Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 5 days ago
இந்தியா ஓட்டங்களை நிதானமாக சேர்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 15 பரிமாற்றங்களில் 96 ஓட்டங்களைப் பெறவேண்டும். வெற்றி அவர்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

2 weeks 5 days ago
இந்தியாவுக்கு கடினமான இலக்கை நிர்ணயித்தது இங்கிலாந்து 19 Oct, 2025 | 07:24 PM (நெவில் அன்தனி) இந்தூர், ஹொல்கார் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு 289 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை இங்கிலாந்து நிர்ணயித்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்றதும் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்களைக் குவித்தது.ஹீதர் நைட் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 91 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 109 ஓட்டங்களைக் குவித்தார்.அத்துடன் 3ஆவது விக்கெட்டில் அணித் தலைவி நெட் சிவர்-ப்றன்டுடன் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் ஹீதர் நைட் இட்டார்.நைட்டை விட அமி ஜோன்ஸ் 56 ஓட்டங்களையும் நெட் சிவர் - ப்றன்ட் 38 ஓட்டங்களையும் டமி போமன்ட் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றால் அவ்வணி அரை இறுதியில் விளையாடுவது உறுதிசெய்யப்படும். இந்தியா வெற்றிபெற்றால் இரண்டு அணிகளும் அடுத்த போட்டிகளின் முடிவு வரை காத்திருக்க வேண்டிவரும்.இந்தியா இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா ஆகிய இரண்டு அணிகளும் ஏற்கனவே மகளிர் உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாடுவதற்கு தகுதிபெற்றுவிட்டன. https://www.virakesari.lk/article/228162

ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்

2 weeks 5 days ago
ஆஸ்திரேலியா Vs இந்தியா: பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி - தோல்விக்கான முக்கிய காரணங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறைப்படி மாற்றப்பட்ட 131 என்ற இலக்கை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து அடைந்தது ஆஸ்திரேலியா. பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இது இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக ஷுப்மன் கில்லுக்கு முதல் போட்டி. சொற்ப ரன்களில் அவுட்டான கில், ரோஹித் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கில் 10 ரன்களும், ரோஹித் 8 ரன்களும் சேர்த்தனர். ஷுப்மன் கில், ரோஹித் ஷர்மா இருவரும் ஓப்பனர்களாகக் களமிறங்கினார்கள். முதல் பந்திலேயே தன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோஹித், சில பெரிய ஷாட்கள் அடிக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தார். மிட்செல் ஸ்டார்க், ஜாஷ் ஹேசல்வுட் இருவரின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவரால் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் ஹேசல்வுட் வீசிய பந்தை சரியாகக் கணிக்க முடியாத ரோஹித், இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். முந்தைய பந்துகளை வெளியே வீசிக்கொண்டிருந்த ஹேசல்வுட், நான்காவது பந்தை கொஞ்சம் பின்னால் பிட்ச் செய்ததோடு மட்டுமல்லாமல், லைனையும் சற்று உள்ளே கொண்டுவந்தார். ஹேசல்வுட்டின் வழக்கமான பௌன்ஸ் ரோஹித்துக்கு அதிர்ச்சியளித்தது. அவர் தன்னுடைய பேட்டை விலக்க முடியாமல் போக, பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்றிந்த மேட் ரென்ஷா கையில் தஞ்சமடைந்தது. 14 பந்துகளை சந்தித்த ரோஹித் 8 ரன்கள் எடுத்தார். கோலி டக்-அவுட் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 8 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆனார் விராட் கோலி. ரோஹித்துக்கு அடுத்து களமிறங்கிய கோலியாலும் எளிதாக ரன் எடுக்க முடியவில்லை. முதல் 7 பந்துகளிலும் ரன் எடுக்க முடியாத அவர், எட்டாவது பந்தில் பெரிய ஷாட் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஸ்டம்ப் லைனுக்கு வெளியே நன்கு சென்றது. அதைத் துரத்திச் சென்று கோலி அடிக்க, பாயின்ட் திசையில் நின்றிருந்த கூப்பர் கானலி பாய்ந்து கேட்ச் செய்தார். 8 பந்துகளை சந்தித்து ரன்னே எடுக்க முடியாமல் வெளியேறினார் விராட் கோலி. இரண்டு சீனியர் வீரர்கள் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்த இந்திய அணிக்கு 9வது ஓவரில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. நாதன் எல்லிஸ் வீசிய முதல் பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி ஆட்டமிழந்தார் புதிய கேப்டன் ஷுப்மன் கில். அவர் 18 பந்துகளில் 10 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் அவுட் ஆக, 45/4 என மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி. மழையால் பாதித்த ஆட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது. பெர்த் நகரில் மழை அடிக்கடி ஆட்டத்தை பாதித்தது. அதனால் போட்டி அடிக்கடி நிறுத்தப்படுவதும், மீண்டும் தொடங்குவதும், மீண்டும் நிறுத்தப்படுவதுமாகவே சென்றது. இதனால் ஓவர்களும் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. ஆரம்ப கட்ட தடைகளுக்குப் பின் 35 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டம், மேலும் தொடர்ந்த மழையில் கடைசியில் 26 ஓவர் ஆட்டமாக மாறியது. மழை ஒருபக்கம் தன் வேலையைக் காட்டிக்கொண்டிருக்க, ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக விளங்கினார்கள். சரியான இடத்தில் பந்துவீசி ரன் எடுப்பதை கடினமாக்கினார்கள். அதுமட்டுமல்லாமல், கேப்டன் மிட்செல் மார்ஷ் எடுத்த சில முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தன. உதாரணமாக, 12வது ஓவரில் ஏற்பட்ட மழை தடங்கலுக்குப் பிறகே ஆட்டம் 35 ஓவர் கொண்டதாக மாறிவிட்டது. அதனால் ஒரு பௌலர் அதிகபட்சமாக 7 ஓவர்கள் தான் பந்துவீச முடியும் என்ற நிலை ஏற்பட்டது. முதல் ஸ்பெல்லில் ஓரேயடியாக 6 ஓவர்கள் பந்துவீசியிருந்த ஹேசல்வுட்டை 14வது ஓவரும் எடுத்து வந்தார் மார்ஷ். அதுவே இந்த ஆட்டத்தில் ஹேசல்வுட்டின் கடைசி ஓவராக அமைந்திருக்கும். ஆனால், ஷ்ரேயாஸ் ஐயரைக் குறிவைத்து, அவர் விக்கெட்டை எடுக்க மிகவும் தைரியமான அந்த முடிவை எடுத்தார். அதற்குப் பலனாக அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே ஷ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஹேசல்வுட். அதேவேகத்தில் மிட்செல் ஸ்டார்க்கையும் விடாமல் பயன்படுத்தினார் அவர். தடுமாறிக்கொண்டிருந்த இந்திய பேட்டர்களை தன்னுடைய பௌலர்கள் மூலம் மேலும் விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என்று நினைத்தார். மிகவும் அட்டாகிங் கேப்டன்சியாகக் கருதப்பட்டாலும், ஆட்டத்தின் சூழ்நிலை உணர்ந்து அவர் செய்த செயலுக்கு தொடர்ந்து பலன் கிடைத்தது. வல்லுநர்களும் அவருடைய முடிவுகளை வெகுவாகப் பாராட்டினார்கள். ராகுல் - அக்‌ஷர் பார்ட்னர்ஷிப் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் சேர்த்தார். அந்த 4 விக்கெட்டுகள் வேகமாக போனதால், ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்த கே.எல்.ராகுல், அக்‌ஷர் பட்டேல் இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுத்து மட்டுமே அடித்தார்கள். போட்டி 26 ஓவர்களாகக் குறைந்த பின்னர், ரன் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அடித்து ஆடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, 31 ரன்கள் எடுத்திருந்த அக்‌ஷர் பட்டேல் மேத்யூ கூனமென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கே.எல்.ராகுல் மற்றும் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடித்த சில பௌண்டரிகளால் இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தன் அறிமுக போட்டியில் ஆடிய நித்திஷ் குமார் ரெட்டி 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசல்வுட், கூனமென், மிட்செல் ஓவன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலக்கு மாற்றம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, டிஎல்எஸ் முறைப்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் (DLS) முறைப்படி இலக்கு மாற்றப்பட்டது. 26 ஓவர்களில் 131 என்ற இலக்கு ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எப்போதுமே சவால் கொடுப்பவரான டிராவிஸ் ஹெட்டை இரண்டாவது ஓவரிலேயே வெளியேற்றி நம்பிக்கை கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. மேத்யூ ஷார்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கேப்டன் மிட்செல் மார்ஷ் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தைக் காட்டினார். ஷார்ட் வெளியேறியதும் மார்ஷ் உடன் இணைந்து சிறப்பாக ஆடி, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் ஜாஷ் ஃபிலிப். அவருக்கு அடுத்து வந்த அறிமுக வீரர் ரென்ஷாவும் எளிதாக பேட்டிங் செய்து ரன் சேர்த்தார். இந்திய தரப்பில் அவர்களுக்கு பெரிய சவால்களைக் கொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் ஆட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மிட்செல் மார்ஷ் 48 ரன்கள் விளாசினார். இந்திய பௌலர்களில் மொஹம்மது சிராஜ், அக்‌ஷர் பட்டேல் இருவரும் மட்டுமே ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசினார்கள். மற்ற வீரர்கள் அனைவருமே ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் வாரி வழங்கினார்கள். அதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் 21.1 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா. மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடனும், ரென்ஷா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தனர். இந்திய பௌலர்களில் அர்ஷ்தீப், அக்‌ஷர், வாஷிங்டன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் அசத்திய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கேப்டன் கில் பேசியது என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, "ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்றார் கேப்டன் கில். தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் கில், "ஆஸ்திரேலியாவில் ஆடுவது எப்போதுமே கடினமானது. பவர்பிளேவில் 3 விக்கெட்டுகளை இழக்கும்போது நீங்கள் எப்போதுமே பின்தங்கிவிடுவீர்கள். இந்தப் போட்டியில் சில சாதகமான விஷயங்கள் நடந்திருக்கின்றன, சில படிப்பினைகளும் கிடைத்திருக்கின்றன. 26 ஓவர்களில் 130 ரன்களை டிஃபண்ட் செய்யும்போது ஆட்டத்தைக் கடைசி வரை எடுத்துச் சென்றது எங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறது" என்று கூறினார். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் அக்டோபர் 23ம் தேதி நடக்கிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clygkjnezz9o

திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!

2 weeks 5 days ago
திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து! written by admin October 19, 2025 மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது. இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில் மிகச்சிறப்பாக ஆரம்பமானது. இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது. மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான் பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது. ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது. இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு. எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது. வி. சிந்து https://globaltamilnews.net/2025/221730/

திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!

2 weeks 5 days ago

திருப்பெருந்துறையில் முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவி – சிந்து!

written by admin October 19, 2025

MU1.jpg?fit=1170%2C878&ssl=1

 

மூன்றாவது கண் உள்@ர் அறிவுத்திறன் செயற்பாட்டு நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கைகள் மன்றத்தினால் வருடந்தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முரசம் பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழா ஆனது இவ் வருடமும் 11.10.2025ஆம் திகதி முன்னர் பெரியதுறை என அழைக்கப்பட்ட திருப்பெருந்துறையில் நடத்தப்பட்டது.

இவ் விழாவில் முரசம் (பறை) மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களது கலைச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களுடன் அவர்களது ஆற்றுகைகளும் நிகழ்த்தப்படுகின்றமை வழமையாகும். அந்தவகையில் கடந்த வருடம் நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வெகு விமரிசையாக கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு நுண்கலைத்துறை மாணவன் செல்வன் டானியல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25.ற்கும் மேற்பட்ட பரம்பரை மற்றும் தொழில்முறை பறை மற்றும் சொர்ணாலி இசைக் கலைஞர்களை ஒன்றிணைத்து முன்றாவது கண் நண்பர்களால் இவ் விழா முன்னெடுக்கப்பட்டது. அதேபோல் இந்த வருடமும் கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மாணவியான செல்வி லாவண்யா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முரசம்  பேரிசை மற்றும் சொர்ணாலி இசை விழாவானது கடந்த சனிக்கிழமை 11.10.2025ம் திகதி காலை 10.00 மணியளவில்  மிகச்சிறப்பாக ஆரம்பமானது.

இவ்விழாவிற்கு களுதாவளையைச் சேர்ந்த ச. திவ்யபுத்திரன், ச. விஜயபுத்திரன் எனும் இளங்கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய மற்றும் தொழில்முறை கலைஞர்களாவார்கள். இவர்களோடு பாரம்பரிய கலைகளிலும், பாரம்பரிய வைத்திய முறையிலும் தேர்ச்சி பெற்ற தேனூரான் என்னும் சிறப்புப் பெயருடைய தருமரெத்தினம் அவர்களும் கலந்துகொண்டார். இவ் விழாவிற்கு அழைக்கப்பட்ட கலைஞர்கள் மாலையிட்டு, எமது பண்பாட்டின் மற்றோர் அம்சமான கைத்தறி சால்வை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும் கலைஞர்களது பரம்பரைக் கலைகள் தொடர்பான கருத்துகளும் ஆற்றுகைகளும் பரிமாறப்பட்டதோடு அங்கு வருகை தந்திருந்த எம் பாரம்பரிய கலைகளில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முரசம் மற்றும் சொர்ணாலி இசையின் இசைப்பு முறைகளும் பயிற்றுவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் எமது பாரம்பரிய கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் முகமாக சி. ஜெயசங்கர் எழுதிய “எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள்” எனும் பாடல் பாடப்பட்டு, தமிழர்களின் தொன்மையான வாத்தியமான பறை வாத்தியம் எங்களது வாழ்வியலோடு எவ்வாறு இணைந்திருந்தது என்றும் அது இன்று பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இன்று பறை, சொர்ணாலி வாத்தியங்களை எப்படி வாசிக்கிறார்கள் என்றும் அந்த வாத்திய வாசிப்புகளுக்கான தாளக்கட்டுகளுக்கான பயிற்சியும் அழைக்கப்பட்ட இரு கலைஞர்களால் வழங்கப்பட்டது.

மேலும் முரசம் மற்றும் சொர்ணாலி இசைக்கலைஞர்கள் தங்கள் கருத்துகளில், இன்று தங்கள் சமூகத்தில் இளம் தலைமுறையினர் பறை இசைப்பதில் பெரிதும் நாட்டம் கொள்ளாத நிலையிலும் தங்கள் கலையை தாங்கள் செய்வதில் பெருமிதம் கொள்கிறோம் என்றும், தங்களுக்கு போதுமான வருமானத்தை தரக்கூடிய கலை வடிவம் இது என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

MU2.jpg?resize=800%2C712&ssl=1

இறுதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு கலைகளுடனும் கலைச் செயற்பாடுகளுடனும் தொடர்புள்ள இளம் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் இன்று தென்னிந்திய சினிமாப் பாடல்களையும் மேற்கத்தேய வாத்தியங்களையும், இசைகளையும் பழகுவதிலும், நிகழ்த்துவதிலும் பெருமைகொள்ளும் நாங்கள் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும், ஒரு தகவலை மற்றவர்களுக்கு அறிவிப்பதில் முதன்மையான முரசம் என்கின்ற பறை இசைக்கருவியை இசைக்கும் இசைக்கலைஞர்களை இன்னும் பழைய நிலையிலே தான்  பார்க்கிறோம். அதாவது உதாரணத்திற்கு, அவர்கள் கதிரையில் இருந்தால் கூட “ஏன் நீங்கள் இப்போ கதிரையிலும் இருக்க ஆரம்பித்துவிட்டீங்களா?” என கேட்கின்ற நிலையில் தான் எம் சமூகத்தின் மனநிலை அமைந்திருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. இப்படி பல்வேறு வகையில் அவர்களைத் துன்புறுத்தி வைத்திருப்பதாகவே நம் சமூகக் கட்டமைப்பு காணப்படுகின்றது.

ஆனால் இன்று பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத பலரும் பறை மற்றும் சொர்ணாலி வாத்தியங்களை இசைக்கின்றனர். அவர்கள் இக் கலைகளை பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களிடமிருந்தே கற்றுக்கொண்டு தற்போது தொழில்முறைக் கலைஞர்களாக உருவெடுத்துள்ளனர். இதற்கு காரணமாக அமைந்தது யாதெனில், இக் கலைகளை இசைத்த பாரம்பரிய பரம்பரைக் கலைஞர்களுக்கும் அவர்களது சமூகத்திற்கும் சுற்றியுள்ள மற்றைய சமூகங்களால் இழைக்கப்பட்ட அநீதிகளும், அவ் அநீதிகளின் நிமித்தம் கலைஞர்கள் அடைந்த அவமானத்தினால் இக் கலையை கைவிட்டுவிட்டு ஒதுங்கி இருந்தமையே ஆகும். மேலும் பரம்பரைக் கலைஞர்கள் அல்லாத தொழில்முறைக் கலைஞர்கள் கோவில்களில் மாத்திரம் இக்கருவிகளை வாசிக்கின்றனரே தவிர இறந்த வீடுகளில் வாசிப்பதில்லை. இது ஏன் என எண்ணுகையில் தொழில்முறைக் கலைஞர்கள் இக் கருவிகளை இறந்த வீடுகளில் வாசிக்க விரும்புவதில்லை அல்லது இறந்த வீட்டில் வாசிப்பதை அவர்கள் இழிவாக நினைக்கிறார்கள் என்பதே புலனாகுகின்றது.

இக் கலையோடு தொடர்புபட்ட ஒரு சம்பவமாக, களுதாவளை கோவிலில் பறை மற்றும் சொர்ணாலி இசைக்கும் பரம்பரைக் கலைஞர்களை ஆலயத்திற்குள் இருந்து வெளியேற்றிய சம்பவமும் உண்டு ஆனால் இன்றும் கொக்கட்டிச்சோலை கோவிலின் உள்ளே தொங்கவிடப்பட்டிருக்கும் பறையை கோவிலிற்கு வரும் பக்தர்கள் யாரேனும் வாசிக்கலாம் எனும் வழக்கமும் உண்டு.

எதுவாயினும் இது தான் எழுதப்பட்ட விதி என்றோ, அது தான் வகுக்கப்பட்ட கோட்பாடு என்றோ கருத இயலாத அளவிற்கு இயற்கையும் காலமும் அதன் தன்மையை மாற்றி நிற்கும் இவ் நவீன தொழில்நுட்ப யுகத்தில் வாழும் மனிதர்கள் மட்டும் படிப்பறிவால் பகுத்தறிவு பெற்றோம் என பெருமைப்பட முடியாத படி வகுப்பு வாத பிரிவினைகளால் பிளவுண்டு, அருகில் வாழும் சக மனிதரை அதிகாரம் கொண்டு அடக்கி ஆள துடிக்கின்றோம். இத்தகைய எண்ணம் மேலோங்காமல், மனிதர்களாகிய நாம் வர்க்க பாகுபாடுகளை நீக்கி சமத்துவமாக வாழ்வதற்கும், எம் பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கும், பரம்பரைக் கலைஞர்களை வாழ வைப்பதற்கும் நாம் இணைந்திருக்கும் இயற்கையும் யுகமும் மாறி நிற்பது ஒரு பொருட்டல்ல, மாறாக எம் மனித மனம் மாறவேண்டும். அந்தவகையில் எம் கலைகளை வளர்ப்பதற்கும் அதனை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பதற்கும் மனப்பாங்கு மாற்றமே இங்கு அடிப்படைத் தேவையாக அமைகின்றது.

 

வி. சிந்து 

https://globaltamilnews.net/2025/221730/

'வன்மம்' - செம்மணிப் புதைகுழிகளில் உறங்கமறுங்கும் கிரிஷாந்திகளின் குரல்கள்

2 weeks 5 days ago
முகநூல் செய்திகளை நம்பவேண்டாம். நல்லவரை கெட்டவராகவும், கேட்டவரை நல்லவராகவும் சிலர் எழுதுவார்கள்.

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 5 days ago
சுகர் வருத்தம் இருந்தால் அல்லது அறிகுறி இருப்போர் தவிர்க்க வேண்டிய பழங்களில் முதன்மையானது பேரீச்சை பிளம்ஸ் போன்ற உலர்த்திய பழங்கள். சீனி உலரும் போது மேலும் அடர்தியாகும். அதேபோல் வாழை. கிலைசீமிக் இண்டெக்ஸ் மிக அதிகம். சாப்பிட்டவுடன் ரத்த குளுகோஸ் எகிறும்.

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

2 weeks 5 days ago
இவ்வாறான கற்பனைகளுக்காக, இந்தக் கற்பனைகளின் பிதாமகரான மூத்த உடகவியலாளர் நிலாந்தன் மாஸ்டர் பெயரில் ஆண்டுதோறும் தங்கப்பதக்கம் வழங்கப்படவேண்டும். மற்றுமொரு ‘லப்பாம் டப்பாம்’ ஊடகவியலாளர் தமிழரசுவின் பெயரில் விசேட புலைமைப் பரிசில் தரப்படவேண்டும்.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 weeks 5 days ago
வலிகாமத்தின் பல கோவிலடியில் 80 களில் ஒயில் கிழவன் எண்டு ஒருவர் இருப்பார். கோயில் மாறி கோயில் என அலைவார். பார்க்க பிச்சைகாரன் போல தோற்றம். உடலெங்கும் கழிவு எஞ்சின் ஆயிலை ஊற்றி கொண்டு, ரஸ்யா, ரீகன், சோவியத், வியாழமாற்றம், ரஜனி ஶ்ரீதேவி, டெலோ, புலி என உலக விடயங்களை ஒரு கோர்வை இல்லாமல் ஏதோ, ஏதோ பிசத்தி கொண்டிருப்பார். அடிக்கடி உடைந்த ஆங்கிலமும் வந்து விழும். சில சமயம் ஊர் வாலுகள் கல்லெடுத்து அடிக்கும். அவர்களை துரத்துவார். பிறகு அவர்களே பாவம் எண்டு கல்லடிப்பதை கூட விட்டு விட்டார்கள். ஆனாலும் ஒயில் கிழவன் ஒவ்வொரு கோவிலாக போய் விளங்காத தமிழில் பிசத்துவதை கைவிடவே இல்லை. மக்கள் எட்டி ஒரு பரிதாப பார்வையோடு நகர்ந்து போனாலும்…அவ கடமையே கண்ணாக இருப்பார். 87 ஆக்டோபர் இந்தியன் ஆமி நேரத்தின் பின் ஆளை காணவில்லை. “இந்தியன் சாக்காட்டி போட்டான்” என ஊரார் பேசி கொண்டார்கள். இன்னும் சிலரோ ஒயில் கிழவன் ஒரு இந்திய உளவாளி…வேலை முடிந்து ஊர் திரும்பிவிட்டார் என்றனர். நானும் ஒயில் கிழவன் செத்து போனார் என்றே எண்ணி இருந்தேன்… இன்றுவரை…..

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 5 days ago
இனவாதத்தை பொறுத்தவரை….. தமிழருக்கு எதுவும் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில்…..மகிந்தவுக்கும் அனுரவுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. இப்படி சிந்தித்த ஒரே சிங்கள தலைவர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்ன மட்டுமே. ஆனால் அவரை சிங்களவர்கள் ஒரு மாநகரசபை உறுப்பினராகா கூட ஆக்கவில்லை. இதுதான் மாறாத சிங்கள பேரினவாதம். இது மாறிவிட்டது…. அல்லது அனுர மாற்ற முயல்கிறார் என்பதற்கு ஒரு குண்டு மணி அளவு கூட ஆதாரம் இல்லை. நீங்கள் சும்மா கற்பனையில் அடித்து விடும் கதைகள் மட்டுமே.

கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று!

2 weeks 5 days ago
கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காந்திபூங்காவில் உள்ள நினைவுத்தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் திருவுருப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பொது நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். https://athavannews.com/2025/1450737

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 5 days ago
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கு விளக்கமறியல்! ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய மத்துகமவைச் சேர்ந்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, அந்த பெண் நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மதுகம – வெலிபென்னவைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளரான 52 வயதுடைய குறித்த பெண் இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கியுள்ளதாக தெரியவந்த நிலையில் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1450749

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 weeks 5 days ago
இங்கே சிலர் தெரியாமல் கதைப்பது, ஒரு செய்தியை வைத்து. மோசடி என்றால், இங்கே உள்ள அனைவரும் மோசடியில் ஆக குறைந்தது பங்கு எடுத்து இருப்பார்கள், எந்த சொத்தையோ( இருக்கும் வீடு உஉட்பட) கடனில் (mortgage) வாங்கி இருந்தால் . அனால், mortgage என்பது உண்மையில் (தந்நிகரற்ற தார்மீக அடிப்படையில்) மோசடி. ஏனெனில், இல்லாத செல்வத்தை, சட்ட உரிமத்தாலும்,balance sheet இல் செய்யப்படும் கணக்கியல் தந்திரங்களாலும் (மெய்நிகர் பணம் வடிவில்) உருவாக்கப்படுவதே mortgage. அப்படி (இல்லாத) செல்வத்தை (மெய்நிகர்) பணம் வடிவில் கடனாக பெற்று, உழைப்பின் மூலம் உண்மையான (யதார்த்த) செல்வம் ஆக்குகிறீர்கள் கடன் தந்த நிறுவனத்துக்கு, உங்களுக்கு (இல்லாத) செல்வம், யதார்த்த சொத்தை விளைவாக தருகிறது கடனை கட்டி முடித்தால் (இதை விட என்ன மோசடி இருக்க முடியும், தார்மீக அடிப்படையில்) அப்போது அப்படி வாங்கியவர்கள் எல்லாம் மோசடியில் ஈடுபட்டனரா? இல்லை, ஏனெனில் சட்டம் விதிக்கிறது mortgage மோசடி அல்ல என்று. வர்த்தகத்தில் உண்மை, பொய், மோசடி போன்றவை எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதற்கு ஒரு சிறு உதாரணம். அனால், இதில் இவர்களே உருவாக்கியது, இதை நான் சொல்லவில்லை, Guardian சொல்கிறது. (ஒன்று, இருவருக்கும் எரிபொருள், எண்ணெய் வர்த்தக பின்னணி இருக்கிறது. குறிப்பாக பெண்ணின் தந்தை இலங்கையில் எரிபொருள் வர்த்தகதில் கொடிகட்டி பறந்தவர். UK க்க புலம் பெயர்ந்து வந்து, (எந்த எரிபொருள் நிலையத்திலும் வேதனத்துக்கு வேலை செய்யாமல்), நேரடியாக எரிபொருள் நிலையத்தை வாங்கி விஸ்தரித்தவர்.) நான் பார்ப்பது (அன்றும்), இவர்கள் (அடுத்த சந்ததி) அடுத்த படி எடுத்துள்ளார்கள். மற்றது, ஒரு அரசின் கேந்திர முக்கியத்துவம் உள்ள கட்டுமானம் ஒன்றை பெறுவது, விடயம் தெரியாமல் செய்ய முடியாது. (security vetting செய்து, அதில் சர்ச்சைகள், சந்தேகங்கள் இல்லாமல் இருந்தாலே வழங்கப்படும்) அவர்களை பொறுத்தவரையில், UK Lindsey oil refinery ஐ பெற்றது மயிரை கொண்டு மலையை இழுக்கும் முயற்சி வெற்றி அளித்ததாக இருக்கலாம். (அதன் முதலே, நான் அறிந்த பொது, அவர்களின் மசகு எண்ணெய் / இயற்கை வாயு வர்த்தகம், மத்திய ஆசியா வரை எட்டி இருந்தது) ஏனெனில், இப்படி நைஜீரியா , பாகிஸ்தானிலும் பெற தெண்டித்து உள்ளார்கள் (கார்டியன் விசாரணை ஆக்கத்தை பார்க்கவும்) (மகள் மற்றும் மருமகனின் வீட்டுக்கு மாமனார் / மாமியார் கூட நியமனம், அனுமதி மற்றும் பெற்றே அவர்களின் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் பின்பு கேள்விப்பட்டேன். ஏனெனில், அவர்களின் வீட்டுக்கு 24 மணி நேர பாதுகாப்பு.) முன்பு சொன்னது போல, 2022 இல் இருந்து வட்டி (வீதம்) கூடியதே இதை முறித்தத்தில் பெரும் பங்கு வகித்து உள்ளது. வருமானமும் குறைந்தது. (மற்றது, இப்படியான சொத்துக்கள் கொண்ட கம்பனிகளுக்கு ஒப்பீட்டளவில் இலகுவாக வங்கிகள் கடன் கொடுப்பது.) (ஆனால், எந்த வர்த்தகமும் இயலுமானவரை சட்டத்தை வளைக்க தெண்டிகும்) 728 மில்லியன் ஐ HSBC (financialisation) arrangement (இது சட்டச்சொல், மிகவும் குறித்த கருத்து உடையது நிதி வழங்குதல் அமைப்பில்) செய்த போது due diligence செய்யாமலா கடன் கொடுப்பட்டது? ( மற்றவர்களை பைத்தியக்காரர்கள் என்று கதை). (வருங்கால வருமானஹை கொண்டு தான் கடன், அது குறைந்து, வட்டி கூடிவிட்டது) தலை மறைவுக்கு தார்மீக (அவமான, பொறுப்பு) உணர்வே பெரும் காரணம் ஆக இருபதற்கு வாய்ப்புகள் கூட. ஏனெனில் 150 மில்லியன் அளவு செல்வத்தை விட்டு விட்டே தலைமறைவு. சில ஒழுங்கீனங்கள் இருக்கலாம். (இவர்கள் இன்னொரு விடயம் செய்ததாக ஒரு கடை இருக்கிறது. அதாவது, இந்த வியாபாரம் நன்றாக நடந்த வேளையில், valuation கூடும், அதை வைத்து கடன் எடுத்து இந்த business இல் வேறு கம்பனிகளுக்கு இடையில் கடனாக கொடுக்கப்பட்டது என்று. அனால், இது சட்டவிரோதம் அல்ல. செய்திகளை கொண்டு அறிந்த விபரத்தில், சட்ட அடிப்படையில் செய்யக்கூடிய (தமக்கு எடுக்க கூடிய) பணத்தை எடுத்துளார்கள். அது தார்மீக அடிப்படையில் அநேகமானோரின் கண்களுக்கு குத்துகிறது. அரசாங்கம் கூட do the right thing என்று தார்மீக அடிப்படையிலேயே கேட்டு கொண்டது. வரி கூட கம்பனி (business legal entity) தானே பொறுப்பு, கம்பனி முறியும் போது இயலாது. அவர்கள் தனிப்பட்ட அடிப்படையில் வரி கட்டவில்லை அல்லது வரி ஏய்ப்பு என்ற குற்றசாட்டு இல்லை. அத்துடன், வரியில் பெரும்பகுதி deferred tax ஆகவே இருக்க வாய்ப்புகள் கூட. ஏனெனில், இதுவே கம்பனிக்கும், அரச வரி திணைக்களமும் இணக்கத்துக்கு வர நீண்ட காலம் எடுப்பது (ஏனெனில், கம்பனி சட்டத்தில் இயலுமாமாவரை வளைத்து வரியை குறைக்க தெண்டிப்பது). மற்றது, வருங்கால வரியையும் பொதுவாக உள்ளடக்கியது அனால், பொதுவாக எந்த பணம் ஈட்டும் முயற்றசியிலும் , குறிப்பாக முறியும் போது வரி, அல்லது அரசுக்கு கொடுக்க அல்லது கட்ட வேண்டியதே முதலாவது முன்னுரிமை.) Lyca, Lebra இல், எத்தனையோ பேர் அந்த அளவு முதலீடு செய்து தொடங்க கூடிய நிலையில் இருந்தனர். Lyca, Lebra போல. பலர் calling card வியாபாரமும் செய்தனர். அனால், telecom சந்தையில் வந்த deregulation ஆல் வந்த (அந்த நேரத்தில் வரப்போகும் விளைவை) இவை 2ம் சரியாக எடை போட்டு இருந்தன. எதை தான் சொன்னாலும், இவர்கள் எல்லோருமே உண்மையில் தொழிலதிபர்கள் (entrepreneurs). அனால் இப்படியானதை சட்டவிரோதமாக செய்தும், எந்த தண்டனைகள் இன்றி விலகிவிடலாம் என்ற நிலையை உருவாக்கியது மேற்கு அரசுக்கள், குறிப்பாக, UK, மோட்டு US அதை UK இந்த சொல்வதை கேட்டு செய்தது. ஆம், 2008 / 2009 இல் வங்கிகள் செய்தது சட்ட்டவிரோதம் என்ற்றாலும், அதை எவரையும் தண்டியாது, profits are personal, losses are public என்ற (UK உருவாக்கிய தாரக மந்திரம்) வாதத்துடன், அது பின்பு, வேறு கம்பனிகளுக்கு பாவிக்கப்பட்டது (bail out) ஆகவே, இவர்கள் செய்தது முன்னோடி இல்லாமல் நடக்கவில்லை. அதுவும் அவர்கள் செய்தது சட்டபூர்வம் என்றால் (அப்படித் தான் தெரிகிறது), இவர்களின் கம்பனியின் இழப்பை, ஈடு செய்ய வேண்டியது அரசு என்று வரூ கிறது அப்படி ஏதோ புதிதாக செய்து விட்டார்கள்செய்து விட்டார்கள் (அரசை ஏமாற்றிவிட்டார்கள்) என்ற பிரச்சாரத்தை UK ஊடகங்கள் செய்வதில், இவர்கள் வெள்ளையர் அல்லாதோர் என்பதால் என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது. -- Guardian இல் சொல்லப்படும் சில தகவல்கள் பொதுவாக பிடிக்காமல் இருக்கலாம், அனால் அது தான் வர்த்தகம். https://www.theguardian.com/business/2025/jul/04/the-bubble-had-to-burst-the-inside-story-of-the-lindsey-oil-refinery-collapse ‘The bubble had to burst’: the inside story of the Lindsey oil refinery collapse This article is more than 3 months old Prax Group’s sudden demise surprised some, but others saw ‘a house of cards’ built on a thirst for debt-fuelled growth Rob Davies Fri 4 Jul 2025 13.38 BST Share It was mid-April and the government had just finished nationalising British Steel, to prevent thousands of job losses at the Scunthorpe steelworks, when word reached Whitehall that another national infrastructure asset was wobbling. Prax Group, owner of the Lindsey oil refinery on the Humber estuary in northern England, was rumoured to be in financial trouble, stoking fears about jobs and disruption to critical fuel supplies. In a hastily arranged meeting at the department for energy security and net zero (DESNZ) on 13 May, well-placed sources said, a concerned Ed Miliband, the energy secretary, took solace from Prax’s owner and sole director, Winston Soosaipillai. Prax had suffered some setbacks, the seldom-seen oil boss is understood to have said, but it was not in any imminent danger and was even planning investment for the future. Within weeks, these assurances had crumbled to dust. Winston Soosaipillai. Photograph: Prax Group By Friday of last week, ministers had been informed that Prax could not pay its debts – including sums owed to HM Revenue and Customs that the Financial Times reported had reached up to £250m – and was headed for insolvency. The shock update put 625 jobs at risk and sent officials scrambling to keep the refinery going. By Monday, administrators had been called in. The refinery’s main supplier, Glencore, initially agreed to provide its crude oil for free while the government began its search for a buyer, in what one person close to the situation described as a “gesture of goodwill”. A deal has since been reached that will mean Glencore is paid out of taxpayers’ funds. The company’s sudden collapse blind-sided the government and even Glencore, famed for the global intelligence network that informs its trading activity. But to Prax insiders, it came as no surprise. Multiple sources, including former staff, described a house of cards stacked on increasingly unstable foundations due its owners’ insatiable thirst for debt-fuelled growth, building an empire which included the refinery, trading in oil and petrol stations. Prax’s recent woes, one former employee claimed, began to spiral out of control more than a year before the government got wind that anything was wrong. “They started the process of reducing costs in March 2024,” said the source. “They sold petrol station stores and made hundreds of people redundant. The strategy was to get salaries out of the company. The mood was horrible.” The accountancy firm Deloitte was parachuted in during 2023 to run a “performance improvement programme”, in effect taking charge of the business for about three months. One of its consultants was installed as a joint-chief executive the following year, a sharing of power that took place under the codename “Project King”. It was an apt choice of name, for Soosaipillai was the de facto king of Prax. Better known by his middle names, Sanjeev Kumar, Soosaipillai owned and ran the business alongside his wife, Arani, the company’s head of human resources, for 25 years. They hold 80% of the equity directly and 20% through family trusts. View image in fullscreen The Lindsey oil refinery in Lincolnshire. Photograph: Alamy That in itself is unusual, in an industry dominated by global corporations such as ExxonMobil and India’s Essar, overseen by teams of seasoned executives. Soosaipillai, in contrast, is the sole director of Lindsey and the wider Prax Group, Companies House filings show. Former employees said that even senior staff knew little about company strategy or dealings, with information tightly controlled among a tiny, close-knit group. UK government wants investigation after Lindsey oil refinery owner falls into administration Read more This heavily top-down structure reflects the company’s extraordinary growth story. The Soosaipillais bought their first petrol station in 1999, expanding into the importing, blending and storage of fuels. They ran State Oil, as the business was then known, from a modest £65,000 flat in Weybridge, Surrey, building a multinational oil and gas business with billions in revenue and 1,300 staff in a little over two decades. Contemporary reports – and former employees – suggest the business began to take off with the recruitment in 2009 of a lawyer and oil trader called Don Camillo. By 2014, with Camillo’s help, the business was fuelling regular profits, not to mention a steady and increasing stream of dividends that helped the Soosaipillais move into a £4.5m mansion in St George’s Hill, the Surrey estate better known as the bolthole of Russian oligarchs. The business continued to grow, via the 2015 acquisition of the fuel retail business Harvest Energy and later via the surprise purchase in 2021 of the Lindsey oil refinery from the French oil company Total for nearly $170m (£125m). The deal more than tripled the group’s revenues, to nearly $10bn, but also sent debts soaring. Annual interest payments had rocketed from $19m to $79m by 2023, surging again to $133m in 2024. Prax recorded a $75m loss. Its total liabilities had reached $2.3bn, nearly 10 times the level immediately before the Lindsey takeover. View image in fullscreen A Union flag flies outside the Prax Lindsey oil refinery in North Killingholme, England. Photograph: Lindsey Parnaby/AFP/Getty Images In a letter to staff, sent shortly after administrators were appointed, Soosaipillai acknowledged that the cost of operating Prax Lindsey had become “increasingly unsustainable” and that this had spread into the rest of the group due to its divisions’ “interdependent” nature. Yet, even as the debt pile was mounting, supply deals with global oil traders – first Trafigura and then Glencore – ensured a constant flow of crude. The refinery is the smallest of the five that remain in the UK since Grangemouth, in Scotland, stopped processing crude earlier this year. But, at 5.4m tonnes annually, it still accounts for nearly 10% of national capacity, supplying everything from petrol forecourts to Heathrow airport. Owners of collapsed oil refinery Prax Lindsey took £11.5m in pay and dividends Read more Owning such a strategically important asset has proved lucrative. As the Guardian revealed earlier this week, the husband and wife owners have extracted about £11.5m in pay and dividends since the Lindsey deal alone. Yet the couple, who are said to be extremely publicity-shy, did not flaunt their wealth. “He is very quiet and studious,” said a former supplier, who asked not to be named. “There is nothing flash about them. They drive a 10-year-old Land Rover to work.” But the vaulting ambition that helped Prax grow came with a darker side, according to some accounts. The supplier fell out with Soosaipillai when Prax, he says, inexplicably refused to pay invoices worth tens of thousands. The company coughed up only after a threat of legal action, he alleges. Others referred to a ruthless streak in Soosaipillai, who allegedly viewed mass redundancies and severe cost-cutting as the solution to strategic missteps. This, two sources said, sometimes led to instability as people with operational expertise left after short tenures. View image in fullscreen The sun rises over Lindsey oil refinery in North Lincolnshire. Photograph: Christopher Furlong/Getty Images Ministers got a taste of the company’s sometimes chaotic modus operandi last month, when Prax suddenly admitted that it was at risk of insolvency after all. Officials asked for financial information to help them assess the scale of the problem. Despite repeated requests, Prax refused. The near-term cause of the collapse remains a mystery, although one source close to the situation claimed that Prax could not pay its debts to HM Revenue and Customs. Anyone keeping a close eye on corporate filings might have seen the warning signs. Even before “Project King”, Prax’s annual accounts had been restated several times in the past few years to reflect a worse position than before. In 2023, the company attempted to pay a dividend to the Soosaipillais, only to admit that it didn’t have enough cash in its distributable reserves. The payout had to be reversed and reclassified for accounting purposes. Nevertheless, industry experts were not expecting Prax Lindsey to fail. Long-term conditions have been tough in Europe, amid falling demand for carbon-based fuel, high electricity costs, and fierce competition from rivals in Asia, the Middle East and Africa. But Alan Gelder, a refining expert at the global energy and mining consultancy Wood Mackenzie, said margins had been much better in the first half of 2025 due to tight capacity in the market. “It surprised us,” said Gelder. “[Lindsey] was an OK asset, not brilliant but probably cash positive.” One former employee put the failure down to a culture of relentless expansion. Arani Kumar. Photograph: Prax Petroleum As well as large takeovers of assets of questionable quality, such as Lindsey, there was an abortive venture in Nigeria and a vain attempt to buy Shell’s business in Pakistan. And, although Prax carried itself like a global player, it didn’t behave like one, sources said. “They were still working as they were when they started in a flat in Weybridge, doing things as if they had only one petrol station,” said one former employee. “Every few years they’d take on a bigger acquisition and eventually I think it was too much,” said another. “The bubble had to burst at some point.” The government has now ordered the Insolvency Service to investigate the conduct of “directors”. In practice, that means Soosaipillai alone. Soosaipillai wrote in his letter to staff that he was “deeply sorry”. Those employees must now wait to see if government officials can find a buyer to secure the future of his precarious realm. As one current employee put it: “We’re just sitting around, waiting for the guillotine to fall.” The Soosaipillais did not return requests for comment. The Guardian approached someone believed to be Don Camillo for comment. He denied being Camillo and hung up the phone. Deloitte declined to comment.

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 5 days ago
ஒவ்வொரு வைத்தியரும் ஒவ்வொரு உணவைப் பற்றி தத்தமது படிப்பின் ஊடாக பலதையும் சொல்லத்தான் செய்வார்கள் ........ஆனால் அவர்களைவிட தனக்குத் தனக்குத்தான் தன்னுடைய உடலின் ஒத்துக்கொள்ளக்கூடிய உணவுகள் ஒவ்வாமையான உணவுகள் சரியாகத் தெரியும் அவற்றைப் புரிந்து சாப்பிட்டு வந்தால் பலப்பல உபாதைகளைத் தவிர்க்க முடியும் . ......! என்ன வயது ஏற ஏற சாப்பிடும் உணவுகளின் அளவை குறைத்துக் கொண்டு வருவது சுகமானது, முக்கியமாய் இரவு உணவை குறைவாகவும் செரிமானம் ஆகக்கூடிய உணவை உட்கொண்டால் காலையில் சுகமாய் எழுந்திருக்கலாம் இது எனது அனுபவ உண்மை . ......! நீங்கள் ஒரு கிலோ பேரீச்சம் பழத்தை ஒரேயடியாய் உண்ணாமல் இரண்டு மூன்று தாராளமாய் சாப்பிடலாம் .......! இயற்கை ஒவ்வொரு தேசத்திற்கும் அந்தந்த தட்ப வெப்ப நிலைக்கேற்ப பழங்கள் கறிவகைகள் , புல் பூண்டுகள் என்று படைத்திருக்கு .......அந்தந்த நாடுகளில் வாழும் மனிதர்கள் , விலங்குகள் எல்லாம் அவற்றை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர் . ...... ! போர், பஞ்சம் போன்ற புற சூழல்களால் இன்று மனித இனம் உலகம் முழுதும் பரந்து பட்டு இரந்துண்டு வாழ்ந்து கொண்டு இருக்கு . ..... ஆனால் இயற்கை ஆடுமாடுகள் இங்கு வாழ எங்கும் புல்லும் தண்ணியும் கொட்டி வைத்திருக்கு ...... அங்கு ஒட்டகங்கள் வாழ எங்கெங்கோ தூரம் தூரமாய் நீரூற்றும் ஈச்சம் சோலையையும் தெளித்து விட்டிருக்கு ....... அவைகள் சரியாகத்தான் வாழ்ந்து வருகின்றன . ..... எமக்கு மனம் என்ற ஒன்றைப் படைத்து விட்டதால் நாம்தான் அங்குமின்றி இங்குமின்றி எதிலும் திருப்தியின்றி அலைகிறோம் . ......!