Aggregator

தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன்

2 weeks ago

தையிட்டி; கிவுல் ஓயா; கரிநாள் - நிலாந்தன்

facebook_1770040495908_74240879321495505

கடந்த வாரம் மூன்று ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது ஆர்ப்பாட்டம் தையிட்டியில். அது வழமையாக நடப்பது. இரண்டாவது ஆர்ப்பாட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரான நெடுங்கேணிப் போராட்டம். மூன்றாவது ஆர்ப்பாட்டம், 78ஆவது சுதந்திர தினம் என்று கூறப்படுவதை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த பேரணி.

மிகக்குறுகிய கால இடைவெளிக்குள் நடந்த இந்த மூன்று ஆர்ப்பாட்டங்களையும் தொகுத்துப் பார்ப்போம்.தையிட்டியில் கடந்த பௌர்ணமி நாளன்று மிகக்குறைந்த எண்ணிக்கையானவர்களே காணப்பட்டார்கள். அதிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்களே அதிகம். ஆனால் கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்த ஆர்ப்பாட்டங்களை தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதேச சபை முன் நின்று ஒழுங்கமைத்தது. அது ஒப்பீட்டளவில் அனைத்துக் கட்சி பரிமாணத்தைக் கொண்ட ஒரு போராட்டம். அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் அங்கே காணப்பட்டார்கள்.

அடுத்த போராட்டம், கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்திற்கு எதிரானது. இந்த போராட்டத்தை பெருளவுக்கு ஒருங்கிணைத்தது தமிழரசு கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள். சுமந்திரன் அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன் கட்சிக்காரர்களும் உட்பட பெருமளவிலான ஆட்களை அங்கே கொண்டு வருவதற்காக உழைத்தார். ஆயிரத்தை தாண்டாத ஜனத்தொகை அங்கே வந்திருந்தது. தமிழரசுக் கட்சியோடு இப்பொழுது உறவாடி வரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அங்கு காணப்பட்டார்கள்.

ஆனால் தமிழ்த்  தேசிய மக்கள் முன்னணியை மையமாகக் கொண்ட தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்தவர்களை அங்கே காண முடியவில்லை. நெடுங்கேணிப் போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ரில்கோ விருந்தினர் விடுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கடல் தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு இடம்பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர்கள் அந்தச் சந்திப்பில் காணப்பட்டார்கள்.

நீரைக் கொடுத்து நிலத்தைப் பறிக்கும் நீர் முகாமைத்துவத் திட்டமாகிய கிவுல் ஓயாத் திட்டதுக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராட வேண்டும். எனவே அந்தப் போராட்டத்திற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அதேசமயம் அதற்குள் உட்க்கட்சிப் போட்டிகள் சார்ந்த உள்நோக்கங்களும் உண்டு.

சுமந்திரனைப் பொறுத்தவரை இதுபோன்ற போராட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவருடைய எதிரணி அவரை தமிழ்த் தேசிய நீக்கம் செய்பவர் என்று குற்றம்சாட்சி வருகிறது. எனவே தான் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிரான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பார் என்பதனை அவர் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. மேலும்,கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் கட்சிக்குள் தன்னுடைய தவிர்க்க முடியாமையை நிரூபிப்பதற்காக எல்லாவிதமான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் ஒரு பதில் செயலாளராக கட்சியின் கீழ்மட்டக் கட்டமைப்பை அவர் பெருமளவுக்கு தன்னால் கையாளப்படத் தக்கதாக வடிவமைத்தும் வருகிறார். அதன் விளைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அவர் முன்னைய தேர்தலை விட அதிக முன்னேற்றங்களைக் காட்ட முடிந்தது.

ஆனால் தமிழரசுக் கட்சியின் வாக்குத்தளம் எனப்படுவது தனிய அதன் கீழ்மட்ட கட்டமைப்புப் பலம் மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் அது தமிழ் இன உணர்வுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு வாக்குத் தளம். அந்த வாக்குத்தளத்தைக் கைப்பற்றுவது என்று சொன்னால் தன்னை புத்திசாலியான ஒரு தலைவராகக் காட்டிக் கொண்டால் மட்டும் போதாது. அதைவிட முக்கியமாக தமிழ் இன உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஒரு தலைவர் என்றும் நிரூபிக்க வேண்டும். எனவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு உண்டு.

அடுத்த உள்நோக்கம்,தமிழ்த் தேசியப் பேரவையைத் தனிமைப்படுத்துவது. அண்மை மாதங்களாக “எக்கிய ராஜ்ய” என்ற தீர்வு முன் வரைபை முன்வைத்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அவர் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறது. இதனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவுகள் முன்னரை விட அதிகம் பகை நிலைக்குச் சென்று விட்டன. அதோடு,சிறீதரனை முன்னணி நெருங்கி வருவதும் சுமந்திரனை ஆத்திரப்படுத்துகிறது.கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளை முன்னணி கையாள முயற்சிக்கிறது என்று அவர் நம்புகிறார். இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர அவர் முயற்சிக்கிறார். அதன் மூலம் பேரவையைத் தனிமைப்படுத்தலாம் என்றும் சிந்திக்கிறார். அதற்கு இது போன்ற போராட்டங்கள் தேவை.

அடுத்த உள்நோக்கம்,மாகாண சபைத் தேர்தல் என்று ஒன்று நடந்தால், அதில் தமிழ் மக்களின் பாரம்பரிய வாக்களிப்புக் கோலத்தின் அடிப்படையில் சிந்தித்தால், தமிழரசுக் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம். அந்த வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு உறவை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதே சமயம் அந்த உறவு தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையை தனிமைப்படுத்த உதவும்.

மேற்சொன்ன உள்நோக்கங்களும் கிவுல் ஓயா போராட்டத்தில் பின்னணியில் இருந்தன. என்றாலும் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராக தமிழ்த் தேசிய உணர்வுகளை கொதி நிலையில் வைத்திருப்பது என்று பார்த்தால் அந்தப் போராட்டத்திற்கு காலகட்ட முக்கியத்துவம் உண்டு. மேலும் அந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்தது சுமந்திரன் அணி என்ற போதிலும் அதில் சிறீதரன் அணியும் கலந்து கொண்டது. ஒரு பொது விடயத்தில் உட்கட்சி முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு சிறீதரன் அவ்வாறு கலந்து கொண்டமை வரவேற்கத்தக்கது.

ஆனால் அந்தப் போராட்டத்தின் பின்னணியில், அடுத்தடுத்த நாள், சிறீதரனுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய நாடாளுமன்றக் குழுத் தலைமைப் பதவி பறிக்கப்பட்டு விட்டது.

கிவுல் ஓயா போராட்டத்திற்கு அடுத்தடுத்த நாள்,அதாவது 04ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் கரிநாள் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். அதுதொடர்பாக அவர்கள் கட்சி முக்கியஸ்தர்களை சந்தித்தும் வந்தார்கள். ஆனால் இந்தச் சந்திப்புகளில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனால் கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரன்,சிவஞானம் போன்றவர்களைக் காண முடியவில்லை. எனினும் ஏனைய தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அங்கே காணப்பட்டார்கள். கிளிநொச்சியில் உள்ள சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்களும் காணப்பட்டார்கள். ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரும் காணப்பட்டார்கள்.

IMG-20260207-WA0016-1024x576.jpg

மட்டக்களப்பில் கரி நாள்

அவர்களைவிட காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும்  சங்கங்களைச் சேர்ந்தவர்களும், ஏற்கனவே இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் அங்கு அதிகமாகக் காணப்பட்டார்கள். கிழக்கிலும் அதுபோன்ற ஓர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதாவது கரிநாள் போராட்டம் ஒப்பீட்டளவில் தாயகம் தழுவியதாகக் காணப்பட்டது.

இப்படிப் பார்த்தால் கடந்த கிழமை மிகக்குறுகிய நாள் இடைவெளிக்குள் நடந்த மூன்று ஆர்ப்பாட்டங்களிலும் பெரியது கிளிநொச்சி ஆர்ப்பாட்டந்தான். அது ஒப்பீட்டளவில் பெரியது, எழுச்சிகரமானது;வடக்கு கிழக்காக தாயகம் கழுவியதாக காணப்பட்டது. அனைத்துக் கட்சி பரிமாணத்தை அதிகமாகக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டவருக்காகப் போராடும் அமைப்புக்களும் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

மாணவர்கள் முன்னணிக்கு வரும்பொழுது கட்சி பேதங்களைக் கடந்து பெருந் திரளைக் கொண்டுவர முடியும் என்பதற்கு அது ஆகப்பிந்திய ஓர் உதாரணம் ஆகும்.கட்சிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் மக்களும் தொண்டர்களும் கட்சி கடந்து ஒருங்கிணைக்கப்படும்போது இனமாகத் திரள்வார்கள் என்ற நம்பிக்கையைப் பலப்படுத்திய ஆர்ப்பாட்டம் அது.

https://www.nillanthan.com/8121/

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

2 weeks ago

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது ; வெலிஓயா சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சி கடும் விசனம்

08 Feb, 2026 | 11:58 AM

இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் அவ்வாறானதாக இல்லை என்பதற்கு மணலாறு (வெலிஓயா) ஒரு உதாரணமாகும். அரசாங்கம் சொல்வது ஒன்றும், செய்வது வேறொன்றுமாக இருக்கின்றது.

மொழி உரிமை மிகமுக்கியம் எனக் கூறிக்கொண்டு, மறுபுறம் அவ்வுரிமை மறுக்கப்படுகின்றது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், அக்கூட்டம் வழமைக்கு மாறாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றமை குறித்து நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, 

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 3 ஆம் திகதி நடைபெற்றது. மணலாறு தற்போது வெலிஓயா எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பது குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தக் கூட்டத்தில் வவுனியா வடக்கு மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச சபை என்பவற்றின் தவிசாளர்கள் கலந்துகொள்வது வழமையாகும். ஒவ்வொரு முறையும் இக்கூட்டத்துக்கு வவுனியா வடக்கு தவிசாளர் கிருஷ்ணவேனி சமுகமளிப்பார்.

இக்கூட்டத்தில் பங்கேற்பவர்களில் அநேகமானோர் தமிழர்களாவர். அதன்படி இந்தக் கூட்டம் இதுவரை காலமும் மொழிபெயர்ப்புடனேயே நடைபெற்றுவந்தது. ஆனால் இம்முறை இக்கூட்டம் நடைபெறவதற்கு முதல்நாள் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக சகலரும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தோம்.

இத்தகைய பின்னணியில் மறுநாள் இந்தக் கூட்டம் நடைபெற்றபோது வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளருக்கு வழமையாக ஆசனம் ஒதுக்கும் இடத்தில் ஆசனம் ஒதுக்கப்படவில்லை. மாறாக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருடன் அமரமுடியாது எனவும், ஆகவே கீழே அமருமாறும் கூறப்பட்டது.

இருப்பினும் இருக்கையை வழமைக்கு மாறாக மாற்றமுடியாது எனக் குறிப்பிட்ட தவிசாளர் மேடையிலேயே அமர்ந்தார். அதன் பின்னர் இக்கூட்டம் முழுமையாக தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே நடைபெற்றது. மொழிபெயர்ப்பு கோரிய போதிலும், அது வழங்கப்படவில்லை. ஆகையினால் தவிசாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

தேசிய சுதந்திரதினக்கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட தாம் அனைவரும் இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவது கிடையாது எனவும், மாறாக நாம் நடத்திய போராட்டமே இனவாதப் போராட்டம் எனவும் கூறியிருந்தார்.

அவ்வாறிருக்கையில் வவுனியா வடக்கு தவிசாளரையும், அங்கிருந்த மக்களையும் புறக்கணித்து, மொழிபெயர்ப்பு இல்லாமல், கூட்டத்தைத் தனிச்சிங்களமொழியில் நடத்தியமையை எவ்வாறு வர்ணிப்பது என்பதே இப்போது எமக்கு இருக்கும் கேள்வியாகும். இதனை இனவாதம் என்பதா? இல்லாவிடின் வேறு எவ்வாறு கூறுவது? எனக் கேள்வி எழுப்பினார்.

https://www.virakesari.lk/article/238141

பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

2 weeks ago

பாடசாலைகளில் முறையற்ற வசூலிப்புக்களை தடுப்பதற்கு சுற்றறிக்கையை வெளியிடுங்கள் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

08 Feb, 2026 | 01:08 PM

image

(நமது நிருபர்)

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் முறையற்ற பண வசூலிப்பு நடவடிக்கைகளை உடனடியாகத் தடுப்பதற்கு அரசாங்கம் முறையான சுற்றறிக்கையை வெளியிட வேண்டுமெனஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை ஆசிரியர் சங்கக் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிடுகையில்,

பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரினி அமரசூரிய பாடசாலைகளில் இனிமேல் பண வசூலிப்பு இடம் பெறாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய நிலையில் முழுப் பாடசாலைக் கட்டமைப்பும் பெற்றோரின் பணத்திலேயே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே கசப்பான உண்மையாகும்.

2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலையின் முழுச் செலவையும் மாணவர்களின் எண்ணிக்கையினால் பிரித்து பெற்றோரிடம் அறவிடும் முறைமையே தற்போதும் தொடர்கிறது. குறிப்பாக, பிரபல்யமான பாடசாலைகளில் வர்ணம் பூசுதல்  தளபாடங்கள் திருத்தம் செய்தல் போன்ற காரணங்களைக் கூறி ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 3000 முதல் 5000 ரூபா வரை பணம் அறவிடப்படுகிறது. 

இவ்வாறான வசூலிப்புகள் பாடசாலை வங்கிக் கணக்குகளில் இடப்படாமல் வகுப்புக் குழுக்கள் என்ற பெயரில் தனிப்பட்ட பெற்றோரின் கணக்குகளில் வைப்பிலிடப்படுகின்றன. இதன் மூலம் பாடசாலை நிர்வாகம் இதற்கும் தமக்கும் தொடர்பில்லை எனக் காட்டிக்கொள்ள முற்படுகிறது.

கல்வி அமைச்சரின் வெற்று வார்த்தைகளால் மட்டும் இதனைத் தடுத்துவிட முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்று ' எனது வாய்ச் சொல்லே சுற்றறிக்கை' என்று கூறாமல் கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் . அந்தச் சுற்றறிக்கையை மீறுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையும் அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அத்துடன் பல முன்னணிப் பாடசாலைகளின் கணக்குகளில் பல கோடி ரூபா பணம் நிலையான வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முறையான கணக்காய்வு நடத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி என்பது உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாயின் பெற்றோர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நிதிப் பாரம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

முறையான திட்டமிடல் இன்றி அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் இச் செயற்பாடுகள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் எனவும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/238150

கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி

2 weeks ago

கிழக்கின் முக்கிய சுற்றுலாத்தலத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை: சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கடும் அவதி

08 Feb, 2026 | 03:41 PM

கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், காத்தான்குடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்குக் குறித்த கட்டாக்காலி நாய்களினால் பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் இவை மனிதர்களைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

20260131_094614.jpg

20260131_094838.jpg

https://www.virakesari.lk/article/238159

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

2 weeks ago

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது

08 February 2026

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

https://hirunews.lk/tm/445276/sridelo-party-leader-p-udayarasa-arrested

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்

2 weeks ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி யாழில் போராட்டம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்துச் செய்யுமாறும், அதற்குப் பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்துமாறு கோரியும் யாழ்ப்பாண நகரில் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடைபெற்றது. 

அத்துடன் லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு காரணங்களைக் கூறி நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறுவதற்குப் போராட்டக்காரர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட உடனடியாக முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பலத்த கோஷங்களை எழுப்பினர். 

இதில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய சமூக உரிமைகளுக்கான இயக்கம் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களச் சகோதரர்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmlaxmt2f0000356ng17zf1vu

டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா

2 weeks ago

டித்வா உதவிக்காக 22 மில்லியன் டொலர் நாட்டுக்கு - ஐ.நா

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கைக்கான மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்திற்கு இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைத்துள்ளதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த டிசம்பர் மாதம் முதல் 2026 ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் டித்வா' புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 35.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்பார்க்கும் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 

அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நாடுகளிடமிருந்து நிதியுதவி கிடைத்துள்ளது. 

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் அண்மைய தரவுகளின்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இதுவரை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 216,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் கல்வி, உணவு, போசணை, பாதுகாப்பு, சுகாதாரம், தங்குமிடம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 

கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் மற்றும் மண்சரிவு சேதங்கள் 'டித்வா' புயலினால் ஏற்பட்டதோடு, இது நாட்டின் 25 மாவட்டங்களிலும் உள்ள சுமார் 2.2 மில்லியன் மக்களைப் பாதித்தது. 

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்படி, 2025 டிசம்பர் 29 ஆம் திகதியாகும் போது புயல் காரணமாக 646 பேர் உயிரிழந்துள்ளதுடன், 173 பேர் காணாமல் போயுள்ளனர். 

புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்கு ஐக்கிய நாடுகள் சபை, மனிதாபிமான பங்காளிகள், சர்வதேச மற்றும் தேசிய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனியார் துறையினதும், இருதரப்பு மற்றும் பலதரப்பு உதவிகளின் ஆதரவும் கிடைக்கிறது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கு தேவையான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை அனர்த்த முகாமைத்துவ நிலையம், அமைச்சுக்கள், மாவட்ட மற்றும் பிரதேச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

https://adaderanatamil.lk/news/cmldqjgy6000d356ng4c71y94

மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?

2 weeks ago

மத்திய கிழக்கு விவகாரம்: வாஷிங்டனில் ட்ரம்ப் – நெதன்யாகு முக்கிய சந்திப்பு! ஈரானுக்கான மிரட்டலா?

adminFebruary 8, 2026

Tr2.png?fit=922%2C615&ssl=1

அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வாஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கைக் கட்டுப்படுத்துவது குறித்து நெதன்யாகு அழுத்தம் கொடுக்க வாய்ப்புள்ளது. காசாவில் அமைதியை நிலைநாட்ட அதிபர் ட்ரம்ப் முன்வைத்துள்ள இரண்டாம் கட்டத் திட்டங்கள் (Phase 2) குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகள் மற்றும் அமெரிக்காவின் இராணுவ ஆதரவு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். கடந்த சில மாதங்களாகவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் மோதல் போக்குக்கு மத்தியில், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

________________________________________

வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இந்த சந்திப்பு, ஈரான் மீதான ‘அதிகபட்ச அழுத்தம்’ (Maximum Pressure) கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஓமனில் நடைபெற்று வரும் மறைமுக பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேலின் கவலைகளையும் உள்ளடக்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார்.

https://globaltamilnews.net/2026/228657/

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
இல‌ங்கை அணியும் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளுட‌ன் வ‌ந்து இருக்கின‌ம்...............இல‌ங்கை அய‌ர்லாந்த‌ சிம்பிலா வென்று விடுவின‌ம்...................

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks ago
முதலில் எனக்கு அதை ஏன் எழுத வேண்டும் என்று உங்கள் மனசாட்சி படி சொல்ல முடியாது அல்லவா?

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks ago
ஒன்றில் சிவ்வப்பாய் இருக்கணும் அல்லது கருப்பாய் இருக்கணும் இந்த இரண்டுக்கும் இடையில் நின்று ஓப்ப்பாரி வைக்கும் அடிமை தொல்லை தங்க முடியலை .

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

2 weeks ago
2009 இதன்பின்புதான் தமிழன்யார்? தமிழ் பேசுபவன்யார்?? தமிழைவைத்துப் பிழைப்பவன்யார்??? என்பதனை அறியமுடிந்தது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
ரசோவை கட்டும் மாந்திரீகம் நம்மிடமிருக்கு ...அதுதான் சாம் கரன் ...இங்கிலாந்து ...பயந்து பயந்தே வென்றுவிட்டது.. நேபாளிக்காரன்களுக்கு ..சூரியவன்சிதான் கோச் போலகிடக்கு உவ்வளவு சனமும் நேபாளத்தில் இருந்து வந்ததுகளோ... மிகப் பெரிய முன்னேற்றம் ..நேபாள்.. எப்படியும் இலங்கைகாரருக்கு வயித்தை கலக்க..தொடங்கியிருக்கும்

நஞ்சுக் கொடியில் பிளாஸ்டிக் துகள் - உயர் நீதிமன்றம் தானாக விசாரணை

2 weeks ago
விரிவானஅறிக்கை வெளிவரும்போது அதனைப் பார்க்கவோ, படிக்கவோ மனித இனம் உலகில் இருக்குமா?????? அறிவு அளவுக்குமிஞ்சிக் கூடியதால்தான் மனித இனம் அணுகுண்டைக் கண்டுபிடித்தது.☠️🫣

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks ago
பாவம் அண்ணை, வயசு போன காலத்தில கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டா….. காலங்காத்தாலா கலர் கலரா கத்த வச்சிட்டானுவோ 😂 அடேய் சுமந்திரா…அண்ணனுக்கு ரத்த கொதிப்பு, மூல கொதிப்பு ஏதும் ஆச்சு… அதுக்கு நீதான் பொறுப்பு அஹங்😂