![]() |
|
கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி (/showthread.php?tid=2933) |
கொழும்பு குண்டுவெடிப்பு EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி - வினித் - 10-11-2005 கொழும்பு வாகனக் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு வேலையே! [செவ்வாய்க்கிழமை, 11 ஒக்ரொபர் 2005, 21:27 ஈழம்] [கொழும்பு நிருபர்] டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனி ஜெயராஜின் ஆடம்பர வாகனம் வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலுள்ள தினமுரசு அலுவலகம் முன்பாக 06ம் திகதி காலை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே. இது தொடர்பாகத் தற்போது கிடைக்கப்பெறும் தகவல்களின்படி, இது புலிகள் மீதான ஐரோப்பிய நாடுகளின் நிரந்தரத் தடைக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு செயலாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதியாகத் தெரியவருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடமாகக் கருதப்படும் ஒரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட இக் குண்டுவெடிப்பின் போது, அந்தரங்கச் செயலரோ அல்லது வேறு யாருமே அங்கேயிருக்கவில்லையென்பதுடன், மேற்படி செயலர் அன்றைய தினம் தனது வாகனத்தைத் தவிர்த்து, பிறிதொரு வாகனத்தில் பயணித்ததாகவும் இங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு விடுதலைப்புலிகள் பயணம் செய்வது மறு அறிவித்தல் வரும்வரை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை வலுப்படுத்தி, நிரந்தரத் தடையொன்றை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் தெரியவருகிறது. இதன் ஒரு கட்டமாக, ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை வலுப்படுத்த வேண்டும் எனவும், இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புலிகளுடன் பேசுவது ஏற்ற பரிகாரமல்ல எனவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கும், செயலகத்திற்கும் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாகக் கடிதமெழுதியுள்ளார். இவ்வாறான தமது செயற்பாடுகளிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையிலேயே, ஈ.பி.டி.பி.யினராலும் அவர்களுடன் வழிகாட்டிகளான இராணுவப் புலனாய்வுத்துறையாலுமே இக்குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது என உறுதியாகத் தெரியவருகின்றது. ஈ.பி.டி.பி. ஒரு அரச ஆயுதக்குழு என்பதும், அவர்கள் இராணுவத் துணைப்படைக்கான ஊதியத்தை சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து பெற்றுவருகிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. www.puthinam.com - வினித் - 10-12-2005 தினமுரசு அலுவலகம் முன் குண்டுவெடிப்பு , EPDP யினரின் திட்டமிட்ட சதிமுயற்சி அம்பலம் Wednesday, 12 October 2005 அமைச்சர் டக்ளர், தேவாநந்தாவின் அந்தரங்கச் செயலாளர் அந்தோனி ஜெயராஜின் ஆடம்பர வாகனம் வெள்ளவத்தை நெல்சன் பிளேசிலுள்ள தினமுரசு அலுவலகம் முன்பாக 06ம் திகதி காலை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே. மிகவும் பாதுகாப்பான ஓரிடத்தில் நேரம் கணித்து வைக்கப்பட்ட ஒரு குண்டால் வாகனம் தகர்க்கப்பட்டுள்ளது. அமைச்சு செயலரின் உதவியாளர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளானதைத் தவிர வேறு குறிப்பிடும்படியான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதே இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் விடுதலைப்புலிகள் விஜயம் செய்வது மறு அறிவித்தல் வரும்வரை தடை செய்யப்படுவதாகவும், பயங்கரவாதப் பட்டியலில் அவர்களை சேர்ப்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஐரோப்பிய ஒண்றியத் தலைமை நாடான பிரிட்டன் அறிவித்ததும் யாவரும் அறிந்த விடயமாகும். சிறிலங்கா அரசு மற்றும் அதன் ஊதுகுழல்களின் தவறான பிரச்சாரங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்கு எதிராக எடுத்துள்ள இந்த துர்ப்பாக்கியமான நிலைப்பாட்டிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் EPDP யினராலும் அவர்களின் சமாதான விரோதச் செயற்பாடுகளுக்குக் காரணகர்த்தாக்களாக விளங்கும் இராணுவப் புலனாய்வுத்துறையாலுமே( MI) இக்குண்டுவெடிப்பு திட்டமிட்டுச் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வேளையில், 6ம் திகதி காலை வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களை சிறிலங்காவிற்கான நோர்வே நாட்டின் தூதுவர் கான்ஸ்பிரஸ்கர் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இம் முயற்சியைக் குழப்பும் நோக்குடனும்,ஐரோப்பிய நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் நோக்குடனும்,தமிழர்களுக்கு எதிராக மேலும் சர்வதேசத்தைத் தூண்டிவிடும் நோக்கத்துடனும் EPDP யினர் மேற்கொண்;ட இந்த சதித்திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. "தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும்" என்பது போல, தங்கள் வாகனம் போனாலும் பரவாயில்லை. புலிகளை எப்படியாவது ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து விட வேண்டும் என்பதற்காக EPDP யினரால் மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையே தினமுரசு பத்திரிகை அலுவலகம் முன்பாக நடைபெற்ற வாகனத் தகர்ப்பு ஆகும். இச்சதி பற்றி ஏதுமறியாத அப்பாவி உதவியாளர் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார். |