Aggregator

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

1 week 4 days ago

வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான (Mega Projects) முன்மொழிவுகளை உடனடியாகத் தயாரிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்று (09.02.2026) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார். 

இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனிக்கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டினார். 

திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும். 

'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

https://adaderanatamil.lk/news/cmlg78yf80006356nyj0z1hcm

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

1 week 4 days ago
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது Feb 10, 2026 - 10:53 AM உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

1 week 4 days ago

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

Feb 10, 2026 - 10:53 AM

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட விஞ்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் கரைவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்போதைய அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கக் கோரி ஆரம்பிக்கப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் இன்று (10) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. 

ஜனாதிபதியின் கீழ் குழுவொன்று நியமிக்கப்படும் என நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலில் தமக்கு அறிவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும், ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

இதேவேளை, குறித்த மீனவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு பெப்ரவரி 27-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும், அதன் பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். 

பவளப்பாறைகள் மற்றும் மீன் இனப்பெருக்க இடங்கள் அழிவடைவதைத் தடுப்பதற்கும், கடல் வளங்களைப் பாதுகாப்பதற்கும் என்ற காரணத்தினால் இந்த விஞ்ச் இயந்திரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்தது. 

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த தடையை நீக்கக் கோரியும் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் பெப்ரவரி 5-ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தச் சத்யாகிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

https://adaderanatamil.lk/news/cmlg5ni980008356n5tobmb34

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

1 week 4 days ago
சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:49 AM திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது. கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார். அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர். தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238270

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

1 week 4 days ago

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே; திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:49 AM

image

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட 4 பிக்குகளும் 7 சிவிலியன்களும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்களது விளக்கமறியலை நீடித்து நீதிவான் உத்தரவிட்டதையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேகநபர்களைப் பேருந்தை நோக்கி அழைத்துச் சென்றனர். இதன்போது சந்தேகநபர் ஒருவரை சிறைச்சாலை அதிகாரி பலவந்தமாகப் பிடித்து பேருந்திற்குள் தள்ளியதாகக் கூறி, அங்கு கூடியிருந்த பிக்குகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவான் பெல்லந்துடாக்க, "இந்த அரசாங்கத்திற்குப் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் எண்ணம் கிடையாது. ஒரு மாதத்திற்கு மேலாக எவ்வித நேரடிச் சான்றுகளுமின்றி பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலைக்குள் பிக்குகளுக்கு உரிய முறையில் தானம் வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களது மதச் சடங்குகளைச் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் சாடினார்.

அங்கு கூடியிருந்த அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பிக்குகள், "இது ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. என்.பி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தனிப்பட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே இந்தப் புனிதப் பூமி விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றைச் சுயாதீனமாகச் செயற்பட விடாது அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது" எனக் கோஷமிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் இனவாதத்தைத் தூண்டி, பௌத்த கலாசாரத்தைப் பாதுகாக்க முன்னின்று உழைக்கும் தேரர்களைச் சிறையில் அடைப்பதாகக் குற்றஞ்சாட்டிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்தின் இச்செயற்பாடு பௌத்த சாசனத்திற்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனத் தெரிவித்தனர். இந்தத் திடிர் போராட்டத்தினால் நீதிமன்றச் சூழலில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/238270

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

1 week 4 days ago
LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்! செய்திகள் இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

1 week 4 days ago

LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறத் தீர்மானம்!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கி இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரினால் வெளியிடப்பட்ட கடிதத்தை மீளப்பெற்றுக்கொள்வதாக சட்டமா அதிபர் இன்று (10) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 

குறித்த தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, குறித்த மனுவை மேலதிக பரிசீலனைக்காக மார்ச் மாதம் 04ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

https://adaderanatamil.lk/news/cmlg7sx2h0002356nx3h9i10t

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 4 days ago
156 ஓட்டங்கள். அடிக்கடி விக்கட்டை இழந்ததால், நமீபியாவால் கூடுதாலாகப் பெற முடியவில்லை. பந்து வீச்சில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம். 157 நல்ல ஒரு இலக்கு.

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

1 week 4 days ago
சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம் Published By: Vishnu 10 Feb, 2026 | 02:45 AM (நா.தனுஜா) இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது. அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர். அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன. அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார். இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது. இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது. ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார். அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது. அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238269

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

1 week 4 days ago

சுவிஸ் தூதரக ஏற்பாட்டில் தமிழ்த்தரப்புக்களுக்கு இடையில் நடைபெறவிருந்த சந்திப்பில் இழுபறி நிலை - பிறிதொரு தினத்துக்குப் பிற்போடப்படும் சாத்தியம்

Published By: Vishnu

10 Feb, 2026 | 02:45 AM

image

(நா.தனுஜா)

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருந்த சந்திப்பில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், எனவே அச்சந்திப்பு பிற்போடப்படக்கூடும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலான செயலமர்வொன்று கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.

அச்செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதியமைச்சர் முனீர் முளப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழர் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்ம மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர்.

அச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அதனுடன் தொடர்புடைய முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெற்றன.

அவ்விஜயத்தைத் தொடர்ந்து அதுபற்றி அதில் பங்கேற்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமசந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டறிந்த இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிறி வோல்ற், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனையும் சந்தித்து மேற்படி விஜயம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

இவ்வாறு நிகழ்ந்த சந்திப்புக்களின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில் சகல தமிழ்த்தேசியக் கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் தமிழ்ப்பிரதிநிதிகளால் தூதுவர் சிறி வோல்ற்றிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக்கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் அக்கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைத்தது. அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுக்கப்படவிருப்பதாகவும் தெரியவந்தது.

இருப்பினும் நேற்று திங்கட்கிழமை (9) கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், இச்சந்திப்பை ஏற்கனவே தீர்மானித்ததைப்போன்று எதிர்வரும் 19 ஆம் திகதி நடாத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் பிறிதொரு திகதிக்குப் பிற்போடுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அறியமுடிகின்றது.

ஏனெனில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 'ஏக்கிய இராச்சிய' அரசியலமைப்பு வரைவை அடிப்படையாகக்கொண்டே அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கும் நிலையிலும், ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்களுக்கான நியாயமான அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளமுடியாது என்பதை சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருக்கும் பின்னணியிலும், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் எனக் குறிப்பிட்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிவில் சமூக சந்திப்புக்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவ்வழைப்புக்குப் பதிலளித்த தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் அக்கலந்துரையாடலில் பங்கேற்றமுடியாது என்றும், இருப்பினும் கட்சியிலிருந்து பிரதிநிதியொருவரை அனுப்பிவைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.

அதேபோன்று மேற்படி அழைப்புக்கு ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் நாகலிங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பதிலில், சிவில் சமூகத்தினரின் பங்கேற்புடனான கூட்டத்தை நடாத்துவதற்கு முன்பதாக இதுபற்றி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்தித்துக் கலந்துரையாடவேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்பதாக 15 ஆம் திகதி சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு பொதுக்கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடு செய்யவேண்டியதன் நோக்கம் என்னவென்று சுவிஸ் தூதுவரிடம் கரிசனையை வெளிப்படுத்திய சுமந்திரன், ஆகவே 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கூட்டத்தை இரத்துச்செய்யும்படி கோரியதாகத் தெரியவருகின்றது.

அதேவேளை இச்சந்திப்பு பிற்போடப்படப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238269

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

1 week 4 days ago
முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/முல்லைத்தீவில்-யாழ்-பல்கலைக்கழகப்-பீடம்/175-372256

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

1 week 4 days ago

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயத்துக்கு அமைவாக, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (09)  மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

கடந்த 27.01.2026 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் நீண்டகாலமாக எவ்வித அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இதனால் அக்காணியைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் ஆராய்ந்து உடனடித் தீர்வு காண்பதற்காக ஆளுநர் தலைமையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (a)

image_35581e455e.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/முல்லைத்தீவில்-யாழ்-பல்கலைக்கழகப்-பீடம்/175-372256

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

1 week 4 days ago
அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு! adminFebruary 10, 2026 சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன. கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது. 💡 இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 🌍 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/228778/

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

1 week 4 days ago

அமெரிக்க ராணுவத்தின் அதிரடி – மீண்டும் ஒரு ரஷ்ய எண்ணெய் கப்பல் பிடிப்பு!

adminFebruary 10, 2026

u2-1.jpg?fit=1170%2C658&ssl=1

சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தடைகளை மீறிச் சென்ற ரஷ்யாவின் ‘நிழல் கப்பல் படை’ (Shadow Fleet) சார்ந்த ‘அக்விலா II’ (Aquila II) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் இந்தியப் பெருங்கடலில் இடைமறித்துக் கைப்பற்றியுள்ளன.

கரீபியன் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை நீண்ட தூரம் இந்த கப்பலைப் பின்தொடர்ந்துச் சென்ற அமெரிக்க ராணுவம், வெற்றிகரமாக அதன் கட்டுப்பாட்டைத் தன்வசம் கொண்டு வந்துள்ளது.

💡 இச்சம்பவம் குறித்து அமெரிக்கத் தரப்பு வெளியிட்ட அறிக்கையில், “அது தப்பியோடியது, நாங்கள் பின்தொடர்ந்தோம்… எங்களை விட வேகமாக உங்களால் ஓட முடியாது, அதற்குள் உங்கள் எரிபொருள் தீர்ந்துவிடும்” என அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெனிசுலா மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில் முன்னெடுத்துள்ள ‘மரைடைம் குவாரன்டைன்’ (Maritime Quarantine) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது. இக்கப்பல் சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதாகவும், சர்வதேசப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாகச் செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ‘மரைனேரா’ (Marinera) என்ற மற்றொரு ரஷ்யக் கொடி ஏந்திய கப்பல் அட்லாண்டிக் பகுதியில் அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

🌍 இந்த நடவடிக்கை சர்வதேச எரிபொருள் சந்தையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதோடு, உலக நாடுகளுக்கிடையிலான அரசியல் உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2026/228778/

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

1 week 4 days ago
ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்! Feb 10, 2026 - 08:50 AM கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlg18hlu0003356n122qorhm

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

1 week 4 days ago

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Feb 10, 2026 - 08:50 AM

ஆவா குழு உறுப்பினர்கள் இருவருக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்!

கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்த இரு உறுப்பினர்களை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்குப் பொலிஸ் மத்திய குற்றத்தடுப்புப் பணியகம் அனுமதி பெற்றுள்ளது. 

இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இந்த இரு சந்தேகநபர்களும் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆவா குழுவைச் சேர்ந்த இந்த சந்தேகநபர்கள், 2016ஆம் ஆண்டு மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பின்னர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றத்தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

இவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதோடு, கூலி துப்பாக்கிதாரிகளை வழங்கும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்துள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlg18hlu0003356n122qorhm

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

1 week 4 days ago
வாகனத்தை ஓடியவர் 17 வயது சிறுவன் போலுள்ளது. இலங்கையில் எத்தனை வயதில், வாகன அனுமதிப் பத்திரம் கொடுப்பார்கள்? இங்கு 16 வயதில் அனுமதி எடுத்தாலும், 18 வயது வரை அவர் தனியே ஓட முடியாது. அருகில் வாகன அனுமதி பத்திரம் உள்ள ஒருவர் இருக்க வேண்டும்.