Yarl Forum
நெருப்பெரிந்த நிலம்....................... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நெருப்பெரிந்த நிலம்....................... (/showthread.php?tid=2696)



நெருப்பெரிந்த நிலம்....................... - kpriyan - 10-30-2005

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சு,
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்,
திட்டுத்திட்டாய் படர்ந்து..
எனக்குள் நீ இன்னமும் இருக்கிறாய் என்று,
தொட்டு சொல்கின்றன.............
நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....


- இவோன் - 10-30-2005

Quote:நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....

வெட்டியெறிஞ்ச மரம் இத்தனைக்கும் பட்டுப்போயிருக்கும். இனி திருப்பி நட்டாலும் பிரயோசனம் இல்லை.
பேசாமல் வேறை ஒரு மரத்தை நடப்பாரும். நட்டால் மட்டும் போதாது.. ஒழுங்கா தண்ணியும் ஊற்ற வேணும்..


- kuruvikal - 10-30-2005

வரிகள் எங்கும் சோகம்...என்ன நடந்தது கவிப்பிரியனுக்கு...சோகம் தான் கவிதை எழுத வைக்குதோ...??! சரி...அதுவே ஆறுதலும் ஆகட்டும்..! :wink: Idea


- shanmuhi - 10-30-2005

நெருப்பெரிந்த நிலமாய் கிடக்கிறது நெஞ்சுஇ
பட்டுப்போகாத உன் பசுமை நினைவுகள் மட்டும்

அருமை வரிகள்...


- lollu Thamilichee - 10-30-2005

இவோன் Wrote:
Quote:நீ வெட்டியெறிந்த வேரின் ஓரத்தில் சொட்டுகிறது இரத்தம்,
மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்.....

வெட்டியெறிஞ்ச மரம் இத்தனைக்கும் பட்டுப்போயிருக்கும். இனி திருப்பி நட்டாலும் பிரயோசனம் இல்லை.
பேசாமல் வேறை ஒரு மரத்தை நடப்பாரும். நட்டால் மட்டும் போதாது.. ஒழுங்கா தண்ணியும் ஊற்ற வேணும்..

எவன் சொன்னது வெட்டிப்போன மரம் பட்டுப்போய்
இருக்கும் என்று ???

அதுதான் அவர் சொல்ரார் எல்லோ
"மீண்டும் நட்டுவைப்பாய் என்ற நம்பிக்கையில்
நான்....."

பிறகு என்ன தோழரே ???

அதை அவர் மீண்டும் நடுவார் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--><!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- jeya - 10-30-2005

அதுதானே


- வெண்ணிலா - 10-31-2005

மீண்டும் நட்டு வைப்பாள் என்ற நம்பிக்கை வீணாகாமல் போக வாழ்த்துக்கள். சோக கவிதை வரிகள் எனக்கும் ரொம்ப பிடித்திருக்கு . நன்றிங்கோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வியாசன் - 10-31-2005

வெட்டியெறிந்துவிட்டவள் திரும்பவும் நடலாம். நண்பரே
ஆனால் மீண்டும் வெட்டமாட்டாள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. திரும்பவும் இப்படி கவிதை எழுதவேண்டி வரலாம். எதற்கும் வேறு ஒருத்தியை மரம் நடச்சொல்லும்.

கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.


- Rasikai - 10-31-2005

கவி அருமை கவிப்பிரியன்.

இவோன் வெட்டிய மரமெல்லாம் பட்டதில்லை.