Aggregator
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!
இனிய பாரதியின் சகாவின் வாக்குமூலம்- 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுப்பு!
adminAugust 28, 2025
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் திருமதி தெசீபா ரஜீபன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா- பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அம்பாறை மாவட்ட காரைதீவு பகுதியை சேர்ந்த சந்தேக நபர் குறித்த பகுதிக்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அவர் கடந்த காலங்களில் திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராக செயற்பட்ட அருளானந்தன் சீலன் என்பவரை கடத்தி படுகொலை செய்து குறித்த இடத்தில் புதைத்திருப்பதாக அரசு சாட்சியாக மாறி குற்றப்புலனாய்வு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
இதன் போது குறித்த பிரதேசத்தை சுற்றி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது டன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உட்பட பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் காவற்துறையினர் விசேட அதிரடிப்படையினர் தடயவியல் காவற்துறையினர் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கருணா-பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் முக்கிய சகாவாக செயற்பட்ட அனோசியஸ் சுரேஷ் கண்ணா எனப்படும் யூட் எனும் சந்தேக நபர் ஏற்கனவே கடந்த மாதம் ஜூ (31.07.25) அன்று குறித்த பொது மயானத்திற்கு கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டு இருந்தார்.
எனினும் குறித்த நபர் வாக்கு மூலத்திற்கமைய திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் தேடுதல் மற்றும் தோண்டப்பட்ட பின்னர் எதுவும் கிடைக்காத காரணத்தினால் குறித்த செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டன.பின்னர் மற்றுமொருவரின் வாக்கு மூலத்திற்கமைய இன்று மற்றொரு இடமான தம்பிலுவில் மயானத்தை அண்டிய பகுதிகளில் மீண்டும் 2 ஆம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
வேலணையில் தீ!
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
வேலணையில் தீ!
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
முஸ்லிம் தனியார் சட்டத்தை திருத்த வேண்டும் - பலதார மணத்தை ஒழிக்க வேண்டும்
Thursday, August 28, 2025 கட்டுரை
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட நாட்டின் தனியார் சட்டங்களில் சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கடந்த திங்கட் கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.ரி.பி. தெஹிதெனிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் உள்ள பாகுபாடு காட்டும் மற்றும் சர்வதேச தரங்களுக்கு முரணான விதிகளில் உடனடியாக திருத்தம் தேவை என வலியுறுத்தியுள்ள ஆணைக்குழு, நாட்டின் தேசிய சட்டங்கள் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யும் கடமை தமக்கு உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை மேற்கோள்காட்டியுள்ள ஆணைக்குழு, நாட்டில் பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் இருந்தாலும், பாகுபாடு மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை பிரச்சினைகள் இன்னும் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது. கண்டியச் சட்டம், முஸ்லிம் திருமணச் சட்டம் மற்றும் யாழ்ப்பாண திருமண உரிமைகள் மற்றும் மரபுரிமைச் சட்டம் போன்ற தனியார் சட்டங்களில் சீர்திருத்தம் தேவைப்படும் பல விதிகள் உள்ளதாக ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் காணப்படும் பல்வேறு பாகுபாடு காட்டும் விதிகளை ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது. அவையாவன:
1. இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆண்கள் மட்டுமே பதிவாளர்களாகவும், காதிகளாகவும் (நீதிபதிகள்) நியமிக்கப்பட முடியும்.
2. ஆண்களுக்கும், பெண்களுக்கும் விவாகரத்துக்கான நிபந்தனைகள் வேறுபடுகின்றன. ஒரு கணவர் காரணம் கூறாமல் ‘தலாக்’ விவாகரத்து செய்ய முடியும். ஆனால் ஒரு மனைவி ‘பஸ்ஹ{‘ விவாகரத்து கோரும்போது, திருமண முறிவுக்கான காரணத்தை நிரூபிப்பதுடன், இரு சாட்சிகளால் அதனை உறுதிப்படுத்தவும் வேண்டும். கணவர் தனது மனைவியால் தொடங்கப்பட்ட விவாகரத்தை மேல்முறையீடு செய்ய முடியும், ஆனால் மனைவிக்கு அந்த உரிமை இல்லை.
3. திருமண சம்மதம்: திருமணத்தின் போது மணமகளின் கையொப்பம் சம்மதத்திற்கான சான்றாகக் கோரப்படுவதில்லை. ஆனால் ஒரு ஆண் பாதுகாவலரின் (வாலி) கையொப்பம் கட்டாயமாகும்.
4. முஸ்லிம் சட்டத்தில் பலதார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் உரிமையையும், ஊநுனுயுறு உடன்படிக்கையையும் மீறுவதாக ஆணைக்குழு கருதுகிறது. பலதார மணங்களில் உள்ள பெண்கள் பெரும்பாலும் உளவியல் ரீதியான அழுத்தம், கைவிடுதல் மற்றும் வன்முறையை எதிர்கொள்கிறார்கள்.
5. முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது குறிப்பிடப்படவில்லை. ஒரு காதியின் அனுமதியுடன் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணின் திருமணத்தைப் பதிவு செய்ய இந்தச் சட்டம் அனுமதிக்கிறது. பெண் குழந்தைகளின் திருமணம் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இது உடனடியாக சீர்திருத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்துகிறது.
6. காதி நீதிமன்ற அமைப்பானது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. பெண்களுக்கு இந்த அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. காதி நீதிபதிகள் நியமனத்திற்கு முறையான தகுதிகள் அல்லது பயிற்சி வரையறுக்கப்படவில்லை.
இந்த அறிக்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.
1. அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) பிரிவுகளுடன் முரண்படும் அனைத்து முஸ்லிம் திருமணச் சட்ட விதிகளையும் திருத்த வேண்டும்.
2. அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும்.
3. காதி அமைப்பின் நேர்மறையான அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு, பாகுபாடு அற்ற, புதிய குடும்பச் சட்ட நீதிமன்ற அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும்.
4. பெண் காதிகளை நியமிக்க அனுமதிக்கும் வகையில் சட்டத்தைத் திருத்த வேண்டும்.
5. பலதார மணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தச் சீர்திருத்தம் தொடர்பான கலந்தாலோசனைகள் முஸ்லிம் பெண்கள் உட்பட பரந்த சமூகத்தின் பங்களிப்புடன் விரைவாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.- Vidivelli
வைச்சாண்டா ..பெரிய ஆப்பு...இனி சனத்தொகை குறையுமோ..