| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 143 online users. » 0 Member(s) | 140 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| தமிழ்ச்சினிமாவின் சிறந்த பத்துப்படங்கள் |
|
Posted by: கோமதி - 10-08-2005, 09:41 AM - Forum: சினிமா
- Replies (38)
|
 |
நான் இதுவரை பார்த்த தமிழ்ச்சினிமாப் படங்களில் எனக்குப்பிடித்த முதல் பத்துப் படங்களை வரிசைப்படுத்தி அவை பற்றிக் கதைக்கலாமென்று நினைத்து இப்பதிவைத் தொடங்கினேன்.
ஏனையோரும் தங்களது சிறந்த பத்துக்களை வெளியிடலாம். ஒருவருக்கொருவர் தமது தகவல்களையும் விருப்பு வெறுப்பு விமர்சனங்களையும் பகிரந்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் ரசனை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
எனது முதலிரண்டு படங்களும் எந்தக் குழப்பமுமில்லாமல் தெரிவானவை.
<b>ஹேராம்
அன்பே சிவம்.</b>
ஏனைய சிறந்த எட்டுப்படங்களாக நான் கருதுபவை இவைதாம். ஒழுங்கு மாறிவரக்கூடும். ஆனால் எட்டைத் தெரிந்து எழுதுகிறேன்.
<b>முகம்
அழகி
நாயகன்
பிதாமகன்
முள்ளும் மலரும்
மூன்றாம் பிறை
பதினாறு வயதினிலே
விருமாண்டி</b>
மேற்கண்டவை எவையும் தனியே நாயகன், பாடல்கள், சண்டைக்காட்சிகள் என்பவற்றை வைத்து என்னால் எடை போடப்படவில்லை. மேலும் இதுவரை நான் பார்த்த படங்களுள் இவை என்னை மிகவும் கவர்ந்த முதல் பத்துப்படங்களே. நான் பார்க்காத படங்களுள் (பெரும்பாலும் 1990 இன் பின் வந்த எந்தப்படமும் தவறவிடப்படவில்லை) என்னைக்கவரக்கூடிய நல்ல படங்கள் தவறவிடப்பட்டிருக்கக்கூடும்.
இவற்றில் ஒரு படத்தைப்பற்றி அடுத்து எழுதுகிறேன்.
|
|
|
| முருகனுக்கு மயில் எப்போது கிடைத்தது? |
|
Posted by: தூயவன் - 10-08-2005, 04:17 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (55)
|
 |
பெரும்பாலும் இத்தளத்திலுள்ள நாம் அனைவரும் சைவசமயத்தை சேர்ந்தவர்கள். எனவே இக் கேள்வியைக் கேட்கின்றேன்
உங்களுக்கு தெரியும். முருகப்பெருமான் சூரன் போரின் போதே சூரனை வதைத்து சேவலும், மயிலும் கிடைக்கப் பெற்றார். அதற்கு நன்றியாக இந்திரன் தனது வளர்ப்பு மகளான தெய்வானையை மணம் செய்து வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இப்போது நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், குழந்தையாக முருகப்பெருமான் இருக்கும்போது மாம்பழப் பிரச்சனைக்காக மயிலேறி உலகத்தை சுற்றி வருகின்றார். எனவே இந்த மயில் எங்கிருந்து வந்தது?
|
|
|
| மாணவிகள் தலை முடி வளர்ப்பதற்கு தடை |
|
Posted by: SUNDHAL - 10-08-2005, 04:01 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (9)
|
 |
மாணவிகள் தலை முடி வளர்ப்பதற்கு தடை
ஆப்பிரிக்காவில் உள்ள டோகோ நாட்டில் மாணவிகள் தலைமுடியை அழகுபடுத்திக் கொள்வதில் அதிக நேரம் செலவிடுவதால் படிப்புக் கெட்டுப்போய் விடுவதாக கூறி தலை முடியை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் தடை விதித்து உள்ளனர்.
தலையை மொட்டை அடித்துக்கொண்டு வரும்படி கூறி மாணவிகளை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தலை முடியை இழக்க விரும்பாத சில மாணவிகள், பள்ளிக்கூடம் போவதையே நிறுத்திவிட்டனர்.
|
|
|
| கணனி மொழிகள் (Program) |
|
Posted by: Rasikai - 10-08-2005, 01:58 AM - Forum: கணினி
- Replies (32)
|
 |
இங்கு பலதரப்பட்ட பிரிவில் படிப்பவர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் இருப்பீர்கள்.
ஏன் நீங்கள் இங்கு computer program அதாவது computer language such as java, pascal, C , C++ etc
பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை இங்கு சொல்லக்கூடாது
அத்துடன் ஏதாவது சந்தேகம் மற்றவர்களுக்கு இருந்தாலும் தீர்த்து வைக்க கூடாது?
|
|
|
| சமையலில் சிறந்தவர் யார்?ஆணா? பெண்ணா? |
|
Posted by: தூயா - 10-08-2005, 01:31 AM - Forum: சமையல்
- Replies (107)
|
 |
தினம் வீட்டில் செய்ய வேண்டிய சமையலில் சிறந்தவர் யார்?ஆணா? பெண்ணா?
எப்போதாவது வீட்டில் சமையல் செய்யதான் ஆண்கள் சரியா? [வேலையில சமைப்பது வேறு]
வீட்டில் சமையல் செய்யும் போது முக்கிய பொருளாக "அன்பு" கலக்கப்பட வேண்டும்.
இது ஆண்களால் முடியுமா? தினமும் 3 அல்லது 4 வேளைகளுக்கு ?
உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். முடிந்தவரை தலைப்பிலேயே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டால் மிக்க மகிழ்ச்சி.
நறி
|
|
|
| நவராத்திரி |
|
Posted by: தூயா - 10-08-2005, 01:20 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (23)
|
 |
களத்தில் உள்ள உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
<img src='http://www.dgreetings.com/newimages/navratri/navratri15.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| உலகின் முதலாவது இருபக்கத்திரை கொண்ட கம்பியுட்டர் மொனிட்டர் |
|
Posted by: best_net - 10-07-2005, 10:22 PM - Forum: கணினி
- No Replies
|
 |
உலகின் முதலாவது இருபக்கத் திரைகள் கொண்ட கம்பியுட்டர் இந்தியாவின் -சென்னையை சேர்ந்த ஆய்வாளர்களால் வடிவமைக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
முன்னும் பின்னுமாக இரட்டைத்திரை கொண்ட இந்த மொனிட்டர்-கம்பியுட்டர் நோட்புக் அல்லது டெஸ்க்டொப் திரையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் அமர்ந்து இணையவலை உள்ளிட்ட ஒரே விடயத்தை பகிர்ந்து கொள்வதையும் பார்வையிடுவதையும் டிஜிட்டல் நுட்பாPதியாகத் தொடர்பு கொள்வதையும் சாத்தியமாக்கிறது.
சென்னையில் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதியன்று செய்தியாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இரட்டைத்திரை மொனிட்டரின் முன்னோடி வடிவம்இகம்பியுட்டர்களின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டில் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியதாகும்.
தனி உரிமை உள்ள உள்ளடக்கங்கள் அல்லது உள்வாங்கப்படும் பிளக் இன் விசயங்களில் எளிமையான மென்பொருள் அம்சங்களை இணைப்பதன் மூலம் மிக விரைவான செயல்பாடுகளுக்கும் " எக்ஸ்வியு_ ' எனும் இருபக்கத்திரை வழிதிறக்கிறது.
----------நன்றி-----வீரகேசரி
|
|
|
| தமிழீழத்தில் உள்ள உணவகங்கள் |
|
Posted by: iruvizhi - 10-07-2005, 05:27 PM - Forum: சமையல்
- Replies (9)
|
 |
தமிழீழத்தில் உள்ள உணவகங்கள்
[b][size=18]பாண்டியன் உணவகம்
<img src='http://img160.imageshack.us/img160/2989/500787630qa.jpg' border='0' alt='user posted image'>
[b][size=18]சுவையகம்
<img src='http://img76.imageshack.us/img76/4668/500787648ry.jpg' border='0' alt='user posted image'>
நன்றி http://www.eelavision.com/
|
|
|
| இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா |
|
Posted by: kurukaalapoovan - 10-07-2005, 04:28 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (5)
|
 |
இனியாவது இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுமா?
http://sooriyan.com/index.php?option=conte...id=2355&Itemid=
தமிழ்த்தேசியம் என்றும், எதிலும், எங்கும், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசிய தேவையுள்ளது. விழிப்புநிலையினூடாக சில முக்கிய முன்நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதனூடாக தமிழ்த்தேசியம் எதிர்நோக்கவுள்ள பேராபத்தைத் தடுக்கலாம். அல்லது ஓரளவாவது குறைக்கலாம். இதற்கு எமது இறந்தகால வரலாறு உதவும். அதே வேளை அந்த வரலாற்றின் வெற்றிகளுக்குள் மட்டும் நாம் மூழ்கக் கூடாது. வெற்றிகள் எப்போதும் சில படிப்பினைகளையே தரும். தோல்விகள் பல கற்பித்தல்களை உணர்த்தும். இது வரலாறு சொல்லித்தந்த பாடம். .
...
......
[color]எமக்கான விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். வேறு ஒரு தரப்பினர் எமக்கு எமது விடுதலை மூலமான உரிமையை பெற்றுத் தருவார்கள் என்று கனவுகாணக் கூடாது. நமது காலிலேயே நாம் நிலையாக நிற்க வேண்டும். எமது வாழ்வியலை வரலாற்றை நிர்ணயிப்பவர்களாக நாமே திகழ வேண்டும்.[/color] தூரநோக்குள்ள வல்லமைமிக்கதொரு தலைவர் வழிகாட்டி நிற்கிறார். போர்த்திறன் மிக்க தளபதிகள் தோள்கொடுத்து நிற்கிறார்கள். தமிழர் தேசத்தின் விடியலிற்கான கட்டளைக்காய் அணிவகுத்து பார்த்திருக்கிறார்கள் போராளிகள்.
...
....
எமது மக்கள் எப்போதுமே போரியல், அரசியல், சக பொருளாதார ரீதியாக விழிப்படைந்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறான மக்கள் சட்டத்தை கொண்ட ஒரு தேசத்தை எந்தவொரு பலமிக்க ஒரு சக்தியாலும் அசைக்கக் கூட முடியாது. இதனடிப்படையில் புலனாய்வு ரீதியில் நாம் தெளிவானவர்களாக விழப்புணர்வுடையவர்களாக இருக்க வேண்டியது இன்றைய உடனடி தயார்ப்படுத்தல்களின் கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
|
|
|
|