2 weeks 1 day ago
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு எஸ்.ஆர்.லெம்பேட் இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான N.கெஸ்ரோன் , K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது. இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் இம் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கு பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள். எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மன்னார்-வீரர்கள்-இருவர்-தேசிய-உதைபந்தாட்ட-அணிக்கு-தெரிவு/44-363894
2 weeks 1 day ago
மன்னார் வீரர்கள் இருவர், தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு

எஸ்.ஆர்.லெம்பேட்
இலங்கை 16 வயது கீழ் உதைபந்தாட்ட தேசிய அணியில் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடைபெற்ற தேர்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் தெரிவாகி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான N.கெஸ்ரோன் , K.ஜெனிஸ்ரன் ஆகியோர் குறித்த தெரிவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
குறித்த இரு மாணவர்களும் கலந்து கொள்ளும் முதலாவது சர்வதேச உதைபந்தாட்ட போட்டியானது சீனாவில் இம் மாதம் 20ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப் போட்டி “ U16 Tainyu Liufang Cup – 2025” ற்கான போட்டியாகும். இதற்கான மேலதிக பயிற்சிகள் இம் மாதம் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் நடைபெறவுள்ளது.
இம்மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வியை மேற்கொள்கின்றார்கள் என்பதன் அடிப்படையில் குறித்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உங்கள் உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
இம் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்கான செலவையும், அவர்கள் சீனாவில் இருக்கும் போது ஏற்பட உள்ள மேலதிக செலவையும் தாங்கிக் கொள்வதற்கு பண வசதி இல்லாத சூழ்நிலையில் தற்போது இருக்கிறார்கள்.
எனவே இம் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட அணியில் ஒருவராக விளையாடுவதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.


https://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/மன்னார்-வீரர்கள்-இருவர்-தேசிய-உதைபந்தாட்ட-அணிக்கு-தெரிவு/44-363894
2 weeks 1 day ago
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர். புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை. விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. ஆனால், படையினருக்கு அமைத்தால் அதை இனவாதமாக காட்ட முற்படுகின்றனர். முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார். இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகிறது. எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_தோற்கடிக்கப்படவில்லை_-_நாமல்_தெரிவிப்பு!
2 weeks 1 day ago
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படவில்லை - நாமல் தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது என்றும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் , இந்நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி வாழ்வதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திய படையினர் மீண்டும் வேட்டையாடப்படுகின்றனர்.
புலிகள் அமைப்பு கட்டமைப்பு ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும் அதன் பிரிவினைவாத கருத்தியல் இன்னும் முடியவில்லை.
விடுதலைப் புலிகளுக்காக சர்வதேசத்தில் நினைவகம் அமைக்கப்படுகின்றது. ஆனால், படையினருக்கு அமைத்தால் அதை இனவாதமாக காட்ட முற்படுகின்றனர்.
முன்னாள் கடற்படை தளபதி ஒருவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். அடையாள அணிவகுப்பில் புலி உறுப்பினர் ஒருவரே சாட்சியமளித்துள்ளார்.
இப்படியான நிலை வருமென அந்த கடற்படை தளபதி நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். இப்படியான நிலைமையே இங்கு நிலவுகிறது.
எமது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படையினரை நாம் காக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
https://newuthayan.com/article/விடுதலைப்_புலிகள்_தோற்கடிக்கப்படவில்லை_-_நாமல்_தெரிவிப்பு!
2 weeks 1 day ago
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை! முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது. பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 2005 முதல் 2009வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட ஐவருக்கு எதிரான தடை விதித்திருந்தது. https://newuthayan.com/article/முன்னாள்_கடற்படைத்_தளபதி_வசந்த_கரன்னாகொடவின்_புத்தகத்துக்கு_தடை!
2 weeks 1 day ago
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் புத்தகத்துக்கு தடை!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எழுதிய சுயசரிதை புத்தகம், பிரித்தானியாவில் Amazon விற்பனை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் எனும் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கரன்னாகொடவின் புத்தக விற்பனை பிரித்தானிய தடை சட்டங்களை மீறும் எனவும், தடைக்குட்பட்ட ஒருவருக்கு காப்புரிமை உள்ளிட்ட வளங்களை வழங்குவது குற்றமாக கருதப்படும் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Amazonக்கு அறிவித்திருந்தது.
பிரித்தானிய சட்டத்தின்படி, இத்தகைய மீறலுக்காக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். Amazon பிரிட்டன் கிளை, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
2005 முதல் 2009வரை உள்நாட்டுப் போரின் இறுதி கட்டத்தில் கடற்படைத் தளபதியாக பணியாற்றிய கரன்னாகொட மீது, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம், பிரித்தானிய அரசு வசந்த கரன்னாகொட உட்பட ஐவருக்கு எதிரான தடை விதித்திருந்தது.
https://newuthayan.com/article/முன்னாள்_கடற்படைத்_தளபதி_வசந்த_கரன்னாகொடவின்_புத்தகத்துக்கு_தடை!
2 weeks 1 day ago
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/article/புலனாய்வு_அதிகாரிகளுக்கு_'தண்ணிகாட்டிய'_ஜனாதிபதி!
2 weeks 1 day ago
புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை.
இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது.
https://newuthayan.com/article/புலனாய்வு_அதிகாரிகளுக்கு_'தண்ணிகாட்டிய'_ஜனாதிபதி!
2 weeks 1 day ago
7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது! adminSeptember 2, 2025 இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவற்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219975/
2 weeks 1 day ago
7 மாதங்களில் இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!
adminSeptember 2, 2025

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவற்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவற்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://globaltamilnews.net/2025/219975/
2 weeks 1 day ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு! adminSeptember 2, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன்,வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2025/219965/
2 weeks 1 day ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு!
adminSeptember 2, 2025

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
யாழ். தாவடியில் அமைந்துள்ள அமரர் தர்மலிங்கத்தின் நினைவுத் தூபியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமரர் தர்மலிங்கத்தின் புதல்வருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன்,வவுனியா மாநகர சபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஸ், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
https://globaltamilnews.net/2025/219965/
2 weeks 1 day ago
ஒட்டுக் குழுத் தலைவன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு…. கடத்தி, கொன்று, புதைத்த இடங்கள் எல்லாம் விபரமாக தெரியும்.
2 weeks 1 day ago
யாழ், மண்டைதீவு விளையாட்டரங்கு அடிக்கல் நாட்டு விழாவில் தையிட்டி விகாராதிபதிக்கு அழைப்பு கொடுத்து, அவர் கலந்து கொண்டதாக வேறு செய்திகளில் உள்ளது. தையிட்டி விகாரை ஏற்கெனவே பிரச்சினை உள்ள நிலையில் அவரை அழைக்காமல்…. யாழ். விகாராதிபதியையோ, நயினாதீவு விகாராதிபதியையோ அழைத்திருக்கலாம் என்பது பலரது கருத்து. தையிட்டி விகாராதிபதிக்கு இந்த அங்கீகாரத்தை கொடுத்ததன் மூலம் அனுர அரசு தமிழ் மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன.
2 weeks 1 day ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Notes Very Slender Vessel 1 (class name lost in time) OBM (2) 1) 2) (craft name lost in time) 2 - Believed to have been used up in the Operation Unceasing Waves-1.
2 weeks 1 day ago
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Tritoon 1 (class name lost in time) OBM (1) 1-3) Bow: Stearn: 4) (craft name lost in time) At least 4 - Blue ones: SLN captured one after a failed attempt. 2 others were used up on this same mission to sink the MV Nimalawa and to damage the MERCS Ruhunu. - Ash: It was captured by SLA in the Mullivaikkal 2 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Tritoon - Under Construction 1 Not named IBM Not named Atleast 1
2 weeks 1 day ago
மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள். அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம். நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...
2 weeks 1 day ago
பிரிட்டிஷ் காலனித்துவம் 40 ஆண்டுகளில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றது எப்படி? 1880 முதல் 1920 வரை, இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்கைகள் சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா மற்றும் வட கொரியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களையும் விட அதிகமான உயிர்களைக் கொன்றன. டிலான் சல்லிவன் மற்றும் ஜேசன் ஹிக்கல் ஆகியோரால் மெக்குவாரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பள்ளியில் துணை உறுப்பினர். சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA-UAB) பேராசிரியர் மற்றும் ராயல் கலை சங்கத்தின் உறுப்பினர். 2 டிசம்பர் 2022 அன்று வெளியிடப்பட்டது2 டிச., 2022 பின்னர் படிக்க கட்டுரைகளைச் சேமித்து, உங்கள் சொந்த வாசிப்புப் பட்டியலை உருவாக்கவும். சமூக ஊடகங்களில் பகிர இங்கே கிளிக் செய்யவும் 1881-1920 காலகட்டத்தில் பிரிட்டனின் சுரண்டல் கொள்கைகள் சுமார் 100 மில்லியன் அதிகப்படியான இறப்புகளுடன் தொடர்புடையவை என்பதை எங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது, சல்லிவன் மற்றும் ஹிக்கல் [பிரிட்டிஷ் ராஜ் (1904-1906) / விக்கிமீடியா காமன்ஸ்] எழுதுங்கள். சமீபத்திய ஆண்டுகளில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் மீதான ஏக்கம் மீண்டும் எழுந்துள்ளது. நியால் பெர்குசனின் எம்பயர்: ஹவ் பிரிட்டன் மேட் தி மாடர்ன் வேர்ல்ட் மற்றும் புரூஸ் கில்லியின் தி லாஸ்ட் இம்பீரியல் போன்ற உயர்மட்ட புத்தகங்கள், பிரிட்டிஷ் காலனித்துவம் இந்தியாவிற்கும் பிற காலனிகளுக்கும் செழிப்பையும் வளர்ச்சியையும் கொண்டு வந்ததாகக் கூறியுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யூகோவ் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரிட்டனில் 32 சதவீத மக்கள் நாட்டின் காலனித்துவ வரலாற்றைப் பற்றி தீவிரமாகப் பெருமைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. காலனித்துவத்தின் இந்த இளஞ்சிவப்பு படம் வரலாற்று பதிவுகளுடன் வியத்தகு முறையில் முரண்படுகிறது. பொருளாதார வரலாற்றாசிரியர் ராபர்ட் சி ஆலனின் ஆராய்ச்சியின் படி, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியாவில் தீவிர வறுமை அதிகரித்தது, 1810 இல் 23 சதவீதத்திலிருந்து 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் உண்மையான ஊதியங்கள் குறைந்து, 19 ஆம் நூற்றாண்டில் ஒரு அதலபாதாளத்தை எட்டின, அதே நேரத்தில் பஞ்சங்கள் அடிக்கடி நிகழ்ந்தன மற்றும் மிகவும் ஆபத்தானவை. காலனித்துவம் இந்திய மக்களுக்கு பயனளிப்பதற்குப் பதிலாக, பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிகக் குறைந்த இணையான ஒரு மனித சோகமாகும். தங்கை கதைகள் 4 பொருட்களின் பட்டியல் பட்டியல் 1 / 4 100 கிலோமீட்டர்களைக் கடந்து, ஸ்ரெப்ரெனிகா இறந்தவர் ஓடிய இடத்தில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். 4 இல் 2 பட்டியல் இஸ்ரேல் மேற்கத்திய நாடுகளை எவ்வாறு வென்றது பட்டியல் 3 இல் 4 பிரிட்டனில் நரமாமிசம்? ஆரம்பகால வெண்கல யுக எலும்புகள் ஒரு கொடூரமான கதையை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன 4 இல் 4 பட்டியல் அல்ஜீரியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? பட்டியலின் முடிவு பிரிட்டனின் ஏகாதிபத்திய சக்தியின் உச்சமாக இருந்த 1880 முதல் 1920 வரையிலான காலம் இந்தியாவிற்கு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். 1880களில் தொடங்கி காலனித்துவ ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்புகள், இந்த காலகட்டத்தில் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்ததை வெளிப்படுத்துகின்றன, 1880களில் 1,000 பேருக்கு 37.2 இறப்புகளிலிருந்து 1910களில் 44.2 ஆக இருந்தது. ஆயுட்காலம் 26.7 ஆண்டுகளில் இருந்து 21.9 ஆண்டுகளாகக் குறைந்தது. உலக வளர்ச்சி இதழில் சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில் , இந்த நான்கு கொடூரமான தசாப்தங்களில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கொள்கைகளால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்தினோம். இந்தியாவில் இறப்பு விகிதங்கள் குறித்த வலுவான தரவு 1880களில் இருந்து மட்டுமே உள்ளது. இதை "சாதாரண" இறப்புக்கான அடிப்படையாகப் பயன்படுத்தினால், 1891 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் சுமார் 50 மில்லியன் அதிகப்படியான இறப்புகள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். ஐம்பது மில்லியன் இறப்புகள் என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை, ஆனால் இது ஒரு பழமைவாத மதிப்பீடாகும். 1880 வாக்கில், காலனித்துவ இந்தியாவில் வாழ்க்கைத் தரம் ஏற்கனவே முந்தைய நிலைகளிலிருந்து வியத்தகு முறையில் குறைந்துவிட்டதை உண்மையான ஊதியங்கள் பற்றிய தரவு சுட்டிக்காட்டுகிறது. காலனித்துவத்திற்கு முன்பு, இந்திய வாழ்க்கைத் தரம் "மேற்கு ஐரோப்பாவின் வளரும் பகுதிகளுக்கு இணையாக" இருந்திருக்கலாம் என்று ஆலன் மற்றும் பிற அறிஞர்கள் வாதிடுகின்றனர். இந்தியாவின் காலனித்துவத்திற்கு முந்தைய இறப்பு விகிதம் என்னவென்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் அது 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்தின் இறப்பு விகிதத்தைப் போலவே இருந்தது என்று நாம் கருதினால் (1,000 பேருக்கு 27.18 இறப்புகள்), 1881 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 165 மில்லியன் அதிகப்படியான இறப்புகள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இறப்புகளின் துல்லியமான எண்ணிக்கை, அடிப்படை இறப்பு குறித்து நாம் செய்யும் அனுமானங்களுக்கு உணர்திறன் கொண்டதாக இருந்தாலும், பிரிட்டிஷ் காலனித்துவத்தின் உச்சத்தில் 100 மில்லியன் மக்கள் அகால மரணம் அடைந்தனர் என்பது தெளிவாகிறது. இது மனித வரலாற்றில் மிகப்பெரிய கொள்கையால் தூண்டப்பட்ட இறப்பு நெருக்கடிகளில் ஒன்றாகும். இது சோவியத் யூனியன், மாவோயிஸ்ட் சீனா, வட கொரியா, போல் பாட் ஆட்சியின் கம்போடியா மற்றும் மெங்கிஸ்டு ஆட்சியின் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட அனைத்து பஞ்சங்களின் போதும் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகமாகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்த மிகப்பெரிய உயிரிழப்புக்கு எவ்வாறு காரணமாக அமைந்தது? பல வழிமுறைகள் இருந்தன. ஒன்று, பிரிட்டன் இந்தியாவின் உற்பத்தித் துறையை திறம்பட அழித்தது. காலனித்துவத்திற்கு முன்பு, இந்தியா உலகின் மிகப்பெரிய தொழில்துறை உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தது, உலகின் அனைத்து மூலைகளுக்கும் உயர்தர ஜவுளிகளை ஏற்றுமதி செய்தது. இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் துணி துணியால் போட்டியிட முடியவில்லை. இருப்பினும், 1757 இல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டபோது இது மாறத் தொடங்கியது. வரலாற்றாசிரியர் மதுஸ்ரீ முகர்ஜியின் கூற்றுப்படி, காலனித்துவ ஆட்சி நடைமுறையில் இந்திய வரிகளை நீக்கியது, பிரிட்டிஷ் பொருட்கள் உள்நாட்டு சந்தையில் வெள்ளம் பெருக்கெடுக்க அனுமதித்தது, ஆனால் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் துணியை விற்பனை செய்வதைத் தடுக்கும் அளவுக்கு அதிகமான வரிகள் மற்றும் உள்நாட்டு வரிகளின் முறையை உருவாக்கியது, அதை ஏற்றுமதி செய்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த சமமற்ற வர்த்தக ஆட்சி இந்திய உற்பத்தியாளர்களை நசுக்கி, நாட்டையே தொழில்மயமாக்கியது. கிழக்கிந்திய மற்றும் சீன சங்கத்தின் தலைவர் 1840 ஆம் ஆண்டு ஆங்கில நாடாளுமன்றத்தில் பெருமையாகக் கூறினார் : "இந்த நிறுவனம் இந்தியாவை ஒரு உற்பத்தி நாடிலிருந்து மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது." ஆங்கில உற்பத்தியாளர்கள் மிகப்பெரிய நன்மையைப் பெற்றனர், அதே நேரத்தில் இந்தியா வறுமையில் தள்ளப்பட்டது, அதன் மக்கள் பசி மற்றும் நோய்களுக்கு ஆளாக நேரிட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் ஒரு சட்டப்பூர்வ கொள்ளை முறையை நிறுவினர், இது சமகாலத்தவர்களுக்கு "செல்வத்தை வெளியேற்றுதல்" என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டன் இந்திய மக்கள் மீது வரி விதித்தது, பின்னர் வருவாயைப் பயன்படுத்தி இந்தியப் பொருட்களை - இண்டிகோ, தானியங்கள், பருத்தி மற்றும் அபின் - வாங்கியது - இதனால் இந்தப் பொருட்களை இலவசமாகப் பெற்றது. பின்னர் இந்தப் பொருட்கள் பிரிட்டனுக்குள் நுகரப்பட்டன அல்லது வெளிநாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யப்பட்டன, இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பிரிட்டிஷ் அரசால் பாக்கெட்டிற்கு மாற்றப்பட்டு, பிரிட்டன் மற்றும் அதன் குடியேறிய காலனிகளான - அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்த அமைப்பு இன்றைய பணத்தில் டிரில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றியது. வறட்சி அல்லது வெள்ளம் உள்ளூர் உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தியபோதும் கூட, இந்தியாவை உணவை ஏற்றுமதி செய்ய கட்டாயப்படுத்தியதால், ஆங்கிலேயர்கள் இந்த வடிகாலில் இரக்கமற்றவர்களாக இருந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கணிசமான கொள்கைகளால் தூண்டப்பட்ட பஞ்சங்களின் போது பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பட்டினியால் இறந்ததாக வரலாற்றாசிரியர்கள் நிறுவியுள்ளனர், ஏனெனில் அவர்களின் வளங்கள் பிரிட்டனுக்கும் அதன் குடியேறிய காலனிகளுக்கும் அனுப்பப்பட்டன. அல் ஜசீராவில் பதிவு செய்யவும் முக்கிய செய்தி எச்சரிக்கை உலகெங்கிலும் உள்ள மிக முக்கியமான தலைப்புச் செய்திகளை நிகழ்நேரத்தில் அறிந்துகொள்ளுங்கள். பதிவு பதிவு செய்வதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். reCAPTCHA ஆல் பாதுகாக்கப்படுகிறது காலனித்துவ நிர்வாகிகள் தங்கள் கொள்கைகளின் விளைவுகளை முழுமையாக அறிந்திருந்தனர். மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் அவர்கள் தங்கள் பாதையை மாற்றவில்லை. உயிர்வாழ்வதற்குத் தேவையான வளங்களை மக்கள் அறிந்தே பறித்து வந்தனர். விக்டோரியன் காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண இறப்பு நெருக்கடி தற்செயலானது அல்ல. பிரிட்டனின் ஏகாதிபத்தியக் கொள்கைகள் "பெரும்பாலும் 18,000 அடி உயரத்தில் இருந்து வீசப்பட்ட குண்டுகளுக்குச் சமமானவை" என்று வரலாற்றாசிரியர் மைக் டேவிஸ் வாதிடுகிறார் . 1881-1920 காலகட்டத்தில் பிரிட்டனின் சுரண்டல் கொள்கைகள் சுமார் 100 மில்லியன் அதிகப்படியான இறப்புகளுடன் தொடர்புடையவை என்பதை எங்கள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. சர்வதேச சட்டத்தில் வலுவான முன்னுதாரணத்துடன், இழப்பீடுகளுக்கு இது ஒரு நேரடியான வழக்கு. இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, ஜெர்மனி ஹோலோகாஸ்டின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க இழப்பீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, மேலும் சமீபத்தில் 1900 களின் முற்பகுதியில் நமீபியாவில் செய்யப்பட்ட காலனித்துவ குற்றங்களுக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. நிறவெறியைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா வெள்ளை-சிறுபான்மை அரசாங்கத்தால் பயமுறுத்தப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கியது. வரலாற்றை மாற்ற முடியாது, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் குற்றங்களை அழிக்கவும் முடியாது. ஆனால் காலனித்துவம் உருவாக்கிய வறுமை மற்றும் சமத்துவமின்மையின் மரபை நிவர்த்தி செய்ய இழப்பீடுகள் உதவும். இது நீதி மற்றும் குணப்படுத்துதலை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும். இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துகளே தவிர, அல் ஜசீராவின் தலையங்க நிலைப்பாட்டைப் பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. https://www.aljazeera.com/opinions/2022/12/2/how-british-colonial-policy-killed-100-million-indians#:~:text=from%2018%2C000%20feet.%E2%80%9D-,Our%20research%20finds%20that%20Britain's%20exploitative%20policies%20were%20associated%20with,by%20the%20white%2Dminority%20government.
2 weeks 1 day ago
கட்டுப்பாடு மற்றும் ட்ரூமன் கொள்கை இந்தக் கட்டுரையைக் கேளுங்கள் கட்டுப்பாடு மற்றும் ட்ரூமன் கொள்கை 2:58 ட்ரூமன் கோட்பாடு, கட்டுப்படுத்தும் கொள்கை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் வெளியுறவுக் கொள்கையாகும், இது கம்யூனிச செல்வாக்கு அச்சுறுத்தலின் கீழ் கம்யூனிசத்தின் விரிவாக்கத்தைத் தடுக்க ஜனநாயக நாடுகளுக்கு அமெரிக்கா அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும். இந்தக் கொள்கை அமெரிக்காவின் முந்தைய தனிமைப்படுத்தல் கொள்கைகளிலிருந்து ஒரு படி விலகிச் சென்றது, இது அமெரிக்கா வெளியுறவு விவகாரங்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தியது. இந்தக் கொள்கை 1947 இல் காங்கிரசில் ஆற்றிய உரையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ட்ரூமன் கிரீஸ் மற்றும் துருக்கிக்கு நிதி உதவி வழங்க காங்கிரஸை வலியுறுத்தினார். கிரேக்க அரசாங்கம் ஒரு கம்யூனிச எழுச்சியை அடக்க வேண்டியிருந்தது. துருக்கிய ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்பாக சோவியத் யூனியன் துருக்கியை அச்சுறுத்தியது. இரு நாடுகளுக்கும் ஆதரவளிக்க 400 மில்லியன் டாலர் உதவி வழங்குமாறு காங்கிரஸை ஜனாதிபதி ட்ரூமன் வெற்றிகரமாக சமாதானப்படுத்தினார். மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய மார்ஷல் திட்டமும் ட்ரூமனின் கொள்கையின் ஒரு பகுதியாகும். அவநம்பிக்கையான ஐரோப்பிய நாடுகள் தங்கள் பொருளாதாரங்கள் மீளவில்லை என்றால் கம்யூனிசத்திற்கு திரும்பக்கூடும் என்று அமெரிக்கா அஞ்சியது. 1949 ஆம் ஆண்டில், கம்யூனிசத்தை விரிவுபடுத்துவதற்கான எந்தவொரு சோவியத் முயற்சிகளுக்கும் எதிரான ஒரு தற்காப்பு இராணுவ கூட்டணியாக, 12 வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட நேட்டோவை உருவாக்க அமெரிக்கா தலைமை தாங்கியது. ட்ரூமன் கோட்பாடு ஐரோப்பாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. கொரியப் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு ஆசியாவில் ட்ரூமன் கொள்கையின் முதல் நிகழ்வாகும். 1950 ஆம் ஆண்டு வட கொரிய இராணுவம் 38வது இணையைக் கடந்து தென் கொரியாவை ஆக்கிரமித்ததன் மூலம் கொரியப் போர் தொடங்கியது. 38வது இணையானது சோவியத் ஆதரவு பெற்ற வட கொரியாவிற்கும் அமெரிக்க ஆதரவு பெற்ற தென் கொரியாவிற்கும் இடையில் தீபகற்பத்தைப் பிரித்தது. இந்த நடவடிக்கையை கம்யூனிசத்தை விரிவுபடுத்தும் முயற்சியாக அமெரிக்கா கருதியது, பின்னர் தென் கொரியாவைப் பாதுகாக்க போரில் இணைந்தது. 1953 ஆம் ஆண்டில், போர் ஒரு போர் நிறுத்தத்தில் முடிந்தது, இது 38வது இணையான இடத்திற்கு அருகில் ஒரு புதிய எல்லையை வரைந்து வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் ஒரு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தை (DMZ) உருவாக்கியது. வியட்நாம் போர் ஆசியாவில் ட்ரூமன் கோட்பாட்டின் ஒத்த நிகழ்வாகும். வடக்கு வியட்நாமின் கம்யூனிச அரசாங்கத்தை சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆதரித்தன. தெற்கு வியட்நாம் அரசாங்கத்தை அமெரிக்கா ஆதரித்தது. ஆரம்பத்தில், அமெரிக்கா ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே ஈடுபட்டது. இருப்பினும், குறிப்பாக ஆகஸ்ட் 1964 இல் டோன்கின் வளைகுடா சம்பவத்திற்குப் பிறகு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் ஈடுபாடு வளர்ந்தது. அமெரிக்க மக்களின் ஆதரவு இல்லாததால், அமெரிக்கா பல பெரிய இராணுவ வெற்றிகளைப் பெற்றாலும், 1973 இல் அமெரிக்கா வியட்நாமில் இருந்து வெளியேறியது, இருப்பினும் வடக்கு மற்றும் தெற்கு இடையே பகைமை தொடர்ந்தது. 1975 இல் வியட்நாம் இறுதியில் கம்யூனிச ஆட்சியின் கீழ் ஒன்றுபட்டதால், கம்யூனிசக் கைப்பற்றலைத் தடுக்கும் அதன் நோக்கத்தை அமெரிக்கா தோல்வியடையச் செய்தது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நேரடியாக ஒன்றையொன்று எதிர்த்துப் போராடாததால், கொரிய மற்றும் வியட்நாம் போர்கள் பெரும்பாலும் மறைமுகப் போர்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. கொரியா மற்றும் வியட்நாமில் நடந்த மோதல்களில் ஒவ்வொன்றும் எதிரெதிர் சக்திகளை ஆதரித்தன. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் ஈடுபாடு பெரும்பாலும் பிடல் காஸ்ட்ரோவின் கியூபாவின் கம்யூனிச அரசாங்கத்தைச் சுற்றியே இருந்தது. ஏப்ரல் 1961 இல், மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) கம்யூனிசத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்க உறுதிப்பாட்டை வலுப்படுத்த, பிக்ஸ் விரிகுடா படையெடுப்பில் பிடல் காஸ்ட்ரோவை வீழ்த்த முயன்றது. இந்தப் படையெடுப்பு தோல்வியடைந்து, அமெரிக்க-கியூப-சோவியத் பதட்டங்களின் தீப்பிழம்புகளைத் தூண்டியது, இது 1962 இல் கியூப ஏவுகணை நெருக்கடியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. https://www.studentsofhistory.com/containment-the-truman-policy ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகத்திற்கு சவாலாக இருக்கும் கங்கேரி போன்ற நாடுகளில் உள்ள பிரச்சினைக்குரிய அரசியல் தலைமகளை நீக்குவதற்கான முயற்சியினை ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபடுகின்றதான தோற்றத்தினை ட்ருஸ்பா எண்ணெய்க்குழாய்த்தாக்குதல் இருக்கின்றதாக கருதுகிறேன். எதிர்வரும் சித்திரை மாதத்தில் கங்கேரியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முடிவுகள் உறுதியாகிவிட்டது, இன்னொரு ருமேனியா போன்ற ஒரு சம்பவம் நிகழலாம் என கருதுகிறேன்.
2 weeks 1 day ago
மதகுருமார் வர வேண்டாம் – கெஞ்சிய அதிகாரிகள் written by admin September 1, 2025 மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பில் தெரியவருவதாவது, மயிலிட்டி இறங்குதுறை அதிகாரிகளால், நிகழ்வுக்கு வருமாறு அப்பகுதி இந்து மதகுரு மற்றும் கிறிஸ்தவ பாதிரியாருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தன.இந்நிலையில் நேற்றைய தினம் மதகுருமார்களை சந்தித்த அதிகாரிகள், நிகழ்வுக்கு வர வேண்டாம் என கோரியுள்ளனர். மயிலிட்டி நிகழ்வுக்கு பௌத்த மதகுரு சார்பில் தையிட்டி விகாரதிபதியை அழைக்க நேரிட்டால், அது விமர்சனங்களை ஏற்படுத்தும் என்பதால், நிகழ்வில் எந்த மதகுருமாரையும் அழைக்காது விடுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறியே, நிகழ்வுக்கு மத குருமார்களை வரவேண்டாம் என கூறப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/219944/