Aggregator

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை - வி.எஸ்.சிவகரன்

2 weeks 1 day ago
02 Sep, 2025 | 02:59 PM காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1) மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதன் நிமித்தம் ஒரு மாதகாலம் இடை நிறுத்தப்பட்ட செயற்றிட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, அது சம்பந்தமான உரையாடல் ஊடாக தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறை சார் திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை (1) மாலை மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும், இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடைய வாதங்கள் அமைந்திருந்தது. எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிம மணல் திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள் அவதானம் செலுத்தியதாக இல்லை. எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது. எனினும், மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை. எனவே, இவர்களினால் பரிந்துரைக்கப்படுகிற அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களின் அறிக்கையில் பிரகாரமே ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வருவார் என அவர்கள் கூறுகிறார்கள். ஜனாதிபதி காற்றாலை வேலைத்திட்டத்தை ஒரு மாதம் நிறுத்தியது கூட கண்துடைப்பு நாடகம் என நான் ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன். அதே போல் நிபுணர் குழுவும் எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றதே தவிர எங்களுடைய கோரிக்கைகள், அடிப்படை உணர்வுகள் என்ன என்று அவர்கள் புரிந்துகொள்வதாக இல்லை. அதில் உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் ஏற்கனவே பல தடவைகள் மன்னாருக்கு வந்தவர்கள். பல கூட்டங்களில் அவர்களுடன் பங்குபற்றியுள்ளோம். அவர்களுக்கு எங்களுடைய பிரச்சினை என்ன என்று தெளிவாக தெரியும். இந்த நிலையில் இந்த நிபுணர் குழுவில் புதியவர்களை இணைக்காது அவர்களை மீண்டும் இக்குழுவில் இணைத்திருப்பது எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையாகிய காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களும் மன்னார் தீவுப் பகுதியில் இருந்து வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கை எவ்வாறான நிலைப்பாட்டில் போகப்போகிறது என்பது குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி இத்திட்டங்களை அமுல்படுத்துமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/224022

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை - வி.எஸ்.சிவகரன்

2 weeks 1 day ago

02 Sep, 2025 | 02:59 PM

image

காற்றாலை மற்றும் கனிம மணல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு நேற்றைய தினம் திங்கட்கிழமை (1)  மன்னாருக்கு வருகை தந்து பொது அமைப்புக்களை சந்தித்து கலந்துரையாடியபோதும் எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது என பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (2) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

காற்றாலை, கனிம மணல் விடயம் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து உரையாடியதன் நிமித்தம் ஒரு மாதகாலம் இடை நிறுத்தப்பட்ட செயற்றிட்டம் தொடர்பாக நிபுணர்கள் குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு, சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து, அது சம்பந்தமான உரையாடல் ஊடாக தீர்மானத்திற்கு வரலாம் என ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையில் துறை சார் திணைக்களங்கள் குழுவாக நியமிக்கப்பட்டு, நேற்று திங்கட்கிழமை (1) மாலை மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடப்பட்டது. 

இந்தக் கலந்துரையாடலில் பொது அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த கலந்துரையாடலில் ஏற்கனவே அமைக்கப்பட்ட 30 காற்றாலைகளின்  பிரச்சினைகள் தொடர்பாகவும், இனி அமைக்கப்படவுள்ள காற்றாலைகளால் ஏற்படவுள்ள பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பது தொடர்பிலும் அவர்களுடைய வாதங்கள் அமைந்திருந்தது.

எங்களுடைய கோரிக்கையாக இருந்த மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிம மணல் திட்டத்தை முற்றாக நிறுத்த வேண்டும் என்கிற விடயம் தொடர்பாக அவர்கள் அவதானம் செலுத்தியதாக இல்லை.

எங்களுடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்கள் கரிசனை கொண்டதாக இல்லை. அவர்கள் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை தீர்த்து இங்கே காற்றாலைகளை எவ்வாறு அமைக்கலாம் என்பது குறித்து அவர்களுடைய கருத்துக்களும் வாதங்களும் அமைந்திருந்தது.

எனினும், மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு இடமாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதார வாழ்வியல் இருப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறித்த இரு திட்டங்களையும் மன்னார் தீவில் இருந்து வெளியே எடுப்பது சம்பந்தமாக அவர்களுடைய பார்வை இருக்கவில்லை.

எனவே, இவர்களினால் பரிந்துரைக்கப்படுகிற அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. இவர்களின் அறிக்கையில் பிரகாரமே ஜனாதிபதி இறுதி முடிவுக்கு வருவார் என அவர்கள் கூறுகிறார்கள்.

ஜனாதிபதி காற்றாலை வேலைத்திட்டத்தை ஒரு மாதம் நிறுத்தியது கூட கண்துடைப்பு நாடகம் என நான் ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வைத்து ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தேன்.

அதே போல் நிபுணர் குழுவும் எங்களுடைய பிரச்சினைகளை மாத்திரமே பேசுகின்றதே தவிர எங்களுடைய கோரிக்கைகள், அடிப்படை உணர்வுகள் என்ன என்று அவர்கள் புரிந்துகொள்வதாக இல்லை.

அதில் உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் ஏற்கனவே பல தடவைகள் மன்னாருக்கு வந்தவர்கள். பல கூட்டங்களில் அவர்களுடன் பங்குபற்றியுள்ளோம். 

அவர்களுக்கு எங்களுடைய பிரச்சினை என்ன என்று தெளிவாக தெரியும். இந்த நிலையில் இந்த நிபுணர் குழுவில் புதியவர்களை இணைக்காது அவர்களை மீண்டும் இக்குழுவில் இணைத்திருப்பது எமக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையாகிய காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகிய இரு திட்டங்களும் மன்னார் தீவுப் பகுதியில் இருந்து வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கை எவ்வாறான நிலைப்பாட்டில் போகப்போகிறது என்பது குறித்து எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

அரசு தனது நிறைவேற்று அதிகாரத்தையும் பெரும்பான்மை ஆதரவையும் பயன்படுத்தி இத்திட்டங்களை அமுல்படுத்துமோ என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224022

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks 1 day ago
'சர்வாதிகாரிகளுடன் மேடையை பகிர்ந்தது வெட்கக்கேடானது' - மோதியை மீண்டும் குறிவைத்த டிரம்ப் ஆலோசகர் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா 'பூஜ்ஜிய வரி' வழங்க தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவித்தார். 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதியை குறிவைத்து தாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இம்முறை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) மாநாட்டை ஒரு காரணமாக்கியிருக்கிறார். "சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டில் உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மேடையைப் பகிர்ந்துகொண்டது வெட்கக்கேடானது," என நவரோ செய்தியாளர்களிடம் கூறினார். அதன் பின்னர், "ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும், மேலும் ஐரோப்பா மற்றும் யுக்ரேனுடன் நிற்க பிரதமர் மோதி முன் வரவேண்டும்," என அவர் சமீபத்திய நாட்களில் பலமுறை கூறியதை மீண்டும் வலியுறுத்தினார். இதற்கிடையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு 'இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக்க' ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது மிகவும் தாமதமானது எனவும் திங்கட்கிழமை டிரம்ப் கூறியுள்ளார். தற்போது பிரதமர் மோதி சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்று வருகிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நட்புடன் சந்தித்துப் பேசினார். மூன்று தலைவர்களின் புகைப்படங்கள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன, மேலும் மேற்கத்திய ஊடகங்கள், டிரம்பின் வரி விதிப்புகளால் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கமாகி வருவதாக பகுப்பாய்வு செய்கின்றன. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, திங்கட்கிழமை சீனாவின் தியான்ஜினில் நடந்த எஸ்சிஓ மாநாட்டின்போது புதின், மோதி மற்றும் ஷி ஜின்பிங் இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து பீட்டர் நவரோ ஏற்கெனவே பலமுறை கடுமையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் இந்தியாவை ரஷ்ய எண்ணெய்க்கு 'தானியங்கி சலவை இயந்திரம்' (பணமோசடி மையம்) என்று அழைத்தார், இந்திய மக்களின் செலவில் 'பிராமணர்கள்' லாபம் ஈட்டுவதாகவும், இதை 'நிறுத்த வேண்டும்' என்று ஒருநாள் முன்னதாக கூறினார். டிரம்ப் மற்றும் நவரோ இந்தியாவை 'வரி மன்னர்' என்று அழைத்தனர், ஆனால் அமெரிக்காவிலேயே டிரம்பின் கொள்கைகள் குறித்து அசௌகரியம் உணரப்படுகிறது. சில நாட்களுக்கு முன், பைடன் நிர்வாகத்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், இந்தியாவைப் பற்றிய டிரம்பின் கொள்கைகளை அமெரிக்காவுக்கு ஒரு பெரிய 'உத்தி இழப்பு' என்று விவரித்தார், மேலும் 'அமெரிக்கா பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்கிறது' என்று கூறினார். செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களிடம் பேசிய பீட்டர் நவரோ, "அமைதியின் பாதை ஓரளவு புது தில்லி வழியாக செல்கிறது. இப்போது மோதி முன்னுக்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மோதியை மிகவும் மதிக்கிறேன். இந்திய மக்களை நேசிக்கிறேன்," என்றார். அவர் மேலும் கூறுகையில், "உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவரான மோதி, உலகின் இரண்டு மிகப்பெரிய சர்வாதிகாரிகளான புதின் மற்றும் ஷி ஜின்பிங்குடன் சந்திப்பது வெட்கக்கேடானது. இதற்கு எந்த அர்த்தமும் இல்லை." என்றார். மோதி குறித்து நவரோ என்ன கூறினார்? பட மூலாதாரம், Anna Moneymaker/Getty Images படக்குறிப்பு, பீட்டர் நவரோ இந்தியா மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறார். இந்தியா மற்றும் சீனா இடையேயான ராணுவ மோதல்கள் மற்றும் பதற்றங்களையும் நவரோ சுட்டிக்காட்டினார். "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை, குறிப்பாக இந்தியா பல தசாப்தங்களாக சீனாவுடன் பனிப்போரிலும், எல்லையில் மோதல்களிலும் ஈடுபட்டுள்ளது," என்றார். "எனவே, இந்திய தலைவர்கள் எங்களுடனும், ஐரோப்பாவுடனும், யுக்ரேனுடனும் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல. மேலும் அவர்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்," என அவர் மேலும் கூறினார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா இந்தியா மீது தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது, மேலும் இதையே காரணமாகக் கூறி டிரம்ப் இந்தியாவுக்கு 25 சதவிகித கூடுதல் வரி விதித்தார், இதனால் இறக்குமதி வரி மொத்தம் 50 சதவிகிதமாக உயர்ந்தது. ஆனால், இந்தியா இதை 'நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு ஏற்புடையதல்ல' என்று விவரித்துள்ளது. வரிகள் குறித்து டிரம்பின் சமீபத்திய அறிக்கை திங்கட்கிழமை, ஷி ஜின்பிங் மற்றும் புதினை மோதி சந்தித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில், டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் எனப்படும் சமூக ஊடகதளத்தில், "பலருக்கு இது புரிவதில்லை. நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைவாகவே வணிகம் செய்கிறோம், ஆனால் அவர்கள் (இந்தியா) எங்களுடன் பெரிய அளவில் வணிகம் செய்கிறார்கள்," என தெரிவித்தார். "வேறு வார்த்தைகளில், இந்தியா எங்களுக்கு பெரிய அளவில் பொருட்களை விற்கிறது. நாங்கள் அவர்களின் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள், ஆனால் நாங்கள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே விற்கிறோம். இது இதுவரை முற்றிலும் ஒருதலைபட்ச உறவாக இருந்து வருகிறது, பல தசாப்தங்களாக இப்படியே நடந்து வருகிறது," என டிரம்ப் தெரிவித்தார். "எங்கள் வணிகங்கள் இன்னும் இந்தியாவில் பொருட்களை விற்க முடியவில்லை. இதற்கு காரணம், இந்தியா மற்ற நாடுகளை விட எங்களுக்கு மிக உயர்ந்த வரி விதித்துள்ளது. இது இதுவரை ஒரு ஒருதலைபட்ச பேரழிவாக இருந்து வந்துள்ளது," என அவர் மேலும் தெரிவித்துள்ளார். "இந்தியா தனது பெரும்பாலான எண்ணெய் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது, அமெரிக்காவிடமிருந்து மிகக் குறைவாகவே வாங்குகிறது. இப்போது இந்தியா வரியை பூஜ்ஜியமாக்க முன்வந்துள்ளது, ஆனால் அது தாமதமாகிறது. அவர்கள் இதை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்," என டிரம்ப் மேலும் கூறினார், டிரம்ப் முன்பும் இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக பற்றாக்குறையைப் பற்றி பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது, பின்னர் போர் நிறுத்தத்துக்கு தானே காரணம் என டிரம்ப் உரிமை கொண்டாடுவதும் இருந்தது. மோதலை நிறுத்துவதற்காக மக்களுக்கு தலைசுற்றும் அளவுக்கு வரிகளை விதிப்பேன் என இந்தியாவிடம் கூறியதாக அவர் சமீபத்தில் தெரிவித்தார். பாகிஸ்தானுக்காக இந்தியாவை தியாகம் செய்தல் பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன் இந்தியா குறித்த டிரம்பின் கொள்கைகள் குறித்து எச்சரித்துள்ளார். இந்தியா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான அணுகுமுறை குறித்து அமெரிக்காவிலும் அதிருப்தி உள்ளது, மேலும் குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி சமீபத்தில் இந்த நிலைமை குறித்து கவலை தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரி, டிரம்ப் தனது கொள்கைகளால் தனது கூட்டாளிகளை விலக்கி வைப்பதாக கவலை தெரிவித்தார். பைடன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த ஜேக் சல்லிவன், கடந்த மாதம் "இந்தியாவுடனான உறவுகளை தியாகம் செய்வது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய உத்தி இழப்பு" என்று எச்சரித்தார். ஆகஸ்ட் 20 அன்று ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சல்லிவன், அமெரிக்க அதிபர் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பது, டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் மிகக் குறைவாக விவாதிக்கப்பட்ட செய்தியாக இருந்தது என்றார். அமெரிக்கா பல தசாப்தங்களாக "உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான" இந்தியாவுடன் உறவுகளை உருவாக்கி வந்துள்ளது. சீனாவின் உத்தி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அமெரிக்கா இந்தியாவுடன் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் கூட்டணி ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் நண்பர்களும் உலகின் மற்ற நாடுகளும் அமெரிக்காவை எந்த வகையிலும் நம்ப முடியாது என்று நினைக்கத் தொடங்கினால், அது நீண்ட காலத்தில் அமெரிக்க மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது," என சல்லிவன் மேலும் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdd3dmev721o

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 weeks 1 day ago
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு 02 Sep, 2025 | 06:38 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று (2) மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதுவரை 222 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 41வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224057

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 weeks 1 day ago
பாகம் - 10 25.9.90 அன்று திரு. மாத்தயா அவர்களைப் பார்க்க கூடியிருந்த மக்களிடம் சென்று நிலைமையை உரையாடிப் பார்ப்போம் என நினைத் தேன். ஒரு சைக்கிளுடன் மரத்தடியில் நின்ற ஒருவரிடம் சென்றேன். “உங்கள் ஊர் எது?” என்று கேட்டேன். “தம்பலகாமம்” என்றார். தம்பலகாமத்திற்கும் இந்த இடத்திற்கும் எக்கச்சக்கமான தூரமாயிற்றே ஏன் யாழ்ப்பாணப் பக்கம் போகாமல் இந்தப் பக்கமாக ஓடிவந்தீர்கள்? என்றுகேட்டேன். யாழ்ப்பாணம் நோக்கிப் போகும் ஆட்களை இரவில் மறைந்திருந்து தாக்குவதால் இந்தப் பக்கமாக வந்ததாக சொன்னார். தம்பலகாமத்தில் தான் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளனவே அங்கு நடந் தவற்றைக் கூறுங்கள். என்றேன். நீங்கள் என்னென்ன விடயங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டார். அகதிமுகாம் விடயங்கள், கிண்ணியாவில் தமிழர்களை தடுத்து வைத்திருத்தல், பஸ்ஸில் இருந்து ஆட்களை இறக்கியெடுத்தல், இந்திய இராணுவம் ரின்னர் ஊற்றிக் கொழுத்தியது என்று பட்டியல் போட்டுக் காட்டினேன். “தம்பலகாமம் கோவிலடி முகாம் தான் மிகப் பயங்கரமானது” என்ற முன்னுரையுடன் கூறத்தொடங்கினார். தம்பலகாமம் இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஒரு நாள் பொதுமக்களைக் கூப்பிட்டுக் கூறினான்: “இங்கு 18 குடும்பங்கள் புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் என்ற தகவல் எனக்குக்கிடைத்துள்ளது. இவர்களை அழிப்பது. எனக்குப் பெரிய விடயமல்ல, ஜே. வி. பி. பிரச்சினையில் ஐம்பது சிங்கள இளைஞர்களை எனது கையால் கொன்றுள்ளேன். எனது சொந்த இனத்திலேயே ஐம்பதுபேரைக் கொன்ற எனக்கு இது ஒரு சின்ன விடயம்” என்று கூறினான் என்றார். முஸ்லிம் மக்களால் ஏற்பட்ட பிரச்சினைகளைச் சொல்லுங்கள் என்றேன். முன்னரெல்லாம் கலவரம் வரும்போது முஸ்லிம் மக்கள் தான் உதவுவார்கள். இந்த முறை எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று சொன்னார். ஏன் என்று கேட்டேன். பள்ளிவாசல் மட்டத்தில் தமிழருக்கு எதிரான முடிவுகள் மேற்கொள்ளப்படுவதுதான் காரணம் என்றார். தொடர்ந்து இந்தமுறையும் கலவரம் வந்தவுடன் கிண்ணியாவையும் அதனைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களையும் நோக்கித்தான் தமிழர்கள் ஓடினார்கள். ஆனால் அங்கே நடந்த விடயங்களைப் பார்த்தால்... என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டுத் தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த நடராசாவும் அவரது மனைவி பங்கயலட்சுமியும் காக்கா முனை என்ன இடத்தில் ஒரு முஸ்லிம் வீட்டில் குடியிருந்தனர். அங்கே பங்கய லட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மூன்றாம் நாள் பங்கயலட்சுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது. ஒரு முஸ்லிம் இளைஞன் வந்து சாப்பாட்டுக் கோப்பைக்கு காலால் அடித்தான். கோப்பை பறந்தது. தொடர்ந்து தமிழர்களை எவரும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்ற பள்ளிவாசலின் முடிவு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமது வீடுகளில் இருந்த தமிழர்கள் அனைவரையும் முஸ்லிம்கள் வெளியேற்றினார்கள். அத்துடன் ஒரு பகல் கொள்ளையும் நடந்தது என்றார். என்ன நடந்தது, என்று கேட் டேன். தமிழர்களின் ரீ.வி., டெக், றேடியோ போன்ற விலையுயர்ந்த சாமான்களை வைத்திருந்த முஸ்லிம் வீட்டுக்காரர்கள் அனைவரும் தங்களது சாமான்களை நாம் வைத்திருந்தால் எமக்கு ஊர்காவல் படையாலோ, இராணுவத்தாலோ பிரச்சினை வரும். ஆனபடியால் இவற்றை எமக்கு விற்றுவிட்டதாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அப்படியே அனைவரும் எழுதிக்கொடுத்தனர். நடராசாகூட அப்படி எழுதிக் கொடுத்து வீட்டுத்தான் வெளியேறினார். ஆனால் எவருக்கும் ஒரு சதமும் கிடைக்கவில்லை என்றார். ஏன் இவர்களுக்கு நன்மை செய்வதற்காக இப்படி எழுதி வாங்கியிருக்கக் கூடாது? இவர்கள் திரும்பியதும் திருப்பிக் கொடுப்பதற்காக எழுதி வாங்கியிருக்க மாட்டார்களா? என்று கேட்டேன். நிச்சயமாக அப்படி இல்லை. பள்ளிவாசல் அறிவிப்பின் பின்னரே ஒரே நேரத்தில் இந்த விடயம் நிகழ்ந்துள்ளது. அத்துடன் வாங்கிய சாமானுக்காக இல்லாவிட்டாலும் வழிச்செலவுக்கு ஒரு பத்து ரூபா வைத்திருங்கள் என்று கொடுத்திருக்க மாட்டார்களா என்று வினவினார். தமிழர் அழிப்பில் தீவிரமாக ஈடுபடுபவர்களின் பெயர் தெரியுமா என்று கேட்டேன். பாரூக் என்பவன் தலைமையில் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்த ஐம்பது பேர் ஈரோஸ் இயக்கத்தின் பெயரால் இந்திய இராணுவத்திடம் பயிற்சி எடுத்தனர். இன்று இவர்கள் தான் ஊர்காவல் படையில் சேர்ந்து தமிழரை அழிப்பதில் தீவிரமாக இருக்கின்றனர் என்றார். மழை விட்டும் தூவானம் போகவில்லை என்பதா? அல்லது இந்திய இராணுவம் விதைத்த நச்சு விதைகள். இன்று விருட்சமாகின்றதா? பதில் தெரியாது விழித்தேன். அப்போது பதுமன் ஈ. பி. ஆர். எல். எவ். இல் இருந்த கச்சி முகம்மது ஷேக் அப்துல்லா என்ற முஸ்லிம் இளைஞனை தேசிய இராணுவத்தின் மீதான நடவடிக்கையின் போது கைது செய்தோம். முஸ்லிம் இளைஞன் என்பதால் மன்னித்தோம். சில காலம் எமது இயக்கத்தில் இருக்க அனுமதித்தோம். இவனுக்கு இந்தப் பகுதிப் பாதைகள் நாம் எங்கெங்கு இராணுவத்தினரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்பதெல்லாம் தெரியும். இவன் தான் நாம் எதிர்பார்க்காத பாதையினுள்ளால் இராணுவத்தைக் கூட்டிவந்தவன் என்றார். தொடர்ந்து இன்னுமொரு முஸ்லிம் இளைஞன் ஒருநாள் இரவு மூன்று றைபிளையும் ஒரு வாக்கிடோக்கியையும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறான். எமது முகாமிலிருந்து இராணுவமுகாமுக்கு செல்லும் வழியில் ஆறு ஒன்று உண்டு. இருட்டில் இடம் தெரியாமல் ஆழமான பகுதியில் இறங்கிவிட்டான். ஆற்று நீரோட்டத்தில் ஆள் இழுத்துச் செல்லப்பட்டான். அத்துடன் அவனது சாரம் றைபிளுக்குள் சிக்கியதால் அவனால் நீந்தமுடியாமல் போய் விட்டது. மூன்று நாள் செல்ல ஒரு றைபிளுடன் இவனது சடலம் ஒதுங்கியது. மற்ற இரண்டும் ஆற்றில் எங்கேயோ கிடக்கிறது. ஊம்... சிலரை நம்பிக் கெட்டோம்! என்றார் பதுமன். (தொடரும்)

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

2 weeks 1 day ago
பாகம் - 9 எமது இந்தப் பயணத்தின் இடையில் பொதுமக்கள் கூட்டங் கூட்டமாகக் காணப்பட்டார்கள். அனைவருக்கும் இவர் மாத்தயா என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டது. சில காலத்துக்கு முன்னர்தான். அப்பகுதிகள் எல்லாம் சுற்றிப் பார்த்து மக்களைச் சந்தித்திருந்தார் மாத்தயா. மக்கள் மாத்தயாவைப் பார்த்துச் சிரித்தும், கையசைத்தும் தமது நட்புணர்வை வெளிப்படுத்தினர். அப்போது பதுமன் இந்தச் சனங்கள் சரியான மெமறிச் சனம் அண்ணே. தேனிசை செல்லப்பாவின் நிகழ்ச்சி நடந்தபோது நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்பாட்டுத் தொடங்கியவுடனேயே நிகழ்ச்சி முடிஞ்சிட்டுது எண்டு வீட்டுக்குப் போகத் தொடங்கி விட்டுகள்” என்றார். மாத்தயா சிரித்துக்கொண்டார். போகும் வழியில் ஒரு இராணுவ முகாமிலிருந்து எம்மை நோக்கி டோர்ச் லைட் அடித்துப் பார்த்தார்கள். ஒன்றும் புரியாததாலோ, கொழுவினால் வீண்வம்பு என்று நினைத்தார்களோ ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. எம்மைப் பொறுப்பேற்க வந்திருந்த குழுவினர் இடையில் ஒரு ஜீப் போயுள்ளது இப்போது வரவேண்டாம் என்றனர். சிலவேளை திரும்பிப் போகலாமா என்றுகூட ஆராயப்பட்டது. அப்போது மாத்தயா திரும்பிப் போவது என்பது சரி வராது. வழியில் ஆமி கிடந்தால் நல்ல அடி கொடுத்துவிட்டுப் போவோம் என்றார். அப்போது அவரது உறுதியின் வெளிப்பாட்டை உணர முடிந்தது. ஆனால் சென்றது செஞ்சிலுவைச் சங்க ஜீப் என்பது பின்பு தெரியவந்தது. திரு மாத்தயா அவர்களுக்கு சென்ற முறை எங்கெங்கு மாலை போட்டார்கள், தமது பகுதிகளுக்கு வராததற்காக எங்கெங்கு கோபித்துக் கொண்டார்கள். என்னென்ன மாதிரி வரவேற்பளிக்கப்பட்டது என்பதையெல்லாம் வழியெங்கும் போராளிகள் எனக்குக் காட்டினார்கள். 25.9.90 அன்று பி. ப 3.00 மணிக்கு திருமலை மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மிக அண்மையிலுள்ள முகாமைச் சென்றடைந்தோம். போகும் வழியில் நின்ற மக்களிடம் மாதயா உரையாடினார். முந்தநாளே இங்கு உங்களை எதிர்பார்த்தோம் என்றார்கள் அந்த மக்கள். வானொலி தொலைக்காட்சிகளை விட என்னமாதிரிச் செய்தி பரவுகிறது என்று நினைத்துக் கொண்டேன். அவர் ஒவ்வொரு முகாமிலும் போராளிகளுடனும் குழுத்தலைவர் களுடனும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் உரையாடுவதும் ஆலோசனை நடத்துவதுமாக இருந்தார். ஒரு முகாமில் போராளி களிடையே உரையாற்றும் போது “இந்திய இராணுவத்துடனான மோதல் எமக்குப் பல படிப்பினைகளைத் தந்துள்ளது. எந்த ஒரு நாட்டின் உதவிகளும் இன்றிப் போராடும் நாம் எமது சொந்த மூலவளங்களை உபயோகித்து புதுப்புது ஆயுதங்கள், பொறிவெடிகள் (ஜொனி போன்றவை) போன்றவற்றைக் கண்டுபிடித்துக் கொண்டோம். சூழ்நிலைதான் இக்கண்டுபிடிப்புகளுக்கான வழிகளை ஏற்படுத்தியது. ஜொனியை நாம் கண்டுபிடித்ததால் ஆயிரக்கணக்கான இந்திய வீரர்கள் உயிரிழந்தும் காலிழந்தும் போயினர் அவர்களை இந்தியாவுக்கு ஓடவைத்ததில் ஜொனியின் பங்கு கணிசமானது. தற்போது இலங்கை இராணுவத்தினரும் ஜொனியினால் பாரிய அளவில் இழப்புகளைச் சந்தித்துள்ளார்கள். ஆகவே புதுப்புது ஆயுதங்கள் பொறி வெடிகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொருவரும் முயல வேண்டும். அத்துடன் போராட்டத்தில் காலையோ, கையையோ அல்லது வேறு எந்த அங்கத்தையோ இழந்தாலும் மனந் தளராதீர்கள். அதற்காக சயனைட் அருந்த நினைக்காதீர்கள். வாழ்வில் எந்தச் சவாலையும் சமாளிக்க வேண்டும். ஒரு காலை இழந்த கிட்டு இன்று போராட்டத்தில் தன் பங்களிப்பை வழங்கவில்லையா? அதுபோல் கையையோ காலையோ இழந்தாலும் வேறொரு துறையில் உங்களால் சாதனை புரிய முடியும்” என்று உரையாற்றினார். இன்னொரு முகாமில் சிறுவர்களே கூடுதலாக இருந்தார்கள். அந்த முகாமில் ‘இந்திய இராணுவத்துடனான மோதலில் சிறுவர்களே பெரும் பங்கெடுத்தார்கள். எமது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும், ஏன் உலகமே இந்திய இராணுவத்துடன் மோதுவது புத்திசாலித்தனமல்ல என்று கூறியபோது புதிதாக இயக்கத்தில் சேர்ந்த சிறியவர்கள்தான் இந்திய இராணுவத்தை விரட்டியடித்து சாதனை புரிந்தவர்கள். ஆகவே உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்’ என்றார். 25-9-90 அன்று தங்கிய முகாமில் குழுத் தலைவர்களுடன் உரையாடும்போது மக்களின் பட்டினி நிலையைத்தான் மிகவும் கவனமாக ஆராய்ந்தார்கள். அப்போது திரு. மாத்தயா அவர்கள் போராளிகளான நீங்கள் உங்களுடைய சாப்பாட்டில் ஒரு நேரச் சாப்பாட்டை பொது மக்களுக்கு கொடுப்பது என்ற முடிவை எடுக்கமுடியுமா? என்பதை ஆராய்ந்து பாருங்கள். 1978 ஆம் ஆண்டு மட் டக்களப்பில் சூறாவளியினால் சேதம் ஏற்பட்டபோது அங்குள்ள மக்கள் அகதிகளானார்கள். அப்போது எமது இயக்கத்தவர்கள் கூடி ஐயாயிரம் ரூபா கொடுப்போமா, பத்தாயிரம் கொடுப்போமா எப்படி உதவி செய்வோம் என்றெல்லாம் ஆராய்ந்தார்கள். அப்போது எமது தலைவர் “நாம் எமது உணவில் ஒரு நேரச் சாப்பாட்டை அகதிகளுக்கென ஒதுக்குவோம் நாம் அகதிகளுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பது முக் கியமல்ல. எப்படிக் கொடுக்கிறோம் என்பதே முக்கியமானது. எமது சாப்பாட்டின்- ஒரு பகுதியை நாம் உணர்வு பூர்வமாகக் கொடுக்கும் உதவி தான் எமக்கு ஆத்மதிருப்தியைக் கொடுக்கக் கூடியது” என்று சொன்னார். அப்போது நாம் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்கள். எமது உணவுக் காக ஒதுக்கப்பட்ட பணத்திலிருந்து நாம் கொடுத்தது சில நூற்றுக் கணக்கான ரூபாய்கள்தான். ஆனால் எமக்கு அது பெரிய திருப்தியைக் கொடுத்தது என்றார் மாத்தயா. 87 ஆம் ஆண்டுக்கு முதல் 36 இயக்கங்கள் இருந்தன. விடுகலைப் புலிகளால் மட்டும் இப்படி நிலைத்து நிற்க முடிந்ததற்கு என்ன காரணம் என்பது அப்போது எனக்குப் புரிந்தது. நாங்கள் இப்போது இருந்த இடத்திலிருத்து நாங்கள் புறப் பட்டமுகாமுக்கு ஒவ்வொருவரும் கால் நடையாக கால்மூடை அரிசி, சீனி என்பன சுமந்து சென்றார்கள். எமது பயணத்தில் இது போன்ற காட்சிகளை அடிக்கடி கண்டேன். பத்துமணித்தியாலம் பன்னிரண்டு மணித்தியாலம் என்று சுமக்கப்போகிறார்கள். இல்லாவிட்டால் அங்கிருப்பவர்களுக்குச் சாப்பாடு இல்லை. ஒரு முறை சிரித்திரன் ஆசிரியர் சிவா அவர்கள் தமது தலையங்கம் ஒன்றில் “தன்மானம் மிக்க தமிழினம் சிலுவை சுமக்க நேரினும் சலுகை ஏந்தாப்பண் புடையது” என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. யேசுபிரான் வாழ்நாளில் ஒரே ஒரு முறைதான் சிலுவை சுமந்தார். இப்போராளிகள் நாள்தோறும் சுமக்கிறார்கள். இந்தத் தியாகங்களை சிறிலங்கா அரசு நினைப்பது போல் அழித்து விட முடியுமா? இது வெட்ட வெட்டத் தழைக்கும் என நினைத்துக் கொண்டேன். (தொடரும்)

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 1 day ago
தமிழக கடல்வள கொள்ளையர்கள் எல்லை தாண்டி வந்து எம் வளங்களை கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்லாமல், கச்சதீவை மீட்டால் பிரச்சனை தீரும் என்று தமிழக அரசியல்வாதிகள் ஸ்டாலினில் இருந்து சீமான் தொட்டு விஜய் வரைக்கும் கச்சதீவை மீட்க சொல்லி செய்யும் பம்மாத்து போலி அரசியலுக்கு அனுர தக்க பதிலை கொடுத்து இருக்கின்றார். கண்டிப்பாக இது தமிழக அரசியல்வாதிகளுக்கு வெறுப்பை தரும் விடயம்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks 1 day ago
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1099335105203292 👈 ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழியையும் பார்வையிட்டு சென்றிருக்கலாம்.😔 யாழிலிருந்து செம்மணி வீதியூடாக ஜனாதிபதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றபோது காணொளி - யாழ்.தீபன்

16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்

2 weeks 1 day ago
02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது. இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது. இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில் இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224010

16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்

2 weeks 1 day ago

02 Sep, 2025 | 12:51 PM

image

சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது.

இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது.

இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில்  இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

download.jpg

download__1_.jpg

https://www.virakesari.lk/article/224010

சூடானில் கிராமத்தை அழித்த நிலச்சரிவு - 1000க்கும் மேற்பட்டோர் பலி

2 weeks 1 day ago
சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 02 Sep, 2025 | 08:05 AM சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார். சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது. 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார். இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது. இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார். https://www.virakesari.lk/article/223982

யாழ் செல்கிறார் அநுர – புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்!

2 weeks 1 day ago
கிளிநொச்சியில் விதை தென்னந்தோட்டம் ஜனாதிபதி அநுரவினால் ஆரம்பிப்பு 02 Sep, 2025 | 10:14 AM கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார். வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன. சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/223989

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

2 weeks 1 day ago
Published By: Vishnu 02 Sep, 2025 | 03:20 AM ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். 1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது. நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும். இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன. அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும். திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/223980

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

2 weeks 1 day ago

Published By: Vishnu

02 Sep, 2025 | 03:20 AM

image

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1__1_.jpg

1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது.

1__2_.jpg

இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

நிதி செலவிடலில் தொகைகள்  வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும்.

இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன.

அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும்.

திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/223980

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 1 day ago
கச்சதீவை தங்களுக்கு தரும்படி... ஈழத்தின் மருமகன் விஜய் கேட்கின்றார். இப்ப என்ன செய்யிறது. 😂 கச்சதீவினை மீட்டு தருமாறு பிரதமர் மோடியிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் கோரிக்கை!