Aggregator
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் பாதிக்கப்பட்ட 18 வீடுகளுக்கு சீபாரிசு
Published By: Vishnu
12 Dec, 2025 | 08:20 PM
![]()
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டையடுத்து வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டை சுத்தப்படுத்துவதற்கான 25,000 ரூபாய் கொடுப்பனவுக்கு 18 வீடுகள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் வெள்ளநீர் வீட்டுக்குள் உட்புகுந்த வீட்டிற்கு அரசினால் வழங்கப்படும் 25,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படாமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியிருந்தது.
இதன் படி பிரதேச செயலகத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பிரகாரம் முறைப்பாட்டாளர் உட்பட்ட 18 வீடுகளுக்கான சேதவிபரம் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்க அதிபருக்கு நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் முறைப்பாட்டாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ நேரில் சமூகமளிக்கும்போது வெள்ளநிவாரணம் தொடர்பான சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமணம் என்பவற்றின்படி முறைப்பாட்டாளருக்கான கொடுப்பனவை வழங்கமுடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது நேரில் வந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும்படி பிரதேச செயலாளரால் முறைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்!
நிவாரணப் பொருட்களுடன் திருகோணமலையில் தரையிறங்கிய அமெரிக்க விமானம் !
Published By: Vishnu
12 Dec, 2025 | 08:06 PM
![]()
அமெரிக்க விமானப்படையின் விமானம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களுடன் சீன குடா விமான நிலையத்தில் வந்திறங்கியது.

இலங்கையின் பேரிடர் நிவாரண உதவிகளை விரைவாக இலங்கை முழுவதும் வழங்கும் திட்டத்தின் கீழ் இவ் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் டித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கிண்ணியா, மூதூர், வெருகல் பகுதிகளின் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வீடு திரும்பிய 250 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதிகள் இன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலிய உதவி திட்டம்,இங்கிலாந்து உதவித் திட்டம்,யுனெப்ஸ் மூலம் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களே இவ்விமானத்தில் எடுத்து வரப்பட்டிருந்தது.இந்நிவாரண உதவிகளை அகம் மனிதாபிமான வள நிறுவனம் விருத்தி வலையமைப்புடன் இணைந்து உரிய இடங்களுக்கு வழங்கின. மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், வெருகல் பிரதேச செயலாளர்களுடன் இணைப்பை ஏற்படுத்தி இச்சேவையை,வொக்கோட் நிறுவனம்,மக்கள் சேவை மன்றம் ஆகிய நிறுவனங்கள் நிவாரண உதவிகளை உரியவர்களுக்கு வழங்கின. இதன் அடிப்படையில் கிண்ணியா பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு மக்கள் சேவை மன்றம் நிறுவனமும், மூதூர் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு வொக்கோட் நிறுவனமும்,வெருகல் பிரதேசத்தில் 100 குடும்பங்களுக்கு அகம் நிறுவனமும் இன்றைய தினமே நிவாரணங்களை வழங்கி இருந்தன.
இந்நிகழ்வில் யுனெப்ஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மற்றும் அகம் மனிதாபிமான வள நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
நோர்வே 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவி சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் தெரிவிப்பு
Published By: Vishnu
12 Dec, 2025 | 07:31 PM
![]()
(நா.தனுஜா)
'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நோர்வே சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியுதவியை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் தெரிவித்துள்ளார்.
'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கிப் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பல வழிகளிலும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
அந்தவகையில் நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் உதவிகள் தொடர்பில் கருத்துரைத்துள்ள அந்நாட்டின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட், 'இலங்கையில் தமது வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள மக்களுக்கு அவசியமான உடனடி உதவிகளை நோர்வே வழங்கிவருகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான இருப்பிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மீளக்கட்டியெழுப்பல் வசதிகள் என்பன முறையாகச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதும், அதற்குரிய ஒத்துழைப்பை வழங்குவதும் இன்றியமையாததாகும்' எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்பவற்றுக்கு நோர்வே அரசாங்கம் சுமார் 2 மில்லியன் டொலர்கள் நிதியை நன்கொடையாக வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இவ்வாறான பரந்தளவிலான அனர்த்தங்களின்போது நோர்வே போன்ற நாடுகள் முன்வந்து பாதிக்கப்பட்ட சமூகங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான உதவிகளை வழங்கவேண்டியது அவசியம் எனவும் நோர்வே அமைச்சர் அஸ்முன்ட் ஒக்ரஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
இரசித்த.... புகைப்படங்கள்.
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?

பட மூலாதாரம், European Space Agency (ESA)
படக்குறிப்பு, என்.ஜி.சி 3783 எனப்படும் விண்மீன் மண்டலத்தில் உள்ள கருந்துளையில் நிகழும் ஆற்றல் வெடிப்பைக் காட்டும் விவரிக்கும் கலைப் படைப்பு
52 நிமிடங்களுக்கு முன்னர்
ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது.
திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது.
கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.
இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
கருந்துளை என்றால் என்ன?
கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை.
பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது

'அந்தரங்க பகுதிகளைத் தொடுவது வன்கொடுமை அல்ல' - என கூறிய உயர் நீதிமன்றத்தை சாடிய உச்சநீதிமன்றம்

'விடுமுறை முடிந்து வரும்போது கர்ப்ப பரிசோதனை' - விடுதி மாணவிகள் புகாரின் பின்னணி என்ன?

சாப்பிட்ட உடனேயே மலம் - உணவு உங்கள் உடலில் சேரவில்லை என அர்த்தமா?

அகண்டா - 2 விமர்சனம்: பாலகிருஷ்ணாவின் திரைப்படம் எப்படி உள்ளது?
End of அதிகம் படிக்கப்பட்டது
இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன.
அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம்.
அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன.

பட மூலாதாரம், ESA/Hubble/Nasa/MC Bentz/DJV Rosario
படக்குறிப்பு, இந்த மிகப்பெரிய கருந்துளை பூமியிலிருந்து 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள என்.ஜி.சி 3783 என்று அழைக்கப்படும் விண்மீன் மண்டலத்திற்குள் அமைந்துள்ளது
இரண்டு தொலைநோக்கி
மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும்.
இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும்.
"ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார்.
ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.
அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி.
மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (XRISM) தொலைநோக்கி.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார்.
இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார்.
மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Solar Orbiter/EUI Team/ESA/Nasa
படக்குறிப்பு, ஐரோப்பிய விண்வெளி நிலையம் தலைமையிலான சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பிப்ரவரி 15, 2022 அன்று ஒரு பெரிய சூரிய வெடிப்பைப் படம் பிடித்தது
பேரண்டத்தின் ரகசியங்கள்
கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.
சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது.
அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது.
ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது."
மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு - விஞ்ஞானிகள் கண்டது என்ன?
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள்
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள்
வெனிசுவேலாவை டிரம்ப் குறிவைப்பது ஏன்? - மதுரோ மீதான குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,வெனிசுலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ
கட்டுரை தகவல்
வனேசா புஷ்லூட்டர்
லத்தீன் அமெரிக்கா ஆசிரியர், பிபிசி நியூஸ்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மீதான அழுத்தத்தை அதிகரித்து வருகிறார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தீவிரமடைந்ததன் ஒரு பகுதியாக, டிசம்பர் 10 அன்று, தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டி, வெனிசுவேலா கடற்கரையில் இருந்து ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது.
அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவை தாக்கும் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. மேலும், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீதான தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மதுரோவைப் பிடிப்பதற்கான தகவல்களை வழங்குவோருக்கான வெகுமதியையும் டிரம்ப் நிர்வாகம் இருமடங்காக உயர்த்தியுள்ளது.
யார் இந்த நிக்கோலஸ் மதுரோ ?

பட மூலாதாரம்,Reuters
படக்குறிப்பு,முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.
நிக்கோலஸ் மதுரோ இடதுசாரித் தலைவரான ஹியூகோ சாவேஸ் மற்றும் அவரது வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சியின் (United Socialist Party of Venezuela - PSUV) தலைமையில் முக்கியத்துவம் பெற்றார்.
முன்னாள் பேருந்து ஓட்டுநரும் தொழிற்சங்கத் தலைவருமான மதுரோ, சாவேஸுக்குப் பின் ஆட்சிக்கு வந்து, 2013 ஆம் ஆண்டு முதல் அதிபராக உள்ளார்.
சாவேஸும் மதுரோவும் ஆட்சியில் இருந்த 26 ஆண்டுகளில், அவர்களின் கட்சி தேசிய சட்டமன்றம் , நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.
2024-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், எதிர்க்கட்சிகளால் சேகரிக்கப்பட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கைகள், அவர்களின் வேட்பாளரான எட்முண்டோ கோன்சலஸ் அமோக வெற்றி பெற்றதாகக் காட்டின.
முதன்மை எதிர்க்கட்சித் தலைவரான மரியா கோரினா மச்சாடோ தேர்தலில் போட்டியிடத் தடை செய்யப்பட்டதால், அவருக்குப் பதிலாக கோன்சலஸ் நிறுத்தப்பட்டார்.
"சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான அவரது போராட்டத்திற்காக" அவருக்கு அக்டோபர் மாதத்தில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அதனையடுத்து, மச்சாடோ பயணத் தடையை மீறி, பல மாதங்களாக மறைவில் இருந்த பின்னர், டிசம்பர் மாதம் பரிசைப் பெறுவதற்காக ஓஸ்லோவுக்குப் புறப்பட்டார்.
டிரம்ப் ஏன் வெனிசுவேலா மீது கவனம் செலுத்துகிறார்?
வெனிசுவேலாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு அகதிகளாக வந்ததற்கு, டிரம்ப் மதுரோவையே குற்றம் சாட்டுகிறார்.
2013-ஆம் ஆண்டு முதல் வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஒடுக்குமுறையின் காரணமாக, சுமார் 80 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக மதிப்பிடப்படுகிறது.
ஆதாரம் எதுவும் வழங்காமல், மதுரோ தனது "சிறைச்சாலைகள் மற்றும் மனநல காப்பகங்களை காலி செய்து", அங்கிருந்தவர்களை அமெரிக்காவுக்கு குடியேற "கட்டாயப்படுத்துவதாக" டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் போன்ற போதைப் பொருட்கள் வருவதைத் தடுப்பதிலும் டிரம்ப் கவனம் செலுத்தியுள்ளார்.
அவர் வெனிசுவேலாவைச் சேர்ந்த இரண்டு குற்றவியல் குழுக்களான ட்ரென் டி அராகுவா மற்றும் கார்டெல் டி லாஸ் சோல்ஸ் ஆகியவற்றை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளார். பிந்தைய குழுவுக்கு மதுரோவே தலைமை தாங்குவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
தான் ஒரு போதைப் பொருள் குழுத் தலைவர் என்ற கூற்றை மதுரோ வலுவாக மறுத்துள்ளார்.
மேலும், வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்காக, தன்னை பதவியில் இருந்து நீக்க அமெரிக்கா "போதைப் பொருள் மீதான போர்" என்ற கூற்றைப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கார்டெல் டி லாஸ் சோல்ஸ் என்பது ஒரு படிநிலை அமைப்பு அல்ல, மாறாக ஊழல் மிகுந்த அதிகாரிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல் என்றும், இவர்கள் வெனிசுவேலா வழியாக கோகெய்ன் கடத்தலை அனுமதித்து லாபம் ஈட்டுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமெரிக்கா ஏன் கரீபியனுக்கு போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளது?

பட மூலாதாரம்,US Navy/Reuters
படக்குறிப்பு,கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்ட கப்பல்களில் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்ட் ஒன்றாகும். வெனிசுவேலா கரையோரத்தில் அமெரிக்கா எண்ணெய் டாங்கரை கைப்பற்றியபோது அது செயல்பாடுகளுக்கான தளமாக பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்கா 15,000 வீரர்கள் மற்றும் பல்வேறு வகையான விமானந்தாங்கி கப்பல்கள், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்கள், மற்றும் நீர் தாக்குதல் கப்பல்கள் ஆகியவற்றை கரீபியன் பகுதிக்கு அனுப்பியுள்ளது.
1989-இல் அமெரிக்கா பனாமாவை ஆக்கிரமித்ததிலிருந்து, இந்த பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய படை இது தான்.
இதன் நோக்கம், அமெரிக்காவிற்குள் ஃபென்டனைல் மற்றும் கோகெய்ன் கடத்தலைத் தடுப்பதாகும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டு இந்த கப்பல்களில் ஒன்றாகும். வெனிசுவேலா கடற்கரையில் எண்ணெய் கப்பல் கைப்பற்றப்படுவதற்கு முன்னர், இதிலிருந்துதான் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் புறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டேங்கர் கப்பல், "வெனிசுவேலா மற்றும் இரானில் இருந்து தடை செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டது" என்று அமெரிக்கா கூறியது. ஆனால், வெனிசுவேலா இந்த நடவடிக்கையை "சர்வதேச கடற்கொள்ளை" என்று கண்டித்துள்ளது.
சமீப மாதங்களில், போதைப் பொருட்களைக் கொண்டு சென்றதாகக் கூறப்படும் படகுகள் மீது சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
டிரம்ப் நிர்வாகம், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் அமெரிக்கா ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ளது என்று வாதிடுகிறது. அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஒழுங்கற்ற போர் நடத்துகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்கா, படகில் இருந்தவர்களை "போதைப்பொருள் பயங்கரவாதிகள்" என்று விவரித்தது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் "சட்டபூர்வமான ராணுவ இலக்குகளுக்கு" எதிரானவை அல்ல என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, செப்டம்பர் 2 அன்று நடந்த முதல் தாக்குதல், கவனத்தை ஈர்த்தது.
ஏனெனில் அன்று ஒரு தாக்குதல் அல்ல, மாறாக இரண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. முதல் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் இரண்டாவது தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை வழக்கறிஞர், இந்த ராணுவ நடவடிக்கை பொதுவாக அமைதியான காலத்தில் பொதுமக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட, முறையான தாக்குதல் எனும் பிரிவுக்குள் வருவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் "உயிர்களை அழிக்கும்... விஷத்தை எங்கள் கரைகளுக்குக் கொண்டு வர முயற்சிக்கும்" போதைப்பொருள் குழுக்களிடமிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க, ஆயுத மோதலுக்கான சட்டங்களின்படி தாங்கள் செயல்பட்டதாகத் தெரிவித்தது.
வெனிசுவேலா போதைப்பொருட்களை அனுப்புகிறதா?
உலகளாவிய போதைப்பொருள் கடத்தலில் வெனிசுவேலா ஒரு சிறு பங்களிப்பாளராகவே உள்ளது. இது, வேறு இடங்களில் தயாரிக்கப்படும் போதைப்பொருட்களைக் கடத்திச் செல்லப் பயன்படும் ஒரு வழித்தட நாடாகவே செயல்படுகிறது என போதைப்பொருள் தடுப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெனிசுவேலாவின் அண்டை நாடான கொலம்பியா, உலகின் மிகப்பெரிய கோகெய்ன் உற்பத்தியாளராக உள்ளது. இருப்பினும், இதன் பெரும்பகுதி வெனிசுவேலா வழியாக அல்லாமல், பிற வழிகளில் அமெரிக்காவிற்கு கடத்தப்படுகிறது.
2020-ஆம் ஆண்டு அமெரிக்க போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் (US Drug Enforcement Administration - DEA) அறிக்கைப்படி, அமெரிக்காவை அடையும் கோகெய்னில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசிபிக் வழியாகவே கடத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கரீபியன் கடலில் வேகப் படகுகள் மூலம் வரும் கோகெய்னின் அளவு மிகக் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆயினும்கூட, அமெரிக்கா நடத்திய பெரும்பாலான தாக்குதல்கள் கரீபியன் பகுதியில் தான் நடந்துள்ளன, பசிபிக் பகுதியில் சில தாக்குதல்களே நடந்துள்ளன.
செப்டம்பர் மாதம், டிரம்ப் அமெரிக்க ராணுவத் தலைவர்களிடம், தாங்கள் குறிவைத்த படகுகளில் "வெள்ளை நிறப் பவுடர் நிரம்பிய பைகள் குவிந்துள்ளன, அதில் பெரும்பாலானவை ஃபென்டனைல் மற்றும் பிற போதைப்பொருட்கள்" என்று கூறினார்.
ஃபென்டனைல் என்பது ஹெராயினை விட 50 மடங்கு வீரியம் கொண்ட ஒரு செயற்கை போதைப்பொருள்.
மேலும் அமெரிக்காவில் ஓப்பியாய்டை அதிக அளவு உட்கொள்ளுதலால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணமாகவும் இது உள்ளது.
ஆனால், முக்கியமாக மெக்சிகோவில் உற்பத்தி செய்யப்படும் ஃபெண்டானைல், அமெரிக்காவின் தெற்கு எல்லையைக் கடந்து நிலம் வழியாக அமெரிக்காவை அடைகிறது.
அமெரிக்காவின் போதைப்பொருள் அமலாக்க நிர்வாகத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய போதைப்பொருள் அச்சுறுத்தல் மதிப்பீட்டில் , அமெரிக்காவிற்குள் கடத்தப்படும் ஃபெண்டனைலின் மூல நாடுகளில் ஒன்றாக வெனிசுவேலா குறிப்பிடப்படவில்லை.
வெனிசுவேலா எவ்வளவு எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது ?
எண்ணெய், மதுரோ அரசாங்கத்தின் வெளிநாட்டு வருவாய்க்கான முக்கிய ஆதாரம் ஆகும். இந்தத் துறையில் இருந்து கிடைக்கும் லாபம் அரசாங்க பட்ஜெட்டில் பாதிக்கும் மேலான நிதியை வழங்குகிறது.
தற்போது வெனிசுவேலா ஒரு நாளைக்கு சுமார் 900,000 பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. அவர்களிடம் இருந்து எண்ணெய் வாங்கும் முதன்மை நாடாக சீனா உள்ளது.
அமெரிக்காவின் மதிப்பீட்டின்படி, வெனிசுவேலா உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்டிருந்தாலும், அந்த வளத்தை மிகக்குறைவாகவே பயன்படுத்துகிறது.
தொழில்நுட்ப மற்றும் பட்ஜெட் சவால்கள் காரணமாக, 2023-ஆம் ஆண்டில் வெனிசுவேலா உலகளாவிய கச்சா எண்ணெயில் 0.8% மட்டுமே உற்பத்தி செய்ததாக அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் (EIA) தெரிவித்துள்ளது.
எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதை அறிவித்த பிறகு, டிரம்ப் செய்தியாளர்களிடம், "எண்ணெயை நாங்கள் வைத்துக்கொள்வோம் என கருதுகிறேன்" என்று கூறினார்.
மதுரோ அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், நாட்டின் பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை அணுகுவதற்கான முயற்சி என்று வெனிசுவேலா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா இதற்கு முன்னர் மறுத்துள்ளது.
வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியுமா?
அதிபர் டிரம்ப், நவம்பர் 21 அன்று மதுரோவுடன் தொலைபேசியில் பேசியதை உறுதிப்படுத்தியுள்ளார்.
தொலைபேசி உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பதை அவர் வெளியிடவில்லை என்றாலும், டிரம்ப், மதுரோவுக்கு அவருடைய நெருங்கிய குடும்பத்துடன் வெனிசுவேலாவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு வார கால அவகாசம் கொடுத்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. பாதுகாப்பான வழியில் வெளியேறும் அந்த வாய்ப்பை மதுரோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் ராய்ட்டர்ஸ் கூறியது.
இந்த காலக்கெடு முடிவடைந்த ஒரு நாள் கழித்து, வெனிசுவேலாவைச் சுற்றியுள்ள வான்பரப்பை மூடப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப்.
வெனிசுவேலாவின் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக "நிலம் வழியாக" நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் ஏற்கனவே அச்சுறுத்தியுள்ளார். ஆனால், அத்தகைய ஒரு நடவடிக்கை எவ்வாறு செயல்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
டிரம்பின் பத்திரிகைச் செயலாளர், வெனிசுவேலாவில் அமெரிக்கத் துருப்புக்களை நிலத்தில் நிலைநிறுத்தும் சாத்தியக்கூறுகளை நிராகரிக்கவில்லை. "அதிபரின் வசம் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன" என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் அந்த வாய்ப்புகள் பற்றி விரிவாகக் கூறவில்லை என்றாலும், கரீபியன் பகுதியில் அமெரிக்கா நிலைநிறுத்தியுள்ள படைகள், ஒரு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்குத் தேவையானதை விட மிகப் பெரியது என்று ராணுவ ஆய்வாளர்கள் பல வாரங்களாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் அதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக சிபிஎஸ் நியூஸுக்கு நம்பத்தகுந்த வட்டாரம் தகவல் அளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு