Aggregator

நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்

2 weeks ago
நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர் 03 Sep, 2025 | 11:00 AM நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இணைந்து கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம். அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது. நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/224070

நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்

2 weeks ago

நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்

03 Sep, 2025 | 11:00 AM

image

நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இணைந்து  கச்சத்தீவுக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் எமது மீனவ சொந்தங்களின் பாதுகாப்பு, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு திட்டங்கள் பற்றி கடற்படையினரிடம் கேட்டறிந்தோம்.

அதேபோல சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்குரிய பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவை ஒன்றிணைத்த வகையில் சுற்றுலா திட்டமொன்றை மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடு பற்றியும் கேட்டறியப்பட்டது.

நெடுந்தீவுக்கு தற்போது சுற்றுலாப் பயணிகள் வரும் நிலையில் அதனை கச்சத்தீவுவரை மேம்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது என்றார்.

Photo__3___1_.jpg

Photo__2___1_.jpg

Photo__4___1_.jpg

Photo__1___1_.jpg

https://www.virakesari.lk/article/224070

ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்

2 weeks ago
ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல் 03 September 2025 எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute

ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்

2 weeks ago

ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்தல்

03 September 2025

1756869963_7296282_hirunews.jpg

எதிர்வரும் 08 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள, இலங்கை அரசாங்கம் தவறிவிட்டதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதற்கமைய, உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்கு புதிய அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பொன்று கிட்டியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரகாரம், புதிய அரசாங்கத்திற்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பமாக அமையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

யுத்தக் காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் அவசியம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்குத் தேவையான இறுக்கமான பொறிமுறைகள் அவசியம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறைகளை உறுதிப்படுத்துவதோடு, நீதிமன்றக் கட்டமைப்பினூடாக பாதுகாப்புத் துறைக்கான மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் நாட்டில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையை குறித்த அறிக்கையூடாக வரவேற்கப்பட்டுள்ளதுடன், அந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை சர்வதேச கண்காணிப்பின் கீழ் மேற்பார்வை செய்ய வேண்டும் எனவும் ஐ.நா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தனது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, ரோம் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/418056/insisting-that-sri-lanka-sign-the-rome-statute

செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!

2 weeks ago
செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்! அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/செம்மணி_வழக்கை_சிறப்பாகக்_கையாண்ட_நீதிவான்_ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு_பதவி_உயர்வுடன்_இடமாற்றம்!

செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!

2 weeks ago

செம்மணி வழக்கை சிறப்பாகக் கையாண்ட நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம்!

252510414.jpeg

அரியாலை - செம்மணிப் புதைகுழி வழக்கை, மிகச் சிறப்பான முறையில் கையாண்டு வந்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதிகளாக சில நீதிபதிகள் பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவராகவே, நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கான அனுபவத்தையும், தகுதியையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா நீண்ட காலத்துக்கு முன்னரே பெற்றிருந்த போதிலும், தற்போது திடீரென இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்குகளை இனிவரும் நாள்களில் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கில், கிட்டத்தட்ட 50 வீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. பணிகள் இவ்வாறு வேகமாக நிறைவடைவதற்கு நீதிபதி ஆனந்தராஜா காட் டிய அக்கறையும், அவருடைய அர்ப்பணிப்பான செயற்பாடுகளுமே காரணம் என்று துறைசார் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இவ்வாறான நிலையிலேயே, அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டு, செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கை அவர் கையாள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அகழ்வுப் பணிகளை சம்பிரதாயபூர்வமாக மேற்பார்வை செய்யாமல், சான்றுப் பொருள்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னெடுத்திருந்தார். அகழ்வுப் பணிகளின் கால அளவை நீடிப்பது தொடர்பில் காத்திரமான உத்தரவுகளை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/செம்மணி_வழக்கை_சிறப்பாகக்_கையாண்ட_நீதிவான்_ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு_பதவி_உயர்வுடன்_இடமாற்றம்!

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks ago
பிரிக்ஸ் காலத்தின் தேவையான ஒரு முக்கிய உலக பொருளாதார தேவையாகவுள்ளது, ஆரம்பத்தில் பிரிக்ஸ் முன்னேற்றத்திற்கு பின் துடுப்பு போட்ட இந்தியா தனது மூலோபாய தோல்வியின் பின்னர் தற்போது வேறுவழியின்றி அரசியல் தஞ்சம் கோரிய இடமாக பிரிக்ஸினை கருதுகிறேன், இப்படி நிலையற்ற உருப்படியற்ற மூலோபாய கொள்கையுடைய இந்தியாவினால் பிரிக்ஸிற்கு அதிகளவில் சாதகம் ஏற்பட போவதில்லை பாதகமே ஏற்படும்.

மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது

2 weeks ago
மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது. Le Canard Enchaîné ஆல் வெளிப்படுத்தப்பட்ட இந்த அறிவுறுத்தல், பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு (ARS) அனுப்பப்பட்டுள்ளது, மேலும் பிரான்ஸ் ஒரு பெரிய அளவிலான மோதலில் பின்புற தளமாக மாறினால் அந்த அமைப்பு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை வரைகிறது. கடிதம் என்ன கேட்கிறது: மையங்கள், பயிற்சி மற்றும் மனிதவளம் ஜூலை 18, 2025 தேதியிட்ட ஆவணத்தின்படி, குறுகிய அறிவிப்பில், பிரெஞ்சு மற்றும் நட்பு நாடுகளின் காயமடைந்த துருப்புக்களை அதிக எண்ணிக்கையில் வரவேற்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், வாரக்கணக்கில் அல்லது மாதங்களுக்கு கூட அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓட்டத்தை விரைவுபடுத்த, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் மருத்துவ நிலை மையங்களை அமைக்க அமைச்சகம் முன்மொழிகிறது, இதனால் நோயாளிகள் நிலைப்படுத்தப்பட்டு விரைவாக தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றப்பட முடியும். யூரோ வாராந்திர செய்திகளில் அதிகம் படிக்கப்பட்டவை மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது 'எல்லாவற்றையும் தடுப்போம்': செப்டம்பர் 10 ஆம் தேதி பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் தயாராகிறது. செப்டம்பர் 18–19 அன்று பிரான்ஸ் ATC வேலைநிறுத்தம்: உங்கள் விமானம் வெற்றி பெறுமா? தெளிவான பயிற்சி உந்துதலும் உள்ளது. 'போர்க்காலக் கட்டுப்பாடுகள்' குறித்து ஊழியர்களுக்கு விளக்கப்பட வேண்டும் - பற்றாக்குறையான பொருட்கள், தேவையில் திடீர் அதிகரிப்பு மற்றும் தளவாடங்கள் சீர்குலைந்தன என்று கருதுங்கள் - மேலும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தம் மற்றும் சிக்கலான காயங்களுக்கான மறுவாழ்வு மருந்து உள்ளிட்ட அதிர்ச்சி பராமரிப்பு குறித்து புதுப்பிக்கப்பட வேண்டும். இணையாக, முன்னணி-வரிசை திறனை வலுப்படுத்த, அமைப்பு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இராணுவ சுகாதார சேவையில் (Service de santé des armées) சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். பெருமளவிலான உயிரிழப்புத் திட்டம்: திட்டமிடப்பட்ட எண்கள் மற்றும் மறுமொழி காலவரிசை திட்டமிடல் அனுமானங்கள் கவலையளிக்கின்றன. Le Canard அறிக்கை செய்த வழிகாட்டுதலின்படி , ஒரு நெருக்கடி எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்து, 10 முதல் 180 நாட்கள் வரை மருத்துவமனைகள் 10,000 முதல் 50,000 வரை காயமடைந்த பணியாளர்களை உள்வாங்க முடியும். அத்தகைய எண்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல; அவர்கள் வந்தால் அமைப்பு சமாளிக்க முடியும் என்பதாகும். மருத்துவமனை மேலாளர்களுக்கான மொழிபெயர்ப்பு: படுக்கைகளை விரைவாக விடுவித்தல், வரவேற்பு மற்றும் சிகிச்சை முறையை ஒத்திகை பார்த்தல், எந்தெந்த வார்டுகள் அதிர்ச்சிக்கு ஆளாகக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுதல், மற்றும் படுக்கையிலிருந்து விமான சாய்வுப் பாதை வரை வெளியேற்றும் பாதைகளை வரைபடமாக்குதல். இந்தக் கடிதம் நீண்ட தூரப் பயணத்தின் மனிதப் பக்கத்தையும் தொடுகிறது - பல மாத அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பணியாளர்கள் பணியமர்த்தல் மற்றும் அட்ரினலினில் வாழும் குழுக்களுக்கு உளவியல் ஆதரவு. 'பீதி அடைய வேண்டாம், விவேகத்துடன் இருங்கள்' என்று அரசாங்கம் கூறுகிறது. BFMTV இல் கசிவு குறித்து கேட்டதற்கு , சுகாதார அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கடிதப் பரிமாற்றத்தை மறுக்கவில்லை. அவரது நிலைப்பாடு அமைதியாக இருந்தது: “மருத்துவமனைகள் எப்போதும் தயாராகி வருகின்றன - தொற்றுநோய்களுக்கு, திடீர் அலைகளுக்கு. ஒரு நாடு நெருக்கடிகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்பார்ப்பது இயல்பானது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தற்செயல் திட்டமிடல், போரின் முன்னறிவிப்பு அல்ல. அப்படியிருந்தும், இந்தக் குறிப்பின் நேரமும் எளிய மொழியும் பொதுவாக நெருக்கடிகளுக்கு எதிராக மீள்தன்மையை உருவாக்குவதற்கான பரந்த ஐரோப்பிய உந்துதலுடன் பொருந்துகின்றன. சைபர் சம்பவங்கள் முதல் மின்தடை மற்றும் தீவிர வானிலை வரை அனைத்திற்கும் அரசாங்கங்கள் புதுப்பித்த தற்செயல் திட்டங்களைத் தீட்டி வருகின்றன, மேலும் குறுகிய கால இடையூறுகளைத் தவிர்க்க அடிப்படை அவசர கருவிகளை - தண்ணீர், பேட்டரிகள், மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்களை - ஒன்று சேர்க்குமாறு ஐரோப்பிய ஆணையம் வீடுகளை வலியுறுத்தியுள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை, அதன் சுகாதார சேவைக்கான செய்தி எளிமையானதாகவும் அப்பட்டமாகவும் உள்ளது: அதிக தீவிரம் கொண்ட மோதலின் பின்னணியாக செயல்படத் தயாராக இருங்கள் - விரைவில் தயாராகுங்கள். Euro Weekly NewsFrance orders hospitals war-ready by MarchLeaked memo tells ARS to plan for 10k–50k casualties, hubs near ports/airports, trauma & rehab training. EU also urges basic home emergency kits.

மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது

2 weeks ago

மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது

ஃபரா மோக்ரானி • புதுப்பிக்கப்பட்டது: 27 ஆகஸ்ட் 2025 • 21:23 • 2 நிமிடங்கள் படிக்கப்பட்டது

பிரெஞ்சு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே நீல நிற ஸ்க்ரப்கள் மற்றும் வெள்ளை கோட் அணிந்த மருத்துவமனை ஊழியர், பின்னணியில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரான்ஸ் மருத்துவமனை தயார்நிலை: மார்ச் 2026 க்குள் ஏற்படக்கூடிய பெருமளவிலான உயிரிழப்புகளுக்கு பிராந்திய மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்று கசிந்த சுகாதார அமைச்சகக் குறிப்பு வலியுறுத்துகிறது, இதில் துறைமுகங்கள்/விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள மையங்கள் மற்றும் கூடுதல் அதிர்ச்சி/PTSD பயிற்சி ஆகியவை அடங்கும். நன்றி: DBrownPhotos, Shutterstock

பிரான்சின் சுகாதார அமைச்சகம், மார்ச் 2026 க்குள் முழு தயார்நிலையுடன், ஐரோப்பாவில் ஒரு 'பெரிய இராணுவ ஈடுபாட்டிற்கு' தயாராகுமாறு நாட்டின் மருத்துவமனைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

Le Canard Enchaîné ஆல் வெளிப்படுத்தப்பட்ட இந்த அறிவுறுத்தல், பிராந்திய சுகாதார நிறுவனங்களுக்கு (ARS) அனுப்பப்பட்டுள்ளது, மேலும் பிரான்ஸ் ஒரு பெரிய அளவிலான மோதலில் பின்புற தளமாக மாறினால் அந்த அமைப்பு எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதை வரைகிறது.

கடிதம் என்ன கேட்கிறது: மையங்கள், பயிற்சி மற்றும் மனிதவளம்

ஜூலை 18, 2025 தேதியிட்ட ஆவணத்தின்படி, குறுகிய அறிவிப்பில், பிரெஞ்சு மற்றும் நட்பு நாடுகளின் காயமடைந்த துருப்புக்களை அதிக எண்ணிக்கையில் வரவேற்க மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும் என்றும், வாரக்கணக்கில் அல்லது மாதங்களுக்கு கூட அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓட்டத்தை விரைவுபடுத்த, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அருகில் மருத்துவ நிலை மையங்களை அமைக்க அமைச்சகம் முன்மொழிகிறது, இதனால் நோயாளிகள் நிலைப்படுத்தப்பட்டு விரைவாக தங்கள் சொந்த நாடுகளுக்கு மாற்றப்பட முடியும்.

யூரோ வாராந்திர செய்திகளில் அதிகம் படிக்கப்பட்டவை

France-orders-hospitals-war-ready-by-Mar

மார்ச் 2026க்குள் மருத்துவமனைகள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் கூறுகிறது

France.jpg?width=480&aspect_ratio=48:31

'எல்லாவற்றையும் தடுப்போம்': செப்டம்பர் 10 ஆம் தேதி பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் தயாராகிறது. 

air-traffic-controllers-strike.jpg?width

செப்டம்பர் 18–19 அன்று பிரான்ஸ் ATC வேலைநிறுத்தம்: உங்கள் விமானம் வெற்றி பெறுமா?

தெளிவான பயிற்சி உந்துதலும் உள்ளது. 'போர்க்காலக் கட்டுப்பாடுகள்' குறித்து ஊழியர்களுக்கு விளக்கப்பட வேண்டும் - பற்றாக்குறையான பொருட்கள், தேவையில் திடீர் அதிகரிப்பு மற்றும் தளவாடங்கள் சீர்குலைந்தன என்று கருதுங்கள் - மேலும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தம் மற்றும் சிக்கலான காயங்களுக்கான மறுவாழ்வு மருந்து உள்ளிட்ட அதிர்ச்சி பராமரிப்பு குறித்து புதுப்பிக்கப்பட வேண்டும். இணையாக, முன்னணி-வரிசை திறனை வலுப்படுத்த, அமைப்பு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இராணுவ சுகாதார சேவையில் (Service de santé des armées) சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பெருமளவிலான உயிரிழப்புத் திட்டம்: திட்டமிடப்பட்ட எண்கள் மற்றும் மறுமொழி காலவரிசை

திட்டமிடல் அனுமானங்கள் கவலையளிக்கின்றன. Le Canard அறிக்கை செய்த வழிகாட்டுதலின்படி , ஒரு நெருக்கடி எவ்வாறு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்து, 10 முதல் 180 நாட்கள் வரை மருத்துவமனைகள் 10,000 முதல் 50,000 வரை காயமடைந்த பணியாளர்களை உள்வாங்க முடியும். அத்தகைய எண்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று அர்த்தமல்ல; அவர்கள் வந்தால் அமைப்பு சமாளிக்க முடியும் என்பதாகும்.

மருத்துவமனை மேலாளர்களுக்கான மொழிபெயர்ப்பு: படுக்கைகளை விரைவாக விடுவித்தல், வரவேற்பு மற்றும் சிகிச்சை முறையை ஒத்திகை பார்த்தல், எந்தெந்த வார்டுகள் அதிர்ச்சிக்கு ஆளாகக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுதல், மற்றும் படுக்கையிலிருந்து விமான சாய்வுப் பாதை வரை வெளியேற்றும் பாதைகளை வரைபடமாக்குதல். இந்தக் கடிதம் நீண்ட தூரப் பயணத்தின் மனிதப் பக்கத்தையும் தொடுகிறது - பல மாத அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பணியாளர்கள் பணியமர்த்தல் மற்றும் அட்ரினலினில் வாழும் குழுக்களுக்கு உளவியல் ஆதரவு.

'பீதி அடைய வேண்டாம், விவேகத்துடன் இருங்கள்' என்று அரசாங்கம் கூறுகிறது.

BFMTV இல் கசிவு குறித்து கேட்டதற்கு , சுகாதார அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கடிதப் பரிமாற்றத்தை மறுக்கவில்லை. அவரது நிலைப்பாடு அமைதியாக இருந்தது: “மருத்துவமனைகள் எப்போதும் தயாராகி வருகின்றன - தொற்றுநோய்களுக்கு, திடீர் அலைகளுக்கு. ஒரு நாடு நெருக்கடிகளையும் அவற்றின் விளைவுகளையும் எதிர்பார்ப்பது இயல்பானது.” வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தற்செயல் திட்டமிடல், போரின் முன்னறிவிப்பு அல்ல.

அப்படியிருந்தும், இந்தக் குறிப்பின் நேரமும் எளிய மொழியும் பொதுவாக நெருக்கடிகளுக்கு எதிராக மீள்தன்மையை உருவாக்குவதற்கான பரந்த ஐரோப்பிய உந்துதலுடன் பொருந்துகின்றன. சைபர் சம்பவங்கள் முதல் மின்தடை மற்றும் தீவிர வானிலை வரை அனைத்திற்கும் அரசாங்கங்கள் புதுப்பித்த தற்செயல் திட்டங்களைத் தீட்டி வருகின்றன, மேலும் குறுகிய கால இடையூறுகளைத் தவிர்க்க அடிப்படை அவசர கருவிகளை - தண்ணீர், பேட்டரிகள், மருந்துகள் மற்றும் முக்கிய ஆவணங்களை - ஒன்று சேர்க்குமாறு ஐரோப்பிய ஆணையம் வீடுகளை வலியுறுத்தியுள்ளது. பிரான்சைப் பொறுத்தவரை, அதன் சுகாதார சேவைக்கான செய்தி எளிமையானதாகவும் அப்பட்டமாகவும் உள்ளது: அதிக தீவிரம் கொண்ட மோதலின் பின்னணியாக செயல்படத் தயாராக இருங்கள் - விரைவில் தயாராகுங்கள்.

Euro Weekly News
No image previewFrance orders hospitals war-ready by March
Leaked memo tells ARS to plan for 10k–50k casualties, hubs near ports/airports, trauma & rehab training. EU also urges basic home emergency kits.

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு

2 weeks ago
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு. வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார். அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது, அவர்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445849

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு

2 weeks ago

Capture-1.jpg?resize=691%2C375&ssl=1

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு.

வெனிசுலா கடற்கரையை அண்டிய கடற்பரப்பில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கப்பல் மீது அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில்  11 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக பதவி வகித்து வருகிறார்.

அவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாகவும் கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள், சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கிப் போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களைக் குறிவைத்து இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச கடல் வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது, அவர்களை குறிவைத்து அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445849

2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!

2 weeks ago
2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித! லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார். “வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது. 1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,636 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 100 புகைப்படங்கள் மட்டுமே விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளன. லக்ஷிதவின் விருது பெற்ற ‘Toxic Tip’ எனும் தலைப்பிலான புகைப்படம், அம்பாறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மனித-யானை மோதல்கள் மற்றும் தவறான கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்து வந்த அவர், உணவுக்காக ஒரு பெரிய குப்பைக் கிடங்கில் தேடும் தனி யானையின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த படம், இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன், மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உட்கொள்வதால் யானைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கழிவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, யானைகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இலங்கை, ஆசியாவில் மனித-யானை மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 400 யானைகளும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களும் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக லக்ஷித கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்” “இந்த விருது எனக்கானதல்ல; நமது வாழ்க்கை முறை மற்றும் கழிவு மேலாண்மை வனவிலங்குகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கை. யானைகள் நமது கலாசார அடையாளத்தின் பகுதியாக உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம்,” எனக் கூறினார். இந்த வெற்றி, இலங்கையை உலக வனவிலங்கு புகைப்படத் துறையில் மீண்டும் உயர்த்தி நிறுத்திய பெருமையான தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445775

2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!

2 weeks ago

62e3bd90-6230-11f0-b903-f515e3045d80.jpg

2025 ஆம் ஆண்டிற்கான வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார் லக்ஷித!

லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் Wildlife Photographer of the Year (WPY) போட்டியில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்ன மீண்டும் ஒரு விருதை வென்று இலங்கைக்கு பெறுமை சேர்த்துள்ளார்.

“வனவிலங்கு புகைப்படக் கலைஞரின் ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்தப் போட்டியில், அவர் இரண்டு தடவைகள் வெற்றி பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 61 ஆண்டுகால WPY வரலாற்றில் இது ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.

62e3bd90-6230-11f0-b903-f515e3045d80.jpg-1.webp?resize=600%2C360&ssl=1

1965 முதல் நடைபெற்று வரும் இந்தப் போட்டிக்கு, இந்த ஆண்டு மட்டும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 60,636 புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் 100 புகைப்படங்கள் மட்டுமே விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளன.

லக்ஷிதவின் விருது பெற்ற ‘Toxic Tip’ எனும் தலைப்பிலான புகைப்படம், அம்பாறை மாவட்டத்தில் எடுக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளாக மனித-யானை மோதல்கள் மற்றும் தவறான கழிவு மேலாண்மை தொடர்பான தகவல்களை சேகரித்து வந்த அவர், உணவுக்காக ஒரு பெரிய குப்பைக் கிடங்கில் தேடும் தனி யானையின் புகைப்படத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்த படம், இலங்கையில் பிளாஸ்டிக், பொலிதீன், மைக்ரோபிளாஸ்டிக் போன்ற கழிவுகளை உட்கொள்வதால் யானைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளை வெளிப்படுத்துகிறது. இத்தகைய கழிவுகள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்துவதோடு, யானைகளின் ஆயுட்காலத்தையும் குறைக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இலங்கை, ஆசியாவில் மனித-யானை மோதல்கள் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 400 யானைகளும், 100க்கும் மேற்பட்ட மனிதர்களும் இந்த மோதல்களில் உயிரிழப்பதாக தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக  லக்ஷித கருணாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்”

இந்த விருது எனக்கானதல்ல; நமது வாழ்க்கை முறை மற்றும் கழிவு மேலாண்மை வனவிலங்குகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதற்கான ஒரு எச்சரிக்கை. யானைகள் நமது கலாசார அடையாளத்தின் பகுதியாக உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பது நமது பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு சமம்,” எனக் கூறினார்.

இந்த வெற்றி, இலங்கையை உலக வனவிலங்கு புகைப்படத் துறையில் மீண்டும் உயர்த்தி நிறுத்திய பெருமையான தருணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445775

ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!

2 weeks ago
ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு! எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார். இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1445823

ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!

2 weeks ago

New-Project-44.jpg?resize=750%2C375&ssl=

ரணிலின் உடல்நிலை கவலைகளால் ஐ.தே.க.வின் ஆண்டு விழா ஒத்திவைப்பு!

எதிர்வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (02) கூடிய கட்சியின் நிர்வாகக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுக்கோரல தெரிவித்தார்.

இந்த மாத இறுதியில் நிகழ்வு மீண்டும் திட்டமிடப்படும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ ஆலோசனை மற்றும் கட்சி குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://athavannews.com/2025/1445823

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks ago
கச்சத்தீவு குறித்த ஜனாதிபதியின் கருத்துக்கு இந்திய அரசியல்வாதிகள் கண்டனம்! கச்சத்தீவு குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. நேற்று முன்தினம் கச்சத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவு இலங்கைக்கு உரியது எனவும், அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த இக் கருத்தானது இந்திய அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்திய அரசியல் கட்சிகள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்தவகையில் கச்சத்தீவு குறித்த இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்த கருத்து, இரு நாட்டு உறவுக்கு விரோதமானது எனவும் இந்த விடயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கச்சத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா். அனுரகுமார திசாநாயக்கவின் இந்தப் பேச்சு இந்தியா – இலங்கை நல்லுறவுக்கு வலு சேர்க்காது. இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது. கச்சத்தீவு மற்றும் தமிழக கடற்றொழிலாளர்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக கடற்றொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவு அமைச்சு கருத்திற்கொள்ள வேண்டும். தமிழக கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகனும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை ஜனாதிபதியின் பேச்சு தமிழக கடற்றொழிலாளர்களின் உரிமைக்கும், மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சாகும் எனவும், கச்சத்தீவு தமிழர்களின் உரிமை நிலம் எனவும், இலங்கை ஜனாதிபதியின் பேச்சுக்கு மத்திய அரசும், அமைச்சர்களும் மௌனம் சாதிப்பது வரலாற்றின் பெரும் துரோகம் எனவும், எனவே, கச்சத் தீவை மீட்டெடுக்க சட்ட, அரசியல் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தொடங்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்துவோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1445837

ஒரே மேடையில் மோதி, ஷீ ஜின்பிங், புதின் - டிரம்பின் செயல்களால் தனித்து விடப்படுகிறதா அமெரிக்கா?

2 weeks ago
தியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு! ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார். இதன்போது பேசிய சீன ஜனாதிபதி, உலகம் அமைதி அல்லது போருக்கு இடையேயான தேர்வை எதிர்கொள்கிறது என்று தியானன்மென் சதுக்கத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கூடியிருந்த கூட்டத்தில் வலியுறுத்தினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் தோல்வியடைந்த 80 ஆண்டுகளைக் குறிக்கும் இந்த ஆடம்பர நிகழ்வை மேற்கத்திய தலைவர்கள் பெரும்பாலும் புறக்கணித்து வருகின்றனர். உக்ரேன் போர் மற்றும் கிம்மின் அணுசக்தி இலட்சியங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளின் விரோதிகளாக பார்க்கப்படும் புட்டின் மற்றும் கிம் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக இந் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். சீனாவின் இராணுவ வலிமை, இராஜதந்திர செல்வாக்கை வெளிப்படுத்த அரங்கேற்றப்பட்ட இந்த நிகழ்வு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தக வரிகள் மற்றும் நிலையற்ற கொள்கை வகுத்தல் ஆகியவை பங்காளிகள் மற்றும் போட்டியாளர்களுடனான அதன் உறவுகளை சீர்குலைக்கும் நேரத்திலும் வந்துள்ளது. இந்த அணி வகுதிப்பில் படைப் பலம், ஏவுகணைகள், டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற அதிநவீன இராணுவ உபகரணங்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வுக்கு முன்னதாக முன்னாள் தலைவர் மாவோ சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்திருந்த ஜின்பிங், 20க்கும் மேற்பட்ட தலைவர்களை சிவப்பு கம்பள வரவேற்புடன் வரவேற்றார். Related Athavan Newsதியானன்மென்னில் நடந்த சீனாவின் பிரமாண்டமான இராணுவ அணிவகுப...ரஷ்யாவின் விளாடிமிர் புட்ன் மற்றும் வட கொரியாவின் கிம் ஜொங் உன் ஆகியோரின் பங்களிப்புடன் புதன்கிழமை (03) தனது நாட்டின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நடத்தினார். இதன்போது பேசி

காணொளியிலுள்ள சில விடையங்களை பேச்சு சிங்களத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்க உதவுங்கள்...

2 weeks ago
வணக்கம், இந்த நிகழ்படத்தில் காட்டப்படும் படகுகளின் நீள அகலம் பற்றி ஏதேனும் அந்நிகழ்படங்களில் சொல்லப்படுகிறதா? சொல்லப்படும் பட்சத்தில் அதன் நீள அகலங்களை தமிழிற்கு மொழிபெயர்த்து தருவீர்களா? 1) 2) 3)

Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary

2 weeks ago
Conclusion The Sea Tigers were more than just a rebel movement's naval wing; they were an example of how resourcefulness, self-control, and willpower can transform the battlefield—even at sea. From their improvised origins as the Sea Pigeons to a fleet that could compete with state navies, they personified the LTTE's determination to overcome insurmountable obstacles. Sea Tigers' strategies—whether they involved underwater sabotage, bomb-laden craft attacks, or lightning-fast attacks—had a profound impact on contemporary asymmetric warfare. Even though Mullivaikkal's collapse in 2009 marked the end of the Sea Tigers, their legacy still captivates historians and analysts, serving as a reminder that nation-states are not the only ones capable of innovating in warfare. Note: This article did not include the count on Sea Tigers' ocean-going fleet 💬 Author’s Note Thank you for reading to the end. I would love to hear your thoughts and comments on this work. ✍️ Research and Analysis: Nanni Chozhan 📷 Image Credits: All images belong to their respective owners. No copyright is claimed. *****