Aggregator

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

2 weeks 6 days ago
கிம் இன் பிரசன்னம் கிம்முக்கு பெரிது தான் அனால், இதை கொண்டு சீன வெளியிடும் சமிக்ஞையை எல்லாவற்றிலும் மிகப் பெரிது.

கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..!

2 weeks 6 days ago
https://www.errimalai.com/?p=53311 2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது. சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி ,ராதாவான் காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோட்டார் படையணி, கிட்டுப்பீரங்கிப் படையணி , சண்டைவாகன அணி, வழங்கல் அணி, மருத்துவ அணி பின்னனியிலும் என சண்டை நகர்தப்பட்டுக் கொண்டிருந்தது. இவ்வேளைகளில் வடபோர்முனையின் வலது பக்கமாக இம்ரான் பாண்டியன்படையணி, சோதியா படையணி மற்றும் ராதா படையணியின் விசேட அணியும் [கனரக ஆயுத அணி], இடது பக்கமாக சாள்ஸ் அன்ரனி படையணியும் மாலதி படையணியும் கிளாலி கரையோரமாக அரசியல் துறையினரும் ராதாபடையணியின் ஓர் அணியினரும் களம் இறக்கப்பட்டனர். இதில் கிளாலி கடல் நீரேரி ஊடாக லெப் கேணல் ராணி மைந்தன் கடற்புலிகளின் வீரம் சொறிந்த தாக்குதல் பல வற்றில் லெப்.கேணல் இரும்பொறையுடன் செயற்பட்ட நல்ல போர்வீரன் தலைமையில் அரசியல் துறை போராளிகள் தரையிறக்கம் நடைபெற்ற போது அந்த தரையிறக்கம் சாதகமற்றதாகிப் போனதால் லெப்கேணல் ராணிமைந்தன் தானே முன்வந்து கிளாலி முன்னரங்கினை நோக்கி முன்னேற முயன்ற வேளை வீரச்சாவை தழுவிக்கொண்டான். இப்போது சண்டை மாற ஆரம்பித்தது. கிளாலி பகுதியில் இருந்தும் யாழில் இருந்து பிராதான வீதீயூடாகவும் நாகர் கோயில் பகுதியில் இருந்தும் இராணுவம் ஊடறுப்பு சண்டையினை சமநேரத்தில் ஆரம்பித்தது. இதன்போது பலத்த எறிகணைைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன ஒருபுறமும் எழுதுமட்டுவாழில் இரகசிய மண்ணரண் அமைத்து இராணுவம் தாக்க ஆரம்பி்க்கவும் சண்டையின் போக்கு தலைகீழாகிப் போனது. 14 ஆம் திகதி மதியத்தின் பின் எதிரி தனது மூன்றாவது மண்ணரணை மீளவும் கைப்பற்றி கொள்ளவும் பக்கவாட்டாக நகர்ந்த இராணுவ அணியை புலிகள் துவம்சம் செய்ய சண்டையின் போக்கு எமக்கு சாதமாக மாறத் தொடங்கியது. மீண்டும் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்தது. இதில் சண்டையின் போக்கினை மாற்றியது சோதியா படையணியின் லெப்.கேணல் செல்வி தலைமையிலான போராளிகளும் ராதா படையணியின் சினைப்பர் அணி, உந்துகணை அணியும் ஆவர். இதில் மோட்டார் மற்றும் ஆட்லறி அணியினரின் சூட்டாதரவு முக்கிய பங்காற்றியது முக்கியமாகும். இவ்வாறு சண்டை மாற இரண்டு காரணங்கள்: ஒன்று தளபதி தீபன் அண்ணருடன் தளபதி பால்ராஜ் அண்ணா கைகோர்த்தமை போராளிகளின் உக்கிரமான தாக்குதலாகும். எதிரியின் மொனிற்றரிங் அணி இரானுவ தளபதிக்கு பால்ராஜ் அண்ணரின் வருகை பற்றியும் சண்டையில் போராளிகள் உக்கிர தாக்குல் பற்றியும் தெரிவிக்க வெலவெலத்துப்போன இராணுவத் தலைமை கேழைத்தனமான தாக்குதலை ஆரம்பித்தது. அதுதான் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலாகும். இதன் காரணமாக சண்டை மீதான கவனத்தை விடவும் புலிகளின் முழுக்கவனமும் செஞ்சோலை மீது திரும்பியது. மருத்துவ வழங்கல் உட்படஇதனால் தலைவர் சண்டை நிறுத்தி தற்காப்பு போர்முறைக்கு மாறுமாறு தளபதி தீபனுக்குக் கூற களமுனையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்த புலிகளின் அணிகளால் எதிரியின் பகுதிகளில் ஊடுருவி நின்ற போராளிகளால் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைக் கொண்டுவர முடியவில்லை. காரணம் தொடர் சண்டையின் தாக்கம் ,காயமடைந்த போராளிகள், ஆயுதங்கள் என பெரும்சுமையின் காரணமாக வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலை எதிரியின் பதுங்குகுழிகளிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளைகளில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களே இவைகளாகும். அந்த யுத்தத்தில் எமது தரப்பில் 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர் இதில் 30 க்குட்பட்ட போராளிகளின் வித்துடல்கள் கிடைக்கப் பெறவில்லை. அதில் எம்மால் தவறவிடப்பட்ட போராளிகளது வி்த்துடல்களாகவே இவை இருக்கும்…! கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல் அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!

புலிகளின் யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு - ஓகஸ்ட், 2006

2 weeks 6 days ago

கனத்த நெஞ்சோடு வட போர்முனையின் ஒரு கீற்றின் குரல்..!

https://www.errimalai.com/?p=53311

2006.08.11 அன்று போர் நிறுத்தம் என்கின்ற பொறிக்குள் இருந்து தமிழீழம் என்கின்ற உன்னத இலட்சியத்திற்காக நான்காம் கட்ட ஈழப்போரை தமிழீழ விடுதலைப்புலிகள் ஆரம்பித்தனர். சண்டை வடபோர்முனையின் நான்கு முனைகளூடாக சமநேரத்தில் ஆரம்பித்தது.

சண்டை ஆரம்பித்த [கண்டல் பகுதி, முகமாலை மத்திய பகுதி,இந்திராபுரம் பகுதி , கிளாலி பகுதி] ஒரு மனிநேரத்திற்குள்ளாக எதிரியின் முன்னரங்க பகுதிகளை கடந்து வேகமாக முன்னேறினர் புலிகள். இதில் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி, மாலதி படையணி, சோதியா படையணி, இம்ரான் பாண்டியன் படையணி, ராதா வான்காப்பு விசேட அணிகள் மற்றும் அரசியல் துறையின் சண்டையணி என முன்னரங்குகளிலும் குட்டிசிறி மோட்டார் படையணி, கிட்டுப்பீரங்கிப் படையணி , சண்டைவாகன அணி, வழங்கல் அணி, மருத்துவ அணி பின்னனியிலும் என சண்டை நகர்தப்பட்டுக் கொண்டிருந்தது.

இவ்வேளைகளில் வடபோர்முனையின் வலது பக்கமாக இம்ரான் பாண்டியன்படையணி, சோதியா படையணி மற்றும் ராதா படையணியின் விசேட அணியும் [கனரக ஆயுத அணி], இடது பக்கமாக சாள்ஸ் அன்ரனி படையணியும் மாலதி படையணியும் கிளாலி கரையோரமாக அரசியல் துறையினரும் ராதாபடையணியின் ஓர் அணியினரும் களம் இறக்கப்பட்டனர். இதில் கிளாலி கடல் நீரேரி ஊடாக லெப் கேணல் ராணி மைந்தன் கடற்புலிகளின் வீரம் சொறிந்த தாக்குதல் பலவற்றில் லெப்.கேணல் இரும்பொறையுடன் செயற்பட்ட நல்ல போர்வீரன் தலைமையில் அரசியல் துறை போராளிகள் தரையிறக்கம் நடைபெற்ற போது அந்த தரையிறக்கம் சாதகமற்றதாகிப் போனதால் லெப்கேணல் ராணிமைந்தன் தானே முன்வந்து கிளாலி முன்னரங்கினை நோக்கி முன்னேற முயன்ற வேளை வீரச்சாவை தழுவிக்கொண்டான்.

இப்போது சண்டை மாற ஆரம்பித்தது. கிளாலி பகுதியில் இருந்தும் யாழில் இருந்து பிராதான வீதீயூடாகவும் நாகர் கோயில் பகுதியில் இருந்தும் இராணுவம் ஊடறுப்பு சண்டையினை சமநேரத்தில் ஆரம்பித்தது. இதன்போது பலத்த எறிகணைைத் தாக்குதல், விமானத் தாக்குதல் என்பன ஒருபுறமும் எழுதுமட்டுவாழில் இரகசிய மண்ணரண் அமைத்து இராணுவம் தாக்க ஆரம்பி்க்கவும் சண்டையின் போக்கு தலைகீழாகிப் போனது.

14 ஆம் திகதி மதியத்தின் பின் எதிரி தனது மூன்றாவது மண்ணரணை மீளவும் கைப்பற்றி கொள்ளவும் பக்கவாட்டாக நகர்ந்த இராணுவ அணியை புலிகள் துவம்சம் செய்ய சண்டையின் போக்கு எமக்கு சாதமாக மாறத் தொடங்கியது. மீண்டும் புலிகளின் கை ஓங்க ஆரம்பித்தது.

இதில் சண்டையின் போக்கினை மாற்றியது சோதியா படையணியின் லெப்.கேணல் செல்வி தலைமையிலான போராளிகளும் ராதா படையணியின் சினைப்பர் அணி, உந்துகணை அணியும் ஆவர். இதில் மோட்டார் மற்றும் ஆட்லறி அணியினரின் சூட்டாதரவு முக்கிய பங்காற்றியது முக்கியமாகும்.

இவ்வாறு சண்டை மாற இரண்டு காரணங்கள்: ஒன்று தளபதி தீபன் அண்ணருடன் தளபதி பால்ராஜ் அண்ணா கைகோர்த்தமை போராளிகளின் உக்கிரமான தாக்குதலாகும். எதிரியின் மொனிற்றரிங் அணி இரானுவ தளபதிக்கு பால்ராஜ் அண்ணரின் வருகை பற்றியும் சண்டையில் போராளிகள் உக்கிர தாக்குல் பற்றியும் தெரிவிக்க வெலவெலத்துப்போன இராணுவத் தலைமை கேழைத்தனமான தாக்குதலை ஆரம்பித்தது. அதுதான் முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலாகும். இதன் காரணமாக சண்டை மீதான கவனத்தை விடவும் புலிகளின் முழுக்கவனமும் செஞ்சோலை மீது திரும்பியது. மருத்துவ வழங்கல் உட்படஇதனால் தலைவர் சண்டை நிறுத்தி தற்காப்பு போர்முறைக்கு மாறுமாறு தளபதி தீபனுக்குக் கூற களமுனையிலிருந்து பின்வாங்க ஆரம்பித்த புலிகளின் அணிகளால் எதிரியின் பகுதிகளில் ஊடுருவி நின்ற போராளிகளால் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலைக் கொண்டுவர முடியவில்லை. காரணம் தொடர் சண்டையின் தாக்கம் ,காயமடைந்த போராளிகள், ஆயுதங்கள் என பெரும்சுமையின் காரணமாக வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடலை எதிரியின் பதுங்குகுழிகளிலேயே அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளைகளில் வீரச்சாவடைந்த போராளிகளின் வித்துடல்களே இவைகளாகும்.

FB_IMG_1590509979178-1.jpg

அந்த யுத்தத்தில் எமது தரப்பில் 372 போராளிகள் வீரச்சாவடைந்தனர் இதில் 30 க்குட்பட்ட போராளிகளின் வித்துடல்கள் கிடைக்கப் பெறவில்லை. அதில் எம்மால் தவறவிடப்பட்ட போராளிகளது வி்த்துடல்களாகவே இவை இருக்கும்…!

கனத்த நெஞ்சோடு
வட போர்முனையின்
ஒரு கீற்றின் குரல்

அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம்!

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

2 weeks 6 days ago
LNW Tamilவிக்கிக்கு ஏற்பட்ட நிலையேஅர்ச்சுனாவுக்கும் ஏற்படுமாம் - அ...அரசியலில் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்ப 👆 சுமந்திரனுக்கு விலாங்கு மீன் பட்டம் கொடுத்து எங்கள் யாழ் கள "சுமந்திரன் லவ்வர்ஸ், கணிதப் புலிகள்😎, உசார் மடையர்கள்" என அனைத்து தரப்பினரையும் கிச்சு கிச்சு மூட்டிய "இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின்" தலைவர் ஜெயேந்திரன் இவர் தான்! அடுத்த தேர்தலில் அனுர கட்சியில் போட்டியிடத் தயாராக இருக்கும் ஒரு எதிர்கால "தமிழ் பா.உ"🤣! "...எதிர்வரும் காலத்தில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்"

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

2 weeks 6 days ago
உக்ரேனில் இரவு நேர ரஷ்யத் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு, 38 பேர் காயம்! ரஷ்யப் படைகள் கியேவ் மீது இரவு முழுவதும் பெரிய அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர். மேலும், தாக்குதல் ஏழு மாவட்டங்களில் குடியிருப்பு மற்றும் பிற கட்டிடங்களை சேதப்படுத்தியதாக உக்ரேன் அதிகாரிகள் வியாழக்கிழமை (28) தெரிவித்தனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளுக்கு மத்தியில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதேநேரம் இந்தத் தாக்குதல், இராஜதந்திரத்திற்கு ரஷ்யாவின் பதிலை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அவசர சேவைகள் தீயை அணைத்து, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, நாடு தழுவிய தாக்குதலில் ரஷ்யா ஏவிய 598 ட்ரோன்களில் 563 மற்றும் 31 ஏவுகணைகளில் 26ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1445044

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

2 weeks 6 days ago
"மக்கள் இறக்காமல் இருந்தால் நல்லது" என்பதில் யார் முரண்பட முடியும்? ஆனால், மக்கள் இறப்பையும் மோதலையும் யார் தொடங்கியது, யார் கையில் தடுக்கும் வழி இருக்கிறது என்பதில் அல்லவா நீங்களும் "புரின் புரியன்மாரும்"😎 குழம்பி நிற்கிறீர்கள்? உக்ரைன் சரணடைந்து விட்டால் புரின் சும்மா சுருட்டிக் கொண்டு இருந்து விடுவாரா? 2014 இல் கிரிமியாவை சத்தமில்லாமல் கைப்பற்றிய பின்னர் புரின் சும்மா இருந்தாரா? உக்ரைன் பிரச்சினையில் நிலையெடுத்திருக்கும் சிலருக்கு வரலாறு துண்டறத் தெரியாது. அந்த வெறுமையில் இருந்து அபிப்பிராயங்களை உருவாக்குகிறார்கள் என்பது மீள மீள நிரூபிக்கப் பட்டிருகிறது. உங்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் குழப்பம் தீரவில்லை.

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

2 weeks 6 days ago
ரணிலின் கைதை தொடர்ந்து சில தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என கதை அடிபடுகிறதே, உண்மையா? ரணில் ஊழல் செய்யாதவர் என பேசிக்கொள்கிறார்கள். அப்படியெனில் ஏன் நோயாளி போல் நாடகமாடுகிறார்? "முதுகிலே புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப்பயம்." "மடியிலே கனமில்லாவிடில் வழிப்பயணத்திற்கு பயமில்லையே." ஏன் இவ்வளவு கொந்தளிப்பு இவர் கைது செய்யப்பட்டவுடன்?

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

2 weeks 6 days ago
மக்கள் எழுச்சிக் கட்சி என்றும் ஒரு கட்சி இலங்கையில் உள்ளதா ? ஈழ மக்கள் எழுச்சி கட்சி, தமிழர் எழுச்சி கட்சி என்று இல்லாமல் மக்கள் என்று இருப்பதனால் இது சிங்கலவர்களை கொண்ட பெரிய கட்சியாக இருக்க வேண்டும். சிங்கல மொழி பேசுகின்ற மக்களை கொண்ட கட்சி ஒன்றுக்கு அருள் ஜெயந்திரன் ஒரு தமிழர் தலைவராக இருப்பது மகிழ்ச்சி.

சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு

2 weeks 6 days ago
சிங்கள சம்பந்தி சுமந்திரன்... சிங்கள மக்கள் மத்தியில் வாழ்வது பெருமை என்றெல்லாம் ஆனந்தப் படுபவர், சிங்களவனுக்குத்தானே தனது விசுவாசத்தை காட்டுவார். அந்த சுத்துமாத்தை, நம்புவதற்கும், வெள்ளை அடித்து முட்டுக் கொடுப்பதற்கும்... சில அரைகுறை தற்குறிகளும் இருப்பதுதான் வேடிக்கை. 😂 🤣 தமிழர்கள், ஆபிரஹாம் சுமந்திரனை... தமிழரசு கட்சி தலைவர் தேர்தலிலும், கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும்... செருப்பால் அடிக்காத குறையாக நிராகரித்து வெளியே அனுப்பிய பின்பும்... தமிழர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வெட்கம் இல்லாமல் பிலாக்காய்ப்பால் மாதிரி.... சூடு, சொரணை, ரோசம், மானம் எதுவுமில்லாமல் ஒட்டிக் கொண்டு இருந்து குழப்பத்தை விளைவித்துக் கொண்டு இருக்கிற ஏழரை தான் இந்த சுத்துமாத்து. தமிழருக்கு பிடித்த தரித்திரம் இது. 😵

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

2 weeks 6 days ago
வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்! இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறை என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் தற்போது இன்டர்போலால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்டவர்கள். இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்பு மற்றும் இன்டர்போலின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸாரினால் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், இந்த நாட்டில் அரசியல் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வரலாறு இருப்பதாகவும், தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார். இந்த நாட்டில் செய்யப்படும் பல குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் செல்வாக்கு இல்லாமல் அத்தகைய நபர்கள் தொடர்பாக சட்ட முடிவுகளை எடுக்க பொலிஸாருக்கு தற்போது அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. துபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும். இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார். https://athavannews.com/2025/1444998

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும்

2 weeks 6 days ago
இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும் August 28, 2025 12:33 pm இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆணுறை பயன்பாடு குறித்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற, அறிவை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது. முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது. தற்போது, அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட உயிரிமருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்காமல், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலம் HIV ஐத் தடுக்க முடியும் என மட்டுமே குறிப்பிடுகின்றன என்று ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். ஆணுறை ஊக்குவிப்புக் குழுவின் சமீபத்திய மதிப்பாய்வின் பிரகாரம், இந்த விவரங்கள் இல்லாதது மாணவர்களுக்கு முக்கிய தடுப்பு உத்திகள் குறித்து போதுமான அளவு தகவல்களை அளிக்கவில்லை என்பதை தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் IEC வலியுறுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார். 2024 உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) கண்டுபிடிப்புகள் சீர்திருத்தத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 63% மாணவர்கள் மட்டுமே HIV அல்லது AIDS பற்றி கேள்விப்பட்டதாகக் கூறியுள்ளனர். 2016 இல் 77% ஆக இருந்த இந்த தரவு தற்போது சரிவை சந்தித்துள்ளது. HIV தொற்றைத் தவிர்ப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2016 இல் 67.1% ஆக இருந்தது. 2024 இல் வெறும் 44.2% ஆகக் குறைந்துள்ளது. பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாணவர்களில் 4.6% பேர், சரியான நேரத்தில் கல்வி கற்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள். இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, சுகாதார மேம்பாட்டு பணியகம் யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைந்து, வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் ஒரு புதிய விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது. ஓர் உயிரியல்-உளவியல் சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டம் மாணவர்கள் நடத்தை அபாயங்களை சந்திப்பதற்கு முன்பு வயதுக்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் 264, STD கிளினிக்குகளால் நடத்தப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாக மருத்துவர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார். பாடத்திட்ட சீர்திருத்தத்துடன் ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள் எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார். அதேவேளை , இந்த முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. https://oruvan.com/awareness-about-condom-use-needs-to-be-included-in-sri-lankas-school-curriculum/

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும்

2 weeks 6 days ago

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும்

August 28, 2025 12:33 pm

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வேண்டும்

இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் 10 ஆம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் HIV/STI தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆணுறை பயன்பாடு குறித்து அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய பாடத்திட்டத்தில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்கு வயதுக்கு ஏற்ற, அறிவை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளது.

முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சுகாதார அமைச்சின் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டுத் திட்டம் பரிந்துரைத்துள்ளது.

தற்போது, அறிவியல் மற்றும் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி பாடப்புத்தகங்கள் குறிப்பிட்ட உயிரிமருத்துவ தடுப்பு முறைகளை விவரிக்காமல், “பொறுப்பான பாலியல் நடத்தை” மூலம் HIV ஐத் தடுக்க முடியும் என மட்டுமே குறிப்பிடுகின்றன என்று ஆலோசகர் வெனரியாலஜிஸ்ட் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.

ஆணுறை ஊக்குவிப்புக் குழுவின் சமீபத்திய மதிப்பாய்வின் பிரகாரம், இந்த விவரங்கள் இல்லாதது மாணவர்களுக்கு முக்கிய தடுப்பு உத்திகள் குறித்து போதுமான அளவு தகவல்களை அளிக்கவில்லை என்பதை தேசிய எய்ட்ஸ் கவுன்சிலின் IEC வலியுறுத்தியது,” என்று அவர் கூறியுள்ளார்.

2024 உலகளாவிய பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் (GSHS) கண்டுபிடிப்புகள் சீர்திருத்தத்தின் அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

63% மாணவர்கள் மட்டுமே HIV அல்லது AIDS பற்றி கேள்விப்பட்டதாகக் கூறியுள்ளனர்.  2016 இல் 77% ஆக இருந்த இந்த தரவு தற்போது சரிவை சந்தித்துள்ளது. HIV தொற்றைத் தவிர்ப்பது எப்படி என்று கற்பிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2016 இல் 67.1% ஆக இருந்தது. 2024 இல் வெறும் 44.2% ஆகக் குறைந்துள்ளது.

பாலியல் உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட மாணவர்களில் 4.6% பேர், சரியான நேரத்தில் கல்வி கற்பதற்கான அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்கள்.

இந்த கவலைகளை நிவர்த்தி செய்ய, சுகாதார மேம்பாட்டு பணியகம் யுனெஸ்கோ வழிகாட்டுதல்களுடன் இணைந்து, வாழ்க்கையைக் கற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் ஒரு புதிய விரிவான பாலியல் கல்வி (CSE) தொகுப்பை உருவாக்கி வருகிறது.

ஓர் உயிரியல்-உளவியல் சமூக மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, இந்த திட்டம் மாணவர்கள் நடத்தை அபாயங்களை சந்திப்பதற்கு முன்பு வயதுக்கு ஏற்ற அறிவு மற்றும் திறன்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் 264, STD கிளினிக்குகளால் நடத்தப்பட்டுள்ளன. இது நாடு முழுவதும் 54,000 க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சென்றடைந்ததாக மருத்துவர் தர்மகுலசிங்க குறிப்பிட்டார்.

பாடத்திட்ட சீர்திருத்தத்துடன் ஆசிரியர் பயிற்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். “ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆலோசகர்கள் எச்.ஐ.வி தடுப்பு உத்திகள் குறித்த பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் நம்பிக்கையுடனும் நிலைத்தன்மையுடனும் பாடங்களை நடத்த முடியும்,” என அவர் மேலும் கூறினார்.

அதேவேளை , இந்த முன்னேற்றங்களுக்கு கல்வி அமைச்சு இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.

https://oruvan.com/awareness-about-condom-use-needs-to-be-included-in-sri-lankas-school-curriculum/