Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 3 days ago
7 ஓட்டங்களால் அமோக வெற்றி. இலங்கை எல்லா விதமான தவறுகளைச் செய்தது. பிடிகளைத் தவற விட்டனர். தவறுதலான களத்தடுப்புகள். வங்காளத் தலைவியின் மிக அருமையான ஆட்டம். எல்லாம் சேர்ந்து கடைசிப் பரிமாற்றத்தில் எல்லாம் மாறியது. அதில் முதல் நான்கு பந்துகளில் நான்கு விக்கட்டுகள். பிடியை எடுத்தனர். ஓட்டமிழப்புச் செய்தனர். எல்லாத் தவறுகளும் சரி செய்யப் பட்டன. வெற்றி இனிமையானது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 3 days ago
க‌ட‌சி ஓவ‌ரில் 4விக்கேட் ச‌ம‌ரி அட்ட‌ப‌த்து வ‌வ்............... இல‌ங்கை அணியின் சிற‌ந்த‌ ம‌க‌ளிர் என‌ இந்த‌ திரியில் ஏற்க‌ன‌வே எழுதி இருந்தேன்...........................

இஷாரா செவ்வந்தி புலனாய்வுப் பிரிவில் பயிற்சி பெற்றவரா? முக்கிய தகவல்கள்...

2 weeks 3 days ago
செவ்வந்தியின் புலனாய்வுப் பயிற்சிகளில் Body Double தொடர்பான தகவல்கள் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள உளவுத்துறை அதிகாரிகளுக்கும், ஒரு பயனுள்ள முறையாக உருவாக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு விடயமாக Body Double தந்திரோபாய முறை காணப்படுகிறது. படுகொலையைத் தவிர்ப்பதற்கோ அல்லது எதிரியை வழிதவறச் செய்வதற்கோ ஒரு முறையாகச் செயல்பட இதனை பல அதிகாரத்தவர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இலங்கையை தாண்டி உலகச் செய்திகளிலும் வரிக்கு வரி வெளிப்படுத்தப்படும் கனேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரமும், அதன் சூத்திரதாரியான இஷார தொடர்பான Body Double திட்டமிடல்களும் விசாரணை அதிகாரிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியடைய வைத்திருக்க கூடும் என்பதை கூறியாகவேண்டும். ஒரு நபரை திட்டமிட்டு கொலை செய்து, அந்த கொலையில் இருந்து தப்பித்து நாடுகடந்து சென்று, அங்கு சுற்றிவளைக்கப்பட்டு தற்போது நாட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் இஷார செவ்வந்தி Body Double முறையில் தன்னை மாற்றிக்கொள்ளவும், அதனை கொண்டு ஐரோப்பிய நாட்டுக்கு தப்பித்து செல்ல முடியும் என திட்டமிட்ட விடயங்கள் சாதாரணமானவை அல்ல என்பது சாதாரணமான ஒன்று அல்ல. இது புலனாய்வுகளையும், பல குற்ற பயிற்சிகளையும் பெற்று அதில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இலகுவில் ஊகிக்க முடியாாத சதித்திட்டம். இவ்வாறு இஷாரா தனக்கென ஒரு Body Double - ஐ உருவாக்கி அதன் மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்த விடயங்கள் அந்த விடயங்களின் பின்னணி, மேலும் இஷாராவின் கொலை சதி என்பவற்றை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி... More information about Sevanthi's investigative training, Body Double | Ishara sevanthi | Niraj https://ibctamil.com/article/body-double-in-sewwandi-s-intelligence-training-1760967856

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 3 days ago
நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனியவில் இருந்த போது “கெஹெல்பத்தர பத்மே” எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார் - இஷாரா செவ்வந்தி 20 Oct, 2025 | 04:33 PM நேபாளத்தில் கைதுசெய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ' பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வை படுகொலை செய்வதற்கு முன்னைய நாள் அதாவது பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று நானும் “கமாண்டோ சலிந்து”வும் மித்தெனிய பிரதேசத்தில் தங்கியிருந்தோம். இதன்போது “கெஹெல்பத்தர பத்மே” என்பவர் எங்களை உடனடியாக கொழும்புக்கு செல்லுமாறு கூறினார். பின்னர் நானும் “கமாண்டோ சலிந்து”வும் கொழும்புக்கு சென்றோம். இதனையடுத்து நான் சட்டத்தரணி வேடத்தில், புதுக்கடை நீதிமன்றத்துக்குள் சென்று “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை கொலை செய்ய உதவி செய்தேன்' என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இஷாரா செவ்வந்தியும் “கமாண்டோ சலிந்து”வும் அருண விதானகமமகே ஹேவத் கஞ்சா என்பரை கொலைசெய்வதற்காக மித்தெனியவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு “கணேமுல்ல சஞ்சீவ”வை கொலைசெய்வதற்காக இருவரும் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்”, தக்ஷி என்ற பெண் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர். நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228226

13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?

2 weeks 3 days ago
நான் ஏற்கனவே கூறியபடி இவ்வாறான அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது யாராலும் தமது அலுமாரியில் இருந்து எடுத்து தர முடியாது. பிரச்சனையில் சம்பந்தப்பட்டோர் பேசி தீர்கக வேண்டிய விடயம். பிரியாணி தான் வேண்டும் என்று அடம் பிடித்து தாம் சமைத்த சாப்பாட்டை தாமே கொட்டியவர்கள் சிறிது காலம் பசியிருக்கத்தான் வேண்டும்.

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம். தக்சியின் (முன்னாள்) புரியன் சலீம் என்ற இஸ்லாமியப் பெயரில் நடமாடும் போதைபொருள் வியாபாரி. இது ஒரு பெரிய நெட்வேர்க். தக்சியை கசக்கிற கசக்கில பல உண்மைகள் வெளிவரும்!

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

2 weeks 4 days ago
நான் எதிர் பார்த்த‌ மாதிரி இந்த‌ ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை அமைய‌ வில்லை என்ன‌ தான் நேர‌ம் ஒதுக்கி ப‌ல‌ வ‌ருட‌மாய் ம‌க‌ளிரின் கிரிக்கேட் பார்த்தாலும் , இவையும் ஆண்க‌ளை போல‌ தான் என‌ செய‌லில் காட்டின‌ம்................ இந்தியா தொட‌ர்ந்து மூன்று தோல்வி............................

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

2 weeks 4 days ago
ஒரு தொழில் முனைவர் இலாபம் பார்க்கும் பேராசையில் "தன்னிடம் எவ்வளவு இருக்கிறது?" என்றே எண்ணிப் பார்க்காமல் பல்வேறு தொழில் முயற்சிகளைக் கடன் வாங்கி ஆரம்பித்திருக்கிறார். இப்படியாக பல தொழில் முயற்சிகளை ஆரம்பித்து அவற்றிடையே பணத்தை கட்டுப் பாடுகளின்றி மீள் சுழற்சி (rolling) செய்வது பல நாடுகளில் வியாபார விதிகளை மீறும் ஒரு செயல் (இப்படியாக தன்னுடய இரண்டு கம்பனிகளிடையே பணத்தை சுழற்சி செய்து, அதில் ஒரு கம்பனியில் முதல் போட்டவர்களுக்கு போலி இலாபம் காட்டிய முன்னாள் தொழில் முனைவர் சாண்ட் பாங்க்மான், தற்போது நியூயோர்க் சிறையில் வசிக்கிறார் -அந்தளவுக்கு இது அமெரிக்க சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றம்!). இப்படியான போலி இலாபம், இல்லாத செல்வத்தை இருப்பதாகத் தோற்றம் காட்டி வங்கிகளிடம் கடன் பெற்ற இந்த தொழில் முனைவர், இலாபத்திற்கும் வரி கட்டவில்லை, தன் தொழிற்சாலைகளில் பலவற்றை தொடர்ந்து செயல்படுத்தவும் முடியவில்லை. இதன் பொறுப்பை கடன் கொடுத்தவர்களிடம் சுமத்தி விடுவது மோசடி செய்த தொழில் முனைவரைக் காப்பாற்றும் முயற்சியா அல்லது வாசகர்களை "இதெல்லாம் சகஜம், எனவே நீங்களும் செய்யலாம் பிசினஸ்!"😎 என்று தவறான பாதையில் ஊக்குவிக்கும் நா.மு ஸ்ரைல் அட்வைசா என்பது எனக்கு விளங்கவில்லை. ஒருவர் தனது வீட்டை சமகாலத்தில் தன் கையிலிருக்கும் செல்வத்தை மட்டும் வைத்துத் தான் வாங்க முடியும் என்றால், எங்கள் ஊரில் இருப்பது போல பரம்பரையாக சொத்து வைத்திருப்பவர்கள் போலத் தான் மேற்கு நாடுகளிலும் ஒரு நிலை உருவாகும். எனவே தான் மேற்கு நாடுகளில், வீட்டுக் கடன் (mortgage), கடன் வாங்குபவரின் நம்பகத்தன்மையை பல வழிகளில் உறுதி செய்து, அதற்கும் மேலதிகமாக அந்த கடனுக்கு காப்புறுதியும் எடுத்து வங்கிகள் கடன் வழங்கும். ஒரு குறிப்பிட்ட தொகையினர் இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்படும், காப்புறுதி நிறுவனம் வங்கியின் இழப்பை ஈடு செய்யும். பெருந்தொகையினர் கடனைத் திருப்பிக் கொடுக்கத் தவறின், வங்கியின் இழப்பை காப்புறுதிக் கம்பனியால் ஒரே நேரத்தில் ஈடு செய்ய இயலாது - இது தான் 2008 இல் அமெரிக்காவில் நடந்தது (மேலதிக விளக்கம் தேவையானோர் "The Big Short" என்ற திரைப்படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்). எனவே வீட்டுக் கடன் என்பது செய்தியில் இருப்பவர் போன்ற மொள்ளமாறி பிசினஸ் ஆட்களின் விளையாட்டுக்குரிய ஒரு சிஸ்ரம் அல்ல! நேர்மையாக உழைத்து, வரி கட்டி, தங்கள் குடும்பத்தையும் ஒரு நிலையான இடத்தில் வாழ ஆசைப்படும் சாதாரண மக்களுக்குரிய ஒரு முறைமை தான் வீட்டுக் கடன்!

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
தெற்கின் அரசியல் சூத்திரம் அம்பலம் ஆகுமா |||||••••••••• •••••••••••••••••••••••••••••• செவ்வந்தி மித்தெனிய சென்று தப்பிச் செல்ல மனம்பேரியின் உதவி பெற்றாரா? °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° நேபாளத்தில்.. தமிழினி எனும் பெயரில் அறிமுகமாகி கைதான செவ்வந்தி பாதாளக் குழு தற்போது வெவ்வேறு விசாரணை குழுக்களினால் துருவித் துருவி தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன கனேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு இலங்கை பாதுகாப்புத் துறைக்கு சவாலாக தண்ணி காட்டிய செவ்வந்தி, பெகோ சமந்த பத்மேயின் உதவியுடன் நீர்கொழும்புக்கு தப்பிச் சென்று தனது சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். செவ்வந்தி மித்தெனியவுக்கு தப்பிச் சென்று.. அங்கு யார் யாருடைய உதவிகளைப் பெற்றுள்ளார் என்பதையும்... இந்தியாவுக்கும், நேபாளத்துக்கு தப்பிச் சென்றார். அத்துடன் கனேமுல்ல சஞ்சீவ நீதிமன்ற கொலைக்கு 12 மணித்தியாலங்களுக்கு முன்பு ராஜபக்ஷ வலவ்வையின் காவல்காரன் கஜ்ஜா தனது பிள்ளைகளுடன் கொலை செய்யப்படல் போன்றதுடன்... கஜ்ஜா கொலைக்கு மனம்பேரியுடன் தொடர்புபட்டு ஆயுதங்களை வழங்கிய பெகோ சமந்த அடுத்து வந்த பாதாள சம்பவங்களுக்கும் மனம்பேரியுடன் இணைந்து செயல்பட்டாரா? மனம்பேரி தொடர்பு இல்லாமல் செவ்வந்தி தப்பித்திருக்க முடியாது என பாதுகாப்புதரப்பு தீவிரமாக நம்புவதுடன்... கஜ்ஜா மற்றும் செவ்வந்தி இடையிலான தொடர்புகள் வெளிவந்தால் தெற்கு அரசியலின் ஆயுத பாதாள கொலைக் கலாசாரத்தின் இரகசியங்கள் வெளி வந்து விடலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது Fais Journalist

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks 4 days ago
எனக்கு ஐரோப்பாவுக்கு செல்ல ஆசை. கெஹெல்பத்தர பத்மே என்னை, ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்தார். அதனால் தான் நான் 'கணேமுல்ல சஞ்சீவ'வை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தேன் - செவ்வந்தி Jaffna Muslim

பேரிச்சம்பழம் நல்லதா?கெட்டதா?

2 weeks 4 days ago
அரபு / இஸ்லாமிய நாடுகளில் புகைத்தல் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒரு பழக்கம் அல்ல. அதாவது புகைத்தல் ஹராம் அல்ல. அதனால் தான் அரபு நாட்டு முஸ்லீம்கள் தாராளமாக புகைப்பார்கள்.