| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 381 online users. » 0 Member(s) | 379 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,413
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,285
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,640
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,310
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,674
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,208
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,523
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா |
|
Posted by: வினித் - 09-05-2005, 10:47 AM - Forum: சினிமா
- Replies (8)
|
 |
அவார்டுக்கு குறி வைக்கும் சிநேகா
எப்படி நடிப்பது என்பதில் இடையில் தடுமாறிய சிநேகா இப்போது ஒரு தெளிவுக்கு வந்துள்ளார். வர்ற வாய்ப்புகளையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு நடிக்காமல், செலக்டிவ்வாக நடித்து தேசிய விருது ஒன்றை எப்படியாவது வாங்கி விட அவர் முடிவெடுத்து விட்டார்.
ஆரம்பத்திலிருந்தே குடும்பக் குத்துவிளக்கு கணக்காக நடித்து வந்தார் சினேகா. அவரது அசத்தும் புன்னகை, 'நம்ம பொண்ணு' என்று நினைக்க வைக்கும் முகவெட்டு, அழகு ஆகிய அத்தனையும் சேர்ந்து அடக்கம் ஒடுக்கமான வேடங்கள் கிடைத்து வந்தன.
சிநேகாவுக்கு பெரிய பெயரை வாங்கித் தந்த படம் பார்திதபன் கனவு, ஆட்டோகிராப். இந்த இரண்டு படங்களுமே சிநேகாவின் முதிர்ந்த நடிப்பை வெளிக்காட்டின. தொடர்ந்து பல படங்கள் வந்து குவியத் தொடங்கின. இந்த நிலையில்தான் மும்பை நடிகைகளின் ஆதிக்கமும், மலையாள நடிகைகளின் கவர்ச்சிக் களியாட்டமும் கோலிவுட்டைக் கலக்கத் தொடங்கின.
இதனால் பல நடிகைகள் கிளாமருக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலத்தின் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், சிநேகாவும் கிளாமருக்குத் தாவினார். சின்னாவில் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
கிளாமருக்கு மாறினால் வாய்ப்புகள் அட்டகாசமாக வந்து குவியும் என்று எதிர்பார்த்த சிநேகாவுக்கு ஆட்சேபனைகள் மழை மாதிரி வந்து கொட்டியதால் சோர்ந்து போனார். அப்படி நடித்தாலும் பிரச்சினை, இப்படி நடித்தாலும் எதிர்ப்பு என்று அலுத்துப் போன சிநேகாவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இப்போது இரண்டு படங்கள் கிடைத்துள்ளன.
ஒன்று செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை. இன்னொன்று ஏபிசிடி. இரண்டு படங்களிலும் வித்தியாசமான ரோல்களில் நடித்து வருகிறார் சிநேகா. புதுப்பேட்டையில், அவருக்கு விலைமாது வேடமாம். இப்படத்தின் நாயகி சோனியா அகர்வால்தான் என்றாலும் நடிப்புக்கு சிநேகாவுக்கே அதிக வாய்ப்பாம். அம்மணியும் அடிச்சுத் தூள் கிளப்பி வருகிறார்.
அதேபோல ஏபிசிடி படத்தில் விதவையாக வருகிறார் சிநேகா. இந்த இரண்டு படமுமமே எனக்கு நிச்சயம் விருது வாங்கித் தரும் என்று அடிச்சுக் கூறுகிறார் சிநேக். அவரது ரசிகர்களும் அதற்கு ஆசி வழங்கி கடித மழை பொழிகிறார்களாம். அத்தோடு ஒரு அறிவுரையையும் சேர்த்து அனுப்புகிறார்கள்.
எப்படி வேண்டுமானாலும் நடியுங்கள், சின்ன வேடமாக இருந்தாலும் பரவாயில்லை, உங்களது நடிப்பு திறமை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. ஆனால் கிளாமராக மட்டும் நடிக்க வேண்டாம். விருது பெறக் கூடிய முழுத் தகுதியும் உங்களுக்கு உள்ளது.
அவள் ஒரு தொடர்கதை சுஜாதா, அச்சமில்லை அச்சமில்லை சரிதா, புதுமைப் பெண் ரேவதி போல நீங்களும் ஒரு சிறந்த நடிகைதான். எனவே உங்களுக்குள் புதைந்து கிடக்கும் முழுத் திறமையையும் வெளிக் கொணர்ந்து விருது பெற முயற்சியுங்கள் என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு எழுதுகிறார்களாம் ரசிகர்கள்.
அவர்களின் இந்த அன்பின் வெளிப்பாட்டைக் கண்டு நெகிழ்ந்து போய் விட்டாராம் சிநேகா. எனவே இனிமேல் கொட்டிக் கொடுத்தாலும் நோ கிளாமர் என்ற முடிவுக்கு வந்துள்ளார் சிநேகா. புதுப்பேட்டை, ஏபிசிடியைத் தொடர்ந்து விருது பெறத் தகுதியான கதையைத் தேடிப் பிடித்து நடிக்கப் போகிறாராம்.
நல்ல விஷயம், வாழ்த்துவோம்!
|
|
|
| மலிவு விற்பனை - ஷண்முகி |
|
Posted by: kuruvikal - 09-05-2005, 10:45 AM - Forum: கதைகள்/நாடகங்கள்
- Replies (2)
|
 |
தொலைபேசி மணி தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தது.
வேலைக்கு போகும் அவசரத்தில் உடுத்தது பாதி, உடுத்தாது பாதி என்று புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தவேளையில் , 'இது வேறு' என்று முணு முணுத்துக்கொண்டே போனை எடுத்தாள் பரிமளா.
"ஹலோ.." என்றவுடனே அவள் அறிந்துகொண்டாள். கொழும்பில் இருந்து அவளது தம்பி சுதர்சனன் தான் தொடர்பு கொள்வது என்று.
அதற்குள்ளாக அவனாகவே,
" அக்கா, நான் சுதர்சன்..." என்று பல மைல்களுக்கு அப்பால் இருந்து ஒலித்த அவனது குரல், பரிமளாவின் காதில் வளையமிட்டுக் கொண்டிருந்தது.
"அக்கா , மலிவுவிலை போட்டிருக்கிறம். ஒரு சாறி எடுத்தால் இன்னொரு சாறி இலவசம். அதுவும் இந்த மாசம் மட்டும் தான்.... இந்த விலையில எங்கேயும் எடுக்கமாட்டிங்கள்..." கூறிக் கொண்டே வெவ்வேறு கோலங்களில் ஆன அழகான புடைவைகளை ஒவ்வொன்றாக இழுத்துப்போட்டுக் கொண்டே கவனம் முழுவதையும் விற்பனையில் காட்டிக் கொண்டிருந்தார் விற்பனையாளர்.
அந்த புடைவைகள் மீது நளினியின் கவனம் இருக்கவில்லை. அவர் ' மலிவுவிற்பனை' என்று கூவியழைத்தது தான் அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
சொந்தம் விட்டு போகக்கூடாது என்பதற்காகத்தான் பெண்ணுக்கும் மலிவு விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா..?
பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் இலவசமாக இந்த நாட்டு பிரஜாஉரிமை கிடைக்குமா...?
அதற்காகத்தான் இந்த திருமணப்பேச்சும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதா...?
"ஒரு புடைவை எடுத்தால் இன்னொன்டு இலவசம்.." கடைக்காரர் மீண்டும் உரத்து , தன் வியாபார தந்திரத்தை உபயோகித்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.
நன்றி - சூரியன்
இது சண்முகி அக்கா ஆக்கமா...?!
|
|
|
| கதிர்காமரின் மரணமும் மர்மமும் |
|
Posted by: வினித் - 09-05-2005, 10:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கதிர்காமரின் மரணமும் மர்மமும்
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டு மூன்று வாரங்களாகின்றன. கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இனவாதம், உள்நாட்டுப் போர், அரசியல் கொலைகள் ஆகியவற்றால் ஜனநாயக அமைப்பு மிகவும் வலுக்குறைந்துபோன அத்தீவில் அமைதி திரும்ப வேண்டும் என உளமார விருப்பம் கொண்டிருப்பவர்களுக்கு அங்கு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் அரசியல் படுகொலைகள் அதிர்ச்சி தருகின்றன.
ஜனாதிபதி சந்திரிகா 13.08.2005 அன்று விடுத்த அறிக்கை, "சண்டைகளை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தை நிலைநாட்டுவதையும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வைப் பேச்சுவார்த்தைகள் மூலம் எட்டுவதையும் எதிர்க்கின்ற அரசியல் எதிரிகளாலேயே அந்தப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக்" கூறியது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யின் குற்றச் சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் "விடுதலைப் புலிகள் மீது எப்படி நான் பழி சுமத்த முடியும்? நான் இந்த நாட்டின் ஜனாதிபதி. எனக்குச் சில ஆதாரங்கள் கிடைத்தால்தானே அப்படிச் சொல்ல முடியும்" என்று சந்திரிகா கூறியதாக முன்னணி நாளேடான `சண்டை டைம்ஸ்' கூறியது. ஆனால், அவரே அடுத்த நாளிலிருந்து `சிங்களப் பெரும்பான்மை' அபிப்பிராயத்தை எதிரொலிக்கும் வகையில் புலிகளே அந்தக் கொலைக்குக் காரணம் எனக் கூறத் தொடங்கினார். சிங்கள இனவாதக் கட்சிகளான ஜே.வி.பி.யும், ஜாதிக ஹெல உறுமயவும் இதே குற்றச்சாட்டுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தூக்கியெறிந்து விட வேண்டும் என அறைகூவல் விடுக்கின்றன. அதாவது போரை மீண்டும் தொடங்குமாறு சந்திரிகா அரசாங்கத்தை வற்புறுத்துகின்றன.
தமது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதைத் துல்லியமாகத் திட்டமிட்டு நிறைவேற்றுவதில் வல்லவர்கள் என விடுதலைப் புலிகள் பெயரெடுத்திருப்பதால் கதிர்காமர் கொலைக்கும் அவர்கள்தான் காரணம் என்ற `பெரும்பான்மைக் கருத்தொற்றுமை'யை உருவாக்குவது கடினமானதல்ல. அந்தக் கொலையைத் தாங்கள் செய்யவில்லை என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கூறியுள்ளபோதிலும் அவர்களது கூற்று ஏற்கப்படாமலிருப்பதும் வியப்பில்லை. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் அமெரிக்காவும் பல ஐரோப்பிய நாடுகளும் சேர்க்கவும் அவர்கள் அங்கிருந்து நிதி திரட்டுவதற்குச் சிக்கல்கள் ஏற்படுத்தவும் கதிர்காமர் செய்த முயற்சி பெரும் வெற்றி பெற்றதால் அவர்களது சினத்திற்கு ஆளானார் என்ற பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துக்கும் அடிப்படை இல்லாமலில்லை. ஆயினும், இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் கையெழுத்திட்டுள்ள கடல்கோள் நிவாரணக் கூட்டுத் திட்டம் கதிர்காமரின் ஒத்துழைப்பின்றி உருவாகியிராது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து வருபவர்கள் மேற்சொன்ன சிங்கள இனவாதக் கட்சிகள் மட்டுமல்ல; இராணுவத்திலுள்ள சக்தி வாய்ந்த ஒரு பிரிவினரும்தான். எடுத்துக்காட்டாக, சென்ற ஜூன் மாதம் தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள திருகோணமலையிலுள்ள ஒரு பொது இடத்தில் ஒரு புத்தர் சிலையை நட்டு வைத்து இனப்பூசலுக்கு வித்திட முனைந்த சிங்கள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு காட்டிய இலங்கை கப்பற்படைத் தளபதி சரத் வீரசேகரவைக் கிழக்குப் பகுதியிலிருந்து இடமாற்றம் செய்தார் சந்திரிகா. கடந்த மாதத் தொடக்கத்தில் பெனுவ என்னுமிடத்தில் பயிற்சி முடித்த கப்பற்படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின் பேசிய சரத், "யுத்தத்தின் மூலமாவது சமாதானத்தை உருவாக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஒரு மூத்த இராணுவ அதிகாரியால் இப்படிப் பகிரங்கமாகப் பேச முடிகிறது என்பதே இலங்கையில் இராணுவம் அரசியலுக்கு மேலான சக்தியைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது.
கதிர்காமர் கொல்லப்பட்ட அவரது வீட்டு நீச்சல் குளத்திற்கும் கொலையாளி இருந்த இடத்திற்குமிடையிலான தூரம் 35 மீட்டர்தான். இவ்வளவு அருகிலுள்ள ஒரு வீடு, புலிகளின் சினத்திற்கு ஆளானவராகக் கூறப்படுகிற ஒருவருக்கு வேண்டிய உறுதியான பாதுகாப்புக் கருதி ஏன் ஒருபோதும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படவில்லை என்ற கேள்விக்கு காவல் துறையினரின் பதில் "அண்டை வீட்டுக்காரர்களுக்குத் தொல்லை தரக்கூடாது" என்பதுதான். விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமான ஒரு பெரும் தொழிலதிபருடன் கதிர்காமர் எப்போதாவது பேசுவதுண்டு என்றும், அவர் அமைச்சர் பதவியில் இருக்கும்வரை அவர் மீது விடுதலைப் புலிகள் குறி வைக்க மாட்டார்கள் என அந்தத் தொழிலதிபர் வாக்குறுதி தந்ததாகவும் அதை நம்பிய கதிர்காமர் தனது பாதுகாப்பு விடயத்தில் கோட்டை விட்டு விட்டார் என்றும் `சண்டே டைம்ஸ்' கூறுகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் அல்லாத வேறு சக்திகளால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சாத்தியப்பாட்டைக் குறித்து மௌனம் சாதிக்கிறது. இலங்கை ஜனாதிபதிக்கு அடுத்த படியாக மிக உயரளவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளானவர் என்று கருதப்பட்ட ஒருவரது வீட்டினருகில் வாகனங்கள் சென்றாலோ மனிதர்கள் நடமாடினாலோ உடனுக்குடன் சோதனை செய்யப்பட வேண்டும் என்பது பாதுகாப்பு குறித்த அரிச்சுவடி. ஆனால், கதிர்காமர் கொலை செய்யப்பட்ட அன்று இப்படிப்பட்ட சோதனைகள் ஏதும் நடத்தப்படவில்லை.
கதிர்காமர் கொலை செய்யப்பட்டவுடன் அவரது மெய்க் காப்பாளர்களில் ஒருவர் கூட உடனடியாகத் துப்பாக்கிக் குண்டுகள் வந்த இடத்திற்குச் சென்று கொலையாளியைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை. அவர் சுடப்பட்டு இரண்டு மணி நேரத்திற்குப் பிறகுதான் கொழும்பிலுள்ள வீதிகள் அடைக்கப்பட்டுத் `தேடுதல் வேட்டை' தொடங்கப்பட்டது. அண்டை வீட்டின் உரிமையாளரான லக்ஷ்மன் தளையசிங்கம் என்பவரை விசாரணை செய்வதற்கு அழைத்துச் செல்வதற்காக அவர் வீட்டிற்கு இரண்டு மணி நேரம் கழித்தே காவல் துறையினர் சென்றனர். விசாரணைக்குப் பிறகு காவல் துறையினர் அவரை விட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மனைவி படுத்த படுக்கையாக இருப்பதால் வீட்டின் கீழ்த் தளத்தை மட்டுமே தான் பயன்படுத்தி வந்ததாகவும், மேல் தளத்தைப் பயன்படுத்தவோ, கண்காணிக்கவோ கதிர்காமரின் பாதுகாப்புப் படைக் குழுவினர் கேட்டிருந்தால் அதை அவர்களிடம் ஒப்படைக்கத் தனக்குத் தயக்கமேதும் இருந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். சந்தேகத்தின் பேரில் இதுவரை கிட்டத்தட்ட நூறு தமிழர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள போதிலும் ஒருவர் மீதும் இது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கதிர்காமரைக் கொலை செய்தவர் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் `ஸ்னைபர் ரைஃபிள்' என்னும் சிறப்பு ரகத் துப்பாக்கியில் பயன்படுத்தப்பட்ட காலித் தோட்டாக்கள் இருந்ததாகக் காவல் துறையினர் முதலில் அறிக்கை விடுத்தனர். ஆனால், நீதிமன்றத்தில் அவர்கள் காட்டியதோ இயந்திரத் துப்பாக்கித் தோட்டாக்கள்தான். இலங்கை அரசாங்கத்தின் உடைமையிலுள்ள `சண்டே ஒப்சவர்' என்னும் நாளேடு "இந்த ரகத் துப்பாக்கி ஒன்று இராணுவக் கிடங்கிலிருந்து திருடப்பட்டிருக்கலாம். அல்லது ஓர் ஆயுத வணிகரிடமிருந்து வாங்கப்பட்டிருக்கலாம்" என்று எழுதியுள்ளது. இலங்கை காவல் துறைத் தலைமை அதிகாரியும் இராணுவத்தின் பேச்சாளரும் புலிகள்தான் கொலை செய்தனர் என்று அறுதியிடும் போதிலும் இதுவரை அதற்கான ஒரு தடயமும் ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
கதிர்காமரின் மரணத்தைக் காரணம் காட்டி சந்திரிகா அரசாங்கம் அறிவித்துள்ள நெருக்கடி நிலையை எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை. பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துவதில் எந்தக் கட்சிக்கும் ஆர்வம் இல்லை. ஏனெனில் ஒவ்வொரு கட்சியும் தனக்கு இப்போதுள்ள ஆதரவும் கூடப் போய்விடும் என்று அஞ்சுவதாகத் தோன்றுகின்றது.
-தினமணி
|
|
|
| யுத்தம் திணிக்கப்பட்டால் அனைத்து படைமுகாம்களும் அழிக்கப்படும |
|
Posted by: வினித் - 09-05-2005, 10:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
எம் மீது யுத்தம் திணிக்கப்பட்டால் அனைத்து படைமுகாம்களும் தாக்கி அழிக்கப்படும் - தமிழன்பன்
றுசவைவநn டில ளுயமெடைலையn ஆழனெயலஇ 05 ளுநிவநஅடிநச 2005
அரசு எம்மீது யுத்தத்தைத் திணிக்குமாக இருந்தால் வடக்கு கிழக்கில் உள்ள படை முகாம்கள் அனைத்தும் தாக்கி அழிக்கப்படும். காலத்திற்கு காலம் விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டு இருக்கின்றார்கள் என்று அரசு கருதுகின்ற வேளைகளில் எல்லாம் விடுதலைப் புலிகள் மீது யுத்தத்தை முன்னெடுத்துள்ளார்கள் இந்த வகையிலேயே ஈழப் போர் ஒன்று இரண்டு மூன்று என இடம் பெற்றன. ஆனால் இவைகளிலும் விடுதலைப் புலிகள் வெற்றியே பெற்றுள்ளார்கள். இவ்வாறு புலிகளின் குரல் பொறுப்பாளர் திரு. தமிழன்பன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய வீதியில இடம் பெற்ற கேணல் கிட்டு மற்றும் தியாகி லெப்ரினன்ட் கேணல் திலீபன் ஆகியோரின் நினைவாக இடம் பெற்ற சிறப்பு முத்தமிழ் கலையரங்க நிகழ்வு கடந்த மூன்று நாடகளாக இடம் பெற்று வந்தது. இதன் இறுதிநாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே திரு. தமிழன்பன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:
எமது தலைவரைப் பொறுத்தவரையில் எதிரியின் யுத்த தந்திரத்தை மிகவும் கவனமான முறையில் முறியடித்து வெற்றி கொண்டவர். இந்த வகையில் எதிரி எம்மைப் பலவீனப்படுத்தலாம் என்று நினைத்தால் அது ஆபத்தில் தான் முடியும். கடந்த மூன்று ஆண்டுகால சமாதான ஒப்பந்தம் எம்மைப் பொறுத்தவரையில் எதனையும் கொண்டு வரவில்லை. ஆனால் தென் இலங்கை மக்களுக்கும் இராணுவத்தினருக்குமே இது நன்மையாக அமைந்துள்ளது. இக் காலத்தில் இவர்களே சுதந்திரமாகவும் அச்சுறுத்தல் இன்றியும் வாழ்ந்துள்ளார்கள்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் முதல் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் செய்ற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். உண்மையாக போர் நிறுத்தத்திலும் சமாதானத்திலும் உண்மையான அக்கறை கொண்டவர்களாக அரசு இருக்குமாக இருந்தால் ஏன் எமது போராளிகளையும் பொறுப்பாளர்களையும்; அழிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.sankathi.net/index.php?option=c...=2394&Itemid=41
|
|
|
| இம்மாதம் 30ம் நாள் யாழில் தமிழர் அரசுப் பிரகடனம்!! |
|
Posted by: வினித் - 09-05-2005, 09:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
இம்மாதம் 30ம் நாள் யாழில் தமிழர் அரசுப் பிரகடனம்!!
றுசவைவநn டில ளுயமெடைலையn ஆழனெயலஇ 05 ளுநிவநஅடிநச 2005
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் தமிழர் அரசுப் பிரகடனத்தை ஏற்கும்படி சர்வதேச சமூகத்தைக் கோரும் பிரகடனம் இம் மாதம் 30ம் நாள் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு திருநெல்வேலிச் சந்தியில் அமைந்துள்ள சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
யாழ். பல்கலைக் கழக சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இச் சந்திப்பு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர் திரு. விஐயரூபன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. கNஐந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் பல்கலைக் கழக மூத்த விரிவுரையாளர் முனைவர் சிதம்பரநாதன், சர்வதேச தமிழீழ மாணவர் பேரவைப் பொறுப்பாளர் திரு.ந.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் நாள் நோர்வே அரசின் அனுசரணையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டது. அத்துடன் ஆறு சுற்றுப் பேச்சுகளும் நடத்தப்பட்டன. ஆனால், பேச்சுகளின் முடிவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களை நடை முறைப்படுத்த சிங்கள அரசு தவறியது.
இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவை விடுதலைப் புலிகள் முன்வைத்த போது அது குறித்து தொடர்ந்து பேச சிங்கள அரசு முன்வரவில்லை. அதேவேளை, ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணக் கட்டமைப்புக்கு ஸ்ரீலங்கா நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாதிகள் தமிழ் பேசும் மக்களுக்குரிய நியாயமான எந்த ஒரு தீர்வையும் முன்வைக்க மாட்டார்கள் என்பது இப்போது அப்பட்டமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த உண்மை நிலையினை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிப்படுத்தி எமக்கான நியாயத்தைக் கோருகின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்று தமிழர் அரசொன்று நடைமுறையில் உள்ளது. அதிலும் சுமார் 70 வீதமான நிலப்பரப்பு தமிழர் படைகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எஞ்சியுள்ள எமது தாயக நிலத்தையும் கடலையும் ஸ்ரீலங்கா இராணுவம் ஆக்கிரமித்து நிற்கின்றது.
இந்நிலையில் தமிழருடைய அரசின் இறைமையை அங்கீகரிக்க வேண்டுமென சர்வதேசச் சமூகத்திடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறே எமது தாயகப் பரப்பிலிருந்து ஸ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும். ஜனநாயக வழியில் சர்வதேசச் சமூகத்திடம் நாம் விடுக்கும் இந்தக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். என தெரிவிக்கப்பட்டது.
இந்த எழுச்சி நிகழ்வில் கலந்து கொள்ளும்படி தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதேவேளை இந்த எழுச்சி நிகழ்வில் பல லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி உட்பட சகல ஏற்பாடுகளையும் நிகழ்வு ஒழுங்கமைப்புக் குழு மேற்கொண்டுள்ளது
|
|
|
| மாற்றங்கள்... |
|
Posted by: Thala - 09-05-2005, 09:14 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (38)
|
 |
<b>மாற்றங்கள் வந்ததேன்....?
<img src='http://img389.imageshack.us/img389/3977/flower3300ln.gif' border='0' alt='user posted image'>
காதலியாய் உனைப்
பார்த்து.
பன்னிரு மாதங்கள்
பறந்தோடிப் போச்சு
என் மனைவியாய்
உன் மீது
எத்தனை மாற்றம்
சீராய் வாரிய
கூந்தல்..
பொலிவாய்ச் சிரிக்கும்
உன் கண்கள்.
அழுத்தி தேய்த்த
உன் உடைகள்..
எங்கே போனது
உன்
சிங்கார அழகு..
அள்ளிமுடித்த கூந்தலோடு
ஏன் இன்று
இந்தக் கோலம்
உன் வியர்வை மணியை
ஒற்றி எடுத்த உன்
கைக்குட்டை எங்கே?
உன் காதலனாய்
தாமதமாய் வந்த
போதெல்லாம் நீ
செல்லமாய் கோபிப்பாய்
இன்றும் நான்
தாமதமாய்தான் வருகிறேன்.
வழமைபோல் நீயும்
காத்திருக்கின்றாய்..
எனக்கு
உணவு தருவதற்காய்
இன்றும் கோபிக்கிறாய்
நான் குறைவாய்
உண்கிறேன்
என்று..
உன்னில்
ஏனிந்த மாற்றம்
கண்மணியே !
உண்மையைச் சொல்
காதலியாய் என்னைக்
காதலித்தாய்
மனைவியாய் என்னை
நேசிக்கிறாய்
உன்மேல் எனக்கு
இல்லாத பாசம்
எப்படி என் மீது
உனக்கு வந்தது??
கணவனாய் என்
கடமைகளைச் செய்ய
என் வாழ்வின்
முடிவின் முன்
ஒரு சந்தர்ப்பம்
தருவாயா???
[b]புதிதாய் யாழ்களத்துக்கு வந்த என் நண்பனுக்காக எழுதிக் கொடுத்தது</b>
|
|
|
| படங்களை இணைப்பது எப்படி? |
|
Posted by: Mathan - 09-05-2005, 06:15 AM - Forum: களம் பற்றி
- No Replies
|
 |
படங்களை இணைப்பது எப்படி?
அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள்.
http://imageshack.us/
<img src='http://img47.imageshack.us/img47/3409/yarlhelp11lf.jpg' border='0' alt='user posted image'>
ஆ) அதன் பின்பு அங்கே இருக்கும் 8 விதமான இணைப்புகளில் கடைசி இணைப்பாக இருக்கும் <b>Direct link to image</b> எனும் இணைப்பை கொப்பி செய்யுங்கள்.
<img src='http://img488.imageshack.us/img488/1236/yarlhelp24ug.jpg' border='0' alt='user posted image'>
இ) கொப்பி செய்யப்பட்ட இணைப்பை யாழில் கருத்து எழுதும் பகுதியில் "<b>[img]_______[/img]</b>" என்பதற்குள் இடுங்கள், இப்போது Preview பார்த்து படம் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
<img src='http://img46.imageshack.us/img46/4926/yarlhelp38ri.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| ஒரே ஒரு கேள்வி |
|
Posted by: RaMa - 09-05-2005, 04:24 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (20)
|
 |
வணக்கம் கள உறுப்பினார்களே!
எல்லோரும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கறீர்கள். அதனுடன் சம்பந்தப்பட்ட கேள்வி தான் இது. இதற்கான பதில் நான் பார்த்தளவில் அந்த பக்கத்தில் இல்லை. ஆகவே கேள்வி இது தான்.........
----சூ---- என்னும் எழுத்தில் தொடங்கும் நாலு பாடல்களை எழுதுங்கள் பார்ப்போம்....
|
|
|
| யாழிற்கு வந்தனங்கள் |
|
Posted by: sankeeth - 09-04-2005, 10:30 PM - Forum: அறிமுகம்
- Replies (65)
|
 |
புதியவனின் புன்னகை வந்தனம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| காதலரின் தனிமையை படமெடுத்தவர் கைது |
|
Posted by: வன்னியன் - 09-04-2005, 10:02 PM - Forum: புலம்
- Replies (33)
|
 |
சுவிஸ்நாட்டில் சில குடும்பபெண்கள் ஆபாசபடத்தில் நடித்தபோது பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளனராம். படமாக்கியவர்களும் இப்போது சிறையிலுள்ளனராம். ;து உண்மையா?
வாருமய்யா சின்னப்பு பதில் தாருமய்யா
|
|
|
|