| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 488 online users. » 0 Member(s) | 485 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,325
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,234
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,300
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,646
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,081
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,469
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,506
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,042
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,241
|
|
|
| புலிகளுக்கும் அல்கைடாவிற்கு தொடர்பு? புதிய தந்திரம் |
|
Posted by: வியாசன் - 10-31-2005, 08:26 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
அல்-கைடா பயங்கரவாத அமைப்புடன் விடுதலைப் புலிகளிற்கு தொடர்பு இருக்கலாம் என தனது அருவருடிகள் மூலம் பரப்புரைகளைச் செய்து விடுதலைப் புலிகள் மீது நெருக்கடிகளை ஏற்படுத்த சிறீலங்கா அரச தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியைச் சேர்ந்த அனைத்துலக போரியல் கற்கை நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் விடுதலைப் புலிகளிற்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்து.
விடுதலைப் புலிகள் மீதும், தமிழரின் விடுதலைப் போரின் மீதும் எதிர்பைக் கொண்டுள்ள இந்திய புலனாய்வுதுறையின் முக்கிய அதிகாரி ஒருவர் இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருப்பதன் காரணமாக அவரைப் பயன்படுத்தி இது போன்ற அறிக்கைகளை வெளியிடவைத்து விடுதலைப் புலிகள் மீது அனைத்துலக அரங்கில் நெருக்கடிகளை ஏற்படுத்த சிறீலங்கா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
நன்றி சங்கதி
|
|
|
| யாழில் இராணுவம், காவல்துறை மீது கைக்குண்டுத் தாக்குதல்கள்!! |
|
Posted by: mayooran - 10-31-2005, 06:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழில் சிறிலங்கா இராணுவம், காவல்துறை மீது கைக்குண்டுத் தாக்குதல்கள்!!
[திங்கட்கிழமை, 31 ஒக்ரொபர் 2005, 04:53 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையினர் மீது நேற்ற ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டம் தென்மராட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிலங்கா இராணுவத்தின் ட்றக் வாகனம் ஒன்று கொடிகாமம் நோக்கி ஏ-9 நெடுஞ்சாலையூடாக சென்று கொண்டிருந்தது.
அந்த வாகனத்தை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இருவர், மிருசுவில் சந்தியில் மாலை 6.30 மணியளவில் இராணுவ ட்றக் வாகனம் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர்.
இக்குண்டு வெடித்ததில் இரு சிறிலங்கா படையினர் படுகாயமடைந்தனர். இதையடுத்து குண்டு வீசியோர் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் காயமின்றி தப்பித்துள்ளனர்.
இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் கோண்டாவிலில் சிறிலங்கா காவல்துறை நிலை ஒன்றின் மீது ஒரு கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த ஒரு சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த இராணுவச் சிப்பாய் பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
puthinam
|
|
|
| "one giant lie for mankind" |
|
Posted by: RaMa - 10-31-2005, 06:06 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
i can give you dozens of scientific reasons to prove that man never landed on the moon. i can lay out at great length what radiation and extreme temperatures would have done to any astronaut. i could explain how the laws of physics, gravity, and photography could not have produced any of the "proof" that NASA has released, but i am not an expert in radiation or physics. what i am an expert in is conspiracies, and the moon landing has "FAKE!" written all over it.
in 1961, russia announced that it had launched the first man into space, yuri gagarin. during the cold war, russia was the united state's greatest enemy. if they could convince everyone that they had a man in space, they could convince everyone that they were capable of launching weapons from space. so the united states had to one-up them in the "space race" and immediatly announced that they were going to land an american on the moon. through blurry video feed and photos, they did just that. it was more important to convince the world that they had landed on the moon than actually landing. apollos 14, 15, and 16 did just that.
in the 1960's automobiles and airplanes were still in their infancy. every attempt at manned spaceflight had been a colossal failure. and yet, they want us to believe that NASA was able to make a great stride forward and fly to the moon with not one but three perfect flights - a feat that forty years later we have yet to duplicate. no nation had the technology necessary to land on the moon. the landing crafts and spacesuits were not yet designed to withstand the radiation and extreme temperatures. america didn't even have the technology for direct communication with a space ship, and yet despite these seemingly insurmountable hurdles, NASA safely and successfully landed three crews on the lunar surface and broadcast the feed back to televisions in every living room.
people all over the world found it hard to believe that NASA could land a man on the moon, so NASA produced evidence, and that evidence will be their undoing. millions of people watched the first moonwalk on TV. they sat in awe as the american flag fluttered gently in the breeze, although there is no air in the vacuum, atmosphere-less surface of the moon. none of the still pictures match up with the film footage. the reason that the video quality was so bad was that news crews were only allowed to film the footage projected onto a large screen inside of NASA.
the video feed may have been poor, but the pictures were perfect, too perfect in fact. a professional photographer working under normal conditions will get one or two really good pictures off of a roll of film. the astronauts, not photographers at all, produced thousands of perfect pictures. each picture was perfectly focused and exposed even though they were supposedly working under extreme lighting conditions.
normal film would melt in the temperatures found at the moon, so a special film was developed just for this expedition. the astronauts had cameras mounted on their chests, and working with unfamiliar film through thick gloves without the ability to focus, meter, or properly compose their shots came back with perfect pictures every time.
take a good look at the pictures. here, we see the most famous of photographs. it shows the shuttle on a hard surface, without any imprint. yet a simple footprint left a deep impression in the dust? it shows a perfectly black night sky devoid of any stars. every part of the picture is perfectly lit even though the only possible light source was from the sun. the shuttle and flag have shadows to the right even though there must be a light source behind the camera man in order to illuminate the picture. look closer, where is the astronaut's shadow? other photos show shadows going in separate directions and reflections of light sources in the visors that could not be the sun.
whether these pictures were created in an elaborate studio or if they were pieced together, the result in the same. the pictures are nicely done fakes. if the only evidence of america's flight to the moon is false, and the possibility that NASA could have conducted a lunar landing is slim, they add up to only one thing. man has yet to set foot on the moon.
http://www.envasion.net/2002/moon.html
|
|
|
| India builds first (stealth) warship |
|
Posted by: kurukaalapoovan - 10-30-2005, 11:35 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- Replies (12)
|
 |
India builds first warship
-----------------------
Sunday, October 30, 2005 (Mumbai):
Taking first strides towards complete indigenisation of India's defence armoury, the Garden Reach Shipbuilders and Engineers (GRSE) Kolkata have begun building country's first completely indigenous warship.
"On August 12 Defence Secretary Shekhar Dutt cut the steel, thus paving way for the construction of the country's first indigenously built anti-submarine warship with stealth technology," GRSE Chairman and Managing Director Rear Admiral (retd) T S Ganeshan said.
It is a 25,000 tonne corvette armed with stealth-mounted guns, the latest electronic warfare suite which, together with other key operational equipment, is shielded using stealth technology incorporated into the design of the bulwarks.
More orders likely
Other signature management control features are built in to combat the ship's infrared, radar-cross signature, noise and magnetic outputs.
Electricity is supplied via four diesel generators; two independent interconnected switchboards optimise redundancy and reliability.
The cost has not yet been ascertained but GRSE aims to deliver the corvette to Navy by first half of 2009.
It is also expecting more orders from the Navy, "which would materialise in a month's time," he said.
Analysing queries
GRSE is executing orders valuing Rs 5000 crore. Last week, it presented a dividend of 40 per cent to the Defence Minister, he said.
Now the foreign navies are approaching the yard with their orders. Enquiries for frigates and Fast Attack Craft are coming from Sri Lanka, ASEAN members and few African countries.
"We are analysing their queries regarding how to meet the orders. We want to work on it. After completing our analysis, we have to bid for it in the global market and get the order," Ganeshan said.
According to Admiral Superintendent Naval Dockyard Rear Admiral B K Kaul, this is the first step towards the Navy's goal of attaining complete indigenisation within next 15 years.
(PTI)
http://www.ndtv.com/morenews/showmorestory...arship&id=80706
|
|
|
| மாத்ருபூமி |
|
Posted by: AJeevan - 10-30-2005, 08:29 PM - Forum: குறும்படங்கள்
- Replies (16)
|
 |
<img src='http://img.photobucket.com/albums/v720/nivedha_1/matrubhoomipic.jpg' border='0' alt='user posted image'>
<b>மா(!)த்ருபூமி</b>
அது ஒரு நியூஸ் சேனல் செய்தித் தொகுப்பு. ஆஜ் தக் அல்லது என்டிடிவி... சரியாக நினைவில்லை. ஒரு மாலைநேர டீயோடு சேனல் மேய்ச்சலில் இருந்த போது கண்ணில் பட்டது. குத்த வைத்து அடுப்பில் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் வயது பஞ்சாபி பெண். முகம் மறைத்து முக்காடு போட்டிருந்தது. பக்கத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக நினைவு. அந்தப் பெண்ணை விட்டு அடுத்து கேமிரா நகர்ந்தது இரண்டு ஆண்களை நோக்கி. இரண்டு பேரும் கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களில் ஒருவர் சொன்னதிலிருந்து...
' எங்களுக்கு நாலு ஏக்கர் நிலம் தான் இருக்கிறது. நான் தான் பெரியவன். தம்பிக்கு கல்யாணம் செய்து இன்னொரு பெண் வந்து எங்கள் நிலத்தைப் பங்கு போடுவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் என் மனைவியே என் தம்பிக்கும் மனைவி '
'ஹே! என்ன சொல்றீங்க?' என்று கவனிக்க ஆரம்பித்தேன். இதே போல இன்னும் சில குடும்பங்களைக் காட்டி, பஞ்சாபில் நிலம் துண்டு படுவதைத் தவிர்க்க இப்படி ஒரு வழக்கமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போனார் நிருபர். இது ஒன்றும் புது கதையல்ல என்று இருபத்தி ஏழு வருடங்களாக மூன்று சகோதரர்களுக்கு மனைவியாயிருக்கும் ஒரு பெண்மணி ஆச்சர்யம் தந்தார். இந்த ஏற்பாட்டிற்கு ஒத்துக் கொள்ளா¾தால் எழுபத்து சொச்சம் வயதிலும் திருமணமாகாத இரண்டு ஆண்களோடு ஒரு குடும்பமும் செய்தியில் தலை காட்டியது.
தேவைகள்... அதற்கேற்றார் போல மாறும் கோட்பாடுகள். ஆச்சர்யமாகத்தான் இருந்தது. நிறைய யோசிக்க வைத்தது. கொஞ்சம் சிரிப்பும் வந்தது. சிரிப்பு... இன்றைக்கு இறுக்கி இறுக்கி பிடித்துக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு நாள் பிடியை உதறிவிட்டுப் போகத்தான் போகிறது என்பதை நினைத்தாயிருக்கும். அன்றைக்கே அதை எழுத முடியாமல் போய் விட்டது.
இன்று காலை கொஞ்ச நாளாக நேரம் வாய்க்காமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த 'மாத்ருபூமி' படம் பார்க்கப் போகும் போது, அது இதைத்தான் சொல்லப் போகிறது என்று நிச்சயம் நினைக்கவில்லை. போனிகபூரை இப்படி ஒரு படம் எடுக்க சம்மதிக்க வைத்த டைரக்டரை பாராட்ட வேண்டும்.
<img src='http://123india.net/images/Matrubhoomi/matrubhoomi1.jpg' border='0' alt='user posted image'>
தழும்ப தழும்ப பால் நிறைத்த ஒரு அண்டாவில் அப்பாவால் மூழ்கடித்துக் கொல்லப்படும் ஒரு பெண் சிசுவோடு படம் தொடங்குகிறது. பெண்களே இல்லாமல் போகும் ஒரு சமூகத்தில் ஆண்களின் தவிப்பு, வெளிப்படும் மூர்க்கம், தேடும் வடிகால்கள்... எவ்வளவு தூரம் இது கொண்டு போகும் என்று சொன்னது எதுவும் மிகையாகத் தெரியவில்லை. ஐந்து மகன்கள், அப்பா, ஒரு சமையல்காரச் சிறுவன் இந்தக் குடும்பத்திலிருந்து கதை தொடங்குகிறது. ஆரம்பத்தில் சொன்ன செய்திக் குறிப்பு தான் படம். அத்தனை அவலங்களையும் சொல்லிப் போகிறது. சேச்சே இவ்வளவு மோசமாகவெல்லாம் ஒன்னும் ஆகாது என்று மறுக்க முடியவில்லை. இன்றைக்கும் இப்படி கிராமங்கள் இருக்கத்தான் செய்கிறது. இனிமேலும்.
ஏன் இந்தப் படம் பற்றி சத்தமேயில்லை? முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களை மூடிக் கொள்வது உத்தமமாக பட்டதோ?
-Thanks: Nirmala
<img src='http://www.matrubhoomithefilm.com/images/main.jpg' border='0' alt='user posted image'>
அண்மையில் சுவிஸ் தொலைக்காட்சியின் இரவுக் காட்சியில் மாத்ருபூமி ஒளிபரப்பாகி பார்த்த போது இதுபற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.
மேலதிக விபரங்கள் இல்லாமையால் விட்டு விட்டேன்.
தற்செயலாக நிர்மலாவின் கட்டுரையை பார்த்ததும் இங்கே இணைக்கத் தோன்றியது.
http://www.matrubhoomithefilm.com/
|
|
|
| தமிழர்களுக்கு மானக்கேடான தீபாவளிப் பண்டிகை |
|
Posted by: வதனா - 10-30-2005, 08:11 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (8)
|
 |
தமிழர்களுக்கு மானக்கேடானதுமான பண்டிகை தீபாவளிப் பண்டிகையாகும். தமிழனைஆரியன் அடக்கி யாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் கடவுளின் கொலைகாரத்தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டியதே இக்கட்டுரை)
தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும். நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன் ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன் ஆகையால் தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான். ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதை தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா? கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமாகும்.
ஏசுநாதர்
ஏசுநாதர் கிறிஸ்துவ மதத்தை உண்டாக்கியவர். இவரைப் பற்றிய கதை என்ன சொல்லுகிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.
முகமது நபி
இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப்பற்றிய கதை.
கொலைகாரன்
ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணனைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை சகடாசூரன் திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.
கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.
கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயைப் பிளந்து கொன்றான்.
மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்!
மாட்டுருக் கொண்டு வந்த அரிஷ்டனின் கொம்பைப் பிடுங்கிக் கொன்றான்!
குதிரையுருக்கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.
வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.
கம்சன் வீட்டு வண்ணானைக் கொன்றான்.
கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.
மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.
சுபலன் கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்!
தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளிச் கொன்றான்!
பஞ்சகன் என்பவனை கடலில் சென்று கொன்றான்!
சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்!
முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்!
நரகாசுரனைக் கொன்றான்
வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணனையும் கொன்றான்.
சாளுவனைக் கொன்றான்! சிசுபாலனைக் கொன்றான்!
துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!
இவ்வளவுதான் இவனது படு கொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுண்டு! இங்கு எழுத இடமில்லை.
இப்பேர்ப்பட்ட கொலை காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவன் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற உயர் கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைகாரக் கிருஷ்ணன் கதையை புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.
ஒழுக்கமற்றவன்
கிருஷ்ணன் கொலைகாரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன் (?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில்
குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின்மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்து கண் குளிரப் பார்த்தான்!
ராதை, ருக்மணி, சத்தியபாமை சாம்பவதி, காளிந்தி, மித்திரவிந்தை, சத்தியவதி பத்திரை, லட்சுமணை, நப்பின்னை சோபை பிரமை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான். பிறகு சில்லறையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டுவந்த 16,000 பெண்களையும் மணந்து கொண்டான். இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக்கன்னிகைகளையும் மணந்து கொண்டான். இவர்களைத்தவிர பல்லாயிரக்கணக்கான கோபி காஸ்திரீகளுடன் லீலைகள் புரிந்தான்.
கொலையும் விபசாரமும் மட்டுமல்ல! கொலை செய்யவும் தூண்டினான். கீதையின் மூலமாக! கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம் அப்படியானால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா?
கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?
உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வவல்லமைக்கு தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா? பிறமதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும் பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காரித்துப்ப மாட்டார்களா? கடவுள் என்றால் கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாலாமா?
சிந்திக்கவும்
ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலை முழுகுங்கள்! இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப் படத்தானே லட்சக்கணக்கான மக்கள் பிறர் தங்களைத் தழுவியிருக்கிறார்கள். ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைகாரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா? கண்டிப்பாய் கூடாது.
சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! திராவிடர்களே!
|
|
|
| இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? |
|
Posted by: shanmuhi - 10-30-2005, 06:40 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (39)
|
 |
<b>இலங்கையர் ஒருவரை இனங்காண்பது எப்படி? </b>
இலங்கையரை எவ்வாறு இனங்காண்பது என்ற தலைப்புடன் இலங்கையர் அல்லாதவருக்கு முன் செலுத்த வேண்டாம் என்ற வேண்டுகோளோட எனக்கு வந்த முன்செலுத்தப்பட்ட மடல் (இந்தத் சொல்லுக்காக சிகிரிக்கு நன்றி) ஒன்றிலிருந்து...
இலங்கையர்கள்:
1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள்.
2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள்.
3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள்.
4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள்.
5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள்.
6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகளை கவனமாக பிய்த்து எடுத்து வைப்பார்கள்.
7)குளியலறையில கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஒரு பிளாஸ்ரிக் பாத்திரம் ஒன்று இருக்கும்.
8)தன் பிள்ளைகளுக்கு ஒரே உச்சரிப்போட(rhythm) கூடின மாதிரியான பெயர்களை வைப்பார்கள். (உதாரணத்துக்கு சுரேஸ், ரமேஷ், தினேஸ்)
9)பிள்ளைகளினது உண்மையான பெயர்களுக்கு சம்பந்தமில்லாமல் செல்லப் பெயர் ஒன்று வைத்துக் கூப்பிடுவார்கள்.
10) "இங்கு உணவு, நீர் அனுமதிக்கப்படாது" என்று பெயர்ப்பலகை மாட்டப்பட்ட இடங்களுக்கும் நொறுக்குத் தீனிகளை எடுத்துச் செல்வார்கள்.
11)வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விடை பெறும்போது வாசலில் வைத்து மணித்தியாலக் கணக்காக கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
12)காரில் எவ்வளவு பேரை ஏற்ற முடியுமோ அவ்வளவு பேரை ஏற்றி செல்வார்.
13)புதிதாக வாங்கிய பொருட்களை (remote control, VCR, carpet or new couch.) பிளாஸ்ரிக் கவரால மூடி கவனமாக வைத்திருப்பார்கள்.
14)தன் பிள்ளைகளிடம் நண்பர்கள் சொல்வதைக் கவனத்திற் கொள்ள வேண்டாமென்று சொல்லும் பெற்றோர்கள்; மற்ற "Uncles And Aunties" என்ன நினைப்பார்களோ என்பதற்காக பிள்ளைகளைச் சில விஷயங்களைச் செய்ய விட மாட்டார்கள். ;
15) Rice cooker வைத்திருப்பது முக்கியமானது.
16)நாப்பது வயதானால் கூட தங்கள் பெற்றோருடனேயே வசிப்பார்கள். பெற்றோரும் அதையே விரும்புவார்கள்.
17)தங்கட மகளாக இல்லாட்டா யாருடைய மகள் யாருடைய மகனோட ஓடினது என்பதைத் தெரிஞ்சிருக்க விருப்பம் காட்டுவதோட அதை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தம் கடமையாக நினைப்பார்கள்.
18)தொலைதூர அழைப்புகளை இரவு 9 மணிக்கப் பிறகே (Off-peak hours)
எடுப்பார்கள்.
19)பெற்றோருடன் வீட்டில் இல்லாமல் வேறு இடத்தில் வசித்தால், பெற்றோர் தொலைபேசியில் கதைக்கும் போது அது நடுச்சாமமாக இருந்தாலும் சாப்பிட்டாயிற்றா எனக் கேட்க மறக்க மாட்டார்கள்.
20)இலங்கையர் ஒருத்தரை சந்தித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் எந்த ஒரு வகையிலோ அவர்கள் தம் உறவினர் என கண்டுபிடித்து விடுவார்கள்.
21)வெளிநாட்டில் உள்ளவர்களோடு தொலைபேசியில் பேசும் பெற்றோர்கள் அவர்களுக்கு கேட்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கத்திக் கதைப்பார்கள்.
22)சோபாவில் அழுக்குப்படாமல் இருப்பதற்கு பெட்சீற்ஸ் போட்டு வைத்திருப்பார்கள்.. அதே நேரம் அவர்களது பெட்ல இருக்கிற சீட்ல (sheet) தண்ணீர் பட்டு மாதக்கணக்காக இருக்கும்.
23)திருமண வைபவத்தில் 600 பேருக்குக் குறைவாக வந்திருந்தால் சங்கடமாக உணர்வார்கள்.
24)திருமணப் பேச்சின் போது தங்கள் பெண் உண்மையாக எப்படி இருந்தாலும் மெல்லிய அழகான பெண் என்றே சொல்லுவார்கள்
25)எப்பொழுதுமே மற்றவர்களுடைய சொந்த விஷயங்களில் மூக்கை நுழைப்பதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் எங்கே போகிறார்கள் என்பதை அறிவதற்கு விருப்பம் காட்டுவார்கள்.
இதை வாசிக்கும் உங்களுக்கு இதில் பல பொருந்துகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு இலங்கையர் ( + தமிழரென்று சொல்லலாமெனவே நான் நினைக்கிறேன்) என்பதில் சந்தேகமே இல்லை.
http://paavaioruthi.blogspot.com/2005/10/b...og-post_30.html
|
|
|
| யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 |
|
Posted by: Birundan - 10-30-2005, 05:59 PM - Forum: தமிழீழம்
- Replies (3)
|
 |
1995 , ஒக்ரோபர்,30
மிகச்சரியாக இன்றைக்கு பத்து வருடங்களின் முன்..
அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.
யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.
காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.
<img src='http://img97.imageshack.us/img97/2513/ph15nm.jpg' border='0' alt='user posted image'>
இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.
8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.
<img src='http://img97.imageshack.us/img97/428/ph31hs.jpg' border='0' alt='user posted image'>
இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.
அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.
தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் - உலகம் என்ற ஒன்று பார்த்து 'உச்' மட்டும் கொட்டியது.
அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.
24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.
காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.
ஆனால் அன்று புரிந்தது.
குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள்.
நன்றி>சாரல்
|
|
|
| ஜனாதிபதி வேட்பாளர்களின் மீது அதிகரித்துள்ள பாதுகாப்பு அக்கறை |
|
Posted by: cannon - 10-30-2005, 05:02 PM - Forum: தமிழீழம்
- No Replies
|
 |
* தேசிய பாதுகாப்புச் சபையின் ஆலோசனை பெறப்பட்டே பிரசார நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பு மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது.
1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு பாலத்துறையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸா நாயக்க கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மேலும் 30 பேர் கொல்லப்பட்டனர்.
பிரசாரக்கூட்ட மேடையிலிருந்த காமினி திஸாநாயக்காவை கூட்டத்தில் முன்வரிசையிலிருந்த இளம் யுவதியொருவர் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்து கொலை செய்தார்.
காமினி திஸாநாயக்காவை நெருங்கிச் செல்லும் வாய்ப்பு குறைவென்பதால், சற்று தூரத்திலுள்ள மேடையிலிருக்கும் காமினியை கொல்ல தற்கொலைக் குண்டுதாரி மிகவும் சக்திமிக்க வெடிகுண்டைப் பயன்படுத்தியதால் உயிரிழப்பு அதிகமாயிருந்தது.
இதன் பின் 1999 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் வேட்பாளர் சந்திரிகா குமாரதுங்க, தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் இலக்கு வைக்கப்பட்டார்.
அந்தத் தாக்குதலையும் பெண் தற்கொலைக் குண்டுதாரியே நடத்தினார். இழப்புக்களை பெருமளவில் குறைக்கவும், இலக்கை மட்டும் தாக்கும் நோக்கிலேயே இந்தத் தற்கொலைக் குண்டுதாரி செயற்பட்ட போதும் அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி சந்திரிகா காயங்களுடன் தப்பினார்.
ஜனாதிபதி சந்திரிகா மீதான தாக்குதலுக்கு, குறிப்பிட்ட இடைவெளியில் (மிக நெருக்கமாக) இலக்கை கடுமையாகத் தாக்கும் விதத்திலேயே தற்கொலைக் குண்டுதாரி வெடி மருந்தின் அளவைப் பயன்படுத்தியிருந்தார். ஜனாதிபதி சந்திரிகா கூட்ட மேடையிலிருந்து இறங்கி தனது காரில் புறப்படும் இடைவெளியைப் பயன்படுத்தி அவரை நெருங்கிச் சென்று தாக்குவதே குண்டுதாரியின் நோக்காக இருந்த போதும் அவரை நெருங்கிச் செல்ல முடியாத சூழ்நிலையில் குண்டுதாரி தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை வெடிக்கவைக்க, கண்ணில் படுகாயத்துடன் ஜனாதிபதி தப்பினார்.
இந்தச் சூழ்நிலையிலேயே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரு ஜனாதிபதித் தேர்தலும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடந்தது. இம்முறை யுத்தநிறுத்த காலத்தில் நடைபெறுவதால் கடந்த காலங்களிலிருந்த பாதுகாப்பு அச்சுறுத்தலளவிற்கு இம்முறை பாதுகாப்பு அச்சுறுத்தலிருக்க மாட்டாதென பாதுகாப்பு தரப்பு கருதினாலும் அமைச்சர் கதிர்காமரின் கொலையானது அந்த நினைப்பை இல்லாது செய்துவிட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறுகிறது.
இந்தத் தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், கடும் போட்டிக்குரியவர்கள் இருவரே. ஏனையோர் வெற்றிக்கு சமீபமாகக் கூட நெருங்க முடியாதவர்களென்பதால் பிரதான கட்சிகளினது இரு வேட்பாளர்களதும் பாதுகாப்பு குறித்தே முழுக் கவனமும் செலுத்தப்படுகிறது.
இருவரதும் பாதுகாப்பு குறித்தும் பாதுகாப்பு தரப்பு சம்பந்தப்பட்டவர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையமொன்றையும் ஏற்படுத்தி அவர்களுக்கு பலத்த பாதுகாப்பையும் வழங்கி வருகிறது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. சிறுபான்மை கட்சிகள் பலவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறைந்தவர் இவரெனக் கருதப்படுகிறது.
மிக மோசமான இனவாதிகளின் ஆதரவுடன் மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கியுள்ளதால் இவரை இலக்கு வைக்கும் வாய்ப்பு அதிகமாயிருக்குமெனவும் இவரது பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் அதிகமெனவும் படைத்தரப்பு கருதுகிறது. இதனால், இவரது பாதுகாப்பு விடயத்தில் படைத்தரப்பு கூடிய கவனம் செலுத்துகிறது.
இருவரது பாதுகாப்பு குறித்தும் தேசிய பாதுகாப்புச் சபையில் ஆராயப்பட்டு இவர்களது பாதுகாப்பை விஷேடமாகக் கவனிப்பதற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். சோலங்காராச்சி தலைமையில் விஷேட கமாண்டோ படையணிகளும் விஷேட அதிரடிப்படையும் சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸாரும் பாதுகாப்பு விடயங்களை கையாளுகின்றனர்.
முக்கிய இரு வேட்பாளர்களதும் பயண ஒழுங்குகள் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் பற்றிய முழு விபரமும் முன்கூட்டியே இவர்களிடம் கையளிக்கப்படுகிறது. கூட்டத்திற்கு முன் சம்பந்தப்பட்ட பகுதியின் பாதுகாப்பு நிலைமைகளை முழுமையாக ஆராயும் இந்தப் படையணிகள், கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பே கூட்டம் நடைபெறும் பகுதியை முற்றுகையிடுகிறது. மேடை அமைப்பு முதல் பார்வையாளர் வருகை வரையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இவர்கள் அக்குவேறு ஆணி வேறாக ஆராய்கின்றனர்.
இவர்களது அறிவுறுத்தல்களுக்கமையவே மேடை அமைப்பு முதற்கொண்டு மேடையில் வைக்கப்படும் ஒலிவாங்கிகள் வரையான அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. கூட்ட ஏற்பாட்டாளர்கள் இவர்களது அறிவுறுத்தல்களை பூரணமாக அமுல்படுத்தாவிட்டால் கூட்டங்கள் ரத்துச் செய்யப்படும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுகிறது.
தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டதாகவே இந்தப் படையணிகள் செயற்படுவதால் பிரதான இரு வேட்பாளர்களும் இந்தப் படையணியின் அறிவுறுத்தல்களை பூரணமாகவே கடைப்பிடிக்கின்றனர். வேட்பாளர்களுக்கு நெருங்கியவர்களின் ஆலோசனைகளை விட பாதுகாப்பு தரப்பினரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்குமாறும் பிரதான வேட்பாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளைப் பொறுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளில் சற்று தளர்வுத் தன்மைகள் காட்டப்பட்டாலும் கூட்டம் நடைபெறும் இடங்கள் பல அடுக்கு பாதுகாப்பு வலையமைப்புக்குள் உட்படுத்தப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடம் தெரிவு செய்யப்பட்டதும், அப்பகுதியெங்கும், மோப்ப நாய்கள் சல்லடை போட்டு வெடி குண்டுகளைத் தேடும். எதுவுமில்லையென அவை தலையாட்டிய பின்பே மேடை அமைப்புக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்காக பெல்ஜியத்திலிருந்து, விஷேட பயிற்சிபெற்ற 55 மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பெரும் கூடுகள் அமைக்கப்பட்ட விஷேட வாகனங்களில் இந்த மோப்ப நாய்கள் இடத்திற்கு இடம் கொண்டு செல்லப்படுகின்றன. கூட்டம் நடைபெறும் போதும் அப்பகுதியில் நாலா புறங்களிலும் இவை தயார் நிலையில் வைக்கப்பட்டு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், உடைமைகள் சோதனையிடப்படுகின்றன.
இதேநேரம், கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியும் கூட்டத்திற்கு நடுவிலும் கூட்ட மேடையைச் சுற்றியும் தயார் நிலையில் விஷேட கமாண்டோ படையினர் நிறுத்தப்படுவர். இந்த வளைய அமைப்பில் சிவில் உடையிலும் கமாண்டோ படைகள் நிறுத்தப்படுவர். எந்த நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் செயற்படும் வகையில் இவர்களுக்கு விஷேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மிக மிக முக்கிய தலைவர்களின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள `கறுப்பு பூனைகள்' (Black Cats) படையணியின் பயிற்சியைப் பெற்றவர்களே இலங்கையில் இம்முறை விஷேட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேரடி உத்தரவுகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சோலங்காராச்சி பிறப்பித்து வருகிறார்.
சிறந்த தேகாரோக்கியம், உடனடியாக விழிப்புடன் செயற்படக்கூடிய நிலை, கண்ணிமைப்பொழுதில் ஆயுதங்களைக் கையாழும் திறமைமிக்கவர்களே முக்கிய அரசியல் தலைவர்களின் பாதுகாப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் சோலங்காராச்சி, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒன்றரை செக்கனுக்குள் இலக்கை நோக்கி சுடும் திறன் கொண்டவர்களாக எனது படையணி இருக்க வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாயிருப்பதாகவும் கூறினார்.
இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நாலா திசையிலிருந்தும் வீடியோ படமெடுத்து (Close Up) அவை மிக நுணுக்கமாக ஆராயப்படுகிறது. கூட்டத்திற்கு இடையில் எவராவது சந்தேகத்திற்கிடமாக நடமாடுகின்றனரா, வேட்பாளர்களை அல்லது முக்கிய தலைவர்களை எவராவது பின் தொடர்கின்றாரா என்பதெல்லாம் அவதானிக்கப்பட்டு துரித உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
1994 இல் காமினி திஸநாயக்கா கொல்லப்படுவதற்கு முன்னர் தற்கொலைக் குண்டுதாரி அவரை பல கூட்டங்களில் பின்தொடர்ந்ததை சுட்டிக்காட்டும் சோலங்காராச்சி, பாதுகாப்பென்று வரும் போது வேறு எந்தச் சோதனையையும் விட, ஒருவரை கைகளால் உடற்பரிசோதனைக்குட்படுத்துவதுபோன்ற சிறந்த சோதனை வேறொன்றுமில்லையெனவும் கூறுகின்றார்.
பிரதமர் மஹிந்த தான் செல்லும் கூட்டங்களில் உரையாற்றும் போது, குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்றே பேசுகிறார். ஆனால், கூட்டம் தொடங்கி அவர் பேசும்வரையும், அவர் பேசிய பின் மற்றவர்கள் பேசி முடியும் வரையும் அந்தக் குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் அவர் இருப்பதில்லை. திறந்த மேடையிலேயே நீண்ட நேரம் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு புலிகளால் பேராபத்து இருப்பதாக அவரைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து பிரசாரம் செய்கின்றனர். புலிகளுடன் ரணில் விக்கிரமசிங்கவையும் தொடர்புபடுத்தி பிரசாரம் செய்கின்றனர். குண்டுதுளைக்காத கண்ணாடிக் கூண்டு உரையும், பிரதமருக்கு பெரும் ஆபத்துள்ளதாக மக்களுக்கு காண்பிக்கும் பிரசார உத்தியெனவும் ஐ.தே.க. கூறுகின்றது.
இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தவின் பாதுகாப்பை அவரது சகோதரர்கள், குடும்ப விவகாரமாகவே பார்க்கின்றனர். இதனால், முன்னாள் படை அதிகாரியான மகிந்தவின் சகோதரர் கோத்தபய அமெரிக்காவிலிருந்து வருகை தந்து மகிந்தவின் பாதுகாப்பு விவகாரங்களை தானும் கையாள்கிறார்.
திருகோணமலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தில் பேனைத் துப்பாக்கியுடன் நடமாடிய இளைஞரொருவரை அவரது பாதுகாப்பு பிரிவினர் கண்டுபிடித்ததாக கூறப்பட்டது. அந்தப் பேனைத் துப்பாக்கியுடன் வந்தவர் சிங்கள இளைஞரே எனவும் கூறப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலிருக்கிறதென்பதை காட்டும் அதேநேரம் அது சிறுபான்மையினத்தவர்களால் ஏற்படுவதாகக் காண்பிக்கக் கூடாதென்பதும் ஐ.தே.க.வின் தந்திரமெனக் கூறப்படுகிறது.
இல்லையேல் பிடிபடாத அந்த இளைஞர் சிங்களவர் தானென்று இவர்களால் எப்படிக் கூற முடியும். தமிழர் ஒருவர் தான் துப்பாக்கியுடன் வந்தாரென்றால் அது தமிழர்களது வாக்குகளை கிடைக்காது செய்து விடுமென்பதும் இதன் நோக்கமாயிருக்கலாமெனவும் கூறப்பட்டது.
இதேநேரம், பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவை பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். ரணிலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விடுதலைப்புலிகளாலும் கருணா குழுவாலேயுமே இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களை குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தெற்கில் தினமும் தமிழ் இளைஞர், யுவதிகள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. பிரதமரது கூட்டம் நடைபெறுவதற்கு முன் அல்லது ரணிலின் கூட்டம் நடைபெறுவதற்கு முன் அந்தப் பகுதியில் நடமாடினார்களெனக் கூறியே தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தினமும் கைது செய்யப்படுகின்றனர். அப்பாவி இளைஞர் யுவதிகளைக் கைதுசெய்து அரசியல் தலைவர்களுக்கு தமிழர்களால் ஆபத்துள்ளதாக ஒரு மாயையை ஏற்படுத்தும் நோக்கமே இதுவாகும்.
தென்பகுதியில் இதுவரை காலமும் அரசியல் கொலைகள் எதுவுமே நடைபெறவில்லை என்பது போன்றும் தமிழர்கள் தான் சிங்களத் தலைவர்களைக் கொல்வது போன்றுமொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும். இதனால், தென்பகுதியில் தமிழர்கள் தினமும் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளது.
இதைவிட, இம்முறை தேர்தலில் வடக்கு - கிழக்கு வாக்குகளே வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவுள்ளதால் அப்பகுதியில் நிலைமைகளை மோசமடையச் செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கிழக்கில் தேர்தலைக் குழப்ப கருணாகுழு முயற்சிப்பதாக இராணுவ தரப்பு கூறுகிறது. தமிழர்கள் இம்முறை ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் கிழக்கில் மோசடிகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. கருணா குழுவின் பெயரால் இந்த மோசடிகளை மேற்கொள்ள படைத்தரப்பு திட்டமிட்டுள்ளதாக புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கருணா குழுவின் பெயரால் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதும் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதும் வழமையாகிவிட்டன. இவையெல்லாம் இரவு நேரங்களிலேயே நடைபெறுகிறது. கருணா குழுவின் பலம் என்ன என்பதை இன்று கிழக்கு மக்கள் நன்கறிவரென்பதால் இதன் பின்னணியிலிருப்பவர்களையும் மக்கள் நன்கு தெரிந்தே வைத்துள்ளனர்.
நாட்டில் இம்முறை தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கும் சூழல் உள்ள நிலையில் வடக்கு - கிழக்கில் மஹிந்தவுக்கு பெருமளவு வாக்குகளைக் குவிக்க திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்த் தரப்பு சுட்டிக்காட்டுகிறது. சர்வதேச கண்காணிப்புக்குழுவை வடக்கு - கிழக்கிற்கு அனுப்புமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் மக்கள் தேர்தலை பகிஷ்கரித்தால் அந்தப் பகுதியில் போடப்படும் வாக்குகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்காணிப்பது அவசியம் தான்.
http://www.thinakural.com/New%20web%20site...30/vithuran.htm
|
|
|
|