3 weeks ago
விஜையும் ஒரு காரணம்.
3 weeks ago
அடுத்த மழை வர முதலே அடிச்சு முடிக்கிற முடிவோட இறங்கியிரிக்கினம்.
3 weeks ago
குற்றவாளிகள், பாலியல் விடயங்களில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள் இந்த மூவரும் தமக்கு தேவைப்படின் இனபேதம் பார்ப்பார்கள். தேவைப்படின் இணைந்தும் செயல்படுவார்கள். அன்றும் இன்றும். முன்பும் கொழும்பின் பல குடு காங்சிகள் மூவின பிரதிநிதிதுவத்தை கொண்டிருந்தன.
3 weeks ago
This is a documentary on the naval boats of the Sea Tigers: Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
3 weeks ago
அருமை கோபி, அருமை. குறிப்பாக, ஐஸ், நஞ்சாகும் உணவு, புதைகுழிகள் பற்றிய கவிதைகள் அபாரம். ஆனால் இவை ஹைகூவின் வரைவிலக்கணத்துள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை ஒத்த சென்ரியு வகை கவிதை போலவே இருக்கிறது.
3 weeks ago
ட்யூட் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர் வெற்றியை கொடுக்குமா? - ஊடக விமர்சனம் பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 17 அக்டோபர் 2025, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ட்யூட் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதன்பின் லவ் டுடூ, டிராகன் படங்களில் கதாநாயகனாக களமிறங்கினார். இந்த 2 படங்களும் இவருக்கு வெற்றியை கொடுத்தது. அதைத்தொடர்ந்து வந்துள்ள படம்தான் ட்யூட். இப்படம் கதாநாயகனாக இவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா?இதுவும் வழக்கமான கதையாக உள்ளதா? அல்லது இவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளதா? ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம், Mythri Movie Makers படத்தின் கதை என்ன? படத்தின் நாயகன், நாயகியானஅகன் மற்றும் குறளரசி, இருவரும் உறவினர்கள். அகனின் மாமன் மகள்தான் குறள். முதலில் குறள் தனது காதலை அகனிடம் கூறும்போது அவர் நிராகரித்துவிடுகிறார். பின் அகனுக்கும் குறள் மீது காதல் ஏற்படுகிறது. இருவருக்கும் திருமணம் நடக்கும் வேளையில் குறள் வேறு ஒருவரை காதலிப்பதாக கூறுகிறார். இருவருக்கும் திருமணம் நடந்ததா? நின்றதா? என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாள்வதாக ஊடக விமர்சனம் தெரிவிக்கிறது. படத்தின் ப்ளஸ் என்ன? அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரனின் நிஜ உலக பிரச்னையை நம்பத்தகுந்த முறையில் பேசுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் விமர்சனம் எழுதியுள்ளது. "இந்தப் படம் நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்ப்பூர்வமான விஷயத்தையும் கையாளுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது. "இந்த படமும் பிரதீப்பின் பயணத்தில் மற்றொரு சூப்பர் ஹிட்" என தி இந்து தமிழ் பாராட்டியுள்ளது. "படத்தின் டைட்டில் கிரெடிட்ஸ் தொடங்கும்போதே கதையும் ரகளையாக தொடங்கிவிடுகிறது. படம் முழுக்க பிரதீப்புக்காகவே பல காட்சிகளை எழுதியிருக்கிறார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். ஜென் Z தலைமுறையினரை மனதில் வைத்து எழுதப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த 2025 காலகட்டத்திலும் சாதி எப்படி தன் கோர முகத்தை சைலன்ட் ஆக காட்டுகிறது என்பதை நச் என்று சொன்ன விதத்துக்காக இயக்குநரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்." என்கிறது அந்த விமர்சனம். தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில், "ஒரு கமர்சியலான, இளம் ரசிகர்களை கவரும் படமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக நடிக்கிறார், கத்துகிறார், குதிக்கிறார் என நெகடிவ்வாக சொல்லப்பட்ட விஷயங்களையே இந்த படத்தில் தன்னுடைய பாசிட்டிவாக காட்டியுள்ளார்" என தெரிவித்துள்ளது. "மாஸ் இருந்தாலும் அதே நேரத்தில் படம் அர்த்தமுள்ளதாகவும் கையாளப்பட்டு சமநிலையை பெறுகிறது. சமீபத்தில் ஒரு சில கமர்சியல் படங்களே இதை சரியாக செய்கின்றன." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, பிரதீப் ரங்கநாதன் தனுஷ் + பிரபுதேவாவின் கலவை என விமர்சனம் தெரிவிக்கிறது. நடிகர்களின் நடிப்பு எப்படி உள்ளது? "பிரதீப் ரங்கநாதனின் உடல் மொழிக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகிவிட்டதைப் போல அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஆரவாரம் எழுகிறது. தனுஷ் + பிரபுதேவாவின் கலவை போல இருக்கும் அவருடைய நடிப்பு, எமோஷனல் காட்சிகளிலும் மிளிர்கிறது." என தி இந்து தமிழ் விமர்சனம் கூறுகிறது. தினமணி தனது விமர்சனத்தில், "நடிப்போடு சேர்த்து படம் முழுவதும் ஸ்டைலாக வலம் வந்திருக்கிறார் பிரதீப். படம் கேட்கும் ஹீரோவாக தனது வேலையை சரியாக செய்திருக்கிறார்" என தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் மமிதா பைஜு. இவரைப் பற்றி தனது விமர்சனத்தில், "திரை முழுவதும் அழகாக வலம் வருகிறார், அழும் காட்சிகளில் சோகமடைய வைக்கிறார், சீரியஸான காட்சிகளிலும் சிரிக்க வைக்கிறார், சில இடங்களில் புதுமையாக தெரிகிறார்." என தினமணி குறிப்பிட்டுள்ளது. "மமிதா பைஜுவுக்கும் கனமான கதாபாத்திரம், அதை அவரும் உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார்." என தி இந்து தமிழ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்தில் மமிதாவின் தந்தையாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இவரைப் பற்றி, "நடிப்பிலும் கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். படம் முழுவதும் சிரிக்க வைப்பதுடன் சீரியஸான வில்லனாக ரசிக்கவும் வைக்கிறார்" என தினமணி எழுதியுள்ளது. "படத்தின் மற்றொரு ஹீரோ சரத்குமார் என்று சொல்லும் அளவுக்கு, தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும், க்ளைமாக்ஸில் எமோஷனல் முகம் காட்டியும் ரசிக்க வைக்கிறார்." என தி இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள சிறிய கதாபாத்திரங்களில் வரும் அனைவருமே சரியாக நடித்து படத்திற்கு பலம் சேர்துதுள்ளதாக தினமணி விமர்சனம் கூறுகிறது. பட மூலாதாரம், X/Pradeep Ranganathan படக்குறிப்பு, கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் இசை ரசிக்க வைக்கிறதா? "சாய் அபயங்கரின் இசை படம் முழுவதும் பொருத்திப்போகிறது. பின்னணி இசையும், பாடல்களும் மனதில் நின்றுவிடுகிறது." என்கிறது தினமணி விமர்சனம். தி இந்து தமிழ் நாளிதழ், "ஊரும் ப்ளட் பாடல் படத்தில் வைக்கப்பட்ட இடம் நன்றாக இருக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசை மூலம் படத்துக்கு வலு சேர்த்துள்ளார்." என விமர்சித்துள்ளது. மற்றபடி, "நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு ஒரு கமர்ஷியல் படத்துக்கான கலர்ஃபுல் காட்சிகளை தந்திருக்கிறது." என தொழில்நுட்ப குழுவை பாராட்டியுள்ளது. அறிமுக இயக்குநர் "தனது முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன். காமெடி படம் எடுப்பதை தனது நோக்கமாக கொண்டிருந்ததால் அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார்." என தினமணி விமர்சனம் குறிப்பிடுகிறது. மேலும், "முதல் பாதி எந்த தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது. இடைவேளையை நெருங்கும்போது அரங்கம் சிரிப்பில் அதிர்கிறது. இரண்டாம் பாதியில் லேசான சறுக்கலை கொண்டிருந்தாலும் சரியான நேரத்தில் நிமிர்ந்து நின்று ரசிகர்களை திருப்திப்படுத்துகிறது" எனவும் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Mythri Movie Makers படக்குறிப்பு, இது முற்போக்கான படம் அல்ல என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. படத்தில் குறை? "இந்த கதை களம் கண்டிப்பாக சிலரை முகம் சுழிக்க வைக்கலாம் என்பதை புரிந்து வசனங்களால் அவர்களையும் சேர்த்து சமாதானம் செய்ய முயன்றிருப்பது சிறப்பு" என தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. "இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதாக உணர வைக்கின்றன. ஹீரோ 'ரொம்ப நல்லவர்' என்று ஆடியன்ஸுக்கு ஏன் திரும்ப திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை." என தி இந்து தமிழ் எழுதியுள்ளது. மேலும் "ஹீரோயினை திட்டினால் கைதட்டல் பெறலாம் என்று யோசித்து சில வசனங்கள் வைக்கப்பட்டதாக தோன்றுகிறது. அதேபோல படத்தின் க்ளைமாக்ஸும் அதீத சினிமாத்தனம் வந்து ஒட்டிக் கொண்டதைப் போன்ற உணர்வு. சற்றே மாற்றி யோசித்திருக்கலாம்." என தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல "படத்தில் பெண்களுக்கு ஆதரவான வசனங்கள் அதிகம் இருந்தாலும், இப்படம் காட்டிக்கொள்வதைப் போல முற்போக்கான படம் அல்ல." என டைம்ஸ் ஆப் இந்தியா குறிப்பிட்டுள்ளது. "இதயத்தின் வலிகளைப் பற்றிய எந்தப் படமும் சற்று இழுபறியாகத்தான் இருக்கும். அதுவும் ட்யூட், குறிப்பாக இரண்டாம் பாதியில், ஒரு கட்டத்தில் யாராவது ஒரு முடிவெடுங்கள் என்ற உணர்வு ஏற்படும்" என தி இந்து விமர்சனம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4z5el9vpo
3 weeks ago
Published By: Vishnu 17 Oct, 2025 | 08:37 PM மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை. கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர். யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர். பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர். பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர். தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது. ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/228027
3 weeks ago
Published By: Vishnu
17 Oct, 2025 | 08:37 PM

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வலி, வடக்கில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மக்களின் காணிகளை மக்களுக்கே கையளிப்போம் என ஆட்சி அமைத்தவர்கள், இன்று ஆட்சி அமைத்து ஒரு வருட காலம் கடந்து காணிகளை மக்களிடம் கையளிக்கவில்லை.
கடந்த அரசாங்கம் கையளிக்க தயாராக இருந்த காணிகளையே அவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் மக்களிடம் கையளித்தனர்.
யாழ்ப்பாணம் - பலாலி வீதியை முழுமையாக திறந்து விட்டதன் ஊடாக உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள பலாலி காணிகளை விடுவித்தது போன்று காட்டுகின்றனர்.
பலாலி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடந்த 35 வருட காலத்திற்கு மேலாக வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். அவர்களின் சொந்த இடங்கள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. அவர்கள் தங்கள் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பலாலி இராணுவ வைத்தியசாலையை சூழவுள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி வைத்தியசாலை கட்டடங்களை இராணுவத்தினர் கட்டி வருகின்றனர்.
தற்போது போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த கீரிமலையில் ரேடார் அமைக்க போவதாக கூறி 2 ஏக்கர் தனியார் காணியை கடற்படை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கிறது.
ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியது போன்றே மக்களின் காணி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.
https://www.virakesari.lk/article/228027
3 weeks ago
17 Oct, 2025 | 03:58 PM (எம்.மனோசித்ரா) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர். இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளிலும் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227993
3 weeks ago
17 Oct, 2025 | 03:58 PM

(எம்.மனோசித்ரா)
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இராணுவத்தின் முக்கிய வெடிமருந்து மற்றும் ஆயுத களஞ்சிய நிலையங்களைப் பார்வையிட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆகியோரும் இதில் கலந்துக் கொண்டனர்.
இதன் போது, பிரதி அமைச்சர் வெடிமருந்து களஞ்சிய தொகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த வளாகத்தின் தற்போதைய செயற்பாடு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை மதிப்பாய்வு செய்தார். சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்ட உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார்.
இதன்போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், அவசரகால நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தேவைப்படும் திட்டங்களை உருவாக்குதல், வெளிப்புற நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சீரான செயற்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்வதற்காக நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு, ஏனைய சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் தேசிய நோக்கங்களுக்கு ஏற்ப நாடலாவிய ரீதியில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளிலும் பாதுகாப்பைக் கண்காணிக்கவும், மதிப்பிடவும், மேம்படுத்தவும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


https://www.virakesari.lk/article/227993
3 weeks ago
121 ஓட்டங்கள் பெறவேண்டும். இலங்கை, கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில், 3 விக்கட்டுகளை இழந்திருக்காவிடில், இலக்கு 121ஜ விட இன்னமும் அதிகமாக இருந்திருக்கும். அவர்களின் விதி அப்பிடி
3 weeks ago
அண்ணை, Chrome, Edge இரண்டிலும் தமிழிலும் வழக்கத்திற்கு மாறாக அகலமாகவும் உள்நுழையும் பகுதி காணப்படுகிறது. நான் உள்நுழைய ஈமெயிலை தட்டச்ச அது தமிழ் எழுத்தாக மாறிக்காண்பிக்கிறது. Firefox சரியாக உள்ளது. எனது browser ஏதும் மாற்றம் செய்யவேண்டுமா?
3 weeks ago
குட்டிசிறி மோட்டார் படையணி நிழற்படங்கள் 58 இதற்குள் உண்டு: http://aruchuna.com/categories.php?cat_id=34&page=3
3 weeks ago
மீள் வரவுக்கு நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள் எம்முடன்.
3 weeks ago
உங்கள் கவலை உங்களுக்கு 😃 இலங்கை அணி உண்மையிலேயே பாவம். அவர்கள் ஏலவே தன்னம்பிக்கை இல்லாத அணி. போட்டிகளில் விளையாடினாற்தான் உற்சாகம் வரும். தோற்றாலும் விளையாடித் தோற்கவேணும்.
3 weeks ago
அப்ப தமிழ் பிரதிநிதிகள் தான் "எய்தவன்" இனப்படுகொலையாளர்களான அரசு "அம்பு" என்கிறீர்களா😂?
3 weeks ago
செவ்வந்தியும் ஊடகங்களும் --- ------------- *குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்புக் கூறுமா? *வெள்ளைத் துணியால் தலையை போர்த்தும் நடைமுறை தவிர்க்கப்பட்டது ஏன்? ---------------------- கொலை செய்த அல்லது கொலைக்கு நேரடியாக உதவி செய்ததாக நம்பப்படும், குற்றவியல் குற்றம் (Criminal Offence) புரிந்த கைதிகளை பொலிஸார் அழைத்து வரும் போது, அவர்களின் தலையை வெள்ளைத் துணியால் மூடிக் கொண்டு வருவது வழமை. ஆனால், இலங்கை குற்றப் புலனாய்வு பொலிஸார் செவ்வந்தி உள்ளிட்ட கைதிகளை, நேபாளத்தில் இருந்து ஆடம்பரமான முறையில் அழைத்து வந்திருக்கின்றனர் போல் தெரிகிறது. செவ்வந்தி விமானத்தில் இருந்து இறங்கி வரும் முறையும், விமான நிலைய ஆசனத்தில் அமர்ந்திருந்து சிரித்துக் கொண்ட முறையும், கொலைக் குற்ற சந்தேகநபர் என்ற உணர்வை மறைத்திருக்கின்றன. அத்துடன் அவர் தன்னுடைய பயணப் பொதியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் போன்று கொண்டு வருகிறார். இராணுவத்தினரும் பொலிஸாரும் செவ்வந்தியை சுற்றி பாதுகாப்பு வழங்கிக் கொண்டு வருகின்றனர். சில பிரதான ஊடகங்களில் இந்த ஆடம்பரமான காட்சி வெளியாகியுள்ளது. அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளங்களிலும் அக் காட்சி வெளியாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் அதனை பார்த்துமுள்ளனர். நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டவர், பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது வேறு. ஆனால் --- அவரை கொலை செய்வதற்கு நேரடியாக களம் இறங்கி ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கைது செய்து கொண்டு வரும்போது, கைதிகளுக்கான நடைமுறை விதிகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? இந்த நடைமுறை செவ்வந்தி கைது விவகாரத்தில் பின்பற்றப்படவில்லையே! இங்கே குற்றவியல் பொலிஸாரும் கொழும்பில் உள்ள சில பிரதான ஊடகங்களின் சில செய்தியாளர்களும் தவறு இழைத்துள்ளனர் என்றே பொருள் கொள்ள முடியும்... சமூக ஊடகங்கள் பொறுப்பின்றிச் செயற்படுகின்றன என்று இலகுவாக குற்றம் சுமத்த முடியும். ஆனால் -- செவ்வந்தியை அழைத்து வந்த காட்சிகளை வீடியோ எடுப்பதற்கும் செய்தி சேகரிப்பதற்கும் பிரதான ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யூடியூபர்ஸ் அங்கு செல்லவில்லை. பிரதான ஊடகங்களில் வெளியான காட்சிகளை செம்மையாக்கம் (Editing) செய்தே சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை பிரசுரித்திருந்தன. சில சமூக ஊடகங்கள் அக் காட்சிகளை AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேலும் ஆடம்பரமாகவும் நகைச்சுவையாகவும் அதனை எல்லோரும் சிரித்து ரசிக்கும் வகையிலும் காட்சிப்படுத்தியிருந்தன. இது சமூகத்தில் பிழையான கற்பிதத்தை கொடுத்துள்ளது --- அதாவது --- கொலை செய்து விட்டுத் தப்பினாலும் கைது செய்யப்படும் போது, அரச மரியாதை போன்ற உணர்வுகள் கிடைக்கும் என்ற ஒரு தவறான புரிதலை அக் காட்சிகள் சமூகத்தில் விதைக்கின்றன. அது மாத்திரமல்ல --- கொலை என்பது மிக இலகுவான காரியம் என்ற பார்வையும், இளைஞர்கள் - பெண்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், செவ்வந்தியின் வயது 26. அத்தோடு ---- கொலை செய்தால் அல்லது கொலைக்கு உதவி செய்து ஓடி ஒழித்துக் கொண்ட பின்னர் கைது செய்யப்பட்டால், அரச மரியாதையின் தரத்துக்கு பிரதான ஊடகங்களும் தங்களை காண்பிக்கும் என்ற தவறான புரிதலும் சமூகத்தில் மேலோங்கியுள்ளன. அதேநேரம், யூடியுபர்ஸ் ஊடக ஒழுக்க விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அல்லது அவர்களை ஊடக ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படுமாறு கோரவும் முடியாத ஒரு சூழல் இருக்கும் நிலையில் ---- ------ சில பிரதான ஊடகங்கள் செவ்வந்தி விவகாரத்தில் பொறுப்பின்றி செயற்பட்டமை கண்டனத்துக்குரியது. பொலிஸாரிடம் தனியான ஊடகப் பிரிவு உள்ளது. அந்த ஊடகப் பிரிவினரால், செவ்வந்தியும் ஏனைய கைதிகளும் அழைத்து வரப்பட்ட காட்சிகளை பதிவு செய்து, பின்னர் பிரதான ஊடகங்களுக்கு அதனை வழங்கியிருக்கலாம். அல்லது வெள்ளைத் துணியால் முகத்தை மூடிக் கொண்டு வந்திருக்கிலாம். ஆனால் -- பொலிஸார் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். குற்றப் புலனாய்வு திணைக்களம் இத் தவறுக்கு பொறுப்புக் கூறுமா? அதேநேரம், மக்களுக்கான அரசாங்கம் என்று மார் தட்டும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இதற்கு பொருத்தமான பதில் தருமா? விளக்க குறிப்பு --- பல மாதங்களாக வியூகம் வகுத்து செவ்வந்தியை கைது செய்ததாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தமக்குள் பெருமைப்படக் கூடும். ஆனால் செவ்வந்தி அழைத்து வரப்பட்ட முறையானது, குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அப் பெருமைகளை மலினப்படுத்தியுள்ளது எனலாம். செவ்வந்தியின் இயற்கை அழகுக்கு ஏற்ப சமூக ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவமும் கைதுக்கான நோக்கத்தை தரம் குறைத்துள்ளது என்றே பொருள் கொள்ள முடியும்... அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0ZMDz5MhEf8WbyEAjBzoMhept4BnN1SFaRcLnJgsjrjkNU4ehvECDQZ1fvudjHkPel&id=1457391262
3 weeks ago
மீண்டும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி, கோபி. கைக்கூக்கள் நன்றாக இருக்கின்றன................❤️.
3 weeks ago
இலங்கை நேரம் 9.10 மணிக்கு 20 ஓவர் போட்டியாக, போட்டி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
3 weeks ago
அட அது மட்டுமா? களம் கறுப்பா? சிகப்பா?வெள்ளையா? இப்படி ஐயாவின் ஆராச்சி வேற லெவல்.