| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 81 online users. » 0 Member(s) | 79 Guest(s) Applebot, Bing
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,328
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,302
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,650
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,084
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,473
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,512
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,046
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! |
|
Posted by: வியாசன் - 10-12-2005, 11:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
துணைப்படைமீது தாக்குதல் ஒருவர் வீரச்சாவு! புலிகள் பதில் தாக்குதல்! தாக்குதல் நடதியோர் இராணுவ முகாமிற்குள் தப்பியோட்டம்!
இன்று நன்பகல் மட்டக்களப்பு மயிலவெட்டுவான் சந்தனமடு ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்று கொண்;டிருந்த தமிழீழ தேசிய துணைப்படையினர் மீது இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஒட்டுப்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் துணைப்படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.
இதனை அடுத்து தாக்குதல் நடத்தியவர்களை விடுதலைப்புலிகள் பின்தொடர்ந்து சென்ற போது அவர்கள் மாவடி வேம்பு சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடியினுள் நுழைந்துள்ளனர். இதன் போது சோதனைச் சாவடியில் இருந்த சிறிலங்காப் படையினர் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அறிய முடிகிறது.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினருடன் தொடர்பு கொண்ட போது அச்செய்தியை உறுதிப்படுத்தியவர்கள் இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவினருக்கு உடனடியாக அறிவித்து குறித்த இடத்திற்கு வந்து நிலைமைகளை அவதானிக்குமாறு கூறியபோதும் ஆள்பற்றாக்குறை காரணமாக உடனடியாக அவ்விடத்திற்கு வர இயலாது என கணிகாணிப்புக்குழுவினர் தெரிவித்ததாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கண்காணிப்புக் குழுவினருக்கு இவ்விடயம் தொடர்பாக எழுத்து மூலமாகவும,; தெரியப்படுத்தியிருப்பதாகவும் நாளை இது தொடர்பாக குறித்த பகுதிக்கு கண்காணிப்புக் குழுவினர் வரவிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
சுட்டது புதினத்திலிருந்து
:evil: :evil: :twisted: :twisted: :twisted: :evil:
|
|
|
| யாழ்ப்பானம் மத்திய கல்லூரி அதிபர் சுட்டுக்கொலை |
|
Posted by: வினித் - 10-12-2005, 11:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (7)
|
 |
<span style='font-size:30pt;line-height:100%'>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் மீது துப்பாக்கிச் சூடு </span>
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:25 ஈழம்] [யாழ். நிருபர்]
<b>யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் கே.இராஜதுரை இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாண நகரில் அடையாளந் தெரியாத நபர்களினால் சுடப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும்பொழுது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது</b>
www.puthinam.com
|
|
|
| கடை உரிமையாளரை சுட்டது |
|
Posted by: வினித் - 10-12-2005, 10:54 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<b>'உடுவில் வீடியோ கடை உரிமையாளரை சுட்டது சிறிலங்கா புலனாய்வுத் துறை பொறுப்பதிகாரி ரமேஸ் பண்டார'</b>
[புதன்கிழமை, 12 ஒக்ரொபர் 2005, 16:04 ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். குடாநாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் படுகொலைகளுக்கு சிறிலங்கா புலனாய்வுத்துறையினரே காரணம் என்று யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பரிதி குற்றம்சாட்டியுள்ளார்.
பளையில் கடந்த திங்கட்கிழமை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடனான சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இளம்பரிதி கூறியதாவது:
யாழ். குடாநாட்டில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர் கொலைகள், கொள்கைகள், சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டன. குழு மோதல்கள், கொலை அச்சுறுத்தல், பெண்கள் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளன. சிறிலங்கா காவல் நிலையங்களில் மக்கள் முறைப்பாடுகள் செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறிலங்கா காவல்துறையினரும் படையினரும் துணை போவதால்தான் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
அண்மையில் நடந்த கொலைகளில் படைத்தரப்பு நேரடியாக ஈடுபட்டது அம்பலமாகிவிட்டது. இணுவிலுள்ள சிறிலங்கா புலனாய்வு பொறுப்பதிகாரியான ரமேஸ் பண்டார என்பவர், உடுவில் வீடியோக்கடை உரிமையாளரை சுட்டு இருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் பொதுமக்களால் எமக்கு தரப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் நாம் அரசியல் பணியை செய்யமுடியாது வெளியேறி நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு போர்நிறுத்த உடன்பாடு நெருக்கடி நிலைக்கு உள்ளாகி வருகிறது.
யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமைகளை பாரதூரமாக நாம் கருதுகிறோம். போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இது தொடர்பாக ஆராய்ந்து மக்கள் மத்திலுள்ள நம்பிக்கையீனங்களை களைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.
www.puthinam.com
|
|
|
| மறுபிறவி மனிஷா: ஐந்து வயது சிறுமியின் முற்பிறவி நினைவுகள் |
|
Posted by: shanmuhi - 10-12-2005, 06:30 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>மறுபிறவி மனிஷா: ஐந்து வயது சிறுமியின் முற்பிறவி நினைவுகள் </b>
புதுடில்லி: மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்று ஆன்மீகவாதிகள் சொல்லி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி தனது முன்பிறவியின் நினைவுகளை புட்டு, புட்டு வைப்பதால் மறுபிறவி என்ற எண்ணம் ராஜஸ்தான் மக்களிடம் தோன்றத் தொடங்கிவிட்டது.
டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள ஜாம்ருத்புர் என்ற இடத்தை சேர்ந்தவர் சவுத்ரி கமல் சிங். இவரது 15 வயது மகள் சுமன் 2000ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டு இறந்து விட்டார். அது முதல் கமல்சிங் வீட்டில் எப்போதும் சோகம் தான். மகளின் நினைவுகளில் இருந்து வெளியே வரமுடியாமல் கமல் சிங்கும் அவரது மனைவி சந்தோசும் தவித்து வருகின்றனர்.
ராஜஸ்தானில் உள்ள மிலாக்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராம்பால். இவரது மனைவி கிள்ளி தேவி. இவர்களது ஐந்து வயது மகள் தான் மனிஷா. இந்த பெண்ணுக்குத் தான் முற்பிறவியின் நினைவுகள் தோற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிஷா இரண்டு வயதாக இருக்கும்போதே தனது பெயர் மனிஷா அல்ல சுமன் என்று பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். வயது கூடக்கூட அவளது முற்பிறவியின் நினைவுகளும் அதிகரித்து வருகின்றன. தனது தந்தை கமல் சிங், தாய் சந்தோஷ் என திரும்பத் திரும்ப, மனிஷா கூறி வந்தாள்.
சுமனின் திவசத்தன்று மனிஷா பொங்கி வெடித்து விட்டாள். தான் சுமன் தான், மனிஷா அல்ல என்று ஆணித்தரமாக கூறி விட்டாள். மேலும், சுமனின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை புட்டுப் புட்டு வைக்கத் தொடங்கினாள்.
ஒரு கட்டத்தில் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொண்டனர். துõரத்தில் இருந்தே கமல் சிங்கை அடையாளம் கண்டு கொண்ட மனிஷா ஓடி போய் அவரை கட்டிப்பிடித்து கொண்டார். யார் உதவியும் இல்லாமல் சந்தோஷையும் அடையாளம் கண்டு கொண்டு அவர் தான் தனது தாய் என்று கூறினாள். இரு குடும்பத்தினரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
முற்பிறவி நினைவுகள் குறித்து, மனிஷா பேச்சு மூலம் தெரிவிக்க விரும்பவில்லை. பென்சில், பேப்பர் இருந்தால் போதும் எழுதித் தள்ளிவிடுகிறாள்.
பிளஸ் 1 மாணவியான சுமன் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். எப்போதும் படிப்பு தான். பென்சில், பேப்பர் கொண்டு எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார். அந்த பாதிப்பு மனிஷாவுக்கும் உள்ளது என்று அவளது முற்பிறவி மற்றும் தற்போதைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.
டில்லியில் புஷ்ப் விகார் பகுதியில் ஆந்திரா கல்வி நிலையத்தில் தான் சுமன் படித்தார். அதை கூட மனிஷா தெளிவாக எடுத்து கூறுகிறார். டில்லியில் உள்ள கமல் சிங் வீட்டுக்குச் சென்று சுமனின் பள்ளி சீருடையை மனிஷா சரியாக அடையாளம் காட்டினாள்.
சுமனின் பள்ளித்தோழிகள் பூஜா, பாப்டி ஆகியோர் குறித்தும், சுமன் வழக்கமாக செல்லும் மளிகைக்கடை, அந்தக் கடையின் தோற்றம் ஆகியவை குறித்தும் மனிஷா அடுக்கிக் கொண்டே போகிறாள். சுமனுக்கு சுகாதாரமான சூழல் தான் பிடிக்கும். அதே போன்ற கொள்கையே மனிஷாவிடம் உள்ளது. எப்போதும் தனிமையில் இருப்பது தான் சுமனுக்கு பிடிக்கும். மனிஷாவும் அப்படியே. இருவருக்கும் ஒரே விதமான இனிப்பு வகைகள் தான் பிடித்தவையாக உள்ளன.
இரு குடும்பத்தினருக்கும் இது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. என்ன சொல்வது என்று புரியாமல் ராம்பால் குடும்பத்தினரும், மகள் மறுபிறவி எடுத்து விட்டாள் என்ற சந்தோஷத்தில் கமல் சிங் குடும்பத்தினரும் உள்ளனர். மகளின் போட்டோவுக்கு போடப்பட்டிருந்த மாலையை கூட கமல்சிங் கழற்றி விட்டார். அந்த அளவுக்கு ஐந்து வயது சிறுமி மனிஷா அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டாள்.
ராஜஸ்தானில் மனிஷாவின் புகழ் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராம்பால் வீட்டுக்கு ஏராளமான மக்கள் சென்று, மனிஷாவின் நடவடிக்கைகளை கவனித்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர். மறுபிறவி உண்டு என்று அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர்.
நன்றி: தினமலர்
|
|
|
| கோப்பாய் கிறிஸ்தவக் கல்லுரி அதிபர் சுட்டு கொலை |
|
Posted by: RaMa - 10-12-2005, 02:44 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (25)
|
 |
யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்; கல்லூரி அதிபர் நடராசா சிவகடாச்சம் தாயக நேரம் இன்றிரவு 9 மணியளவில் அவரது வீட்டில் வைத்து இனம் தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப்;பட்டுள்ளார். உந்துறுளியில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
54 வயதான இவர் தேசிய எழுச்சிப் பேரவையின் கோப்பாய் பகுதியின் பொறுப்பாக இருந்துவருவதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 2ம்.லெப். மாலதியின் 18ம் ஆண்டு நினைவு நாளை முன்னின்று நடத்தியதும் குறிப்பிடத்தகக்து.
நன்றி: லாங்கசிறி
|
|
|
| கொழும்பில் சிகிச்சை பெற்ற போராளி உயிரிழக்கவில்லை: புலிகள் |
|
Posted by: வினித் - 10-11-2005, 07:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (18)
|
 |
வவுணதீவு தாக்குதலில் காயமடைந்த புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்த ஹெலி மூலம் கொழும்பு கொண்டு வரப்பட்டார்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பகுதியான கரனடியனாறு என்னுமிடத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வைத்திய சிகிச்சைக்காக ஹெலி மூலம் நேற்று கொழும்பு கொண்டு வரப்பட்டதாக சமாதான செயலகம் தெரிவித்தது.
காயமடைந்தமுக்கிய உறுப்பினரை கொழும்புக்கு அழைத்து வருவதற்காக புலிகள் இயக்கம் ஹெலி வசதியை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அந்த வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் கொழும்பில் இருந்த சென்ற ஹெலி புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கரனடியாறு பகுதியில் உள்ள பாடசாலை மைதானத்தில் தரை இறங்கி காயப்பட்டவரை கொழும்பிற்கு அழைத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படு காயமடைந்தவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு துறை முக்கியத்தர் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச் சோலையில் இருந்து இவர் வவுண தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வேளை ஆயுதம் தாங்கிய குழு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்று முன்தினம் இரவு 9.50 அளவில் நடைபெற்றுள்ளது.
யுத்த நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
http://www.lankasrinews.com/index.php?suba...t_from=&ucat=1&
|
|
|
| தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம் |
|
Posted by: Oviya - 10-11-2005, 06:07 PM - Forum: அறிமுகம்
- Replies (43)
|
 |
iniya tamil ullankalukku vanakkam !
ninda naalaka yarl inaiyaththalaththi sera aasai. ennaiyum unkaludam inaiththuk kolvirkala ?
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - மதன்
|
|
|
| கடைசியில்... அடப்பாவி.! |
|
Posted by: kuruvikal - 10-11-2005, 06:04 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
<img src='http://img149.imageshack.us/img149/4921/brid5ji.jpg' border='0' alt='user posted image'>
<b>காகிதம் பேசிக் கொண்டது
கையில் சிக்கிய
பேனாவால்
கிறுக்கியவர் பலர்
கில்லாடிகள்...
சிலர் ஏமாளிகள்
கசங்கிய நானோ
கடைசியில்....
அடப்பாவி...!
சொல்லும் கூடவே
பேசிக் கொண்டது
உருக்கொடுத்தவனுக்கு
உணர்வு கொடுக்கத் தெரியல்ல
உணர்வு கொடுத்தவனுக்கு
உருக் கொடுக்கத் தெரியல்ல
இரண்டும் கொடுத்தவனுக்கு
தன்னையே உணர முடியல்ல...!
சொன்னதை மறந்திட்டு
சிலாகிப்பதும் எனைத்தான்
சிதைப்பதுவும் எனைத்தான்
புகழ் மட்டும்
அவன் சொத்தாம்
கடைசியில்
நல்லதும் கெட்டதும்
நான்...
அடப்பாவி...!</b>
|
|
|
| கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி |
|
Posted by: வினித் - 10-11-2005, 04:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
கொழும்பு வாகனக் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு வேலையே!
[செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரொபர் 2005, 21:27 ஈழம்] [கொழும்பு நிருபர்]
டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனி ஜெயராஜின் ஆடம்பர வாகனம் வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலுள்ள தினமுரசு அலுவலகம் முன்பாக 06ம் திகதி காலை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே.
இது தொடர்பாகத் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, இது புலிகள் மீதான ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரத் தடைக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதியாகத் தெரியவருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடமாகக் கருதப்படும் ஒரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இக் குண்டுவெடிப்பின் போது, அந்தரங்கச் செயலரோ அல்லது வேறு யாருமே அங்கேயிருக்கவில்லையென்பதுடன், மேற்படி செயலர் அன்றைய தினம் தனது வாகனத்தைத் தவிர்த்து, பிறிதொரு வாகனத்தில் பயணித்ததாகவும் இங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு விடுதலைப்புலிகள் பயணம் செய்வது மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை வலுப்படுத்தி, நிரந்தரத் தடையொன்றை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் தெரியவருகிறது.
இதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை வலுப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புலிகளுடன் பேசுவது ஏற்ற பரிகாரமல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும், செயலகத்திற்கும் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாகக் கடிதமெழுதியுள்ளார்.
இவ்வாறான தமது செயற்பாடுகளிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையிலேயே, ஈ.பி.டி.பி.யினராலும் அவர்களுடன் வழிகாட்டிகளான இராணுவப் புலனாய்வுத்துறையாலுமே இக்குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது என உறுதியாகத் தெரியவருகின்றது.
ஈ.பி.டி.பி. ஒரு அரச ஆயுதக்குழு என்பதும், அவர்கள் இராணுவத் துணைப்படைக்கான ஊதியத்தை சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து பெற்றுவருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
www.puthinam.com
|
|
|
|