Aggregator

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

2 weeks ago

images.png?resize=259%2C194&ssl=1

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார்.

13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர்.

“TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1463654

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
அப்கானிஸ்தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது போலவே உள்ளது, நியுசிலாந்திற்கு இது ஒரு கடினமான இலக்கு, ஆனால் நியுசிலாந்தில் நம்பிக்கையுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை. ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
இந்த பி பி எல்லில் காட்டடி அடித்தார், இவரது முதல் சர்வதேச போட்டி அவுஸ்ரேலியாவுடனே ஆரம்பமாகியிருந்தது, அப்போதே ஸ்ராக்கின் புதிய பந்தினை இறங்கி வந்து எல்லைக்கோட்டிற்கு முதலாவது பந்தையே தூக்கி அடித்தார், அது ஒரு நாள் ஆட்டம் என நினைக்கிறேன் வேகமான அவரது ஓட்டம் நியுசிலாந்திற்கு போட்டியினை வெல்ல உதவியிருந்தது, அதன் பின்னர் காணாமல் போய்விட்டார்.

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks ago
இவர் யாருடன் கருது மோதல் இல்லாமல் இருந்திருக்கிறார்? இவரை கட்சிக்குள் நுழைத்த சம்பந்தருடனேயே முரண்பட்டிருக்கிறார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 weeks ago
ஹெட்மயர் அதிரடி அரைச் சதம், ஷெப்பர்ட் ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட் குவியல்; மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 07 Feb, 2026 | 07:37 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஷிம்ரன் ஹெட்மயர் குவித்த அதிரடி அரைச் சதம், ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஸ்கொட்லாந்து தகுதிபெற்றிருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து பங்களாதேஷ் விலகிக்கொண்டதால் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து சி குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்து ஓரளவு திறமையை வெளிப்படுத்தியது. இன்றயை போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்ளைப் பெற்றது. ப்றெண்டன் கிங் (35), அணித் தலைவர் ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரோவ்மன் பவல் 24 ஓட்டங்களையும் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றட் கியூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சபியான் ஷெரிப், ஒலிவர் டேவிட்சன், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (42), டொம் ப்றூஸ் (35) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், ரிச்சி பெறிங்டன் உட்பட கடைசி 7 விக்கெட்கள் வெறும் 32 ஓட்டங்ளுக்கு சரிந்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரைவிட ஜோர்ஜ் மன்சே (19), மார்க் வொட் (15), மெத்யூ க்ரொஸ் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட் - ட்ரிக்கையும் முதலாவது 5 விக்கெட் குவியலையும் ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்து பலத்த பாராட்டைப் பெற்றார். அத்துடன் அவர் ஒரே ஓவரில் நால்வரை ஆட்டம் இழக்கச் செய்தார். 3 ஓவர்கள் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர் https://www.virakesari.lk/article/238095 அமெரிக்காவுடனான போட்டியில் அரைச் சதம் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவ் Published By: Vishnu 07 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையை இந்தியா இலகுவாக அடையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது போன்று இந்தியாவும் எதிர்நோக்குமோ என்ற ஒரு நிலை இந்தப் போட்டியில் காணப்பட்டது. இப் போட்டியின் 13ஆவது ஓவரில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. அதிரடிக்கு பெயர்பெற்ற அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (20), திலக் வர்மா (25), ஷிவம் டுபே (0), ரின்கு சிங் (6), ஹார்திக் பாண்டியா (5) ஆகிய ஆறு பேரும் ஆட்டம் இழந்திருந்தனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக அமெரிக்கா விளங்கியது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைவருக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தார். ஆரம்பத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட பின்னர் அதிரடியில் இறங்கினார். 13ஆவது ஓவர் நிறைவில் 22 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாதவ், 20 ஓவர்கள் நிறைவில் அடுத்த 27 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இதில் 10 பவுண்டறிகளும் 4 சிக்ஸ்களும் அடங்கி இருந்தன. இதனிடையே 14 ஓட்டங்களைப் பெற்ற அக்சார் பட்டேலுடன் 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்தார். பந்துவீச்சில் ஷெட்லி வன் ஷோக்வைக் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்மீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி (37), ஷுபம் ரஞ்சேன் (37) ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மிலிந்த் குமார், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது முழு போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது. எனினும் அமெரிக்க துடுப்பெடுத்தாட்டதில் மற்றைய 8 பேரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ் https://www.virakesari.lk/article/238097

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks ago
நான் சொல்லவந்ததை சொல்லியே தீருவேன், அது எனது சுதந்திரம், அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்களைபோன்றவர்கள் உங்களை தொடர்வர். என்னை நீங்கள் அனுரா காவடி என்று கூறலாம் விடலாம் அது உங்களைப்பொறுத்தது. உங்களின் குணம் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனுராவிற்கு பெருகும் ஆதரவை யாராலும் தடுக்க முடியாது. அனுரா இன்னும் தனது அரசியல் பதவிக்காலத்தை முடிக்கவில்லை, அவரது அரசியல் பதவிக்காலம் முடியும்போது அவர் யார் என்பது புரியும். எத்தனையோ இனவாதம் தலைக்கேறிய ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போது இல்லாத வெறுப்பு ஏன் அனுராமீது என்றுதான் எனக்குப்புரியவில்லை, அப்படியெனில் அவர் கடந்த ஜனாதிபதிகளை விட மாற்றி யோசிக்கிறார் என்பது மட்டும் தெளிவு. ஒருவேளை டக்கிளஸ், சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு அழைத்தது நம் யாழ் போராளிகளுக்கு பிடிக்கவில்லைபோலும்.

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

2 weeks ago
யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு! 08 Feb, 2026 | 10:05 AM யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (06) வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/238121

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

2 weeks ago

யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

08 Feb, 2026 | 10:05 AM

image

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (06)  வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/238121

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
நியூசிலாந்தின் Finn Alan இந்தியாவின் அபிஷேக் சர்மா போல குறைந்த பந்துகளில் கூடிய ஒட்டங்களை பெறக் கூடியவர். தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம்

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

2 weeks ago
சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது) 7 பிப்ரவரி 2026 இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது. 2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது. சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும். மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன. ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும். அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும். மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும். டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன? டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது. லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும். உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும். சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும். லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது. டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன? டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது. இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது. வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது. தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது? இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும். இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும். இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. 1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும். டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன? இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும். ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும். ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன. போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும். 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்). அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும். குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும். வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும். நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை. பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும். ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும். முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம் இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர். அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. 2007 - இந்தியா 2009 - பாகிஸ்தான் 2010 - இங்கிலாந்து 2012 - வெஸ்ட் இண்டீஸ் 2014 - இலங்கை 2016 - வெஸ்ட் இண்டீஸ் 2021 - ஆஸ்திரேலியா 2022 - இங்கிலாந்து 2024 - இந்தியா - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

2 weeks ago

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

டி20 உலகக்கோப்பை - முழு விவரம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது)

7 பிப்ரவரி 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது.

சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை

டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும்.

டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன?

டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது.

லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும்.

சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும்.

லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன?

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது.

இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது.

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது.

தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது?

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும்.

இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும்.

இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.

டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன?

  • இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது.

  • இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும்.

  • ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும்.

  • ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன.

  • போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும்.

  • லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

  • 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்).

  • அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும்.

  • குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும்.

  • வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும்.

  • நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

  • பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும்.

  • ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும்.

முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம்

இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர்.

அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • 2007 - இந்தியா

  • 2009 - பாகிஸ்தான்

  • 2010 - இங்கிலாந்து

  • 2012 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2014 - இலங்கை

  • 2016 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2021 - ஆஸ்திரேலியா

  • 2022 - இங்கிலாந்து

  • 2024 - இந்தியா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

2 weeks ago
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு Published By: Digital Desk 1 08 Feb, 2026 | 09:20 AM தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/238117

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

2 weeks ago

நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

Published By: Digital Desk 1

08 Feb, 2026 | 09:20 AM

image

தபால் கட்டணங்களை நாளை திங்கட்கிழமை (09) முதல் அதிகரிக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், புதிய விலைகள் நாளைய தினம் முதல் அமுலுக்கு வரும் எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/238117

தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண்

2 weeks ago
தேனீக்களிடம் இருந்து 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்நீத்த பெண் பட மூலாதாரம்,Puneet Barnala படக்குறிப்பு,55 வயதான அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், குழந்தைகளைக் காப்பாற்ற தேனீக்களோடு போராடினார். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த திவாரி பிபிசி செய்தியாளர் 7 பிப்ரவரி 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் "காஞ்சன் பாய் துணிச்சலோடு செயல்படாமல் இருந்திருந்தால், எத்தனை குழந்தைகள் இறந்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்." மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தின் ரன்பூர் கிராமத்தில் நீங்கள் யாரிடம் பேசினாலும், அவர்கள் காஞ்சன் பாயின் துணிச்சலையும் தைரியத்தை பற்றியுமான விஷயத்தையே சொல்கிறார்கள். மாவட்ட தலைமையகத்திலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரன்பூரின் அங்கன்வாடி வளாகம், பிப்ரவரி 2 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் தேனீக்களின் தாக்குதலுக்கு உள்ளானது. குழந்தைகளின் சிரிப்பும் குறும்பும் வழக்கமாகக் கேட்கும் இடத்தில், திடீரென்று அலறல் சத்தமும் கூச்சலும் எழும்புகின்றன. அதே அங்கன்வாடி வளாகத்தில் ஆரம்பப் பள்ளி மதியம் 2 மணி முதல் இயங்குகிறது, அங்கன்வாடியைச் சுற்றி கூடியிருந்த குழந்தைகளை தேனீக்கள் கூட்டம் தாக்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். அப்போது வளாகத்தில் சுமார் 20 முதல் 25 குழந்தைகள் இருந்தனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஓடிய காஞ்சன் பாய் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே ஒரு பெரிய தேன் கூடு இருந்தது. "தேனீக்கள் நேராக குழந்தைகளை நோக்கி நகர்ந்தன, அங்கே முழுமையான குழப்பம் நிலவியது" என்று பள்ளியின் ஆசிரியரான குணசாகர் ஜெயின் கூறுகிறார். அதே நேரத்தில், அங்கு இருந்த 55 வயதுடைய அங்கன்வாடி உதவியாளர் காஞ்சன் பாய், நிலைமையை உணர்ந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஓடினார். குழந்தைகளை உள்ளே அழைத்துச் செல்வதில் காஞ்சன் பாய் நேரத்தை வீணாக்கவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அங்கன்வாடியில் வைக்கப்பட்டிருந்த பாய்கள் மற்றும் போர்வைகளால் குழந்தைகளை மூடினார், பின்னர் தனது புடவையால் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அவரது துணிச்சலான செயல் அவரது சொந்த பேரன் உட்பட சுமார் 25 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியது, ஆனால் தேனீக்களின் தாக்குதலில் அவர் மோசமாக காயமடைந்திருந்தார், மருத்துவமனையை அடைந்ததும், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். "ஜவாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரன்பூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் திங்கள்கிழமை பிற்பகல் தேனீக்கள் தாக்கிய சம்பவம் நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த காஞ்சன் பாய், குழந்தைகளை காப்பாற்ற முயன்றார். காஞ்சன் பாய் தேனீக்களால் காயமடைந்தார், இதனால் அவர் இறந்தார்" என்று நீமுச் காவல் கண்காணிப்பாளர் அங்கித் ஜெய்ஸ்வால் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 'தாயை நினைத்து பெருமைப்படுகிறேன்' பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் மகன் ரவி மேக்வால், தனது தாயை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறுகிறார். காஞ்சன்பாய்க்கு அவரது மகன் ரவி மேக்வால் மற்றும் அவரது கணவர் ஷிவ்லால் ஆகியோர் உள்ளனர். மகன் திருமணமானவர், காஞ்சன்பாய்க்கு ஒரு பேரன் உள்ளார், அவர் அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். காஞ்சன் பாயின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கிறார். காஞ்சன்பாய் உயிர்நீத்ததால் முழு குடும்பமும் துக்கத்தில் இருந்தபோதும் அவரது மகன் ரவி மேக்வால் தனது தாயைப் பற்றி மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார். "நான் அப்போது கிராமத்தில் இல்லை, ஆனால் என் அம்மா டஜன் கணக்கான குழந்தைகளின் உயிரை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை எல்லோரும் என்னிடம் சொன்னார்கள். என் அம்மா மிகவும் அன்பான குணம் கொண்டவர். அவர் அனைவரையும் நேசித்தார், ஆனால் குழந்தைகளை மிகவும் நேசித்தார். குழந்தைகள் கடவுளின் வடிவம் என்று அவர் எப்போதும் கூறுவார். அவர் அவர்களை தனது சொந்த குழந்தைகளாக அல்ல, கடவுளாக நடத்தினார்" என்று ரவி பிபிசியிடம் கூறினார். காஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா தி சுய உதவிக் குழுவின் தலைவராக இருந்தார் மற்றும் அங்கன்வாடி பணிகளை நிர்வகித்தார். அவரது அன்றாட பொறுப்புகளில் சமைத்தல், தண்ணீர் ஊற்றுதல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் ஆகியவை அடங்கும். படக்குறிப்பு,கிராம மக்கள் காஞ்சன்பாயை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடியில் நம்பகமானவராகவும் நினைவில் கொள்கிறார்கள். தனது தாயார் காப்பாற்றிய குழந்தைகளில் தனது சொந்த குழந்தையும் இருந்ததாக ரவி கூறுகிறார். "அவரது உடலில் இருந்து ஐந்து அல்லது ஆறு தேனீக்களின் கொட்டுதல்களும் அகற்றப்பட்டன." தனது தாயாரை நினைவுகூர்ந்து ரவி கூறுகையில், "இந்த வேலையை அவர் ஒருபோதும் வேலையாகக் கருதியதில்லை. இது அவரது வாழ்க்கையின் ஒரு அங்கம். அவர் ஒருபோதும் தாமதமாக வந்ததில்லை, விடுப்பு எடுத்ததும் இல்லை. மிகுந்த சிரமம் காரணமாக அவரால் செல்ல முடியாவிட்டாலும், முதலில் குழந்தைகளுக்கு உணவு மற்றும் தண்ணீரை ஏற்பாடு செய்வார்." என்றார். அந்த நேரத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்ல சுரேஷ் சந்திர மேக்வால் வந்திருந்தார், அவருடைய மகன் அதே அங்கன்வாடியில் படிக்கிறார். "நான் வெளியே எட்டிப் பார்த்தபோது, மேடம் அலறிக் கொண்டிருந்தார், உள்ளே இருந்து குழந்தைகள் அழும் சத்தம் கேட்டது. நான் கொஞ்சம் அருகில் சென்றபோது, தேனீக்கள் தாக்குதல் இருப்பதை உணர்ந்தேன். காஞ்சன் பாய் குழந்தைகளை பாய்கள், விரிப்புகள் மற்றும் தனது சேலையால் மூடினார். அங்கே ஒரு பெரிய தேனீ கூட்டம் இருந்தது" என்று அவர் கூறுகிறார். குழந்தைகளை காப்பாற்ற முயற்சிக்கும்போது காஞ்சன் பாய் ஏராளமான தேனீக்களின் தாக்குதல்களைச் சந்தித்தார். "அன்று அவர் அங்கு இல்லாதிருந்தால், பல குழந்தைகள் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள்" என்று சுரேஷ் கூறுகிறார். கிராம மக்கள் என்ன சொன்னார்கள்? பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாயின் மைத்துனர் திலீப் மேக்வால் அங்கன்வாடிக்கு வருவதற்குள், கஞ்சன் பாய் தரையில் விழுந்துவிட்டார். காஞ்சன் பாயின் மைத்துனரான திலீப் மேக்வால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கன்வாடி தேனீக்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதாகவும் கூறினார். அங்கன்வாடியை அடைந்தபோது நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றதாக திலீப் கூறினார்."நான் காஞ்சன் பாய் தரையில் கிடப்பதைப் பார்த்தேன். அவரது உடலில் நிறைய தேனீக்கள் கொட்டியிருந்தன. சில தேனீக்கள் இன்னும் அங்கேயே இருந்தன. காஞ்சன் பாய் மயக்கமடைந்தார், அவர் வாயிலிருந்து நுரை வந்து கொண்டிருந்தது, அவரால் எதுவும் பேச முடியவில்லை." சம்பவம் நடந்த இடத்தை நினைவு கூர்ந்த திலீப், "அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர், மக்கள் பீதியடைந்தனர். நான் காஞ்சன் பாயை அழைத்துக்கொண்டு ஒரு குழந்தையுடன் வெளியே வந்தேன். அதற்குள் சுரேஷ் சந்திராவும் அங்கு வந்துவிட்டார், அவர் ஆம்புலன்ஸையும் காவல்துறையையும் அழைத்தார்" என்று அவர் கூறினார். போலீஸ் வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்த பிறகு, காஞ்சன் பாய் அருகிலுள்ள சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,கஞ்சன் பாய் கிராமத்தின் ஜெய் மாதா டி சுயஉதவி குழுவின் தலைவராக இருந்து அங்கன்வாடி பணிகளை கையாண்டார். சர்வானியா மகாராஜ் ஆரம்ப சுகாதார மையத்தின் பொறுப்பாளரான சந்தீப் சர்மா பிபிசியிடம் பேசுகையில், "அன்று நான் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இதற்கிடையில், மாலையில், கடுமையான தேனீ தாக்குதலுக்குப் பிறகு ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக PHC யிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது," என்று கூறினார். "அப்போது அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்களின் கூற்றுப்படி, அவர் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே இறந்துவிட்டார். தேனீ தாக்குதலால் அவர் அனாபிலாக்டிக் அதிர்ச்சிக்கு ஆளாகிறார், இது மரணத்தை விளைவிக்கும்." என சந்தீப் சர்மா கூறினார். அனாபிலாக்டிக் அதிர்ச்சி என்பது ஒரு கடுமையான, திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இது ஒரு ஒவ்வாமைக்கு ஆளான சில நிமிடங்களுக்குள் ஏற்படலாம். டாக்டர் சந்தீப்பின் கூற்றுப்படி, தேனீ கொட்டுவது அத்தகைய அதிர்ச்சிக்கு ஒரு நியாயமான காரணமாகும். காஞ்சன் பாயின் மரணம் ரன்பூர் கிராமம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராம மக்கள் அவரை ஒரு அங்கன்வாடி ஊழியராக மட்டுமல்ல, அங்கன்வாடிக்குள்ன் இருக்கும் ஒரு நம்பகமான இருப்பாகவும் அவரை நினைவில் கொள்கிறார்கள். "காஞ்சன் பாய் அங்கு வசித்தபோது, குழந்தைகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதாகவும், அவர்களின் பராமரிப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்" என்று ஒரு கிராமவாசி கூறினார். திலீப் கூறுகையில், தான் குழந்தைகளுடன் அமர்ந்திருக்கும் போது அவர்களுக்கு உணவளிப்பதாகவும், அவர்களுடன் கேலி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் காஞ்சன்பாய் குடும்பம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,காஞ்சன்பாயின் வீட்டுக்கு வெளியே திரண்ட கிராம மக்கள் காஞ்சன் பாய் மறைவுக்கு பிறகு அவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது, நிதி நிலைமை ஏற்கனவே கடினமாக இருந்தது. ரவியின் தந்தை நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு முடங்கிப்போயிருந்தார். "வீட்டின் முழுப் பொறுப்பும் என் அம்மாவின் மீது இருந்தது. என் தந்தையின் சிகிச்சைக்காக ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இதற்காக, நான் என் நிலத்தை விற்க வேண்டியிருந்தது. இன்றும் கூட, மருந்துகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை செலவிடுகிறேன்" என்று ரவி கூறினார். ரவி கூறுகையில், "வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் குடும்பத்திற்காக அம்மா கடுமையாகப் போராடிக் கொண்டிருந்தார். காலையில், வீட்டுப் பொறுப்புகள், தந்தையைப் பராமரித்தல், பின்னர் பள்ளி மற்றும் இடையில், சுய உதவிக்குழுவில் வேலை செய்தல். எப்படி என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவர் எல்லாவற்றையும் சமாளித்தார்." "தேனீக்களின் தாக்குதல் மிகப்பெரியது. குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது காஞ்சன் பாய் உயிரிழந்தார். குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது" என்று கிராம சர்பஞ்ச் லாலாராம் ராவத் கூறுகிறார். கிராம சபை அதன் விதிகளின் கீழ் குடும்பத்திற்கு உதவி வழங்கும் என்று அவர் கூறுகிறார். "அரசாங்கம் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கவும், மகனுக்கு வேலைவாய்ப்பைப் பரிசீலிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." கிராமத்தில் நிலவும் அச்சம் பட மூலாதாரம்,Aakash Srivastava படக்குறிப்பு,தண்ணீர் குழாய் அருகே செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமம் முழுவதும் அச்சம் நிலவுகிறது, அங்கன்வாடிக்கு அருகிலுள்ள கை பம்ப் மட்டுமே முழு கிராமத்திற்கும் நீர் ஆதாரமாக உள்ளது. அதே பகுதியில் ஒரு தேனீக்கூடு இருப்பதால் மக்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். "பள்ளிக் கட்டிடம் பாழடைந்த நிலையில் இருப்பதால், குழந்தைகள் அங்கன்வாடியில் படிக்க வேண்டியுள்ளது. பள்ளியின் நிலையை மேம்படுத்தவும், குழந்தைகள் அங்கன்வாடியில் உட்கார வேண்டிய நிலையை மாற்றும் வகையில், சுற்றுச்சுவர் மற்றும் தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும் நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். எல்லாம் சரியாக இருந்திருந்தால், என் அம்மா அந்த நேரத்தில் அங்கன்வாடியில் இருந்திருக்க மாட்டார்" என்று ரவி கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20d0d1xz5qo

இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'!

2 weeks ago
இலங்கை விஜயத்தை நிறைவு செய்து புறப்பட்டது இந்திய கடற்படைக் கப்பல் 'INS GHARIAL'! Published By: Digital Desk 1 07 Feb, 2026 | 01:45 PM நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான 'INS GHARIAL' தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று 06ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டது. கொழும்பு துறைமுகத்தில் குறித்த கப்பலுக்கு கடற்படை சம்பிரதாயபூர்வமான பிரியாவிடையை வழங்கியது. 'INS GHARIAL' என்ற போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருந்தபோது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள முக்கியமான சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர். மேலும், கப்பலின் கட்டளை அதிகாரிக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே மேற்கு கட்டளைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்றும் நடைபெற்றது. மேலும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் ஒருங்கிணைப்பால் 'INS GHARIAL' போர்க்கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் ஒப்படைக்கப்பட்டதும் இந்தக் உத்தியோகபூர்வ சந்திப்பின் போது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238075