Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 94 online users.
» 0 Member(s) | 93 Guest(s)
Bing

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சிவனும் முருகனும் ஒன்றா?
Posted by: iruvizhi - 10-06-2005, 05:03 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (26)

சிவனும் முருகனும் ஒன்றா?

Print this item

  யாழ்குடாநாட்டில் பரவலாக எல்லாளன் படையின் சுவரொட்டிகள்
Posted by: mayooran - 10-06-2005, 11:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் எல்லாளன் படையின் பெயரில் எச்சிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடைஞ்சலான செயல்பாடுகளில் ஈடுபட்டவாகள் எனப் பலரையும் எச்சரிக்கும் விதத்தில் இச் சுவரொட்டிகள் காணப்படுகின்றன. குறிப்பாக சந்திக்கு சந்தி ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளை; ஒட்டப்பட்ட இடங்களில் எல்லாம் பொது மக்கள் குழுமி நின்று வாசிப்பதையும் அவதானிக்க முடிந்தது. மேலும் இத்தகைய சம்பவங்கள் மூலம் இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளார்கள் இத்தகைய வேண்டத்தகாத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் முதல் சுமார் ஆறு போர் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிய நிலையில் இச் சுவரொட்டி வெளிவந்துள்ளமை குறிப்பிடக் கூடியதாகும்
nitharsanam

Print this item

  வெள்ளவத்தையில் குண்டுவெடிப்பு
Posted by: வெண்ணிலா - 10-06-2005, 11:24 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கொழும்பு வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் உள்ள தினமுரசு பத்திரிகை அலுவலகத்திற்கு அருகில் இன்று வியாழக்கிழமை காலை 7.45 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளது.


பத்திரிகை அலுவலகத்திற்கு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளர் ஏ.ஜெயராஜ் என்பவர் பயன்படுத்தும் இந்து கலாச்சார அமைச்சின் வாகனத்தில் நேரம் குறித்து வைக்கப்பட்ட குண்டே வெடித்துள்ளது.

குண்டு வைக்கப்பட்டிருந்த வான் சின்னாபின்னமாகச் வெடித்துச் சிதைந்து போயுள்ளது.

குண்டுவெடிப்பில் ஈ.பி.டி.பி. உறுப்பினரான விஜயகாந்தன் என்பவர் காயமடைந்துள்ளார். தினமுரசு பத்திரிகை அலுவலகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலை வேளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதாகவும் அறியவருகின்றது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியை காவல்துறையினரும் இராணுவத்தினரும் சுற்றிவளைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


நன்றி புதினம்

Print this item

  நான் நாடகம் எழுதலாமா ?
Posted by: கரிகாலன் - 10-06-2005, 10:50 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (10)

வணக்கம் மதன் அண்ணா. நான் ஒரு நாடகத்தை யாழில்
இணைக்கவுள்ளேன்.நாடகத்தின் தலைப்பு 'முதலாம் விடிவெள்ளி' உங்கள் பதில்................

Print this item

  ஜென் கவிதைகள் சில
Posted by: கரிகாலன் - 10-06-2005, 10:04 AM - Forum: கவிதை/பாடல் - Replies (18)

ஜென் கவிதைகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இலையுதிர்க் கால அந்தி
வெற்றுக் கிளையில்
காகம்.

ஒரு மனிதன்
ஒரே ஒரு மனிதன்
உடன் ஓர் ஈ
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.

மனிதர்களே,
மரணம் பற்றி பயப்படுகிறீர்களா,
இப்போதே
இறந்துவிடுங்கள் !
ஒரு முறை இறந்துவிட்டால்,
பின்னர் இறக்கவே மாட்டீர்கள் !

மேலும் ஜென் கவிதை தொடரும்..........

நன்றி : ம.நவீன்

Print this item

  தடைக்கெதிரான பிரச்சாரக் களம்
Posted by: வினித் - 10-06-2005, 09:43 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

தடைக்கெதிரான பிரச்சாரக் களம்: கையாளப்பட வேண்டிய விடயங்கள் எவை?
[வியாழக்கிழமை, 6 ஒக்ரொபர் 2005, 04:54 ஈழம்] [எ.செந்திலாதன்]

முன்னைய செய்தி ஆய்விற்கு ஆதரவளித்து வந்திருந்த பல மின்னஞ்சல்கள் செய்தி ஆய்வின் கருவை பூரணமாக ஆதரித்ததோடு, நாம் பலமான முறையில் பிரச்சாரத்தினை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தன. எனினும் அவற்றில் இரண்டு மின்னஞ்சல்கள் வித்தியாசமான கேள்விகளை முன்வைத்திருந்தன.


<span style='font-size:25pt;line-height:100%'><b>சிங்கப்பூரிலிருந்து வந்த மின்னஞ்சல் புலம்பெயர்ந்த தமிழினம் (Tamil Diaspora) இவ்வளவு பலமானதாக இருந்தும் உண்மைகளை வெளிக்கொணரும் நடவடிக்கையில் மந்தமான போக்கு ஏன் என்று கேள்வியோடு, இவ்வாறான பிரச்சாரப்போரை நாம் முன்னெடுப்பதற்கு தொடர் உறவு இன்றியமையாதது (Networking) என்பதையும் விளக்கியிருந்தது</b>.</span>
அதேபோல, அமெரிக்காவிலிருந்து வந்துள்ள மின்னஞ்சல் ஒன்று, தமிழர்கள் இன்று மேற்குலகில் சுய அடையாளமுள்ளதொரு இனமாக, தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளனர் என்பதனை பல நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் உணர்ந்துள்ளனவே, ஆனால் இதை நாம் (தமிழினம்) உணர்ந்துள்ளோமா என்ற கேள்வியையும், இவ்வாறான பிரச்சாரத்தை நாம் நிறுவனமயப்படுத்திச் செய்வது நல்லதா அல்லது தனித்தனியே தொடர்வது நல்லதா என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தது.

இந்த இரு கேள்விகளிற்குமான பதிலை அண்டியதாக இந்தச் செய்தி ஆய்வை எடுத்துச் செல்வோம். முதலாவதாக நாம் தெளிவாக இருக்க வேண்டிய மையப்பொருள் ஒன்றேதான். அதாவது நாம் சிறிலங்காவைப் போல பொய்யுரைக்க வேண்டிய தேவையேதுமேயில்லை. நாம் உண்மைகளை வெளிக்கொணர முயல்கிறோம் என்பதே யதார்த்தம்.

இதற்கான தேவை ஏற்படுகின்ற போது, இதை நாம் எப்படி முன்னெடுப்பது என்ற கேள்வி உங்களிற்குத் தோன்றலாம். உங்களது இரத்த உறவுகள், நண்பர்கள், அயலவர்கள் என ஒரு சமூகம் அங்கே இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. அவர்களைப் பற்றிய அக்கறை உங்களிற்கு இருக்கிறது என்பதே இதற்கான விடை. உங்கள் உறவுகளின் மீதான உங்கள் உணர்வுகளை யாராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் அக்கறை நியாயமானது என்பதை எந்த அரசியல்வாதியும் ஏற்றுக்கொள்வார், மதிப்பளிப்பார்.

எனவே உங்கள் உறவுகளின் மீதான அக்கறையை மையப்படுத்தி நீங்கள் இவ்விவகாரத்தை உங்கள் பகுதி அரசியல்வாதிகளிற்கும் உங்கள் நாட்டின் வெளியுறவுத்துறை சார் இராஜதந்திரிகளிற்கும் புரிய வையுங்கள். அவர்களுடன் தொடர்ச்சியான நட்புறவைப் பேணுங்கள். இதுவே நீங்கள் முன்னெடுக்க வேண்டிய முதற்கட்ட நடவடிக்கை.

இவ்வாறு நீங்கள் ஒவ்வொரு அரசியல்வாதியினூடாகவும், அமைப்பினூடகவும் செல்லும் போது ஏற்படுகின்ற கருத்தோட்டம் மிகவும் பலமானது. ஏனெனில் நீங்கள் வசிக்கின்ற தேசத்தின் பிரஜைகள் என்கிற தகுதியோடு, அவ்வவ் நாடுகளின் மொழிகளில் உள்ள பரிச்சயம் உங்களிற்கான மேலதிகத் தகுதி. நாட்டின் பிரஜை என்கிற முறையில் உங்கள் தொடர்புகளிற்கு மதிப்பளிக்க, பதிலளிக்க வேண்டிய தேவை அதிகாரிகளிற்கும், அரசியல்வாதிகளிற்கும் இன்றியமையாது.

ஒரு முறை அவர்களுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டு பாருங்கள். ஏன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுங்கள் அல்லது ஒரு கடிதமெழுதிப் பாருங்கள். எவ்வாறு உங்களிற்கு மதிப்பளித்து உங்கள் கருத்தைச் செவிசாய்க்கிறார்கள் என்பதை நீங்கள் யதார்த்தமாக உணர்வீர்கள்.

இவ்வாறு எங்களின் கருத்துக்கள் பலமுனைகளினூடாக சென்றடையும் போது அவர்கள் இவ்விவகாரத்தைப் பரிசீலிக்க வேண்டிய மென் அழுத்தம் உள்ளதை உணர்ந்து விழிப்பாகவே செயற்படுவார்கள். ஏந்த விடயத்திலும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இதுவே நிறுவனமயப்படுத்திச் செயற்பட வேண்டுமா? என்ற கேள்விக்கான விடையாகவும் அமைந்து விடும். அதாவது நிறுவன மயப்படுத்திச் செய்ய வேண்டிய தேவைகளைச் தமிழர் தரப்பு மற்றும் தமிழர் சார் அமைப்புக்கள் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதற்கும் மேலாக நாங்கள் தனிப்பட்ட முறையில் எங்களால் இயன்றவரை உண்மைகளை வெளிவரச்செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

சிங்கப்பூர் அன்பர் லண்டன் உதாரணத்தை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்ற தனது மின்அஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். அதாவது பல தனிநபர்கள் தனித்தனியே சிறிலங்காவிற்காக மேற்கொண்ட பொய்ப்பிரச்சாரம் ஒரு சிறிய தாக்கத்தை விளைவிக்குமாக இருந்தால், அதுவே உண்மையைத் தெளிவுபடுத்தும் எமது பணியை நாம் செவ்வனே செய்தால் மிகப்பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரிவித்திருந்தார்.

எனவே நாமாகவே தனிநபர்களாக, குடும்பமாக, நண்பர்களாக ஒரு பிரதேசத்தில் வாழும் மக்களாக முன்னெடுக்கும் முயற்சியாக இது இருக்கட்டும். இவ்வாறு நீங்கள் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள நாடாளுமன்ற அரசியல்வாதியையோ அல்லது ஒரு அமைப்பின் பிரதிநிதியையோ நீங்கள் சந்திக்கச் செல்லும் போது குடும்பமாக, நண்பர்களாக, அல்லது ஒரே கருத்துடையோராக ஒரு கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளலாம்.

www.puthinam.com
www.puthinam.com
www.puthinam.com
www.puthinam.com

Print this item

  கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
Posted by: தூயவன் - 10-06-2005, 06:35 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (18)

கோவிலில் தேங்காய் உடைப்பது ஏன்?
இந்த சந்தேகம் எனக்கு நெடுநாளாக உண்டு. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

Print this item

  பிம்ப உருவாக்கமும் போரியலும்....
Posted by: narathar - 10-05-2005, 11:08 PM - Forum: தத்துவம் (மெய்யியல்) - Replies (1)

பிம்ப உருவாக்கமும் போரியலும்....

அண்மையில் வாசித்த ஒரு கட்டுரையைத் தழுவி எழுதியது.

பிரச்சார ரீதியிலானா உளவியல் யுத்தத்தில் பிம்ப உருவாக்கம் என்பது முக்கிய பங்கை வகிக்கிறது.உளவியல் ரீதியான யுத்த தந்திரத்தில் பிம்ப உருவாக்கத்தின் பங்கு அவ்வளவாக கணக்கிடப் படாவிட்டாலும்,உள்ளார்ந்தமாக பிம்ப உருவாக்கமே அடிப்படை நோக்கமாக இருக்கிறது.ஆகவே இந்த பிம்ப உருவாக்கம் என்றால் என்ன என்பதயும் ,போரியலில் அது எவ்வகயான தாக்கத்தை உண்டு பண்ணக் கூடியது என்பதையும் பார்ப்போம்.

மரபு ரீதியான யுத்தத்தில் நேரடி மோதல்களினுடாக எழும் உயிர் இழப்பினூடாகவே வெற்றி பெறப்படுகிறது.ஆனால் ஒரு சிறந்த மதி நுட்பமான தளபதி உயிர் இழப்புக்கள் இன்றி அதே வெற்றியை அடய முடியுமா என்றே சிந்திப்பான்.கிளவுஸ்நிட்ஸின் கோட்பாடு நேரடிச் சமர் ஒன்று நடை பெறாமலே நாம் எமது இலக்கை அடய முடியும் என்கிறது.வெற்றியும் தோல்வியும் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பின் எண்ண ஓடத்திலேயே தங்கி உள்ளது.இந்த எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது அல்லது இயக்குவது எது? நாம் எமது எதிரியின் இந்த எண்ண ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி அவன் எமக்கு சாதகமான செயற்பாடுகளைச் செய்ய வைப் போமாயின், நேரடிச் சமர் இன்றி எமது இலக்கை அடய முடியுமா? மாசேதுங் கூறியது போல எதிரியின் காதை அடைத்தும் அவனது கண்ணைக் கட்டியும் அவனைக் குழப்பமடயச் செய்யவதன் மூலம் அவர்களின் தளபதிகளின் எண்ணங்களைச் சிதைக்க முடியும்.

பிம்ப உருவாக்கத்தில் இரண்டு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.ஒன்று பிம்பத்தை உருவாக்கும் பொருள் மற்றது அதனைப் பார்ப்பவன்.ஒரே பொருளை இருவர் வெவ்வேறு விதமாகப் பார்க்கலாம்.இந்தப் பார்வையை கட்டுப்படுத்துவதன் மூலம் ஒருவர் பார்க்கும் பொருளின் பிம்பத்தை எமக்குகுச் சாதகமான முறையில் எம்மால் காட்ட முடியும்.இவ்வாறு மற்றவரின் பார்வையைக் கட்டுப்படுத்துவதற்கு ,எமக்கு அவரின் சிந்தனை ஓட்டம் பற்றிய அறிவு அவசியம்.

ஒருவரின் சிந்தனை ஓட்டம் அவரின் கடந்தகால அனுபவங்களினாலும் அவரின் மனதில் உண்மை என்று நிறுவப்பட்ட ஒரு சில அடிப்படைக் கட்டுமானங்களில் இருந்தே எழுகின்றது.எமக்கு சாதகமான ஒரு பிம்பத்தை நாம் எமது எதிரியிடம் ஏற்படுத்துவதற்கு நாம் அவரின் இந்த அடிப்படைக் கட்டுமானங்களை அதற்கு ஏற்றவகையில் உருவாக்க வேண்டும்.இதற்கு அவரின் சிந்தனை தொழிற்படும் விதம் பற்றிய அறிவு அவசியம்.

எவருமே தோல்வி அடைவதை விரும்பார்.எமக்கான வெற்றியைப் பெறுவத்தற்கு நாம் எமது எதிரியின் தோல்வி அவர்களின் வெற்றியாகத் தெரிவதற்கான பிம்பத்தை அல்லது தோற்றப் பாட்டை ஏற்படுத்த வேண்டும்.இதனை மாற்றியமைப்பதற்கு எதிரியின் சிந்தனை ஓட்டம் தொழிற்படும் விதம் பற்றிய அறிதலில் இருந்து ,இந்த பிம்ப உருவாக்கத்திற்கான உளவியல் கட்டுமானங்களை ஏற்படுத்த வேண்டும்.

(ஆங்கில மூலம்Tongueerception Warfare: a perspective for the future ,Henrik Friman
Researcher, The Swedish National Defence College,
Department of Operational Studies.)

http://www.militaryscience.org/public/medi...man(1999)PW.PDF

Print this item

  உங்களோடு இணைந்து கொள்கிறேன்
Posted by: Sol Azhahan - 10-05-2005, 08:50 PM - Forum: அறிமுகம் - Replies (28)

வணக்கம் நான் இலங்கையை சேர்ந்தவன்
இன்றுதான் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.............
என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்

Print this item

  ஒரு உதவி
Posted by: Vishnu - 10-05-2005, 06:28 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (16)

<b>ஒரு தமிழ் சிறுவன்.. அல்லது ஒரு சிறுமி பாடம் படிப்பது போலவோ.. அல்லது எழுதிக்கொண்டு இருப்பது போலவோ ஒரு படம் யாராவது இருந்தால் தந்து உதவவும்.

நன்றி</b>

Print this item