Aggregator

புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

2 weeks ago
முந்தைய சிங்கப்பூர் ஜனாதிபதி லீக்குவான் லீயை பின்பற்ற முயற்சிக்கிறாரா? அல்லது தனது பாதுகாப்பை தானே உறுதிப்படுத்தி தமிழரின் மனதை கவர்கிறாரா? பொறுத்திருந்து பாப்போம்!

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks ago
ஸ்டாலின் சீமான் விஜய் இணைந்து ஒரு சர்வகட்சி மகாநாட்டை கூட்ட வேண்டியது தான். அவர் உண்மையிலே சொல்ல வந்தது இலங்கை மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்கட்டும் பின்பு இரண்டு நாட்களுக்கு இந்திய மீனவர்கள் அங்கே வந்து களவு எடுக்க அனுமதிக்க வேண்டும்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks ago
அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது. அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை. நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks ago
ஆரோ ஒரு தம்பி மணியாத்தான் யோசிச்சிருக்கிறார். X தளத்தில் சுட்டது 😎

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks ago
தமிழ் கட்சிகள் ரூம் போட்டு யோசிக்கப் போகிறார்கள். இதே மாதிரி போனால் மாகாணசபை தேர்தலிலும் என்பிபி முதலமைச்சராகி விடுவார்களோ?

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

2 weeks ago
எவன்டா இவன் முட்டையில் மயிர் புடுங்குகிறானே?

காற்றாலை, கனிம மணல் விவகாரம் : மன்னார் வந்த நிபுணர் குழு மக்களின் குற்றச்சாட்டுக்களில் கரிசனை கொள்ளவில்லை - வி.எஸ்.சிவகரன்

2 weeks ago
இங்கே ஏன் "உணர்வுகள்" பற்றிப் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கனியமணல் அகழ்வு நிச்சயம் சூழல் பாதிப்பைத் தரும், எனவே அதை எதிர்க்க வேண்டும். காற்றாலைகளால் என்ன தீமைகள் மன்னாருக்கு ஏற்படும் என எந்த ஆய்வு முயற்சியாவது யாராவது செய்து அதன் அடிப்படையில் அல்லவா பேச வேண்டும். உணர்வை மட்டும் வைத்துக் கொன்டு எதை நிறுவ முடியும்/ எங்கே தீர்வு தேட முடியும்?

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை - வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

2 weeks ago
சில ஆண்டுகள் முன்னர், யாழ் பா.உ ஆக இருந்த அங்கஜன் இவரது பிரதேசத்தில் வீதி புனரமைத்த வேளையில், அது பற்றிய விளம்பரப் பலகையை ஒளித்து வைத்த அதே நிரோஷா இவர்? "வெளிப்படைத்தன்மை" பற்றி வகுப்பெடுக்க சரியான ஆள் தான் இவர்😂!

காலநிலை மாற்றம்: இலங்கையின் தமிழ்த்தாயகத்திக்கு கொண்டுவரும் புதிய நெருக்கடி நிலை

2 weeks ago
வவுனியாவின் தண்ணீரில் இருக்கும் கல்சியம் காபனேற் கூட நீர் ஆவியாகும் போது இவ்வாறு படியலாம். அதை "உப்பு -NaCl" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks ago
🔴 வடக்கில் தொடரும் AKD’க்கான அன்பு! தனது ஜனாதிபதி பதவியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவும், அங்குரார்ப்பணம் செய்யவும் செப்டம்பர் 1, 2 திகதிகளில் இலங்கையின் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுக்கு மக்களின் நெருக்கமான அன்பும் மரியாதையும் கிடைத்திருப்பதை அங்குள்ள பல்வேறு புகைப்படக்கருவிகள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 1 day ago
இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர! இந்தியாவுக்கான மறைமுக எச்சரிக்கையா? கச்சைதீவு தொடர்பில் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமாலை கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சி நிரலில் இல்லாத, திடீர்ப் பயணமாக இது அமைந்தது. தமிழகத்தில் எதிர்வரும் வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது பிரதான தேர்தல் பரப்புரைக்களமாக கச்சதீவைப் பயன்படுத்தி வருகின்றன. கச்சதீவை இலங்கையில் இருந்து மீட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதாகவே பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி அநுர கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர். 'கச்சதீவு இலங்கைக்குரியது. அதை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழகத் தலைவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை' என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அநுரவின் நேற்றைய பயணம் அமைந்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!