Aggregator

அமெரிக்காவுக்கு அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதியை நிறுத்தியது சீனா!

3 weeks ago
அமெரிக்காவின் பலவீனத்தில் குறி வைக்கும் சீனா - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Reuters கட்டுரை தகவல் ஆஸ்மண்ட் சியா பிபிசி செய்தியாளர் 18 அக்டோபர் 2025, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம், சீனாவின் வர்த்தக அமைச்சகம் '2025-ஆம் ஆண்டின் அறிவிப்பு எண். 62' என்ற பெயரில் ஒரு ஆவணத்தை வெளியிட்டது. ஆனால் இது வெறும் அதிகாரப்பூர்வ செய்தி மட்டுமல்ல. அமெரிக்காவுடன் சீனா செய்து கொண்டுள்ள வரி ஒப்பந்தத்தையே இது உலுக்கியுள்ளது. இந்த அறிவிப்பு, சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை விரிவாக எடுத்துரைத்துள்ளது. இது அரிய தாதுக்களின் உலகளாவிய விநியோகத்தில், சீனாவின் பிடியை இறுக்கும் ஒரு நடவடிக்கையாகும். அமெரிக்காவுடனான வர்த்தகப் போரில் சீனா எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பதையும் இந்தச் செய்தி டொனால்ட் டிரம்பிற்கு நினைவூட்டியுள்ளது. ஸ்மார்ட்போன்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்தின் உற்பத்திக்கும் இன்றியமையாததாக இருக்கும் அரிய தாதுக்களை எடுப்பதில் சீனா கிட்டத்தட்ட ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், இனி வெளிநாட்டு நிறுவனங்கள் சிறிய அளவிலான அரிய தாதுக்களைக் கொண்ட பொருட்களை ஏற்றுமதி செய்யக் கூட சீன அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் மற்றும் அவை எதற்காகப் பயன்பட போகின்றன என்பதையும் அறிவிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்குப் பதிலடியாக, சீனப் பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிப்பதாகவும், முக்கிய மென்பொருட்கள் மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் அச்சுறுத்தினார். "இது சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை. அவர்கள் முழு சுதந்திர உலகின் விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்துறை கட்டமைப்புகளை நோக்கி ஒரு மிரட்டலை விடுத்துள்ளனர், நாங்கள் அதை ஏற்கப் போவதில்லை" என்று அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் அரிய தாதுக்கள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்கா 'வேண்டுமென்றே தேவையற்ற தவறான புரிதலையும் பீதியையும் தூண்டிவிட்டதாக' வியாழக்கிழமையன்று (அக்டோபர் 16) சீனா கூறியது. "ஏற்றுமதி உரிம விண்ணப்பங்கள் இணக்கமானவையாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் இருந்தால், அவை அங்கீகரிக்கப்படும்" என்றும் சீன வர்த்தக அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறினார். இந்த வாரம், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களும் ஒன்றுக்கொன்று கப்பல்களுக்கு புதிய துறைமுக வரிகளை விதித்தன. மே மாதத்தில் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகள் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தம் மூலம் 'வரிகள் நடைமுறைக்கு வருவது நிறுத்தப்பட்டிருந்தது'. அதன் பிறகு நிலவி வந்த பல மாத அமைதி சமீபத்திய பதற்றங்களால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதியில், டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதில் 'அரிய தாதுக்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்' சீனாவிற்கு மேலாதிக்கத்தை அளிக்கும் என நிபுணர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்க விநியோகச் சங்கிலிகளில் உள்ள பலவீனங்களைக் குறிவைப்பதால், அவை 'வர்த்தக அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கும்' என்று ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக விரிவுரையாளர் நவோயிஸ் மெக்டோனாக் கூறினார். "அமெரிக்கா விரும்பிய பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை, இந்த நிகழ்வு உண்மையில் பாதித்துள்ளது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, எப்-35 போன்ற போர் விமானங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் மிக முக்கியமானவை. அரிய தாதுக்களின் தேவை சோலார் பேனல்கள், மின்சார கார்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் உற்பத்திக்கு அரிய தாதுக்கள் அவசியம். உதாரணமாக, ஒரு எப்-35 போர் விமானத்திற்கு அதன் ஸ்டெல்த் பூச்சுகள், மோட்டார்கள், ரேடார்கள் மற்றும் பிற கூறுகளுக்கு 400 கிலோவிற்கும் அதிகமான அரிய தாதுக்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார கார் மோட்டார்களில் காந்தங்களுக்குத் தேவையான உலோகங்களின் உலகளாவிய விநியோகத்தில் தோராயமாக 70% சீனாவின் அரிய தாதுக்கள் ஏற்றுமதியிலிருந்து வருகிறது என்று 'நியூலேண்ட் குளோபல் குழுமத்தின்' ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நடாஷா ஜா பாஸ்கர் கூறினார். உலகளாவிய அரிய தாதுக்களை எடுக்கும் திறனில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடுமையாக உழைத்துள்ளது என்று சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கனிம ஆராய்ச்சியாளர் மெரினா ஜாங் கூறினார். "சீனா இந்தத் துறையில் கணிசமான திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. அதன் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்களின் குழு, அதன் போட்டியாளர்களை விட பல மடங்கு முன்னேறியுள்ளது." என்கிறார். அரிய தாதுக்களைப் பெறுவதில் சீனாவைச் சார்ந்திருப்பதற்கு மாற்றாக ஒன்றை உருவாக்க, அமெரிக்காவும் பிற நாடுகளும் பெருமளவில் முதலீடு செய்து வரும் நிலையில், அந்த இலக்கை அடைவதில் இருந்து அந்நாடுகள் இன்னும் வெகு தொலைவில் உள்ளன. ஆஸ்திரேலியாவில் அரிய தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால், சீனாவுக்கு சவால் விடும் நாடாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது. ஆனால் அதன் உற்பத்தி உள்கட்டமைப்பு இன்னும் வளர்ச்சியடையாததால், தாதுக்கள் செயலாக்கம் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்ததாக உள்ளது என்று ஜாங் கூறுகிறார். "அமெரிக்காவும் அதன் அனைத்து நட்பு நாடுகளும் அரிய தாதுக்கள் செயலாக்கத்தை தேசிய திட்டமாக மாற்றினாலும், சீனாவின் இடத்தை எட்ட குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று நான் கூறுவேன்." என்கிறார். "சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை" புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதத்தில் சீனா எடுத்த நடவடிக்கைகளை விரிவுபடுத்துகின்றன. அப்போதைய நடவடிக்கைகள் உலகளாவிய விநியோக நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான தொடர் ஒப்பந்தங்கள் அந்த நெருக்கடியை சற்று தளர்த்தின. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் சீன அரிய தாதுக்களின் ஏற்றுமதி 30%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளதாக சீனாவின் சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் ஏற்றுமதி வீழ்ச்சியால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனாவின் வருடாந்திர 18.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் அரிய தாதுக்கள் மிகச் சிறிய அளவே பங்களிக்கின்றன என்று நியூயார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சோபியா கலன்ட்சாகோஸ் கூறினார். சில மதிப்பீடுகள், அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளின் மதிப்பை சீனாவின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 0.1% க்கும் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன. சீனாவிற்கு அரிய மண் தாதுக்களின் பொருளாதார மதிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், அவற்றின் மூலோபாய மதிப்பு 'மிகப்பெரியது' என்றும், அவை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் சீனாவிற்கு அதிக செல்வாக்கை அளிக்கின்றன என்றும் கலன்ட்சாகோஸ் கூறுகிறார். சீனாவை 'துரோகி' என்று குற்றம்சாட்டிய போதிலும், பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகளைத் திறந்து வைத்துள்ளார் அமெரிக்காவின் ஸ்காட் பெசென்ட். "சீனா பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்று நான் நம்புகிறேன், இதன் மூலம் பிரச்னையின் தீவிரத்தைத் தணிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்று பெசென்ட் கூறினார். வியாழக்கிழமை அமெரிக்க தனியார் குழுமமான பிளாக்ஸ்டோனின் தலைமை நிர்வாகி ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேனுடனான சந்திப்பின் போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ-உம் பேச்சுவார்த்தைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார். "இரு தரப்பும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும், வேறுபாடுகளை முறையாகத் தீர்க்க வேண்டும் மற்றும் சீன-அமெரிக்க உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்" என்று வாங் கூறியதாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. பேராசிரியர் கலன்ட்சாகோஸின் கூற்றுப்படி, அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்குத் ஏற்ற நடவடிக்கைகளை சீனா சமீபத்தில் எடுத்துள்ளது. அரிய தாதுக்கள் ஏற்றுமதிகளைக் குறைப்பதன் மூலம், ஒரு சாதகமான தீர்வைப் பெறும் வகையில் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க, சீனா ஒரு வலுவான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய உத்தியைக் கண்டறிந்துள்ளது என்று பாஸ்கர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சீனாவைன் 'நம்ப முடியாது' என்று அமெரிக்க உயர் அதிகாரிகள் ஸ்காட் பெசென்ட் மற்றும் ஜேமிசன் கிரீர் கடுமையாக சாடியுள்ளனர். சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாவோ யாங், 'குறுகிய காலத்திற்கு சீனாவின் கை ஓங்கி உள்ள நிலையில், அமெரிக்காவிடமும் சில மூலோபாய உத்திகள் இருக்கலாம்' என்று நம்புகிறார். அமெரிக்கா- சீனா வர்த்தகப் போர் சீனாவின் உற்பத்தியாளர்களை கடுமையாகப் பாதித்துள்ளதால், அமெரிக்கா வரிகளைக் குறைக்க முன்வந்தால், இது சீனாவிற்கு சாதகமாக இருக்கும் என்று பேராசிரியர் ஜியாவோ கூறினார். சீனாவின் பொருளாதாரம் அது தயாரிக்கும் பொருட்கள் மற்றும் ஏற்றுமதிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தையே சார்ந்துள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 27% குறைந்துள்ளதாகக் காட்டுகின்றன. சீனாவின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளைத் தடுக்க, அமெரிக்கா கூடுதல் வர்த்தகக் கட்டுப்பாடுகள் மூலம் சீனாவை அச்சுறுத்தக்கூடும் என்று பேராசிரியர் மெக்டோனாக் கூறினார். உதாரணமாக, அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் உயர்நிலை குறைக்கடத்திகள் (semiconductor) தேவையை குறிவைத்து, என்விடியாவின் (Nvidia) மிகவும் மேம்பட்ட சிப்களை சீனா வாங்குவதைத் தடுத்துள்ளது. ஆனால் அது குறைந்த அளவிலான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவின் தொழில்நுட்பத் துறையை குறிவைக்கும் நடவடிக்கைகள் அதன் வளர்ச்சியை தாமதப்படுத்தும், ஆனால் 'அதை முழுமையாக நிறுத்திவிடாது' என்று பேராசிரியர் மெக்டோனா கூறினார். சீனா தனது நீண்டகால இலக்குகளை அடைவதில் சில சிரமங்களை சந்திக்கவும் தயாராக உள்ளது என்பதை அதன் சமீபத்திய பொருளாதார உத்தி மூலம் காட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். "அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் கீழ் அதிக செலவுகள் ஏற்பட்டாலும் சீனாவால் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் சீனா இந்த அரிய தாதுக்கள் விநியோகங்களைத் துண்டித்தால், அது உண்மையில் அனைத்து நாடுகளின் தொழில்துறைகளையும் பாதிக்கும். அதுதான் பெரிய வித்தியாசம்." என்கிறார் பேராசிரியர் மெக்டோனா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkvdn5y7mo

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

3 weeks ago
13 ம் திருத்த சட்டத்தனுன் மூலம் மாகாணசபைகள் அமைக்கபடுவதை மட்டும் தான் அண்ணன் கஜேந்திரகுமார். எதிர்கிறார். மாகாணசபை தேர்தலையோ அதில் வரும் பதவிகளையோ அல்ல. மாகாணசபை தேர்தல் வந்து நம்மவர்களை போட்டியிட வைத்தால் தானே நம்மோடு நாலு பேர் நிப்பாங்க. அப்பப்ப போராட்டம் என்று நாம் அறிவித்தால் வந்து கோஷம் போடுவாங்க. இது கூட தெரியாமல் நீங்க ஏம்பபா சலூன் கடைக்கு வாறீங்க.

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"

3 weeks ago
சிறப்பான ஆய்வு. ஆனால், எமது மூளைக்குள் புகுந்துள்ள ஆரியமாயையில் இருந்துவிடுபடுதல் என்பது சாத்தியமா(?)தெரியவில்லை. இதுபோன்ற ஆய்வுநிலையிலிருந்து சிந்திக்கும் நிலையில் தமிழினம் இருக்கிறதா? அடுத்த தலைமுறையில் கடவுளை வணங்கும் தொகை குறைந்து வருவதால் ஆரியமாயையில் இருந்து விடுபடக்கூடும். அதேவேளை தமிழுக்கும் சைவத்துக்கும் இடையேயான உறவுநிலை கரணியமாக எமது பண்பாட்டோடு கலந்துள்ள கோவில் வழிபாடுகள் மக்களின் ஒன்றிணைவுக்கான தளமாக உள்ளமையையும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் உரைகள் ஊடாக ஒரு குறிப்பிட்டு வீதத்தினர்ஆரியமாயையுள் கட்டுண்டு இருக்கவே செய்வர்.அதனைவிடக் கொடுமை அம்மன்கோவிலென்று போனால் ஐயப்பன் வரை உறையும் இடமாக உள்ளது. பல்பொருள் அங்காடிகள்போல் எந்துநாட்டு, எந்தக் கடவுளையும் வழிபடும் இடமாக புலத்திலே உள்ள கோவில்களின்நிலை. இராவணன் மீதான தெளிவான புரிதலை வளத்தெடுப்பதன் ஊடாக ஒரு தேடலை ஏற்படுத்த முடியும். ஒரு சில இளையோரிடம் இராவணன் மீதான ஈர்ப்பும் இல்லாமலில்லை. தமிழர்கள் தோற்றுப்போய் நிற்கின்ற இடமாக இருப்பது கருத்தியல் தளமே. பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. தங்கள் நேரத்துக்கும் ஆக்கத்திற்கும் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks 1 day ago
பனையால் விழுந்தது விஜைதான் அதிலென்ன சந்தேகம். 41 உயிர்கள்மேல் யார் பழி கூறினார்கள்? அனேக யாழ்கள உறவுகள் அவர்களின் இறப்புக்கு அனுதாபமும் இரங்கலும் தெரிவித்து, இறந்தோரின் உற்றார் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து தேற்ற முயன்றதுதான் நிகழ்வு.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks 1 day ago
“வேண்டாப் பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால்பட்டால் குற்றம்”. நாடகம் நடக்கட்டும். யாழ்கள ஆரம்பத்தை நோக்கினால் புரியும், அனேகமாக அநீதியான அழிவுகளைக்கண்டு மனம் நொந்தோரை ஆறுதல்படுத்தும் பதிவுகளையே உறவுகள் பதிந்தார்கள். இன்றைய நிலையில் பாரிய மாற்றங்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது.😢

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 1 day ago
செம்பாட்ட‌ன் அண்ணாவும் நானும் இல‌ங்கை ம‌ற்றும் ம‌க‌ளிர‌ ந‌ம்பி ஆர‌ம்ப‌ சுற்று போட்டியில் ஏமாந்து விட்டோம் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போவின‌ம் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்...........................

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

3 weeks 1 day ago
வரலாற்றில் வெற்றிகரமான பெரும்பாலான அரசியல் தீர்வுகள் தொடர்சசியான பரஸ்பர நம்பிக்கைகளை கட்டியெழுப்புவதன் மூலமே நடந்துள்ளன. ஆரம்பத்திலே 100 உத்தரவாதம் என்று கூறுவதே குழப்பும் தோக்கத்தை கொண்டது. துரதிஷரவசமாக அந்த நோக்கம் வெற்றியளித்தது. ஆனால் தமிழர்கள் தான் தோல்வியடைந்தனர். வாழ்கையில் சமூகம் சார்ந்த விடயங்கள் அனைத்தும் நம்பிக்கையின் அடிபடையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன. எதையுமே நம்பாமல் அவநம்பிக்கையுடன் எதையும் பார்பபவன் இறுதியில் அதன் விளைவாக வாழ்கையை இழந்து புலம்புவான்.

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

3 weeks 1 day ago
10.000 இற்கும் மேற்பட்ட மக்கள் வரலாம் என்று தான் அனுமதி கேட்டதாம் விஜய் அப்படியான ஒரு மனிதன் அல்ல கூட்ட நெரிசல் ஏற்படுவதை அவர் விரும்புவதில்லை

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

3 weeks 1 day ago
இரண்டு கிழமையில்.... இலங்கையில் ஒரு பவுண் தங்கம், ஒரு லட்சத்தி நான்காயிரம் (104,000) ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 weeks 1 day ago
இனி வ‌ரும் போட்டிக‌ளில் நான் இல‌ங்கை அணிய‌ தெரிவு செய்ய‌ல‌ இந்தியா இனி வ‌ரும் போட்டிக‌ளில் வென்றால் நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் சிமி பின‌லுக்கு போகும்..............................

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

3 weeks 1 day ago
பாதாள உலக குழுக்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். இதை அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள். அண்மையில் இந்தோனேசியாவில் பிடிபபட்ட, பாதாள குழு தலைவன் "கெஹல்பத்தர பத்மே"... இரண்டு படத்திலும் மகிந்தவிற்கு வலது புறம் நிற்கிறார். கெஹல்பத்தர பத்மே.... மகிந்தவுடன் நெருக்கத்தில் இருக்கும் படம். மகிந்த ➡ கெஹல்பத்தர_பத்மே ➡ செவ்வந்தி இதான் உண்மை என்பதற்கு, இந்தப் புகைப்படம் போதுமே. Deepan Djr