Aggregator

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 3 days ago
நீ தமிழன் என்றால் நான் கூறும் தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதை நான் செயற்படுத்துவதையும் அந்த செயற்பாட்டையும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எதிர் பார்கின்றனர். அவரகள் உரு வந்து ஆடுவதை சாந்தப்படுத்தி நல்வழிப்படுத்த கோசான் சிலவற்றை சிலவற்றை சொல்ல வேண்டும் தானே! அதில் தவறில்லை.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
இப்ப அந்ததலையீடுகள் இருப்பதாக தெரியவில்லையே...சிலவேளை இது அமசடக்கமோ...ஒரு தலையீடு மட்டும் பார்த்தேன்...அனுர பாகிஸ்தான் தலைவரிடம் இந்தியாவுடன் விளையாடும்படி கேட்டது....😁 இது ஒருவகை...அதிர்ஸ்டம்...இலங்கை தப்பித்தது இதுதான் நம்ம ஸ்டைலு...குத்திற இடத்தை குத்துவம் ....பின்னர் பம்மிக்கொண்டு திரிவம்

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 3 days ago
இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும். தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 3 days ago
கோசான், “போராடி இருக்கவே தேவையில்லை, இலங்கை தேசியத்தைள் கரையலாம்”, என்பது எனது கருத்து அல்ல. அப்படி மக்களை நினைக்க வைத்தவர்கள் இந்த தீவிர தமிழ் தேசியர்களே. நடைமுறைச் சாத்தியமற்றதை வேண்டி பிடிவாதம் பிடித்து பெறக்கூடியவற்றை தொடர்ந்து இழப்பது குறித்தே எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன். 2002 ல் இருந்து அரசியல் போராளிகள் ஐரோப்பா முழுவதும் செல்வதற்கும் உலக நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடி எமது பக்க நியாங்களை எடுத்து கூறவும் நல்லுறவுகளை வளர்தது லொபி செய்யவும் அதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவதற்கான சிறந்த வாய்பபு கிடைத்தது. நோர்வே அநுசணை விசா கிடைத்து ஐரோப்பா வந்தவர்கள் எல்லோரும் அடுத்த யுத்தத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் மக்களை சந்திப்புகளில் மட்டுமே அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டிருந்தனர். மக்களின் ஆவலை தூண்ட யுத்தக் கதைகளை சுவார்சியமாக கூறி மக்களை உசுபேற்றி விட்டு சென்றனர். இது தமிழ் தேசியத்தை வளர்ததா? அல்லது அதற்கு ஆப்பக அமைந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன். துரையப்பா மீதும் அவரது அரசியல் மீதும் எவர் அவதூறுகளை சுமத்தினாலும் விமர்சனங்களை வைத்தாலும் யாழ்பாணத்திற்கு அவரைப் போல ஒரு சிறந்த மேயர் இதுவரை கிடைக்கவில்லை என்பது எவரலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியை பகீரங்கமாக ஆதரித்தார் என்பதே அவர் மீதான துரோகி பட்டம். ஆனால் இன்று ஆளும் கட்சியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்று அவர்களைத் துரோகிகள் என்று மக்களிடம் கூற முடியத கையறு நிலை. அத்துடன் மாநகர சபைக் கட்டத்தினுள் ஒரு சிறிய அறையில் இருந்த நூல் நிலையத்தை மாற்றி யாழ்பாணத்திற்கு ஒரு அழகிய நூலகம் கட்டம் தேவை என்று 1050 களின் நடுப்பகுதியிலேயே பேரவா கொண்டு நூல்நிலைய கட்டட நிர்மாணிப்பில் key role ஆக செயற்பட்டவர் அவராகும் . 1950 களில் வெளிவந்த பத்திரிகைகளை பார்ததால் அவரது அந்த பங்களிப்பு தெரியும். நூல் நிலைய எரிப்பை வைத்து அரசியல் செய்த தேசியர்கள் அவரது அந்த பங்களிப்பை கபடத்தனமாக மறைத்து அவர் மீது அவதூறுகளையே பொழிந்தனர். அது தான் தமிழரசுக்கட்சியின் அரசியல். காரணம் அவர் இருந்தால் யாழ்பாண தொகுதி கிடைக்காது என்ற பயமே.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
@vasee ப‌ல‌ர் மன‌ங்க‌ளில் இது வ‌ந்து போகும் 2010 அந்த‌ கால‌ப் ப‌குதியில் தான் ப‌ல‌ருக்கு தெரியும் அப்கானிஸ்தான் அணி என்ர‌ ஒன்று இருக்கேன்று 1996க‌ளில் முத‌ல் முறை உல‌க‌ கோப்பை தூக்கின‌ இல‌ங்கை அணி கிட்ட‌ த‌ட்ட‌ 20வ‌ருட‌மாய் ம‌லை போல் ப‌ல‌மாய் இருந்த‌ அணி அப்கானிஸ்தானின் அசுர‌ வ‌ள‌ர்ச்சி இல‌ங்கையின் வீழ்ச்சியாக‌ மாறி விட்ட‌து கிரிக்கேட்டில் இனி இல‌ங்கை உல‌க‌ கோப்பை வெல்லும் என்று கேட்டால் அது நூற்றுக்கு பூச்சிய‌ம் என‌ தான் சொல்லுவேன்..................... ம‌லை போல் இருக்கும் இந்தியாவை இப்போது உள்ள‌ ஆசிய‌ நாடுக‌ளால் வெல்ல‌ முடியாது................. அவுஸ்ரேனியா தென் ஆபிரிக்கா இங்லாந் நியுசிலாந் இந்த‌ நாடுக‌ள் கிரிக்கேட்டில் ந‌ல்ல‌ நிலையில் இருக்கின‌ம்............... இல‌ங்கை கிரிக்கேட்டை அழித்து நாச‌ம் ஆக்கின‌ பெருமை இல‌ங்கை அர‌சிய‌ல் வாதிக‌ளையே சேரும்......................................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்காட்டி தோல்வி தான் நேற்று க‌மெட் மெடிஸ் வ‌ந்து அதிர‌டியா விளையாடின‌ ப‌டியால் தான் 163 ர‌ன்ஸ் அடிக்க‌ முடிஞ்ச‌து இல‌ங்கை க‌ப்ட‌ன் தொட‌ர்ந்து ர‌ன்ஸ் அடிக்காம‌ அவுட் ஆகிறார்............. சூப்ப‌ர்8க்கு போவின‌ம் சிம்பாவேயை வென்றால் இல்லையே சிம்பாவே சூப்ப‌ர்8க்கு போய் விடும்...................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
🤣........... முதலாவதாக நிற்கும் செம்பாட்டானை விட, முடிவில் நிற்கும் என்னையும், கோஷானையும் தான் உலகம் கதைக்கின்றது. என்ன உலகமப்பா இது..............🤣.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அயர்லன்ட்டுடன் விளையாடிய இலங்கை அணியினை பார்க்கும் போது சுப்பர் 8 க்கும் தகுதி பெறாது போல இருக்கு, போட்டியினை சேர்ந்து நடத்தும் நாடு சுப்பர் 8 க்கும் போகாட்டில் அவமானமா போயிடும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
ஓம் ஓம் நானும் கேள்வி ப‌ட்டேன் சிலைய‌டிக்கு பெய‌ர் வின்லேட‌ன் ர‌சோதர‌ன் சிலைய‌டி என‌ ஹா ஹா😄😁😃........................... நான் இந்தியா பாக்கிஸ்தான் மைச் ந‌ட‌க்காது என்ர‌ ப‌டியால் அந்த‌க் கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ வில்லை.............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அதெல்லாம் ஏற்கனவே அறிவித்தபடிதானே. ஒரு மாற்றமும் இல்லை. இலங்கையில் நடக்கும். தெரிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 week 3 days ago
அவை சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌து ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ளுக்கு அவ‌மான‌ம்................நான் 1996ம் ஆண்டில் இருந்து தான் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கி நான் இல‌ங்கை வீர‌ர் அர‌விந்த‌ டி சில்வாவின் ர‌சிக‌ன் நான்.............. இந்த‌ நாட்டுக்கு வ‌ந்தாப் பிற‌க்கு கிரிக்கேட் பார்க்க‌ முடியாம‌ல் போன‌து..............2003ம் ஆண்டு தென் ஆபிரிக்காவின் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையோட‌ கிரிக்கேட் பார்க்கும் வ‌ச‌தி டென்மார்க்கில் வ‌ந்து விட்ட‌து................. அப்பேல‌ இருந்து கிரிக்கேட்டை விட்ட‌ பாடு இல்லை...............எல்லா நாட்டு கில‌ப் விளையாட்டுக்க‌ளையும் பார்ப்பேன்............................

“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)

1 week 3 days ago
நான் எந்த பதிவிலும் ரஞ்சித்துடன் தனிப்பட்ட முறையில் மல்லுக்கட்டவில்லை. அவருடன் தனிப்பட பகையும் கிடையாது. அவரது கருத்துகளை விமர்சிக்கும் போது அவர் கோபப்படுகிறார். பொதுவெளியில் இங்கு வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கிறேன். விமர்சனங்களை வைக்கிறேன், கேள்விகள் கேட்கிறேன். ரஞ்சித் இங்கு பொது வெளியில் வரலாறுகள் என்ற பெயரில் ஒருதலைப்பட்ச தகவல்களை அடிப்படையாக கொண்டு அவற்றை முழுமையான உண்மை போல் இங்கு எழுதும் போது அது தொடர்பாக கேள்வி கேட்க கூடாதா? பொது வெளியில் எழுதும் எவரும் இவ்வாறான கருத்தியல் விவாதங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அவரது கருத்துகள் புனிதமானவை, அவற்றுக்கு எவரும் விமர்சனம் வைக்க கூடாது என்பது அவரது கொள்கையாக இருக்கலாம். அதற்கு நான் கட்டுபட முடியாது சிறிமா பண்டாரநாயக்காவை புகழந்தேனாம். அதை ஒரு குற்றமாம். சிறிமாவின் உள்ளூர் உற்பதி கொள்கையை யாழ்பாண விவசாயிகள் பாரிய நன்மையடைந்ததும், யாழ்பாண விவசாயிகளின் குடிசை வீடுகள் அவரது காலத்தில் கல்வீடுகளானதும் அதற்காக அவர்கள் அவரை ஒட்டு மொத்தமாக புகழ்ந்ததும் அந்த நன்றியறிதலுக்காக 1982 ல் அவரது மாமன் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு தன்னிச்சையாக பெருவாரியாக வாக்களித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அத்தனை யாழ் விவசாயிகள் மீதும் குற்றம் சாட்டுவாரா? யாழ் பலகலைகழகத்தை சிறிமாவோ திறந்த போது முழுமையாக எதிர்த்தது தமிழரசுக்கட்சி தனது அரசி யல் ஆதாயத்துக்காக. தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி ஒன்றும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. பிரச்சனைகளை தீர்வு காண்பதை விட அதை வைத்து காலாகாலமாக அரசியல் செயத்து தமிழரசுக்கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மீது விமர்சனம் செய்யக்கூடாதா? தேசியத்துக்கு எதிரானவனாம். அடுத்த குற்றச்சாட்டு. என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது, கல்வி/ தொழில்நுடப/ வர்த்தக / பொருளாதார பலத்தை உயர்ததுவது, வட கிழக்கில் தமிழரின் சனத்தொகையை குறையவிடது காப்பது. இவற்றை ஜனநாயக நீரோட்டதில் இணைந்து ஆளும் அரசுகளோடு தந்திரோ உறவுகளோடாவது மேற்கொள்ளுவது இன்றைய அவசர தேவை. அதை விடுத்து உசுப்பேற்றுவது, சாத்தியமற்ற வெற்று கோசங்களை வைத்து வினைதிறனற்ற, மக்களுக்கு உபயோகமற்ற அரசியல் நடத்துவது, அதை தூண்டுவிடும் புலம்பெயர் தேசிய வியாபாரிகளும் செய்வது தமிழ் தேசியம் என்றால் அதற்கு நான் எதிரானவன் தான். அது வெளிபடையாக கூறுகிறேன். அந்த கருத்துகளை எதிர் கொள்ள இயலாமல் துரோகி, கோடரிக்காம்பு, இழிந்த இனத்தவர் போன்றவற்றையே அவர் போன்றவர்களால் கூற முடியும். ஏனென்றால் அவர்கள் கற்ற அரசியல் என்பது எதிர் கருத்துடையவர்களை வன்முறை மூலம் அகற்று அது முடியாத போது மீது அவதூறு கூறி அவரை அகற்று என்பதே.