| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 94 online users. » 0 Member(s) | 93 Guest(s) Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,329
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| யாழில் கோவில் புூசகர் சுட்டுக்கொலை |
|
Posted by: mayooran - 10-07-2005, 10:51 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழ்ப்பாணத்தில் யாழ். பிரதானவீதியும் கோவில் வீதியும் இணையும்; யாழ் ஆயர் இல்லத்திற்கு அருகில் இன்று 9-30 அளவில் இந்து மத புூசகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்டவர் 40 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி செந்தில் குமரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இனம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் ரீ. மகேஸ்வரனின் யாழ் அலுவலகத்தில் கடமையாற்றியுள்ளார். [b]பின்னர் தேசவிரோதி டக்ளஸ் தேவானந்தாவின்அமைச்சின் கீழும் சிறிது காலம் பணியாற்றியவர் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை யாழ் காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
Sankathi
|
|
|
| பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்பு |
|
Posted by: வினித் - 10-07-2005, 09:53 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
தமிழர் தாயகத்தின் நிகழ்வுகளை
பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்பு!
யாழ். பொது அமைப்புகளின் ஒன்றியம் கவலை
தமிழர் தாயக நிகழ்வுகளை பி.பி.சி. செய்திச் சேவை இருட்டடிப்புச் செய்வ தாகவும்
இனிமேலாவது நடுநிலையுடன் செய்திகளை ஒலிபரப்புச் செய்யும்படி கோருவதாகவும்
யாழ்.மாவட்ட பொது அமைப்பு களின் ஒன்றியம் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
தமது வாழ்வுரிமைக்காக போராடும் இனத்தின் பதிவுகளை சர்வதேச ஊட கங்கள் முக்கியத்துவப்படுத்தி செய்தி களை வெளியிட்டுவரும் வேளையில் பி.பி.சி. ஒலிபரப்பு நிறுவனம் தமிழர் தாயகத்தில் நடைபெறும் நிகழ்வு களை இருட்டடிப்புச் செய்தும் வெளி யிடாமலும் ஒரு பக்கச் சார்பாகவும் நடந்து வருகின்றது இது தமிழர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து யாழ்.மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின் றது.
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகமாகும். இங்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் விடுதலைக்கான போராட்ட நிகழ்வுகள், தமிழர்களின் உரிமைக் குரலான பொங்குதமிழ் நிகழ்வுகள் என ஏராளமான நிகழ்வுகள் நாளாந் தம் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் பி.பி.சி. வெளியிடவில்லை என்பது தெட்டத்தெளிவாக எமக்குத் தெரிகின்றது.
தேமதுர தமிழோசை உலகமெல் லாம் பரவ வகை செய்தல் வேண்டும் என்ற குரல் முழக்கமிட்டு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பி.பி.சி. அந்த தார்மீகப் பொருளை மறந்து எமது மண்ணில் நடக்கும் நிகழ்சிகளை ஒலிபரப்பாமல் புறக்கணிக்கின்றது. அத்துடன், மெய் யான செய்திகளை மூடிமறைத்து பக்கச் சார்புடன் செய்திகளை வெளியிட்டு வருவது அண்மைக் காலமாக அதி கரித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளின் யுத் தத்தால் துன்பமான வாழ்வை சுமந்து நிற்கும் தமிழ் மக்களின் மெய்யான நிலைப்பாட்டை வெளியிட மறுத்து பக்கச்சார்புடைய செய்தி நிறுவனமாக பி.பி.சி. மாறிவிட்டதா என எம்மை சந்தேகம் கொள்ளவைக்கின்றது. இது தொடருமானால் பி.பி.சி. அதன் தனித்துவத்தை இழந்துபோக நேரி டும். இனிவரும் காலத்திலாவது நடு நிலையுடன் நடந்துகொண்டு தமிழர் தாயகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை ஒலிப்பரப்புச் செய்து உதவுமாறு அன்பு டன் கேட்டுக்கொள்கின்றோம். என்று அக்கடிதத்தில் உள்ளது.
http://www.uthayan.com/
|
|
|
| கைக்குண்டு வீச்சில் மூவர் படுகாயம் |
|
Posted by: mayooran - 10-07-2005, 04:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
கைக்குண்டு வீச்சில் இரு படையினர் உட்பட மூவர் படுகாயம்
திருகோணமலை நகரின் சீ வியுூ வீதியில் அமைந்திருந்த சிறீலங்கா படையினரின் சோதனைச் சாவடி மீது வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் ஒரு படையினன், ஒரு காவல்துறையினன் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த மூவரும் உடனடியாக திருமலை அரசினர் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
கைக்குண்டுத் தாக்குதலையடுத்து குறிப்பிட்ட வீயுூடான போக்குவரத்து படையினரால் முற்றாகத் தடைசெய்யப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது எவரும் கைது செய்யப்பட்டார்களா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.
|
|
|
| 2005 - இறுதி ஆண்டின் நகைச்சுவை. |
|
Posted by: mayooran - 10-07-2005, 03:37 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
""நான் ஜனாதிபதியானால், அமைக்கப்படும் அமைச்சரவையில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்துக்கு பதவி வழங்கப்படும்.'' ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரும் "சித்தாலேப' நிறுவன அதிபருமான மருத்துவர் விக்ரர் ஹெட்டி கொட சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ள தாவது: கடந்த 20 ஆண்டுகளாக யுத்தத்தின் கோரப்பிடியில் சிக்குண்டிருந்த இந் நாட்டில் யுத்தத்தை இல்லாதொழித்து சௌபாக்கியம்மிக்க நாடொன்றாக ஸ்ரீலக்காவை உருவாக்கும் நோக்கை முன்வைத்தே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளேன். வெளிநாடொன்றின் தலையீடு இன்றியே எமது பிரச்சினையை நாமே பேச்சு மூலம் தீர்த்துக்கொள்ளமுடியும். நான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் உருவாக்கப்படும் அமைச்சரவையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு பதவி வழங்கப்படும். அது மட்டு மன்றி முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளினதும் தலைமைத்துவங்களுக்கும் பதவிகள் வழங்கப்படும். மேலும் ஆறு ஆண்டு காலங்களுக்குள் நாட்டைச் சீர்படுத்தி அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்வதே எனது நோக்கமாகும் என்று அவர் தெரிவித் தார்.
nithrsanam
|
|
|
| மழைவேண்டி கொடும்பாவி எரிக்கப்பட்டது. |
|
Posted by: SUNDHAL - 10-07-2005, 12:50 AM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (15)
|
 |
பெரும்போக நெற்செய்கைக்கு மழை வேண்டி சம்பிரதாயச் சடங் காக நவாலியில் கொடும்பாவி எரிக் கப்பட் டது.
செப்ரெம்பர் மாத இறுதிப் பகுதியில் பெய்யும் மழையை நம்பியே விவசாயிகள் பெரும்போக நெற்செய்கையை மேற்கொள்கின் றனர்.
ஆனால், இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் கடந்தும் மழை பெய்வது தாமதமாகியுள்ளது. இதனால் நவாலிப் பகுதியில் பொது மக்கள் மழைவேண்டி பிரார்த்தித் துக் கொடும்பாவி எரித்தனர்.
நவாலி வடக்கு பெத்த நாச்சி யார் ஆலய நிர்வாகி ஐயாத்துரை உருத்திரகுமார் தலைமையில் கொடும்பாவி எரிப்பு பிரார்த்தனை இடம்பெற்றது.
மக்களின் பாவங்களை உரு வகப்படுத்தும் கொடும்பாவியை வீதிகள் வழியே ஒப்பாரிவைத்து இழுத்துச் சென்ற மக்கள் நவாலி ஆரியம்பிட்டி மயானத்தில் வைத்து அதனை எரித்தனர்.
Thanks:uthayan
|
|
|
| அண்டிப்பிழைக்கும் கோழி.. |
|
Posted by: SUNDHAL - 10-07-2005, 12:42 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (14)
|
 |
கடவுள் பறவை வகைகளை முதல்முதலாகப் படைத்து பூமியில் விட்ட சமயம், எந்தப் பறவைக்குமெ பறக்கிறதுக்கு இறக்கை வைக்கவில்லையாம். நம்மைப் போலத்தான் அவைகளும் நடந்து திரிந்து கொண்டிருந்ததாம்.
தேவலோகத்திலிருந்து அப்போது பூமிக்கு அடிக்கடி யட்சர்கள் கின்னரர்கள் பறந்து வருவார்கள். அதைப் பார்த்த பறவைகளுக்கு தாங்களும் அப்படிப் பறக்க வேண்டும் என்று ஆசை வந்ததாம்.
பறவை வகை என்று பேர் இருந்து என்னத்துக்கு, பறக்க முடியாமல் என்று நினைத்தன. ஆனால் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொள்கிறது என்று தெரியவில்லை. கருடன் பறவை மட்டுந்தான் கடவுளிடம் தைரியமாகக் கேட்டது. பறப்பதுக்குத் தனக்கு இறக்கைகள் வேண்டும் என்று. கருடன் பேரில் கடவுளுக்கு ரொம்ப இஷ்டம்.
கடவுள் சிரித்த முகத்தோடு, ‘‘அப்படியா; சரி. இந்தா’’ என்று தன்னிடமிருந்த தைக்கும் ஊசியை எடுத்துத் தந்து, ‘‘உன் உடம்பிலிருக்கும் ரோமங்களையே பறித்து இறக்கை போலத் தைத்து ஒட்ட வைத்தால் ஒட்டிக்கொண்டு இறக்கைகள் ஆகிவிடும்; உடனே பறக்கலாம்’’ என்று சொல்லி, ‘‘ஊசி மட்டும் ரொம்ப பத்திரம்; நான் கேட்கும்போது தந்துறணும்’’ என்று சொல்லிக் கொடுத்தனுப்பினார்.
தைத்து முடித்து ஒட்டவைத்தவுடன் ஆச்சரியப்படும்படி அந்த இறக்கைகள் உடனே வளர்ந்து பெரிசாகி கருடன் பறக்கும்படி ஆனது. இப்படியாகக் கருடன் வானத்தில் பறந்து முதல் முதலில் வட்டமடித்து வந்து இறங்கியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பறவைகள் ஒவ்வொன்றாக கருடனிடம் வந்து தாங்களும் பறக்க வேண்டும் என்று ஊசியைக் கேட்டு வாங்கி, தைத்து பறக்க ஆரம்பித்தன. கருடனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தனக்கு வேண்டிய பறவைகளுக்கெல்லாம் ஊசியைக் கொடுத்து வாங்கியது. கொடுக்கும் போதெல்லாம் ‘பத்திரம் ஞாபகம்’ என்று சொல்லியேதான் தரும்.
இப்படி எல்லாப் பறவைகளும் ஆகாசத்தில் பறந்து வட்டமடிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த காக்காயிக்கு தானும் பறக்கணுமே என்று ஆசைப்பட்டு ஒருநாள் கருடனிடம் வந்து கருடனைப் புகழ்ந்து பேசி ‘காக்கா பிடித்து’ ‘‘கொஞ்சம் அந்த ஊசியைத் தந்து வாங்கினால் அடியேன் நானும் உங்க பேரைச் சொல்லி பறந்துக்கிடுவேனே’’ என்று கேட்டு வாங்கிவிட்டது.
காக்கா தனக்கு இறக்கை தைத்துக் கொண்டிருந்தபோது கோழி வந்து பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தது. ‘‘என்ன செய்யிறெ?’’ என்று கேட்டது. ‘‘என்ன செய்யிறேனா ஓம் மூஞ்சி’’ என்று வலிச்ங்காட்டிச் சொன்னது. காக்காயிக்கு, தான் ரொம்....ப நிறம் அழகு என்கிற நினைப்பு.
‘‘அட என்ன செய்யிறன்னுதான் சொல்லேம்.’’
‘‘பாத்துக்கிட்டே இரு இப்பொ என்ன நடக்குன்னுட்டு...’’
காக்காயிக்கு வந்த ‘‘பகுத்து’’ல ஊசியைப் போட்டுவிட்டு மேலே பறக்க ஆரம்பித்ததும் பெருமை பிடிபடவில்லை. மேலே மேலே வட்டமடித்துக் கொண்டே இருந்தது.
அது கீழே இறங்கி வர்றதுக்குள் நாமும் அப்படிச் செய்து பறந்து பார்க்கணும் என்று கோழியும் வேகமாக அதேபோலச் செயல்பட்டது. தைத்து முடித்து ஒட்ட வைத்ததும் இறக்கைகள் வந்துவிட்டன. சரி ஊசியை அதனிடம் ஒப்படைக்கணுமே என்று தேடியபோது காணோம்! அதாம் சொல்லி இருக்கே ‘‘ஊசிக்குத் திருடன் உடனே வருவான்’’ என்று. இதெல்லாம் இந்தக் கோழிக்கு எங்கே தெரியப் போகுது. பறக்க வேண்டும் என்பதை மறந்து ஊசியைத் தேட ஆரம்பித்து விட்டது.
பரபரப்பாக ஊசியைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான் காக்காய் வந்து சேர்ந்தது. தன்னைப் பார்த்ததும் கோழி ‘‘மெய்மறந்து’’ நிற்பதைப் பார்த்து யூகித்து விட்டது.
‘‘என்ன ஆச்சி; எடு சீக்கிரம் ஊசியை’’ என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கருடனும் ஊசியைப் பெற்றுக் கொள்ள வந்துவிட்டது. கோழி நடுநடுங்கிப் போய்விட்டது.
எப்படியாவது தேடி ஊசியை உன்னிடம் ஒப்படைத்துவிடுவேன் என்று வாக்குக் கொடுத்தது கோழி.
கருடனுக்கும் காக்காயிக்கும் கோவம் வந்துவிட்டது. அப்படி நீ ஒப்படைக்கலே உன் வம்சமே இல்லாமல் ஆக்கிவிடுவோம் என்று சபதம் கூறின.
சொன்னபடி கோழியால் இன்று வரைக்கும் ஊசியை ஒப்படைக்க முடியவில்லை. அதனால்தான் கருடனும் அதன் இனமான பருந்துகளும், காகங்களும், கோழிகளின் குஞ்சுகளையும் முட்டைகளையும் எடுத்துத் தின்றுகொண்டே இருக்கின்றனவாம். அதோடு மற்ற பறவைகளைப் போல வானத்தில் பறக்க முடியாமல் மனிதர்களுடைய காலடியே தஞ்சம் என்று கிடக்கிறது. குப்பை கூளங்களைக் கிளறிக் கிளறி அது இன்றும் தேடிக்கொண்டே இருக்கிறது.
ஊசி கிடைக்காத வரை கருடனுக்கும் காகத்துக்கும் லாபமாம்; கிடைத்துவிட்டால் மனிதர்களுக்கு நஷ்டமாம்!
Thanks:Kumudam...
|
|
|
| காட்டுக்குள் நடந்த சிலிர்க்கும் சண்டை |
|
Posted by: வதனா - 10-06-2005, 08:34 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
காட்டுக்குள் நடந்த சிலிர்க்கும் சண்டை முதலையை விழுங்கிய மலைப்பாம்பின் வயிறு வெடித்துப் பிளந்து இரண்டும் பலி
[img=http://img151.imageshack.us/img151/1495/gator2xcopy4xe.jpg]
மியாமி, அக். 7- திகில் படத்தில் வரும் மயிர் கூச்செறியும் காட்சியைப் போன்ற அதிரடி சண்டைக்காட்சி, அமொpக்ககாட்டுக்குள் நடந்துள்ளது. முதலையை மலைப்பாம்பு விழுங்கிட, பாம்பை இரண்டாகப் பிளந்து வயிற்றைக் கிழித்து வெளியேறியது முதலை. இந்தப் போராட்டத்தில் இரண்டுமே உயிhpழந் தன.
கற்பனையில் கண்முன் தோன்றக் கூடிய அற்புத சண்டைக் காட்சி பற்றிய விவரம்„-
அமொpக்காவின் எவர் கிளேட் காட்டுப் பகுதியில் வன விலங்கு பற்றி ஆராய்ச்சியில் பிரபல உயிhpயல் நிபுணரும், ஹெலிகாப்டர் பைலட்டும் கடந்த வாரம் காமிராவுடன் …தேடுதல் வேட்டை† நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் 6 அடி நீள முதலையை 13 அடி நீள மலைப்பாம்பு விழுங்க முயன்றதையும், கடுமையான சண்டை நடந்ததையும் கண்டு படம் பிடித்தனர். அரைமணி நேரத்துக்கு மேல் நடந்த சண்டைக்குப் பிறகு, முதலையை மலைப் பாம்பு முழுதாக விழுங்கியது.
மலைப்பாம்பிடம் முதலை தோற்று உயிரைவிட்டதாக ஆய்வாளர்கள் கருதினர். அங்கிருந்து திரும்ப நினைத்தபோது அவர்கள் எதிர்பாராத அது நடந்தது. படார் என்ற சத்தத்துடன் மலைப்பாம்பு வயிறு கிழிந்து இரண்டு துண்டாகப் பிளந்தது. அடுத்த சில நிமிடங்கள் மீண்டும் உயிர் போராட்டம். பாம்பு வயிற்றைக் கிழித்து பாதி வெளிவந்த முதலையும், பேராசையில் அதை விழுங்கிய பாம்பும் அடுத்தடுத்து பலியாகின.
இந்த அபூர்வ சம்பவம் பற்றி புளோரிடா பல்கலைக்கழக வன விலங்கியல் துறை பேராசிhpயர் ப்ராங்க் மசோடி கூறுகையில், ……உயிருடன் விழுங் கிய முதலையை பாம்பு ஜPரணிக்க முயன்றதால் தனது நகங்களால் பாம்பு வயிற்றை முதலை கிழித்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளில் படம் பிடிக்கப்பட்ட மிக ஆக்ரோஷமான மலைப்பாம்பு - முதலைச்சண்டை இது. பொதுவாக, மனிதனையும் விழுங்கக் கூடிய மலைப்பாம்புகூட முதலையை விழுங்கத் தயங்கும். முதலையின் தடிமனான தோல் மற்றும் கூhpய நகங்கள், பற்களால் பாம்புக்குப் பிரச்சனை ஏற்படும். எவர்கிளேட் பகுதியில் ஆயிரக் கணக்கான முதலைகள் இருக்கின்றன.
மலைப்பாம்புகளை செல்ல பிராணியாக வளர்க்கத் தொடங்கும் பலர், அதற்கு தீனி போட்டு கட்டுப்படியாகாமல் இங்குவிட்டுச் செல்கின்றனர். இதனால், வன விலங்குகள் ஆபத்தைச் சந்திக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 150 மலைப்பாம்புகள் பிடிக்கப்பட்டுள்ளன என்றார்.
செய்தி: தினகரன் இந்தியா
படம்: AP
|
|
|
|