Aggregator

உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?

2 weeks 1 day ago
35 லட்சம் Pages.. சங்கடத்தில் பிரபலங்கள் - தொடரும் Epstein files சர்ச்சை | Explained எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்றால் என்ன? உலகின் பெரும் பிரபலங்கள் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்? என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு. #EpsteinFiles #JeffreyEpstein இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 1 day ago
**தேசியத் தலைவர் பிரபாகரன் – மதிவதனி திருமணம் : அவதூறுகளுக்கு எதிரான வரலாற்று விளக்கம்** கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி, தந்தை பெரியார் திராவிடக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில், தொல். திருமாவளவன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார். அந்த உரையின் 42ஆம் நிமிடத்திலிருந்து 46ஆம் நிமிடம் வரையான மூன்று நிமிடங்களுக்கு மேலான பகுதியில், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை தான் நேரில் சந்தித்து உரையாடியதாக நினைவுகூர்ந்த திருமாவளவன், அந்த உரையாடலில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மதிவதனி அம்மையாரை காதலித்ததையும், அதனால் எழுந்த சிக்கல்களையும், அதனைத் தொடர்ந்து அவர் எடுத்த நடவடிக்கைகளையும் பல நிமிடங்கள் தன்னிடம் பேசினார் எனப் பதிவு செய்துள்ளார். அந்த உரையில் அவர், “மதிவதனியை நான் காதலித்ததால் அவரது தந்தையே எங்களது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை” என பிரபாகரன் கூறியதாகவும், மேலும், “இந்த காதலின் காரணமாக வல்வெட்டித்துறையில் 14 பேரை நான் சுட்டுக் கொன்றேன்” என்று தன்னிடம் பிரபாகரன் தெரிவித்ததாகவும் மிகவும் அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல், “மதிவதனி சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவன் நான் அல்ல என்பதனால் இந்த மண்ணில் என்னைத் தலைவராக ஏற்கத் தயக்கம் இருந்தது; அது காலப்போக்கில் மாறிவிட்டது” என்றும் கூறியதாக, முற்றிலும் பொய்யான ஒரு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ⸻ அவதூறுக்கு எதிரான விளக்கம் திருமாவளவனின் இந்த அவதூறுகளுக்கு எதிராக, நான் ஏற்கனவே எனது கண்டனக் காணொளி மூலம் பதிவு செய்திருந்தேன். அதனைத் தொடர்ந்து, வரலாறு அறியாத பலர் தேசியத் தலைவர் அவர்களின் திருமண வரலாற்றை உண்மையான முறையில் அறிந்து கொள்ளும் பொருட்டு, அந்தச் சம்பவங்களின் சுருக்கமான ஆனால் துல்லியமான வரலாற்றை இங்கே பதிவாக வழங்குகிறேன். ⸻ 1983–84 : மாணவர் போராட்டப் பின்னணி ஆயுதப் போராட்டம் மும்முரம் அடைந்த 1983ஆம் ஆண்டு காலகட்டத்தில், சிங்கள தேசமெங்கும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இதன் காரணமாக, தெற்கு இலங்கையில் கல்வி கற்று வந்த தமிழ் மாணவர்களுக்கு தெற்கில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, தெற்கு பல்கலைக்கழகங்களில் பயின்ற தமிழ் மாணவர்கள், “தாம் வடக்கில் உள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே கல்வியைத் தொடரும் வசதிகளை செய்து தர வேண்டும்” என்று சிங்கள அரசிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அந்த வேண்டுகோளுக்கு சிங்கள அரசு செவிசாய்க்கவில்லை. ⸻ யாழ் பல்கலைக்கழக உண்ணாவிரதம் இதன் பின்னணியில், 1984ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் நாள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், பேராதனை (Peradeniya) மற்றும் கடுப்பொத்த (Katupotha) பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஐந்து மாணவர்களும் நான்கு மாணவிகளுமாக ஒன்பது பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். சிங்கள அரசு பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை கைது செய்து சிறையில் அடைக்கக்கூடிய நிலை உருவானது. அதோடு, உண்ணாவிரதத்தின் ஆறாம் நாளில் ஒரு மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையை எட்டினார். ⸻ இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் இந்தச் சூழ்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு, அந்த மாணவ, மாணவிகளை உண்ணாவிரதப் பந்தலிலிருந்து பாதுகாப்பாக அழைத்து இந்தியாவிற்கு கொண்டு சென்றனர். இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவ, மாணவிகள் முதலில் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மாணவர்களில் ஜனகன் மற்றும் படிகலிங்கம் ஆகியோர் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர். மற்ற மாணவர்கள் தங்களது விருப்பப்படி வேறு வழிகளில் சென்றனர். ⸻ மாணவிகள் குறித்து பிரபாகரனின் முடிவு மாணவிகளை மதுரையிலேயே வைத்திருக்கவும், பயிற்சி முகாம்களுக்கு அனுப்பவும் பிரபாகரன் அவர்கள் விரும்பவில்லை. எனவே, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த • மதிவதனி • வினோஜா • ஜெயா • லலிதா ஆகிய நான்கு மாணவிகளும், திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் தம்பதிகளின் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். ⸻ மதிவதனி : பின்னணி பிரபாகரன் அனுப்பிய நான்கு பெண்களில், “மதி” என அழைக்கப்பட்ட மதிவதனி அம்மையார், ஒல்லியான உடல் அமைப்பும், வெளிர்ந்த நிறமும், இனிய முகமும், விளையாட்டுத் தன்மையும் கொண்டு அனைவரையும் ஈர்த்தார் என, “The Will to Freedom” என்ற நூலில் அடேல் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மதிவதனி அம்மையார், புங்குடுதீவின் மடத்துவெளி கிராமத்தைச் சேர்ந்தவர். இந்து மதத்தைப் பின்பற்றும், பக்தியுள்ள குடும்பத்தில் ஏரம்பு – சின்னம்மாள் தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தவர். அவரது தந்தை கிராமத்தில் “ஏரம்பு மாஸ்டர்” என அறியப்பட்ட ஆசிரியராக இருந்தார். இத்தகைய குடும்பச் சூழலில் வளர்ந்ததால், மதிவதனி அம்மையாருக்கு பக்தி, மென்மை, பரிவு, அறிவு இயல்பாகவே இருந்தது; அவர் கல்வியிலும் சிறந்து விளங்கினார். ⸻ கல்வி மற்றும் உண்ணாவிரதம் கால்நடை மருத்துவப் படிப்பிற்குத் தேர்வு பெற்றிருந்த அவர், குடும்பத்தின் விவசாயப் பின்னணியின் தாக்கத்தால் வேளாண்மை அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலத்திலேயே தமிழ் மாணவர்கள்மீது தாக்குதல்கள் நடந்தபோது, இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், வீட்டிற்கு திரும்பி பெற்றோருடன் தங்கி இருந்த நிலையில்தான் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்த மதிவதனி அம்மையார், மேலே குறிப்பிட்டபடி திருவான்மியூரில் உள்ள பாலசிங்கம் – அடேல் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். ⸻ திருவான்மியூர் இல்லத்தின் சூழல் சமூக அழுத்தங்களுக்கிடையே, அந்த நான்கு பெண்களின் வருகையால் திருவான்மியூர் இல்லம் மகிழ்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த இடமாக மாறியது. சமையல் பொறுப்பை அந்த நால்வரும் ஏற்றுக்கொண்டனர். பாலசிங்கம் அவர்கள் யாழ்ப்பாண உணவுகளை ரசித்துச் சாப்பிட்டார். பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வருகை தரும் நாட்களில் சிறப்பான உணவுகளும் தயாரிக்கப்பட்டன. ⸻ காதல் உருவான தருணம் இயல்பாகவே சுறுசுறுப்பும் குறும்புத்தனமும் கொண்ட மதிவதனி அம்மையார், “ஹோலி பண்டிகை” நாளில் வீதியில் மக்கள் ஒருவர்மீது ஒருவர் வர்ணம் கலந்த நீரை ஊற்றுவதை கவனித்தார். அதே “ஹோலி பண்டிகை” நாளில், பிரபாகரன் அவர்கள் அந்த இல்லத்திற்கு வந்தபோது, மதிவதனி அம்மையார் மஞ்சள் பொடியைக் கரைத்து வைத்திருந்த நீரை, வேறு ஒரு முக்கிய அலுவலுக்காகச் செல்லத் தயாராக வெள்ளை வெளீரென்ற சட்டையுடன் வந்திருந்த பிரபாகரன் அவர்கள் கதவைத் திறந்தவுடன் அவர் மீது ஊற்றினார். இதனை எதிர்பாராத பிரபாகரன் அவர்கள், இவ்வாறான உரிமையை தன்னுடன் எவரும் எடுத்துக்கொண்டதில்லை என்பதால் சற்று அதிர்ச்சி அடைந்தார். தனது சட்டையை பயன்படுத்த முடியாத கோபத்தில், மதிவதனியைத் திட்டிவிட்டார். இதனால், மதிவதனி அம்மையார் அழுதுகொண்டே ஓடினார். பின்னர், தானும் அவசரப்பட்டு பேசிவிட்டேன் என மனம் நெகிழ்ந்து, தனியே அழுதுகொண்டிருந்த மதிவதனியைச் சமாதானப்படுத்திய அந்தக் கணத்தில்தான் காதல் பொறி பிறந்தது. மதிவதனி அம்மையாரின் காதலை பிரபாகரன் அவர்கள் ஏற்றுக்கொண்டதோடு, தனது காதலையும் வெளிப்படுத்தினார். ⸻ திருமணத்திற்கான முடிவு இந்தக் காதல், பிரபாகரனுக்கு அமைப்பிற்குள்ளும் வெளியிலும் சில சிக்கல்களை உருவாக்கியது. சில மூத்த உறுப்பினர்கள், இது ஒழுக்கக் கோட்பாட்டை மீறுவதாக கருதினர். அந்தக் கடினமான காலத்தில், பாலசிங்கம் – அடேல் தம்பதிகள் பிரபாகரனுக்குத் துணை நின்றனர். திருமணம் மனித உணர்வுகளுக்குத் தேவையான ஒன்று என்றும், விதிகளில் நெகிழ்வு இருக்க வேண்டும் என்றும் பாலசிங்கம் அவர்கள் தெரிவித்தார். மேலும், திருமணம் ஒரு பொதுவிதியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். ⸻ பெற்றோர் சம்மதம் திருமண ஏற்பாடுகளை ஒழுங்கு செய்யும் முன்னர், மதிவதனி அம்மையாரின் பெற்றோருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு அவர்களது சம்மதமும் பெறப்பட்டது. ஆரம்பத்தில், “உன் வாழ்க்கை எப்போதும் அபாயத்தில் இருக்கும்” என்று தந்தை ஏரம்பு எச்சரித்தபோதும், “அவருக்காக உயிர் தியாகம் செய்யத் தயார்” என்று மதிவதனி அம்மையார் கூறியதை அடுத்து, அவரது தந்தை ஏரம்புவும் பூரண சம்மதம் தெரிவித்தார். ⸻ திருமணம் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, தமிழ்நாட்டில் உள்ள திருப்போரூர் முருகன் கோவிலில், மிக எளிமையான முறையில், மாப்பிள்ளைத் தோழனாக கே.பி. இருக்க, மதிவதனி – பிரபாகரன் திருமணம் நடைபெற்றது. இதுவே வரலாறு. ⸻ முடிவுரை இத்தகைய தெளிவான வரலாறு இருக்க, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தேவைக்காக திருமாவளவன் பேசிய அவதூறுக் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கவை. இந்தியாவின் தமிழ்நாட்டைப் போலவே, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குள் சாதியைச் சாட்டும் கௌரவக் கொலைகள் நிகழாத நிலையில், தமிழ்நாட்டில் கோலோச்சும் சாதிய விஷத்தை உலகத் தமிழர்களிடையே விதைப்பது மிகவும் தவறானது. மேலும், தமிழ் ஈழத்தில், விடுதலைப் புலிகளால் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைக்காக போராடிய எந்த ஒரு இயக்கத்தினாலும் கூட சாதியக் கொலைகளோ, அதற்கான மரண தண்டனைகளோ ஒருபோதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கே உறுதியாகத் தெரிவித்து, திருமாவளவனின் கருத்துக்கு ஈழத் தமிழனாக எனது கண்டனத்தைப் பதிவு செய்து, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்க்கையும் போராட்டமும் சாதி மதங்களைத் தாண்டிய ஈழத் தமிழ் மக்களின் விடுதலை அரசியலின் சாட்சி. அதை அபாண்டங்களால் மாசுபடுத்த முடியாது. கனடா ஈழமுரசு பதிரிகைக்காக சுவாமி சங்கரானந்தா🙏 https://www.facebook.com/share/1Ew2BqFC3G/?mibextid=wwXIfr

தமிழர் பகுதியில் அமைய உள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

2 weeks 1 day ago
தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்? கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 6 பிப்ரவரி 2026 வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர். வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தமிழர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு தமிழர்களே ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்? கிவுல் ஓயா திட்டம் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளில் 1983ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே இந்த கிவுல் ஓயா திட்டம் என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். குறித்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்களினால் செய்கை செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேவையான நீர் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். 2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் இந்த திட்டத்தின் பணியை முன்னெடுக்க முடியவில்லை. இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது முஸ்லிம் முதியவரின் கடை பெயரை எதிர்த்து கூடிய கூட்டம் - அங்கு வந்த 'முகமது தீபக்' செய்தது என்ன? '100 ரன் வித்தியாசம்' - வைபவ் சூர்யவன்ஷி அதிரடியால் இந்தியா உலகக் கோப்பை சாம்பியன் டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் விளையாட மறுத்த பிறகும் இந்தியா ஏன் இலங்கை செல்கிறது? உங்கள் வீட்டு சமையலறையில் கோழி இறைச்சியை கழுவுவது ஆபத்தானது என்று தெரியுமா? End of அதிகம் படிக்கப்பட்டது இதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மா ஓயாவின் முக்கிய துணை நதியான கிவுல் ஓயாவை குறுக்காக அணை அமைத்து கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், 1,700 ஹெக்டேர் புதிய நிலங்களில் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள 700 ஹெக்டேர் நிலங்களின் பயிர்செய்கை திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எதிர்ப்பில் ஈடுபடுவோர் என்ன சொல்கின்றார்கள்? பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களுக்கு விடுவிக்க முடியாத காணிகளை, சிங்கள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கிவுல் ஓயா திட்டத்திற்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''நாங்கள் இலங்கையின் உலர் வலயத்தில் வாழ்கின்ற மக்கள். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீர்த்தேவை என்பது விவசாய தேவைக்கும், அன்றாட ஜீவனோபத்திற்கும் முக்கியமானது. இந்த நீர்த்தேவை தனியே குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்த குடியேற்றப்பட்ட மக்கள் என்பது இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறிய மக்கள். அவர்களுக்கு இருக்கின்ற அதே தேவை, மகாவலி எல் வலயத்திற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் இருக்கின்றது.'' என்றார் பத்மநாதன் சத்தியலிங்கம் ''அந்த குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த திட்டத்தை செய்கின்றார்கள். ஏனைய மக்கள் கைவிடப்பட்ட மக்களாகவே இப்போதும் இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமி இன்று காடாகியிருக்கின்றது. 2014ம் ஆண்டு இருந்த அரசாங்கம் கூகுள் வரைப்படத்தில் எங்கேங்கெல்லாம் பச்சை நிறமாக இருந்ததோ, அந்த நிலங்களை வனவல திணைக்களத்திற்கு சொந்தமானது என விசேட வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.'' என்றார் அவர் ''அப்படி அறிவித்த அந்த பிரதேசத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் பயிர் செய்த நீர்பாசன குளங்கள், வயல்கள் எல்லாம் அதற்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திற்குள் மீள்குடியேற வந்த மக்களை அந்த வர்த்தமானியை காட்டி இன்று வரை அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த இடத்தை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுவிப்போம் என்று சொல்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அறிக்கை தருகின்றார்கள்.'' ''பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களை குடியேற விடாத அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டை கிவுல் ஒயா திட்டத்திற்காக விடுவித்திருக்கின்றார்கள்'' என பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார். சிங்கள குடியேற்றமா? புதிய சிங்கள குடியேற்றங்களை மீண்டும் கொண்டு வந்து, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தும் திட்டத்தை இந்த அரசாங்கமும் முன்னெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார். ''1983ம் ஆண்டு செய்ததை போல அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் வேறு மாகாணங்களிலிருந்து பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றியதை போல இந்த அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்ற போகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது'' என்றார் அவர். படக்குறிப்பு,வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சியை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கோரிக்கை விடுக்கின்றார். ''வவுனியா வடக்கு பிரதேசமானது, தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பூர்வீக பிரதேசத்தில் சிங்கள மயமாக்குவதற்கான, அதாவது எங்களுடைய பிரதேசத்தில் இன பரம்பலை மாற்றியமைப்பதற்கான அந்த வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பது எங்களுக்கு தெட்ட தெளிவாக தெரிகின்றது.'' என்றார் அவர் ''இவ்வாறான திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.'' என அவர் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இருப்பில் கை வைக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கின்றார். ''சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிர் அல்ல. சிங்கள குடியேற்றங்களை இனவாதிகள் கொண்டுவர முயற்சிப்பதற்குதான் நாங்கள் எதிர்க்கின்றோம். வவுனியா வடக்கில் அரைவாசிக்கு மேல் சிங்கள குடியேற்றங்கள் வந்து விட்டன. அபிவிருத்தி திட்டமா? சிங்கள குடியேற்றமா?'' என கேள்வி எழுப்புகிறார் அவர். படக்குறிப்பு,சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் யானை மனித மோதல் காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், யானை மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் குறிப்பிடுகின்றார். ''எங்களுடைய காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மனித யானை மோதல்கள் இன்னும் அதிகமான இருக்கும். இன்றும் கூட அடிக்கடி யானைகளினால் மனிதர்களின் உயிர்கள் வன்னி பகுதிகளில் இழக்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரித்து செல்லும் என்ற பயம் இருக்கின்றது.'' என அவர் குறிப்பிடுகின்றார். அரசாங்கம் என்ன கூறுகின்றது? ''கிவுல் ஓயா திட்டமானது, இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களை கொண்டது என கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும். எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழே மேற்கொள்ளப்படும்'' அவர் தெரிவித்தார். மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxyxwlplrxo

தமிழர் பகுதியில் அமைய உள்ள கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

2 weeks 1 day ago

தமிழர் பகுதியில் அமைய உள்ள நீர்த்தேக்க திட்டத்துக்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • 6 பிப்ரவரி 2026

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள உத்தேச கிவுல் ஓயா நீர்பாசனத் திட்டத்திற்கு தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்தை கைவிடுமாறு கோரி, வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொடர்ச்சியாக பல்வேறு வகையிலும் தமது எதிர்ப்புக்களை தமிழர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் கட்சிகள் இந்த திட்டத்திற்கு தமது எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

தமிழர் பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு தமிழர்களே ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர்?

கிவுல் ஓயா திட்டம்

கிவுல் ஓயா திட்டம்

வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள காணிகளில் 1983ம் ஆண்டு குடியமர்த்தப்பட்ட சிங்கள மக்களுக்கான நீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு உருவாக்கப்பட்ட திட்டமே இந்த கிவுல் ஓயா திட்டம் என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறித்த பகுதிகளில் வாழும் சிங்கள மக்களினால் செய்கை செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேவையான நீர் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

2011ம் ஆண்டு கிவுல் ஓயா திட்டத்திற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், பல்வேறு காரணங்களினால் இந்த திட்டத்தின் பணியை முன்னெடுக்க முடியவில்லை.

இந்த நிலையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன்படி, 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இந்தத் திட்டம், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள மா ஓயாவின் முக்கிய துணை நதியான கிவுல் ஓயாவை குறுக்காக அணை அமைத்து கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், 1,700 ஹெக்டேர் புதிய நிலங்களில் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படுவதுடன், ஏற்கனவே உள்ள 700 ஹெக்டேர் நிலங்களின் பயிர்செய்கை திறனையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிவுல் ஓயா தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

படக்குறிப்பு,இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம்

எதிர்ப்பில் ஈடுபடுவோர் என்ன சொல்கின்றார்கள்?

பாரம்பரியமாக வாழ்ந்த தமிழர்களுக்கு விடுவிக்க முடியாத காணிகளை, சிங்கள மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்படுகின்ற கிவுல் ஓயா திட்டத்திற்கு விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''நாங்கள் இலங்கையின் உலர் வலயத்தில் வாழ்கின்ற மக்கள். வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் நீர்த்தேவை என்பது விவசாய தேவைக்கும், அன்றாட ஜீவனோபத்திற்கும் முக்கியமானது. இந்த நீர்த்தேவை தனியே குடியேற்றப்பட்ட மக்களுக்கு மாத்திரம் இல்லை. அந்த குடியேற்றப்பட்ட மக்கள் என்பது இந்த வன்னி தேர்தல் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் சிறிய மக்கள். அவர்களுக்கு இருக்கின்ற அதே தேவை, மகாவலி எல் வலயத்திற்கு வெளியிலுள்ள மக்களுக்கும் இருக்கின்றது.'' என்றார் பத்மநாதன் சத்தியலிங்கம்

''அந்த குறிப்பிட்ட மக்களுக்கு மாத்திரம் இந்த திட்டத்தை செய்கின்றார்கள். ஏனைய மக்கள் கைவிடப்பட்ட மக்களாகவே இப்போதும் இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற பகுதியில் பலர் மீள்குடியேறியுள்ளனர். அவர்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமி இன்று காடாகியிருக்கின்றது. 2014ம் ஆண்டு இருந்த அரசாங்கம் கூகுள் வரைப்படத்தில் எங்கேங்கெல்லாம் பச்சை நிறமாக இருந்ததோ, அந்த நிலங்களை வனவல திணைக்களத்திற்கு சொந்தமானது என விசேட வர்த்தமானியூடாக அறிவித்திருந்தது.'' என்றார் அவர்

''அப்படி அறிவித்த அந்த பிரதேசத்திற்குள் தமிழ் மக்கள் வாழ்ந்த கிராமங்கள், அவர்கள் பயிர் செய்த நீர்பாசன குளங்கள், வயல்கள் எல்லாம் அதற்குள் உள்ளடங்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்திற்குள் மீள்குடியேற வந்த மக்களை அந்த வர்த்தமானியை காட்டி இன்று வரை அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை.

இந்த இடத்தை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அதை விடுவிக்க மறுப்பு தெரிவிக்கவில்லை. விடுவிப்போம் என்று சொல்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அறிக்கை தருகின்றார்கள்.''

''பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்களை குடியேற விடாத அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காட்டை கிவுல் ஒயா திட்டத்திற்காக விடுவித்திருக்கின்றார்கள்'' என பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவிக்கின்றார்.

தமிழர் பகுதியில் கொண்டு வரும் நீர்த்தேக்க திட்டத்திற்கு தமிழர்கள் எதிர்ப்பு ஏன்?

சிங்கள குடியேற்றமா?

புதிய சிங்கள குடியேற்றங்களை மீண்டும் கொண்டு வந்து, தமிழர் பகுதிகளில் குடியமர்த்தும் திட்டத்தை இந்த அரசாங்கமும் முன்னெடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் குறிப்பிடுகின்றார்.

''1983ம் ஆண்டு செய்ததை போல அல்லது மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் வேறு மாகாணங்களிலிருந்து பெருந்தொகையான சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்றியதை போல இந்த அரசாங்கமும் பெரும்பான்மை சிங்கள மக்களை குடியேற்ற போகின்றார்களா? என்ற சந்தேகம் வருகின்றது'' என்றார் அவர்.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

படக்குறிப்பு,வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு

கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் பிரதேசத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் முயற்சியை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி திருநாவுகரசு கோரிக்கை விடுக்கின்றார்.

''வவுனியா வடக்கு பிரதேசமானது, தமிழர்களின் பூர்வீக பிரதேசமாக காணப்படுகின்றது. எங்களுடைய இந்த பூர்வீக பிரதேசத்தில் சிங்கள மயமாக்குவதற்கான, அதாவது எங்களுடைய பிரதேசத்தில் இன பரம்பலை மாற்றியமைப்பதற்கான அந்த வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பது எங்களுக்கு தெட்ட தெளிவாக தெரிகின்றது.'' என்றார் அவர்

''இவ்வாறான திட்டங்களை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

படக்குறிப்பு,முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்

அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்ற போதிலும், அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் இருப்பில் கை வைக்க முயற்சிப்பார்களாயின் அதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவிக்கின்றார்.

''சிங்கள மக்களுக்கு நாங்கள் எதிர் அல்ல. சிங்கள குடியேற்றங்களை இனவாதிகள் கொண்டுவர முயற்சிப்பதற்குதான் நாங்கள் எதிர்க்கின்றோம். வவுனியா வடக்கில் அரைவாசிக்கு மேல் சிங்கள குடியேற்றங்கள் வந்து விட்டன. அபிவிருத்தி திட்டமா? சிங்கள குடியேற்றமா?'' என கேள்வி எழுப்புகிறார் அவர்.

சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

படக்குறிப்பு,சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன்

யானை மனித மோதல்

காடுகள் அழிக்கப்பட்டு இந்த திட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், யானை மனித மோதல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் குறிப்பிடுகின்றார்.

''எங்களுடைய காடுகள் அழிக்கப்படுகின்றன. இந்த காடுகள் அழிக்கப்படுகின்றமையினால் மனித யானை மோதல்கள் இன்னும் அதிகமான இருக்கும். இன்றும் கூட அடிக்கடி யானைகளினால் மனிதர்களின் உயிர்கள் வன்னி பகுதிகளில் இழக்கப்படுகின்றன. இது இன்னும் அதிகரித்து செல்லும் என்ற பயம் இருக்கின்றது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசாங்கம் என்ன கூறுகின்றது?

''கிவுல் ஓயா திட்டமானது, இன மற்றும் மத அடிப்படையிலான நோக்கங்களை கொண்டது என கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது'' என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும். எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது, திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழே மேற்கொள்ளப்படும்'' அவர் தெரிவித்தார்.

மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqxyxwlplrxo

கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு ; 200 பேர் உயிரிழப்பு

2 weeks 1 day ago
கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு; 200 பேர் உயிரிழப்பு 07 Feb, 2026 | 09:38 AM கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர். மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மணிநேரத்திற்குப் பிறகு மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238050

கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு ; 200 பேர் உயிரிழப்பு

2 weeks 1 day ago

கிழக்கு கொங்கோ சுரங்க பகுதியில் மண்சரிவு; 200 பேர் உயிரிழப்பு

07 Feb, 2026 | 09:38 AM

image

கிழக்கு கொங்கோவின் ரூபாயா பகுதியில் உள்ள கோல்டான் சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 200 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொங்கோவின் ரூபாயா பகுதியில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லுவோவோ சுரங்கத் தளத்தில் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிற்பகலில் பெய்த கடும் மழையையடுத்து சுரங்கப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கியுள்ளனர்.

மண்சரிவில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து செயல்பட்டனர். 21 மணிநேரத்திற்குப் பிறகு மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238050

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
அடிச்சு ஆட‌க் கூடிய‌ இர‌ண்டு அமெரிக்க‌ வீர‌ர்க‌ள் அவுட்................இனி இந்தியாவின் சுழ‌ல் ப‌ந்துக்கு அமெரிக்க‌ வீர‌ர்க‌ளால் அடிச்சு ஆடுவ‌து சிர‌ம‌ம் வெற்றி இந்தியாவுக்கே..........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
நாளைக்கு அப்பாகிஸ்தான் எதிர் நியுசிலாந் மைச் சூப்ப‌ரா இருக்கும் அமெரிக்காவில் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் நியுசிலாந் அப்கானிஸ்தானிட‌ம் தோத்த‌வை😁😛...........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
ப‌ந்து போட்ட‌வ‌ர் 2010ம் ஆண்டு 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட உல‌க‌ கோப்பையில் இந்தியா அணிக்காக‌ விளையாடின‌ வீர‌ர்...............ஜ‌பிஎல்ல‌ கூட‌ இவ‌ருக்கு வாய்ப்பு வ‌ழ‌ங்க‌ப் ப‌ட‌ வில்லை............அப்ப‌டியே அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் ந‌ல்ல‌ ப‌ந்து வீச்சாள‌ர் இன்று அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டார் இந்திய‌ வீர‌ரின் ப‌ந்துக்கு இந்திய‌ வீர‌ர் அடிச்சார் ஹா ஹா😛..........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
கடைசி ஓவரில் அநியாயமாக ஓட்டங்களைக் கொடுத்து விட்டனர்.பார்ப்போம் அமெரிக்காவின் துடுப்பாட்டதை.எனக்கு புள்ளிகளைப்பற்றி கவலையில்லை. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. SKY தனி வருவனாக நின்று இந்தியாவுக்கு கௌரவமான ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இப்படியான கடுமையான சூழலிலும் தனித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள்தான் இந்தியா போன்ற முன்ணனி அணிகளுக்கும், யூஎஸ் போன்ற அணிகளுக்கும் வித்தியாசம்.

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 1 day ago
எஸ். எல். திருமாவளவன், ஆமைக்கறி புகழ் சீமான் போன்றோர் தலைவர் பலருக்கும் தெரியாத இரகசியங்களைத் தமக்கு மட்டுமே கூறினார் என்று பு.போ.க.க. கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் பல புதுக் கதைகள் கூட வரலாம். வியப்பொன்றுமில்லை. ஏரம்பு அய்யாவுக்கு பட்டதாரிக் கனவு என்பதுடன் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என ஒரு சில முதியவர்கள் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு இருக்கிறன். காதால் கேட்பதுவும் பொய் கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிச்சு அறிவதே மெய் என்றாதால நான் காதால கேட்ட கதை பொய்யாகத் தான் இருக்கும். பிறகு ஏரம்பு அய்யா ஞனஸ்நானம் எடுத்துத் திருந்தீட்டாராக்கும்!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
SKY கரை சேர்த்து விடுவார் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பணம் கிரிகெட்டுக்குள் வரின், இந்தியாவின் கொட்டத்தை கொஞ்சம் அடக்கலாம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 1 day ago
அமெரிக்கா ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ளுக்கு கொடுக்கும் முக்கிய‌த்துவ‌ம் கிரிக்கேட்டுக்கும் கொடுக்க‌னும் இந்தியாவை அதிக‌ம் தோக்க‌டிக்கும்😛.........................