Aggregator

ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!

2 weeks 5 days ago
1.8 மில்லியனை கடந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 75 ஆயிரத்து 657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 1,151 ஆக அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகதந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 96ஆயிரத்து 274 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரான்ஸில் இருந்து 90 ஆயிரத்து 250 பேரும் , அவுஸ்திரேலியாவில் இருந்து 81 ஆயிரத்து 040 பேரும் நெதர்லாந்தில் இருந்து 53 ஆயிரத்து 922 பேரும் அமெரிக்காவில் இருந்து 50 ஆயிரத்து 027 பேரும் இந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இத்தாலியில் இருந்து 39ஆயிரத்து 932 பேரும் , கனடாவில் இருந்து 37ஆயிரத்தது 606 பேரும் ஸ்பெயினில் இருந்து 36ஆயிரத்து 430 பேரும் மற்றும் போலந்தில் இருந்து 36ஆயிரத்து 389 பேரும், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,053,465) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இறுதியாக 2018 ஆம் ஆண்டில் வருகைதந்திருந்தனர். குறித்த ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,333,796) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இலங்கையின் வருடாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு சந்தர்ப்பங்களில் இரண்டு மில்லியனைத் கடந்துள்ளதுடன் 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைந்துள்ளனர். https://athavannews.com/2025/1450679

தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!

2 weeks 5 days ago
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்! தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த சத்தீஸ்கரின் அபுஜ்மார் மற்றும் வடக்கு பஸ்தார் ஆகிய பகுதிகள் நக்சல் இல்லாத பகுதிகளாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் பொலிஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் முன்னிலையில், 210 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சரண் அடைந்த நக்சல்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 துப்பாக்கிகள் 19, தானியங்கி துப்பாக்கிகள் 17, இலகு ரக துப்பாக்கிகள் 30 உட்பட மொத்தம் 153 ஆயுதங்களையும் நக்சல்கள்பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1450681

ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்!

2 weeks 5 days ago
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்து வந்த வீடியோக்கள் வானத்தில் அடர்த்தியான புகை மூட்டங்கள் வீசுவதைக் காட்டியது. ஒரு வாரமாக நீடித்த தீவிர எல்லைச் சண்டையில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையிலும் 48 மணிநேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450635

நம்ம பொடியன் ஒருதன் புலம்புகிறார்...இதையும் ஒருக்கா பாருங்கோ

2 weeks 6 days ago
இதெல்லாம் பார்த்தால் பிறசர் குளிசை ஓவடோஸ் தான் போட வேணும் அய்யா.அந்த அலம்பலுக்கு வெளி நாட்டுக்காரரை திட்டுவது தான் வேலை.

நம்ம பொடியன் ஒருதன் புலம்புகிறார்...இதையும் ஒருக்கா பாருங்கோ

2 weeks 6 days ago
சம்மந்தப்பட்ட செய்தி கிடைத்தால் இணையுங்கள், வாசிக்கின்றோம். தலைப்பை விடயத்தை சொன்னால்தானே பார்க்க முடியும்.

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks 6 days ago
துரை, அதற்குள் சென்று வர அதிக செலவு ஆகுமே. சிறீ லங்கன் எயார்லைன்ஸ் வணிக வகுப்பு சீட்டு என்றால் உள்ளே போகலாம் என நினைக்கின்றேன். அது அல்லாதவர்கள் உள்ளே செல்லலாமா? பல விமான நிலையங்களில் கட்டணம் செலுத்தியும் உள்ளே செல்ல முடியாது. அதற்குரிய விமான நிறுவன பயணச்சீட்டு அல்லது பிரத்தியேக கிரடிட் மட்டை தேவைப்படும் என நினைக்கின்றேன். நீங்கள் இலங்கையில் உள்ளே சென்று பயன்படுத்திய அனுபவம் கிடைத்தால் கூறுங்கள் கேட்போம்.

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

2 weeks 6 days ago
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary naval warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on the Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would love to hear your thoughts and comments on this work. ✍️ Research and Analysis: Nanni Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

2 weeks 6 days ago
Boat Moulds used by the Sea Tigers The Sea Tigers were known for constructing their vessels both indigenously within the de facto Tamil Eelam and at external locations. During production, they utilized fibreglass moulds to standardize and streamline the boat-building process. Sea Tigers had two special units for boat building. Boat construction was managed by two specialized units: the Mangkai Boat Building Unit and the David (alias Shanmukam) Boat Building Unit. Shown below are some examples of these moulds found in their Theravil Boat Yard. 1) This is an 80-foot-long mould of a boat. The class name or actual image of the boat produced from it is no longer available and has been lost to history. 2) The class name or actual image of the boat produced from it is not available and lost in history. 3) 4) The class name or actual image of the boat produced from it is not available and lost in history. It had an unusual hull form. *****

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
ப்ரோ… அந்த இனவாதத்தை ஊட்டி வளர்த்த மேய்பன்களில் நீங்கள் நம்பும் ஜேவிபியும், அனுராவும் அடக்கம் ப்ரோ. ஜே ஆரும், சந்திரிகாவும், மகிந்தவும், ரணிலும் கொடுக்க இசைந்த, கொடுத்த மாகாண சபையை கூட தமிழருக்கு கொடுக்க கூடாது என்பதில் எப்போதும் உறுதியாக நின்று, அதற்காக ஒரு இரத்த களரியையே உருவாக்கியவர்கள் ஜேவிபி. நீதி மன்று போய் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள். சந்திரிக்காவோடு சேர்ந்து நோர்வே சமாதான முயற்சியை, PToMS ஐ குழப்ப முழு மூச்சாக முன்னின்றவர்கள். அனுர, டில்வின் இருந்த அதே தலைமைபீடத்தில் இருந்து சோமவன்ச, வீரவன்ச, முசமில் யுத்த நேரம் சொன்னவை உள்ளதே? அதுதான் எப்போதும் ஜேவிபியின் நிலைப்பாடு. மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து முள்ளிவாய்க்கால் அவலத்தை நிறுத்த கூடாது, விரைந்து முடிக்கவும் என மகிந்தவுக்கு கெடு வைத்தவர் அனுர. நீங்கள் இவர்கள் இனவாதத்தை இலங்கையில் களைவார்கள் எண்டு இங்கே பேயோட்ட பார்கிறீர்கள்🤣 அனுர காவடி என்பது பொருத்தம் என்றாலும், நீங்களாகவே பதவி உயர்வு கேட்பதால்… அனுர தூக்கு காவடி … பிடித்திருக்கிறதா?

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
தனிப்பட்டு உங்கள் மீதும் இல்லை அனுர மீதும் வெறுப்பு இல்லை. ஆனால் இனப்பிரசனை விடயத்தில் அனுரா மாத்தி யோசிக்கிறார் என பச்சை உருட்டை உருட்டும்…கருத்துக்கள் மீது நிச்சயம் வெறுப்பு உண்டு. ஜேவிபி பற்றி நிக்சன் எழுதியதை வாசிக்கவும்.

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
நிக்சனுக்கு வயசு போட்டுது 🤣. அத்தனை வடக்கு-கிழக்கு தமிழர் பிரதிநிதிகளும் ஒரே குடையில் வந்து, மக்களும் 80% ஆதரித்து, இன்னுமொரு வட்டுகோட்டை தீர்மானம் நிறைவேற்றினாலும் ——— சிங்களவர் மட்டும் அல்ல…. இந்தியாவோ…. வேறு எவருமோ இதை இன்றைய நிலையில் ஆதரிக்க போவதில்லை. நாம் சிறுவராக இருந்த போது எத்தனையோ விடயங்களை எமது பெற்றாரிடம் மிகவும் ஆணித்தரமாக கேட்டிருப்போம்….ஆனால் அவர்கள் தருவதில்லை என முடிவு எடுத்தால் அவ்வளவுதான். நாம் கேட்பதை எம்மால் அடித்து பறிக்க முடியாது. அடங்கி விடுவோம். இங்கேயும் அதுவே நிலமை. தமிழர் ….கேட்கலாம்… எவ்வளவும் கேட்கலாலம்…. ஆனால் பலன்? கேளுங்க, கேளுங்க….கேட்டுகிட்டே இருங்க என்பது மட்டுமே. சில சமயம் யோசித்தால்… எப்படி, இப்படி ஒட்டு மொத்த இனமும் யதார்தத்தை புரிந்து கொள்ளாத கற்பனைவாதிகளாக இருக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். ஆனால் அனுரவின் உண்மை முகத்தை சும்மா டர்….என கிழித்துள்ளார் நிக்சன். அனுர செவ்வந்தியை பிடிக்கிறார், செண்பகத்கை பிடிக்கிறார், இராமராஜனை பிடிக்கிறார் என காவடி தூக்குபவட்கள் கவனத்துக்கு. இங்கே குறிப்பிடப்படும் முன்னாள் மண்டையன் குழுவினர் மீது எனக்கு எந்த நல்ல அபிப்பிராயமும் இல்லை. ஆனால் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கேட்பதே இப்போ எடுத்து போட கூடிய ஒரே துரும்பு. காலம் அப்படியே நின்று விடாது. ஒரு நூறு வருடத்தில் இந்த மாகாணசபையை ஒரு பெடரல் மாநிலமாக, ஒரு சுயநிர்ணய கொன்பெடரல் தேசமாக நாம் மாற்றி அமைக்கலாம், சூழமைவும் கெட்டித்தனமும் இருந்தால். ஆனால் நிக்சன் சொல்வது போல், இப்போ 13 ஐ காலால் உகைத்து விட்டு மணந்தால் சுயநிர்ணயதேவன் இல்லையேல் மரணதேவன் என நாம் இருந்தால்….. நமக்கு மாவட்ட சபை கூட தரக்கூடாது என்ற ஜேவிபி உட்பட்ட அத்தனை இனவாதிகளிம் வேலையும் மிக இலகுவாக, விரைவாக முடிந்து விடும்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
உங்களுக்கு வெறுப்பு என்னிலா? அனுரா அரசிலா? சிங்களத்தின் சுய குணத்தை மாற்ற இயலாது. ஆனாலும் அனுரா சிறிது மாற்றி யோசிக்கிறார். அதிலும் ரில்வின் சில்வா தனது கடும் போக்கை சிறிது தளர்த்துவது போல் எனக்குத் தெரிகிறது. குறை சொல்வதை விடுத்து மாற்றத்தை ஏற்று ஊக்கப்படுத்துவதே நமக்கு இப்போதுள்ள ஒரு வழி. எழுபத்தாறு ஆண்டுகள் திட்டமிட்டு, தீனி போட்டு வளர்க்கப்பட்ட இனவாதத்தை சில ஆண்டுகளில் மாற்றி அழித்துவிட முடியாது. அதற்கு காரணமானவர்கள், காரணம், வெளிக்கொணர்ந்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும், பயத்தை நீக்கவேண்டும், உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அதற்கு முதல், அதை ஏற்படுத்துபவர்கள் நடந்தது தவறு என ஏற்று, பொறுப்பெடுக்க வேண்டும். இதெல்லாம் சில ஆண்டுகளில் நடைபெறாது. அதை ஏற்படுத்துவதற்கு, சுயநல அரசியல்வாதிகளின் போலி முகங்களை களைவதற்கு, பல சவால்களை சந்திக்க வேண்டும். ஆமா.... இதை வாசித்ததன் பின், எனக்கு என்ன பெயர் சூட்டுவதாக உத்தேசம்? அதையும் அனுராவின் சவாலாக ஏற்றுக்கொள்வேன்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
எனது அரசியல் அபிலாசை மிகவும் சின்னது. ஈழத்தமிழர் - கெளரவமான, தமது அலுவல்களை தாமே நிர்வகிக்கும், அவர்களின் நில உரிமை பறிபோகாத, மொழி உரிமை பாதுகாக்கபட்ட, இன ஒதுக்கலுக்கு உள்ளாகாத வாழ்வை இலங்கை தீவில் வாழ வேண்டும் என விரும்புகிறேன். இதை தராத எந்த சிங்கள அரசும் எனக்கு ஒன்றே. தவிர போதை பொருள், சட்சம் ஒழுங்கு போன்ற அனைவருக்கும் பயந்தரக்கூடிய நடவடிக்கைகளை சிங்கள அரசுகள் எடுத்தால் அதை பாராட்டலாம். ஆனால் அப்படியே உச்சி குளிர்ந்து போய்…இது ஆரம்பம்…அடுத்தது தமிழருக்கு உரிமைதான் என காவடி எடுத்தல் ஆகாது. இதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். இவர்கள் போதைக்கு எதிராக செயல்படுகிறார்கள். சுக அரசில் மகிந்த தொழில்துறை அமைசராக பல நல்ல தொழிலாளலர் திட்டங்களை கொண்டு வந்தார். நாட்டை திறந்த பொருளாதாரம் ஆக்கி சுதந்திர வர்த்க வலையங்களை, ஆடை தொழில்சாலைகளை ஜே ஆர் கொண்டு வந்தார். கம் உதாவ - பிரேமதாச… இப்படி சிங்கள அரசுகள் முன்பும் நல்ல விடயங்கள் செய்துள்ளன. 2005 க்கு முதல் இருந்த அத்தனை அரசுகளும் போதை பொருளை நன்கு கட்டுப்படுத்தினர். ஆகவே இது பத்தோடு பதினொன்று. இதை போற்றலாம். ஆனால் நீங்கள் தூக்கும் காவடி… ஜஸ்ட் டூ மச்

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 6 days ago
https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை. கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன். இனிமேல் என்ன செய்வது?

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 6 days ago

https://www.facebook.com/share/v/1DCBLvynAX/?mibextid=wwXIfr டாக்ரர் சுதன்சிவன் பேரிச்சம்பழம் பற்றி சொல்லும் போது நம்புவதா? விடுவதா? என்று முடிவு செய்ய முடியவில்லை.

கடந்த 10 வருடமாக தேநீருடன் சீனிக்கு பதிலாக பேரிச்சம்பழம் ஒன்று கடிப்பேன்.

இனிமேல் என்ன செய்வது?

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
13 ஐ கேட்டு தீர்வின் தரத்தை குறைக்கும், சில தமிழ்த்தேசியக் கட்சிகள் --- ---- ---- ----- தமிழரசுக் கட்சி மதில் மேல் பூனை 2017 இல் மாகாண சபைத் தேர்தலை நிறுத்தியது யார்? ஜேபிவியும் 2017 இல் இருந்து13 கைவிடலாம் என்ற நிலைப்பாட்டில் ----- ---- ----- இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி வந்தது. 13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைத்தீவை பிளவுபடுத்தும் எனவும் தமிழ் ஈழம் அமையும் என்று கோசம் எழுப்பி அன்று எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மாகாண சபைகள் முறையை நன்றாக அனுபவித்து அதனைத் தங்கள் கட்சி அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டது. 2009 ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், மாகாண சபைகள் தேவையில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் இல்லை என்ற தொனியல் ஜேவிபி குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் ரில்வா ஆகியோர் அவ்வப்போது கூறியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் ஆட்சியின்போது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. ஜேவிபி, தேசிய மக்கள் சக்தியாக தன்னை மாற்றிக் கொண்டு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒருபோதும் கோரியதில்லை. அதாவது, 2017 இல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட நாள் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஜேவிபி ஒருபோதும் கேட்டதும் இல்லை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுமில்லை. ஆகவே --- 1988 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த மன நிலை தற்போதும் ஜேவிபிக்கு உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தாலும், அடிப்படையில் ஜேவிபி என்ற மன நிலை அதுவும் தமிழ் மக்கள் சார்ந்த விவகாரங்களில் அந்த மன நிலை இருப்பதையே சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன. இப் பின்னணியில் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஆகியவை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோருவதுடன் கூட்டங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றன. இந்த முன்னாள் இயக்கங்கள் 1988 ஆம் ஆண்டே மாகாண சபை முறைமையை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தன. ஆனாலும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக போராடியதால், தமது நிலைப்பாட்டை மாற்றி மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஆனாலும் ஆரம்ப புள்ளியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பிதம் செய்தன. ஆனால் -- மிகச் சமீப நாட்களில் மாகாண சபைத் தேர்தல் முறைமை பற்றி அதிகமாக இந்த முன்னாள் இயக்கங்கள் உரையாட ஆரம்பித்துள்ளன. இந்த முன்னாள் இயக்கங்கள் --- 2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தியது. அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருடன் தொடர்ச்சியாக உரையாடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரி அக் கடிதத்தை அனுப்பியிருந்தன. ஆனால் -- அக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குகொள்ளவில்லை. அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். தமிழரசுக் கட்சி சில திருத்தங்களுடன் மோடிக்கு கடிதம் அனுப்பி செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தது. ஆகவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபை முறைமையையோ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் விரும்பில்லை என்பதுதான். ஏனெனில் --- 2009 இற்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை சமாளிக்க அதுவும் இந்தியாவைச் சமாளிக்க இந்த 13 என்பதையும் மாகாண சபை முறைமைகள் என்பதையும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்து சிங்கள தலைவர்கள் நடத்திக் காண்பித்திருந்தனர். ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரான சூழலில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, 13 ஐ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் 13 இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவோ 2015 ஆட்சிக்கு வந்த ரணில் - மைத்திரி அரசாங்கமோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, 2013 இல் முதன் முறையாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட மாகாணங்களுக்குரிய பல அதிகாரங்களை செயற்படுத்த கொழும்பு நிர்வாகம் அனுமதித்திருக்கவிலலை. வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட அதிகாரங்கள் இல்லை என்றே குறை கூறியிருந்தார். இணைந்த வடக்கு கிழக்கில் முதன் முதலாக முதலமைச்சராக பதவி வகித்திருந்த வரதராஜப்பெருமாளும் போதிய அதிகாரங்கள் இல்லை எனவும் அதிகாரங்கள் தெளிவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். இப் பின்புலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஆயுத இயங்கள் மீண்டும் கோருகின்றன. ஆனால் --- இதுவரைக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அவசியம் இல்லை. 2009 இற்குப் பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடருகின்றது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தின் எண்ணிக்கைகளும் குறைக்கப்படவில்லை. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும், அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாது. ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும். இப்போது கூட அவ்வாறான மன நிலையில் இருந்து கொண்டுதான் 2017 இன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ரணில், கோட்டாபய ஆகியோர் விரும்பயிருக்கவில்லை. அதனையே அநுரகுமார திஸாநாயக்கவும் பின்பற்றுகிறார். 13 ஐ அமுல்படுத்தி இருக்கின்ற அதிகாரங்கள் ஊடாக வடக்கில் கிழக்கில் எதனையும் சாதிக்க முடியும் என சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுத இயக்கங்கள், தங்கள் அரசியல் வறுமையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வரலாம். ஆனால் -- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழரசுக் கட்சி மதில் பூனை போன்று உள்ளது. ஆகவே --- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்று கோரும் நிலையில், எதுவுமே இல்லாத மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்புடைய அரசியல் அல்ல. அதுவும் உள்ளக பொறிமுறை என ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மாகாண சபை கோரிக்கைகள் தமிழ்த்தரப்பை மேலும் பலவீனப்படுத்தும். வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும். ஆனால் --- தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும். 1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது. ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டு தங்கள் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் உயர் தரத்தை தாங்களே தரம் தாழ்த்துவது பொருத்தமான அரசியல் உத்தி அல்ல. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/share/17AyiaTkxM/?mibextid=wwXIfr

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
அரச, காவற்துறை, இராணுவ, புலனாய்வின் ஆதரவோடும் ஆசீர்வாதத்தோடும் பாதுகாப்போடும் நாடு முழுவதும் பரப்பப்பட்டு கொடிகட்டிப்பறந்த போதை பாதாள உலக வியாபார கலாச்சாரம், தப்பி வெளிநாடுகளுக்குள் மறைந்தவற்றை வெளிக்கொணர்ந்துள்ளார். மிகுதி, போகபோகத்தொடரும். அப்போ நீங்களும் தொடர்ந்து பாராட்டக்கூடும், பொறுத்திருந்து பாப்போம். நான் அனுராவின் காவடியாகவே இருந்து விட்டுப்போகிறேன். நல்லது செய்ய முயற்சிப்பவரில் எதிர்பார்ப்பு வைப்பதில் தப்பில்லை. அர்ச்சுனா, பாராளுமன்றத்தில் தேசியத்தலைவர், தெய்வம் என்கிறார். இதுவே முன்னைய அரசாங்கமாக இருந்திருந்தால்; பயங்கரவாத சட்டமோ வெள்ளை வானோ இவரை இல்லாமல் செய்திருக்கும். சுமணரத்ன தேரர் வேறு புலம்புகிறார், மஹிந்த காலத்தில், வடக்கு கிழக்கில் சுதந்திரமாக பௌத்த கொள்கைத்திட்டங்களை ஆற்றினோம், அனுரா வந்து தொல்பொருள் பௌத்த கொள்கைகளை தடுத்து விட்டார் என, தனது கொள்ளை தொழில் பறிபோன கடுப்பில் அங்கலாய்க்கிறார். மெல்லெனப்பாயும் நீர், கல்லையும் உருக்கிப்பாயுமாம். உங்கள் பார்வையும் வெறுப்பும் எண்ணங்களும் மாறலாம். அதற்காக, அனுரா தமிழீழத்தை தூக்கி தந்துவிடுவார் என நான் சொல்ல வரவில்லை. தமிழர் பயங்கரவாதிகள், வந்தேறு குடிகள், அவர்களுக்கு இந்த நாட்டில் அதிகாரமில்லை, எந்த அரசியல் உரிமையும் தேவையில்லை என்கிற வாதம் தகர்க்கப்பட வாய்ப்புண்டு.