Aggregator
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வாழைப்பூ வடை
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி
நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி
Dec 11, 2025 - 09:18 AM
சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர்.
குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது.
இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
கருத்து படங்கள்
யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !
யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன.
எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது.
அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன.
நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன?
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.
உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.
எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம்.
ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம்.
பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
Mano ShangarDecember 11, 2025 10:54 am 0

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.
ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.
இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.
அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”
விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”

விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
இது வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது.
ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை, தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது.
தி கார்டியன் செய்தித்தாளின் கூற்றுப்படி, ட்ரம்ப் இந்த திட்டத்தை ஒரு பெரிய பொருளாதார வெற்றியாகக் பார்க்கிறார், இது “பல பில்லியன் டொலர்களை ” திரட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்பின் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பரந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்துள்ளது.
சட்டவிரோதமாக நாட்டில் இருந்த லட்சக்கணக்கான மக்களை நாடு கடத்தியுள்ளது மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு
தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு
11 Dec, 2025 | 12:34 PM
![]()
குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களை நேற்று புதன்கிழமை (10) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடிய போதே , அவ்வாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில்அப்பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான துறைமுக நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, தகுந்த தீர்வுகளை விரைவாக பெற்று தருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்
சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்!
கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்!

கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்!
கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult), Terrorgram Collective (டெரர்கிராம்) மற்றும் Islamic State–Mozambique (மொசாம்பிக்) ஆகிய நான்கு புதிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நடவடிக்கை மூலம், இந்த அமைப்புகளின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, அவற்றிற்கு நிதி அல்லது சேவைகள் வழங்குவது குற்றமாகிறது.
குறிப்பாக, 764, Maniac Murder Cult, மற்றும் Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்டிய, வன்முறையைத் தூண்டும் வலையமைப்புகள் ஆகும். இவற்றில் 764 அமைப்பைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்த முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையானது கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க வலுவான கருவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.