| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 143 online users. » 0 Member(s) | 140 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| ஜெயம் ரவி |
|
Posted by: sankeeth - 10-08-2005, 03:09 PM - Forum: சினிமா
- Replies (50)
|
 |
ஆர்யாவின் நடிப்பு அறிந்தும் அறியாமலும் படத்தில் சுப்பர். யாராவது ஜெயம்-ரவியின் படமிருந்தால் போடுங்களேன்.
|
|
|
| கோழிமுட்டை சைவமா?அசைவமா? |
|
Posted by: SUNDHAL - 10-08-2005, 03:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (6)
|
 |
"கோழி முட்டை அசைவம்.' எனவே, அவற்றை பொது இடங்களில் பகிரங்கமாக விற்கக் கூடாது. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விற்பதை போல் முட்டை விற்பனைக்கும் தனியாக சட்ட விதிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் உருவாக்க வேண்டும்' என்றும் சட்டீஸ்கார் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் மனோகர் ஜெத்தானி. இவர் சட்டீஸ்கார் ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
ராய்ப்பூர் நகரில் பல இடங்களிலும் சாலையோரங்களில் இறைச்சி கடைகளில் கோழி முட்டைகள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. முட்டை சைவம் என்று சொல்வதற்கு சட்ட ரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை. உயிருள்ள கோழி முட்டை இடுகிறது. மண்ணில் விதை விதைத்து முட்டை உண்டாவதில்லை.
நகரில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பகிரங்கமாக முட்டை மற்றும் மாமிசம் விற்பனை செய்வது இதை சாப்பிடாத இதர சமூகத்தினரை பாதிக்கிறது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அனங்குமார் பட்நாயக் மற்றும் நீதிபதி திலீப் ராவ் சாகிப் தேஷ்முக் அடங்கிய சட்டீஸ்கார் ஐகோர்ட் பெஞ்ச் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
முட்டை அசைவ உணவு. அவற்றை தெருக்களில் விற்கக் கூடாது. கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பது போன்று முட்டைகள் விற்பதற்கும் தனியாக "லைசென்ஸ்' இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும். 1956ம் ஆண்டு நகராட்சி சட்டத்தின்படி முட்டை விற்பனை செய்வதற்கான இடங்களை மாநகராட்சியும், அரசும் அறிவிக்க வேண்டும். இதை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
|
|
|
| பூகம்பம் |
|
Posted by: ragavaa - 10-08-2005, 01:52 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (16)
|
 |
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இன்று (சனிக்கிழமை) காலை 9.25 மணிக்கு மிகப் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நில நடுக்கம் 7.6 ரிக்டேர் ஸ்கேல் என்ற அளவுக்கு பயங்கரமானதாக இருந்தது.
கடந்த ஆண்டு சுனாமியை உருவாக்கிய நில நடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பயங்கர நிலநடுக்கம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் நகரில் இருந்து 60 மைல் தொலைவில் நில நடுக்கத்தின் மையம் இருந்தது.
பாகிஸ்தானில் உருவான அந்த நில நடுக்கத்தின் தாக்கம் இந்தியா, ஆப்கானிஸ்தானிலும் இருந்தது. குறிப்பாக வட மாநில மக்களை இந்த நிலநடுக்கம் நிலை குலைய வைத்து விட்டது. டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களில் நில நடுக்கம் கடுமையாக இருந்தது.
டெல்லி நகரமே நில நடுக்கத்தால் குலுங்கியது. 9.25-க்கு ஏற்பட்ட நில நடுக்கம் சுமார் 2 நிமிடம் நீடித்ததாக சொல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக மீண்டும், மீண்டும் பூமி குலுங்கியது.
வட மாநில மக்கள் இதுவரை உணராத அளவுக்கு இன்றைய நில நடுக்கத்தின் தாக்கம் இருந்தது. டெல்லியில் வீடுகள் அதிர்ந்தன. அடுக்குமாடி கட்டிடங்கள் அங்கும் இங்குமாக ஆடின. வீடுகளுக்குள் இருந்த பொருட்கள் சிதறி விழுந்தன. மின் விசிறிகள் ஆடின. வீடு ஆடியதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
9.25 மணிக்கு ஏற்பட்ட முதல் நில நடுக்கத் தாக்குதலை தொடர்ந்து சிறு, சிறு நில அதிர்வுகள் நீடித்தன. சில நிமிட இடைவெளி விட்டு விட்டு இந்த அதிர்வை மக்கள் உணர்ந்தனர்.
அதன் பிறகே பயங்கர நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி இருபதை மக்கள் அறிந்தனர். இதைத் தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு அலறியபடி ஓட்டம் பிடித்தனர். 9.30 மணிக்கெல்லாம் வட மாநிலம் முழுக்க நில நடுக்கம் பற்றிய அதிர்ச்சி நிரம்பி இருந்தது.
டெல்லி, சண்டிகார், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் உள்பட வட மாநில முக்கிய நகரங்களில் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்தபடி தெருக்களில் நின்றத்தை காண முடிந்தது. மக்களிடம் பீதி கலந்த பரபரப்பு காணப்பட்டது.
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak01.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak02.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/8-10-2005/08pak03.jpg' border='0' alt='user posted image'>
நன்றி - மாலைமலர்
|
|
|
| ட...ன் சதி??? |
|
Posted by: தூயவன் - 10-08-2005, 01:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
துரோகி டக்.... தே....வின் நெல்சன் பிளேஸ் அலுவலகத்தில் நடந்த குண்டு வெடிப்பு துரோகியின் திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை தடை செய்ய யோசிக்கும் இந் நேரத்தில், கொழும்பில் இவ்வாறான குண்டு வெடிப்புக்களை நிகழ்த்தி புலிகளை தடை செய்ய து}ண்ட முயலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு துணை போகும் கபடச் செயலை இத் துரோகி செய்கின்றான். இப்போது தனது உயிரை காப்பாற்றச் சொல்லி ஐக்கியநாடுகளுக்கு கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றான்.
ஈபிஆர்எலஎவ் உறுப்பினர் புலிகளுடன் சண்டை செய்து செத்தால் நிதி கொடுத்ததால் காசை பெறுவதற்காக வீணாக தங்கள் உறுப்பினர்களை சாகடித்தது போல, இப்போது தன் உறுப்பினர்களை சாகடித்து, சிங்கப் பேரினவாதிகளிடம் நிதியைப் பெற இத் துரோகி முயல்கின்றான்.( இவன் முன்பு ஈபிஆர்எல்எவ் இராணுவப் பொறுப்பாளர் என்பது குறிப்பிடத் தக்கது. அதால் தான் இந்த .... புத்தியோ தெரியவில்லை)
|
|
|
| முகத்தார் வீடு |
|
Posted by: MUGATHTHAR - 10-08-2005, 12:38 PM - Forum: நகைச்சுவை
- Replies (413)
|
 |
<b>இது வெறும் அரட்டை மட்டுமே யார் மனதையும் புண்படுத்துவதற்காகவல்ல. .</b>
<span style='font-size:25pt;line-height:100%'>முகத்தார் வீடு . 1</span>
நேரம் : காலை 9 மணி
(முகத்தார் வாசலில் பேப்பர் பாத்துக் கொண்டிருக்கிறார் அப்பதான் பொண்ணம்மாக்கா தூக்கத்தாலை எழும்பி வாறா. . . .)
பொண்ணம்.மா : என்னப்பா செய்றியள் காலேலையே பேப்பரா?
முகத்தார் : என்ன இண்டைக்கு வேளைக்கு எழும்பியாச்சுப் போல கிடக்கு நான் 6மணிக்கே எழும்பி எல்லா வேலையும் முடிச்சுப் போட்டுத்தான் பேப்பர் பாக்கிறன் சுடுதண்ணிப் போத்திலை தேத்தண்ணி இருக்கு குடியும்
பொண்ணம்மா : ஏன் ஒருக்கா கப்பிலை ஊத்தித் தரமாட்டியளோ?
முகத்தார் : சரி. . சரி. . காலேலையே தொடங்காமல் முகத்தைக் கழுவிப் போட்டு வாருமன் எடுத்;து வைக்கிறன்
(பொண்ணம்மா முகம் கழுவ கிணத்தடிக்குப் போற முகத்தார் கப்பைக் கழுவி தேத்தண்ணியை ஊத்தி வைக்கிறார்)
முகத்தார் : இந்தாரும் தேத்தண்ணி. . அதுசரி திருநீறை நெத்திலை புூசினீரோ அல்லது தட்டிலை தலையை வைச்சு தேச்சனீரோ அப்பிடிக் கிடக்கு. .
பொண்ணம்மா : உங்கடை இந்த நக்கலுக்கொண்டும் குறைச்சலில்லை. .
(அந்த நேரம் படலை திறக்கும் சத்தம் கேக்கிறது பொண்ணம்மா எட்டிப் பாக்கிறா. .)
பொண்ணம்மா : கிழிஞ்சுது. . .வேலைவெட்டியில்லை காலேலையே வந்திடுங்கள்
முகத்தார் : யாராயப்பா இப்பிடி திட்டுறாய்?
பொண்ணம்மா : வேறை யார் உங்கடை கூட்டாளிதான் சாத்திரியார். .
முகத்தார் : இஞ்சை தனிய என்னவேணுமானாலும் திட்டு ஆட்களுக்கை மரியாதை கெடுத்துப் போடாதை என்ன. . .
பொண்ணம்.மா : சும்மா அந்தாளோடை அலம்பாமல் ஆளை வேளைக்கு கலைச்சுப் போட்டு வாங்கோ சட்டி பானை எல்லாம் கழுவ வேணும் சந்தைக்கும் போக வேணும் . .
முகத்தார் : சரி... சரி. . புலம்பாமல் போ. . .எட சாத்திரி என்ன காலேலையே. இஞ்சாலை முகமும் விடியாத மாதிரி கிடக்கு என்ன விசயம் ?
சாத்திரி : எல்லாம் வீட்டுப் பிரச்சனைதான் இந்த மனுசிமாருக்கு என்னத்தைச் செய்தாலும் திருப்திப் பட மாட்டாளவை
முகத்தார் : நீ எதைச் சொல்லுறாய்?
சாத்திரி : வேறை என்ன காலேலை எழும்பி சமைச்சுப் போட்டு ஒரு ரவுண்ட் வெளிக்கிடுவம் எண்டு வந்தால் மனுசிகாரி சொல்லுறாள் சாப்பாட்டைப் போட்டு நாய்க்கு வைச்சிட்டு போங்கோ எண்டு
முகத்தார் : இதென்ன சின்ன வேலைதானே. .
சாத்திரி : நானும் சொன்னன் போட்டு வந்து உனக்கும் நாய்க்கும் போட்டு தாறன் எண்டு அதுக்கு சொல்லுறாள் நான் வாறதுக்கிடையிலை நாய் படுத்திடுமாம் ஏன் அவளுக்கு இதைச் செய்யகூட என்ன வருத்தம். . .
முகத்தார் : விடு சாத்திரி இதுக்குப் போய் டென்ஷன் ஆகிக் கொண்டு . . . .
(அந்த நேரம் பொண்ணம்மா தேத்தண்ணி கொண்டு வந்து சாத்திரிக்கு குடுக்கிறா. .)
பொண்ணம்மா : என்ன சாத்திரியண்ணை களைச்சுப்போய் வந்திருக்கிறீயள் தேத்தண்ணி குடியுங்கோவன். எனக்குக் கொஞ்சம் உள்ளைவேலை யிருக்கு வாறன். .
முகத்தார் : (மனசுக்குள்) உள்ளை வேலையா? நான் போய்த்தான் ஏதன் செய்யவேணும்) சாத்திரி தேத்தண்ணியை குடியன்
சாத்திரி : முகத்தான் நீ குடுத்து வைச்ச ஆளடப்பா பொண்ணம்மா மாதிரி பெண்சாதி கிடைக்கிறதுக்கு . . .
முகத்தார் : (நான் போட்டு வைச்ச தேத்தண்ணியை கொண்டு வந்து குடுத்தவுடனை பொண்ணம்மா நல்லம் நான் குடுத்து வைச்சனான் யாரிட்டை சொல்லுறது) சாத்திரி இதெல்லாம் விதிப் பலன் . . . .
(அந்த நேரம் நாய் படலையைப் பாத்துக் குரைக்குது யாரோ நிற்பதுபோல நிழல்வேறை)
முகத்தார் : இது என்னடா ஆமிக்காரனைக் கண்ட மாதிரி நாய் குரைக்குது யாரது?
சாத்திரி : அதுதான் எனக்கும் தெரியலை கூப்பிடட்டே . . ?
பொண்ணம்மா : என்னப்பா நாய் ஏதோவைக் கண்டமாதிரி குரைக்குது போய் ஒருக்கா பாருங்கோவன்
(முகத்தார் எழுந்து படலையடிக்குப் போறார் நிண்டஆளையும் கூட்டிக் கொண்டு வாறார் ஆளைக் கண்டதும்)
பொண்ணம்மா : நான் நினைச்சன் இவராத்தான் இருக்குமெண்டு. .வாங்கோ. .
சாத்திரி : எட. . சின்னப்புவே. என்ன குமர்ப்பிள்ளை மாதிரி வெக்கப்பட்டுக் கொண்டு. .
சின்னப்பு : இல்லையடா சாத்திரி எனக்கும் இந்த நாய்களுக்கும் ஒத்து வராது ஏற்கனவே ஒரு (புல)நாயிட்டை மாட்டுப்பட்டு கந்தலானனான் அதாலை கொஞ்சம் தள்ளி நிக்கிறனான்.
.
பொண்ணம்மா : சரி. . . 3பேரும் சேர்ந்தாச்சு இனி விடிஞ்ச மாதிரித்தான். .
.
முகத்தார் : என்ன சின்னப்பு காலேலை கடையள் புூட்டுப் போல இந்தப் பக்கம் வந்திருக்கிறாய். . . ?
சின்னப்பு : இல்லை முகத்தான் சாத்திரி வீட்டுப் பக்கம் போனன் இந்த நாயைவிட முனியம்மாவின் குரையல் பெரிசாக்கிடக்கு பேசாம திரும்பிட்டன். .
முகத்தார் : அது ஒண்டுமில்லை இண்டைக்கு அட்டமி யெல்லோ கனத்தநாள் சிலபேரிலை காட்டும் இந்த நேரத்திலை நாங்கள் கொஞ்சம் விலகியிருப்பது நல்லம்
சாத்திரி : சின்னப்பு இஞ்சை எண்டாலும் மனுசியை நினைவுபடுத்தாமல் இரு பாப்பம் அதுசரி அடுத்தமாதம் லெக்ஷன் வருகுதெல்லோ பேப்பருகள் என்ன சொல்லுது. . ?
முகத்தார் : யாரடாப்பா உதிலை மினைக்கடுறது சனத்துக்கும் பெரிசா ஆர்வமில்லை.
சின்னப்பு : முந்தி பிரேமதாசா வெட்டுவர் புடுங்குவர் எண்டு போட்டம் பிறகு அம்மா ஏதோ செய்வா எண்டு போட்டம் என்ன நடந்தது இருக்கிற இனவாதத்தை கூட்டித்தான் விட்டிருக்கினம் அவ்வளவுதான்
சாத்திரி : சின்னப்பு இந்தமுறை நீ யாருக்குப் போடப் போறாய். . ?
சின்னப்பு : நான் போடாமல் விட்டா வீட்டிலை இந்த குறுக்காலைபோன குத்தியன் எடுத்துக் கொண்டு போய் தன்ரையாளுக்குப் போட்டுவன் ஆனா படியா போடத்தான் வேணும் யாருக்கு எண்டு இன்னும் யோசிக்கேலை
சாத்திரி : நான் நினைக்கிறன் ரணில் கொஞ்சம் லிஸ்ட் விட்டிருக்கிறார் அவற்ரை தேர்தல் பிரசாரத்திலை மனுசன் செய்திச்சுச்செண்டால் நல்லம்
சின்னப்பு : எங்கை உவங்கள் செய்ய விடுவங்களோ. . . ?
முகத்தார் : அப்ப மகிந்தா வந்தால் என்ன நடக்கும் . . ?
சின்னப்பு : அவர் ஜேவிபிக்கும் மொட்டைக்கும்தான் ஜனாதிபதி ஆகப் போறார் வந்தாப் பிறகு பாரன் மனுசன் தலையைப் பிச்சுக் கொண்டு ஓடாட்டிக்கு. . .
சாத்திரி : ஏன் சின்னப்பு அப்பிடிச் சொல்லுறாய் ?
சின்னப்பு : பின்னை என்ன இந்த ஜேவிபிக்கும் மொட்டைகளுக்கும் ஒத்துவராது பாலிமெண்டிலை பாத்தீங்களே மொட்டைகளின்ரை காவி உடுப்பைக் கழட்டி அடிச்சது ஆர்?
முகத்தார் : ஆனா சின்னப்பு தெற்கிலையெல்லாம் மகிந்தாவுக்குத்தான் அதரவு கூட இருக்கெண்டு சொல்லினம் அதோடை மொட்டைகள் பிரச்சாரத்திலை இலங்கேலை பௌத்தத்தை கொண்டு வந்ததும் மகிந்தா(மன்னன்)தான் அதுபோல அந்த பௌத்தம் அழியாமல் காப்பாத்துவதும் இந்த மகிந்தாவால்தானாம். .எண்டு விடுகினம்
சின்னப்பு : முகத்தான் உந்த மொட்டைகளின் கதையை விடு அரச சுகபோக வாழ்க்கை பிடிக்காமல் துறவியானவர்தான் புத்தர் அவரைப் பின்பற்றி வாறவை அரச பதவிக்கு ஆசைப்படுகிறதெண்டால் என்ன இது. . . .
சாத்திரி : அதுவும் சரிதான் சின்னப்பு யார் வந்தாலும் எமக்கு இதே கெதிதான் என்ன சொல்லுறீயள். . .?
முகத்தார் : அனேகமா சிறுபான்மையெல்லாம் ரனிலுக்குத்தான் சப்போட் பண்ணுவினம் போலக்கிடக்கு பாப்பம் என்ன நடக்குதெண்டு. . .
பொண்ணம்மா : என்ன 3பேரும் லெக்ஷன் கேக்கப் போறீங்களோ. . ? உங்களுக்கு இந்த அரசியலை விட்டாவேறை கதையில்லைப் போல என்ன. . . ?
சின்னப்பு : எங்கடை வயசுக்குப்பிள்ளை நாங்க வேறை என்னத்தைத்தான் கதைக்கிறது
சாத்திரி : சரி இதை இதோடை விடுவம் இன்னோரு கதைகேள்விப் பட்டியளோ திருகோணமலை கடல்த்தண்ணி பச்சைத் தண்ணியாக் கிடக்காம்
சின்னப்பு : இதென்ன கதை கடல்தண்ணி பச்சைத்தண்ணியில்லாமல் சூடுதண்ணியோ.?
சாத்திரி : சின்னப்பு உனக்கு தவறனைத்தண்ணியைத் தவிர வேறையொண்டும் தெரியாது இது பச்சை நிறத்திலை தண்ணியிருக்காம் சனம் திருவிழா மாதிரி கடக்கரையிலை கூடிச்செண்டால் பாத்துக்கோவன்
முகத்தார் : உந்த சுனாமிக்குப் பிறகு எங்கடைசனங்கள் கடலை வடிவாத்தான் பாக்குதுகள் ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் கண்டுபிடிச்சிடுங்கள்
சாத்திரி : இருந்தாலும் முகத்தான் இது முன்னையதுகளைவிட வித்தியாசமா இருக்குதாம்
முகத்தார் : நானும் பேப்பரிலை பாத்தனான் இதுவந்து இந்தியாகாரங்கள் செய்யிற வேலைபோலத்தான் எனக்கு படுகுது
சின்னப்பு : என்ன கடலுக்கை சாயத்தைக் கொட்டிப் போட்டங்களோ . . ?
சாத்திரி : சின்னப்பு உந்த விசர் பகிடியை விட்டுட்டு கதையைக் கேள் முகத்தான் நீ சொல்லு. . .
முகத்தார் : இந்த பாக்குநீரிணையை பெரிய கப்பல்கள் வரவேண்டுமெண்டு ஆழமாக்கிறதுக்கு சேது சமுத்திரத்திட்டமொண்டை தொடங்கினவையெல்லோ அது இப்ப நடமுறைக்கு வந்திட்டுது இனி கடலை ஆழமாக்கேக்கை அங்கையிருக்கிற உயிரிணங்கள் திக்குத்திசை தெரியாம கரையொதுங்கியிருக்குதுகள் போல கூட்டமா வரேக்கை அந்த இடத்திலை சில மாற்றங்கள் தெரியத்தான் செய்யும்
சின்னப்பு : அப்பிடியெண்டால் சில மீன் இனங்களும் அழியிறத்துக்கும் வாய்ப்பிருக்கு என்ன. . ?
முகத்தார் : மீனினங்கள் மட்டுமல்ல பளிங்குப்பாறையள் கூட அழிய வாய்ப்பிருக்கு
சின்னப்பு : அப்ப மீன் பிடிக்கிற ஆட்களுக்கு பாதிப்பில்லையோ . . ?
முகத்தார் : ஏன் இல்லாமல் இப்பிடி மீன் இனங்கள் அழியிறதாலை மீன்பிடித்தொழில் கலர்மீன் ஏற்றுமதிகூட பாதிப்படையச் சாத்தியம் இருக்கு . .
சாத்திரி : அப்ப இது எங்கடை அரசாங்கத்துக்கு விளங்கேலையோ இந்த திட்டத்துக்கு எதுக்கு சம்மதிச்சவை. .
முகத்தார் : எங்களுக்கு மாத்திரமில்லை தமிழ்நாட்டு மீன்பிடித்துறைக்கும் பாதிப்புத் தான் முதலிலை ஜெயலலிதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்தவ பிரயோசணமில்லை எங்கடை அரசாங்கம் தமிழீழ மீனவர்தான் பாதிக்கப் படப்போயினம் எண்டுட்டு சும்மா இருந்திட்டினம்
சாத்திரி : இப்ப இந்த திட்டம் முடிஞ்சால் கொழும்பு துறைமுகத்துக்கு வாற கப்பல்களின் எண்ணிக்கை குறைஞ்சிடுமே இதாலை இவைக்கு நட்டம்தானே. . ?
முகத்தார் : உண்மைதான் சாத்திரி எல்லாம் முடிஞ்சாப்பிறகுதான் ஓடி முழிப்பினம்
சின்னப்பு : உவைக்கு எங்கடை ஒருகண்ணைக் குத்திறதெண்டால் தங்கடை இரண்டு கண்ணையும் குத்திக் கொள்ளுவினம். .
பொண்ணம்மா : என்னப்பா மணி 11யாகுது சந்தைக்குப் போகேலையோ. . .?
முகத்தார் : சரி. . சரி. . வெளிக்கிட்டுட்டன் சின்னப்பு சாத்திரி வெளிக்கிடுங்கோ மனசி கொப்பிலை ஏறுதக்கிடையிலை நான் ஒருக்கா சந்தைக்கு போகவேணும். .
சாத்திரி : நானும் வெளிக்கிடுறன் மனுசிக்காரி உலையும் வைச்சிருக்க மாட்டாள் போய்த்தான் எதன் செய்யவேணும் சின்னப்பு வரட்டே. . .
சின்னப்பு : இரண்டுபேரும் மனுசிமாருக்கு பயந்து என்ன ஓட்டம் ஓடுறாங்கள் நல்ல காலம் என்ரை மனுசி கொழும்புக்குப் போனது எவ்வளவு சந்தோஷம். . .
(யாவும் கற்பனை)
|
|
|
| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா. சபையும் நடவடிக்கை? |
|
Posted by: mayooran - 10-08-2005, 12:23 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை மூலம் நடவடிக்கை எடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவும் பிரித்தானியாவும் சிறிலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சாதகமாக பதிலளித்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க, பிரான்ஸ் அரச தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இது குறித்து கலந்துரையாடியதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த மாத நடுப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த சந்திரிகா, விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள சென்றிருந்த முக்கிய வெளிநாட்டுத் தலைவர்களுடன் சந்திரிகா இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் சபை மூலமாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த நடவடிக்கையில் எப்படியேனும் வெற்ற பெற்று விடவேண்டும் என சிறிலங்கா அரசாங்க தரப்பு முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் தலைமை அடுத்த ஆண்டு டென்மார்க்கிற்கு வழங்கப்படவுள்ளது.
டென்மார்க்கில் செயற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுக்குழு ஒன்றின் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.
தமிழ் மக்களை பலமிழக்கச் செய்து விட்டு தாங்கள் விரும்பிய தீர்வினை தமிழ் மக்கள் மீது திணிப்பதே சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவருக்கும் எதிர்கட்சித் தலைவருக்கும் இடையில் பொது இணக்கப்பாடு ஒன்று ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரியவருகின்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் கொழும்பில் உள்ள அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
|
|
|
| போராட்டத்தில் பாடகனும் நடிகனும். |
|
Posted by: கோமதி - 10-08-2005, 10:55 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
இன்று அவர்கள் வீரச்சாவடைந்த நாள். தமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய மேஜர் சிட்டு 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.
இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் உயிர்ப்பூ படத்தில் இவர் பாடிய சின்னச் சின்னக் கண்ணில் என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.
அப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.
<img src='http://www.aruchuna.com/Martyr/karumpulli/photos/photo47.jpg' border='0' alt='user posted image'>
சிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.
அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.
இதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் உயிர்ப்பூ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.
போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை.
<b>நகுலனையும் அவனோடு விரச்சாவடைந்த கண்ணாளனையும் நினைந்து பாடும் பாடல்</b>
படஉதவி:- அருச்சுனா இணையத்தளம்.
-------------------------------
இப்பதிவை எழுதியவர்: வசந்தன்
மூலச்சுட்டி: http://vasanthanin.blogspot.com/2005/08/blog-post.html
இணைப்புகளை திருத்தியுள்ளேன் - மதன்
|
|
|
|