| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 355 online users. » 0 Member(s) | 352 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,415
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,211
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,524
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| திரைப்பட வெளியீட்டு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு! |
|
Posted by: வினித் - 09-04-2005, 07:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பெண் போராளிகளின் தயாரிப்பில் உருவான ஈரத்தீ முழுநீள திரைப்பட வெளியீட்டு நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு!
நிதர்சனம் மகளீர் போராளிகளின் தயாரிப்பில் உருவான கரும்புலிகளின் வரலாற்றைச் சித்தரிக்கும் ஈரத்தீ முழுநீளத் திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்விலும், பெண் போராளி புகழினியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்விலும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
போராளி நிர்மலாவின் நெறியாள்கையில் உருவான ஈரத்தீ முழுநீளத் திரைப்படத்தை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வெளியிட்டு வைக்க தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வின் போது நிதர்சனப் பிரிவுப் போராளியும் தமிழீழ நுண்கலைக் கல்லூரி மாணவியுமான செல்வி புகழினியின் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் தமிழீழ தேசியத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பித்தார். போராளி இசைப்பிரியாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையினை நிதர்சனம் மகளிர் பொறுப்பாளர் செல்வி பிரமிளா நிகழ்த்த ஆசியுரையினை கவிஞர் புதுவை இரத்தினதுரை வழங்கினார். தமிழீழ நுண்கலைக் கல்லூரி பொறுப்பாளர் தணிகைமாறன், அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி ஆகியோர் சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மற்றும் கலை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
<img src='http://img352.imageshack.us/img352/694/movierelease14uq.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img352.imageshack.us/img352/5340/movierelease6qs.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img352.imageshack.us/img352/6640/movierelease25pb.jpg' border='0' alt='user posted image'>
http://www.sankathi.net/index.php?option=c...=2386&Itemid=41
|
|
|
| நானும் வரலாமா ..... |
|
Posted by: sakthy - 09-04-2005, 06:28 PM - Forum: அறிமுகம்
- Replies (55)
|
 |
hi tamil ullankale.........sugama ?
eelaththai viddu pirintha oru paravai than uravukalai theydum payanathil.....unkal ithayankaludanum payanikkalamaaaaaaaaa ?
karankalai needdiya padi unkalukkai...
unkal snehidhi
தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
|
|
|
| நாய் மரணத்துக்கு விசாரணை கமிஷன் |
|
Posted by: SUNDHAL - 09-04-2005, 06:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (13)
|
 |
டாக்டர்களின் தவறான அறுவை சிகிச்சையினால் நோயாளி இறந்து விட்டால் உடனே நாம் கோர்ட்டுக்குப் போகிறோம். போதிய ஆதாரத்துடன் தவறான சிகிச்சை யினால்தான் நோயாளி இறந்தார் என்பதை நிரூபித்தால் நஷ்டஈடு கிடைக்கிறது. சிகிச்சை அளித்த டாக்டர்(கள்) மீது நட வடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இது போல் தங்களது அபிமான செல்லப் பிராணி தவறான சிகிச்சையில் இறந்து போனால் நம்மில் யாராவது வழக்கு தொடுப்போமா?... என்று கேள்வி எழுப்பினால் "மாட்டோம்'' என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால் இங்கிலாந்தில் தனது செல்ல நாயை இழந்து போன ஒரு பிரபல நடிகை இப்போது நாய் எப்படி இறந்தது என்பது பற்றி கால்நடை ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரிக்கவேண் டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு விசாரணையும் தொடங்கிவிட்டது.
அந்த பிரபல நடிகையின் பெயர், ஜில் மோஸ். 10 வயதில் இவரிடம் பெல்லா என்ற ஒரு செல்ல நாய் இருந்தது.
கடந்த ஆண்டு ஜில் மோஸ்சின் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பெல்லா அங்கு வந்த ஒரு அணிலைத் துரத்தியது. அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து அதற்குச் சரியான அடிபட்டு விட்டது. உடனடியாக அதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்,ஜில் மோஸ். அங்கு பெல்லாவிற்குச் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும் நாய் குணமடையவில்லை. இதனால் நாயை பெட்போர்ட் ஷையர் நகரின் விசேஷ கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டுபோனார்கள். அங்கே பெல்லாவை பரிசோதனை செய்து பார்த்தபோது, மிர்சா என்னும் ரத்த உண்ணி யால் உருவான நோய்க் கிருமிகள் அந்த நாயை பெரிதும் தாக்கியிருப்பது தெரியவந்தது.
(மிர்சா ரத்த உண்ணி நோய்க்கிருமிகள் கால்நடைகளிடமிருந்து மனிதர்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடியதாகும்).
விசேஷ கால்நடை மருத்துவமனையில் பெல்லாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் பிறகு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த பின்னரும் கூட பெல்லா பிழைக்கவில்லை. சில நாட்களிலேயே இறந்து போனது. இங்கிலாந்தில் `மிர்சா' நோய்க்கு பலியான முதல் நாய் இதுதான். பெல்லா இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் இன்னொரு நாயும் இதே நோய்க்கு பலியாகி விட்டது. அந்த நாயும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர்தான் இருந்திருப்பது நடிகை ஜில் மோஸ்க்குத் தெரிய வந்தது. அது மட்டுமல்ல, பெல்லா இறந்து 18 மாதங்களாகிவிட்ட பின்னர் இது வரை மொத்தம் 310 நாய்கள் இங்கிலாந்தில் மிர்சா நோயால் தாக்கப்பட்டிருக்கின்றன.
எனவே சாதாரண ஒரு காயத்தால் எனது நாய் இறந்திருக்க வாய்ப்பில்லை. அறுவை சிகிச்சை யின்போதுதான் நாய்க்கு ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கிறது. மேலும் மிர்சா நோய் தீவிரமாக பரவி வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜில் மோஸ் நினைத்தார். இதனால் உடனடியாக அவர் சுற்றுப் புறச் சூழல் உணவு மற்றும் புறநகர் விவகார அமைச் சரவைக்கு தனது நாய் இறந்தது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இப்போது அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு விசாரணைக் கமிஷனும் அமைக்கப்பட்டு விட்டது.
நடிகையின் நாய் மரணத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமா?...
|
|
|
| கமலை நிராகரித்த அஸின்! |
|
Posted by: வினித் - 09-04-2005, 05:22 PM - Forum: சினிமா
- Replies (4)
|
 |
கமலை நிராகரித்த அஸின்!
மலபார் மல்கோவா அஸின் ஒரு சலசலப்பில் சிக்கியுள்ளார். அதாவது கமல்ஹாசனுடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டதாக கோலிவுட்டில் ஒரு செய்தி படு வேகமாக பரவி வருகிறது.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அஸின். ஆரம்பத்திலிருந்தே சின்னப் பசங்களுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக உள்ளார் அஸின்.
ஜெயம் ரவியைத் தொடர்ந்து, விஜய், சூர்யா, அஜீத் என ஜோடி போட்டு தூள் கிளப்பி வருகிறார். இவர்களை விட கொஞ்சமே கூடுதல் வயதான விக்ரமுடனும் இப்போது மஜா படத்தில் குஜாலாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு அஸினைத் தேடி வந்துள்ளது. முதலில் சந்தோஷப்பட்ட அஸின் பின்னர் யோசித்துப் பார்த்து (எதை?) அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.
இப்பத்தான் ஏதோ நிறையப் படங்களில் நடித்து டப்பு பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் சீனியர் நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கப் போய், சரத்குமார், சத்யராஜ், அர்ஜூன், நெப்போலியன் பெரிசுகள் கூட்டமாக வந்து மொய்க்கத் தொடங்கினால் என்னாவது என்று பயந்து போய்த்தான் கமல்ஹாசனுடன் நடிக்க மறுத்து விட்டாராம் அஸின்.
ஆனால் அஸினைப் பார்த்து இதைக் கேட்டால் தலையை பலமாக ஆட்டி மறுக்கிறார். அய்யோ, எண்டே குருவாயூரப்பா, நான் போய் கமல் சாரை நிராகரிப்பதாவது.? அவர் என்னோட கனவு நாயகன். எனது கனவில் அடிக்கடி வரும் நாயகன் அவர் மட்டும்தான்.
அவர் நடிக்கும் காலத்தில் நானெல்லாம் நடிகையாக உலா வருவதே மிகப் பெரிய பாக்கியம். அப்படி இருக்கையில் நான் போய் கமல்ஹாசனை நிராகரிப்பதாவது. அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மறுக்க மாட்டேன்.
கமலுடன் நடிப்பது எவ்வளவு பெரிய சமாச்சாராம். அதை போய் யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? உண்மையில் யாருமே என்னிடம் கமலுடன் நடிப்பது தொடர்பாக அணுகவே இல்லை. அப்படி இருக்கையில் இதுபோன்ற செய்திகளை யார் பரப்புவது என்று தெரியவில்லை என்று புலம்பித் தள்ளி விட்டார்.
அப்ப சரி!
|
|
|
| மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம் |
|
Posted by: வினித் - 09-04-2005, 05:18 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (4)
|
 |
மக்கள் தலைவர் வைகோ: மன்மோகன் சிங் புகழாரம்
செப்டம்பர் 04, 2005
சென்னை:
மக்கள் கூட்டத்தின் தலைவராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திகழ்கிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகாழாரம் சூட்டியுள்ளார்.
பொடா சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் இருந்த ஓராண்டு காலத்தில் தனக்கு வந்த மடல்கள், தான் எழுதிய கடிதங்களைத் தொகுத்து சிறையில் விரிந்த மடல்கள் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூலாக்கியுள்ளார் வைகோ.
இந்த நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை இரவு நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு ஆங்கில நூலையும், திமுக தலைவர் கருணாநிதி தமிழ் பதிப்பையும் வெளியிட்டனர்.
ஆங்கில நூலின் முதல் பிரதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும், தமிழ் நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பேசுகையில், மக்கள் கூட்டத்தை வசீகரிக்கும் தலைவர்களில் ஒருவர் வைகோ. அந்த அடிப்படையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். சிறையில் இருந்த காலகட்டத்தில் வைகோ புத்தகம் எழுதியுள்ளார். அது இப்போது நூலாக வெளியிடப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக மிகவும் பொறுப்புடன் செயல்படுபவர் வைகோ. என்னிடம் எப்போது பேசினாலும், மக்கள் பிரச்சினைகள் குறித்தும், சமூக குறைபாடுகள் குறித்துமே பெரும்பாலும் பேசுவார். இதுபோன்ற தலைவரை தமிழகம் பெற்றுள்ளது மிகவும் சந்தோஷமான விஷயம்.
சிறையில் அடைக்கப்படும் எல்லாத் தலைவர்களும் இதுபோல புத்தகம் எழுதுவதில்லை. வைகோ பலவீனமானவர் அல்ல என்பதால் இது சாத்தியமாயிற்று. அவரது கொள்கை உறுதி, தன்னம்பிக்கை, மன தைரியம் ஆகியவற்றால் பொடா சட்டத்திற்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளார்.
ஒளிமயமான தமிழக வானில், வைகோவின் பெயரை பொன்னெழுத்துக்களால் இந்தப் புத்தகம் ஜொலிக்கச் செய்யும் என்றார் சிங்.
வைகோ பேசுகையில், தனது நூல்களை வெளியிட்ட மன்மோகன் சிங்குக்கும், கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும், தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தி தென் மாநில மக்களின் மனங்களை குளிர வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்தார்.
|
|
|
| விவாகரத்து குறைவு |
|
Posted by: AJeevan - 09-04-2005, 04:02 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (3)
|
 |
உலகிலேயே மிகவும் அதிகமாக விவாகரத்து செய்து கொள்வோர் எந்த நாட்டினர் என்று கேட்டால் எல்லோரும் மிகச் சரியாக அமெரிக்கா என்று கூறி விடுவார்கள். காரணம்?
அமெரிக்காவில் 100 பேர் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அதில் 56 பேர் விவாகரத்துச் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் ஸ்வீடன் நாட்டவர்கள். இங்கே 100 தம்பதிகளுக்கு 55 பேர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள். மூன்றாவது இடம் பெலாரஸ் நாட்ட வருக்கு…இங்கே 100 தம்பதியரில் 52 பேர் விவாகரத்து செய்கிறார்கள்.
மிகவும் குறைவாக விவாகரத்து நடக்கும் நாடு இலங்கைதான்.இங்கே 100 ஜோடி களில் 1.5 பேர்தான் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.
|
|
|
| விழியின் மொழி......... |
|
Posted by: ப்ரியசகி - 09-04-2005, 03:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (34)
|
 |
<img src='http://img11.imageshack.us/img11/8788/eyes1hs.jpg' border='0' alt='user posted image'>
நீயும் திறவாமல்
நிஜமும் தெரியாது கண்ணே...
நீயும் மூடாமல்
நித்திரை வாராது கண்ணே...
நீயும் பாராது
அவன் விழியுனைக் காணாதே...
நீங்க முடியாமல் அது
சிலையாய் உறையாதே.....
அந்த
சிலையைக்கண்டு
ரசிக்க நினையாதே..
சிரித்து உன்னை
சிதற வைத்து விடுவானே...
இவன்...
இதயம் என்னை ஏற்காத போது
இமைகள் மட்டும் உனை ஏற்றதோ...
இதனைக்கண்டு ஏமாறாதே கண்ணே
இவள் உன்னை சுமப்பவள்..
இவளை உதறி செல்லாதே!!
கண்ணாடி முன் நின்று உனக்கு
கண்மை பூசி.....
தினமும் அழகு பார்ப்பவள் நானே...
கண்ணன் கண்கள் கண்டதும்
நீ பின்னே ஓடினால்...
நெஞ்சம் துடிப்பவளும் நானே...
கண்மையோடு போவாய்...நீ
அது கலையாமல்...
கண்மணியாய் வருவாயா...
இல்லயே...
கண்ணீரோடு தான் வருவாய்...
கண்டவள் நான் சொல்கிறேன்...
கடைசியாய் உன்னை வேண்டுகிறேன்.......
நீயில்லாமல் நான் இல்லை
என்று சொன்னவளை..
நீ இருந்ததால் தான்
நான் இல்லாமல் போனேன் என
சொல்ல வைத்து விடாதே கண்ணே......!!
|
|
|
| உங்களுக்கு எதாச்சும் புரிதா..? |
|
Posted by: SUNDHAL - 09-04-2005, 02:42 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (29)
|
 |
[size=18]கலப்பட உறவு*
தற்கொலை
செய்துகொண்ட ஓர் ஆசாமி, அதற் கான இடியாப்பக் காரணத்தைக் கீழ்க்கண்டவாறு எழுதி வைத்திருந்தான். (மனதை ஒருமுகப்படுத்திக் கவனமா கப் படித்தால்தான் விஷயம் புரியும்)
……நான் ஒரு கைம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன். ஏற்கனவே அவளுக்குத் திருமண வயதில் ஒரு மகள் இருந்தாள். அந்தப் பெண்ணை எனது தகப்பனார் காதலித்துத் தமது மனைவியாக்கிக் கொண் டார். இதன்மூலம் என் அப்பா எனக்கு மருமகன்ஆனார். என் தகப்பனாரைக் கல்யாணம் செய்து கொண்டதால் ஒன்று விட்ட மகள் எனக்குச் சித்தியாகவும் ஆனாள்*
என் மனைவி ஓர் ஆண் சிசுவைப் பெற்றெடுக்க அவன் என்னுடைய அப்பாவுக்கு மைத்துனன் ஆனான். என் சித்தியின் சகோதரன் என்ற முறையில் எனக்கோ தாய்மாமன் ஆனான்* என் தகப்பனாரின் மனைவி ஒரு மகனுக்குத் தாயானாள். அவன் எனக்குச் சகோதரன். மற்றும் பேரனுமானான். (என் மகளின் மகனல்லவா?)
இப்போது என் மனைவி எனக்குப் பாட்டியானாள். (என் சித்திக்குத் தாய் என்ற உறவில்) நான் என் மனைவிக்குப் பேரனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டியதாயிற்று* ஒருவனு டைய பாட்டிக்குக் கணவனாயிருப்பவன் அவனுக்குத் தாத்தா ஆகிறhன் அல்லவா? இதன்படி நான் எனக்கே தாத்தா ஆகிவிட்டேன், இக்குழப்பமே எனது தற் கொலைக்குக் காரணம்*††
(புரியாவிட்டால் மீண்டும், மீண்டும் ஊன்றிப் படியுங்கள்... புரியும் வரை
|
|
|
| இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம் |
|
Posted by: வினித் - 09-04-2005, 01:33 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
ஞாயிறு 04.09.05 - 18.35 மணி தமிழீழம் ஜகொழும்பிலிருந்து வினோதன்ஸ
பொலநறுவை நோக்கி வந்த இராணுவ தொடரணி மீது தாக்குதல் மூவர் பலி இருவர் காயம்.
பொலநறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ வாகன தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் சித்தாண்டியில் மறைந்திருந்து இனந் தெரியாதோரால் நடத்தப்பட்ட அம்புஸ்தாக்குதலில் 3 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு இராணுவச் சிப்பாய்களும் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் பெரும் சமர் நடைபெறுவது போல வெடிச்சத்தங்களும் துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதல் ஓய்ந்து 1 மணித்தியாலங்கள் கடந்துவிட்டன.
http://www.pathivu.com/content/news/doc/04...04_09_20058.htm
|
|
|
|