் தனது இடத்தையும் சீனா உறுதிப்படுத்தியது," என்கிறார் நீல் தாமஸ்.

இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மாற்றின.

21-ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான உற்பத்தி தொழில்கள் சீனாவின் கடலோர தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டன.

பொருளாதார வல்லுநர்கள் இதை "சீன அதிர்வு" (The China Shock) என்று அழைக்கிறார்கள்.

இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பழைய தொழில்துறை மையங்களில் சில கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

உதாரணமாக, டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அவரது சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள், கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க உற்பத்தி பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

2011-15: "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்"

2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, 'உலகின் உற்பத்தி மையம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டது.

சீனா "நடுத்தர வருமானப் பொறி"யில் (Middle Income Trap) சிக்க விரும்பவில்லை. இது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த, அதேநேரம் மேம்பட்ட பொருளாதார நாடுகளைப் போல உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் புதுமைத் திறன் இல்லாதபோது ஏற்படும் சிக்கல்.

எனவே, மலிவான உற்பத்திக்கு பதிலாக, சீனா "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" (Strategic Emerging Industries) என்ற கருத்தை 2010-இல் அறிமுகப்படுத்தியது. இதில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியமாக இருந்தன.

மேற்கத்திய நாடுகளில் காலநிலை மாற்றம் முக்கியத்துவம் பெற்ற போது, சீனா இந்தத் துறைகளில் மிகப்பெரிய வளங்களை முதலீடு செய்தது.

இன்று, சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது.

இவற்றை உருவாக்கத் தேவையான அரிய தாதுக்களின் (Rare Earth Elements) விநியோகச் சங்கிலியில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டையும் சீனா பெற்றுள்ளது.

இந்த அரிய தாதுக்கள் சிப் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கு முக்கியமானவை. இந்த வளங்களின் மீதான சீனாவின் கட்டுப்பாடு, அதனை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

சமீபத்தில், அரிய தாதுக்களின் ஏற்றுமதியைக் சீனா கட்டுப்படுத்தியது. இந்த முடிவை, டொனால்ட் டிரம்ப் "உலகை சிறைப்பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்தார்.

"உத்தி சார்ந்து எழுச்சி பெறும் சக்திகள்" (Strategic Emerging Forces) என்ற கருத்து 2011-ஆம் ஆண்டு ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தாலும், பசுமை தொழில்நுட்பத்தை வளர்ச்சி மற்றும் உலக அரசியல் சக்தியின் புதிய இயந்திரமாகப் பார்க்கும் சிந்தனையை சீனாவின் அப்போதைய தலைவர் ஹு ஜின்டாவோ 2000-களின் தொடக்கத்திலேயே முன்வைத்திருந்தார்.

"சீனா தனது பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், தன்னம்பிக்கையுடனும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் புதிது அல்ல. அது சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் அடிப்படை கூறாகவே உள்ளது," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

2021-2025: "உயர்தர மேம்பாடு"

2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" (High Quality Development) என்ற கருத்து, சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்று விளக்குகின்றன.

தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சீனாவை அந்த துறையில் முன்னிலை பெறச் செய்வது தான் இதன் நோக்கம்.

வீடியோ பகிர்வு செயலியான டிக்‌டாக் (TikTok), தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் (Huawei), மற்றும் டீப்சீக் (DeepSeek) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், இந்த நூற்றாண்டில் சீனாவின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

ஆனால் மேற்கத்திய நாடுகள் சீன தொழில்நுட்பத்தை அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

இதனால், சீன தொழில்நுட்பங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது உலகளவில் கோடிக்கணக்கான இணையப் பயனர்களைப் பாதித்ததுடன், கடுமையான ராஜ்ஜீய மோதல்களையும் உருவாக்கியது.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Grigory Sysoev/RIA Novosti/Pool/Anadolu via Getty Images

படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" என்ற கருத்து

இதுவரை சீனா தனது தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகள், குறிப்பாக என்விடியாவின் மேம்பட்ட செமிகன்டக்டர்கள் (advanced semiconductors) மூலம் முன்னெடுத்தது.

தற்போது அவற்றை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா தடுத்து விட்டதால், "உயர்தர வளர்ச்சி" என்ற பழைய முழக்கம், 2023ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "புதிய தரமான உற்பத்தி" என்ற புதிய முழக்கமாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய முழக்கம், உள்நாட்டு பெருமையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாகக் கொண்டது.

அதாவது, மேற்கத்திய தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் , தடைகளால் பாதிக்கப்படாமல், சிப் தயாரித்தல், கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் சீனாவை முன்னணியில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.

இந்நிலையில், அனைத்து துறைகளிலும், குறிப்பாக புதுமையான கண்டுபிடிப்புகளில் தன்னிறைவு (self-sufficiency) அடைவது, அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேசிய பாதுகாப்பும் சுயாதீனமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இப்போது சீனாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளன," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

"இது, மீண்டும் சீனாவில் கம்யூனிசத்துக்கு அடிப்படையாக உள்ள தேசியவாத கருத்துக்குத் திரும்பி, வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு சீனா மீண்டும் இடமளிக்காது என்பதை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yp7kx1z5eo

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியம்

2 weeks 4 days ago
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை 20 Oct, 2025 | 04:17 PM நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இன்று திங்கட்கிழமை (20) திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 2.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கிழக்குப் பகுதி கடற்பரப்பில், வங்காளவிரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளிலும் கரையோர கடற்பரப்புப் பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது அதிக கொந்தளிப்பாகவோ காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலவேளைகளில் மணித்தியாலத்துக்கு 55 - 65 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில், கடற்படையினர், மீனவர்கள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/228225

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றேன் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 03:36 PM இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட தக்ஷி என்ற பெண் தொடர்பில் இஷாரா செவ்வந்தி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார். இந்நிலையில், இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாராவின் முகத்திற்கு ஒத்த உருவத்தை கொண்ட பெண் ஒருவரை தேடி வந்த காலப்பகுதியில் “ஜாஃப்னா சுரேஷ்” என்பவருக்கு தக்ஷி என்ற பெண் அறிமுகமானதாகவும், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி தக்ஷியை ஏமாற்றி நேபாளத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது. தக்ஷி என்ற பெண்ணுக்கு பெரிதளவு சிங்கள மொழி தெரியாததால் அவருக்கு எதுவும் கூறாமல் அவரை நேபாளத்திற்கு ஏமாற்றி அழைத்துச் சென்றதாக இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதனையடுத்து இஷாரா செவ்வந்தி கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்த இடத்தை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/228205

அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக லட்சக்கணக்கானோர் போராட்டம் - என்ன நடக்கிறது?

2 weeks 4 days ago
டிரம்புக்கு எதிரான 'நோ கிங்ஸ்' போராட்டம் - அமெரிக்காவில் அடுத்து என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சனிக்கிழமை நியூயார்க் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கட்டுரை தகவல் ஆண்டனி ஜுர்ச்சர் வட அமெரிக்க செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த வார இறுதி நாட்களில் அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகள் மற்றும் அதிபரின் அதிகாரத்தை அதிகரிக்கும் அவரின் முயற்சிகளுக்கு எதிராக நடைபெற்ற "நோ கிங்ஸ்" போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அமெரிக்க இடதுசாரிகளுக்கு தேசிய அரசியலில் எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் இந்தப் போராட்டங்கள் ஜனநாயக கட்சியினர், தாராளவாதிகள் மற்றும் டிரம்ப் எதிர்ப்பு குடியரசு கட்சிக்காரர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்தனர். போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன? சனிக்கிழமை அன்று நடைபெற்ற போராட்டங்களில் சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலிஸ் போன்ற பெருநகரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறு நகரங்களில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. ஜூன் மாதம் நடைபெற்ற "நோ கிங்ஸ்" பேரணியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சியது. குடியரசு கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவிற்கு எதிரானது எனக் குறிப்பிட்டனர். அக்கட்சியைச் சேர்ந்த சில ஆளுநர்களும் தங்களின் மாகாணங்களில் வன்முறை ஏற்படலாம் எனக் கருதி காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு படையை தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் இந்த பெருந்திரளான பேரணி வன்முறையாக அல்லாமல் கொண்டாட்டமாக அமைந்தன. நியூயார்க் நகரில் போராட்டம் தொடர்பாக எந்த கைதும் மேற்கொள்ளப்படவில்லை, வாஷிங்டனில் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர். பட மூலாதாரம், LightRocket via Getty Images படக்குறிப்பு, தலைநகர் வாஷிங்டன் உட்பட பல நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. "இந்த நாட்டின் வரலாற்றில் நடைபெற்ற எந்தப் போராட்டத்தையும் விட அதிக அளவிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர். நாம் சுதந்திரமானவர்கள், நம்மை யாரும் ஆள முடியாது, நமது அரசு விற்பனைக்கு கிடையாது என்பதை அமெரிக்க மக்கள் உரக்கச் சொல்கிறார்கள்." என்று வாஷிங்டன் பேரணியில் கலந்து கொண்ட கனக்டிகட் செனடர் கிறிஸ் மர்ஃபி தனது உரையில் தெரிவித்தார். நோ கிங்ஸ் போராட்டங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த வெள்ளை மாளிகையின் துணை பத்திரிகை செயலாளர் அபிகெய்ல் ஜேக்சன், "யார் கவலைப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார். டிரம்ப் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை ட்ரூத் சோசியல் பக்கத்தில் பகிர்ந்தார். டிரம்ப் கிரீடம் அணிந்து ஜெட் விமானத்தை ஒட்டியபடி போராட்டக்காரர்கள் மீது மனித கழிவுகளைக் கொட்டுவதைப் போல அந்த காணொளி அமைந்துள்ளது. இந்தப் போராட்டங்களின் முக்கியத்துவத்தை குடியரசுக் கட்சியினர் குறைத்துப் பேசி வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் கருத்துக் கணிப்பில் சரிந்து வரும் டிரம்புக்கான ஆதரவும் ஜனநாயக கட்சி கடந்த தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ஜனநாயக கட்சியின் நிலை என்ன? கருத்துக் கணிப்புகளில் மூன்றில் ஒருவர் மட்டுமே ஜனநாயக கட்சியை சாதகமாகப் பார்க்கின்றனர், கடந்த சில தசாப்தங்களில் இது மிகவும் குறைவே. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத நிலையில் எவ்வாறு டிரம்புக்கு வலுவான எதிர்ப்பை வழங்க முடியும் ஜனநாயக கட்சிக்காரர்களும் குழம்பிப் போய் உள்ளனர். தாராளவாதிகள் பல்வேறு காரணங்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். டிரம்பின் தீவிரமான குடியேற்ற கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரசாங்க நிதி ரத்து, வெளியுறவு கொள்கை, அமெரிக்க நகரங்களில் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்புவது மற்றும் அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவது போன்றவைகளுக்காக எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிபருக்கான அதிகாரங்களை விதிமுறைகளை மீறி பயன்படுத்துவதற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் ஜனநாயக கட்சி தலைவர்களும் விமர்சிக்கப்பட்டனர். "நாங்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்து வருகிறோம், அதனால் வெளிப்படையாக பேசவில்லை. நாங்கள் அனைவரையும் தாக்கிப் பேச வேண்டும் என நினைப்பது உங்களுக்கு தெரியும், ஆனால் அது எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது." என போராட்டத்தில் கலந்து கொண்டவர் தெரிவித்தார். தற்போது நான்காவது வாரத்தை நெருங்கியுள்ள அரசு நிர்வாக முடக்கத்தை ஜனநாயக கட்சிக்காரர்கள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றனர். தற்போதைய மத்திய அரசின் செலவீனங்களுக்கு குறுகிய கால நீட்டிப்பு வழங்க அவர்கள் மறுத்து வருகின்றனர். . ஏனெனில், இந்த ஆண்டின் இறுதியில் காலாவதியாக இருக்கும் வருமானம் குறைந்த அமெரிக்கர்களுக்கான மருத்துவ காப்பீடு சலுகைகளுக்கு தீர்வுகாண இருதரப்பு ஒப்பந்தம் இல்லாமல் காலநீட்டிப்பு வழங்க மறுத்து வருகின்றனர். ஜனநாயக கட்சியினர் சிறுபான்மையில் இருந்தாலும் சில செனட் நாடாளுமன்ற விதிகளின்படி அவர்களுக்கு இன்னும் சில அதிகாரங்கள் இருக்கின்றன. மக்கள் தற்போதைய நிலைக்கு பெரும்பாலும் டிரம்ப் மற்றும் குடியரசு கட்சியையே குற்றம்சாட்டி வருகின்றனர். யாருக்கு அழுத்தம் ஆனால் இந்த உத்தியில் சில சவால்களும் உள்ளன. நிர்வாக முடக்கத்தால் ஜனநாயக கட்சியினருக்கு ஏற்படும் பிரச்னைகள் இனிவரும் வாரங்களில் அதிகரிக்கவே செய்யும். பல மத்திய அரசு பணியாளர்கள் சம்பளம் கிடைக்காமல் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வருமானம் குறைந்தவர்களுக்கான உணவு திட்டத்திற்கான நிதியுதவியும் நின்றுவிடும் நிலையில் உள்ளது. அமெரிக்க நீதித்துறையும் தங்களின் வேலைகளை குறைத்துக் கொண்டுள்ளது. இந்த முடக்கத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிர்வாகம் ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்கள் மற்றும் நகரங்களைக் குறிவைத்து மத்திய அரசு பணியாளர்களை பணிநீக்கம் செய்வது மற்றும் செலவுகளைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் யதார்த்தம் என்னவென்றால் செனட்டில் உள்ள ஜனநாயக கட்சி தலைவர்கள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழியைக் கண்டடைய வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களை நிறைவேற்றுவது அவர்களுக்கும் கடினமாக இருக்கும். "நாங்கள் டிரம்புடன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டால் அடுத்த வாரமே அவர் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதையும் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை ரத்து செய்வதையும் பொது சுகாதார நிதிகளை ரத்து செய்வார். அதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை." என வெர்ஜினியாவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் செனடரான டிம் கெய்ன் என்பிசி தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால் அதை மாற்றவே கூடாது என்கிற ரீதியிலான ஒப்பந்தத்தைத் தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்காவில் மத்திய அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அரசு நிர்வாக முடக்கம் நவம்பர் மாதத்தின் தொடக்கம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது சில மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது, கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. மாகாணங்கள் சட்டசபை மற்றும் ஆளுநருக்கான தேர்தல்கள், "நோ கிங்ஸ்" போராட்டத்தில் வெளிப்பட்ட டிரம்ப் எதிர்ப்பு மனநிலை ஜனநாயக கட்சியினருக்கு தேர்தல் வெற்றியாக மாறுகிறதா என்பதற்கான முன்னோட்டத்தை வழங்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெர்ஜினியா மாகாண ஆளுநர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் வென்றார். இந்த மாகாணம் அதற்கு முந்தைய அதிபர் தேர்தலில் இடதுசாரி சார்பு கொண்டதாக இருந்தது. இங்கு குடியரசு கட்சியின் வெற்றி அப்போதைய அதிபர் ஜோ பைடன் மீதான அதிருப்தியின் ஆரம்பக்கட்ட வெளிப்பாடாக இருந்தது. இம்முறை ஜனநாயக கட்சியின் வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிகெய்ல் ஸ்பான்பெர்கர், கருத்துக்கணிப்புகளில் குடியரசு கட்சி வேட்பாளரை விட முன்னணியில் இருக்கிறார். கடந்த அதிபர் தேர்தலில் நியூ ஜெர்சி மாகாணத்தில் 6% வித்தியாசத்திலே டிரம்ப் தோற்றார். ஆனால் இந்த வித்தியாசம் 2020-இல் பைடன் (16%) மற்றும் 2016-இல் ஹிலாரி க்ளிண்டன் (14%) போட்டியிட்ட போது இருந்த நிலையிலிருந்து கணிசமாக குறைந்துள்ளது. இங்கு நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஆளுநர் தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. நியூ ஜெர்சியில் நடைபெற்ற நோ கிங்ஸ் பேரணியில் பேசிய ஜனநாயக கட்சியின் தேசிய குழு தலைவர் கென் மார்டின், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வர இருக்கின்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். "இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்வது ஒரு விஷயம், ஆனால் போட்டியிட்டு சில அதிகாரத்தை திரும்பப் பெறுவது இன்னொரு விஷயம்." எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. நவம்பரில் நடைபெற உள்ள தேர்தல்கள், இடதுசாரி வாக்காளர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்க டிரம்புக்கு எதிரான மனநிலை மட்டும் போதுமா என்பதற்கான பரிசோதனையாக இருக்கும். இவை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இடைக்கால தேர்தல்களுக்கான சிறிய முன்னோட்டம் மட்டுமே, அந்த தேர்தல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எந்தக் கட்சி கட்டுப்படுத்தப்போகிறது என்பதை தீர்மானிக்கும். இடைக்கால தேர்தல்கள் டிரம்பின் ஆட்சிக் காலத்தின் செயல்பாடு மீதான மதிப்பீட்டையும் ஜனநாயக கட்சியினருக்கு வழங்கும். சனிக்கிழமை போராட்டங்களின் செய்தி என்பது டிரம்பிற்கு எதிராக ஒருங்கிணைவதாகவே இருந்தது. இந்தச் சூழலில் ஜனநாயக கட்சியினர் ஆட்சிக்கு வந்து என்ன செய்வார்கள் என்பது பற்றி அக்கறை குறைவாகவே இருக்கிறது. எனினும் ஜனநாயக கட்சிக்குள்ளுமே விரிசல்கள் இருப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகின்றன. முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸின் புத்தகத்தை விளம்பரப்படுத்தும் பயணங்களிலும், பைடன் நிர்வாகத்தின் கீழ் எடுக்கப்பட்ட மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலத்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் இடையூறு ஏற்படுகிறது. திருநர் உரிமை உள்ளிட்ட சமூக கொள்கைகளை தவிர்த்துவிட்டு பொருளாதார பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துவதற்கான திட்டங்களுக்கும் இடதுசாரி தரப்பிலிருந்தே கண்டனங்கள் எழுகின்றன. மெய்ன், மாசசூசெட்ஸ், கலிஃபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணங்களில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழம்பெரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளம் வேட்பாளர்களும் மத்திய கொள்கை கொண்டவர்களுக்கு எதிராக தாராளவாதிகளும் நிறுத்தப்படலாம், இந்தப் போட்டிகள் ஆற்ற முடியாத பழைய அரசியல் காயங்களை உடனடியாக ஏற்படுத்தலாம். அத்தகைய சூழலில் கட்சி எதிர்கொண்டிருக்கும் சவால்களை சமாளிக்க பேரணிகள் மட்டும் போதாது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8g5z1rxr7o

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

2 weeks 4 days ago
விளக்கம் கொடுப்பது யாராக இருந்தாலும் கேட்கும் கேள்விகளில் எந்த பிழையும் இல்லையே!!

சிறுவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வலைப்பின்னல் உருவாக்கப்படுகின்றது - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

2 weeks 4 days ago
🔴 வவுனியாவில் மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த பல மில்லியன் பெறுமதியான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்! பத்து மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான மூன்று இலட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளை புத்தளம், கல்பிட்டியிலிருந்து வவுனியாவிற்கு கொண்டு சென்ற சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (19.10.2025) வவுனியா, முண்டிமுருப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கருவாடு கொண்டு செல்வதாகக் கூறி கெப் வண்டியொன்றினுள் மறைத்து வைத்து குறித்த போதை மாத்திரைகளை கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் படி, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற கெப் வண்டியுடன், சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு வழங்குவதற்காக இந்த போதைப்பொருள் கொண்டு வரப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருவதாகவும் ஒவ்வொரு போதை மாத்திரையும் 300 ரூபாய்க்கு விற்க தயாராக இருந்ததாகவும் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks 4 days ago
பிகு பர்ஸ்ட் கிளாஸ் லவுஞ்சில் தங்கியதில்லை - அவை சிறப்பாக இருக்க கூடும். மும்பையில் கப்சியூஸ் என ஒரு தூங்கும் பெட்டி எடுத்தேன். ஒரு வசதி மிக்க சற்றே விசாலமாம சவப்பெட்டி🤣. அதை விட கதிரையில் உக்காந்து பராக்கு பார்ப்பது நல்லம் 🤣

இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

2 weeks 4 days ago
Published By: Digital Desk 1 20 Oct, 2025 | 02:26 PM இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்றிரவு (20) தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/228215

இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

2 weeks 4 days ago

Published By: Digital Desk 1

20 Oct, 2025 | 02:26 PM

image

இந்த வருடத்தின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான ஓரியோனிட்ஸ் 'Orionid' விண்கல் மழையை கண்டுமகிழ இலங்கை மக்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்றிரவு (20) தெரியும் என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை பார்வையிட முடியும் என்றும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/228215

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks 4 days ago
நான் இதில் என்னளவில் முரண்படுகிறேன். இது பிழையோ தெரியவில்லை. ஆனால் எனது சூழ்நிலைக்கு இவை சரி வருவதில்லை. எடுப்பதே கடன் - அதில் ஒரு மாதத்துள் மீள செலுத்தாவிடின் அறாவட்டி அதுவும் அமேரிக்கன் எக்பிரஸ்சின் வட்டி சொல்லி மாளாது. இதற்குள் அவர்களுக்கு மாத சந்தா வேறு கட்ட வேண்டுமா? அத்தோடு நான் டி டோட்லர் - அங்கே இருக்கும் இலவச தண்ணியை குடிக்க முடியாது. சிறுவயது முதலே டயபடிக்ஸ், இனிப்பு உணவுகள் தொட முடியாது. அங்கே சாப்பாடு நல்லதுதான். ஆனால் அந்த விலையில் விட குறைந்த விலையில் நல்ல ரெஸ்டூரடன் ஒன்றில் buffett யில் போய் பத்தோடு பதினொன்றாக சாப்பிடாமல் நாமே lay carte யாக தேவையான உணவுகளை ஓடர் பண்ணி சாப்பிடலாம். இஸ்தான்புல், பாங்கொல்கில் மசாஜ் போகலாம். கிட்டதட்ட அதே பணம்தான். எப்படியும் 4 மணத்தியால வெயிட்டிங்கில் கடைசி 1 மணத்தியாலம் போர்டிங் கேட்டில் தொங்க வேண்டும். 1 மணத்தியாலம் bag drop, immigration. 2 மணத்கியாலத்தை மிக வடிவாக உணவகத்தில் செலவழிக்கலாம். ஏர்போர்டில் airside இல் இருக்கும் டாய்லெட்டுகளும் அவ்வளவு மோசம் இல்லை. நான் ஏர்மைல்ஸ் ஐ பயன்படுத்தி, சலுகையாக என சிலதரம் பாவித்துள்ளேன் (கொழும்பில் அல்ல) ஆனால் இவை overhyped என்பதே என் கருத்து. 3 மணி நேர டிரான்சிட்டுக்கு மேல் எடுப்பதில்லை. அப்படி எண்டால் குறைந்தது 22 , 18 மணி நேரம் எடுத்தால் வெளியே போய் ஊரை ஒரு சுத்து சுத்தி வரலாம். அதுவும் மத்திய கிழக்கு என்றால் ஏர்போர்ர்ட்டில் பெடியள் நிப்பாங்கள் கூட்டி போக🤣

தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்!

2 weeks 4 days ago
தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்! தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர். மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450775

தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்!

2 weeks 4 days ago

images-6.jpg?resize=275%2C183&ssl=1

தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் அபராதம் செலுத்த முடியும்!

தென் மாகாணத்தில் ஆரம்பம் தென் மாகாணத்தில் இன்று முதல் GovPay செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்த முடியும் என்று பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த வசதி அடுத்த மாதம் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 9 மாகாணங்களையும், இந்த திட்டத்துக்குள் உள்ளடக்கத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் GovPay செயலி மூலம் தொலைபேசி அல்லது பிற சாதனத்தைப் பயன்படுத்தி எந்த இடத்திலிருந்தும் எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1450775

தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை!

2 weeks 4 days ago
தீபாவளி பண்டிகையில் 26 இலட்ச அகல்விளக்குகள் ஏற்றி உலக சாதனை! உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கமாகும் இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை, மாநில அரசு மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து மகா தீபத்திருவிழாவை நடத்தியது. இதன்போது சரயு ஆற்றின் கரையில் 26,17,215 இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றி உலக சாதனை படைக்கப்பட்டது. திரளான மக்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றினர். உத்தரப் பிரதேசத்தின் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், 26 இலட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றியமைக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450772

கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

2 weeks 4 days ago
👆 மேலே உள்ள காணொளியில் விளக்கம் கொடுப்பவர் மாரிதாஸ் என்கின்ற சிறை சென்ற பிஜேபி போராளியாவார்.