1 week 3 days ago
நீங்கள் ஒரு வித்தியாசமான ஆளென்று எங்கையோ ..படித்தது உண்மைதான் போல..
1 week 3 days ago
எனக்கு விளையாட ஓரளவு தெரியும். முன்னர் ODI, Test போட்டிகளின் விபரம் எல்லாமும் ஒரு கணினி போல டேட்டாவை மனதில் வைத்திருப்பேன். அசாருதீன், ஹன்சி கொரொஞ்சே, ஹெர்செல் கிப்ஸ், என சில மனதுக்கு பிடித்த வீரர்கள் செய்த ஊத்தை வேலையால் கிரிகெட் பார்பதையே ஒரு 10 வருடம் விட்டு விட்டேன். 2005 பேர்மிங்காம் ஆஷஸ் போட்டியை நண்பர் வீட்டில் சும்மா பார்க்க தொடங்கிய பிந்தான் மீளவும் கிரிகெட் பார்ப்பது. ஆனால் அதுவும் இங், அவுஸ், இந்தியா, தெ.ஆ விளையாடும் டெஸ்ட் போட்டிகளை மட்டுமே. குறிப்பாக T20 பார்ப்பதே இல்லை. அதனால்….வைபவ் சூர்ய வன்சிக்கும், சூர்யவம்சம் சரத்குமாருக்கும் கூட எனக்கு இப்போ வித்தியாசம் தெரியாது 😀.
1 week 3 days ago
இந்தியாவுடன் மச் விளையாடப்போறம் என்பதற்காக ..உசாரா விளையாடுவினம்
1 week 3 days ago
ஆப்கான், நேபாளம் வழியாக முன்னேறி(!) சுமை தாங்கிப் போட்டியில் வெல்லப் போவது நான் தான் ........... ஆப்கானிஸ்தானில் எனக்கு ஒரு சிலை வைக்கப் போகின்றார்களாம், கேள்விப்பட்டு கேட்டிருக்கின்றார்கள்............🤣. இந்த யாழ் களத்தை சுமக்க வேண்டும் என்பது என்னுடைய bucket list இல் ஒன்று போல.........😜.
1 week 3 days ago
சந்த்தோசம் ...நம்ம புகுந்தநாடு.. பெப்ரவரி 15 எனக்கு ..சிவராத்திரிதான் ....எதற்கும் நான் வணங்கும் கடவுளுக்கு ..ஒரு நேர்த்தியும் வைக்கின்றேன் ..இந்தியாவுக்காக..
1 week 3 days ago
மேலே எழுதியதை தயவு செய்து அப்படி விளங்கி கொள்ள வேண்டாம். அந்த திரியில் நீங்கள் இத்தனை கெட்ட அனுபவதின் பின்னும் சிங்களவர் மீது தனிப்பட்டு இனக்குரோதம் காட்டாத நபர் என்பதை, பிள்ளைகளை கூட அப்படியே வளர்க்கும் நபர் என கண்டேன். ஆனால் வெளிநாட்டில் கூட இங்கே வளரும் பிள்ளை கூட இனக்குரோதியாக வளர்கிறதே எனும் உங்கள் ஆதங்கத்தையும் கண்டேன். நானும் இத்தனை கசப்புக்கு பின்னும் தனிப்பட்டு எவரிடமும் இன வன்மம் பாராட்டுவதில்லை, பிள்ளைக்கு அநீதியை சொல்லிகொடுத்தாலும் அது கண்மூடித்தனமாக இன வன்மத்தை வளர்க்க கூடாது என்றும் சொல்லியே வளர்கிறேன். அப்படி பட்ட ஒருவர் “ முஸ்லிமுகெல்லாம் பதில் சொல்ல முடியாது” என எழுதுகிறாரே என்பதே நான் சொல்ல வந்தது. மனம் புண்பட்டால் மன்னித்து கொள்ளவும்.
1 week 3 days ago
சிவ...சிவா ...சிறித்தம்பி ...அவருடைய அட்ரஸ் .. இருந்தால் தாங்க ...தேடிப்பிடித்து அதை அழிப்பிப்பம் ...புடின் ..பில்கேட்ஸ் ..கூல் ..வரிசையில் ..பின்னுக்கு கயிட்டப்படவேணும்..
1 week 3 days ago
உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன். அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀). உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.
1 week 3 days ago
கிரிக்கேட்டை பற்றி பலதை தெரிந்தும் தொடர்ந்து போட்டியில் பின் நிலையில் நிப்பது.............அது தான் எனக்கு புரிய வில்லை😁😄😃😛.....................
1 week 3 days ago
தற்போது வந்த தகவல். பாகிஸ்தான் விளையாடுவதாக அறிவித்துள்ளது. மிகப் பெரிய போட்டி. பணம்தான்.
1 week 3 days ago
அந்த “நானா”, கனடா என்ற படியால்…. உங்களது படமும், அவரின் கமெராவில் இருக்கலாம். 🤣
1 week 3 days ago
டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀 படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.
1 week 3 days ago
இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣
1 week 3 days ago
@goshan_che @ரசோதரன் சுமை தாங்கி போட்டியில் உங்கள் இரண்டு பேரில் வெல்வது யார்😄😃...........................
1 week 3 days ago
போட்டி நடக்குமானால் கொழும்பு மைதானத்தில் நடக்கும் பெரியப்பு புள்ளிய எப்படி போடப் போகிறார் போட்டி நடந்தால் தெரியும் உண்மையான பலம்மான அணி எது என்று.................. விளையாட்டில் எதுவும் நடக்கலாம்........................
1 week 3 days ago
இரண்டு அணிகளும் விளையாடினால் தான் பண மழை கொட்டும்.....................
1 week 3 days ago
பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது. இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.
1 week 3 days ago
இலங்கை அணியில் நிரந்தரமாய் ஒரு தமிழனை விளையாட விடனும்............................. தொடர்ந்து சிங்களம் விளையாடினால் தோல்வி தான் முரளிதரன் விளையாடின காலத்தில் இலங்கை அணி அதிக வெற்றி............... இப்ப இருக்கும் சின்ன அணிகளே இலங்கை அணிக்கு சவால் விடும் நிலைக்கு வந்து விட்டினம்..........................
1 week 3 days ago
நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும் முதல் மைச்சில் சுதப்பின மாதிரி சுதப்பாம விளையாடினால் எளிதில் வெற்றி................. அமெரிக்க அணியின் மட்டையடி நல்ல நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் கப்டன் சரினா நேரத்தில் சரியான வீரர்களிடம் பந்தை கொடுத்தால் நல்லம்........................
1 week 3 days ago
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள் Published By: Vishnu 09 Feb, 2026 | 08:17 PM நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/238259