Aggregator

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.

2 weeks 2 days ago

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பக்கத்தில் பகிர்ந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அதனை நீக்கியுள்ளார்.

சுமார் 62 வினாடிகள் ஓடும் அந்த காணொளியில், 2020 ஜனாதிபதி தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

காணொளியஜஇறுதியில், 'த லயன் ஸ்லீப்ஸ் டுநைட்' (The Lion Sleeps Tonight) என்ற பாடலுடன், பராக் ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி கார்ட்டூன் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தன.

எக்ஸ் தள பதிவு 

இது தவிர, ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்களான ஜோ பைடன், ஹிலாரி கிளிண்டன் ஆகியோரும் விலங்குகளாகச் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப் | Trump Shared Racist Video Depicting Obama

இந்த காணொளி பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளரும், குடியரசுக் கட்சியின் கறுப்பின செனட்டருமான டிம் ஸ்கொட், "வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என்று விமர்சித்ததோடு, உடனடியாக அதனை நீக்க வலியுறுத்தினார்.

அத்துடன் கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் "ஜனாதிபதியால் செய்யப்பட்ட அருவருப்பான செயல் இது; ஒவ்வொரு குடியரசுக் கட்சியினரும் இதனை வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். அதேநேரம் எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பவே ட்ரம்ப் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடும் விமர்சனம் 

ஆரம்பத்தில் இது வெறும் "இன்டர்நெட் மீம் காணொளி" (Internet Meme Video) என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் வாதிட்டார். ஆனால், சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, "ஊழியர் ஒருவரின் தவறால் அந்த காணொளி பகிரப்பட்டுவிட்டது" என்று கூறி வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் அதனை நீக்கினார்.

ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப் | Trump Shared Racist Video Depicting Obama

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே பராக் ஒபாமாவைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். முன்னதாக, ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்று ஆதாரமற்ற வாதத்தைத் தூண்டிவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட இத்தகைய இனவெறிச் சித்திரங்கள் அமெரிக்க அரசியலில் நாகரீகமற்ற போக்கை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத் துறையின் சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் சுமார் 14.4வீத மக்கள் கறுப்பினத்தவர்கள் (Black or African American) ஆவர். இத்தகைய இனவெறிச் சித்தரிப்புகள் கறுப்பின மக்களிடையே பெரும் மனக்காயங்களை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

Tamilwin
No image previewஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீ...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் இனவெறி காணொளியை...

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
நானும் அறிவேனோ பாவி… என்னை பிடித்தாட்டுது சனி 😂 நான் அனுரவை எதிர்த்து எழுதினால் நீங்கள் ஆதரித்து எழுதுவீர்களா? அப்போ எங்கே போனது உங்கள் மாவீரர் மீதான அபிமானம்? கோஷானுக்கு ஏட்டிக்கு போட்டியாக எழுதவா இங்கே வருகிறீர்கள்? இந்த off ramp எல்லாம் காலம் கடந்து விட்டது. நான் எழுதா திரிகளில் கூட நீங்கள் அனுர காவடி ஆடியதை களம் கண்டுள்ளது. இனி வேறு பெயரில் வந்தால் தான் உண்டு. முன்பு இன்னொரு பெயரில் வந்தவர் தானே? பரமாத்மா அடுத்த அவதாரம் எடுக்க நே கூடி வந்துள்ளது 😂

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

2 weeks 2 days ago
ஆவண்ண்ணா உடனும் நாம ஸ்டாப்பு .. அப்பால அறிஞ்ஞது உங்கலைப் போல மேதாவி தானுங்க ...😆

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தல திருவிழாவுக்கான ஆரம்பகட்ட பணிகள்; இலங்கை கடற்படை உத்தியோகபூர்வ விஜயம்

2 weeks 2 days ago
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா: இலங்கை கடற்படையின் அதிரடி ஏற்பாடுகள்! 06 Feb, 2026 | 04:05 PM யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது. அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அமைக்கப்பட்ட கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்தில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை கடற்படை மேற்கொண்டு வருகிறது, மேலும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் சாலைகளை சுத்தம் செய்து வருகிறது. மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். மேலும், இந்த வருடாந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் உட்பட அனைத்து பூசாரிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பான போக்குவரத்து மற்றும் காங்கேசன்துறை மற்றும் குறிகட்டுவானில் இருந்து கச்சத்தீவு தீவுக்கு கடல் வழியாக பல்வேறு பொருட்கள் கடற்படையால் மற்றும் கடற்படையின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/237999

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

2 weeks 2 days ago
அண்ணை தேடும்போது கீழுள்ளவாறு AI தகவல் போட்டுள்ளது. AI Overview இலங்கையில் குளவி கூடுகளைக் கொளுத்துவது நேரடியாக ஒரு பெரிய குற்றமாகப் பார்க்கப்படாவிட்டாலும், குடியிருப்புப் பகுதிகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் தீ மூட்டுவது தண்டனைக்குரியது. குளவிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையானவை மற்றும் பயிர் பூச்சிகளை வேட்டையாடுபவை, எனவே அவற்றைக் கலைப்பதற்கு பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றுவது அவசியம் Kalki Online. பாதுகாப்பு முக்கியம்: குளவி கூடுகளைக் கொளுத்துவது பெரும் தீ விபத்துகளுக்கு வழிவகுக்கலாம், இது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம். பரிந்துரை: கூடுகளை அப்புறப்படுத்தத் தேவைப்பட்டால், உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் அல்லது நிபுணர்களின் உதவியுடன், பெரும்பாலும் இரவில் குளவிகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் அகற்றுவது நல்லது, தீயிட்டு கொளுத்துவதைத் தவிர்ப்பது சிறந்தது. மாங்குளத்தில் குளவி கொட்டியதில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு - 5 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி on Tuesday, January 27, 2026 By Batticaloa முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் குளவித் தாக்குதலுக்குள்ளான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளளார். உயிரிழந்தவர் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். மாங்குளத்தில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் பழைய கொலணிப்பகுதியில் குளவிக்கூடு ஒன்று கலைந்து அதிலிருந்த குளவிகள் வீதியால் சென்றோரை தாக்கிய சமயம் அவ் வீதியால் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரி ஒருவர் உட்பட 5 மாணவர்களை குறித்த குளவிகள் கொட்டியுள்ளன. குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.battinews.com/2026/01/5_14.html

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
பாகிஸ்தான் இலங்கையில் விளையாடுவதால் ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு கடினமாக இருந்தால் பாபர் பயன்பாடாக இருக்கலாம், பி பி எல் ஆரம்ப ஆட்டக்காராக இறங்கினார், பவர் பிளே ஓவர்களை ஒரு புறத்தில் இருந்து வீணடித்ததுடன் அவருக்கு இணையாக ஆடிய வீரருக்கு அடித்தாட வேண்டிய அழுத்தத்தினை உருவாக்கினார். ரி 20 போட்டியில் ஒரு ஆரம்ப இணையில் ஒருவர் கொஞ்சம் கட்டை போட்டால் அடுத்த நபர் அடித்தாட வேண்டிய நிலை உருவாகி அவுட்டாகும் நிலை ஏற்படும். களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டார், பி பி எல் போட்டி அவருக்கு ஒரு சுய பரிசோதனையாக இருந்திருக்கும். அவுஸ்ரேலிய அடுகளம் போல துணைக்கண்ட ஆடுகளம் இல்லை, பார்ப்போம் பாபர் பாகிஸ்தானை கரைசேர்க்கிறாரா அல்லது காலை வாரிவிடுகிறாரா என. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே பையன் சொல்லிவிட்டார் பாபர் ரி 20 க்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று.

நானுஓயாவில் பாடசாலை மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்

2 weeks 2 days ago
அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும். மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகின்றனர். பெற்றோரை பிள்ளைகள் முன் திட்டுவது ஒரு பொறுப்புள்ள ஆசிரியரின் கடமையா?

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
அனுராவை பாராட்ட வேண்டிய இடத்தில பாராட்டுவதும் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெளியிடுகிறேன். இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்? நீங்கள் ஒருபக்க சார்பாக என்னை அனுரா காவடி என்று விமர்ச்சிக்கும்போதே, நான் உங்களுக்கு வெறுப்பேற்ற எழுதுகிறேன். சிங்கள கட்சிகளுக்கு தமிழ் மக்களின் முழு வாக்கையும் வாங்கி கொடுத்து, தங்கள் சுயநலனை பார்த்து மக்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிகேட்காத, நிஞாயப்படுத்திய காவடிகளை விடவா நான் காவடி ஆடுகிறேன்? அப்போ யாரும் இப்படி எதிர்ப்போ, ஏளனமோ செய்யவில்லையே, ஏன்? அவர்களுக்கு வக்காலத்து வேறு வாங்கினார்களே அது மட்டும் ஏன் என அறிய ஆவல்! அவர்களை விட நான் ஏதும் செய்யவில்லையே, எதற்காக இவ்வளவு வக்கிரம் என்மேல்? ஒருவர் என்னை இங்கிருந்து துரத்த இவ்வாறான வசைவுகளை பாடினால், எல்லோரும் சேர்ந்தே நான் கருத்து வைத்தவுடன் என்னை துரத்துவதேன்? மற்றைய ஜனாதிபதிகள் செய்தபோது முனகியவர்கள், மௌனம் காத்தவர்கள் அனுராவின் மீதும் அவரை ஏசாதவரை கண்டு பதறுவது ஏன்? இனி வருங்காலத்தில் தமிழர் பிரதேசங்களில் அனுராவுக்கு ஆதரவு பெருகிக்கொண்டே போகும், அதற்கு காரணம் இந்த காழ்ப்புணர்ச்சி, தமிழ் அரசியற்தலைவர்களின் எசேச்சாதிகாரமுமே. வடக்கு மக்களே அனுராவை அழைத்து பொங்கல் கொண்டாடினார்களே அவர்களை ஏன் அனுரா காவடி என வர்ணிக்கவில்லை? ஆக, சாத்தான் கருத்து வைக்கக்கூடாது ஒழிய வேண்டும், தாங்கள் புகழாதவரை சாத்தான் ஏதும் சொல்லக்கூடாது. அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க என்று மேலே ஒருவர் குறிப்பிட்டபடி நான் கருத்து வைத்தது தப்பா? அவர் ஏளனமாக வைத்திருந்தால்; நானும் ஏளனமாகவே கருத்து வைத்தேன். இதுதான் சமயம் என்று வந்து விடுவார்கள் விரிந்து கட்டிக்கொண்டு.

புத்தளம் - மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்

2 weeks 2 days ago
வில்பத்து பாதுகாக்கபட்ட தேசிய வனத்தில் கள்ள பாதை போட்டால் மூடாமல் எம்ன செய்வார்கள்.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
கிஸ் அடிக்காத குறை 😂. ஆமியாவது சம்பளத்துக்கு மாரடிப்பவன். அனுர இரத்தத்தில் இனவாதம் ஊறிய விஷ ஜந்து. அனுரவின் சின்னம்மா கூட இப்படி பதற மாட்டார் என நினைக்கிறேன்😂 சீச்சி நீங்கல் ஆனுர தூக்கு காவடி. அதை நிறுவ மேலே உள்ள பந்தி மட்டுமே போதும். அனுர ஈரச்சாக்கை போட்டு ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய உணர்வை அழிப்பதை தெரிந்தும்…. சில்லறை லைக்சுக்காக படம் காட்டும் யூடியூப்பர்கள் போல யாழில் வந்து அனுர காவடி ஆடுவது.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
அதாவது வடக்கு கிழக்கு மக்களுக்கு தீங்கு விளைவித்தது "தமிழ் பாராமிலிட்டரி" மட்டுமே ....அதற்கான விசாரனையை அனுரா மாத்தையா கோஸ்டி முடுக்கி விட்டுள்ளது ...அதிரடியாக கைது செய்யப்பட்டு மெல்ல மெல்ல விசாரணை செய்து ராஜமரியாதை அவர்களுக்கும் கொடுக்க படும்...

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
ம்ம்ம்….உது செய்தவர்…செய்யாதவர் எல்லாரும் வழமையா அடிக்கிற கேட்டு புளிச்சு போன டயலாக்தான் அண்ணை 😂. தலைவர் வெளிநாட்டுக்கு பல்மருத்துவம் படிக்க அனுப்பினவர் என்பது தொட்டு யாழில் எத்தனை கஞ்சா கப்ஸா கதையளை நாங்களும் கேட்டு வாறம்😂. நீங்கள் செய்யலாம்…ஆனால் அதை சொன்னால்தானே நாங்கள் பாராட்ட முடியும். சொல்லவும் மாட்டியள், எனவே பாராட்டவும் முடியாது, சொல்லி செய்பவரை பாராட்டினால் அதையும் நொட்டை சொன்னால்? இங்கே ஆமி விளையாடும் கேம் புரியாத பபாக்கள் அல்ல யாரும். உன்னிப்பாக கவனித்தால்…ராசையா குடும்பத்தை பாராட்டிய எவரும் ஆமியை பற்றி ஒரு வரி குஇட எழுதவில்லை என்பது புரியும். அனுரவுக்கு இத்தனை காவடி எடுத்த நீங்கள் இப்படி எழுத வெட்கமாயில்லை? இராணுவத்தை, மகிந்தவை முள்ளிவாய்க்கால் அவலத்தை வெளிநாட்டு அளுத்தத்துக்கு இணங்கி நிறுத்தி விடாதீர்கள், எம் ஆதரவு உண்டு என நெட்டி தள்ளிய பச்சை இனவாதி அனுர, ஜேவிபி. அனுரவுக்கு காவடி தூக்கும் உங்களுக்கு ஆமியை கண்டதும் மாவீரர் நினைவு வந்திட்டாம். நல்ல மாய்மாலம்😂.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
இராணுவத்தினருக்கு வரவேற்பு அளித்த இந்தப்பாடசாலைக்கு அண்மையிற்தான் பறாளை முருகன் ஆலயம் உள்ளது, வசதியாக போய்விட்டது. பாடசாலைக்கு அருகில் விகாரை!

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

2 weeks 2 days ago
பெரும் பகிடி. இவர்களால் முடிந்ததா அவர்களின் மனங்களை வெல்ல? அப்படியிருக்கும்போது இந்த விமர்சனம் அபத்தமானது. சரி சிங்களவரே உங்களை இனி தமது அரசியல் தலைவராக தெரிந்தெடுக்க மாட்டார்கள். அது நமது மக்களின் சாபம். முடிந்தால் முயன்று பாருங்கள்! உங்களை தவறை மற்றவர் மேல் சுமத்தி உங்களை புனிதர்களாக காட்ட முயல்கிறீர்கள், உங்கள் தவறு மக்கள் முன் வெளிப்படுத்தப்படும்வரை. அதற்காகவே சில பொய்களை பரப்பி அரசாங்கத்தின்மீது உளவியல் போராட்டம் நடத்துகிறீர்கள், உங்களை பிடித்து உள்ளுக்குள் போடும்வரை துடிப்பீர்கள். ஒன்று, அனுரா அழிவு இல்லை நீங்கள் அழிவு. அதோடு முடியும் இந்தப்போர். மல்லி! நீங்கள் ஜனாதிபதியாகவே வரமுடியாது, வீணாக கனவு கண்டு அழிந்து போகாதீர்கள். தமிழரை அழித்து ஒழித்தீர்கள், இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்தால், சிங்கள இனமே அழியும்!

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
😂செய்தால் அதை சொல்லி காட்டி படம் காட்ட வேண்டிய தேவை இல்லை...இந்த இராணுவத்தினர் மக்களின் வரிப்பணத்தில் கிடைத்த சம்பளத்தில் கட்டி கொடுக்கின்றனர் ....ஏதோ உருகி செய்த மாதிரி கதை விட்டு நல்ல பிள்ளை சேர்டிவிக்கேட் எடுக்க நிற்கினம் ....அதை வைத்து சமாதான் புறாக்கள் பறக்க போகுதாம் போராட்டம் தொடங்கிய காலத்தில இருந்து நாங்கள் நொட்டை தானே கதைக்கிறோம் ... பறளை முருகன் கோவில் அரச மரம் புத்தருக்கு சொந்தமாம்...

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 2 days ago
ஆமாம் அப்படி ஒரு காலகட்டத்திலேயே தேசியத்தலைவரும் ஆயுதம் தூக்கி போராடினார். நாம் போராட முடியாத நிலை ஆனால் அவர்களை தவிர்த்திருக்கலாம். தட்டு வைத்து, ஆரத்தி எடுத்து அழைக்கத்தேவையில்லை என்பதே எங்களின் தவிப்பு. எங்களுக்காக போராடியவர்களை அவமதிக்கும் செயல் இது. இராணுவத்தை மரியாதைப்படுத்தும் போதெல்லாம் நம் வீரர்களை குற்றவாளிகளாக்குகிறோம். அன்பிற்கும் மரியாதைக்குமுரிய ஜனாதிபதி சுதந்திர தினத்தில் இராணுவத்தினரை மரியாதை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படும்போது, நமது மக்கள் அவர்களுக்கு தட்டு வைத்து, மாலை போட்டு, ஆரத்தி எடுத்து மரியாதை அளித்துள்ளனர். இப்போ அனுராவுக்கு எதிராக தெற்கில் என்ன விமர்சனம் எழும்? அதுதான் எனது கவலையெல்லாம். யுத்த குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்று வேறு அறிவித்திருக்கிறார், அவருக்கு நாம் சொல்லும் செய்தியென்ன? அனுரா காவடி என்று ஏளனம் வேறு. தவறை தவறு என சுட்டிக்காட்ட வேண்டிய நேரத்தில் சுட்டிக்காட்டும்போது எனக்கு எதிராக காவடி தூக்குகிறார்கள். இவர்களின் பிரச்சனைதான் என்ன? சாத்தான் எது கூறினாலும் குற்றம் கண்டுபிடித்து விரட்டுவோம் என்பதா?

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

2 weeks 2 days ago
தம் மக்களை பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் தூக்கினர். தமிழருக்கெதிரான அடக்குமுறைகளை மறைப்பதற்காக அவர்களை பயங்கரவாதிகளாக்கினீர்கள். இங்கு அடக்குமுறை நடந்தது என்பதை பல அரசியல்வாதிகளும் நீங்களுமே ஏற்றுக்கொண்டே, புலிகளை அழித்த பின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படுமென்று சர்வதேசத்துக்கு வாக்குக்கொடுத்துள்ளீர்கள். அதிகாரங்களை பகிர்ந்து வாழ மறுத்தினாலேயே நாடு இந்த அழிவை சந்தித்தது என்றும், நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது என்றும்.அரசியல்வாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமாகக் காரணம் அந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்றோர் அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் வழங்கியதே என்று ஒரு சிங்கள அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். சிவநேசதுரை சந்திரகாந்தனும் விநாயக மூர்த்தி முரளிதரனும் விடுதலைப்புலிகளை காட்டிக்கொடுத்தே பிழைத்தனர். கோவணத்துடன் இருந்த அவர்களை வெள்ளை ஆடை அணிவித்து அழகு படுத்தியது திரிபோலி எனும் இராணுவப்பிரிவிலுள்ள ஒரு தனிக்குழு திரிபோலி என்பது 2009 கு பின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அமைக்கப்பட்டது என ஒரு இராணுவப்புலனாய்வு அதிகாரியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இவரும் இவரை சார்ந்தவர்களும் நமது சில நேர்மைவாதிகள் எனும் பெயரில் புலிகளை சாடுவோரும் இன்னும் புலிகளை சாடுகின்றனர். புலிகள் அழிக்கப்பட்ட பின் தமிழர் நாதியற்றவர்கள் ஆனார்கள். ஒரு நல்ல தலைவனே இல்லை அவர்களை தொடர்ந்து வழிநடத்த, அவர்களை வைத்து குறை கூறி தாம் பிழைப்பு நடத்துகின்றனர். சுதந்திரத்தை வென்றவர்கள் இராணுவத்தினரா? பாவம் நாமலும் சில இனவாதிகளும். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் இனவாதம் மதவாதம் இதைத்தவிர அரசியல் செய்வதற்கு தெரியவுமில்லை, விடயங்களுமில்லை. அவர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களிடம் அந்த அறிவு இருந்தாற்தானே வெளிப்படுத்துவதற்கு. அவர்களிடம் என்ன இருக்கிறதோ அதைத்தானே கொடுக்க முடியும். இராணுவத்திற்கு சுதந்திர தினத்தில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்றால்; அவர்கள் செய்த மனித உரிமை மீறல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அதற்கு நாமல் தயாரா? இந்த இராணுவத்தளபதிகளை சில நாடுகள் தடை செய்திருக்கின்றனவே அதை நீக்க இவர் என்னஉறுதியான நடவடிக்கை எடுத்தார் சுதந்திர தினத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டுமென்று அடம்பிடிப்பவர். இவர் இராணுவத்தினருக்காகவா அழுகிறார்? தங்களை ஓரங்கட்டி விட்டார்களேயென புலம்புகிறார், நல்லிணக்கம் மலர்ந்து விடுமோவென அஞ்சுகிறார். மதத்தலைவர்கள் மதத்தைப்பற்றி அதன் கொள்கைகளைப்பற்றி போதிக்காமல் அரசியல், வன்முறைகளைப்பற்றி கதைப்பது கேலிக்கூத்தே, அவர்களை யாரும் அவமதிக்கவே செய்வர். மதத்தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மதக்கோட்பாட்டின்படி நடக்க வேண்டும், இல்லையேல் காவியை கழற்றிவிட்டு போராடவேண்டும். விகாரைக்குள் பதுக்கியிருந்துகொண்டு வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு வன்முறை இரத்தம் பற்றி பேசக்கூடாது, யாரையும் அச்சுறுத்தக்கூடாது, நாட்டை அழிக்கக்கூடாது, அது மதத்துக்கே இழுக்கு. அட இது வேற பெருமை பேச வேண்டுமா? ஆமாம் அவர்கள் நிலத்தில் அவர்களுக்கு சுதந்திரமில்லை இராணுவம் இருக்கிறது. அவர்கள் ஆலயத்தில் சுதந்திரமாக வழிபாடு நடத்தமுடியவில்லை ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டு விகாரைகள் எழுந்து நிற்கின்றன, அவர்கள் தொழில் வளம் அவர்களிடமில்லை, உறவுகள் இல்லை அதற்கு காரணம் இந்த சுதந்திரம். அந்நியர் நாட்டில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால் நமக்கு இந்த நிலை வந்திருக்குமா? சுதந்திர நாள் நம் மக்களை அடிமையாக்கிய நாள், அதை நாங்கள் அவ்வாறுதான் அனுஷ்டிப்போம். அதை எதிர்க்கும் நீங்கள், நாங்கள் ஏன் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் அதனால் நமக்கு எங்கே சுதந்திரமுண்டு என்பதை நிரூபியுங்கள். முதலில் சுதந்திரம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள் அதைப்பற்றி கருத்து சொல்வதற்குமுன். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சட்டத்தரணி.