Aggregator

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 2 days ago
2009-2012 இல் இப்போதைக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை தரும் 13 ஐ முழுமையாக அமல் படுத்த கோரலாம் என கூறியோரை புலம்பெயர் புஸ்வாணங்கள் துரோகி என கூறி திரத்தி அடித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் கூட யாழில் ஒரு திரி ஓடியது. இப்போதும் 1987 இல் நாம் ஒரு அரிய சந்தர்பத்தை இழந்தோம் என எத்தனை ஆட்களை யாழில் ஒத்து கொள்ள வைப்பீர்கள். நானும், ஜஸ்டீன் அண்ணா, ஐலன்டும்தான் கை உயர்த்துவோம்😂. ரசோ அண்ணாவும் சேரக்கூடும். 1990களில் இல் TNL ஒரு விவாவத்தில் SL Gunasekara குமார் பொன்னரிடம் சொன்னார்: வரலாற்றில் எப்போதும் நீங்கள் முடியாததை கேட்டு, முடியுமானதையும் இழக்கும் கூட்டம் என. விகிதாசார பிரதிநிதிதுவம் கேட்க வேண்டிய போது, 50:50 உரிமை கேட்டீர்கள், மாவட்ட சபை கோர வேண்டிய போது, மாகாண சபை கோரினீர்கள், மாகாண சபை கிடைத்த போது தனி நாடே தீர்வென்றீர்கள். இப்படி முட்டாள்தனமாக இருந்தால் உங்களுக்கு எதுவும் கிடையாது என. கடைசியில் அந்த இனவாதி கூற்றே நிஜமானது. இப்போ நாமே அனுரவுக்கு காவடி எடுக்கிறோம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
பாகிஸ்தான் அணி சிறப்பாக உள்ளது போல உள்ளது, பாபர் அசாம் ஒருவர்தான் அதில் கொஞ்சம் தனித்து விடப்பட்டுள்ளது போல இருக்கின்றது, பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் பற்றி குறிப்பிடும் போது, பாபர் பாகிஸ்தான் அணிக்கு உறுதித்தன்மையினை கொடுப்பார் (நிலைத்து நின்றாடுவதன் மூலம்). இந்த பி பி எல்லில் வேகமாக அடிப்பவர்கள் கூட அதிக ஓட்டங்களை பெற காயம் என கூறி வெளியேறினார்கள், ஆனால் பாபர் அவ்வாறு செய்யவில்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
அமெரிக்க அணி நியுசிலாந்துடனான பயிற்சி போட்டியில் திறமையாக விளையாடியிருந்தார்கள். நொக்கவுட் போட்டிகள் இலங்கையில் நடந்தால் இந்தியாவினை வெல்வதற்கு ஒரு சமநிலை வாய்ப்பு மற்ற அணிகளுக்கு இருக்கும்.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks 2 days ago
நான் கூட்டாட்சி பற்றி கூறவில்லை, காணி, காவல், நிதி, நீதி போன்ற அதிக அதிகாரங்கள் கொண்ட 13+ போன்ற தீர்வு சம்பந்தமாகவே, நீங்கள் கூறுவது 2009 பின்னர் கூட்டாட்சி போன்ற தீர்வுகள் சாத்தியமில்லை.

எப்ஸ்டீன் தொடர்பு ஈழத்தமிழ் - கூல் முகங்களின் ஹொட் தொடர்புகள்!

2 weeks 2 days ago
வாசகர் தெளிவுக்காக: எப்ஸ்டீன் பல விடயங்களில் மூக்கை நுழைத்த, ஈடுபட்ட ஒரு பெரும் பணக்காரார். தனியே சிறுவர் துஸ்பிரயோகம் மட்டும் அல்ல, அவர் வாழ்க்கை சம்பந்த பட்ட பலதை, பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது: அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும், அவருக்கு கோப்பி வித்தவன், முடிவெட்டினவன், கார் பார்க்கிங்கில் கதவு திறந்தவன் எல்லாரும் சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டார்கள் என சொல்ல முடியாது. இதுவரை நான் அறிந்த தகவல்களை: ராஜன், ஜீவன் கூலை பொறுத்தவரை. எப்ஸ்டீன் scholars list என ஒரு லிஸ்டை தயாரித்துள்ளார். இது ஏன், தயாரிக்கபட்டதென தெரியவில்லை. இலங்கையில் அரசியலில் ஆளுமை செலுத்த தமக்கு ஏதுவானவகளை தெரியும் முயற்சியோ அல்லது வேறு எதுவுமாகவும் இருக்கலாம். இந்த லிஸ்டில் இவர்கள் பெயர் - ஒரு பயோடேட்டா உள்ளது. இந்த லிஸ்டில் தம் பெயர் இருப்பது இவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். இதை வைத்து இவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்தில் பங்கு என கூற முடியாது. டிரம்ப்பை, கிளிண்டனை போல் எப்ஸ்டீனின் ஐலண்டுக்கு போனதாயோ, மசாஜ் எடுத்ததாயோ கூட எந்த தகவலோ படமோ இதுவரை இல்லை. பிகு ஆனால் இவர்களின் பின்புலம், தாம் பள்ளிகூடம் கூட போகவில்லை ஆனால் இவர்கள் வெளிநாட்டில் போய் டாக்டரேட் எல்லாம் பண்ணி உள்ளனர் என்ற வயித்தெரிச்சலில் சிலர் இதை குற்றம் நிருபணம் என்ற ரீதியில் பரப்பி லைக்ஸ் பிச்சை எடுப்பது கண்கூடு. ரண்டஜீவனை யாழில் பலதடவை கோஷான் வறுத்துள்ளார்.

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

2 weeks 2 days ago
போனகிழமை செய்தியில் படித்தேன் இதே பகுதியில் படிக்கும் மாணவர் ஒருவரின் தந்தை இறந்துள்ளார்.இதே பிரச்சனை தான்.இந்தப் பள்ளியில் தானோ கவனிக்கவில்லை.அவரும் ஒரு கவ்லி தொடர்பான பணியாளர் தான்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 2 days ago
இதுவரை போட்டியில் கலந்து கொண்ட 23 பேரின் பதில்கள் தரவேற்றப்பட்டுள்ளது. வெற்றிபெற வாழ்த்துக்கள்! செம்பாட்டான் ஏராளன் வசீ புலவர் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 சுவி கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் கந்தப்பு நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நிலாமதி நந்தன் @நந்தன் இறுதியாக வரும் அணிகளுக்கு பதில்கள் தரவில்லை எனினும் அவரின் தரவுகள் கூகுள் ஷீற்றில் இருந்தமையால் அவற்றை பிரதிசெய்துள்ளேன். இந்த முறை 🦀க்கு வெற்றி கிட்டுமா?🤪 முதலாவதாக வந்தாலும் ஆச்சரியமில்லை😄! அநேகமாக எல்லோரும் இந்தியா மீது பந்தயம் கட்டி உள்ளனர். சறுக்கச் சான்ஸ் அதிகம்.😁

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

2 weeks 2 days ago
இலங்கையிலும் குளவிக்கூடு கொழுத்துவது தண்டனைக்கு உரிய குற்றம் என வாசித்தேன். பாடசாலை நிர்வாகம் ஏற்கெனவே சில காலத்திற்கு முன் கல்வித் திணைக்களத்திற்கும், வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து இருந்தும்.. அரச உத்தியோகத்தரின் அசமந்த போக்கினால்… பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks 3 days ago

எமது சுழிபுரம் கிழக்கு கிராமத்தில் 55 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய மாடிக்கட்டிடம் அ.மி.த.க பாடசாலையில் திறக்கப்பட்டது.

கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!

2 weeks 3 days ago

கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி!

06 Feb, 2026 | 11:11 AM

image

கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மோதலின் பின்னர், அகதிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதுடன், அதில் பயணித்த அனைவரும் கடலில் வீழ்ந்தனர். உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

1.JPG

இந்த சம்பவத்தில் 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 குழந்தைகள், ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் இரண்டு கடலோர காவல் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சியோஸ் ஸ்கைலிட்சியோ (Skylitseio) மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காயமடைந்த பெண்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸ் கடலோர பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுடன் பலியானோரின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலங்களின் உடற்கூறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிர்தப்பியவர்கள் கிரீஸ் ஊடகங்களுக்கு வழங்கிய தகவலின்படி, குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237963

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

2 weeks 3 days ago

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Feb 6, 2026 - 09:30 PM

புங்குடுதீவில் வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாள்கள், ஒரு அபாயகரமான கோடாலி உள்ளிட்ட ஏனைய சில பொருட்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவுப் பகுதியில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பல்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்நிலையிலேயே பொலிஸார் இந்த அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlb2mzj0000g356nm8c6opol

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

2 weeks 3 days ago

வரலாற்றில் முதன் முறையாக பெண் பஸ் நடத்துனர்கள் நியமனம்

Published By: Digital Desk 3

06 Feb, 2026 | 05:19 PM

image

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (06) மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடகத் துறை துணை அமைச்சர் கலாநிதி கௌசல்யா அரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபைத் தலைவர் சஜீவ கனகரட்ண ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

https://www.virakesari.lk/article/237980

அம்மணிகளே உங்களை நம்பித்தான் எதிர்கால இ.போ.ச இயங்கும் போல! பார்த்து கவனமாக வாகனத்தை செலுத்துங்கள்.

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

2 weeks 3 days ago

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,TVK

படக்குறிப்பு,கோப்புப் படம்

கட்டுரை தகவல்

வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,@actorvijay/X

படக்குறிப்பு,2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம்

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது.

காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை.

இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார்.

ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம்,Getty Images

இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gvngvxv0wo

'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

2 weeks 3 days ago
'விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது' - உயர் நீதிமன்றம் கூறியது என்ன? பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 6 பிப்ரவரி 2026, 06:55 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,@actorvijay/X படக்குறிப்பு,2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது. காசோலை மூலம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு வருமான வரி (TDS) செலுத்தப்பட்டிருந்தது. ஆனால், ரொக்கப் பணத்திற்குச் செலுத்தப்படவில்லை. இது குறித்து விஜய்யிடம் கேட்டபோது 5 கோடி ரூபாய் ரொக்கமாகப் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான வரியைச் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த ஐந்து கோடி ரூபாய் உள்பட கணக்கில் வராமல் 15 கோடி ரூபாயை பெற்றதாகவும் அதற்கான வரியைச் செலுத்தவும் அவர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி 2016 - 17ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தார். அதில் அவரது வருவாய் 35.42 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ரசிகர் மன்றத்திற்குச் செய்த செலவாக சுமார் 64.71 லட்ச ரூபாயையும் சில சொத்துகளின் மதிப்பு குறைந்ததற்காக 17.81 லட்ச ரூபாயையும் வரி விலக்கிற்காகக் கோரியிருந்தார். ஆனால், வருமான வரித் துறை அதனை ஏற்கவில்லை. 38.25 கோடி ரூபாய்க்கு வரி செலுத்த வேண்டுமென்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்காவிட்டால், அவர் இந்தக் கூடுதல் வருவாயை கணக்கில் காட்டியிருக்க மாட்டார் என்றும் கூறியது. இதற்காக அவருக்கு வருமான வரி சட்டங்களின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத்தை எதிர்த்தே விஜய் நீதிமன்றத்தை நாடியிருந்தார். வருமான வரித்துறை தரப்பு கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்துவந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறைக்காக வாதாடிய வழக்கறிஞர் வருமான வரிச் சட்டங்களின் படி, சரியான முறையிலேயே அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்றும் அதனால் விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் அவர் வாதாடினார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அபராதம் விதிப்பதற்கான நடைமுறைகள் 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பாகவே துவங்கியிருக்க வேண்டுமே தவிர 2022 ஜூன் 30 முன்பாக அல்ல என்று வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜனவரி 23ஆம் தேதி வழக்கின் விசாரணையை முடித்து, தீர்ப்புக்காக ஒத்திவைத்தார். அதைத் தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 6) விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvngvxv0wo