Aggregator

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
நியூசிலாந்தின் Finn Alan இந்தியாவின் அபிஷேக் சர்மா போல குறைந்த பந்துகளில் கூடிய ஒட்டங்களை பெறக் கூடியவர். தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

2 weeks ago
சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது) 7 பிப்ரவரி 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. 2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன. ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும். மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும். டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன? டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது. லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும். உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும். சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும். லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன? டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது. இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது. வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது. தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது? இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும். இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும். இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும். டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன? இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும். ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும். ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன. போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும். 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்). அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும். குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும். வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும். நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும். ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும். முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம் இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர். அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. 2007 - இந்தியா 2009 - பாகிஸ்தான் 2010 - இங்கிலாந்து 2012 - வெஸ்ட் இண்டீஸ் 2014 - இலங்கை 2016 - வெஸ்ட் இண்டீஸ் 2021 - ஆஸ்திரேலியா 2022 - இங்கிலாந்து 2024 - இந்தியா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

2 weeks ago

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

டி20 உலகக்கோப்பை - முழு விவரம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது)

7 பிப்ரவரி 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது.

சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை

டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும்.

டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன?

டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது.

லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும்.

சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும்.

லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன?

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது.

இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது.

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது.

தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது?

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும்.

இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும்.

இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.

டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன?

  • இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது.

  • இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும்.

  • ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும்.

  • ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன.

  • போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும்.

  • லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

  • 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்).

  • அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும்.

  • குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும்.

  • வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும்.

  • நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

  • பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும்.

  • ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும்.

முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம்

இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர்.

அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • 2007 - இந்தியா

  • 2009 - பாகிஸ்தான்

  • 2010 - இங்கிலாந்து

  • 2012 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2014 - இலங்கை

  • 2016 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2021 - ஆஸ்திரேலியா

  • 2022 - இங்கிலாந்து

  • 2024 - இந்தியா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

2 weeks ago
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு Published By: Digital Desk 1 08 Feb, 2026 | 09:20 AM தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238117

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

2 weeks ago

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Published By: Digital Desk 1

08 Feb, 2026 | 09:20 AM

image

தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238117

தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண்

2 weeks ago
தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன. அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. "தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது" என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார். அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். "ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்" என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்' பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் மகன் ரவி மேக்வால், தனது தாயை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார். காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார். "நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்" என்று ரவி பிபிசியிடம் கூறினார். காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். படக்குறிப்பு,கிராம மக்கள் காஞ்சன்பாயை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடியில் நம்பகமானவராகவும் நினைவில் கொள்கிறார்கள். தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். "அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன." தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், "இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்." என்றார். அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார். "நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். "அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்" என்று சுரேஷ் கூறுகிறார். கிராம மக்கள் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாயின் மைத்துனர் திலீப் மேக்வால் அங்கன்வாடிக்கு வருவதற்குள், கஞ்சன் பாய் தரையில் விழுந்துவிட்டார். காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார். அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்."நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை." சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், "அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்" என்று அவர் கூறினார். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா டி சுயஉதவி குழுவின் தலைவராக இருந்து அங்கன்வாடி பணிகளை கையாண்டார். சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், "அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது," என்று கூறினார். "அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்." என சந்தீப் சர்மா கூறினார். அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும். காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள். "காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று ஒரு கிராமவாசி கூறினார். திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் வீட்டுக்கு வெளியே திரண்ட கிராம மக்கள் காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார். "வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்" என்று ரவி கூறினார். ரவி கூறுகையில், "வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்." "தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார். கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." கிராமத்தில் நிலவும் அச்சம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். "பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்" என்று ரவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20d0d1xz5qo

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

2 weeks ago
இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'! Published By: Digital Desk 1 07 Feb, 2026 | 01:45 PM நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது. 'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238075

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

2 weeks ago

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

Published By: Digital Desk 1

07 Feb, 2026 | 01:45 PM

image

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது.

'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது.

மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

WhatsApp_Image_2026-02-07_at_13.32.18.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19__1

WhatsApp_Image_2026-02-07_at_13.32.19.jp

WhatsApp_Image_2026-02-07_at_13.32.20.jp

https://www.virakesari.lk/article/238075

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

2 weeks ago

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்

பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2

தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம்

2 weeks ago
தேனி அருகே நாதக - தவெக கட்சியினர் மோதல் - பதற்றம் தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் அவர் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். துரைமுருகன் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாறே சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சாட்டை துரைமுருகன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றதும் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர். இதில் த.வெ.க நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்ததாக கூறப்படும் நபர் யார் என்பது குறித்து தேனி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://www.bbc.com/tamil/live/cn9zwzl89v4t?post=asset%3A1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2#asset:1478965a-9a60-4bfb-a0a0-e823a1ad1ba2

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் - மருத்துவர் அறிவூட்டல்

2 weeks ago
சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் சண்முகப் பிரியா பிபிசி தமிழுக்காக 8 பிப்ரவரி 2026, 02:38 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம். கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன. எச்சரிக்கை அறிகுறிகள்: தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி 4-5 மணி நேரம் தொடரும் வலி 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி முதுகு பகுதிக்கு பரவும் வலி பசியின்மை மற்றும் வாந்தி சோர்வு மற்றும் மயக்கம் ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு இரும்புச்சத்து குறைவு ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன? பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல. கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா? Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டி20 உலகக் கோப்பை: அமெரிக்க அணியில் விளையாடும் இந்திய வம்சாவளி வீரர்கள் அமெரிக்காவுடன் மோதல் வெடித்தால் இரான் முன்னுள்ள 4 வாய்ப்புகள் வார இறுதியில் கூடுதல் நேரம் தூங்குவது வார நாட்களில் சிறப்பாக செயல்பட உதவுமா? ஆய்வில் புதிய தகவல் இந்தியாவின் அதிரடி வீரர்களை கட்டிப்போட்ட பந்துவீச்சு - கடும் சவால் தந்த 'கத்துக்குட்டி' அமெரிக்கா End of அதிகம் படிக்கப்பட்டது பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது. இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது. காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா? பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம். கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும். இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்? மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது. சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால் குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome) உணவு சாப்பிடும்போது குமட்டல் குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome) குடல் புற்றுநோய் பார்கின்சன் நோய் மனச்சோர்வு தோல் ஒவ்வாமை மூட்டுவலி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பட மூலாதாரம்,Getty Images கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா? பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம். சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு. 20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம். கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo

வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் - மருத்துவர் அறிவூட்டல்

2 weeks ago

சில நேரங்களில் துர்நாற்றத்துடன் 'வாயு' வெளியேற என்ன காரணம்?

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • சண்முகப் பிரியா

  • பிபிசி தமிழுக்காக

  • 8 பிப்ரவரி 2026, 02:38 GMT

    புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர்

வயிறு மற்றும் குடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தைப் பேணுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக அமைகிறது. சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். அவருடனான நேர்காணலை கேள்வி - பதில் வடிவில் பார்க்கலாம்.

கேள்வி: வயிற்று வலிக்கு எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பதில்: ஆங்கிலத்தில் வயிற்றை பாண்டோரா பாக்ஸ் (Pandora's box) என்று அழைப்பார்கள். உள்ளே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. முந்தைய நாள் இரவு அளவுக்கு அதிகமான உணவு உண்டாலோ அல்லது உணவகத்தில் உண்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ அஜீரண கோளாறு காரணமாக மேல் வயிற்றில் வலி ஏற்படும். பசி ஏற்படாது. இவை இரண்டும் சாதாரணமானவை. சோடா, எலுமிச்சை சாறு, மோர், சீரகம், இஞ்சி போன்றவற்றை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், வயிற்று வலிக்கு குடல் புண், அல்சர் போன்ற 100-க்கும் மேற்பட்ட காரணங்கள் உள்ளன.

எச்சரிக்கை அறிகுறிகள்:

  • தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு வலி

  • சிறப்பு உணவு எதுவும் சாப்பிடாமலேயே கடுமையான வலி

  • 4-5 மணி நேரம் தொடரும் வலி

  • 4-5 வாரங்கள் தொடர்ந்து வலி

  • நாளுக்கு நாள் அதிகரிக்கும் வலி

  • முதுகு பகுதிக்கு பரவும் வலி

  • பசியின்மை மற்றும் வாந்தி

  • சோர்வு மற்றும் மயக்கம்

  • ரத்த பரிசோதனையில் ஹீமோகுளோபின் குறைவு

  • இரும்புச்சத்து குறைவு

  • ஸ்கேன் செய்தால் வயிறு அல்லது கல்லீரலில் பிரச்னை

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

படக்குறிப்பு,இரைப்பை குடல் மருத்துவர் பாசுமணி

கேள்வி: சாப்பிட்ட பிறகு புகைபிடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்னை என்ன?

பதில்: புகையிலை தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். நிகோடின் வயிற்றை தளர்த்துகிறது. வயிறு தளர்ந்தால் பசி குறையலாம், ஆனால் ஸ்பிங்க்டர் தசை தளர்ந்தால் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்கும். எனவே, சாப்பிட்ட பிறகு புகைபிடிப்பது நல்லதல்ல.

கேள்வி: காலையில் எழும்போது வாயில் இருக்கும் உமிழ்நீரை விழுங்கலாமா?

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பதில்: உமிழ்நீர் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. அதில் வலி நிவாரண குணம் உள்ளது. குழந்தைக்கு காயம்பட்ட இடத்தில் உமிழ்நீரை வைப்பது நல்லதுதான். இது வலி நிவாரண விளைவு மற்றும் ஆண்டிபயாடிக் விளைவு கொண்டது. உமிழ்நீரில் நல்ல பாக்டீரியா நிறைய இருப்பதால் அது ஆண்டிபயாடிக் போன்றது. அது கெட்ட பாக்டீரியாக்களுக்கு இடம் கொடுக்காது.

இதை காம்பெடிடிவ் இன்ஹிபிஷன் (competitive inhibition) என்று அழைக்கிறோம். பாக்டீரியாக்களைப் பொருத்தவரை வாயில் ஒரு பெரிய உலகமே உள்ளது. தூக்கத்தின் போது அந்த விகிதம் மாறுகிறது. வறட்சியின் காரணமாக கெட்ட பாக்டீரியாவின் எண்ணிக்கை மாறுகிறது. இரவில் உமிழ்நீர் உற்பத்தி குறைகிறது.

காலையில் வாயில் இருக்கும் பாக்டீரியா நல்ல பாக்டீரியா அல்ல. அதை விழுங்குவதில் பிரச்னை இல்லை. நம்மிடம் போதுமான அமிலம் இருந்தால், விழுங்கினாலும் நம் வயிறு பாதிக்கப்படாது. பாக்டீரியா வயிற்றில் இறந்துவிடும்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: வயிறு மற்றும் வாய்ப் புண் இடையே தொடர்பு உள்ளதா?

பதில்: இது பாதி உண்மை. வயிறு என்பது வயிற்றுப் பகுதி மட்டுமல்ல, வயிற்றுக்கு அப்பால் 8 மீட்டர் வரை உள்ளது. சிறுகுடலின் இறுதியில் ஒரு சிறிய புண் இருந்தாலும், வாயில் உள்ள பாக்டீரியாவால் அது பாதிக்கப்படலாம். வாய்ப்புண்களுக்கு பல காரணங்கள் உள்ளன. வயிறு இல்லாமலேயே, சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்ற தன்னுடல் தாக்க நிலைகள் மற்றும் லைகன் க்ளோனஸ் போன்ற சில நிலைகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலைகளில் வயிற்றில் உள்ள பாதிப்பு வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

கேள்வி: குடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பதில்: குடல் ஆரோக்கியம் என்பது நமது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையின் ஒரு பகுதி. இவை சரியாக இருந்தால் குடல் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ளும்.

இரவில் ஒரு துப்புரவு தொழிலாளி போல இருக்கும். நாம் உறங்கும்போது நமது குடல் தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். 3 மணிநேரம் சாப்பிடாமல் இருந்தால், சிறுகுடலில் எதுவும் இருக்காது. இதை ஜெஜூனம் என்று அழைக்கிறோம். ஜெஜூனம் என்றால் குடல் காலியாக இருக்கும் என்று அர்த்தம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: குடல் ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும்?

  • மன அழுத்தம் இல்லாமல் நன்றாக உறங்க வேண்டும்.

  • பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது.

  • சமச்சீர் உணவு - சில புரதம், சில வைட்டமின் டி, சில இரும்புச்சத்து, தாவர நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிஸ்கட், பர்கர், பீட்சாவில் காய்கறி குறைவு. நார்ச்சத்து இல்லை என்பதால் இவை குடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. இதுபோன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால்

  • குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome)

  • உணவு சாப்பிடும்போது குமட்டல்

  • குடல் வீக்க நோய்க்குறி (Inflammatory Bowel Syndrome)

  • குடல் புற்றுநோய்

  • பார்கின்சன் நோய்

  • மனச்சோர்வு

  • தோல் ஒவ்வாமை

  • மூட்டுவலி

ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வயிறு, குடல் ஆரோக்கியம், துர்நாற்றத்துடன் வாயு வெளியேறுவது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பட மூலாதாரம்,Getty Images

கேள்வி: துர்நாற்றத்துடன் வாயு வெளியேற என்ன காரணம்? அது குடல் பிரச்னையின் அறிகுறியா?

பதில்: நார்ச்சத்து ஜீரணமாகும் போது காற்று உற்பத்தியாகிறது. ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவை நம் உடலில் இருந்து வெளியேறும். மீத்தேன் மற்றும் சல்ஃபைடு ஆகியவை அழுத்தம் கொடுத்து குடலிலிருந்து வெளியேறும். இதுதான் துர்நாற்றத்திற்கு காரணம்.

சில ரசாயனங்களை உற்பத்தி செய்யும் பாக்டீரியா நம் உணவு பழக்கத்தால் இருக்கலாம். சில உணவுகள் நிச்சயமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், நமது குடல் ஆரோக்கியம், தூக்கம், மன அழுத்தம், பாக்டீரியா - இவை அனைத்தும் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். காலையில் எழும்போது வாயு வெளியேறுவது இயல்பு.

20-30 முறைக்கு மேல் வாயு வெளியேற்றம் சத்தமாகவும் இரைச்சலாகவும் இருந்தால், குடலில் உள்ள பாக்டீரியா ஏன் மாறியது என்று பார்க்க வேண்டும். இது நமது உணவு பழக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் தெரியாத காரணத்தால் வந்ததா என்று அறிந்து தீர்வு தேடலாம்.

கேள்வி: பழைய சோறு உண்மையில் குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

பதில்: சந்தேகமே இல்லாமல் பழைய சோற்றுக்கு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் கொடுக்கலாம். அது ஆரோக்கியமான உணவு. இதில் ப்ரோபயாடிக் உள்ளது. நிறைய சாப்பிடுபவர்களால் ஜீரணிக்க முடியாது. பழைய சோற்றில் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் உள்ளன. எனவே, இது ஒரு நல்ல உணவு. ஆனால், மிதமான அளவில் பயன்படுத்த வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80102jejdeo

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 weeks ago
நெதர்லாந்தின் சவாலை முறியடித்து பாகிஸ்தானுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார் பாஹீம் அஷ்ரப் 07 Feb, 2026 | 05:20 PM (எஸ்.எஸ்.சி. அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று சனிக்கிழமை (07) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் நெதர்லாந்தின் சவாலை முறியடித்து 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பாகிஸ்தான் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. போட்டியின் 18ஆவது ஓவர் முடிவில் தோல்வியின் விளிம்பிலிருந்த பாகிஸ்தான் அணியை பாஹீம் அஷ்ரப்பின் கடைசிநேர அதிரடி மீட்டெடுத்தது. பாகிஸ்தானில் வெற்றிக்கு கடைசி 2 ஓவர்களில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரில் வன் பீக்கின் பந்துவீச்சில் 6, 2, 6, 0, 6, 4 என 24 ஓட்டங்களைக் குவித்த பாஹீம் அஷ்ரப் அணியை வெற்றிப்பாதையில் இட்டார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாஹீம் அஷ்ரப் கொடுத்த இலகுவான பிடியை ஓ'டௌட் தவறிவிட்டது ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக திருப்பு முனையாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் விளையாட்டரங்கில் 2016 நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் முதல் நான்கு பந்துகளில் கார்லோஸ் ப்றத்வெய்ட் குவித்த சிக்ஸ்களை பாஹீம் அஷ்ரப்பின் அதிரடி நினைவுபடுத்தியது. நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. சய்ம் அயூப் (24), அணித் தலைவர் சல்மான் அலி அகா (12) ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். மறுபக்கத்தில் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய சாஹிப்ஸதா பர்ஹான் 47 ஓட்டங்களைப் பெற்றதுடன் பாபர் அஸாமுடன் 3ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே முழுப் போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பர்ஹான் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் பாபர் அசாம் (15) களம் விட்டகன்றார். உஸ்மான் கான், ஷதாப் கான், மொஹம்மத் நவாஸ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக 17ஆவது ஓவரில் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் கடைசி 3 ஓவர்களில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 33 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இதன் காரணமாக நெதர்லாந்தின் கை ஓங்கி இருந்தது. எனினும் லோகன் வன் பீக் வீசிய 19ஆவது ஓவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பாஹீம் அஷ்ரப் 24 ஓட்டங்களை விளாசி ஆட்டத்தின் பிடியை பாகிஸ்தான் பக்கம் திருப்பினார்.கடைசி ஓவரில் ஷஹீன் ஷா அப்றிடி, பாஹீம் அஷ்ரப் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி 4 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பாஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களுடனும் ஷஹீன் ஷா அப்றிடி 5 ஓட்டங் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் போல் வன் மீக்கரன் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆரியன் டட் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றது. நெதர்லாந்தின் முன்வரிசை மற்றும் மத்திய வரிசை வீரர்களில் நால்வரே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடினர். இதன் பலனாக 15ஆவது ஓவரில் நெதர்லந்து 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆனால், அதன் பின்னர் கடைசி 6 விக்கெட்கள் 21 ஓட்டங்களுக்கு சரிந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (37), பாஸ் டி லீட் (30), மைக்கல் லெவிட் (24), கொலின் அக்கமன் (20) ஆகியோரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சல்மான் மிர்ஸா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சய்ம் அயூப் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்ரார் அஹ்மத் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பாஹீம் அஷ்ரப். (பட உதவி: எஸ். நாதன்) https://www.virakesari.lk/article/238093

`தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதாம்; உண்மைதான், ஏனெனில்...' - நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை!

2 weeks ago
கமலுக்கு தெரியவில்லை உண்மையில் அண்ணா சோழவம்சதின் நேரடி நீட்சி என்று. அண்ணா காஞ்சிபுரம் (கஞ்சிவரம்) முதலியார் - இவர்கள் இப்போதும் தென்கரை மூலநாத சாமி கோயிலில் இருக்கும் சவான் கல்லை (நவகாண்டத்துக்கு எழுப்புபப்பட்டு இப்போதும் உள்ள, நவகாண்டம் அநேகமாக அரச உறவுகளில் ஒருவரே செய்வது) பூசிப்பவர்கள். அனால் இதன் ஆதி வரலாறை சொல்வது கந்தபுராணம் - வீரவாகுதேவர் மற்றும் சோகோதர்கள் முருகனால் அனுப்பப்பட்டது, முசுகுந்த சோழ இராச்சியத்தை மீட்பதற்கு , பரப்புவதற்கு (சுருக்கமாக). அதில் முடிவின் தறுவாயில் இருந்த (சிறிய) சோழவம்சத்தை, வீரஆகுதேவரின் மகளான சித்திரவல்லியை முசுகுந்த சோழன் மணம் முடித்து தொடங்கி, பின் விருட்சமாகிய சோழவம்சம் என்று (சுருக்கமாக). (இந்த (அரச) இறைவரம் என்ற பகுதி பாண்டியர், சேரருக்கு இல்லை) ஆம் அண்ணா (வரலாற்றில் சரியாகத் தான்) குறிப்பீடான அரியணையில் ஏற்றப்பட்டார்.

கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

2 weeks 1 day ago
கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும் --- --- --- *உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை *பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது *ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன? --- ---- --- இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம். ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது. இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன. அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே. இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க. அதாவது -- 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது. குறிப்பாக -- பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது. அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள். அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக -- தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது. பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச. அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன. சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது. “வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது. அது மாத்திரமல்ல -- 13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான். 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார். கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது. ஆகவே -- இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் -- இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. ஆனால் --- 13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு. அதேவேளை -- இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது. அதாவது -- கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது. அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே -- 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது. குறிப்பாக -- அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது, ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது. ஆகவே -- ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது. அதாவது --- கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது. ஆகவே --- 'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது. எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். ஏனெனில் --- குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது. ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால். அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262

கிவுல் ஓயா திட்டமும் 13 ஆவது திருத்தச் சட்டமும்.

2 weeks 1 day ago

கிவுல் ஓயா திட்டமும்

13 ஆவது திருத்தச் சட்டமும்

--- --- ---

*உலக அரசியல் ஒழுங்குக் குழப்பங்களை நன்கு பயன்படுத்தும் இலங்கை

*பண்டாரநாயக்க, ஜேஆர் காலம் முதல் அநுர வரையான அறிவூட்டல் அவசியமானது

*ரில்வின் சில்வா குழுவின் டில்லி பயணம் வெளிப்படுத்துவது என்ன?

--- ---- ---

இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதற்கு முன்னர், வடக்கு கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது ஏற்புடைய யதார்த்தம்.

ஏனெனில், காணி அதிகாரம் என்பது மிக முக்கியமானது. அந்த அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல். கொழும்பில் இருந்து அபிவிருத்தித் திட்டங்களைத் தீர்மானிக்க முடியாது.

இதன் காரண காரியமாகவே, போர் இல்லாது ஒழிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில். கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வைத்த அபிவிருத்தி திட்டங்கள் பல தோல்வி கண்டன.

அவை அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் பிரதேசங்களில் கவர்ச்சிகரமாக மேற்கொள்ளும் அரசியல் பிரச்சாரங்கள் மாத்திரமே.

இப் பின்ணியை அறிந்துதான், ஈழத்தமிழர்களின் 80 வருடங்களுக்கும் மேற்பட்ட அரசியல் விடுதலை விவகாரத்தை, “மாற்றம்” “சோசலிசம்” “சமத்துவம்” என்ற பொதுச் சொல்லாடல்களுக்குள் வலிந்து திணிக்கிறார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க.

அதாவது --

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சியை கைப்பற்றிய ஜேவிபியை மையப்படுத்திய அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அபிவிருத்தி என்ற மாயை “இன சமத்துவம்” என்ற புதிய வடிவத்தில் முன்நிறுத்தி தமிழர் பிரதேசங்களில் அரசியல் சித்து விளையாட்டை பரிசோதிக்கிறது.

குறிப்பாக --

பண்டாரநாயக்க, ஜேஆர் காலத்து சிந்தனைகளை “மாற்றம்” என்று பொறி வைத்து அநுர கையாளுகிறார் என்றால், “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற பௌத்த கோட்பாட்டுச் சிந்தனையில், அநுரவுக்கும் மாற்றுக் கருத்தில்லை என்பது பகிரங்கமாகியுள்ளது.

அதாவது “மாற்றம்” என்ற பொறிக்குள் பௌத்த சிந்தனையை, அநுர மிக நுட்பமாக கொண்டு வருகிறார் என்பதே இதன் பொருள்.

அநுர, எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த நிலைப்பாடு தெரிந்தது. ஆனாலும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் “அரச முறைமை மாற்றம்” (System Change) ஏற்படும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருந்தது.

ஆனால், அரச முறைமை மாற்றம் என்பது கூட பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தியது என்பதை வடக்குக் கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாக்களித்த மக்களுக்கு புரியவில்லை. ஆனால், தற்போது படிப்படியாக அது வெளிப்பட ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக --

தேசிய மக்கள் சக்தி பதவிக்கு வந்த கடந்த ஒரு வருடத்தில் அதாவது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடமாகாணத்தை பிரதானப்படுத்தி அறிவிக்கப்பட்ட கிவுல் ஓயா நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டம், வாக்களித்த தமிழர்கள், அநுர மீது வைத்திருந்த அந்த நம்பிக்கையை தற்போது கருவறுத்துள்ளது.

பொய்யான வாக்குறுதிக்கு வாக்களித்து ஏமாந்துவிட்டோம் என்ற உணர்வு தற்போது அந்த மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பண்டாரநாயக்க காலத்தில் 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லோயா குடியேற்றச் சிந்தனையின் நீட்சியை. அநுர, புதிய வடிவத்தில் செதுக்குகிறார் என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது.

கிவுல் ஓயாத் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு முதன் முதலில் செதுக்கியவர் மகிந்த ராஜபக்ச.

அப்போது அவருடைய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம். கல்லோயா குடியேற்றத் திட்டம், மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே கிவில் ஓயாத் திட்டமும் அமைய வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டிருந்தது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், மகிந்தவுக்கு ஆதரவு வழங்க, ஜேவிபி கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தில், வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டங்கள், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல நிபந்தணைகள் உள்ளடங்கியிருந்தன.

சிங்கள மொழியில் வெளியான ஒப்பந்தத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக அபிவிருத்திக்கான முக்கியத்துவம் என்பது அந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

“வீடற்றவர்களுக்கான குடியேற்றத் திட்டம்”. “அபிவிருத்தி” என்பதன் பொருள் வடக்கு கிழக்கை மையப்படுத்தியிருந்தது. அப்போதைய தேர்தல் பிரச்சாரங்களில் அது தென்பட்டது.

அது மாத்திரமல்ல --

13 ஆவது திருத்தச் சட்டம் கூட அவசியம் இல்லை என்ற பேச்சுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் தீவிரமாக பேசப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வேறு சில காரணங்களை கூறி மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணியும் இதுதான்.

2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என்றும், குடியேற்றத் திட்டங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் உள்ளடக்கம். வடக்கு கிழக்கை மையப்படுத்தியது. தேர்தல் பிரச்சாரங்களில் சஜித் அப்போது அதனை பகிரங்கப்படுத்தியிருந்தார்.

கோட்டாபய முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமும் வடக்கு கிழக்கை மையப்படுத்திய குடியேற்றங்கள், பௌத்த சமய முன்னுரிமை மற்றும் நிர்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியமானது.

ஆகவே --

இதன் நீட்சிதான் அநுர அரசாங்கம் முன்வைத்த கிவுல் ஓயாத் திட்டம். இத் திட்டம், 13 ஆவது திருத்தச் சடடத்தை ரத்துச் செய்யும் ஒரு உத்தி என்றே ஈழத்தமிழர்கள் பொருள் கொள்ள வேண்டும்.

ஏனெனில் --

இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்தாலும், இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஆனால் ---

13 ஆவது திருத்தத்தின் கீழ் உள்ள மாகாண சபை அதிகாரப் பட்டியலில் காணி விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், இலங்கைத் தேசிய காணி கொள்கை, அரச காணிகள் தொடர்பான மத்திய அரசின் அதாவது கொழும்பு நிர்வாக அதிகாரம் தொடர்ந்து நிலவுவதால், நடைமுறையில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

அதாவது, சிங்கள அரச அரசியல் தலைவர்களின் கீழ் இயங்கும் சிங்கள அரச அதிகாரிகளிடம் அந்த அதிகாரங்கள் உள்ளன. தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அவர்களிடமே உண்டு.

அதேவேளை --

இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம், 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் (11 ஆம் அட்டவணை) காணி நிர்வாக விடயங்களின் ஒரு பகுதி மாகாண சபைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆனாலும், மாகாணங்களுக்கிடையிலான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மத்திய அரசிற்குரிய காணிகளின் நிர்வாகம், காணி ஆணையாளர் திணைக்களத்தின் அதிகார வரம்பிற்குள் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவாகவே செயல்படுகிறது.

அதாவது --

கொழும்பு அரசியல் நிர்வாகத்தின் இறுதி முடிவில்லாமல் காணி ஆணையாளர் நாயகம் இயங்க முடியாது.

அதேவேளை, இலங்கை தேசிய காணி கொள்கை, ஒட்டுமொத்த இலங்கைக் காணி வளங்களை நிலையான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க வகையில் நிர்வகித்தல், காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், மற்றும் தேசிய அபிவிருத்திக்காக காணிகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக் கொள்கையானது கொழும்பை மையப்படுத்திய காணிப் பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் மூலம் நிர்வகிக்கப்பட்டு, சட்டரீதியான சட்டக் கட்டமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஆகவே --

13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவான முறையில் காணி அதிகாரங்கள், பெயரளவில் மாகாணத்துக்கு உரியதாக இருந்தாலும், செயற்பாட்டுப் பொறிமுறைகள், இலங்கை ஒற்றையாட்சி அரசின் அமைச்சரவையும் அதன் நாடாளுமன்றமும் எடுக்கும் தீர்மானத்துக்கு ஏற்பவே இயங்குகின்றன என்பது இங்கே தெளிவாகப் புரிகிறது.

குறிப்பாக --

அற்ப சொற்ப அதிகாரமுடைய 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கும் பரிந்துரைகள், மிலிந்த மொறகொட பேராசிரியர் ரொகான் குணரெட்ன மற்றும் சில மூத்த சிங்கள அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் ஒன்று கசிந்துள்ளது,

ஏற்கனவே அநுர அரசாங்கத்திடம் அந்த நிலைப்பாடு தெளிவாக உண்டு. இப் பின்புலத்தில் தான் ரில்வின் சில்வா புதுடில்லிக்கு அழைக்கப்பட்டார் என்று கூட உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

டொனால்ட் ட்ரம்பின் குழறுபடிகளினால் எழுந்துள்ள புவிசார் அரசியல் சூழலில், 13 ஐ விடவும். இலங்கை அரசு என்ற கட்டமைப்பு இந்திய நலனுக்கு அவசியமானது.

ஆகவே --

ஈழத்தமிழர் பற்றிய ஜேவிபியின் நிலைப்பாடு பற்றி புதுடில்லி கவனத்தில் எடுக்காமல் இருக்கும் சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.

ஆகவே, இப் பின்புலத்தில், இலங்கைத் தேசிய காணிக் கொள்கைக்கு அமைவாக, இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழு, இலங்கை காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளோடு கிவுல் ஓயாத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை புலனாகிறது.

அதாவது ---

கடந்த ஏழு வருடங்களாக மாகாண சபைகள் இயங்காத நிலையில், மாகாணங்களுக்குரிய காணி அதிகாரங்கள் முழுமைப்படுத்தாத பின்னணியில், மாகாணங்களை மையப்படுத்திய தேசிய காணிக் கொள்கை இதுவரையும் உருவாக்கப்படாத சூழலில், கொழும்பு அரச இயந்திரம், 1949 இல் இருந்து இயங்கிய அதே ஒற்றையாட்சிப் பொறிமுறையில் இன்றும் இயங்குகின்றது என்பதையே கிவில் ஓயாத் திட்டம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

ஆகவே ---

'மாற்றம்' 'சோசலிசம்' 'சமத்துவம்' என்று மார்தட்டிய அநுர அதாவது, தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஜேவிபியின் உண்மை முகம் என்பது பண்டாநாயக்க, ஜேஆர் கால முகமாகவும், மகிந்தவின் வழித் தோன்றலாகவும் நடப்பு 2026 ஆம் ஆண்டு பகிரங்கமாகியுள்ளது.

எனவே, தற்போதைய புவிசார் அரசியல் போட்டிகளினால் ஐ. நா சபை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இன அழிப்பை தடுக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் அனைத்தும் செயலிழக்கவுள்ள ஆபத்தான ஒரு கட்டத்தில் இருக்கும் போது, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கடந்த 80 வருடங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் இன அழிப்புத் திட்டம் பற்றிய நுட்பமான வரை படங்கள் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

அவ்வாறு தெளிவுபடுத்தாமல் மக்களை ஒன்றிணைத்து நடத்தும் போராட்டங்கள் வெறும் உணர்வு சார்ந்ததாக மாத்திரமே அமையும். உரிய அறிவூட்டல்களோடுதான், ஜனநாயக வழியிலான உரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

ஏனெனில் ---

குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கைப் பயன்படுத்தி இலங்கை பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் இருந்து பெருமளவில் பெறக்கூடிய சாத்தியங்கள் நெருங்கியுள்ளன. சீனாவும் இலங்கையுடன் பேச்சு நடத்துகிறது.

ஆகவே, இந்த நிதிகளை வடக்கு கிழக்கு அபிவிருத்தி என்று கூறி கிவுல் ஓயா போன்ற திட்டங்களை நிறைவேற்றக் கூடிய சாத்தியங்கள் உண்டு. எனவே அறிவும் உணர்வும் ஒன்றித்த, மக்கள் பங்கேற்பு உரையாடல்கள் ஜனநாயக வழியில் அவசியமானது. அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பால்.

அவ்வாறு நடத்தப்படும் உரையாடல்கள் தீர்வுக்குரிய பொறிமுறை தயாரிப்புக்கும் வழி வகுக்கும்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid029PG66whPEcruSHDMhW6tCsLWS5ftmuMBdeMXYYz49hnRELHwA11Z1JY78iiVqNwEl&id=1457391262

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
அடிச்ச சிக்ஸ்சரில் 3 பந்துகள் காணமல் போயிட்டாம்....( மைதான் வெளிப்புறத்தி வீழ்ந்து) பையன் என்னத்தை சாப்புடுறானோ தெரியாமல்தான் கேட்கின்றேன் ..அந்த கார் ஓடுற நேரத்தவிட... இந்த போட்டி நடத்திறதுக்கு ஒரு தில் வேணும் ..அப்ப பக்கத்திலை என்னதை வைத்துக்கொண்டு படுக்கிறியள்... இருவர் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 21 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் வாதவூரான் ரசோதரன் இந்த ரசோதரன் கொஞ்சம் வித்தியாசமான பேர்வழி போலகிடக்கு