Aggregator

தாமதமாக வந்த விஜய் தான் காரணம்..

2 weeks 5 days ago
ஆயிரம்களையே வாழ்வில் காணாத காண முடியாத மக்களுக்கு லட்சங்களை காண்பது என்பதும் அதற்கு மாற்றாக இறந்தவர் கூட சிறிதாக தெரிவதும் ஏற்கக்கூடாத ஆனால் பரிதாபகரமாக உண்மை தான்.

'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

2 weeks 5 days ago
Facebook. இல். அஞ்சலி. செலுத்துகிறார்கள். நானும். பங்குகொண்டேன். Ira News com. இல். இருக்கிறது. படத்துடன். 80. வயது. என்றும். போட்டுள்ளார்கள். ஏன். பொய். செய்திகளை. பரப்புகிறார்கள். என்று. தெரியவில்லை. பாவம். மனிசி. உயிருடன். மரணசடங்கு. செய்கிறார்கள். உங்கள். தகவலுக்கு. நன்றி.

"தீபாவளியை நாம் கொண்டாடத்தான் வேண்டுமா? ராமனை தெய்வமாக்க வேண்டுமா?"

2 weeks 5 days ago
பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. வேதனைக்குரியது அதனாலதான் எனது மூன்ர்றவது விரிவான கட்டுரை இப்ப தொடர்ந்துகொண்டு இருக்கிறது தமிழிலும் ஆங்கிலத்திலும் [1] மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / 44 parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [2] "The truth & false in Mahavamsa and the historical & scientific evidences" / 32 Parts / ஏற்கனவே பதியப்பட்டுள்ளது [3] "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English /144 - 146 parts / 34 பகுதி மட்டும் இன்றுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது , மற்றவை தொடரும் / இது மேலும், விரிவாக்கப்பட்ட, ஓழுங்குமுறையில் அமைந்த கட்டுரையாகும் நன்றி

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 5 days ago
ஆண்கள்… பேரீச்சம்பழம் சாப்பிட்டால், இடுப்பில் நல்ல பலம் வரும் என்று சொல்கிறார்கள். 💪 அரபுக்காரர் எல்லாரும் ஐந்து பெண்டாட்டியை வைத்து சமாளிப்பதன் இரகசியம் பேரீச்சம்பழம் தான். ❤️ நாங்கள் தான்…. சின்ன 🧅 வெங்காயம் 🧄 போதும் என்று, எமது வாழ்க்கையை வீணடித்து விட்டோம். 🤣

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 5 days ago
1988 முதல் 1990 வரை தெற்கில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சி தமிழர்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுக்கவே இந்திய இராணுவம் வருகிறது, ஆகவே அவர்களை திருப்பியனுப்புங்கள் என்று கோரியே நடத்தப்பட்டது. ரணிலுக்கும் தலைவருக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட, இடைக்கால நிர்வாக சபை, சமாதானத்திற்கான யுத்த நிறுத்தம் என்று அனைத்தையும் சந்திரிக்காவோடும் தெற்கின் தீவிர இனவாதிகளுடனும் சேர்ந்து எதிர்த்ததே இதே அநுரவின் கட்சிதான். 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இணைக்கப்பட்ட வடக்கையும் கிழக்கையும் நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின் மூலம் 2007 ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி பிரித்துப் போட்டதே அநுரவின் கட்சிதான். மகிந்தவின் போர்முயற்சிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவினை வழங்கி வந்து, தெற்கின் இனவாதத் தீயினை அணையாது வளர்த்து, தனது ஆதரவாளர்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு உதவி புரிந்து, தமிழர்களின் விடுதலை நம்பிக்கையினை நிரந்தரமாகவே அழித்துவிட கங்கணம் கட்டிச் செயற்பட்டதும் அதே அநுரவின் கட்சிதான். போர்க்குற்றங்கள் நடக்கவில்லை, இனக்கொலை என்றே ஒன்று இல்லை, கொல்லப்பட்டதெல்லாம் பயங்கரவாதிகள் என்று இன்றும் நியாயம் கற்பிப்பதும், எமது இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம், சர்வதேச விசாரணை என்பதை ஏற்கமாட்டோம், வடக்குக் கிழக்கும் இணைய முடியாது, இருப்பது வெறும் பொருளாதாரப் பிரச்சினையே, இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று இன்றும் கூறுவதும் அநுரவின் கட்சிதான். அவரது அரசு இன்று செய்வது ஊழல்வாதிகளை மக்கள் முன் காட்டி, அரசியலில் தமது எதிரிகளை பலவீனப்படுத்துவதும் , தாம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை உறுதிசெய்துகொள்வதும்தான். அநுரவிற்குக் காவடி தூக்கும் தமிழ்த் தேசியவாதிகள் அவர் முன்வைக்கவிருக்கும் தமிழருக்கான தீர்வு என்னவென்பதை அவரிடம் எப்போது கேட்கப் போகிறார்கள்? வடக்குக் கிழக்கு இணைப்பு எனும் பேச்சிற்கே இடமில்லை என்று அவர் அடிமடியில் கை வைத்திருக்கும் நிலையில் அவரைத் தமிழர்கள் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? தெற்கின் ஊழல்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் தமிழர்களின் பிரச்சினைக்கும் இடையே இருக்கும் தொடர்புகள் என்ன? அல்லது தெற்கினை தூய்மைப்படுத்திவிட்ட உடனேயே தமிழருக்கான தீர்வைத் தரப்போகிறேன் என்று அநுர எங்காவது சொன்னாரா? இரத்திணச் சுருக்கம்!

கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'

2 weeks 5 days ago
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05 பகுதி: 05 - குமண தேசிய பூங்கா (Kumana National Park) & வெலிகம மற்றும் மிரிஸ்ஸா அருகம் விரிகுடாவிலிருந்து தெற்கே முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில், காட்டுக்குள் அமைதியாக குமனா தேசிய பூங்கா இருந்தது. இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதி, சிறுத்தைகள் மற்றும் பறவைகளுக்கு பெயர் பெற்றது. இப்பூங்கா, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்து மற்றும் யால தேசிய பூங்காவிலிருந்து கும்புக்கன் ஓயாவால் [Kumbukkan Oya] பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. "யானை! யானை!" என்று இசை கத்தினான், ஆனால் எதுவும் எங்கும் கண்ணில் படவில்லை. "யானை அல்ல. அது பறவைகள்!" என்று தன் சகோதரனைத் ஜெயா திருத்தினாள். ஜெயா தன் குறிப்பேட்டை [notebook] நேராக்கினாள், "நான் அறிவியல் தரவுகளைப் இங்கு பதிவு செய்வேன்." என்றாள். பெலிகன்கள் [கூழைக்கடா / pelicans], வர்ணம் பூசப்பட்ட நாரைகள், மயில்கள் மற்றும் சாம்பல் நிற நிழல்கள் போல நகரும் யானைக் குடும்பத்துடன் அங்கு இருந்தது. ஆனால் இந்தக் காடும் வரலாற்றுடன் எரிந்து கொண்டிருந்தது. 1985 முதல் 2003 வரை போரினால் மூடப்பட்டது. பின்னர் 2004 சுனாமியில் மூழ்கியது செங்கால் நாரை [ஃபிளமிங்கோக்கள் / Flamingos] இன்று மறைந்துவிட்டன, மக்கள் ஓடிவிட்டனர். ஜெயா கேட்டாள், “தாத்தா... மனிதர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள், ஆனால் விலங்குகள் ஒன்றாக வாழ்கின்றன?” தாத்தா கிசுகிசுத்தார், “ஏனென்றால் விலங்குகள் பேராசையால் வாழ்வதல்ல, சமநிலையால் வாழ்பவை.” தூரத்தில் ஒரு மயில் நடனமாடியது, அதன் இறகுகள் ரத்தினங்களைப் போல மின்னின. குழந்தைகள் சிரித்தனர். ஒரு கணம், காடு கூட சிரித்தது. தாத்தா மெல்ல சிரித்தார். மூன்று பேரப்பிள்ளைகளும் அது என்ன செங்கால் நாரை என்று கேட்டனர். தாத்தாவுக்கு சத்தி முத்திப் புலவர் ஞாபகம் வந்தது. அது மட்டும் அல்ல, அந்த பாடல் பாடும் பொழுது, அவரினதும் அவரின் மனைவியின் நிலையும், அங்கு வாழ்ந்த மக்களையும் காட்டுவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரும் புலவர், பாண்டி நாட்டை அடையும் போது பெருமழையில் மாட்டிக் கொண்டார். உடம்பை மூடி போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் விதியை நொந்து, தம் மனைவி பிள்ளைகளை எண்ணி வருந்தினார். அப்போது வானில் செல்லும் நாரையைப் பார்த்துத் தம் நிலையைப் பாடலாகப் பாடினார். இங்கே, பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே என்று கூறி, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற என் மனைவியைப் பார்த்து, என் நிலையைக் கூறுவாயாக! என்று விட்டு நிலைமையைச் சொல்லி, பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள் என்று முடிக்கிறார். தெற்கே, வெலிகமை அல்லது வெலிகாமம் (Weligama) கடற்கரை மிகவும் பிரபலமான சர்ஃபிங் [surfing] இடங்களில் ஒன்றாகும், அங்கு நாள் முழுவதும் அலைகளைப் பிடிக்கலாம். அதேநேரம், அதிக அனுபவம் வாய்ந்த சர்ஃபராகளுக்கு [surfer], மிடிகம கடற்கரையின் அலைகள் மிகவும் சவாலானதாக இருக்கும். தாத்தாவும் குழந்தைகளும் அங்கு சென்ற பொழுது, வெலிகமவின் ஸ்டில்ட் மீனவர்கள் [கோல் மீன்பிடித்தல் / stilt fishermen] கடலில் சிலைகள் போல அமர்ந்திருந்தனர். இது, இலங்கையின் கடலோரத் தமிழர் மற்றும் சிங்கள மீனவர்கள் பயன்படுத்திய பழைய சுவாரஸ்யமான பாரம்பரிய மீன்பிடி முறைகளில் ஒன்று ஆகும். இது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைமுறைக்கு வந்ததாகப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இங்கு மீனவர்கள் கடற்கரைக்குள் சிறிது தொலைவில், கடல்நீரில் உறுதியாகப் பதித்துக் கட்டப்பட்ட நீண்ட மரக்கம்பம் மீது ஏறிச் சின்ன மேடையில் உட்கார்ந்து, அங்கிருந்து தூண்டில் மூலம் சிறிய மீன்கள் பிடிப்பதாகும் கலை, “தாத்தா! அவை பறவைகள் போல குச்சிகளில் அமர்ந்திருக்கின்றனர்!” என்று கத்தினான். “குச்சி மனிதர்களே!” என்று இசை அவர்களைக் கூப்பிட்டான் அவர்கள் எப்படி அந்த குச்சியில் தங்களை சமநிலைப் படுத்துகிறார்கள்? நான் என்றாள் விழுந்து விடுவேன்” என்று ஜெயா முகம் சுளித்தாள். மிரிஸ்ஸாவில் மேலும், திமிங்கலங்களைப் பார்க்க பயணம் செய்த அவர்கள், அங்கு, ராட்சத நீல நிற திமிங்கலம் பின்புறம் மேலெழுந்த போது, குழந்தைகள் மூச்சுத் திணறினர். “தத்தா, இது எங்கள் வீட்டை விடப் பெரியது!” என்றான் கலை. இசை கைதட்டினார், “பெரிய மீன்! பெரிய மீன்!” ஆனால் இந்த மீனவர்களின் வறுமை, தாத்தாவுக்கு நன்றாக நினைவிருந்தது, அவர்களின் வாழ்க்கை சுற்றுலாப் பயணிகளுக்காக கற்பனையான தோற்றம் ஒன்றால் இங்கு உருவாக்ப் பட்டுள்ளது [Romanticized] என்பது தான் அது. ஆனால் அவர்கள் பசியால் நிறைந்தவர்கள் என்பது பார்வையாளர் பலருக்குப் புரியாது. “கடலில் திமிங்கலங்கள் சுதந்திரமாக உள்ளன,” தாத்தா தன் பேத்தியிடம் கூறினார், “ஆனால் இங்குள்ள மக்கள் அனைவரும் இன்னும் சுதந்திரமாக இல்லை.” ஜெயா தாத்தாவின் முகத்தை பார்த்தபடி, அவரின் கையை இறுக்கமாகப் பிடித்தாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/31905432382438661/?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 5 days ago
இவான்ட‌ ப‌ந்து வீச்சு தான் இந்தியா க‌ட‌ந்த‌ இர‌ண்டு போட்டியில் தோக்க‌ கார‌ண‌ம் உல‌க‌ கோப்பை தொட‌ங்க‌ முத‌ல் 8ச‌ர்வ‌தேச‌ போட்டி தான் விளையாடி இருக்கிரா இந்த‌ ஆண்டு தான் இந்தியா அணியில் இட‌ம் பிடித்து இருக்கிரா................எப்ப‌டித் தான் அனுபவ‌ம் இல்லா ம‌க‌ளிர‌ உல‌க‌ கோப்பையில் சேர்த்திச்சின‌மோ தெரியாது☹️....................

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 5 days ago
ஈழப்பிரியரே! டாக்குத்தரின் தெளிவுரைப்படி இனிமேல் வாழைப்பழத்தைக் கடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்.🏃 பெயர் சூட்டும்போது அறிவுபூர்வமாகவே நம் முன்னோர்கள் பெயரையும் சூட்டி உள்ளார்கள். இன்றைய அறிவுலகில் நாங்கள் வாழ்ந்தாலும் எம் முன்னோரின் அறிவுரைகளை ஆராய்ந்து அதன்படி நடக்கத் தவறிவிட்டோம். வாழைப்பழம்- தொடக்கமே வாழ்வைக் குறிக்கிறது.😌 பேரீச்சம்பழம்- தொடக்கமே பேயைக் குறிக்கிறது.🫣

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 5 days ago
மாற்றம் ஒன்றே மாறாதது. மஹிந்த, தான் அரசியலில் நிலைத்து நிற்பதற்காக இனவாதத்தை கையிலெடுத்தார், இன்று அவரின் மாயையிலிருந்து மக்கள் விலகி விட்டனர். பொருளாதாரம் பின்னடைவை சந்தித்தது. நாடு முன்னேற வேண்டுமானால், மக்கள் அனுராவை தொடர்ந்து அரசியல் செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களிலிருந்து வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டும். நீங்கள் தந்தால் வேண்டாமென்றா சொல்வேன் நான்?

'பேரரசுகளின் கல்லறை': ஆப்கானிஸ்தானில்... பிரிட்டன், சோவியத், அமெரிக்கா தோற்றது ஏன்?

2 weeks 5 days ago
பிரிட்டிஷ், சோவியத் மற்றும் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளன, ஆனால் அனைவரும் பின்வாங்க வேண்டியிருந்தது. 'பேரரசுகளின் கல்லறை': ஆப்கானிஸ்தானில்... பிரிட்டன், சோவியத், அமெரிக்கா தோற்றது ஏன்? சமீபத்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனாலும், பதற்றம் தொடர்கிறது. கத்தார் மத்தியஸ்தராக இருந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், மோதல் மோசமாகலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்தியா வந்திருந்த தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் கூற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பாகிஸ்தானின் பெயரை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். "ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்க வேண்டாம், அவர்களை அதிகமாக துன்புறுத்த வேண்டாம். அதைச் செய்ய நினைத்தால், முதலில் பிரிட்டனிடம், சோவியத் யூனியனிடம், அமெரிக்காவிடம், நேட்டோவிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வார்கள், ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது எளிதல்ல," என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில், தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரும் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஒரு பாரம்பரிய ராணுவமோ,பெருமளவில் வளங்களோ இல்லாத நாட்டில் உலகின் பல வல்லரசுகளும் ஏன் தோல்வியடைந்தன? ஏன் ஆப்கானிஸ்தான் 'பேரரசுகளின் கல்லறை' (Graveyard of Empires) என்று அழைக்கப்படுகிறது? என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். 'பேரரசுகளின் கல்லறை' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சியைத் தடுக்க ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய சோவியத் ராணுவம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலும் அதன் புவியியல் அமைப்பிலும் பதிந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில், உலகின் மிக சக்திவாய்ந்த பேரரசாக இருந்த பிரிட்டிஷ் பேரரசு தனது முழு ராணுவ வலிமையையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் இறுதியில் 1919ஆம் ஆண்டு பிரிட்டன் தோல்வியை ஏற்று, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின், 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. 1978ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒருபோதும் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஆயின. பிரிட்டிஷ் பேரரசும் சோவியத் யூனியனும் சில விஷயங்களில் ஒற்றுமையைக் கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது இரு பேரரசுகளும் தங்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தன. ஆனால் , அந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, இரு பேரரசுகளும் படிப்படியாகச் சிதையத் தொடங்கின. அதன் பின், 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அங்கு பல ஆண்டுகளாக நடந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இருபது ஆண்டுகள் கடந்தபின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற முடிவு செய்தார். அதுவே ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்த முடிவு உலகம் முழுவதும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் எழுப்பியது. இன்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடனின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த முடிவே தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற வழிவகுத்தது. "ஆப்கானியர்களே போராடத் தயாராக இல்லாத ஒரு போரில், அமெரிக்கர்கள் உயிரிழக்க கூடாது"என்று பைடன் கூறினார். "பேரரசுகளின் கல்லறை" என்ற பெயரால் பிரபலமான ஆப்கானிஸ்தானை நினைவு கூர்ந்து, "எவ்வளவு வலிமையான ராணுவம் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தான் உருவாவது சாத்தியமில்லை," என்றும் பைடன் தெரிவித்தார். கடந்த சில நூற்றாண்டுகளில், ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்த முயன்ற உலகின் வலிமையான வல்லரசுகளுக்கு, அந்த நாடு உண்மையிலேயே ஒரு கல்லறையாக மாறியிருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் சிறிய வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் எல்லா பேரரசுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வல்லரசுகள் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கப் படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கின, ஆய்வாளர் டேவிட் ஆஷ்பி, 'Afghanistan: Graveyard of Empires' ('ஆப்கானிஸ்தான்: பேரரசுகளின் கல்லறை)என்ற தலைப்பில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். "ஆப்கானியர்கள் மிக வலிமையானவர்கள் என்பதல்ல காரணம். ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த பெரும்பாலான நிகழ்வுகள், அந்த நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற வல்லரசுகளின் தவறான முடிவுகளால் ஏற்பட்டவை தான்"என அவர் அப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். "நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் ஒரு கடினமான நாடு. மிக மோசமான உள் கட்டமைப்பும், மிகக் குறைந்த வளர்ச்சியையும் கொண்ட ஒரு சிக்கலான நாடு" என ஆய்வாளர் ஆஷ்பி கூறுகிறார். "சோவியத் யூனியன், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எந்தப் பேரரசும் ஆப்கானிஸ்தானுடன் இணக்கமாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களது வழியில் போக விரும்பினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுச் சிக்கல்களையும், அதன் சமூக-மத அமைப்புகளையும் அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முயலவில்லை"என்று அவர் குறிப்பிடுகிறார். 'ஆப்கானிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று அடிக்கடி கூறப்படுகின்றது. அது உண்மை அல்ல. பாரசீகர்கள், மங்கோலியர்கள், மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்ற கடைசி மூன்று வல்லரசுகளும் தங்கள் முயற்சிகளில் படுதோல்வியடைந்தன' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று முறை படையெடுத்த பிரிட்டிஷ் பேரரசு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1878 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆப்கன்-பிரிட்டிஷ் போரின் ஓவியம். 19ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய பேரரசுகளுக்கு இடையே நடந்த போரில் ஆப்கானிஸ்தான் முக்கியத் தளமாக இருந்தது. இது ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டு கால ராஜ்ஜீய மற்றும் அரசியல் மோதலுக்கு வழிவகுத்தது. இறுதியில் பிரிட்டன் வெற்றி பெற்றாலும், அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிட்டது. 1839 முதல் 1919 வரை, பிரிட்டன் மூன்று முறை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆனால் மூன்று முறையும் இறுதியில் தோல்வியைத் தழுவியது. முதல் ஆங்கிலோ–ஆப்கன் போரில் (1839), பிரிட்டன் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஏனென்றால், பிரிட்டன் விரைவாகச் செயல்படாவிட்டால் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் என்று அது நம்பியது. ஆனால் பிரிட்டன் விரைவில் ஒரு வரலாற்று தோல்வியைச் சந்தித்தது. சில பழங்குடியினர், எளிய ஆயுதங்களின் உதவியால், உலகின் சக்திவாய்ந்த படையான பிரிட்டன் படையை முற்றிலுமாக அழித்தனர். மூன்று ஆண்டுகள் தொடர்ந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கானியர்கள் பிரிட்டன் ராணுவத்தை பின்வாங்கச் செய்தனர். 1842ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிரிட்டிஷ் முகாமிலிருந்து ஜலாலாபாத்திற்குச் சென்ற 16,000 வீரர்களில், ஒரே ஒரு பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் தான் உயிருடன் திரும்பினார். இந்தப் போர், பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கக் கொள்கையை பலவீனப்படுத்தியது என்றும், ஆங்கிலேயர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்ற நம்பிக்கையைச் சிதைத்தது என்றும் ஆய்வாளர் ஆஷ்பி குறிப்பிடுகிறார். நாற்பதாண்டுகள் கழித்து, பிரிட்டன் மீண்டும் முயற்சி செய்தது. அந்த முறை ஓரளவு வெற்றி கிடைத்தது. 1878 முதல் 1880 வரை நடந்த இரண்டாம் ஆங்கிலோ–ஆப்கன் போருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் நிலைக்கு பிரிட்டன் வந்தது. ஆனால் 1919ஆம் ஆண்டு, பிரிட்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமிர், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார். இதுவே மூன்றாம் ஆங்கிலோ–ஆப்கான் போர் வெடிக்கக் காரணமானது. அந்த நேரத்தில், போல்ஷெவிக் புரட்சி ரஷ்யாவின் அச்சுறுத்தலைக் குறைத்திருந்தது. அதேசமயம், முதலாம் உலகப் போரால் பிரிட்டனின் ராணுவச் செலவுகள் பெரிதும் உயர்ந்திருந்தன. இதனால், ஆப்கானிஸ்தான் மீதான பிரிட்டனின் ஆர்வம் மங்கியது. நான்கு மாத நீண்ட போருக்குப் பிறகு, பிரிட்டன் ஆப்கானிஸ்தானை சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தானில் அதிகாரப்பூர்வ ஆட்சி இல்லாவிட்டாலும், பிரிட்டன் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக தன் செல்வாக்கை பராமரித்து வந்ததாக நம்பப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு 1920களில், எமீர் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றார். பெண்கள் புர்கா அணிய வேண்டிய கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட அவரது சில சீர்திருத்தங்களை பழங்குடியினரும் மதத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக, ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக அமைதியின்றி இருந்தது. பின்னர் 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், கம்யூனிச அரசாங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக பல முஜாஹிதீன் அமைப்புகள் உருவாகி, சோவியத் படைகளுக்கு எதிராக போரிட்டன. அந்த அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவியும் ஆயுதங்களும் பெற்றன. பதிலுக்கு, சோவியத் படைகள், பிரச்னையின் மூலமாக கருதிய பல கிராமங்கள் மற்றும் பகுதிகளின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தது. இந்தப் போர், பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், ஐந்து மில்லியன் மக்கள் அகதிகளாக மாறினர். சில காலத்திற்கு சோவியத் படைகள் முக்கிய நகரங்கள் மற்றும் வர்த்தக மையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், முஜாஹிதீன்கள் கிராமப்புறங்களில் தீவிரமாக செயல்பட்டனர். சோவியத் ராணுவம் பலவிதமான போர் தந்திரங்களை முயற்சித்தும், கொரில்லா போராளிகள் அவர்களின் தாக்குதல்களைத் முறியடித்து வந்தனர். இதனால் முழு நாடும் போரால் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அப்போதைய சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ், ரஷ்ய பொருளாதாரத்தை சீர்திருத்தும் போது போரைத் தொடர முடியாது என்பதை உணர்ந்து, 1988 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தார். இந்தப் போர், சோவியத் யூனியனுக்கு பொருளாதார ரீதியாக மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தியது. இது சோவியத் யூனியனின் மிகப்பெரிய அரசியல் தவறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்று ஆஷ்பி கூறுகிறார். இந்தப் போருக்குப் பின்னர், சோவியத் யூனியன் சிதைவடைந்து, பிளவுபடத் தொடங்கியது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையும் பேரழிவும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2009 ஆம் ஆண்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்கா தாலிபான்களை பின்னுக்குத் தள்ளியது, ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியனின் தோல்விகளுக்குப் பிறகு, 9/11 தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா அமைப்பை அழிக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. முந்தைய இரண்டு பேரரசுகளைப் போலவே, அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விரைவாகக் கைப்பற்றி, தாலிபன்களை சரணடையச் செய்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஆனாலும் தாலிபன் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன. 2009ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கூடுதல் படைகளை அனுப்பி தாலிபன்களுக்கு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் அதிக சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் நேட்டோ தனது பணி முடிந்ததாக அறிவித்து, ஆப்கானிய ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது. இதற்குப் பிறகு, தாலிபன்கள் மீண்டும் பல பிரதேசங்களை கைப்பற்றினர். அடுத்த ஆண்டு, 2015இல், காபூலில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் விமான நிலையத்துக்கு அருகே பல தற்கொலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் பல தவறுகள் நடந்ததாக ஆஷ்பி விளக்குகிறார். "ராணுவமும், ராஜ்ஜீய முயற்சிகளும் இருந்தபோதிலும், ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவாலும் சர்வதேச சமூகத்தாலும், ஆப்கானிஸ்தானை ஒரு மறைமுகப் போர் நடத்துவதிலிருந்து தடுக்க முடியவில்லை. அந்த மறைமுகப் போர், மற்ற எல்லா ஆயுதங்களையும் விட அதிக வெற்றியை பெற்றது," என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவுக்கு செலவு மிக்க போர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய போர் அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்றால், அமெரிக்க படையெடுப்பு அதிக செலவு மிக்கதாக இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 பில்லியன் டாலர் செலவிட்டது. அமெரிக்கா 2010–2012 காலத்தில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் செலவிட்டதாகக் கருதப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெபானிக், "இது ஜோ பைடனின் சயகான்" (வியட்நாம் போரில் தெற்கு வியட்நாமின் தலைநகராக திகழ்ந்த சயகான் நகரத்தை வடக்கு வியட்நாம் படைகள் கைப்பற்றியது வரலாற்றில் அமெரிக்கப் படைகளின் பெரும் தோல்வியைக் குறிக்கிறது) என்று ட்வீட் செய்துள்ளார். "சர்வதேச அரங்கில் இது ஒரு மிகப்பெரும் தோல்வி, அதை ஒருபோதும் மறக்க முடியாது." அமெரிக்கப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்தது, லட்சக்கணக்கான மக்களை இடம் பெயர நேர்ந்தது. "வரும் நாட்களில் தாலிபன் அரசு சர்வதேச சமுதாயத்தால் அங்கீகாரம் பெறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதைப் பற்றி எனக்கு பெரும் சந்தேகங்கள் உள்ளது," என்கிறார் ஆஷ்பி. சர்வதேச சமுதாயம் தாலிபன்களை கையாள முடியாமல் போனால், பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானை மீண்டும் தாக்க ஒரு வேறு சக்தி முயற்சி செய்யுமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எழுதியவர்,நோர்பெர்டோ பிரேட்ஸ்

குட்டிக் கதைகள்.

2 weeks 5 days ago
Paranji Sankar · ஒரு ஊரில் ஒரு தச்சர் இருந்தார். காலையிலே அவருடைய தொழிலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு கிளம்பினார். போகும் வழியில் அவருடைய வாகனம் பழுதடைந்து நின்றது. அதை தள்ளிக் கொண்டே பொய் மெக்கானிக் கடையில் பழுது பார்த்து, ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு போய் சேர்ந்தார். முதலாளி கடுமையாக அவரை திட்டினார். மிகுந்த வேதனையுடன் அவர் வேலைகளை ஆரம்பித்தார். சுத்தியலால் அடிக்கும் போது கை தவறி அவர் விரலில் காயம் பட்டது. காயத்துக்கு துணியால் கட்டு போட்டுக் கொண்டு மீண்டும் வேலையை தொடர ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அவருடைய உளி உடைந்து விட்டது. "என்னடா இது காலையில் இருந்து நமக்கு நேரமே சரி இல்லையே" என்று முனுமுனுத்துக் கொண்டே மீதி வேலைகளையும் முடித்தார். முதலாளியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட தயாரானார். வண்டியை கிளப்ப முயற்சித்தார். ஆனால் வண்டி கிளம்ப மறுத்து விட்டது. "இருட்டி போய் விட்டது, இனி உன் வண்டியை பழுது பார்த்து எப்படி எடுத்து போவாய், வா என் வண்டியில் உன்னை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று முதலாளி சொன்னதும் அவருடன் கிளம்பினார். போகும் வழியில் "பாவம்யா நீ காலையில் இருந்து உனக்கு எல்லாம் சோதனையாகவே இருக்கு" என்று ஆறுதல் சொல்லிக் கொண்டே கூட்டிகிட்டு போனார் முதலாளி. தச்சர் வீடு வந்ததும் "தாகமா இருக்கு கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா" என்று முதலாளி சொன்னார். "வீட்டுக்குள் வாங்க முதலாளி" என்று அவரை உள்ளே அழைத்தார் தச்சர். முதலாளியும் அவர் பின்னாடியே சென்றார். தச்சர் வீட்டு வாசலில் இருக்கும் மரத்தின் மீது சிறிது நேரம் கை வைத்திருந்து விட்டு உள்ளே சென்றார். முதலாளிக்கு ஒன்றும் புரியவில்லை. தச்சர் உள்ளே நுழைந்தவுடன் அவருடைய குழந்தை ஓடி வந்தது. குழந்தையை பார்த்தவுடன் தூக்கி அனைத்து முத்தம் கொடுத்தார். தன் மனைவியை பார்த்ததும் புன்முறுவலுடன் தன் முதலாளியை அறிமுகபடுத்தி விட்டு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். காலையில் நடந்த எந்த பிரச்சனையையும் நினைத்து பார்க்காமல் எப்படி இவரால் சகஜமாக இருக்க முடிகிறது என்று முதலாளி வியந்தார். தச்சர் எந்த வித கவலையும் இல்லாமல் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். தண்ணீர் குடித்து விட்டு முதலாளி கிளம்பத் தயாரானார். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் தச்சரிடம், "இந்த மரத்தை தொட்டுவிட்டு போனவுடன் காலையில் நடந்த எதை பற்றியும் கவலை படாமல் எப்படி உன்னால் இருக்க முடிந்தது" என்றார். "அதுவா முதலாளி இது என்னுடைய சுமை தாங்கி மரம். ஒவ்வொரு நாளும் நான் வேலை முடித்து வந்தவுடன் இந்த மரத்தைத் தொட்டு என் பாரத்தை இறக்கி வைத்து விட்டு தான் செல்வேன். வேலை செய்யும் இடத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடக்கும். அதை எல்லாம் வீட்டிற்குள் எடுத்துகொண்டு போக கூடாது. காலையில் வண்டி பழுதானதற்கும், நான் தாமதமாக வந்ததற்கும், என் கையில் காயம் ஆனதற்கும், உளி உடைந்து போனதற்கும் என் குடும்பத்தார் எப்படி பொறுப்பாக முடியும்? நான் அவர்கள் மேல் கோபப்படுவது எந்த விதத்தில் நியாயம்? காலையில் நான் போகும்போது இந்த மரத்திடம் இருந்து என் பிரச்சனைகளை எடுத்துக் கொண்டு போவேன் . ஆனால் என்ன ஆச்சரியம் என்றால் நான் மாலை கொண்டு வந்து வைத்து விட்டு போன பிரச்சனைகள் அடுத்த நாள் காலை பாதி அளவு குறைந்து போய் இருக்கும்". தச்சர் சொல்வதை கேட்டு முதலாளி ஆச்சரியப்பட்டு நின்றிருந்தார். நண்பர்களே.. நீங்களும் நாளையில் இருந்து இதை கடைபிடித்து பாருங்கள். பிரச்சனைகள் உங்களை கண்டு அஞ்சி ஓடும்... Voir la traduction

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

2 weeks 5 days ago
முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்! முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1450730

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

2 weeks 5 days ago

Sri-Lankan-Parliament-Complex.jpg?resize

முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!

முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://athavannews.com/2025/1450730

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 5 days ago
வணக்கம் வாத்தியார்...........! பாடகர்கள் : இளையராஜா மற்றும் அனன்யா பட் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : இளையராஜா ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி….. பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி….. ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை ஆண் : காடே மண்க்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா........! --- வழி நெடுக காட்டுமல்லி ---

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 5 days ago
இப்போ ஊடகவியலாளர்கள் யுரியுப்காரர்களாகவும் வந்துவிட்டார்கள் தானே கற்பனைகளை மேலும் நன்றாக வளர்க்க ஊக்குவிப்புகள் செய்துவருகின்றார்கள்.