Aggregator

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

2 weeks 6 days ago
கடன் பட்டு வெளி நாடு சென்ற பின் தான் "அக்கரைகள் பச்சை இல்லை என புரிகிறது" பையனும் இல்லை.கடனை உழைத்து கொடுக்க வழியும் இல்லை. ...தீர வர ஆராய்ந்து யாராவது உறவுகளின் உதவி யோடு இன்னும் கொஞ்சக் காலம் கடத்தி இருக்கலாம். முன்பு ஒரு காலத்தில் உயிர் காத்திட சென்றார்கள் .தற்போது உழைக்கவேணும் வெளி நாட்டில் வாழ்கிறேன் என்று என்று பந்தா காடடனும் என்று உயிரை பயணம் வைத்து செல்கிறார்கள்.

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!

2 weeks 6 days ago
இது யாழ் யூரியூப்பர் ஆட்களுக்குத் தெரியாதோ....நல்ல காலம் கனடாக்காரரின் தலை தப்பியிட்டுது.. ஆவ பாவமற்ற செயல்....வறுமையை பயன்படுத்தி...சிறுமியின் வாழ்க்கையைகெடுத்த கயவனுக்கு ...சுடு இரும்பில் வைத்து பச்சை மட்டையால் அடிக்க வேண்டும்..

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 weeks 6 days ago
"பிரதேசவாதம்" இது உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு. ஆகையால் எம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 weeks 6 days ago
சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் குடியேற்றங்களை அமைக்க ஆசைப்படுகின்றார்கள். சுமந்திரனும் அதே போல் ஆசைப்படுகின்றார். சிங்கள மாகாணங்களில் இப்படியான தமிழர் குடியேற்ற நிலங்களை அமைக்க முடியாதா?

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

2 weeks 6 days ago
இங்குள்ள பேர்மிங்கம் இந்த கூட்டம் வாழும் இடத்தில் போய் பார்த்தவர்களுக்கு புரியும் ஏன் பிரித்தானிய அகதிகளை அவசர அவசரமாய் தடுப்பதில் மும்முரம் காட்டுகிறது என்று .அவர்கள் இடத்தில் போக்குவரத்து விதிகள் வாகன தரிப்பிடங்கள் எவற்றையுமே மதிப்பதில்லை வாகன தண்டபனம் ரிக்கெட் வைப்பவர்கள் பலமுறை அடிவாங்கி உள்ளார்கள் .அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுப்பது என்றால் அரச உதவிகளில் தங்கியுள்ளவர்களுக்கே முன்னுரிமை .அந்த பகுதி கடைகளில் கார்ட் மிசின் என்பதே கிடையாது எல்லாமே பண புழக்கம் அதற்கே முன்னுரிமை . அதே போல் கிழக்கு லண்டனும் ஈஸ்ட் காம் தெருக்களும் மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது வெள்ளி கிழமைகளில் டபுள் மஞ்சள் கோட்டில் சர்வ சாதரணமாய் கார்கள் பார்க் பண்ணி விட்டு தொழுகைக்கு செல்வார்கள் கேட்ப்பார் பார்ப்பார் கிடையாது காரணம் அந்த பகுதி அரசியல்வாதி அவர்கள் இனமாய் இருப்பார் . அதே ஈஸ்ட் காம் தெருவில் மகாலட்சுமி கோவில் கோபுரம் கட்ட அதற்கு எதிராக அருகில் உள்ள மசூதிகளில் இருந்து எதிர்ப்பு பெட்டிசம் போக கவுன்சில் நீதி மன்றத்தை நாட பல காலம் இழுபட்டது கடைசியில் நீதிபதி சொன்ன தீர்ப்பு அனைவரும் அறிந்ததே .

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

2 weeks 6 days ago
மலையக மக்களுக்கு நான் எதிரியல்ல. சிங்கள பகுதிகளிலும் தமிழ் சார் பகுதிகளிலும் சரி சமமாக குடியேற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து. அதிலும் வாழ்வாதார நிலங்கள் என பார்த்தால் சிங்கள பகுதிகளே அதிகமாக தெரிகின்றது. தமிழர் பிரதேசங்களில் ஏற்கனெவே வாழ்வாதார பிரச்சனைகள் உண்டு. இதனால் மேலதிக குடியேற்றங்கள் இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும். ஒட்டு மொத்த மலையக தமிழர்களையும் கீழ் இறக்கி விட்டால் சிங்கள பொருளாதாரம் சிக்கு முக்காடும் என்பது இன்னொரு பார்வை.

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

3 weeks ago
எனது முதலாவது கருத்து என்னவென்றால் கப்பல் நினைப்பில் இருப்பவர்கள் வெளிநாடு வரக்கூடாது. இரண்டாவது கருத்து என்னவென்றால் அந்த கப்பல் நினைப்பு உள்ளவர்களுக்கான காணொளிகளை தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. அவர் கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டாராம். அவர் செல்வந்தராம். நிறம் கூடினவராம்.வடிவானவராம்.நடிகர் மாதிரி இருக்கிறாராம்.இதுதான் ஒரு மனிதனுக்கு மூலதனமென்றால் அந்த மனிதரை கடந்து செல்வதே மேல். மற்றும்படி.....காணொளியில் வரும் ஜேர்மனியின் கடின வாழ்க்கை சித்தரிப்பு நம்பக்கூடிய மாதிரி இல்லை.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

3 weeks ago
மதம் புகுத்தப்பட்டது வேறு சமாச்சாரம். ஒரு நாடு தன்னை இன்ன/ இந்த மத சார்பு நாடாக அடையாளப்படுத்துவது முக்கிய விடயம் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். கந்தையர்! உங்களுக்கு ஐ போனிலை எழுதுறது சரிப்பட்டு வராது போல கிடக்கு. சொல்லுக்கு சொல் முற்றுப்புள்ளி வைக்கிறது வடிவில்லாமல் கிடக்கு.😁 சரி அது கிடக்கட்டும்....😊 அந்த ஆசிரியர் ஏன் எதற்காக பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்பதை கூறினார் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.அவர் சும்மா வீதியால் சென்ற ஒருவரை கூப்பிட்டு இது கிறிஸ்தவநாடு என சொல்லவில்லை.அல்லது சந்தியில் நின்று இது கிறிஸ்தவ நாடு என மதவாதம் பேசவில்லை. எனது அனுமானம் என்னவெனில்..... அந்த முஸ்லீம் மாணவர் ஒட்டு மொத்த கழிவறையையும் நாறடித்திருப்பார்.இதை ஆசிரியர் கண்டித்திருப்பார். அதற்கு அந்த மாணவர் எங்கள் மார்க்கம்,அல்லா அது இது என பொங்கியிருப்பார். ஆசிரியரும் தன் பங்கிற்கு கொட்டியிருப்பார்.அவ்வளவுதான்😎 இன்னுமொன்று..... அந்த ஆசிரியருக்கு தண்டனை பகிரங்கமாக கொடுக்காமல் விட்டால்....சம்பந்தப்பட்ட அவர்கள் சம்பந்தமான குஞ்சுகுருமன்கள் எங்கும் எப்போதும் காலம் காத்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளைகாய் நறுக்கிற கத்தியால அப்பாவி பொதுமக்களை குதறிக்கொண்டே இருப்பார்கள். இது இன்றைய உலக அனுபவங்கள்😭

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

3 weeks ago
எங்கு பார்த்தாலும் இது தான் கதையாக உள்ளது வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களிடம் வேலை செய்கின்ற தமிழர்களிடம் நல்லாக வேலை வாங்குவார்கள் சம்பளம் கொடுக்க மாட்டார்கள் அல்லது அடிமாட்டு விலையில் கொடுப்பார்கள் வேலை செய்யும் தமிழர்களை ஏமாற்றுவார்கள் மோசடி செய்வார்கள். மேற்குலநாடுகளின் அந்த நாட்டு தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை மீறி தமிழர்கள் இப்படி மோசமாக நடக்கின்றார்கள் என்றால் தனி நாடு கிடைந்திருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும்.

இருபதுக்கு இருபது

3 weeks ago
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது. ஆரம்ப விலை இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. @கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே. அடுத்து ஐபிஎல் லும் வருகிறது. இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது. ஆரம்ப விலை இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா, ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும். ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Tamilwinஇருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...

இருபதுக்கு இருபது

3 weeks ago

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

@கிருபன் @கந்தப்பு போட்டியை இருவரில் ஒருவர் முன்வந்து நடத்தலாமே.

அடுத்து ஐபிஎல் லும் வருகிறது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பமானது.

ஆரம்ப விலை 

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இத்தொடரின் டிக்கெட்டுகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்குக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆரம்பம் | Ticket Sales For Twenty20 World Cup Begin

ஆரம்ப விலை (இந்தியா): 100 இந்திய ரூபா,

ஆரம்ப விலை (இலங்கை): 1000 ரூபா ஆகும்.

ஐ.சி.சி.யின் இந்த நடவடிக்கை, கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த போட்டிகளை மைதானத்தில் சென்று பார்ப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Tamilwin
No image previewஇருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு...
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (11) ஆரம்பம...

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
வட கிழக்குத் தமிழர்கள் மட்டும் இலங்கையில் தங்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்கலாம் . மலையக மக்கள் மட்டும் அப்படியே எல்லாவற்றையும் துறந்து இன்னொரு பிரதேசத்தில் ஏதும் இல்லாதவர்களாக, குடியேறிகளாக வாழ வேண்டுமா? அவர்களுடைய பிரச்சனைகளுக்காக அவர்கள் போராடும் நிலையில் நாம் வட கிழக்குத் தமிழர்கள் அவர்களுக்கான தார்மீக ஆதரவை வழங்குவதுதான் சிறப்பான தெரிவாக இருக்கும் இன்றும் தமிழ் நாட்டில் எந்த உரிமையும் இல்லாமல் வாழும் வட கிழக்குத் தமிழர்களின் நிலை எல்லோருக்கு தெரியும் வடகிழக்கில் குடியேறி வாழ்ந்த இஸ்லாமிய சகோதரர்களுடைய நிலை போராட்ட காலத்தில் எப்படி இருந்தது இப்போது எப்படியான நிலையில் உள்ளது என்பதும் யாவரும் அறிந்ததே.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
இலங்கைக்கு அடிமைகளாக இருந்தவர்களை இப்போது இலங்கைத் தமிழர்களும் அவர்களை அடிமைகளாக மாற்றலாம் என்ற ஒரு முயற்சிகவே இந்த வரவேற்பினை நான் பார்க்கின்றேன் மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம். அங்கெ அவர்களுக்கு உரிய உரிமைகள் அதாவது முதன்மையாக காணி உரிமை இல்லை . பல சதாப்தங்களாக மாறி மாறி வந்த சிங்கள அரசுகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் குறிப்பாக மலையகத் தமிழக கட்சிகளும் அந்த மக்களுடைய வாழ்வுரிமையை எந்த விதத்திலும் மேம்படுத்தல் செய்யாமல் தங்கள் அரசியல் தேவைகளுக்காக ஏற்ற நேரத்தில் வாய்ப்பு பேச்சுக்களால் ஏமாற்றி வந்துள்ளனர். மனோ கணேசன் மீண்டும் மலையக மக்களை ஏமாற்றி அல்லது அவர்களை முன்னிறுத்தித் தனது அரசியல் ஆதாயத்தை தேட முயல்கின்றார். மலையக மக்களின் வாழ்வாதாரம் பெரும் தோட்டம் மற்றும் சிறு தோட்டங்களை நம்பி இருக்கும் நிலையில்..... வட கிழக்கில் அகதிகளாக அவர்களை மீண்டும் ஒருமுறை இடம்பெயர வைக்க முயற்சிப்பதா ? அந்த முடிவு எப்போதும் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு முடிவாகவே இருக்கும் மனோ கணேசன் யார்? அவர் ரணிலை இத்தனை காலம் ஆதரித்தவர் இப்போது சஜித் அவர்களின் ஆதரவாளர்.. அனுராவின் ஆட்சிக்கு எதிராக வினையாற்ற மலையக மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்த நினைக்கின்றார் மனோ கணேசன் . அதற்கு எங்கள் தமிழ் மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்த சஜித்தின் ஆதரவு நிலையில் இருக்கும் சுமந்திரனும் துதி பாடுகின்றார் . மலையகத்தில் மலையக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் பேணப்பட்டு அவர்களை அவர்களின் இடத்திலேயே வாழ வழி சமைக்க வேண்டும். மலையகம் இந்திய வம்சாவழித் தமிழர்களின் தாயகம் என்று ரோஹண விஜேவீர 70 களிலேயே அறை கூவியிருந்தார்

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

வாழைப்பூ வடை

3 weeks ago
நண்பன் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தான் விரும்புகின்றேன், கவிஞரே. அது சாத்தியமும் கூட. ஏராளமானோர் இதே குறைபாட்டுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை ஒரு நோய் என்று சொல்லாமல், குறைபாடு என்றே சொல்கின்றார்கள். அசட்டுத்தனமாக அவசரப்பட்டு கேட்கும், வாசிக்கும், பார்க்கும் எல்லாவற்றையும் அவன் அப்படியே நம்பி விடாமல் இருந்திருக்கலாம். 'உணவே மருந்து............' என்பது ஆரோக்கியமாக இருக்கும் நாட்களுக்கு பொருந்தும். நோயோ அல்லது குறைபாடு ஒன்றோ வந்துவிட்டால், சரியான சிகிச்சை மிக அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்..............🙏.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
இது தான் அந்தக் குறிப்பு☝️ இரண்டு விடயங்கள் நினைவில் வந்தது: முதலாவது மலையக மக்கள் கிழக்கில் குடியேறினால் அங்கு அவ்வளவு பிரச்சினை இருக்காது. ஆனால் வடக்கில் குடியேறினால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு வாழ் தமிழர்கள் மலையக மக்களை இளக்காரமாகவே கையாளுவார்கள். அது அவர்களின் தோலை மாற்ற முடியாத பிறவிக் குணம். இரண்டாவது சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகளின் சிறப்பியல்பு. சுமந்திரனின் இந்த மலையக மக்களுக்கான அழைப்பானது மிகச் சிறந்ததும் உன்னதமானதும் ஆகும் என்பது எனது கருத்து. ஆனால் சிவிங்கி தனது புள்ளிகளை எப்படி மாற்றமுடியாதோ அவ்வாறுதான் சுமந்திரனுக்கெதிரான போராளிகளும் இருக்கிறார்கள். ஒருபோதும் இதனை அவர்கள் வரவேற்கப்போவதில்லை!

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

3 weeks ago
ஏன் ...அவ்வளவுதூரம் ...போகத்தேவையில்லை ...இந்த யாழ் களத்திலேயே தருவினம்.. இன்று வெள்ளிக்கிழமை மத்தியானம் ஒருமணிக்கு ..ரோட்டெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்