3 weeks ago
3 weeks ago
மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்! சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை நிராகரித்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 28 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் வழக்கில் நெவில் வன்னியாராச்சி கடந்த 02 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1450595
3 weeks ago
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது! இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1450657
3 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B பகுதி: 34 B / முடிவுரை / 'சிங்கள மொழி எப்போது தொடங்கியது?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] சிங்கள மொழியானது, இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின், இந்தோ-ஆரிய மொழிப்பிரிவைச் சார்ந்த மொழியாக இன்று வகைப்படுத்தப்பட்டுள்ள மொழியாகும். சிங்கள மொழியைப் பொறுத்தவரை, அதன் பிராகிருத எழுத்துகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டு அளவுக்குப் பழைமையானது என்று சொல்லப்பட்டாலும், அதற்கான வலுவான ஆய்வுச் சான்றுகளைக் எங்கும் காணமுடியாதுள்ளது. சிங்கள மொழியில் கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழைமையான இலக்கியமானது ஒன்பதாம் நூற்றாண்டுக்குரியது என்று நம்பப்படுகிறது. அதற்க்கு முன் ஒன்றுமே இன்னும் அறியப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே, மகாவம்சத்தின், சிங்கள இனத்தின் தோற்றத்துக்கும், அறிவியல் ரீதியான மொழியின் தோற்றத்துக்கும் இடையில் பாரிய இடைவெளிகளுண்டு. ஆகவே, கி பி 9 ஆம் நூற்றாண்டு, பிராகிருதத்திலிருந்து உருவான எலு மொழியில் இருந்து சிங்களம் ஓரளவு முழுமையாக உருவானது. இந்த எலு மொழியின் வடிவம் கி.பி 200 வரை இருந்தது. அதன் பின், 3 ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை, இந்த மொழி தொல் - சிங்களம் [Proto-Sinhalese] என்று அறியப்பட்டது. எனவே, சிங்களத்தின் ஆரம்ப வடிவம், இந்த காலத்தில், பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டது. இன்று நாம் காணும் சிங்கள வடிவத்தை, இந்த வடிவம் நாளடைவில் திடப்படுத்தியன என்று கூறலாம். 4 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தொல் - சிங்கள எழுத்து வடிவம் கணிசமாக மாறியது. 7 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை, இடைக்கால கட்டத்தில் சிங்கள மொழி மேலும் திடப்படுத்தப்பட்டது . நவீன சிங்கள மொழி 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியதாக பல மொழியியலாளர்களால் கருதுகிறார்கள். சிங்களம் இன்று தமிழ் உட்பட பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், சிங்களம் இந்தோ-ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தது என்பதான ஒரு விவாதத்தின் முடிவுக்கு வழிவகுத்தது எனலாம். அது நீண்ட காலமாகத் தமிழின் தாக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. மொழியியல் ஆய்வுகளின்படி, சிங்கள சொற்களஞ்சியத்தின் கணிசமான பகுதியானது தமிழில் இருந்து பெறப்பட்டது. குறைந்தது 10% சிங்கள சொற்கள் தமிழ் தோற்றம் கொண்டவை என்று மதிப்பிடுகிறது. இது இலங்கையில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே உள்ள நெருக்கமான வரலாற்று தொடர்புகளை பிரதிபலிக்கிறது; இருப்பினும், பகுப்பாய்வு முறை மற்றும் மூலத்தைப் பொறுத்து சரியான சதவீதம் மாறுபடலாம். தமிழ் மொழியுடனான நெருங்கிய ஆரம்ப தொடர்பும் மற்றும் சிங்கள சமூகத்தில் தமிழர்களை சிங்களமயமாக்கியது [இணைத்துக் கொண்டது] பல தமிழ் மூலச் சொற்களை சிங்கள மொழியில் ஏற்றுக்கொள்ள உதவியது என்று எண்ணுகிறேன். இரண்டு இன அயல் மக்கள், அன்றாடம் பொருள் பண்டங்களை பரிமாறிக்கொள்ளும் சூழ்நிலையில், மொழிச் சொற்களில் கடன் வாங்குவது இயல்பாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது உறவுச் சொற்கள், உடல் உறுப்புச் சொற்கள், மற்றும் சாதாரண நடவடிக்கைச் சொற்கள் போன்றவை கடன் வாங்கப்படுகின்றன. அப்படியே, இரண்டாவதாக, சொற்களஞ்சியம் சார்ந்த சொற்களுடன் [பெயர்ச்சொற்கள், உரிச்சொற்கள் மற்றும் வினைச்சொற்கள்], இடைச்சொற்களும் கடன் வாங்கப்பட்டுள்ளன. சிங்கள சொற்றொடரியல் அல்லது சொல்வரிசை மீது தமிழ் ஏற்படுத்திய தாக்கம் நெருங்கிய தொடர்பை மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையிலான இருமொழி பேசுபவர்களின் இருப்பையும் மற்றும் அதிக அளவு இனக்களுக்கிடையான கலப்பையும் மற்றும் கலப்பு திருமணத்தையும் உண்டாக்கியிருக்கிறது எனலாம். நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 35 தொடரும் / Will follow "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 34 B https://www.facebook.com/groups/978753388866632/posts/31886481367667096/?
3 weeks ago
கரூரில் பொலிஸ் காலை 10:30 பிரசாரம் செய்ய விஜய்க்கு அனுமதி கொடுத்தது . காலையில் இருந்தே விஜய் சினிமா இரசிகர்கள் திரள தொடங்கிவிட்டனர். அவர் தனது இரசிகர் கூட்டத்தை அதிகரிக்க திமிட்டமிட்டு தாமதமாக 3 மணிக்கு நாமக்கல் என்ற ஊரில் இருந்து புறப்பட்டார். இரவு 7:15 தான் கரூர் பிரச்சாரத்திற்கு வந்து சேர்ந்தார்.
3 weeks ago
மேலும் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வௌிப்படுத்திய இஷாரா! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணையின் போது, தனது முன்னாள் காதலரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ஒருவர் மூலம், 'கெஹெல்பத்தற பத்மே' என்பவரைத் தான் அறிந்துகொண்டதாக அவர் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் துப்பாக்கிதாரி என்று கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்பவரை 'பத்மே' தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இஷாரா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். " எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" என்று 'பத்மே' தனக்குக் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு கொலையைச் செய்யுமாறு தான் அவரை இயக்கியதாகவும் இஷாரா தெரிவித்துள்ளார். 'கெஹெல்பத்தற பத்மே' உடனான நட்பு காரணமாக, கொலைக்காக எந்தப் பணமும் பெறவில்லை என்றும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட அதே நாளில், அதாவது கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு, தான் வெலிபென்ன பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு தங்கியிருந்ததாகவும், அடுத்த நாள் 'கெஹெல்பத்தற பத்மே'வின் நெருங்கிய நண்பரான மத்துகம ஷான் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் தொடங்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு, ஏப்ரல் 13 ஆம் திகதி, தொடங்கொடவில் இருந்து மித்தெனிய பிரதேசத்தில் அவர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றுள்ளார். புத்தாண்டுக் காலம் என்பதால், பொலிஸ் அதிகாரிகள் வருடப் பணிச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், அன்றைய தினத்தை அவர்கள் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்கியிருந்த அவர், மே மாதம் 6 ஆம் திகதி, அதாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற நாளில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் அன்றைய தினம் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்ததால், அந்த நாளைத் தெரிவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் தான் எந்தவொரு கையடக்கத் தொலைபேசியையும் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இஷாரா செவ்வந்தி இன்று மத்துகம பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பின்னர் அவர் தங்கியிருந்த மித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அடைக்கலம் கொடுத்த வெலிபென்ன வீட்டில் உரிமையாளரையும், அவருடைய மருமகனும் அளுத்கம பொலிஸில் இணைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளையும் கொழும்பு குற்றப் பிரிவு கைது செய்துள்ளது. அத்துடன், தொடங்கொட வீட்டில் அடைக்கலம் கொடுத்த நபரையும், மித்தெனிய பிரதேசத்தில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டில் இருந்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். எவ்வாறாயினும், அந்தக் கைது செய்யப்பட்ட பெண், 'ஹரக் கட்டா'வைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊழியரின் மனைவி என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்புக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சில்வாவின் மேற்பார்வையில் கொழும்பு குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன. https://adaderanatamil.lk/news/cmgv328sh012oo29ntya4do2i
3 weeks ago
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை adminOctober 17, 2025 மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல. அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள். ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார். https://globaltamilnews.net/2025/221656/
3 weeks ago
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
adminOctober 17, 2025

மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்தை அடியோடு மறுக்கிறோம் என்கின்றனர். அதனால் அவர்களுக்கு அது தொடர்பில் சரியான கருத்து இல்லை என்பதே உண்மை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
சவிற்ஸ்லாந்தில் இடம் பெற்ற சமஸ்டி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது சுவிஸ் அரசாங்கம் சமஸ்டித் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பது போன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்
ஆனால் உண்மை அதுவல்ல அங்கே பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்களை சுவிஸ் அரசாங்கம் அழைத்தது சமஸ்டி தொடர்பான ஒரு கற்பிதத்தை வழங்குவதற்கு மாத்திரமே தவிர வேறு எதற்கும் அல்ல.
அங்கு அதிகம் வந்தவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் எனவே அவர்கள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விடயங்களை முன் கொண்டு செல்வதாக தெரிவித்தார்கள்.
ஆனால் அது தொடர்பான எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவே இதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அத்துடன் 13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி எமக்கு கிடைக்கின்ற குறைந்தபட்ச அதிகாரமான மாகாண சபை தேர்தலை நடத்தி அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனால் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாங்கள் அதிலே போட்டியிடுவோம். தேர்தல் தொடர்பில் பேசப்பட வேண்டும் என்று கூறுகிற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் 13ஆம் திருத்தச் சட்டம் தேவை இல்லை என கூறி வருகின்றனர். எனவே இது தொடர்பில் அவர்களுக்கு சரியான கருத்துக்கள் இல்லை என்றார்.
https://globaltamilnews.net/2025/221656/
3 weeks ago
திரையரங்கில் பார்த்தேன். மாரி செல்வராஜின் சிறந்த படைப்பு
3 weeks ago
யோசிக்க வைக்குது..அவ்வளவுதான்...
3 weeks ago
3 weeks ago
இதில் புதுமை ஒன்றும் இல்லை , முன்பே இருந்தது தான் . முன்பு முதுமக்கள் தாழி என்று சொல்லிக் கொண்டார்கள் . இப்போது சொல்வதை இன்னமும் ஐம்பது, நூறு வருடம் கழித்து வேறு மாதிரி தான் சொல்லுவார்கள் . அழியா மை இருந்தால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
3 weeks ago
இந்த உலகமே தன்னறம் இல்லாமல்தான் ஆகிக்கொண்டிருக்கின்றது. சுயநலம் கூடிக்கொண்டே போகின்றது. உங்கள் கதையில் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்லியே வாழ்க்கையும் முடிஞ்சுடுமோ என்றும் யோசினையாக் கிடக்கு.
3 weeks ago
3 weeks ago
காணாமல் ஆக்கப்பட்ட தமிழரின், சொந்த விபரங்களை பயன்படுத்தி பல சிங்களவர்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கலாம். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுபவர்கள் சிலர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக கடந்த அரசாங்கங்கள் கூறிவந்தன. அன்றைய அமைச்சர் ஒருவர் ஐ. நாவிலும் இந்த கருத்தை வைத்திருந்தார். இந்த சம்பவத்தை வைத்துப்பார்க்கும் போது அதுவும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்திய அடையாள அட்டையை தயாரிக்க இவர்களால் முடிந்திருக்கிறதென்றால், உள்நாட்டில் தயாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லையே இவர்களுக்கு. பல வருடங்களுக்கு முன் போர் முடிந்த கையோடு ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது. அதாவது நாமல் வாட பகுதியில் உள்ள தமிழரின் காணிகளை குறைந்த விலையில் பெற்றுக்கொண்டு அவர்கள் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல தூண்டப்படுவதாக. அந்தசெய்தியில் சில உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். ஒரு நாட்டில் அகதியாக தஞ்சம் புகுந்தவர்களில், இலங்கை சட்ட விரோத கடற் பயணங்களை தடுக்க அமைக்கப்பட்ட கடலோரக்காவல் பணியில் இருந்த ஒரு கடற்படை சிப்பாய், தன் நாயோடு தஞ்சம் அடைந்திருந்ததாக செய்திகள் வந்தன. அவர் மட்டுமல்ல, பல சிங்களவர்கள் இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர். நாட்டில் எல்லாத்துறைகளிலும் ஊழல், மோசடி, விசேடமாக போலீஸ், பாதுகாப்பு படைகளில் முழுவதும் இது பரவியிருக்கிறது. அரச துறைகள் முழுவதும் மாற்றியமைக்கப்படவேண்டும். தமிழருக்கெதிரானது என உருவாக்கப்பட்டது, நாட்டையே விழுங்கி விட்டிருக்கிறது. சுட்டுப்படுகொலைசெய்யப்பட கணேசமுல்ல சஞ்சீவ காரணமில்லாமல் அன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது எப்படி? உடனடியாக மத்துகமவுக்கு இஷாரா தப்பிச்செல்ல முடிந்தது எப்படி? போலீசார் மத்துக்கமவுக்கு தேடுதலுக்காக சென்றபோது மித்தெனியாவுக்கு தப்பிச்சென்று அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று, கென்னடி பஸ்ரியனிடம் இஷாராவை கையளித்தது யார்? சாதாரண பொதுமகனால் முடியுமா இதனை செய்ய? போலீஸ் புலனாய்வாளர்கள் நேபாளத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது வரை, ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படாதது வரை வெளியில் கசிந்தது எப்படி? அப்படியென்றால்; குற்றவாளிகள் புலனாய்வுப்படைக்குள் இவர்களுடன் பயணிக்கின்றனர். மகிந்த காலத்தில் போலீஸ், இராணுவப்படைகளுக்கு அதிகளவு அதிகாரம், செல்வாக்கு, தண்டனைகளிலிருந்து விலக்கு இத்தியாதி கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் என்ன தவறு செய்திருந்தாலும் நாட்டை காப்பாற்றியவர்கள் என்கிற விளக்கம் கொடுக்கப்பட்டது. அது போதைப்பொருள் கடத்தலாக இருந்தாலென்ன, கொலை கொள்ளையாக இருந்தாலென்ன. நாட்டை காப்பாற்ற வேண்டியவர்கள் நாட்டை அழிப்பதற்கு பயன்படுத்தபட்டார்கள். அனுராவுக்கு உயிர் அச்சுறுத்தல் இங்கே தான் உண்டு. அனுரவைத்தவிர வேறொருவர் ஆட்சி ஏற்றிருந்தால் இவையெல்லாம் நிறைவேறியிருக்காது. இப்போ நாமல் சொல்கிறார், இந்த குற்றவாளிகளின் பின்னால் செயற்படுபவர் யார், இந்த கள்ள அடையாள அட்டைகளை விநியோகித்தவர்கள் யார், புலனாய்வுத்தகவல்களை அளிப்பவர்கள் யாரென அரசு, மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமாம். ஏன் இவ்வளவு அவசரம் இவருக்கு? தன் பெயரை தெரிந்து கொண்டுவிட்டார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலா? அல்லது தகவல் கொடுப்போரை அழிப்பதற்காகவா? இவரை சுற்றி ஏலவே கண்காணிப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதை இவர் அறிய வில்லையா? அதைவிட இஷாரா இவரின் முன்னாள் காதலியென்கிற பேச்சும் அடிபடுகிறது. இவர்களின் ஊதுகுழல்கள் அடங்கிவிட்டனவே, இனிமேல் எது பேசினாலும் அது தமக்கு எதிராகவே திரும்புமென உணர்ந்து கொண்டனரோ? அவர்கள் தம் பாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வியாபாரம் என சொந்த நாட்டிலேயே கொடிகட்டிப்பறந்து சொகுசான வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அனுரா ஆட்சியேறியவுடன் நாட்டை விட்டு வெளியேறி, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து, கைதாகவும் வேண்டி வந்தது, ராஜபக்ச குடும்பத்துக்கு வந்த சோதனை. அவர்களின் கோர முகத்தையும், இருண்ட ஆட்சியையும் உலகிற்கும் சொந்த மக்களுக்கும் வெளிக்காட்டியுள்ளது. ஆனால் எல்லா துறைகளையும் மாற்றியமைக்க வேண்டியது, அனுராவுக்கு இன்னும் நாட்டை முன்னேற்றகரமாக கொண்டுசெல்ல உதவும். தமிழ் மக்களை மட்டுமல்ல சொந்த மக்களையும், உண்மையை வெளிக்கொண்டு வந்தவர்களையும், இவர்களுக்காக, இவர்களை காக்க, தம் சொந்த உயிரையும் பணயம் வைத்து ஏவல் வேலை செய்து இவர்களை செழிப்பாக்கி அழகு பார்த்தவர்களையும் கொலை செய்த இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும். ஹி.... ஹி..... நீங்கள் அவர் செய்தவற்றை கண்டதால் போற்றுகிறீர்கள். நாங்கள் அவர் சாதிப்பார் என நம்பினோம், கேலி செய்தீர்கள் அன்று, என் போன்றவர்களை.
3 weeks ago
தெரிந்தால் ஏன் யாழில் வந்து எழுதி, நேரத்தை பாழாக்கும் வீண் பேச்சுகாரர் என்ற பழிக்கு ஆளாகி இருக்க மாட்டேனே வசி 🤣. அண்மையில் இந்தியாவில் உழைத்த கறுப்பை, எப்படி மொரொசியஸ் வழியாக மீண்டும் இந்திய பங்கு வர்தகத்தில் இறக்கி, கறுப்பை வெள்ளை ஆக்குவதோடு, இலாபமும் பார்கிறார்கள் என ஒரு வீடியோ பார்த்தேன். அப்படி பல வழிகள் இருக்கலாம். அச்சொட்டாக தெரியவில்லை ஆனால் ஏதோ ஒரு வகையில் செய்கிறார்கள். மொமட் அல்பாயிட், டயனாவின் காதலர் டோடியின் தகப்பன். ஆரம்பத்தில் கோலமாவு, மற்றும் லெதர் வியாபாரம் அதில் வந்ததை வெள்ளையாக்கி பெரும் செல்வந்தரானார். ஆனால் ஹை கோர்ட் வரை போயும் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை. எந்த குற்றவியல் வழக்கிலும் குற்றம் தீர்க்கவில்லை - அதாவது அரசால் நிறுவ முடியவில்லை ஆனால் செய்கிறார் என தெரிந்திருந்தது.
3 weeks ago
எனக்கு நல்ல நினைவுள்ளது, முதல் முதலாக நான் கண்ணாடி அணிந்து வேலைக்கு போன போது சக பணியாளர் உதட்டில் புன்முறுவலை மறைத்தபடி "எப்படி இருக்கிறது புதிய கண்ணாடி" என கேட்டார், நான் இவருக்கு என்மேல் என்ன நகைசுவை தெரிகிறது என சிந்தித்தபடியே "யன்னலினூடாக உலகை பார்ப்பது போல இருக்கிறது" என கூறினேன். உங்கள் கதைகளினூடாக நீங்கள் உலகை பார்க்கும் விதத்தில் உங்களை நாங்களும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.🤣
3 weeks ago
இருக்கவே இருக்கிறது Airport Lounge.
3 weeks ago
அதில் ஒட்டுண்ணிகள், பாக்டீரியா, வைரஸ்கள், கன உலோகங்கள் மற்றும் காற்று மற்றும் சேகரிப்பு மேற்பரப்புகளிலிருந்து வரும் ரசாயனங்கள் போன்ற அசுத்தங்கள் இருக்கலாம் என்கிறார்கள் .
3 weeks ago
சட்ட விரோதமான வருவாயினை எவ்வாறு தொழில் தொடங்கும் போது பயன்படுத்துகிறார்கள்? வருமான வரித்துறை சாதாரணமானவர்களை துளைத்தெடுபார்களே? அல்லது விவேக் நகைசுவை போல வீரப்பனை விட்டுவிடுவீர்கள் எம்மை மட்டும் பிடிப்பீர்கள் என்பது போல பெரிய மீனை விட்டு விடுவார்களா?