Aggregator

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks ago
மக்களால்... நிராகரிக்கப் பட்ட, "பின் கதவு" சுமந்திரனுக்கு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்... என்ன அலுவல் ? நாடாளுமன்றத்துக்குள்... "காலடி" எடுத்து வைக்க வேண்டாம் என்று தானே.. தமிழ் மக்கள் இவரை, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். சுத்துமாத்து சுமந்திரனுக்கு.. தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பதவியை, மத்திய குழு வழங்கவே இல்லை. வைத்தியர் சத்தியமூர்த்தியின் பதவியை அடாத்தாக எடுத்து... பதில் செயலாளர் என்று ஆரம்பத்தில் சுத்துமாத்து விட்டு, இப்போ... தமிழரசு கட்சியின் செயலாளர் என்று, தனக்குத்தானே "லேபிள்" ஒட்டிக் கொண்டு திரியும், இந்தக் குழப்பவாதிக்கு... தமிழ் மக்கள், விரைவில் பாடம் படிப்பிப்பார்கள். இந்த மனிதன் செய்யும்... "நரக" வேலைகளால், தமிழ் மக்களின் முக்கியமான பல விடயங்கள் மழுங்கடிக்கப் பட்டுக் கொண்டிருப்பது... இந்தப் "பைத்தியக்காரனுக்கு" இன்னும் விளங்கவில்லையா.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்

2 weeks ago
சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

2 weeks ago
டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை. டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார். 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர். “TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார். இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது. இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1463654

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

2 weeks ago

images.png?resize=259%2C194&ssl=1

டிக்டொக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை.

டிக்டொக் (TikTok) செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

TikTok மீதான விசாரணையின் ஆரம்ப முடிவுகளை வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியம், செயலியில் உள்ள சில முக்கிய அம்சங்கள் போதைப்பொருளைப் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக எல்லையற்ற ஸ்க்ரோல் (Infinite Scroll) , தானாக இயங்கும் காணொளிகள் (Autoplay), புஷ் அறிவிப்புகள் (Push Notifications), தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை (Algorithms), இவை சிறுவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும், இது டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) மீறும் செயல் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 பெப்ரவரியில் தொடங்கப்பட்ட இந்த விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட சில தரவுகளை ஐரோப்பிய ஒன்றிய செய்தித் தொடர்பாளர் தோமஸ் ரெக்னியர் (Thomas Regnier) மேற்கோள் காட்டினார்.

13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களால் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமாக TikTok உள்ளது. 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 7 சதவீதமானோர் நாளொன்றுக்கு 4 முதல் 5 மணிநேரம் வரை இந்தச் செயலியில் செலவிடுகின்றனர்.

“TikTok தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென் (Henna Virkkunen) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, விதிகளை மீறும் பட்சத்தில், TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘பைட் டான்ஸ்’ (ByteDance) இன் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையம் அச்சுறுத்தியுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகளை முற்றாக மறுத்துள்ள TikTok செய்தித் தொடர்பாளர், “ஒன்றியத்தின் இந்த ஆரம்ப முடிவுகள் எமது தளத்தைப் பற்றிய தவறான மற்றும் தகுதியற்ற சித்தரிப்பாகும். இதனைச் சவாலுக்கு உட்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1463654

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
ஆட்டங்கண்டது நியுசிலாந்து. அடுத்தடுத்த இரண்டு விக்கட்டுகள். அதுவும் அடித்தாடக்கூடிய இருவர். ஆப்கானிஸ்தானின் வாய்ப்புகள் பிரகாசமாயுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
அப்கானிஸ்தான் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளது போலவே உள்ளது, நியுசிலாந்திற்கு இது ஒரு கடினமான இலக்கு, ஆனால் நியுசிலாந்தில் நம்பிக்கையுள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
182 ஓட்டங்கள். நியுசிலாந்துக்கு இது பெரிய ஓட்டம். அவர்கள் 180க்கு மேல் துரத்தியதில்லை. ஆப்கானிஸ்தானைத் தெரிவு செய்த அவ்விருவரும் மகிழ்ந்திருப்பார்கள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks ago
இந்த பி பி எல்லில் காட்டடி அடித்தார், இவரது முதல் சர்வதேச போட்டி அவுஸ்ரேலியாவுடனே ஆரம்பமாகியிருந்தது, அப்போதே ஸ்ராக்கின் புதிய பந்தினை இறங்கி வந்து எல்லைக்கோட்டிற்கு முதலாவது பந்தையே தூக்கி அடித்தார், அது ஒரு நாள் ஆட்டம் என நினைக்கிறேன் வேகமான அவரது ஓட்டம் நியுசிலாந்திற்கு போட்டியினை வெல்ல உதவியிருந்தது, அதன் பின்னர் காணாமல் போய்விட்டார்.

தமிழரசில் சிறீதரனைத் தவிர மற்றைய 7 எம்.பிக்களுடன் சுமந்திரன் சந்திப்பு!; சிறீநேசனுடன் கருத்து மோதல்

2 weeks ago
இவர் யாருடன் கருது மோதல் இல்லாமல் இருந்திருக்கிறார்? இவரை கட்சிக்குள் நுழைத்த சம்பந்தருடனேயே முரண்பட்டிருக்கிறார்.

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

2 weeks ago
ஹெட்மயர் அதிரடி அரைச் சதம், ஷெப்பர்ட் ஹெட்-ட்ரிக்குடன் 5 விக்கெட் குவியல்; மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி Published By: Vishnu 07 Feb, 2026 | 07:37 PM (நெவில் அன்தனி) மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற சி குழுவுக்கான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஷிம்ரன் ஹெட்மயர் குவித்த அதிரடி அரைச் சதம், ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்த ஹெட்-ட்ரிக் என்பன மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிபெறச் செய்தன. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு ஸ்கொட்லாந்து தகுதிபெற்றிருக்கவில்லை. ஆனால், இந்தியாவில் தங்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்து பங்களாதேஷ் விலகிக்கொண்டதால் பங்களாதேஷுக்கு பதிலாக ஸ்கொட்லாந்து சி குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஸ்கொட்லாந்து ஓரளவு திறமையை வெளிப்படுத்தியது. இன்றயை போட்டியில் முதலில் துடப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்ளைப் பெற்றது. ப்றெண்டன் கிங் (35), அணித் தலைவர் ஷாய் ஹோப் (19) ஆகிய இருவரும் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 37 பந்துகளில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு உரமூட்டினர். ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 2 பவுண்டறிகள், 6 சிக்ஸ்கள் அடங்கலாக 64 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் ரோவ்மன் பவல் 24 ஓட்டங்களையும் ஷேர்பெய்ன் ரதர்பர்ட் 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்றட் கியூரி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சபியான் ஷெரிப், ஒலிவர் டேவிட்சன், மைக்கல் லீஸ்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (42), டொம் ப்றூஸ் (35) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், ரிச்சி பெறிங்டன் உட்பட கடைசி 7 விக்கெட்கள் வெறும் 32 ஓட்டங்ளுக்கு சரிந்ததால் ஸ்கொட்லாந்து தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் அவர்கள் இருவரைவிட ஜோர்ஜ் மன்சே (19), மார்க் வொட் (15), மெத்யூ க்ரொஸ் (11) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் முதலாவது ஹெட் - ட்ரிக்கையும் முதலாவது 5 விக்கெட் குவியலையும் ரொமாரியோ ஷெப்பர்ட் பதிவு செய்து பலத்த பாராட்டைப் பெற்றார். அத்துடன் அவர் ஒரே ஓவரில் நால்வரை ஆட்டம் இழக்கச் செய்தார். 3 ஓவர்கள் பந்துவீசிய ரொமாரியோ ஷெப்பர்ட் 20 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சிரேஷ்ட வீரரும் முன்னாள் தலைவருமான ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிம்ரன் ஹெட்மயர் https://www.virakesari.lk/article/238095 அமெரிக்காவுடனான போட்டியில் அரைச் சதம் குவித்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்ட சூரியகுமார் யாதவ் Published By: Vishnu 07 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (07) இரவு நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் சூரியகுமார் யாதவ் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. ஆனால், இந்த மொத்த எண்ணிக்கையை இந்தியா இலகுவாக அடையவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் ஐக்கிய அமெரிக்கா வீழ்த்தியது போன்று இந்தியாவும் எதிர்நோக்குமோ என்ற ஒரு நிலை இந்தப் போட்டியில் காணப்பட்டது. இப் போட்டியின் 13ஆவது ஓவரில் இந்தியா 6 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்ற பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது. அதிரடிக்கு பெயர்பெற்ற அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (20), திலக் வர்மா (25), ஷிவம் டுபே (0), ரின்கு சிங் (6), ஹார்திக் பாண்டியா (5) ஆகிய ஆறு பேரும் ஆட்டம் இழந்திருந்தனர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக அமெரிக்கா விளங்கியது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் மறு பக்கத்தில் சூரியகுமார் யாதவ் தலைவருக்கே உரித்தான பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுத்தார். ஆரம்பத்தில் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்ட பின்னர் அதிரடியில் இறங்கினார். 13ஆவது ஓவர் நிறைவில் 22 பந்துகளில் 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த யாதவ், 20 ஓவர்கள் நிறைவில் அடுத்த 27 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இதில் 10 பவுண்டறிகளும் 4 சிக்ஸ்களும் அடங்கி இருந்தன. இதனிடையே 14 ஓட்டங்களைப் பெற்ற அக்சார் பட்டேலுடன் 8ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களை சூரியகுமார் யாதவ் பகிர்ந்திருந்தார். பந்துவீச்சில் ஷெட்லி வன் ஷோக்வைக் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹர்மீத் சிங் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 162 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசையில் மிலிந்த் குமார் (34), சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி (37), ஷுபம் ரஞ்சேன் (37) ஆகிய மூவர் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். மிலிந்த் குமார், சஞ்சய் கிரிஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இந்த இணைப்பாட்டமானது முழு போட்டியிலும் சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது. எனினும் அமெரிக்க துடுப்பெடுத்தாட்டதில் மற்றைய 8 பேரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. பந்துவீச்சில் மொஹம்மத் சிராஜ் 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அக்சார் பட்டேல் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ் https://www.virakesari.lk/article/238097

யாழ் சுழிபுரத்தில் கோடிகளில் பாடசாலை கட்டிக்கொடுத்த அமெரிக்க வைத்தியர் குடும்பம்

2 weeks ago
நான் சொல்லவந்ததை சொல்லியே தீருவேன், அது எனது சுதந்திரம், அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. உங்களைபோன்றவர்கள் உங்களை தொடர்வர். என்னை நீங்கள் அனுரா காவடி என்று கூறலாம் விடலாம் அது உங்களைப்பொறுத்தது. உங்களின் குணம் இங்கு எல்லோருக்கும் தெரியும். ஆனால் அனுராவிற்கு பெருகும் ஆதரவை யாராலும் தடுக்க முடியாது. அனுரா இன்னும் தனது அரசியல் பதவிக்காலத்தை முடிக்கவில்லை, அவரது அரசியல் பதவிக்காலம் முடியும்போது அவர் யார் என்பது புரியும். எத்தனையோ இனவாதம் தலைக்கேறிய ஜனாதிபதிகள் ஆட்சி செய்த போது இல்லாத வெறுப்பு ஏன் அனுராமீது என்றுதான் எனக்குப்புரியவில்லை, அப்படியெனில் அவர் கடந்த ஜனாதிபதிகளை விட மாற்றி யோசிக்கிறார் என்பது மட்டும் தெளிவு. ஒருவேளை டக்கிளஸ், சிவநேசதுரை சந்திரகாந்தனை விசாரணைக்கு அழைத்தது நம் யாழ் போராளிகளுக்கு பிடிக்கவில்லைபோலும்.

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

2 weeks ago
யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு! 08 Feb, 2026 | 10:05 AM யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (06) வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/238121

கடன்சுமை காரணமாக யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

2 weeks ago

யாழில் இளைஞன் உயிர்மாய்ப்பு!

08 Feb, 2026 | 10:05 AM

image

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

இளவாலை - அக்கத்தானை இளவாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.

அவர் வெள்ளிக்கிழமை (06)  வேலைக்கென அவர் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சண்டிலிப்பாய் - அந்திரான் வாய்க்காலில் உள்ள துருசில் சுருக்கு மாட்டிய நிலையில் நேற்று சனிக்கிழமை (07) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உறவினர்களிடம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் கடன்சுமை காரணமாக ஏற்பட்ட மன விரக்தியில் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். இது குறித்து விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/238121