| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 103 online users. » 0 Member(s) | 101 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| யாழில் இருவர் கடத்தல்,ஒருவர் கொலை,மற்றவர் காயம் |
|
Posted by: Vaanampaadi - 10-09-2005, 09:28 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
Two persons abducted, one dead, other injured in Jaffna
[TamilNet, October 09, 2005 19:44 GMT]
Mr. Muthulingam Chandrakumar (24) of Alvai North was found Sunday early morning with injuries and his hands tied in an abandoned land in Vadamaradchchi area. Nelliyady Police on receipt of information rushed to the site and removed the youth to the Point Pedro Base Hospital, police said.
Police have provided tight security to the ward where he is warded, sources said
Preliminary police investigation held Sunday revealed that the injured youth had been abducted by an unidentified gang Friday night and attacked with pointed weapons.
About ten cases had been registered against the injured youth in Point Pedro magistrate's court charging him for anti-social activities in the area, police said.
In another incident, unidentified persons had abducted Mr.Gnanapiragasam Kirubairatnam (57) of Puttur Friday night and later he was found with injuries in a lonely spot.
Jaffna Police said he succumbed Sunday to injuries after admission to the Jaffna Teaching Hospital.
|
|
|
| சிரிச்சி சிரிச்சி வந்தார்... |
|
Posted by: shanmuhi - 10-09-2005, 06:39 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (37)
|
 |
<img src='http://img287.imageshack.us/img287/314/sinn19wg.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>சிரிச்சி சிரிச்சி வந்தார்...</b></span>
சாந்தமான பார்வையுடனே
சிரிச்சி சிரிச்சி வந்த சின்னப்பு
சிங்காரமாய் நெஷனல் உடுத்தியே
சைக்கிள் மிதிச்ச காலாலே இப்போ
பென்ஸ் கார் காஸ் யை மிதிச்சி மிதிச்சி
பத்து கிலோ மீட்டர் தூரத்தையும்
பவிசாக மின்னல் வேகத்தில் கடந்து
களம் நோக்கி வருகிறார் எங்கள் அப்பு
அறுபது கருத்தென்ன ஆழமான
ஆறாயிரம் கருத்துக்கள் என்ன
வாயெல்லாம் பற்கள் தெரிய அழகாய்
டுத்பேஸ்ட்டுக்கு விளம்பரம் தந்தது போல்
சிரிச்சி சிரிச்சி வாழ்த்துக்கள் கூறுவது
கடவுள் தந்த வரமோ என்றெண்ணியே
சின்னப்புக்கும் இனிதே வாழ்த்துக்கள்
<b>*** </b>குடிச்ச வாயாலே இங்கே
ரெமி மார்டின் என்றும் ஸ்கொட்ச் என்றும் மப்பில்
வாய்க்கு ருசி சிப்சும் கச்சானுமாய் தேடுறார்
பிலாவில குடிச்ச கூழும் மறந்து போய்
கரண்டி கத்தியுடன் சண்டை பிடித்தே
பிட்சா என்றும் இறைச்சி பொறியலுமாய் ஒரு
வெட்டு வெட்டியே உள்ளே தள்ளுறார்
பழசு தான் புதுசு என்ற நினைப்புடன்
இளமை ஊஞ்சலாடுது என்றே
கறுப்புக் கண்ணாடியுடனும் சேட் பொத்தானை
திறந்து விட்டுக் கொண்டும் ஒரு பவுணில்
தோடுடைய செவியனாய் வலம் வந்தே
த்ரிஷாவுடன் ஆடும் நடத்துற லூட்டி
அப்பப்பா கொஞ்சநஞ்சமல்ல
சின்னாச்சிக்கு விஷயத்தை போட்டுக்கொடுக்க
நானும் சின்னாச்சியின் வீட்டுக் கதவைத்தட்ட
பாதி த்ரிஷாவும் பாதி சின்னாச்சிமாய்
மேக்கப் கலைந்தும் கலையாமல் வந்து நின்ற
சின்னாச்சியை பார்த்தே சிலையாய் சமைந்து போனேன்
[b]
*** தணிக்கை
சின்னப்பு இந்தப்பக்கம் எல்லாம் தலைகாட்டமாட்டார் என்ற துணிவுடன் எழுதி விட்டேன். ஒருவேளை பார்த்துவிட்டு வை வை(why why) என்று இருக்கும் தலைமுடியை பிய்த்துக்கொண்டு என்னை வை வை என்று வையாமல் இருக்க நான் இப்போதே எஸ்கெப்.
|
|
|
| கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இன அழிப்பு |
|
Posted by: happy - 10-09-2005, 04:58 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இன அழிப்பு த.உரியன்
Saturday, 08 October 2005
--------------------------------------------------------------------------------
தமிழ் இன அழிப்பானது காலம் காலமாக இலங்கை அரச கூலிப்படையினரால் திட்டமிட்ட முறையில் தமிழர் தாயகம் எங்கும் நடந்து கொண்டுதான் வந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் உயிர்களையும், உடமைகளையும், பல சொத்துகளையும் சூறையாடுவது இலங்கை இராணுவத்தினரின் கை வந்த கலையாகவே காணப்பட்டன.
திட்டமிட்ட முறையில் தாங்கள் நினைத்ததைச் செய்யவும் நினைத்தபடி தமிழ் மக்களைக் கொன்றழிக்கும் முறையில் இலங்கை அரசானது பூரண அதிகாரத்தினை இந்தச் சிங்களக் காடையர்களுக்கு வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதனைக் கையில் எடுத்துக் கொண்ட இராணுவம் மறக்க முடியாத அத்தியாயங்களாக இன்று காணப்படும் திட்டமிட்டபடுகொலைகளைச் செய்து தங்களின் உயிர்க்கொலை வெறியைத் தீர்த்து கொண்ட பல சம்பவங்களில் ஒன்றுதான் கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு சம்பவம் நடந்து முடிந்தது. இச்சம்பவம் பாதிக்கப்பட்ட மக்களின் மனதில் நீங்காத நினைவலைகளாக இன்றும் ஆழமாகப் பதிந்துள்ளன.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து திரட்டிய தகவல்களைக் கீழே காணலாம்.
1991ம் ஆண்டு ஆனித் திங்கள் 12ம் நாள் மகிழடித்தீவுக் கிராமம் தனது நினைவில் மறக்க முடியாத ஒரு கொடூரமான சம்பவத்துக்குள்ளாகி 132 பேரைப் பலிகொடுத்து 400 வீடுகளையும் தீக்கிரையாக்கி பலகோடி ரூபாய் பெறுமதியான சொத்துகளைச் சூறையாடிய சம்பவத்தில் நடந்து முடிந்துள்ளது.
இச்சம்பவத்தில் சிக்குண்டு உயிர்தப்பிய கணபதிப்பிள்ளை, மோட்ச மலர், முத்துலிங்கம் விமலாதேவி, வல்லிபுரம் காரிகாதேவி, கறுவல்தம்பி ஆகியோர் இக்கொலைச் சம்பவத்தை மாறி மாறி இடைவிடாது சொல்லத் தொடங்கினார்.
அன்று சுமார் பி.பகல் ஒரு மணி இருக்கும். காதுகளை அடைப்பது போன்று பெரிய வெடிச்சத்தம். அதனைத் தொடர்ந்து இடைவிடாது சிறிய வெடிச்சத்தமும் கேட்க என் நெஞ்சைப் பிளப்பது போன்ற பயம். அப்ப நான் என் இரண்டு மகனையும் சொன்னேன். ஆமி வெடி சுட்டுக்கொண்டு வாறான் வாங்கோ சனம் எல்லாம் போற பக்கம் போவோம் என்று சொல்லிக் கொண்டு வெளிக்கிடக்க குளக்கட்டால ஆமிசுட்டுக் கொண்டு வந்திட்டான். வரக்குள்ள பிடித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரியான அடி அடிச்சிக் கொண்டு வந்தான்.
வரக்குள்ள வீடுகளையெல்லாம் எரிச்சி எரிச்சி வந்தான். அப்படி வந்தவன் என்னையும் என் தம்பியையும் பிடிச்சு எரிந்து கொண்டிருந்த வீட்டிற்குள் தள்ளிவிட்டான். கையை எடுத்துக் கும்பிட்டும் அந்த பாவிட மனம் இரங்கல. அந்த வீட்டிற்குள் நெல் மூட்டைகள் இருந்ததால என் தம்பி அதன் மேல் ஏறி பின்பக்கமாக குதிச்சான். எரிந்து சாகிறதை விட கால் முறிந்தாலும் பரவாயில்ல என்று நானும் ஏறி குதிச்சி இருவருமாக பின பக்கம் கிடந்த தகரத்தை எடுத்து எங்கள மூடிக் கொண்டோம். வெடிச்சத்தமும் அழுகின்ற சத்தமும் நிற்கல. இனி எங்கேயும் ஓடுறதில்ல. சாகிறது என்றால் இதற்குள்தான் சாகிற என்று இருவரும் இருந்தோம் என்று குரல் தளதளக்க சொல்லி முடித்தார் வல்லிபுரம் காரிகாதேவி.
வெடிச்சத்தம் ஊரைச் சுற்றிக் கேட்டுக் கொண்டுதான் இருந்தன. நம்மட அக்காவுக்கு குழந்தை பிறந்து பன்ரெண்டு நாள். மற்றவளுக்கு சின்னப்பிள்ளதான். அக்கா சொன்னா கதவப்பூட்டித்து உள்ள இருப்போம் என. நான் சொன்னேன் இல்ல அக்கா எல்லாரும் மில்லுக்குள் போவோம் என்று சொல்லித்து பிள்ளைகளைத் தூக்கித்து போனம். அங்கு நிறையச் சனம். மில் நிறைந்து வழிந்தது. நாங்களும் போய் சனத்தோட சேர்ந்தோம். அப்ப வெடிச்சத்தம் பக்கத்துல கேட்க எல்லாரும் தலையில் கையை வைச்சி அரோகரா அரோகரா என்று கடவுளைக் கூப்பிட்டம். அப்ப மில் வளவுக்குள் ஆமி வந்துத்தான். வந்தவன் ஒன்டையும் பாக்கல. சனத்தை நோக்கிச் சுட்டான். எல்லாருக்கும் வெடிப்பட்டது. தலையில, கழுத்துல, வயித்தில எண்டு குண்டு பட்டு எல்லாரும் விழுந்தனர். நான் வெடிப்பட்ட ஆள் போல படுத்து என்மேல இரத்தத்த பூசினேன்.
மில்லுக்க இருந்த எல்லாரையும் சுட்டு விட்டம் என்று எண்ணி ஆமி மற்றப் பக்கம் போனான். என்னோட அக்காவுடன் சேர்ந்து ஐந்து பேர் மட்டும் உயிர் தப்பினோம். வெடிச்சத்தம் நிண்ட பின் பிள்ள பிள்ள எண்டு என் அம்மா கூப்பிட்ட சத்தம் எனக்குக் கேட்டது. எழும்பிப் பார்த்திட்டு அக்காட குழந்தையையும் தூக்கித்து பக்கத்து வீட்டுக்கு வந்து பார்த்தா கையில்லாமலும், கண் தோண்டின போலவும் தலை இல்லாமலும் சவம் அடுக்கிக் கிடந்தது. ஒரு தாய் குழந்தைக்குப் பால் கொடுத்தாப்ப செத்துக் கிடந்தா. ஒரு குழந்தை சுவரில் ஒட்டிய மாதிரி இருந்தது. மில் வைச்சிருந்த குமாரநாயகம் அவரோட பொஞ்சாதி புவனேஸ்வரி அவங்கிட நாலு பிள்ளைகள் எல்லாரையும் சுட்டு எல்லாச் சவத்தையும் மில்லுக்க போட்டு ஓலைமட்டை, குப்பைகள் எல்லாத்தையும் போட்டு எரித்தான் என்று கண்ணில் கண்ணீர் ததும்ப முத்துலிங்கம் விமலாதேவி கூறினார்.
ஊருக்குள் பிடிச்ச ஆம்பிளையள மடுவுக்குக் கொண்டு போய் மடுவைச் சுத்தி வாடா என்று சுத்தி வர ஒரு வெடிவைத்தான். அப்படியே மடுவுக்குள் தள்ளித் தள்ளி விட்டானுகள். ஒரு பாட்டி சுட்டு வர ஒரு பாட்டி வீட்டையெல்லாம் எரிச்சனுகள். இன்னும் ஒரு பாட்டி வடிவான குமர்ப் பிள்ளைகளை ஒருவன் மாறி ஒருவனாக கெடுத்தானுகள் என்று சொல்ல வந்த வல்லிபுரம் காரிகாதேவி வாயலகூட என்னால இதச் சொல்ல ஏலா என்று அவள் நெஞ்சைப் பொத்திக் கொண்டு கண்களை தனது சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
அதனைத் தொடர்ந்து கணபதிப்பிள்ளை மோட்சமலர் (முன்பள்ளி ஆசிரியர்) கட கட எனச் சொல்லத் தொடங்கினாள்.
நான் மாவடி முன்மாரிப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது பார்த்தன் கண்ணி வெடி வெடித்ததில் ரக்டர் ஒன்று மேலே போய் கீழே வந்து விழுந்தது. எனக்கு வடிவாகத் தெரிந்தது. அதை பார்த்தவுடன் நான் பதட்டப்பட்டு கீழே விழுந்திட்டன். பின் எழுந்து பார்த்தன் ஆமிக்காரன் சுட்டு வாரான். நான் குளத்துக்கால போய் என் பெரியப்பா வீட்டுக்கு ஓடலாம் என்று ஓடியதைக் கண்ட ஆமி என்னை நோக்கி சுட்டான். நான் சிவப்புச் சட்டை போட்டு இருந்ததால் அவனுக்கு வடிவாகத் தெரிந்தது.
உடனே எனக்கு இலக்குப் பார்த்துச் சுட்டான் பாவி. ஒரு வெடி எனது முழங்காலில் பட்டது. அடுத்த வெடி மற்றக் கால் எலும்பை முறித்து விட்டது. நான் அப்படியே விழுந்து விட்டேன். ஆமிக்காரனைக் கண்ட சனங்கள் எல்லாம் நினைச்சாங்க நான் செத்துத்தன் என்று. அன்று இரவு வரையும் எவரும் என்னைக் கவனிக்கவேயில்லை. நான் தண்ணீ, தண்ணீ என்று அனுகிய சத்தம் என் பெரியப்பாவுக்குக் கேட்டது. அவர்தான் என்னை வண்டியில் ஏத்தித்து போனார்.
நாநூறு வீடுகளையும் எரிச்சானுகள். எல்லா வீட்டிலயும் நெல் இருந்தது. அதோட ஆக்களையும் போட்டு புண்ணியமூர்த்தி (ஜீ.எஸ்.) வீட்டுக்குப் போய் எல்லாரும் இருந்தாங்க. அங்கேயும் வந்து சேர்ந்தான் ஆமிச் சிங்களவன். அங்கு இருந்த பொம்பிளப் புள்ளையள பிடிச்சி சட்டையல்லாம், கிழிச்சு, உதைச்சி, மிதிச்சி ஒருவர் மாறி ஒருவராக கெடுத்தானுகள். பள்ளிச் ரீச்சர் மாரையும் பிடிச்சி சிலர் சீலையை எடுத்து சட்டையை பிச்சி கொடுமைப்படுத்தினான். இப்பவும் அந்தப் பொம்பிளப் பிள்ளைகள் எல்லாம் வாழா வெட்டியாக இருக்குது. நடந்த சம்பவத்தைச் சொல்லுங்க என்று கேட்டா தானாக மயங்கி விழுதுகள்.
அப்படித்தான் ஒரு நல்ல வடிவான பெண் பிள்ளையை பிடிச்சி தாய்க்கு முன்னால் வைச்சி ஒருவன் மாறி ஒருவன் கெடுத்தான். இதனைக் கண்ட தாய் தனது காப்பு, மாலை, கொடி எல்லாம் கழட்டிக் கொடுத்து என் மகளை விடுடா என்று கெஞ்சிக் கேட்டா, பின்னர் மறைப்புக்குக் கொண்டுபோய் இன்னும் இன்னும் பலர் கெடுத்தானுகள். பின்னர் செத்து விட்டாள் என்று நினைச்சுத்தான் விட்டானுகள். அந்தப் பிள்ளட உடம்பில கடிச்சி காயம் இல்லாத இடமேயில்லை. அன்று அந்தப் புள்ள மகிழடித்தீவை விட்டுப் போனவள் போனவள்தான். இன்னும் ஊருக்கு வரவேயில்லை என்று கண்ணீரும் கம்பளையுமாக கூறினார்கள்.
ஒரு பாட்டி மகிழடித்தீவை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இன்னொரு பாட்டி சிங்கப்படைகள் முதலைக்குடாவை நோக்கி வந்தானுகள். வெடிச் சுட்டபடி அங்கு வந்தான். வெடிச்சத்தம் கேட்டபோது பொது மக்கள் ஆணும், பெண்ணுமாக முதலைக்குடா மகா வித்தியாலயப் பாடசாலைக்கு ஒன்று கூடினோம். அங்க போய்கொஞ்ச நேரத்தில் அங்கேயும் ஆமிக்காரன் வந்தான். வெடிச்சத்தம் கேட்ட போது பிள்ளையள் ரீச்சர்மார் எல்லோரும் மேசைக்கு கீழே ஒழிச்சி இருந்ததைக் கண்டவன் அவர்கள அவண்ட சப்பாத்துக் காலால் மிதிச்சி எழும்புங்க. என்று அதடி ஏசினான். பின் பெரிய பெண் பிள்ளைகளுக்கு அவண்ட துவக்கால் அடித்தான். துவக்க நீட்டிச் சுடவும் வந்தான். மேலே நோக்கி ஓட்டுக்கு கடகடவெண்டு சுட்டான். உடைஞ்ச ஓடு பிள்ளைகளின் தலையில் விழுந்து காயப்பட்டது. பொது மக்கள் சேர்ந்து இருந்த மண்டபத்துக்குள் போய் அவண்ட கண்ணுக்கு தைச்ச ஆம்புள்ளையள வெளியால போடா என்று சொல்லி தெரிஞ்சு எடுத்தான். நானும் என்மகனும் அதற்குள்ளதான் இருந்தோம். என்மகன எனது சீலையால் மூடி என் முதுகுடன் அணைச்சிட்டான். நல்லவேளை என்மகன் அவன் காணல் அதனால் என்மகன் உயிர் தப்பினான் என்றார் அந்தத்தாய்.
இப்படித் தெரிஞ்ச ஆக்கள மடு இருக்கும் இடத்திற்கு கூட்டிப்போய் மடுவச் சுத்தி வாங்கடா என்று அணியாக வர ஒருவர் ஒருவராக சுட்டுச் சுட்டு மடுவுக்குள் போட்டுவிட்டானுகள். மடு நிரம்பியதால் இனி போடமுடியாது என்று எண்ணி நித்தாட்டிவிட்டான் போல என்று கணவனை இழந்த அந்தப் பெண் கூறினாள்.
காயப்பட்டுக் கிடந்தவளுக்கு வைத்தியம் செய்ய வசதியே இல்ல. அதால எண்ட மகள பொலநறுவ வைத்தியசாலைக்குக் கொண்டு போக தமிழர் எண்டு வைத்தியம் செய்ய மறுத்திட்டாங்க. பிள்ள ஆபத்தான நிலைக்கு வந்த போது திரும்ப அங்கு இருந்து கொழும்புக்குக் கொண்டு போனாங்க. அங்கு இருந்து ஆறுமாதம் கழிச்சுத்தான் கூட்டி வந்தன். நாசமாகப் போனவனுகள் அன்றைக்குச் செய்த கொடுமைகள சொல்லேலாது மகன். மில்லுக்குள் கருக்கிப் போன சவங்களப்பாக்க ஏலாது. தாயில பால் குடிச்சமாதிரி தாயும் பிள்ளையும் இன்னும் சிறிய குழந்தைகள் மூன்று கருகிக் கிடந்தன. புருசன் எங்க புள்ள எங்க எண்டு அடையாளம் தெரியாது கருகிய சவத்தை புரட்டிப்பாத்துப் பாத்து அழுகின்ற காட்சியை நான் ஆரிட்ட தம்பி போய் சொல்ற என்று கண்ணீர் சொட்டச் சொட்ட மோட்சமலரின் அம்மா திருமதி கணபதிப்பிள்ளை சொல்லிக் கலங்கினாள்.
அருட் தந்தை ஜோசப் மேரியினதும் ஜோசப் பரராசசிங்கம் எம்.பியினதும் முயற்சியால் மாமனிதர் குமார் பொன்னம்பலம், ஏ.எம்.எம்.சகாதீபன் ஆகியோர் அடங்கிய விசாரணைக்குழு இப்படுகொலை பற்றி விசாரணை செய்து வெளியுலகுக்குக் கொண்டுவர முற்பட்ட போது சிங்களப் பேரினவாதம் புதைகுழிகள் போலவே மூடி மறைத்தது. அழிக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரக்கதைகளை மட்டுநகர் மண்ணில் தொடர்ந்து மகிழடித்தீவு, இறால்; பண்ணையில், மில்லுக் கட்டிடத்தில் முடிந்துபோன அத்தியாயமாகவே அடிக்கடி பத்திரிகைகளின் கொக்கட்டிச்சோலைப் படுகொலை என கட்டம் கட்டப்பட்ட செய்தியை கண்டமே தவிர இவற்றுக்கான நீதியோ, நியாயமோ எமது தமிழ் இனத்துக்குக் கிடைக்கவில்லை.
இச்சம்பவங்களை யாரிடத்தில் சொல்வது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. அப்படியாகக் கடந்த காலங்களில் தமிழர்களின் உரிமைகள், சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டு கண்ட இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு தமிழினம் முற்றாகவே ஒழிக்கப்பட வேண்டும் என சிங்கள அரசும், இராணுவமும் தீட்டிய திட்டங்களே அன்று எம் மக்கள் மத்தியில் கட்டவிழ்க்கப்பட்ட கொலை வெறியாட்டச் சம்பவங்கள் என்பது தமிழ் தாயக மக்கள் அனைவரும் இன்று தலை நிமிர்ந்து சிந்திக்க வேண்டிய ஓர் உண்மையாகும்.
த.உரியன்
|
|
|
| நண்பனின் கவிதைகள் |
|
Posted by: Nanban - 10-09-2005, 04:16 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (47)
|
 |
தமிழ் மன்றத்தில் மற்றும் பிற இணைய தளங்களில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து புத்தகமாகத் தரும் எண்ணம் உள்ளது.
அவற்றிலிருந்து சில கீழே:::
[size=24]¯ÂÃí¸û ¦¾¡Î
±É¾¢É¢Â Á¸§Ç
Àø¸¢ô ¦ÀÕ¸¢
ÅÇ÷óÐ Å¡.
¯ýÉ¢ø ¾¡ý
¿¡ý ±ý¨É
À¡÷츢§È¦ÉýÀ¾¡ø
¯ýÉ¢ø ¾¡ý
¿¡ý ±ÉÐ Å¡ú쨸¨Â
Å¡ú¸¢§È¦ÉýÀ¾¡ø
¯ýÉ¢ø ¾¡ý
¿¡ý ±ÉÐ º¢Ã¢ôÒ¸¨Ç
º¢Ã¢ì¸¢§È¦ÉýÀ¾¡ø
º¡õÀĢɢýÚõ
¯Â¢÷ò¦¾Øõ ¸¡Å¢ÂôÀȨÅ¡¸
¾¢Éõ ¾¢Éõ ¯Â¢÷ôÀ¢òÐì ¦¸¡û¸¢§Èý
¯ÉÐ ¿¢¨É׸Ǣø ±ý¨É.
புலம் பெயர்ந்த வாழ்வின்
துயரம் விலக
þ¨ÈÅý பரிசளித்த
¸Å¢¨¾ ¿£.
¯ÂÃÁ¡¸ ÅÇ÷.
¯îºí¸û ¦¾¡Î.
Àø¸¢ô ¦ÀÕ¸¢ ÅÇ÷óÐ Å¡
Á¸§Ç.
¯ý ¯ÂÃí¸û ¦¾¡Îõ šɢø
±ýÚ§Á ¯ýÉÕ§¸ þÕô§Àý -
புகைப்படத்தில் மட்டுமல்ல
என் இதயத்துடிப்பை
நீ உணரும் வண்ணம்
உன்னருகே
உன் தந்தையாக.
வளர்ந்து வா
அதுவரையிலும்...
|
|
|
| "கிளினிக் கிச்சு! கிச்சு!' |
|
Posted by: SUNDHAL - 10-09-2005, 03:15 PM - Forum: நகைச்சுவை
- Replies (8)
|
 |
ஹலோ நேயர்களே! வெல்கம் டூ லொள்ளு டீவியின் "கிளினிக் கிச்சு! கிச்சு!'. நேயர்களின் உடல் நலம், மனநலம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு உயிரோட்டமுள்ள பதில்களை அளிக்கிறார் இந்தியாவின் நெம்பர் (நைன்ட்டி) ஒன் டாக்டர் மைக்கேல் மதன காமராஜ்! டாக்டரைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு -இவர் வெறும் டாக்டரல்ல. ஏ டூ இஸட் எல்லாவித மருத்துவமும் தெரிந்த ஆல்-இன்-ஆல் டாக்டர். ஹோமியோபதி டூ சீதபேதி, யுனானி டூ அம்பானி, சித்த மருத்துவம் டூ செத்த மருத்துவம், சைக்காலஜி டூ லேடீஸ்காலேஜி என இவருக்குத் தெரியாத மருந்து வகைகள் எதிலுமே கிடையாது. இவர் சென்ற மாதம்தான் பான்பராக் பல்கலைக் கழகத்தில் "டாக்டர்' பட்டம் "வாங்கி' வைத்தியரானார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி நோய்களை ஓட ஓட விரட்ட வைக்க டாக்டரே உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.
டாக்டர் : ஹலோ!
நேயர் : நான்தான் சாமிக்கண்ணு பேசறனுங்கோ! எனக்கு மூணு நாளா வவுத்த வலிக்குதுங்கோ!
டாக்டர் : அப்படியா ரொம்ப சந்தோஷம். நீங்க அம்மா ஆகப் போறீங்க!
நேயர் : யோவ். நான் ஆம்பளை!
டாக்டர் : ஓ...ஸôரி! நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்! நீங்க அப்பா ஆகப்போறீங்க!
நேயர் : என்ன வெளையாடுறீங்களா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல! வவுத்த வலிக்கு மருந்து சொல்லுன்னா...
டாக்டர் : ...ம், வயித்த வலிக்கு நிறைய மருந்து இருக்கு. ஆமா, சாமிக்கண்ணு நீங்க என்ன ராசி!
நேயர் : கடகம். அதுக்கென்ன?
டாக்டர் : அதுக்கென்னவா! சமீபத்துல நடந்த குருபெயர்ச்சிப் பலன்கள்படி கடக ராசிக்காரங்களுக்கெல்லாம் கடுமையா வயிறு வலிக்கும்னு காக்காச் சித்தர் சொல்லியிருக்காரு. அதனால நீங்க கடக ராசில இருந்து சிம்ம ராசிக்கு ஷிப்ட் ஆயிட்டீங்கன்னா, வலி நின்னுடும்!
நேயர் : யோவ், நீ டாக்டரா இல்ல ஜோசியக்காரனா? ஏதோ வீட்டை மாத்துற மாதிரில்ல ராசியை மாத்தச் சொல்லுற! வேற ராசிக்கு ஷிப்ட் ஆகி உக்கார நான் குரு பகவானா! போயா போலி டாக்டர்! (லைன் கட் ஆகிறது. அடுத்த அழைப்பு வருகிறது.)
நேயர் : ஆ.....
டாக்டர் : நான் உங்களை வாயைத் தொறக்கவே சொல்லலியே?
நேயர் : வலிக்குது டாக்டர்!
டாக்டர் : நான் உங்களுக்கு இன்னும் என்னோட முதல் ஊசியைப் போடவே இல்லீயே!
நேயர் : அய்யோ, படுத்தாதீங்க டாக்டர்! ஒரு வாரமா என் வலது காலுல கை வலி இருக்குது டாக்டர்!
டாக்டர் : இன்னொரு முறை சொல்லுங்க!
நேயர் : (சத்தமாக) எனக்கு ஒரு வாரமா வலது காலுல கை வலி இருக்குது டாக்டர்!
டாக்டர் : யோவ்! எனக்கே நக்கலா! காலுல எப்படியா கை வலி வரும்?
நேயர் : சொன்னா நம்ப மாட்டீங்க! முதல்ல கையிலதான் கை வலி வந்துச்சு. அது நின்னதும் அதேமாதிரி வலி காலுல எடுக்க ஆரம்பிச்சுடுச்சு. இது கன்ஃபார்மா கை வலிதான்! மருந்து சொல்லுங்க டாக்டர்.
டாக்டர் : "ஜூம்மாஞ்சி'ன்னு ஒரு தைலம் இருக்கு. அதை வாங்கி உன் கையை காலா நினைச்சுக்கிட்டு, கையிலயே அந்த தைலத்தை அடுப்புல சுட வைச்சி, கொதிக்கக் கொதிக்க கோரிக் கோரி ஊத்துனேனா போதும். வலி திருட்டு ரயில் ஏறி எங்கேயாவது போயிடும்!
நேயர் : ரொம்ப நன்றிங்க!
(அடுத்த அழைப்பு)
நேயர் : என் பேரு ஸ்வேதா. இந்தப் பிரச்சினை பத்தி நான் உங்ககிட்டதான் முதன் முதல்ல சொல்லப் போறேன்.
டாக்டர் : தாராளமா தயங்காமச் சொல்லுங்க. எனக்கு காது அரிக்குது.
நேயர் : ஆனா நான் என்னோட பிரச்சினையைச் சொல்றதுல ஒரு சின்ன பிரச்சினை இருக்கு.
டாக்டர் : அது என்ன பிரச்சினை?
நேயர் : பிரச்சினையைச் சொல்லுறதால வர்ற பிரச்சினையைப் பத்திக் கவலைப்படாம பிரச்சினையைச் சொல்லவா, இல்ல பிரச்சினையைச் சொல்லுறதுல உள்ள பிரச்சினையை முதல்ல சொல்லவான்னு இப்ப மூணாவதா புதுசா ஒரு பிரச்சினை டாக்டர்.
டாக்டர் : ஓ...இப்படி ஒரு பிரச்சினையை வைச்சுக் குழம்பி, மேலும் மேலும் பிரச்சினைகளை வளர்த்துக்கறதுதான் உங்க அடிப்படை பிரச்சினைன்னு எனக்குத் தோணுது.
நேயர் : அதுவும் ஒரு பிரச்சினை! ஆனா இப்ப பிரச்சினை அதனால வந்த பிரச்சினை இல்ல. இது வேற! இப்ப என்னால பிரச்சினையைச் சொல்லமுடியாது. ஆனா பிரச்சினைக்கு நீங்க தீர்வு சொல்லியே ஆகணும். ப்ளீஸ் டாக்டர்!
டாக்டர் : காலங்காத்தால 11 மணிக்கு டெய்லி எந்திரிச்சி, கடுக்காய் லேகியத்தை கால் கிலோ சாப்பிட்டுட்டு, காராச்சேவு தின்னுக்கிட்டே காலாற கடற்கரைப் பக்கமா நடந்து போய் காக்கா விரட்டுனீங்கன்னா, எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைச்சிரும்! (லைனை கட் செய்கிறார். அடுத்த அழைப்பு வருகிறது.)
டாக்டர் : ஹலோ! யார் பேசறது?
நேயர் : தாட்டர்....நா சொக்ஹலிங்கம். எனஹூ பேசுரபோ அலிக்கலி ராக்கு உலவுது தாட்டர். எலாவுடு மறந்து சொல்ங்க.
டாக்டர் : அப்படியா...எப்ப இருந்து இப்படி இருக்கு?
நேயர் : நி பொர்ந்தத்லே ர்ந்தே இபடிதான் ஈர்க்கு?
டாக்டர் : இதுக்கு நாட்டு வைத்தியத்துல ஒரு வேர் இருக்கு.
நேயர் : அத நா வல்கணுமா? எங் வீட்ழ தொட்தியே கெடியாதெ!
டாக்டர் : அதை நீங்க வளர்க்க வேண்டாம். அந்த வேரோட பேரு "யளனகபக' வேர். அதை வேரோட புடுங்கி ஒரு மண்டலத்துக்கு கசாயம் காய்ச்சி குடிச்சீங்கன்னா, அப்புறம் உங்க நாக்குல சொற்களெல்லாம் சோக்கா டான்ஸ் ஆடும்.
நேயர் : நா ஏந் குடிகநும்? நா தா ஏக்கநவெ குட்ஷிற்க்கேனெ!
டாக்டர் : யோவ்! எங்க இருந்துயா பேசுற?
நேயர் : தாஸ்மாக்ல இர்ந்த்....
(டென்ஷனாகி லைனைக் கட் செய்கிறார். அடுத்த அழைப்பு..)
நேயர் : அய்யோ...டாக்டர் நீங்கதான் என் குலதெய்வம்..நீங்கதான் என் புள்ளய காப்பாத்தணும்.
டாக்டர் : பதட்டப்படாதீங்க...என்ன விஷயம்னு சொல்லுங்க!
நேயர் : போன மாசம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தான். எப்ப அவ பின்னால போக ஆரம்பிச்சானோ அதுல இருந்து திடீர்த் திடீர்னு எதிர்பார்க்காத நேரத்துல என்னென்னமோ பண்ணுறான்.
டாக்டர் : உங்க பையன் பேரு என்னம்மா?
நேயர் : சிதம்பர சிகாமணிதாசன்!
டாக்டர் : அவங்க தாத்தா பெயரா?
நேயர் : அதெல்லாம் தெரியாதுங்க! இப்ப ஒரு மூணு வருசமாத்தான் என் பையனா இருக்கான். நான்தான் பேரு வைச்சேன்.
டாக்டர் : ஓ..தத்து எடுத்திருக்கீங்களா! சரி சரி! பையனை நல்லா இழுத்து மூச்சு விடச் சொல்லுங்க...நல்லா நாக்கை வெளிய நீட்டச் சொல்லுங்க!
நேயர் : என்ன விளையாடுறீங்களா? போன்ல எப்படி இதெல்லாம் பண்ண முடியும்?
டாக்டர் : சரி பையனை போன்ல என்கிட்ட ரெண்டு வார்த்தையாவது பேசச் சொல்லுங்க!
எதிர்முனை : லொள்...லொள்...
டாக்டர் : ஹலோ பையனைப் பேசச் சொல்லுங்க!
நேயர் : இப்ப என் பையன்தாங்க பேசுனான். என்ன வியாதின்னு கண்டுபிடிச்சிட்டீங்களா டாக்டர்?
(லொள்ளு நேயர்களின் அலம்பல் தாங்காமல் டாக்டர் பேக்-அப் ஆகிறார்)Thanks Dinamani....
|
|
|
| காலமெல்லாம் காபி |
|
Posted by: SUNDHAL - 10-09-2005, 02:48 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
நார்வே நாட்டுக்காரர்களை காபிக்கு அடிமை என்று சொல்லலாம். அவர்கள் தினமும் குறைந்த பட்சம் 7 வேளையாவது காபி குடித்து விடுவார்கள். அவர்களின் வீட்டிற்கு நீங்கள் விருந்தாளியாகப் போனால் உங்களுக்கு கோப்பை கோப்பையாக காபி வந்து கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு காபி கொடுத்து உபசரிப்பார்கள்.
நீங்கள் பதில் உபசரிப்பின்போது உங்கள் வீட்டில் காபி கொடுக்க மறந்து விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். கோபித்துக் கொண்டு அதை உடனடியாகச் சுட்டிக் காண்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர் களுக்கு காபி மோகம் அதிகம். நார்வே நாட்டில் சராசரி யாக ஒரு நபர் வருடத்திற்கு 11 கிலோ காபித் தூளை காபி குடிப்பதற்காக பயன்படுத்துகிறார்.
இவர்களின் பக்கத்து நாட்டவர்களான பின்லாந்துக்காரர் களும் காபி விஷயத்தில் லேசுப்பட்ட வர்கள் அல்ல. இவர்களின் வருடாந்திர உபயோகம் ஒரு நபருக்கு 10 கிலோ. மூன்றாமிடத்தில் இருக்கும் டென்மார்க் நாட்டவர் கள் பயன்படுத்துவது 9.7 கிலோ. இதில் உலக மக்களின் சராசரி 3.26 கிலோ.
Thanks:Thanthi............
|
|
|
| சுவிசில்லிருந்து உதவிதேவை...... |
|
Posted by: விது - 10-09-2005, 11:18 AM - Forum: புலம்
- Replies (5)
|
 |
சுவிசில்லிருந்து உதவிதேவை......
நான் கடந்த 8 வருடங்களாக வேலைசெய்த நிறுவனம் திடீர்ரென ழூடப்போவதாகவும் எமது தாய்நிறுவனத்தின் பல்வேறுதொழில் சார் கிளைநிறுவனங்களின் ஏதாவதுதொன்றில் எமது தெரிவுக்கேற்ப வேலைதருவதாக கூறியுள்ளார்கள்.
எனது கேள்வி என்னவெண்றால் இப்படி வேலைமாறுவது எனக்கு சாதகமா? அல்லது பாதகமா?
நான் புதிதாக வேலைசெய்ய போகும்மிடத்தில் ஏதோஒரு காரணம் காட்டி இலகுவில் வேலையில்லிருந்து நீக்கமுடியுமல்லவா?
தயவு செய்து உங்கள் சொந்த அனுபவம.; கேள்விப்பட்டவை.தொழில்சட்டவிதிமுறைகள் தெரிந்தால் உதவுங்கள்.
மிக்க நன்றி: விது சுவிஸ்
|
|
|
| சிங்கள இனவாதத்தின் ஓலம்!! |
|
Posted by: cannon - 10-09-2005, 09:34 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
பிரபாகரனுக்கு ஈழம்; தொண்டமானுக்கு மலையகம்; ஹக்கீமுக்கு முஸ்லிம் தேசம் சிங்களவர்கள் சிவனொளிபாதமலையை தரிசிக்க ஆறுமுகத்திடம் விசா பெறும் நிலை வரும்
ரணில் உடன்படிக்கை செய்திருப்பதாக ஹெல உறுமய கண்டனம்
பிரபாகரனுக்கு தனித் தமிழீழம் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலைநாடு, ஹக்கீமுக்கு முஸ்லிம் தேசம் வழங்குவதாக உடன்படிக்கைகளை மேற்கொண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக முயல்கிறார். இதற்கு சிங்கள பௌத்த மக்கள் இடமளிப்பதா என்பதை சிந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென தெரிவிக்கும் சம்பிக்க ரணவக்க, ரணில் ஜனாதிபதியானால் சிவனொலி பாதமலையை தரிசிக்க சிங்கள மக்கள் ஆறுமுகனிடம் விசா பெறும் நிலை உருவாகுமென்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து நேற்று சனிக்கிழமை மஹரகம நகர சபை மைதானத்தில் ஜாதிக ஹெல உறுமய நடத்திய பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அதன் கொள்கை வகுப்பாளர் சம்பிக ரணவக மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்ற தனி நபரை வெற்றி பெறச் செய்வது எமது நோக்கமல்ல. ஒற்றையாட்சியின் கீழ் சமஷ்டி முறை என்ற கோட்பாட்டை ஒழித்து அதனை ஏற்றுக் கொண்ட கொள்கையை வெற்றிப்பெறச் செய்வதே எமது நோக்கமாகும்.
ரணில் வென்றால் அது பிரபாரகன், ஆறுமுகன், ஹக்கீமின் வெற்றியாகும். இதன் மூலம் இனங்கள், நாடு பிளவு படும் இதன்போது இரத்த ஆறு ஓடும் இதனை மக்கள் விரும்புகிறீர்களா என்பதை தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும்.
நாக தீபவிலிருந்து தீகவாபிவரை உள்ள பிரதே சங்கள் சிங்கள பௌத்தர்களுக்கே உரிமையானது இதனை யாராலும் பிரிக்க முடியாது களையவும் முடியாது.
வட, கிழக்கிலிருந்து 6 இலட்சம் வாக்குகளை பிரபாகரன் பெற்றுக் கொடுப்பாரென ரணில் கனவு காண்கிறார். அது ஒரு போதும் நிறைவேறாது. தற்போது அவசர காலச் சட்டம் அமுலில் இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையாளரும், இராணுவத்தினரும் கள்ளவாக்குப் பதிவை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இன்று கருணாவிடம் மண்டியிட்டு தமது பயணங்களைக் கூட சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத புலிகளால் கள்ள வோட்டு போட முடியாது.
விடுதலைப் புலிகளால் இன்று யுத்தத்தை ஆரம்பிக்க முடியாது அந்தளவிற்கு கட்டுண்டு போயுள்ளனர். எனவே, மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கப்படுமென்ற மாயைக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
ரணில் வெற்றி பெற்றால் ஒஷாமா பின்லேடனுக்கு கிழக்கு மாகாணத்தை தாரைவார்க்க வேண்டிய நிலை உருவாகும்.
இலங்கையின் கடைசி அரசனை காட்டிக் கொடுத்தவர் தோம்பி முதியன்சே . இவர் யார் ரணிலின் மூதாதையர்கள். அவர்களுக்கு வழி வகுத்தால் நாடு பிரியும். ஆறு முகன் தொண்டமானினாலோ, ஹக்கீமாலோ, சந்திர சேகரனினாலோ எமது நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க முடியாத நிலையை சிங்கள தேசிய வாதிகள் இன்று உருவாக்கியுள்னர்.
ஒஸ்லோ உடன்படிக்கையில் உள்ள உண்மையை ரணில் சிங்களத்தில் வெளியிட வேண்டுமென்று சவால் விடுக்கின்றேன். அப்போது உங்களுக்கு உண்மை புரியும் என்றும் சம்பிக் ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அங்கு பேசும் போது;
ஐ.தே.கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையோ வெற்றி பெறச் செய்வது எமது நோக்கமல்ல, கொள்கையுடனான சிங்கள பௌத்த தேசியத்தை வெற்றி பெறச் செய்வதே எமது நோக்கமாகும். எனவே, அதற்கு எதிராக செயற்படும் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக் கொண்ட மகிந்தவை ஆதரிக்க நாம் முன் வந்தோம் என தேரர் தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் அங்கு பேசும் போது கூறியதாவது:
இன்றை காலம் சவால் நிறைந்த காலம். துட்டகைமுனு பாதுகாத்த எமது ஒற்றையாட்சி முறையை பாதுகாத்து சமஷ்ட்டி முறையை அழிப்பதே எமது நோக்கமாகும். உணவு, உடை, சுகாதார வசதிகள் எமது முக்கியமல்ல, நாடு பிரிவுபடாமல் இருந்தால் தான் அதனை மேற்கொள்ள முடியும். அதற்காக ஒன்று படுங்கள் என இங்கு பேசிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
நன்றி ஞாயிறு தினக்குரல்
http://www.thinakural.com/New%20web%20site...Important-4.htm
|
|
|
|