Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 162 online users.
» 0 Member(s) | 160 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  மழை ஸ்ரேயா
Posted by: Mathan - 10-10-2005, 02:33 PM - Forum: சினிமா - Replies (20)

<img src='http://img295.imageshack.us/img295/9073/yarlshi0da.jpg' border='0' alt='user posted image'>

மழை

'மழை' டைட்டில் மட்டுமல்ல; கிட்டத்தட்ட ஒரு கேரக்டராகவே படம் முழுக்க வருகிறது. படத்தில் நாயகனும் நாயகியும் சந்திக்கும்போதெல்லாம் மழை வருவது கவிதை. மற்றபடி படம் மாமூல் மசாலாதான். 'வர்ஷம்' தெலுங்கு படத்தையே 'மழை'யாக தமிழுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள்.


படப்பிடிப்பில் நடிகை ஸ்ரேயாவை கோடீஸ்வர தாதா ராகுல்தேவ் கடத்திப்போகிறார். படப்பிடிப்பு தடைபட்டதால் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தனது நண்பரான ஹோம் மினிஸ்டர் வரை தொடர்பு கொண்டாலும் அனைவரும் ராகுல்தேவை பகைத்துக்கொள்ள அஞ்சுகிறார்கள். ஸ்ரேயாவின் அப்பா கலாபவனின் யோசனையின்படி பிரமிட் நடராஜன் ஜெயம் ரவியிடம் ஸ்ரேயாவை மீட்கச் சொல்கிறார். முதலில் ஸ்ரேயாவை காப்பாற்ற ஆவேசமாக மறுத்த ரவி பிறகு தனது சித்தப்பாவின் ஆபரேசனுக்கு பிரமிட் நடராஜன் உதவ வேண்டும் என்ற நிபந்தனையில் ஸ்ரேயாவை காப்பாற்ற செல்கிறார்.

இடையே ஒரு ப்ளாஷ்பேக். மழைப்பிரியரான ஸ்ரேயா மழை வந்தால் குஷியாகி மழையில் நனைந்து ஆடிப்பாடத் துவங்கிவிடுவார். ரவி-ஸ்ரேயா சந்திக்கும் போதெல்லாம் மழை வந்து இவர்களுக்குள் காதலை ஏற்படுத்துகிறது. ரவி ஸ்ரேயாவை முதன்முதலில் சந்தித்த அதே மழையில் ராகுல்தேவும் ஸ்ரேயாவை பார்த்து கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறார். குடும்பப் பொறுப்பில்லாத கலாபவன்மணிக்கு பணம் தந்து அவரை வழிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார்.

இந்நிலையில் மகளின் காதல் பற்றி தெரியவந்த கலாபவன்மணி ராகுல்தேவிடம் தெரிவிக்கிறார். ராகுல் ஸ்ரேயாவை மறந்துவிட ரவியை மிரட்ட அது ரவியிடம் பலிப்பதில்லை. அதற்குள் ஸ்ரேயாவுக்கு நடிக்க வாய்ப்பு வரவே ராகுல் தேவ் உதவியுடன் ரவி-ஸ்ரேயா இடையே சதிசெய்து பிளவை ஏற்படுத்தி, ரவி ஊரைவிட்டே கிளம்ப வைத்து விடுகிறார்.

பிறகு மகளை நடிகையாக்கி கோடீஸ்வரராக ஆசைப்பட்டு ராகுல் தேவுக்கு தெரியாமல் ஊரைவிட்டு குடும்பத்துடன் சென்றுவிடுகிறார். ப்ளாஷ்பேக் முடிகிறது. ரவி எப்படி ஸ்ரேயாவை காப்பாற்றினார் ராகுல்தேவை தண்டிக்கிறார் என்பது மீதிக்கதை.

அறிமுக இயக்குனர் ராஜ்குமார் மூலப்படத்திலிருந்து தமிழுக்கு ஏற்ப மாற்றங்களை பெரிதாகச் செய்யவில்லை. வில்லனின் வீட்டிலிருந்து ஸ்ரேயாவை ரவி காப்பாற்ற புத்திசாலித்தனமான நடவடிக்கை எடுப்பதாக காட்டி ரசிக்கவைத்திருக்கலாம். ரவி நூற்றுக்கணக்கான அடியாட்களுடன் மோதி அடித்து நொறுக்குவது சுத்தஹம்பக். அதேபோல க்ளைமாக்ஸில் தனிமனிதனான ரவியைப் பிடிப்பதற்காக பல லாரிகளில் ஆட்களை கூட்டிப்போவதெல்லாம் சகிக்கவில்லை.

ஒரே மழையில் நாயகனும் வில்லனும் நாயகியைப் பார்த்து மயங்குவது ரசிக்கும்படி உள்ளது. அதுவும் ஹீரோயின் பாடும் 'நீ வரும் போது' அழகான பாடலில் அந்நிகழ்வு அமைந்திருப்பது சூப்பர். ரவி காதல், அடிதடி இரண்டிலும் நன்றாக செய்திருக்கிறார். ஸ்ரேயாவுக்கு குடும்பபாங்கான தோற்றம். ஒரளவு நடிக்கவும் செய்திருக்கிறார்.

கலாபவன்மணியின் காமெடி கலந்த வில்லதனம் வழக்கமானதாக இருந்தாலும் ரசிக்கலாம். வடிவேலு குறைந்த காட்சிகளே வருகிறார். அறிமுகவில்லன் ராகுல்தேவ் வழக்கமான வில்லன்தான். மற்றும் அம்பிகா, சார்லி, வெங்கட் பிரபு, ராஜேஷ் நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரீஹரி பிரசாத் பாடல்கள் பரவாயில்லை. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது.

மழை- கொஞ்சம் பெய்திருக்கிறது.

Virakesari

Print this item

  மீனவர்கள் மீது கடற்படை கொடூரத் தாக்குதல
Posted by: iruvizhi - 10-10-2005, 02:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வத்திராயன் மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படை கொடூரத் தாக்குதல்- ஒரு மீனவர் கதி என்ன?


யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதி மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையால் நடுக்கடலில் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.


இன்று திங்கட்கிழமை காலை கரைக்குத் திரும்பிய மீனவர்களின் இயந்திரங்களும், படகுகளும் கடுமையாக சேதமடைந்திருந்தன.

இதனிடையே மருதங்கேணியைச் சேர்ந்த கடற்றொழிலுக்குச் சென்ற வேதாரணியம் சிறீ ஜெகன் என்ற மீனவர் வீடு திரும்பவில்லை என்று அவரது உறவினர்கள் வத்திராயன் மீனவர் சங்கத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அந்த மீனவரைத் தேடும் பணிகளில் மீனவர் சங்கத்தின் ஈடுபட்டுள்ளனர்.

http://www.eelampage.com/?cn=20727

Print this item

  ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்குமுறையென்பது
Posted by: narathar - 10-10-2005, 01:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

ஈழப் பெண்களிடம் இவ்வளவு ஆற்றல் வருவதற்குக் காரணம், ஸ்ரீலங்கா அரசும் அதன் படையும் எமது சமூகத்தில் இருந்து வந்த, வருகின்ற பிற்போக்குத் தனமான கருத்துகளுமே என்பதனையும் பல சிந்தனையாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.

தமிழர் வரலாற்றிலேயே இல்லாத புரட்சி இதுவெனக் கூறலாம்.

ஆனாலும் ஈழப் பெண்களை நோக்கிய ஒடுக்கு முறையென்பது கோரமானதாகவே இருந்து வந்தது. இதனைச் சிலர் இன்றும் ஏற்றுக் கொள்கிறார்களில்லை என்பது அந்தச் சிலரின் வறட்டுத் தனமான கௌரவத்தையே காட்டுகின்றது.
பெண் உடல் ரீதியாக ஆணிலிருந்து வேறுபடுகின்றதை வைத்துக் கொண்டு, தீர்மானிக்கும் சக்தி ஆணுக்கு என்று நினைப்பதனால் தான் வறட்டுக் கௌரவம் பார்க்கின்றனர்.
குழந்தையைப் பெற்றெடுக்கவும், பாலூட்டவும், கணவர், ஏனைய உறவுகள்... குடும்பமென்று வீட்டுப் பணிசெய்து கிடக்கவும், வீடே உலகென்று பெண் இருந்து விட வேண்டும். அவள் இத்தனையையும் செய்யும் உடல் வலிமையுடையவளாயிருப்பாள்... குடத்தில் நீர் சுமப்பாள், அம்மியில் குளவியிழுத்து அரைப்பாள், நெருப்புக் குழித்து சமைத்துப் போடுவாள். இவைபோன்றவற்றைப் பாராது வேண்டும் வேலைகளையெல்லாம் வேண்டிய பின்னர், மானே, தேனே, மயிலே, குயிலே... என மென்மையானவளாக்கிடுவர்.
வீட்டிலிருந்து பெண்கள் வெளியே போகக் கூடாது என்பதற்கான எழுதப்படாத பல சட்டக் கோவைகளை வீடுகளில் வைத்திருப்பார்கள். அதன் படி பெண்ணின் கற்பு பற்றி எடுத்துரைப்பார்கள்.
இந்த இடத்தில்தான் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்காது தவறு விடுகின்றோம். பெண்கள் வெளியில் போனால் கேலி செய்வது யார்? அவளை பாலியல் ரீதியிலான உடல் சேட்டை புரிபவர் யார்? வன்புணர்ச்சி புரிபவர் யார்? செய்வது ஆண். குற்றம் புரிபவர் உலகே வீடெனத் திரிய பெண்கள் முடங்கிக்கிடக்க வேண்டுமா?

எமது தேசத்தில் இன்னும் முடிவடையாத ஒரு கொடுமையான செயல் திருமண வியாபாரம். அதற்குப் பெண்ணுக்கு சீதனம் கொடுப்பதென்ற நாகரிகமான பெயரொன்றும் உள்ளது. ( இதற்கு பெண்களும் காரணமாக இருப்பது என்ற உண்மையினையும் இந்த இடத்தில் நினைவு படுத்த விரும்புகிறேன்.)

குழந்தைகளாக இருக்கும் போது, விளையாட்டுப் பொருள் பெற்றுக் கொடுப்பதில் இருந்து ஆரம்பமாகும் பெண்கள் மீதான பாகுபாடு, இது இன்று வரை முடிவில்லாத தொடர் கதையாகவே உள்ளது.

இது பற்றி மூத்த பெண் போராளிகளுடனான பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் மூத்த பெண் போராளியான ஜனனியிடம் கேட்ட போது, நாங்கள் மாத்திரம் செய்து சமூகத்தில் பெண்களிடம் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பிற்குப் பின் பெண்களிடம் விழிப்புணர்வொன்று ஏற்பட்டுள்ளது. எமது தேசம் விடுதலை பெறுகின்ற போது, நிச்சயமாக பெண் விடுதலை பெற்றிருப்பாள். சமூகத்தில் அதனை நாம் காண்போமென்றார்.

விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் ஆரம்ப காலத்தில் ஈடுபடுகின்ற போது கூட, சமூகத்திற்குள்ளிருந்து சிறு நெருடலொன்று வந்தது. ஆனால்... பெண் போராளிகளின் மனவலிமை அவர்களின் சாதனையொன்றினால் சமூகம் விழி விரித்து ஆச்சரியமாக நோக்கியதே தவிர, வேறெதுவும் செய்யவில்லை.

மனிதர் என்பதற்குள் ஆணும் பெண்ணும் அடக்கம். ஆண் - பெண் என்ற பேதமின்றி, சரிநிகர் சமானமாக வாழ வைப்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் நிச்சயம் வழியமைக்கும் என்றார்.
ஈழவிடுதலையென்பதில் தனித்து மண்விடுவிப்பு மாத்திரமன்றி, அனைத்து ஒடுக்கு முறைக்குள்ளிருந்தும் விடுதலை, பெண் விடுதலை என்பனவும் அடங்கும்.
தமிழீழப் பெண்களின் வீரம்மிக்க எழுச்சியின் வரலாற்றுப் பதிவு தான் மாலதியின் நினைவு நாளும், தமிழீழபெண்கள் எழுச்சி நாளும் ஆகும்.

இந்த நாளில் பண்டைய வரலாற்றினையும் அதன் தொடர்ச்சிகளையும் புதிய வரலாற்றுப் பதிவினையும், தொடரப் போகும் புதிய சிந்தனைகளையும் போராட்டம் மூலமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

இதில் நோயிருந்தால் அதற்கு மருந்திட்டு புதிய வரலாற்றினைப் பெற்று சமமாக வாழ்வோம். அதில் உயர்வென்பதை அடைவதும் ஆரோக்கியம், தாழ்வென்பதை தவிர்ப்பதும் ஆரோக்கியம்.

http://www.thinakkural.com/New%20web%20sit...9/Article-7.htm

Print this item

  அழுகையை நிறுத்தாததால் 5-வது மாடியில் இருந்து குழந்தையை வீசிய
Posted by: SUNDHAL - 10-10-2005, 12:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

ஜப்பானின் யோகாகமா பகுதியை சேர்ந்த பெண் ïகோ சுசியா. வயது31. இவ ரது பெண் குழந்தை அகேன். 1 வயதே நிரம்பி உள்ள இந்த குழந்தை அடிக்கடி அழுது முரண்டு பிடித்தது. தூங்க வைத்தாலும் சரியாக தூங்காமல் அழுது கொண்டே இருந்தது.

இதனால் சம்பவத்தன்று அந்த குழந்தை தூங்காமல் அடம்பிடித்து அழுது கொண்டே இருந்தது. இதனால் அந்த தாய் பொறுமை இழந்து விட்டார்.

கோபத்தில் அந்த குழந் தையை தான் குடியிருந்த வீட்டின் 5-வது மாடியில் இருந்து வீசி எறிந்து விட்டார்.

எறியப்பட்ட அந்த குழந்தை அங்குள்ள மரத்தின் மீது விழுந்தது. தரையில் விழாமல் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.

மரக்கிளையில் மோதி அடிபட்டத்தில் அதன் உடல், முகம் ரத்தக்காயங்கள் ஏற்பட்டது.

இதை பார்த்த அக்கம் பக்கதவர்கள் அந்த குழந்தையை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குழந்தையை வீசி எறிந்த அந்த தாயை போலீசார் கைது செய்தனர். ஜன்னலில் இருந்து தவறி விழுந்து விட்டது என்று கூறிய அந்த தாய், பிறகு "குழந்தை ஓயாமல் அழுததால் வீசி எறிந்தேன்'' என்று ஒப்புக் கொண்டார்.

Print this item

  ஈபிள் கோபுரத்தில் குண்டு புரளி
Posted by: mayooran - 10-10-2005, 12:01 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம் 324 மீட்டர் உயர ஈபிள் கோபுரத்தில் குண்டு வைத்ததாக புரளி: சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்
பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் உள்ளது. இரும்பு பாலங்களால் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் உயரம் 324 மீட்டர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த கோபுரத்தை பார்க்கவும் அதில் ஏறவும் வருகிறார்கள். இரவு நேரத்தில் இதில் லட்சக்கணக்கான வண்ண விளக்குகளும் எரிய விடப்படும்.

இந்த கோபுரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று டெலிபோனில் அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது. அங் குள்ள கார்டிலியான் மான்ட், பார்னாசி ரெயில் நிலையங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக டெலிபோனில் மிரட்டல் வந்தது.

இதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் சுரங்க ரெயில்களில் குண்டு வெடித்ததுபோல் பாரீஸ் நகரிலும் குண்டு வெடிக்கப்போவதாக பீதி கிளம்பியது.

கோபுரத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். அந்த கோபுரம் முழுவதும் துருவி துருவி சோதனை போடப்பட்டது. ஆனால் இதுவரை வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இது புரளி என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனாலும் பயணிகள் கோபுரத்தில் ஏற இன்னும் அனுமதி கொடுக்கவில்லை.
[size=7]lankasrinews

Print this item

  விழியின் துடிப்பு...
Posted by: sWEEtmICHe - 10-10-2005, 06:30 AM - Forum: கவிதை/பாடல் - Replies (17)

<img src='http://www.tamilshots.com/albums/userpics/10001/normal_malai010.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:27pt;line-height:100%'> <b>விழியின் துடிப்பு...</b>

விழியின் துடிப்பு...
இது என் பயணத்தில் வரம் ஒரு நிமிடம்
அந்த நிமிடத்தில்.....
இதயமோ
சுரக்கிறது இந்த வெந்துளி.... </span>
<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது </b>

Print this item

  கூகிள் அளிக்கும் மலர்ச்செண்டு
Posted by: Birundan - 10-10-2005, 12:26 AM - Forum: இணையம் - Replies (2)

வலையுலகில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் செய்திகளையும், பூத்துக் குலுங்கும் வலைப்பூக்களையும் திரட்டி நம் முன்னே கொணர்ந்து சேர்க்கும் சேவையைத் துடங்கியுள்ளது கூகிள் (Google's aggregator service).

http://www.google.com/reader/
இந்த சுட்டிக்குச் சென்று உங்கள் அபிமான RSS செய்தியோடையின் முகவரியை இட்டால் உங்கள் கண்முன்னே அணிவகுத்து நிற்கும் அனைத்துச் செய்திகளும்!

<img src='http://img371.imageshack.us/img371/4770/thumbgooglereader9bm.jpg' border='0' alt='user posted image'>

நன்றி>கிச்சுவின் எண்ண அலைகள்

Print this item

  மனநோய்
Posted by: Birundan - 10-09-2005, 11:04 PM - Forum: மருத்துவம் - Replies (3)

உலக மனநல வாரம் நாளையுடன் முடிவடைவதையொட்டி இன்றைய இந்து நாளிதழ் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அது மனநோயின் அறிகுறிகளில் ஒன்றான "தவறான நம்பிக்கை" பற்றி எழுதப்பட்டக் கட்டுரை.

சென்னையிலுள்ள ஒரு மனநல மருத்துவரால் எழுதப்பட்ட அக்கட்டுரை அருமை.
மனநோயின் அறிகுறிகள் பல. சிந்தனையில் குழப்பம், உணர்ச்சி மாற்றங்கள்,கண்ணோட்டத்தில் மாறுபாடு,ஞாபகசக்திக் குறைகள், செயல் மாற்றங்கள், சுய உணர்வில் மாற்றங்கள், தூக்கக் குறைபாடுகள், பேச்சு மற்றும் எழுத்துக் குறைகள்,அறிவிலும், பண்பியல் தொகுப்பிலும் குறைகள் எனப்பல உள்ளன.

சமூக மனநல மருத்துவம் என்னும் ஒன்று உருவாகக் காரணமாயிருந்த "தன்னையே அறிந்த மனம்" (த மைண்ட் தட் ஃபவுண்ட் இட்செல்ஃப்) என்னும் புகழ் பெற்ற புத்தகம் எழுதியவர் கிளிஃபோர்டு பியர்ஸ் என்னும் மனநோயாளி.

தங்கள் நோயால் தினமும் மனநல மருத்துவர்களுக்கு மனநலக் கல்வி கற்பிப்பவர் மனநோயாளிகளே.

மனநோய் உடலியல், உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களால் தான் ஏற்ப்படுகிறது. இக்காரணங்கள் தனித்து மற்றும் சேர்ந்து இயங்கும்போது பலப் பிரச்சினைகள் ஏற்ப்படுகின்றன. ஏழ்மைக்கும் மனநலத்திற்க்கும் உள்ளத் தொடர்பு நிரூபிக்கப்பட்ட ஒன்று. இன்பத்தைத் தேடி அலையும் மனப்போக்கும் மனநலமும் தொடர்புடையன.

மனநோய்க்குக் காரணம் தாழ்வு மனப்பன்மையே என்னும் அட்லரின் கொள்கையும், மனித உறவுகளில் ஏற்படும் குறைபாடுகளே என்னும் சலைவனின் கொள்கையும் என்னை மிகவும் கவர்ந்தவை.

"உன்னையறிந்தால்" என்னும் ஒரு ராஜ் டீ.வி பழைய தொடர் (1996-97) நிகழ்ச்சி சிறப்பான ஒன்றாக அப்போது இருந்தது. வெறும் பதினைந்து நிமிடங்கள் வரும் அத்தொடர் (வாரம் ஒரு முறை வியாழன் மாலை 4.30 மணிக்கு)மனநலம் குறித்து எனக்கு மிகவும் ஆர்வம் ஏற்ப்படக் காரணமாயிருந்த ஒன்று. கண்ட குப்பையான தொடரெல்லாம் மறுஒளிபரப்பாகும் இக்காலத்தில் இத்தொடர் காணாமல் போய்விட்டது எனக்கு வியப்பு. டாக்டர் ஆர்.கே.ருத்ரனின் தோற்றமும் அவரது தெளிவான சரளமான எளிமையான தமிழும், கடினமான (எனக்கு) விஷயத்தையும் சுருக்கமாக சொல்லி விளங்க வைத்தது என்னை மிகவும் கவர்ந்தன.

நான் இதுவரை ஆட்டோகிராஃப் வாங்கிய மூன்று பேர்களில் அவர் ஒருவர் (மற்ற இருவர் சுஜாதாவும்,ஜெயமோகனும்). எனக்கு இச்செயலில் விருப்பம் இல்லாவிட்டாலும் இவர்களைக் கண்டவுடன் அவ்வாறு கேட்கத் தோன்றியது.

டாக்டர் ருத்ரனின் சமூகப்பணி போல சுஜாதா மற்றும் ஜெயமோகனின் எழுத்துப்பணி (மனநலம் தொடர்பாக) சிறப்பான ஒன்றாகக் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக என்னால் ஒரு கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. இவர்களின் பல கதைகள் மனநலத்தைப் பற்றி விவரிப்பாகச் சொல்லும் திறன் படைத்தவை.

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா என்று பாடியபடி வந்து மொட்டை மனிதர்களிடம் நடிகர் வடிவேலு உதைபடும் நகைச்சுவைக் காட்சி (எந்த படம்?) மனித உறவுகளில் ஏற்படும் குறைபாட்டிற்கு நல்ல உதாரணம்.

முதலில் ஒரு மொட்டையிடம் வந்து எங்க மொட்டை? பழநியா? என்று கேட்டு உதை படுவார்( மொட்டைக்குக் காரணம் - தாயின் மறைவு). இரண்டாவதாக ஒரு மொட்டையிடம் வந்து அம்மா எப்ப செத்துப் போனா? என்று கேட்டு உதைபடுவார் (இங்கு மொட்டைக்குக் காரணம் - திருப்பதி) மூன்றாவதாக மொட்டையிடம் ஒன்றும் கேட்காமல் இருந்ததற்காக உதை படுவார் ( இங்கு மொட்டை பற்றி பேசினால் சண்டை வரும் என்று சொன்னதற்காக). நான்காவதாக ஒரு கடையில் சோடா கேட்டுவிட்டு கடையில் இரண்டு மொட்டைத் தலையர்
இருப்பதைக் கண்டு ஓட்டமாக ஓடிவிடுவார்.

நன்றி>வண்ணக்குளப்பம்

Print this item

  தோற்ற மயக்கங்கள்
Posted by: Birundan - 10-09-2005, 10:25 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (3)

<img src='http://img368.imageshack.us/img368/7522/pillers0ge.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img368.imageshack.us/img368/148/faces15jz.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img368.imageshack.us/img368/9025/naavai7kf.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img368.imageshack.us/img368/7579/puzzles0yp.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img368.imageshack.us/img368/9156/faces28um.jpg' border='0' alt='user posted image'>
இந்தப் படத்துல நெறைய முகங்கள் இருக்குங்க. 4-5 முகங்களப் பாக்கறவங்க சாதாரணவங்களாம். அப்படியே 8, 9-ன்னு ஒவ்வொன்னுக்கும் ஒன்னைச் சொல்றாங்க. அத்தனையையும் பாத்திருக்கறவங்க அதிஉன்னிப்பா கவனிப்பவராம். எத்தனைன்னு கேக்கறீங்களா? இன்னொரு தடவை எண்ணிப்பாத்துக்குங்க. எண்ணிட்டீங்களா? ஒரு டசனுக்கு ஒன்னு கம்மியா இருந்ததுங்களா?
நன்றி>நினைவோடை

Print this item

  லக்ஸம்பேர்க் பயண காட்சிகளும் குறிப்புக்களும்.
Posted by: KULAKADDAN - 10-09-2005, 10:21 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (25)

18/9/2005 ஞயிற்றுகிழமை எனது நண்பர்களுடன் லக்ஸம்பேர்க் போய் இருந்தேன், அங்கு என்னை கவர்ந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

லக்ஸம்பேர்க் பிரன்சுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய அழகிய நாடு. குன்றுகளுக்கிடையே அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் நகரம். இந்நகரை ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனெஸ்கோ தாபனம் <b>World heritage</b> ஆக அறிவித்துள்ளது.

<img src='http://img351.imageshack.us/img351/882/lx26iu.jpg' border='0' alt='user posted image'>


லக்ஸம்பேர்க் போகும் வழியில் கண்ட ஒரு சிற்பம்

<img src='http://img351.imageshack.us/img351/1500/lx19bo.jpg' border='0' alt='user posted image'>


இரண்டு குன்றுகளுக்கிடையே ஆன பலத்தில் நின்று பார்க்கும் போது பள்ளத்தாக்கில அமைந்துள்ள இடத்தின் காட்சி

<img src='http://img271.imageshack.us/img271/4021/lx44fw.jpg' border='0' alt='user posted image'>



மேலுள்ள காட்சியில் உள்ள நீர் தாரையின் அண்மித்த பார்வை அதே பாலத்தில இருந்து.

<img src='http://img351.imageshack.us/img351/1609/lx37sw.jpg' border='0' alt='user posted image'>



<b>The Adolphe Bridge or New bridge</b>.


இது 1899 இற்கும் 1903 இற்கும் இடையில் கட்டப்பட்டது. 84 மீட்டர் அந்த காலத்தில் உலகில பெரிய பாலமாக இருந்தது. ஒரு பிரஞ்சு நாட்டு பொறியியலாளரால் வடிவமைக்கப்பட்டது.

<img src='http://img173.imageshack.us/img173/3866/lx55cu.jpg' border='0' alt='user posted image'>

<b>The Fortrees</b>

<img src='http://img186.imageshack.us/img186/1381/lx63ws.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img186.imageshack.us/img186/8109/lx60je.jpg' border='0' alt='user posted image'>


மேலே காட்டப்பட்ட படத்திலிருக்கும் அமைப்பு பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட அமைப்பகும், அதற்கு நேர் எதிராக மேட்டு பகுதியில் கீழே உள்ள முடி தாங்கிய பெண்ணின் உருவம் உள்ளது.



<img src='http://img186.imageshack.us/img186/7819/lx73hb.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:25pt;line-height:100%'>படங்கள் நண்பனால் எடுக்கப்பட்டவை.</span>


தொடரும்................

Print this item