Aggregator

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
பனையால் விழுந்தது விஜைதான் அதிலென்ன சந்தேகம். 41 உயிர்கள்மேல் யார் பழி கூறினார்கள்? அனேக யாழ்கள உறவுகள் அவர்களின் இறப்புக்கு அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து, இறந்தோரின் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தேற்ற முயன்றதுதான் நிகழ்வு.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
“வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்”. நாடகம் நடக்கட்டும். யாழ்கள ஆரம்பத்தை நோக்கினால் புரியும், அனேகமாக அநீதியான அழிவுகளைக்கண்டு மனம் நொந்தோரை ஆறுதல்படுத்தும் பதிவுகளையே உறவுகள் பதிந்தார்கள். இன்றைய நிலையில் பாரிய மாற்றங்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது.😢

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 6 days ago
செம்பாட்ட‌ன் அண்ணாவும் நானும் இல‌ங்கை ம‌ற்றும் ம‌க‌ளிர‌ ந‌ம்பி ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் ஏமாந்து விட்டோம் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்...........................

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 weeks 6 days ago
வரலாற்றில் வெற்றிகரமான பெரும்பாலான அரசியல் தீர்வுகள் தொடர்சசியான பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நடந்துள்ளன. ஆரம்பத்திலே 100 உத்தரவாதம் என்று கூறுவதே குழப்பும் தோக்கத்தை கொண்டது. துரதிஷரவசமாக அந்த நோக்கம் வெற்றியளித்தது. ஆனால் தமிழர்கள் தான் தோல்வியடைந்தனர். வாழ்கையில் சமூகம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிபடையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. எதையுமே நம்பாமல் அவநம்பிக்கையுடன் எதையும் பார்பபவன் இறுதியில் அதன் விளைவாக வாழ்கையை இழந்து புலம்புவான்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 6 days ago
10.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வரலாம் என்று தான் அனுமதி கேட்டதாம் விஜய் அப்படியான ஒரு மனிதன் அல்ல கூட்ட நெரிசல் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

2 weeks 6 days ago
இரண்டு கிழமையில்.... இலங்கையில் ஒரு பவுண் தங்கம், ஒரு லட்சத்தி நான்காயிரம் (104,000) ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 6 days ago
இனி வ‌ரும் போட்டிக‌ளில் நான் இல‌ங்கை அணிய‌ தெரிவு செய்ய‌ல‌ இந்தியா இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்றால் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போகும்..............................

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 6 days ago
பாதாள உலக குழுக்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். இதை அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள். அண்மையில் இந்தோனேசியாவில் பிடிபபட்ட, பாதாள குழு தலைவன் "கெஹல்பத்தர பத்மே"... இரண்டு படத்திலும் மகிந்தவிற்கு வலது புறம் நிற்கிறார். கெஹல்பத்தர பத்மே.... மகிந்தவுடன் நெருக்கத்தில் இருக்கும் படம். மகிந்த ➡ கெஹல்பத்தர_பத்மே ➡ செவ்வந்தி இதான் உண்மை என்பதற்கு, இந்தப் புகைப்படம் போதுமே. Deepan Djr

IMF நிதி வசதி திட்டத்தில் உறுதியாக இருக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

2 weeks 6 days ago
இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர். அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலிங், "நாங்கள் ஒரு படி பின்னோக்கிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பலனாக இப்போது மிகவும் வலிமையான வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5% வளர்ச்சி. இந்த ஆண்டு அது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு அது 3% ஆக மாறுவதற்கான ஆற்றல் உள்ளது. இந்த நேரத்தில் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், அதிக பலன்களைப் பெறுவதற்கு இந்தத் திட்டத்தை மேலும் தொடர்வது முக்கியம். அப்போது வளர்ச்சி வரும். அது தொடர்ந்து நடைபெறும். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்னவென்றால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் பொது நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய பங்கைக் வகிக்கும். அத்துடன், பொது நிறுவனங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பலன்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க இது மிகவும் அவசியம்" என்று கூறினார். https://adaderanatamil.lk/news/cmguydd6m0122qplp7sj20x4o

IMF நிதி வசதி திட்டத்தில் உறுதியாக இருக்க இலங்கைக்கு வலியுறுத்தல்

2 weeks 6 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை தற்போதைய சர்வதேச நாணய நிதிய நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் சீர்திருத்தங்கள் முக்கியமானவை என்று அதன் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்தக் கூட்டங்களுக்கு இணையாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அத தெரணவுக்காக நியூயோர்க்கில் இருக்கும் இந்தீவரி அமுவத்த கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அதன் பிரதிநிதிகள் இந்தக் கருத்தை வெளியிட்டனர்.

அங்கு கருத்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்பிலிங்,

"நாங்கள் ஒரு படி பின்னோக்கிப் பார்த்தால், பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அதன் பலனாக இப்போது மிகவும் வலிமையான வளர்ச்சி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 5% வளர்ச்சி. இந்த ஆண்டு அது 4.2% ஆக இருக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு அது 3% ஆக மாறுவதற்கான ஆற்றல் உள்ளது. இந்த நேரத்தில் கொடுக்கக்கூடிய மிக முக்கியமான அறிவுரை என்னவென்றால், அதிக பலன்களைப் பெறுவதற்கு இந்தத் திட்டத்தை மேலும் தொடர்வது முக்கியம். அப்போது வளர்ச்சி வரும். அது தொடர்ந்து நடைபெறும். இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியமானது என்னவென்றால், வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதில் பொது நிதி ஒருங்கிணைப்பு ஒரு முக்கிய பங்கைக் வகிக்கும். அத்துடன், பொது நிறுவனங்களின் சாத்தியக்கூறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்தப் பலன்கள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்க இது மிகவும் அவசியம்" என்று கூறினார்.

https://adaderanatamil.lk/news/cmguydd6m0122qplp7sj20x4o

'பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் பலி' - ரஷித் கான் கூறியது என்ன?

2 weeks 6 days ago
பட மூலாதாரம், X/@ACBofficials 18 அக்டோபர் 2025, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 3 கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. பக்டிகா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகக் கூறி அதனைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதனுடன், நவம்பர் மாதத்தில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகவும் முடிவு செய்துள்ளது. மூன்று வீரர்களின் படத்தைப் பகிர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், "வெள்ளிக்கிழமை மாலை பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த வீரர்கள் கொல்லப்பட்டனர்." என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கூற்றுப்படி, கபீர், சிப்கதுல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று வீரர்கள் தவிர, இந்தத் தாக்குதலில் மேலும் ஐந்து பொதுமக்கள் உயிரிழந்தனர். "வீரர்கள் மீதான மதிப்பு மற்றும் இந்த துயர சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, நவம்பர் மாத இறுதியில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம்" என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான முத்தரப்பு டி20 தொடர் நவம்பர் 17 முதல் 29 வரை லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் நடைபெறவிருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் இரங்கல் மூன்று வீரர்களின் மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலை "சோகம்" என்று ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரர் ரஷித் கான் குறிப்பிட்டுள்ளார். "பொதுமக்களைக் குறிவைப்பது முற்றிலும் கேடானது மற்றும் காட்டுமிராண்டித்தனமானது. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் அநீதியான நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாகும்." என்று அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்பு டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ள முடிவை ஆதரிப்பதாக ரஷித் கான் கூறினார். குல்புதீன் நயீப் இந்தத் தாக்குதலை "பாகிஸ்தான் இராணுவத்தின் கொடூர செயல்" என்று கூறினார். "இது நமது மக்கள், பெருமை மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஆனால் இது ஆப்கானிஸ்தானின் உணர்வை ஒருபோதும் உடைக்காது." என்று அவர் கூறினார். பிபிசி பஷ்டூ சேவையின் கூற்றுப்படி, முகமது நபி, "இந்தச் சம்பவம் பக்டிகாவிற்கு மட்டுமல்ல, முழு கிரிக்கெட் குடும்பத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் மிகவும் சோகமான சம்பவம். அவர்களது தியாகத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம்" என்று கூறினார். பட மூலாதாரம், Chris Hyde-ICC/ICC via Getty தாலிபன் கூறியது என்ன? ஆப்கானிஸ்தானின் பக்டிகா மாகாணத்தின் மீது வெள்ளிக்கிழமை குண்டுவீசி தாக்குதல் நடத்தியதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியிருப்பதாக தாலிபன் அதிகாரிகள் கூறியுள்ளனர். தாலிபன் அரசாங்கத்தின் மாகாண அதிகாரி ஒருவர் பிபிசி ஆப்கன் சேவையிடம் வெள்ளிக்கிழமை, "பக்டிகா மாகாணத்தின் அர்குன் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பாகிஸ்தான் குண்டுவீசித் தாக்கியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர்." என்று கூறினார். ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பக்டிகா மாகாணத்தில் பாகிஸ்தான் ஒரு நடவடிக்கையை தொடங்கியதாக பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த தாலிபன் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். "பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பக்டிகாவில் மூன்று இடங்களில் குண்டுவீச்சு நடத்தியது. இதற்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுக்கும்," என்று அவர் கூறினார். போர் நிறுத்த மீறல்கள் அல்லது ஆப்கானிஸ்தானில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்தும் பாகிஸ்தானிடமிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்தை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தினார். முன்னதாக, தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தியிருந்தார். பல மோதல்களுக்குப் பிறகு புதன்கிழமை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. கத்தாரின் மத்தியஸ்தத்தின் கீழ் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c709ee02zdzo

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!

2 weeks 6 days ago
மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்! சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை நிராகரித்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 28 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் வழக்கில் நெவில் வன்னியாராச்சி கடந்த 02 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1450595