| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 291 online users. » 0 Member(s) | 288 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,647
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,470
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,507
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,043
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| வாகரையில் போராளி வீரச்சாவு! |
|
Posted by: mayooran - 10-30-2005, 01:02 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் விடுதலைப் புலிப்போராளியொருவர் வீரச்சாவை தழுவியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் கருணா கருணா குழு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு - பொலன்னறுவை மாவட்ட எல்லைப் பகுதியிலுள்ள மதுரங்குளம் குஞ்சுக்குளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் கருணா குழுவினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய கருணா குழுவினர், காவலரண் கடமையிலிருந்த விடுதலைப் புலிப் போராளிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் உடனடி பதில் தாக்குதலை நடத்தியதாக இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட தமது உறுப்பினரையும காயமடைந்த மேலும் மூவரையும் தூக்கிக் கொண்டு அப் பகுதியிலுள்ள இராணுவ முகாம் பக்கமாக தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
<span style='font-size:14pt;line-height:100%'>
puthinam</span>
|
|
|
| மட்டுறுத்தினர் யாழினிக்கு |
|
Posted by: kurukaalapoovan - 10-30-2005, 12:22 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (87)
|
 |
மட்டுறுத்தினர் யாழினிக்கு
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=136560#136560
மேலே உள்ள இணைப்பில் போட்ட 3 படத்தில் 2 அய் நீக்கிவிட்டு ஒன்று நீக்கப்பட்டுள்ளதாக எழுதிய குறிப்பிற்கு நன்றி.
நீங்கள் ஏன் அந்தப்படங்களை (2) நீக்கினீங்கள் என்றும் எழுதினீங்கள் என்றால் ஆரோக்கியமாக இருக்கும்.
நீங்கள் அந்த விளக்கத்தை தனிப்பட்ட அஞ்சலில் எழுத தேவையில்லை. எல்லோர் முன்னும் சுட்டிக்காட்டப்படும் தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
நீங்கள் விளக்கம் எழுதாமல் விட நான் அந்தப்படங்களை திருப்பி இணைக்கவேண்டி இருக்கும். பிறகும் விளக்கமில்லாமல் நீக்கப்பட நான் மீண்டும் இணைக்க உங்களுக்கு நேரமில்லை என்று என்னை தடை செய்வியள்.
பிறகு நான் வேறை பாவனை சொல்லில வந்து தொடர நிர்வாகம் IP தடை செய்ய வேண்டியிருக்கும். பிறகு நான் வேறை வேறை IP களில் வர தூண்டும்.
இந்தக்கண்ணாம்பூச்சி விளையாட்டெல்லாம் என்னுடைய சிற்றறிவுக்கு ஆரோக்கியமாக தெரியவில்லை. உங்களுக்கு எப்படி இருக்கு?
புரிந்துணர்விற்கு நன்றி.
|
|
|
| நெருப்பெரிந்த நிலம்....................... |
|
Posted by: kpriyan - 10-30-2005, 08:06 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (8)
|
 |
நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு,
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்,
திட்டுத்திட்டாய் படர்ந்து..
எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று,
தொட்டு சொல்கின்றன.............
நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....
|
|
|
| கேணல் ரிஸ்வி சுட்டுக்கொலை |
|
Posted by: Sriramanan - 10-30-2005, 03:21 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
கேணல் ரிஸ்வி சுட்டுக்கொலை
சிறீலங்கா இராணுவ புலனாய்வுப் துறையின் தலைமை அதிகாரி கேணல் ரிஸ்வி மீடர் கிரிபத்தொட பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சிறீலங்கா புலானய்வுத்துறையின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்டு வந்த இவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்;காக சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பயனளிக்காமல் அதிகாலை 1.30 மணியளவில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
நன்றி: சங்கதி
|
|
|
| கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை |
|
Posted by: SUNDHAL - 10-30-2005, 02:18 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
எஜமானரின் துண்டான கால் விரலை கவ்விக்கொண்டு ஓடிய பூனை
ஜெர்மனியின் லீபெக் நகரை சேர்ந்தவர் உடோ ரீட். சமையல் அறையில் ரொட்டித்துண்டுகளை நறுக்கிய அவர் மறந்துபோய் கத்தியை தரையில் போட்டுவிட்டார். பின்னர் வெறுங்காலால் நடந்து சென்றபோது கத்தியில் பட்டு கால் விரல் துண்டாகி கீழே விழுந்துவிட்டது.
குளியல் அறைக்குச் சென்று காயத்துக்கு கட்டுப்போட்ட அவர், விரலுடன் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸ் வண்டியை அனுப்பி வைக்கும்படி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிக்கொண்டு இருந்தார். அதற்குள் அவருடைய வளர்ப்புப்பூனை, துண்டித்த விரலை கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட்டது.
சிறிது தூரம் அதை விரட்டிச்சென்ற ரீட், பின்னர் அந்த முயற்சியை கைவிட்டு விட்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். பூனை விரலை `திருடி'ச்சென்று இருக்காவிட்டால் அதை மீண்டும் பொருத்தி இருக்கலாம் என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்தனர்.
Thanks:Thanthi......
|
|
|
| ஆரோக்கிய வாழ்வுக்கு யோகாசனம் |
|
Posted by: AJeevan - 10-29-2005, 10:18 PM - Forum: மருத்துவம்
- Replies (36)
|
 |
<span style='font-size:22pt;line-height:100%'><img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/topimage.jpg' border='0' alt='user posted image'>
<b>தமிழர்களின் ஆசனம்</b>
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும்
எளிதாக செய்யக் கூடிய ஆசனம் சூரிய நமஸ்காரம்.
கதிரோனைப் போற்றி வணங்கி அவனது அருளை,
ஆசிகளைப் பெறும் விதத்திலும், கதிரவனிடமிருந்து
சக்தியை இழுத்து வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால்
சூர்ய நமஸ்காரம் என்று பெயர் வந்தது.
கதிரவனைத் தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில்
அவனுக்கு நன்றி கூறி சக்திகளைப் பெற்று கொள்ளும்
அடிப்படையில் இந்த ஆசனங்கள் அமைந்திருப்பதால்
இதை தமிழர்களின் ஆசனம் என்று கொள்ளலாம்.
<img src='http://www.fit2.de/thaiyoga/sonnengruss.gif' border='0' alt='user posted image'>
<b>சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்</b>
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/1.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose1.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக்
கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி
(வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு
அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/2.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose2.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால்
வளைக்கவும்
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/3.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose3.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக்
குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக
தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/4.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose4.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-4
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே)
இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால்
மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல்
நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல்
மார்பை உயர்த்தி முதுகையும்,
கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே
சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.
பார்வை நேராக இருக்கட்டும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/5.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose5.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக்
சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை
மட்டும் அப்படியே வைத்திருக்கவும்.
முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு
மேலே தூக்கி நிற்க, உள்ளங்கையையும்,
பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத்
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை
தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/6.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose6.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-6
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும்
சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும்
தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.
உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத்
லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/7.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose7.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே
தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும்.
தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும்.
உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும்,
முழங்காலிலும் படும்படி அமைக்கவும்
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/8.jpg' border='0' alt='user posted image'> <img src='http://www.dancingyogi.com/images/pose5.gif' border='0' alt='user posted image'>
பயிற்சி-8
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே
இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த
வரை மேலே உயர்த்திடுங்கள்.
அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.
முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க.
தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள்.
முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது.
இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி
உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரு நொடிகள் இந்நிலையில்
(முக்கோணம் போல) நிற்கவும்
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/9.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-9
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து
இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள்.
வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்)
நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து
உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்)
வைத்திருக்க வேண்டும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/3.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-10
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து
ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே
தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க
வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும்.
இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/11.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய
நிலையில் நின்று கொண்டு,
முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும்.
தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம்.
பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/apr/12.jpg' border='0' alt='user posted image'>
பயிற்சி-12
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக
உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும்
கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும்.
இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல்,
தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல்
என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப்
பயனும் கிட்டும்.
இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான
நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.
இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும்
முறைகள் முக்கியம்.
கவனித்து செய்யுங்கள்.
<b>பலன்கள்:-</b>
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே
நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி
பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.
நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து
உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப்
படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப்
பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி
ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும்
மனிதனை அண்டவே அண்டாது.
<img src='http://img471.imageshack.us/img471/892/serieajeevan6vb.jpg' border='0' alt='user posted image'>
நன்றி: தினகரன் மற்றும் சில ஆங்கில பகுதிகள்.........<img src='http://www.seasonsindia.com/healthfitness/images/surya10.gif' border='0' alt='user posted image'></span>
|
|
|
| கிளிநொச்சி மீட்பு எவ்வாறு நிகழ்ந்தது இறுதிப்பாகம். |
|
Posted by: வியாசன் - 10-29-2005, 04:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
ஓயாத அலைகள் - 02 வலிந்த தாக்குதலில் கிளிநொச்சி படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமைக்கு காரணம் தமிழீழ தேசியத் தலைவர் வகுத்த தாக்குதல் வியுூகங்களும் திட்டங்களுமேயாகும். அன்று நடந்த உக்கிரமான சமர் இருதரப்பினருக்கும் சவாலாக அமைந்த அந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் இராணுவ வல்லமையின் வெளிப்பாட்டின் ஒரு கட்டம் எதிரியை திணறடித்திருந்தது.
இவ்வாறு நடந்த அந்த சமருக்கான வேவுத்தகவல்களை பல போராளிகள் முன்னர் வெளிப்படுத்தினர். அன்று அவற்றை நெறிப்படுத்தி நடாத்திய விசேட வேவு அணித் தளபதி கேணல் ஜெயம் இச்சமரில் தாம் கையாண்ட தாக்குதல் வியுூகங்களையும் எவ்வாறு வேவுச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
வேவு நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஒரு சண்டையை திட்டமிடுவதற்கு முதல் எமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுமா என்னும் நோக்குடன் தொடர்ந்து வேவு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் கிளிநொச்சிப் பகுதியிலும் வேவு நடவடிக்கை நடைபெற்றது. விசேட வேவு அணியினர் வேவு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே மட்டு. அம்பாறை அணியினர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா.; இந்த நடவடிக்கை மனோ மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் தளபதி பால்ராஜ் தனது போராளிகளையும் இப்பகுதி வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தார்.
இவ்வாறு இந்த நடவடிக்கை தொடர்ந்ததனால் கிளிநொச்சி படைத்தளம் தொடர்பான தரவுகள் எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் ஜெயசிக்குறுசமர் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் வேவு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
ஆகவே வேவு எனும்பொழுது இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை கண்காணித்துக் கொண்டிருப்பதும் அந்த சூழல் எவ்வாறிருக்கின்றது. இராணுவத்தினரின் நடவடிக்கை எவ்வாறிருக்கின்றது. எங்களுக்கு சாதகமான பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றது போன்ற விடயங்களைக் காலம் காலமாக வேவு அணிகள் செய்து வந்திருக்கின்றன. அடுத்து அத்தரவுகள் பொறுப்பாளர்கள் மூலமாக தலைவரிடம் கிடைக்கப் பெற்றபின் தேவை கருதி தாக்குதலை மேற்கொள்வதாக அமையும்.
வேவினைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்வும் அவர்கள் சாவை எதிர்பார்த்துத் தான் நகர வேண்டும.; வேவுக்காக சென்று திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எதிரி விழிப்பாக பார்த்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் நாங்களும் கண்டிப்பாக எதிரியின் காப்பரணில் ஏறவேண்டும் அப்போதுதான் சென்ற பாதையில் எத்தனை காப்பரண்கள் இருக்கின்றன எத்தனை தடைகள் இருக்கின்றன, அந்தத் தடைகளை எவ்வாறு கடந்து போகலாம் என்பவற்றை பார்க்கமுடியும் ஆனால் வேவுப் போராளி அந்தத் தடைகள் அனைத்தையும் வெட்டிக் கொண்டு போக முடியாது. அதை ஒருவகையில் எதிரிக்குத் தெரியாமல் கம்பி வேலிகளையும் கடந்து உள்ளே போக வேண்டும.; கிளிநொச்சியைப் பொறுத்த வரைக்கும் தடயம் இல்லாமல் திரும்பி வருவதென்பது பெரும் துன்பமானது. ஏனெனில் நீர் நிலைகளும், புற்தரைகளும் அதிகம் கொண்ட பகுதி. அவற்றினு}டே தடயமின்றி உள்நுழைவதென்பது கடும் சிரமம்.
இந்த சண்டையிலும் தளபதி பால்ராஜ் உள்நுழைந்த பாதைகள் கூட நாங்கள் பார்த்து உறுதிப்படுத்திய பின் நகர்விற்கு முதல் நாள் பாதைகளை சென்று பார்த்த போது எல்லாம் மாறுபட்டிருந்தது. மீண்டும் புதிதாக பாதை எடுத்துத்தான் நகர்த்தினோம.; ஆனால் விசேட வேவு அணியை பொறுத்த வரையில் ஒரே நாளில் பாதையெடுத்து அமைவுகளை குறித்து சரியாக நகர்த்திய சம்பவங்கள் கிளிநொச்சி சண்டையில் உள்ளது. ஏனெனில் சண்டைக்கான திட்டம் இல்லாத நேரத்திலேயே பாதைகளை எடுத்து உட்செல்ல முடியுமென்ற நிலையில் இருந்தபோது, சண்டைக்கான திட்டம் வகுத்த பின் அந்தப் பாதைகளை பார்த்து உறுதிப்படுத்தச் சென்றபோது முதல் பார்த்தது போல் இருக்கவில்லை. மீண்டும் வேறு பாதைகளைத்தான் எடுத்துக்கொடுத்தோம் ஆனால் ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்த வரையில் திட்டம் வகுத்த ஒரு கிழமைக்குள் வேவு வேலைகளை முடித்துக் கொடுத்தோம். இதற்கு போராளிகள் கடுமையாக உழைத்தார்கள். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட தரவுகள் இருந்தபோது அதைப் பார்த்து உறுதிப்படுத்தப்படும் தரவுகள் ஒரு கிழமைக்குள் நடந்தது. ஆகவே சண்டைக்குத்திட்டமிட்டுப் போகும் போது சண்டையின் போக்கு மாறுபட்டால் அதற்குரிய பொறுப்பு வேவு அணிகளைத்தான் சாரும் ஆகவே இந்த ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்தவரை திட்டங்களின்படி சிறப்பாக நடைபெற்றது.
அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. அதன் திட்டம் கிளிநொச்சியுடன் இணைப்பதாக இருந்தது. அதன்படி இதனை விரைவாக செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் எதிரி ஜெயசிக்குறுவை தொடங்கியிருந்தான். ஆனால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக எதிரி நினைத்தது போல் இணைக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை மாங்குளப்பகுதியை நெருங்கியதும் தேசியத் தலைவர் அன்று மாங்குளத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதி தீபனை கிளிநொச்சிக்கு பொறுப்பாக நியமித்து ஏற்கனவே இத்தளத்தின் மீதிருந்த அவதானிப்பை விட கூடுதலாக அவதானிப்பை மேற்கொள்ளச் செய்தார்.
இதன் பின்னர் கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது அதற்கும் விசேட வேவு அணி வேவு செயற்பாட்டில் ஈடுபட்டது. எமது வேவுகளை பொறுத்த வரையில் திடீரென ஒரு திட்டத்தினை வகுத்து வேவு பார்க்கும் போது வேவு அணி பாதைகளை எடுத்து தாக்குதலுக்கான ஒரு பாதையை திறந்து கொடுக்கின்ற அதே நேரம் அந்தப்பாதையினு}டாக எந்தப் படையணி சண்டைக்கு இணைக்கப்படுகின்றதோ அந்தப் படையணிப் போராளிகளையும் இணைத்து செயற்பாட்டில் ஈடுபடுத்துவோம். ஏனெனில் தாக்குதலின் முதல் கட்டத்திற்கான நகர்வை நாங்கள் புூர்த்தி செய்து கொண்டு பாதைகளை காட்டினால் தொடர்ந்து சண்டையில் ஈடுபடப்போவது அந்த அணிகள். ஆனால் பாதையை காட்டி உள்ளே அணிகளை நகர்த்திக் கொண்டு செல்வது விசேட வேவு அணிதான். ஆனால் அந்தப் பாதைக்கு திட்டத்தின்படி எந்த அணி இணைக்கப்படுகிறதோ அந்தப் படையணி தொடர்ந்து சண்டையில் ஈடுபடும்.
ஆனால் வேவு பார்ப்பதென்பது ஒரு நாளில் முடிவடையும் வேலை அல்ல. பல நாட்களை வேவு பார்ப்பதற்காக செலவு செய்யவேண்டும.; அது எமக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் வேவு அணியினுடைய நடவடிக்கையில் அவர்கள் விடும் சிறிய சிறிய தவறுகளும் அவர்களின் உயிருக்கே பாதகமாக அமையும். அதாவது முதல்நாள் சென்று ஒரு பாதையைப் பார்த்து விட்டு வரும் போது தவறுதலாக ஒரு தடயத்தை விட்டு விட்டு வந்திருந்தால் அல்லது எதிரிக்கு ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டு மறுநாள் அந்த இடத்தில் நிலையெடுத்திருப்பானாக இருந்தால் இவர்கள் செல்லும் போது இவர்கள் மீது தாக்குதல் இடம்பெறும். ஆனால் அதை எதிர்பார்த்துத்தான் இவர்கள் போகவும் வேண்டும். அந்த வகையில் ஒரு கரும்புலி அணியினுடைய செயற்பாட்டைவிட ஒரு வித்தியாசமான செயற்பாடாக இவர்களின் செயற்பாடு இருக்கும.; கரும்புலிகள் ஒரு வெற்றிக்காக தமது உயிரையே அர்ப்பணித்து விடுவார்கள். இந்த வேவு அணியினரின் நோக்கம் உயிரை அர்ப்பணிப்பதாக இருக்காது ஆனால் எதிரியினுடைய தாக்குதலை முழுமையாக எதிர்பார்த்தபடி தான் செல்வார்கள் வேவு அணியினுடைய செயற்பாடு இவ்வாறு தான் இருக்கும்.
கிளிநொச்சி ஓயாத அலைகள் 02 இலும் நிறையத் தரவுகள் எங்களிடம் ஏற்கனவே இருந்தது. அத்தரவுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் திடீரென தலைவர் ஒரு முடிவை எடுத்தார் கிளிநொச்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டுமென்று. ஏனெனில் அதற்குமுதல் 1998 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் ஒரு தாக்குதலை செய்து முன்னணிப் பகுதிகளை கைப்பற்றினோம். அத்தாக்குதல் எமக்கு முழு வெற்றியளிக்கவில்லை. அப்போதும் எமது திட்டம் உள்ளே ஒரு அணி நகர்ந்து சென்று குறுக்கறுத்து கட்டவுட் போட்டு நிலை கொண்டு கிளிநொச்சியை கைப்பற்றுவதெனும் நோக்கமிருந்தது. ஆனால் திட்டத்தின்படி வேவுக்கேற்ப ஒரு அணிக்கு பாதையை கொடுத்து அந்த அணி பாதையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் பணியும் சரியாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை எதிரி எதிர்த்தாக்குதல் மூலம் மூடியவுடன் உள்ளே சென்ற அணியைக் கூட வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவினை கருத்தில் கொண்டு தான் தலைவர் புதிய திட்டத்தினை வகுத்தார். இந்த சமருக்கு கிளிநொச்சியையும் பரந்தனையும் பிரித்து விட்டால் உள்ளே செல்லும் அணிக்கான வளங்கள் தடைபடாது என்ற நோக்கத்தோடு தான் இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வேவு நடவடிக்கையிலும் விசேட வேவு அணியுடன் சேர்ந்து சாள்ஸ் அன்ரனி அணி அந்தந்த பகுதிகளினு}டே உட்செல்ல வேண்டிய அணிகள் அனைத்தையும் அழைத்து சென்று காட்டினோம்.
இவ்வாறு பாதைகளைக் காட்டியது விசேட வேவு அணிகளே. அதிலே தளபதி பால்ராஜூம் அவரது அணிகளும் உள்நுழைவதற்கான பகுதியில் இரண்டு பாதைகளை எடுத்திருந்தோம.; அதிலே கட் அவுட், கட்ஓப் (கு) என பரந்தனையும் கிளிநொச்சியையும் பிரிக்கும் இடத்தில் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். மேற்குப்பகுதியாக 02 பாதைகளையும் கிழக்கு பகுதியால் 02 பாதைகளையும் எடுத்திருந்தோம் இதனு}டாக அணிகளை நகர்த்தி உள்ளே கட்டவுட், கட் ஓப் (கு). என்பவற்றை அமைத்ததால் அந்தப் பாதைகளை இராணுவத்தினர் மீளக்கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எதிர்ச் சண்டை பரந்தன் பகுதியில் மட்டும் நடந்தது. ஏனைய பகுதியால் எதிரி தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஏனைய பாதைகள் அனைத்தையுமே மீண்டும் எதிரி கைப்பற்றுவதற்கான கடும் சமர் நடந்து கொண்டிருந்தது.
ஓயாத அலைகள் 02ஐப் பொறுத்தவரை 27 ஆம் திகதி மிகக்கடுமையான சமர் நடந்தது எதிரி எல்லாப் பாதைகளையும் கைப்பற்றி ஒரு சில பாதைகளை மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலை இருந்ததினால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இருந்தது. அன்று இரவு தலைவர் தளபதிகள் எல்லோரையும் அழைத்து கதைத்து சரியான திட்டங்களை வகுத்து அந்த நாள் எவ்வாறு சமரை நகர்த்த வேண்டும் என்ற ஒழுங்குபடுத்தல்களைச் செய்தார். அன்று தலைவர் போட்ட திட்டத்தின்படி அடுத்த நாள் அதிகாலையிலேயே சண்டையை ஆரம்பித்தோம். அந்தச் சண்டையிலும் பிரதானமான சமர் நடந்த பகுதி தளபதி தீபன் சென்ற பாதையும் தளபதி ராம் சென்ற பாதையும் ராம் சென்ற பாதையினு}டாகத்தான் கனரக ஆயுதங்களை நகர்த்தி சண்டையில் ஈடுபட்டோம் அதோடுதான் எதிரி பின்வாங்கி. ஓடினான்.
ஓயாத அலைகள் 02-ன் வெற்றியென்பது நாங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட சமரின் போது ஏற்பட்ட தவறுகளையெல்லாம் கருத்தில் கொண்டு தலைவர் இந்த சமருக்காக அமைத்துத் தந்த திட்டம்தான். ஏனென்றால் இந்த சமரிலும் வழமையாகவே நாங்கள் ஓடுபாதையை இரவில் பிடிப்பதும் காலையில் எதிரி மீண்டும் மூடுவதற்கான முயற்சியை எடுத்து மூடியும் இருக்கிறான். அதே வேலையை இந்த சமரிலும் செய்தான். நாங்கள் இரவு நகர்ந்து போய் பிடித்த பாதைகளை எதிரி மீண்டும் நகர்ந்து வந்து சில பாதைகளை மூடினான். ஆனால் எதிரியை நிலைகுலைய வைத்தது தலைவரின் திட்டம்தான் அது என்னவென்றால் ஊடறுத்து கிளிநொச்சியையும் பரந்தனையும் கூறு போட்டது இந்தத் திட்டத்தை எதிரி எதிர்ப்பார்க்கவில்லை அவர்கள் மறுநாட் காலையில் பாதைகளை மூடி தமது நிலைகளை தக்கவைத்து விட்டோம் என்ற நிலை ஏற்பட்ட போது இந்தப் பகுதியை அவர்களால் உடைக்க முடியாது போனது.
இதனால் கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்கு போகவும் முடியவில்லை ஆனையிறவு இராணுவம் கிளிநொச்சிக்கு வரவும் முடியவில்லை. என்னதான் தமது பகுதியை தக்கவைத்த போதும் இந்த நடவடிக்கையால் உளாPதியாக தாக்கமடைந்து 28 ஆம் திகதி மாலை வரை தப்பியோடத்தான் முயற்சியெடுத்தான். சத்ஜெய படையெடுப்பின் போது விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு நடாத்திய தற்காப்பு எதிர்த்தாக்குதல்களையே எதிர்கொள்ள முடியாமல் மூன்று கட்டங்களாக மூன்று படை அதிகாரிகள் தலைமை தாங்கி ஆக்கிரமிக்குபோதே தாம் விடுதலைப் புலிகளுடன் போரிடும் வல்லமை அற்றவர்கள் என்பதை இராணுவத்தினர் வெளிப்படையாக நிரூபித்து விட்டனர். இருந்த போதும் அன்று முல்லைப் படைத்தள இழப்பினால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தால் பலிக்கடாக்களாகவே இராணுவத்தினர் கையாளப்பட்டதன் விளைவாகவே கிளிநொச்சி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு படைத்தளங்களும் அமைக்கப்பெற்று 2000 இற்கும் மேற்பட்ட துருப்புக்களும் நிறுத்தப்பட்டன. இவர்கள் இங்கு நிறுத்தப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கம் இவர்களை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்திருக்கலாம.; ஏனெனில் இவர்களை எவ்வேளையிலும் இழக்க நேரிடும் என்ற உண்மை அரசுக்கு அன்று தெளிவாக தெரிந்திருந்தது. அதை ஓயாத அலைகள் 02 இன் மூலம் புலிகள் மெய்ப்பித்தும் காட்டினர்;.
முற்றும்
--------------------------------------------------------------------------------
சுட்டது தமிழ்நாதத்திலிருந்து
|
|
|
|