Aggregator

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
நான் நுனிப்புல் மேய்ந்ததில் கதை இல்லை... நீங்கள் சொன்ன வந்த எத்தியோப்பிய + சிவிங்கி கதையை சொல்லுங்கோ என்று கேட்டேன்

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்

3 weeks ago
செலன்ஸ்கி மீது தற்போது பலருக்கு வன்மம் ஏற்பட்டுள்ளது, உக்கிரேனியர்களே அவரது சகாக்களின் ஊழலின் பின்னர் மேற்கு ஊழலின் அடிப்படையாக கொண்டு உக்கிரேனுக்கான ஐரோப்பிய ஒன்றிய இணைவு மற்றும் உதவிகளில் தடங்கல் ஏற்படலாம் என அவரின் மீது வெறுப்பை காட்டுகிறார்கள், ஆனால் செலன்ஸ்கி ஒரு அங்குல நிலத்தினையும் விட்டு கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்க புதிய கொளகையினடிப்படையில் மீண்டும் அமெரிக்காவினை தன்பக்கம் இழுப்பதற்காக இரஸ்சியாவில் சீனாவின் பங்கு பற்றி பேசியுள்ளார். போரின் மூலமோ அல்லது இராஜதந்திர ரீதியிலோ சூழ்நிலைக்கேற்ப தகவமைப்பு செய்ய முயற்சிக்கும் அதே நேரத்திலே தனது அடிப்படை கொள்கையிலிருந்து சிறிதும் பின்வாங்காத தலைவராக உள்ளார். ட்ரம்ப் அடிக்கடி செலன்ஸ்கியினை திறமையான சேல்ஸ்மன் என கூறுவதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை செலன்ஸ்கி ஊழலில் ஈடுபட்டதாக எந்த குற்றச்சாட்டும் வரவில்லை என கருதுகிறேன்.

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

3 weeks ago
அனேக விடையங்கள் இப்போ யூருப்காரர்களால் வெளி வருவதனால் யூருப்களை இணைக்க வேண்டிய நிலை.இறப்பதற்கு முன் தன்னுடைய நிலைமைய அந்தப் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்..இப்படியான இறப்புக்களுக்கு பின்னராவது தமிழ்கடைகள் வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடவுங்கள்.

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

3 weeks ago
எண்பதுகளில் நாங்கள் பட்ட துன்பங்கள் பெரிது. விசா இல்லாமல், வேலையில்லாமல், ஊரில் உள்ளவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், கரிகளைப் போட்டு எரித்து குளிர் காய்ந்து, புரியாத மொழியில் விழி பிதுங்கி, மூன்று வருடங்கள் முகாம்களில் முடங்கிக் கிடந்து……. “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்தது நிம்மதி தேடு..” என்ற பழைய பாடல் வரியொன்றுதான் நினைவுக்கு வந்தது.

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏

வாழைப்பூ வடை

3 weeks ago
ஆக வாழைப்பூ ( வடை) நீரழிவு நோய்க்கு மருந்தாக பாவிப்பதில் ஒரு பிரயோசனமும் இல்லை. மருத்துவர் தந்த மாத்திரைகளை ஒழுங்காக எடுத்திருந்தால் ஒருவேளை உங்கள் நண்பர் இன்னும் கொஞ்ச நாட்கள் வாழ்ந்திருக்கலாமோ என்னவோ. அதுசரி விமானத்தைப் பிடிக்கும் அவசரத்த்தில் உங்கள் நண்பரின் வாகனத்துக்கான பணத்தை கொடுக்க மறக்கவில்லைத்தானே. முன்பெல்லாம் மூங்கில் கதிரைகள் பாவனையில் இருந்தன. இப்போ பிளாஸ்ரிக் காலம். இயற்கைப் பொருட்களை பாவனைப் படுத்துவதை விட்டு நாங்கள் வெகு தூரம் வந்து வட்டோம். கதையோடு பல விடயங்களை சொல்லியிருக்கிறீர்கள்.👏🏽

வாழைப்பூ வடை

3 weeks ago
👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

3 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile (Pvt) Ltd நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:58 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. குறித்த காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். Thilakawardena Textile (Pvt) Ltd இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ரவிந்து திலகவர்தனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233126

மின்னல் எச்சரிக்கை!!

3 weeks ago

மின்னல் எச்சரிக்கை!!

நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute

டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை  தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது.

பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

image-1.png?w=392

  1. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று.  இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை  இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.

  2. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.

  3. உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.

  4. சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.

  1. ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.

  2. தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

  3. 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது).

  4. மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.

  5. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.

  6. மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.

  7. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.

  8. இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.

  9. இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. 

596290138_1431503705652682_4835439587807

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு  முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?

உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.

மேலும் தற்காலத்தில் ChatGPT  இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது

சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி  அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.  

 மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்

இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.

முற்றும்     

https://tinyurl.com/5emrm568

மின்னல் எச்சரிக்கை!!

3 weeks ago
மின்னல் எச்சரிக்கை!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது. பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது. வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது. இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும். உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும். சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும். ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும். தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். 30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது). மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல. இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும். மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது. திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும். இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும். இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது. அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா? உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. மேலும் தற்காலத்தில் ChatGPT இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும். மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி. முற்றும் https://tinyurl.com/5emrm568

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

3 weeks ago
கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு 3.6 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:51 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing, வியாழக்கிழமை (11) குறித்த காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார். கொழும்பில் உள்ள தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கைக்கான கொரிய தூதுவர் Lee Miyon, சுவிட்சர்லாந்து தூதுவர் Dr. Siri Walt,, பலஸ்தீன தூதுவர் Ihab I.M. Khalil, மாலைதீவு உயர் ஸ்தானிகர் Masood Imad,, ஓமான் தூதரகத்தின் பணிக்குழாம் பிரதானி Said Al Harbi, இத்தாலிய தூதரக பிரதித் தலைவர் Alberto Arcidiacono ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233124 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை Published By: Vishnu 11 Dec, 2025 | 08:57 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு People's Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும்,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது. குறித்த காசோலைகளை People's Leasing & Finance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சஞ்சீவ பண்டாரநாயக்க மற்றும் People’s Insurance PLC இனைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜீவனீ காரியவசம் ஆகியோரினால் வியாழக்கிழமை (11) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. People's Leasing & Finance PLC இன் தலைவர் பேராசிரியர் அஜந்த குமார சமரகோனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233125

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

3 weeks ago
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! 11 Dec, 2025 | 05:20 PM பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/233105

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

3 weeks ago

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

11 Dec, 2025 | 05:20 PM

image

பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/233105

கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!

3 weeks ago
கோவா இரவு விடுதி தீ விபத்து- உரிமையாளர்களை தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவது எவ்வளவு சவாலானது? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக, போலீஸார் கூறுகின்றனர். 10 டிசம்பர் 2025 கோவா இரவு விடுதியில் தீ பற்றிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்லியை சேர்ந்த அஜய் குப்தா என்பவரை கோவா காவல்துறை காவலில் எடுத்துள்ளது. இந்த தகவலை கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. "அஜய் குப்தாவின் வீட்டை சோதனையிட்ட போது, அவர் தப்பிச் செல்ல முயன்றார்." என காவல்துறை தெரிவித்துள்ளது கடந்த சனிக்கிழமை இரவு (டிசம்பர் 06) கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். சிலிண்டர் வெடித்ததில் தீ பற்றியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். வடக்கு கோவாவின் அர்போரா எனும் பகுதியில் உள்ள இந்த இரவு விடுதியில் தீப்பற்றியதில் சுற்றுலாப் பயணிகள் சிலரும் கொல்லப்பட்டனர். இறந்த பலரும் அந்த விடுதியின் பணியாளர்கள் என நம்பப்படுகிறது. முன்னதாக, இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் மற்றும் இரவு விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவ் லுத்ராவுக்கு எதிராக இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்ததாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது. "இந்த நோட்டீஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களை கண்டடைவதற்கு உதவும், மேலும் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்து இடம்பெயர்வதை தடுக்கும்," என கோவா காவல்துறை தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை கோவா காவல்துறையின் டிஐஜி வர்ஷா ஷர்மா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், "இரவு விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது," என்றார். "இது மிகவும் துயரமான விபத்து, இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரவு விடுதியின் உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கையையும் நாங்கள் உடனடியாக தொடங்கினோம். அவர்கள் ஃபுகெட் எனும் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, சிபிஐ மற்றும் இண்டர்போல் உதவியுடன் அவர்களை அடைவதற்கு முயற்சித்து வருகிறோம்." என்றார் வர்ஷா ஷர்மா தாய்லாந்தில் உள்ள ஃபுகெட் தீவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். விடுதியின் உரிமையாளர்கள் தாய்லாந்தில் இருந்தால், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் என்ன சவால்கள் இருக்கும் என்ற கேள்விகள் எழுகின்றன. குற்றம் சாட்டப்பட்ட நபர்களை நாடு கடத்துவது தொடர்பாக தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே ஒப்பந்தம் உள்ளதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோவாவில் உள்ள 'பிர்ச் பை ரோமியோ லேன்' எனப்படும் இரவு விடுதியில் பெரும் தீப்பற்றிக்கொண்ட நிலையில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்தியா - தாய்லாந்து இடையேயான ஒப்பந்தம் உள்துறை அமைச்சகத்தின்படி, இந்தியா மற்றும் தாய்லாந்துக்கு இடையே 2013ம் ஆண்டு, பாங்காக்குக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சென்றிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் சட்ட தகவல்கள் மற்றும் மற்ற தேவையான உதவிகளை வழங்கும். அதன்மூலம் அந்நாடுகள் தலைமறைவான நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்க முடியும். அந்த ஒப்பந்தத்தின்படி, பொருளாதார குற்றங்களில் குற்றம் சட்டப்பட்டவர்களையும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஒப்படைக்க முடியும். வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, 48 நாடுளுடன் இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளது. அவற்றில் வங்கதேசம், பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள், இஸ்ரேல், சௌதி அரேபியா, ரஷ்யா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் அடங்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தப்பியோடிய இந்திய வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் மட்டும் போதுமா? எளிய வார்த்தைகளில் சொல்வதானால், இதன்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எந்த நாட்டுக்கு தப்பியோடினாரோ அங்கிருந்து அவரை சம்பந்தப்பட்ட நாட்டுக்குத் திருப்பி ஒப்படைக்க முடியும். இதுதொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தால் தான் இவ்வாறு செய்ய முடியும். இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின்படி, விசாரணையில் உள்ள அல்லது நிலுவையில் உள்ள வழக்குகளில் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கோர முடியும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகளிலும் இவ்வாறு கோர முடியும். விசாரணை நடைபெற்று வரும் வழக்குகளில் அதை விசாரிக்கும் விசாரணை முகமைகள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராகவும் சர்வதேச சட்டங்களில் நிபுணராகவும் உள்ள முனைவர் அஜேந்திர ஸ்ரீவஸ்தவா பிபிசி செய்தியாளர் சௌரப் யாதவிடம் கூறுகையில், "இந்தியாவிலுள்ள போலீஸார் ஒருவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு கூறினால், அதை வெளிநாட்டு போலீஸார் அப்படியே செய்வார்கள் என்பது அர்த்தமில்லை. இது இரண்டு நாடுகளின் நீதிமன்றங்களையும் உள்ளடக்கிய சட்ட நடவடிக்கை. இரு நாடுகளுக்கிடையேயும் இதுதொடர்பாக ஒப்பந்தம் இருக்க வேண்டும், மேலும் ஒருவரை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைப்பதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன." என்றார். குற்றச் சம்பவம் நடந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை முகமைகளிடம் ஆதாரங்கள் இருந்தும் ஏன் சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை சம்பந்தப்பட்ட நாட்டிடம் ஒப்படைக்க முடிவதில்லை, அல்லது அதற்கு ஏன் அதிக காலம் எடுக்கிறது என்ற கேள்வி எழலாம். அஜேந்திர ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "சம்பந்தப்பட்ட நாட்டுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு கோரப்படும் நபருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரை ஒப்படைக்கும் நாடுகளுக்கும் சட்டங்கள் உள்ளன, ஒரு நாடு கேட்கும்போது சம்பந்தப்பட்ட நபரை ஒப்படைக்க வேண்டுமா, இல்லையா என்பது அந்த சட்டத்தின்படியே தீர்மானிக்கப்படும்." என்றார். மேலும் அவர் கூறுகையில், "அந்த நாட்டின் நீதிமன்றத்தில் தொடர்புடைய நபர் மீதான வழக்கு குறித்து சமர்ப்பித்து, தங்கள் நாட்டில் அந்நபர் குற்றம் புரிந்தார் என்பதற்கான முகாந்திரம் (prima facie) இருப்பதாக கூற வேண்டும். அந்த குற்றத்தை அந்நபர் தப்பியோடிய நாட்டின் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சட்ட நடவடிக்கைகளின்படி, அந்நபருக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்படும் என உறுதி கூற வேண்டும். உண்மையிலேயே ஒரு குற்றம் நடந்ததாக அந்நாட்டின் நீதிமன்றம் திருப்தியடைந்தால் மட்டுமே, அவரை தொடர்புடைய நாட்டுக்கு ஒப்படைக்க அனுமதிக்கும்." என்றார். பட மூலாதாரம்,@NIA_India படக்குறிப்பு,2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். முந்தைய வழக்குகள் 2008ம் ஆண்டு நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானா இந்தாண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பை மற்றும் டென்மார்க்கில் தனது நண்பர் டேவிட் கோல்மேன் ஹெட்லியுடன் இணைந்து தாக்குதல்களுக்கு திட்டமிட்டதாக கடந்த 2013ம் ஆண்டு அமெரிக்காவில் தஹாவூர் ரானா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதில், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அகஸ்தாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் வாங்கப்பட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்ப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் 2018ம் ஆண்டு துபாயிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டார். அகஸ்தாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து 12 விவிஐபி ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் காங்கிரஸ் தலைமையிலான முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்டது. இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸின் மூலம் 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சோட்டா ராஜனை இந்தோனீசிய காவல்துறை கைது செய்தது. அதன்பின் அவர் அதே ஆண்டு நவம்பர் 6 அன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 1993 மும்பை வெடிகுண்டு தாக்குதல்களில் குற்றம் நிரூபிக்கப்பட்ட அபு சலீம் 2005ம் ஆண்டு போர்ச்சுகல்லில் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபு சலீமை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு பாஜக தலைவரும் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான எல்கே அத்வானி, அபு சலீமை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருக்க மாட்டோம் என்றும் அவருக்கு மரண தண்டனை வழங்க மாட்டோம் என்ற உறுதியை போர்ச்சுகல் அரசு மற்றும் நீதிமன்றத்திடம் எழுத்துபூர்வமாக வழங்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23e14138n4o

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 weeks ago
விவிலியத்தை அங்கும் இங்குமாக நுனிப்புல் மேய்ந்ததுண்டு, ஒட்டக சிவிங்கி கேள்விப்பட்டதில்லை. அது என்ன கதை?