Aggregator

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
அது மட்டுமே செய்கிறார். மிச்சம் எல்லாம் ஒரு நாடு ஒண்டறை தேசம் என 2009க்கு முன்பே கூட சாத்தியப்படாத கொள்கைகள்தான். இவை ஒரு நாளும் கைகூடாது என்பது கஜனுக்கும் தெரியும் ஆனால் உங்களை போல் இருக்கும் 15% யாழ் மாவட்ட வாக்காளரை கவர் பண்ணினால் தனக்கு ஒரு கதிரை நிச்சயம் என கணக்கு போட்டு அதை மட்டுமே செய்கிறார். மக்கள் அனுராவிடம் போக கூட்டமைப்பு, மான், மீன் போலவே கஜனும் சம காரணி. ஒரு எம்பி கதிரையை தவிர 2009 இல் இருந்து கஜன் சாதித்தது என்ன? கேள்வி வேறு ஆட்களை பற்றி அல்ல. கஜன் கட்சியின் அறிவிக்கப்படாத யாழ்கள அமைப்பாளர் என்ற வகையில், அந்த கட்சி பற்றி உங்களிடம் கேட்கிறேன்.

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
கேள்வி நல்ல கேள்வி என்பதால் கேட்டேன்🤣 (பொதுவாக இண்டர்வியூக்களை நான் நடத்தும் போது எவராவது it’s a good question என சொன்னாலே - பதில் தெரியவில்லை, பதில்போல் எதையாவது எப்படி சடையலாம் என யோசிக்க டைம் எடுக்கிறார்கள் என்பதே அர்த்தம்🤣). ஆனால் நான் தமிழ் காங்கிரசை பற்றி கேள்வி கேட்க நீங்கள் கூட்டணி, கூட்டமைப்பு பற்றி பதில் ஏன் எழுதுகிறீர்கள். அவர்கள் பிஸ்கோத்துகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கேள்வி காங்கிரசார் பற்றியது. மீள முயலவும்🤣 அதுக்கு கனவானாக இருக்க வேண்டுமே🤣. என்னதான் இருந்தாலும் ஜிஜி கெட்டிக்காரன். கோர்ட்டு பக்கம் தலைவைத்தும் படுக்காத பாரிஸ்டருக்குத்தான் கனவான், குணவான், தட்டி வான் எந்த அரசியலும் செய்யத்தெரியாதே🤣

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
வரும் முன்பே விஜய்க்கு எவ்வளவு சனம் நிற்கிறது என்று தெரிந்து இருக்கும். காவல்துறை விஜயை எச்சரித்து இருக்கிறது. அதை மீறியே அவர் வலது புறமாக தான் போகவேண்டிய இடத்துக்கு சென்று இருக்கிறார். நீங்கள் சொன்னது போல தடை செய்திருந்தால் விஜயின் குரங்கு கூட்டம் பேயாட்டம் போட்டிருக்கும். அழிவுகள் பல மடங்காக இருந்து அத்தனைக்கும் அரசே காரணம் என்று முடிந்திருக்கும்.

'ஹீரோ மெட்டீரியல்'- ஒரு கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளதா?

2 weeks 6 days ago
ஒரு திரைப்படம் பார்க்க போகும் போது அறிவாளியாக போகக் கூடாது.தான் ஒரு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு போகக்கூடாது.விஞ்ஞானியாக போகக்கூடாது. டாக்டராக போகக்கூடாது. பொழுது போக்கிற்காக பார்த்தமாம் ரசிச்சமாம் என்றதுடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொழுது போக்கு அம்சங்களை பொழுது போக்கிய பின் நிறுத்தி விட வேண்டும். அந்த பொழுது போக்கு சினிமாவை ஆராய்ந்தால்.... நீங்களும் சினிமாவில் எதையோ தொலைத்து விட்டீர்கள் என்ற அர்த்தமே.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 6 days ago
செம்பாட்ட‌ன் அண்ணா இல‌ங்கை ம‌க‌ளிர் சிமி பின‌லுக்கு போவின‌ம் என‌ எழுதி இருந்தார்.................இல‌ங்கை ம‌க‌ளிரின் விளையாட்டு இந்த‌ உல‌க‌ கோப்பையில் எடுப‌ட‌ வில்லை வ‌ய‌தான‌ ம‌க‌ளிர‌ இல‌ங்கை அணியில் இருந்து நீக்கி விட்டு திற‌மையாக‌ விளையாடும் இள‌ம் ம‌க‌ளிர‌ அணியில் சேர்க்க‌னும் ச‌ம‌ரி அட்த‌ப‌த்து தான் இல‌ங்கை அணியின் பெரிய‌ ப‌ல‌ம் ஆனால் இந்த‌ உல‌க‌ கோப்பையில் அவான்ட‌ விளையாட்டும் பாராட்டும் ப‌டி இல்லை..............................

குட்டிக் கதைகள்.

2 weeks 6 days ago
Mujeeb New se sent super bien à Trinquemalay, Province de l'Est, Sri Lanka. · தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி, ஒற்றைத் தாயின் மகள். அவளது அம்மா அவளை ரொட்டி வாங்க கடைக்கு அனுப்பினாள். அவள் திரும்பி வரும் வழியில், ஒரு அந்நியன் அவளை புகைப்படம் எடுத்தான். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. பொது அழுத்தத்தின் கீழ், ரொட்டி நிறுவனம் அவரை பிராண்ட் தூதராக மாற்றியது. அவரது புகைப்படம் இப்போது தென்னாப்பிரிக்கா முழுவதும் ரொட்டி விளம்பரப் பலகைகளில் உள்ளது. அதற்கு ஈடாக, தாய்-மகள் இருவருக்கும் இரண்டு அறைகள் கொண்ட வீட்டைப் பெற்றுக் கொடுத்ததுடன், பட்டப்படிப்பு வரை பெண்ணின் கல்விச் செலவை நிறுவனம் ஏற்கும். இப்படியும் நடக்கும் . ( புகைப்படத்தில் பதிவான ) ஒரு அற்புதமான தருணம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு சிறப்பாக மாற்றும் என்பதற்கான உதாரணம் . புகைப்படம் பிடிப்பாளர்களும் சாதாரணமானவர்கள் அல்ல பலம் வாய்ந்தவர்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் . ©mujeeb Voir la traduction

இனித்திடும் இனிய தமிழே....!

2 weeks 6 days ago
ஆனையூரான் ஜெராட் · இலங்கையில் தமிழர்களிடம் பேச்சு வழக்கில் பேசப்படும் போர்த்துக்கேய சொற்கள் அலுமாரி — நிலைப் பேழை. அன்னாசி — செந்தாழம்பழம். கொய்யாப் பழம் — காழ்ப் பழம். பப்பாளி — செங்கொழும்பை. அலவாங்கு — கடப்பாரை. அலுகோசு — தூக்கிலிடுபவர். பைலா — ஆட்டம். சாவி — திறவுகோல், திறபு. சன்னல் — சாளரம், காலதர். கதிரை — நாற்காலி. கஜு — முந்திரி. களுசான் — காலாடை. கமிசை — கைச்சராய். கடதாசி — தாள். கோப்பை — தட்டு. குசினி — அடுப்படி. மேஜை — மிசை. பாண் — வெதுப்பி. பேனா — எழுதுகோல், தூவல் பீங்கான் — வழை. பீப்பா — உருள்கலன். சப்பாத்து — மூடுகாலணி. தவறணை — கள்ளகம். தாச்சி — கலம். துவாய் — துண்டு விறாந்தை — தாழ்வாரம் Voir la traduction

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
ஐயா விஜய் கட்சி ஆரம்பிக்கின்றார் மாநாடு நடத்துகின்றார் ஒவ்வொரு மாவட்டம் தோறும் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கின்றார் அல்லது செய்ய முயற்சிக்கின்றார். தன்னுடைய பிரச்சாரத்தின்போது இத்தனை ஆயிரம் மக்கள் கலந்து கொள்வார் என்று விஜய்க்கு எப்படித் தெரியும்? ஒன்று... கட்சியின் மதிப்பீடு இதில் விஜயும் அவருடைய கட்சி உயர்மட்ட உறுப்பினர்களும் ஒரு மதிப்பீடு செய்யும் வாய்ப்பு உள்ளது( இது ஒரு எதிர்பார்ப்பு ) இரண்டு.... அவருடைய மாவட்டச் செயலாளர் அல்லது செயற்பாட்டாளர்கள் ஒரு கணிப்பீடு செய்வார்கள் இது அவர்களால் முடிந்த அளவில்தான் இருக்கும்) மூன்று.... அரச இயந்திரங்களின் கணிப்பீடு( இது மிக்கது துல்லியமாக இருக்க வேண்டும் ,அவர்கள் மக்களின் காவலர்கள் ) நான்காவது.......செய்தி ( தகவல்) தொடர்பாளர்கள் செய்யும் கணிப்பீடு (இது ஒரு ஊகம் ) ஐந்தாவது..... வேறு கட்சி அமைப்புக்கள் செய்யும் கணிப்பீடு (இது நிபந்தனைகள் அற்ற நம்பிக்கை அற்ற ஒன்று) இந்தக் கணிப்பீடுகளில் அதிகமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை இரண்டாவதும் மூன்றாவதுமான கணிப்பீடுகள் களத்தில் இருந்து வந்த கணிப்பீடுகள் மாவட்டச் செயலாளர்கள் புதியவர்களாக ஆளுமை உள்ளவர்களா ? என்பது ஒரு கேள்விக்குறி . இங்கேயும் காவல்துறை அவர்களுடன் சேர்ந்து நெருக்கமானமுறையில் கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும் இதில் அரச இயந்திரமாக காவல்துறை செய்த கணிப்பீடு... அப்படி ஒன்றைச் செய்ததால் அவர்கள் அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும் விஜய் நாமக்கல்லில் இருந்து கருவூருக்கு வருவதைத் தடை செய்திருக்க வேண்டும்.

தன்னறம்

2 weeks 6 days ago
புரிகிறது. மேலோட்டமாகத்தான் சொல்ல முடியும். ஆனால் அழுத்தமாகச் சொன்னால் சரிதானே. உங்கள் எழுத்து அழுத்தமாகவே உள்ளது. இன்று ஒரு நிகழ்வு பார்த்தேன். விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பாடல் போட்டி. தாய்க்கான பாடல்கள். ஒரு பையனை எடுத்த வளர்க்கும் பெற்றோர். மிக உருக்கமாகவே இருந்தது. எப்பெடியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். எனக்கு உடனே மனதில தோன்றியது உங்களின் இந்த "தன்னறம்"

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
ஒருவருக்கு ஆதரவு பெருகி வரும்போது அதனால் கலக்கம், பொறாமை கொண்டு எதிர்ப்பவர்களும் இருப்பது மனித இனத்தில் இயல்பானது. இதற்குப் பல உதாரணங்கள் உலகத்தில் இருப்பதை அனைவரும் அறிவார்கள். விஜைக்கு ஆயிரழ் ஆயிரமாக மக்கள் ஆதரவு பெருகி வருவதைக் காணும் போது அதனால் கலக்கம், பொறாமை கொள்பவர்கள் அந்த ஆதரவை அழிப்பதற்கு தகுந்த காரணங்களைத் தேடாமல் வேடிக்கை பார்ப்பார்களா?? கிடைத்ததோ மிகவும் பலமான காரணம். விடுவார்களா.???

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
நல்ல கேள்வி முதல்மாகாணசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைகட கூட்டணி போட்டியிடவில்லை.அது போகட்டும் கிழக்குமாகாண சபைத் ரே;தலையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்தது. அதன்காரணமாக பிள்ளையான் முதலமைச்சர் ஆனார். அடடா வடை போச்சே! என்று அடுத்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டார்கள். அந்தக்காரணம் ஏற்புடையதாகவில்லை. வாரிசு அரசியல் என்று சொல்வதை ஒரளவு ஏற்றுக் கொண்டாலும். ஜீஜீ செய்த மாதிரி கனவான் அரசியலை கஜேந்திரகுமார் செய்யவில்லை. போராட்டக்களங்களில் நிற்கிறார்.பலமுறை தோற்றும் சோரம் போகாத அரசியலைச் செய்கிறார். எவரும் நல்ல அரசியல்வாதியாக இல்லாதிருப்பதால்தான் என்பிபியும் அர்ச்சுனாவும் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.வாரிசு அரசியல்மாதிரியே அனைத்து தமிழ்கட்சிளிலும்ஒரே ஆட்களே தொடர்ந்து போட்டியிடுகிறார்கள். இது என்னமாதிரியான அரசியல்

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
புலிகள் புறக்கணித்த மாகாணசபையை நாமும் புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பினால் பாராளுமன்ற் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என று எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மக்கள் திரும்பிக் கூடப் பார்ககவில்லை. இனி இந்த தந்திரத்தை நம்புவது வேலைகாகாது கடைசியில் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று இருக்காமல் ஜதார்த்தமக சிந்தித்து இரண்டு பதவிகளையும. பெறுவதே புத்திசாலித்தனமானது என்று இந்த முடிவுக்கு வந்தினர். தமது முதலுக்கு நட்டம் என்றால் மட்டும் இந்த தீவிர தமிழ் தேசிக்காய்கள் ஜதார்த்தமாக சிந்திப்பது வழமை தானே.

"ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக மோடி என்னிடம் உறுதி அளித்தார்!" - டிரம்ப் பரபரப்பு தகவல்

2 weeks 6 days ago
இந்தியாவை ரசியாவிடமிருந்து வாங்காதே என்று சொல்ல முதல் ரசியாவிடமிருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் நிற்பாட்டி முன்மாதிரியாக நடக்க வேண்டும்.

பிரபஞ்சத்தின் முதல் 3D வரைபடத்தில் வெளிப்பட்ட ரகசியம் என்ன தெரியுமா?

2 weeks 6 days ago
AI Overview யூக்ளிட் தொலைநோக்கி என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் ஏவிய ஒரு விண்வெளி தொலைநோக்கி ஆகும். இது பிரபஞ்சத்தின் இருண்ட பொருள் (dark matter) மற்றும் இருண்ட ஆற்றல் (dark energy) பற்றி ஆய்வு செய்ய, பேரண்டத்தின் முடுக்கத்தை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த தொலைநோக்கி மூலம் பில்லியன் கணக்கான அண்டங்களை ஆய்வு செய்யவும், பிரபஞ்சத்தின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நோக்கம்: இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றலைப் புரிந்துகொள்ளுதல். செயல்பாடு: பேரண்டத்தின் முடுக்கத்தை துல்லியமாக அளவிடுதல். உருவாக்கம்: ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் யூக்ளிட் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. ஏவுதல்: ஜூலை 1, 2023 அன்று ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆய்வுப் பணி: ஆறு ஆண்டு பயணத்தின் போது வானத்தின் ஒரு பெரிய பகுதியை கண்காணித்து, 36% பகுதியை ஆய்வு செய்யும். சாதனைகள்: பிரபஞ்சத்தின் 3D வரைபடத்தை உருவாக்கியுள்ளது, மேலும் பல கேலக்ஸிகளை படம் பிடித்துள்ளது. Euclid's first deep dive into the Universe The European Space Agency’s Euclid space telescope mission has scouted out the three areas in the sky where it will eventually provide the deepest observations of its mission. In just one week of observations, with one scan of each region so far, Euclid already spotted 26 million galaxies. The farthest of those are up to 10.5 billion light-years away. In the coming years, Euclid will pass over these three regions tens of times, capturing many more faraway galaxies, making these fields truly ‘deep’ by the end of the nominal mission in 2030. The first glimpse of 63 square degrees of the sky, the equivalent area of more than 300 times the full Moon, already gives an impressive preview of the scale of Euclid’s grand cosmic atlas when the mission is complete. This atlas will cover one-third of the entire sky – 14 000 square degrees – in this high-quality detail. Explore the three deep field previews in ESASky: Euclid Deep Field South: https://sky.esa.int/esasky/?hide_welc... Euclid Deep Field Fornax: https://sky.esa.int/esasky/?target=20... Euclid Deep Field North: https://sky.esa.int/esasky/?target=20... Read more: https://www.esa.int/Science_Explorati...

யாழில். "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் - தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

2 weeks 6 days ago
18 Oct, 2025 | 04:11 PM "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில் சனிக்கிழமை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன் புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும், வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/228077

யாழில். "தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல் - தெற்கு கலைஞர்களும் பங்கேற்பு

2 weeks 6 days ago

18 Oct, 2025 | 04:11 PM

image

"தீபலோக" தீபாவளி இலக்கிய கலந்துரையாடல், யாழ்ப்பாணத் திருவள்ளுவர் கலாசார மையத்தில்  சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வில்  புத்தக கண்காட்சியும் இடம்பெற்றதுடன்  புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிபவனந்தராசா , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோரும்,  வடக்கு மற்றும் தெற்கு கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

IMG_0583.jpeg

IMG_0541.jpeg

IMG_0534__1_.jpeg

https://www.virakesari.lk/article/228077

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
அப்போ கஜேஸ் ஏன் போன மாகாணசபை தேர்தலை புறக்கணித்தனர்? அதனால் அவர்கள் ஈட்டிய அரசியல் இலாபம்தான் என்ன? பொன்னம்பலம் குடும்பத்தின் வாரிசு அரசியலுக்காகவும் கஜனின் ஒற்றை எம்பி கதிரைக்காகவும் நடத்தபடும் கம்பெனிதான் காங்கிரஸ். வாரிசு அரசியலை ஒழிப்பதாயின் முதலில் எமது நாட்டில், எமது ஊரில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 6 days ago
அவராவது தன்னுடைய கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைப்பதற்காகப் போட்டியிடுவோம் என்று சொல்கிறார்.அதில் பிழையில்லை.ஆனால் சுரேஸ் சுமத்திரன் போன்ற மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மாகாணசபைத் தேர்தலிலாவது ஏதாவது பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டியிடுகிறார்கள். முன்ளணி போட்டியிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பினை பாதிக்கும் அஞ்சுவதாலேயே இப்படிப் புலம்புகிறார்கள்.13 இல் அதிகாரம் இல்லை என்று சம்பந்தரே திருவாய் மலர்திருக்கிறார். ஆனால் தேர்தல்களில் அவரது கட்சி போட்டியிட்டது.