1 week 5 days ago
இதுவே நிஜம், அண்ணா. .............................👍. பண்டிகைகளும், கொண்டாட்டங்களும், திருவிழாக்களும் ஆரம்பத்தில் மக்களை இணைக்கவும், அன்றாட அழுத்தங்களில் இருந்து தற்காலிகமாகவேனும் விடுபடவேனும் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகள் போலவே தோன்றுகின்றன. பின்னர் ஒவ்வொருவரும் தங்களின் அரசியல் - மத - குல - இன தேவைகளுக்கு ஏற்ப அவற்றின் மேல் காரணங்களை ஏற்றிவிட்டனர். சில வருடங்களின் முன் நான் வேலை செய்த ஒரு இடத்தில் தீபாவளி கொண்டாடுவோம். ஒவ்வொரு வருடமும் அங்கிருக்கும் வட இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும், தென் இந்திய பின்புலம் கொண்டவர்களுக்கும் இடையே எவ்வகையான உணவுகள் பரிமாறுவது என்பதில் தர்க்கம் இருக்கும். அவர்கள் சைவ உணவு என்று சொல்ல, இவர்கள் அசைவ உணவு என்று சொல்ல, இறுதியில் இரண்டையும் வாங்கிக் கொள்ளுவோம். ராம தீபாவளி, ராவண தீபாவளி என்று மாறி மாறிச் சொல்லிக் கொள்வார்கள். அங்கிருந்த ஒரே ஒரு ராவண வாரிசு நான் மட்டும் தான்..................🤣. ஆனாலும் தீபாவளி அன்று இந்தியாவின் ஒரு பகுதியே ராவண வாரிசாக மாறிவிடுவார்கள்............... மிகவும் மகிழ்வான நிகழ்வுகளும், நினைவுகளும். இன்றும் அவர்களில் எவரையும், ராமர்களோ ராவணர்களோ, எங்காவது பார்க்கும் போது சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது. 🤣.................. ஒரு சந்தையில் மட்டும் ஆறு கோடிகளுக்கு ஆடுகள் விற்பனையாகியது என்று செய்தியில் சொல்லியிருந்தார்கள், கோபி. அதைக் கேட்டவுடன் பழைய ஊர் ஞாபகங்களும் வந்தன. பல வருடங்களின் முன் ஒரு ருமேனிய நாட்டு நண்பன் கிறிஸ்துமஸ் நாளில் அவர்களின் ஊரில் பன்றி அடித்து எல்லோருக்கும் விருந்து கொடுப்பதாகச் சொல்லியிருந்தான். அவன் சொன்ன நிகழ்வுகள் எங்களின் தீபாவளிக் கொண்டாட்டம் போலவே இருந்தது. அமெரிக்கர்களின் கிறிஸ்துமஸ்ஸை அவன் போலி, ஒரு வியாபாரம் என்றும் சொல்லியிருந்தான்.
1 week 5 days ago
உலக கோப்பை முடியும் நிலையில் வந்து விட்டது இன்னும் எல்லாமா சேர்த்து 6விளையாட்டு தான் இருக்கு................ இனி உந்த 340அடிப்பதென்பது முடியாது இந்தியா தொடர்ந்து மூன்று மைச்சில் தோத்து இன்று அதில் இருந்து மீண்டு வந்து விட்டினம்.......................
1 week 5 days ago
(ஒரு வியாபாரத்தில் நடந்ததை வைத்து இரு ஒரு வியாபார முனைவை விளங்கி, முடிவுக்கு வந்து இருக்கும் ... என்னவென்று சொல்வது. ) Administrators have since filed a claim against the group’s former chief executive, Winston Sanjeevkumar Soosaipillai, for breach of fiduciary duties, according to court records. இதுவே குற்றசாட்டு. (கீழே இணைப்பு இருக்கிறது) அதாவது, தலைமை இயக்குனர் (Winston Sanjeevkumar Soosaipillai), கடமையாக கொள்ளவேண்டிய ஏனைய தரப்புகளின் நன்நலன்களை சிரமேற்கொள்ளாது மீறியுள்ளார். (இது முறிந்து இருக்கிறது என்பதற்கு FT ஆக்கத்தை பார்க்கவும்.) ஆனால், முன்பு சொல்லி இருக்கிறேன், சில ஒழுங்கீனங்கள் இருக்கலாம் என்று. ஆனால், இந்த குற்றசாட்டு, மோசடி , அல்லது இங்கே சொல்லப்படும் களவு எடுத்து கொண்டு ஓடிவிட்டான் என்பதை விட ஒப்பீட்டளவில் வக்கிரம் மிக குறைந்தது, இல்லை என்றே சொல்லலாம், அதாவது இதில் சம்பந்தபட்ட தொகைஉடன் ஒப்பிடும் போது. (வெற்றிடத்தில் ஒன்றும் சொல்ல முடியாது) (ஓர் சட்டப் புள்ளி, அல்லது கோட்பாட்டை கொண்டே, என்னை பொறுத்தவரை, இப்படி குற்றம் சாட்டப்பட்டு உள்ளது) அதன் விளைவு, நிர்வாகத்துக்கு எடுத்து இருக்கும் கம்பனியின் (Teneo) சட்டத்தரணிகளுக்கு பாரிய (சட்ட) நிச்சயம் அற்ற தன்மை காணப்படுவது மோசடி , அல்லது இங்கே சொல்லப்படும் களவு எடுத்து கொண்டு ஓடிவிட்டான் போன்ற குற்றசாட்டுகளுக்கு. ஏனெனில், இதில் ஆவண / குறிப்பு சுவடுகளை மறைக்க முடியாது , அநேகமாக எல்லாமே electronic (சில இப்போதும் fax இல் செய்யப்படுவது இருக்கிறது, நடைமுறையில் Email ம் செய்யப்படுவதும்). மற்றது, செய்த விதமும், செய்தியில் இருக்கிறது. காப்பாற்றுவதற்கும் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது (இதை முன்பே இங்கு சொல்லி இருந்தேன், refinancing வட்டி கூடியதால் முடியாமல் போய் இருக்கலாம் என்று). கிதைத்த செய்திகளில் இருக்கும் தரவுகளின் படி - இதில் மிகப்பெரும்பான்மை வியாபார முறிவு கம்பனியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்றப்பட்ட பல பிரசனைகளால். (மறைமுகமாக குற்றசாட்டிலும் பிரதிபலிக்கிறது) (விளங்குவதற்கு தஞ்சம் புகாத தன்னிலை இருக்க வேண்டும்) Global Trade Review (GTR)Collapsed Prax has “large hole” in receivables facility,...Administrators of collapsed UK energy conglomerate Prax say there is “a large hole” in a £780mn receivables securitisation facility the group used to fund its operations. A lawyer for Teneo, the admi Collapsed Prax has “large hole” in receivables facility, administrators say 27 August 2025 10:10 GMT By Jacob Atkins Administrators of collapsed UK energy conglomerate Prax say there is “a large hole” in a £780mn receivables securitisation facility the group used to fund its operations. A lawyer for Teneo, the administrators, told an August 26 court hearing in London they are urgently seeking information about the location of funds that were drawn from the facility. Prax, which comprised at least six companies, entered administration in June during a liquidity squeeze that saw its main oil supplier, Glencore, take security over refined products produced by the group. Administrators have since filed a claim against the group’s former chief executive, Winston Sanjeevkumar Soosaipillai, for breach of fiduciary duties, according to court records. Since the group collapsed, the administrators say they have unearthed “irregularities” relating to the invoices captured by the receivables securitisation facility, which was arranged by HSBC in 2021. Under the facility, several Prax entities sold trade receivables to a special purpose vehicle, which then issued tranched securitisations to international financial institutions. Prax had previously disclosed the note purchasers as HSBC, Citi, JP Morgan, Royal Bank of Canada and NordLB. Administrators have not said how much money those institutions were owed at the time of the insolvency. HSBC was also the agent for the facility and is working with administrators, according to a corporate filing from Teneo. The lender declined to comment. At the August 26 hearing, lawyers for Teneo sought to compel two financial controllers of the Prax Group to provide information to the administrators about the operation of the securitisation facility. The judge presiding over the case ordered the employees to provide written answers and attend a subsequent in-person meeting with administrators. Trade finance exposures Prax also previously had trade finance and other credit lines from several lenders through group entity Prax Petroleum Limited. All outstanding sums under those facilities had been repaid at the time of the administration, according to a Teneo report published last week. Lenders included specialist Swiss trade finance banks Bric-Bred and Banque de Commerce et de Placements, as well as Natixis, Raiffeisen and the Quintar Kimura Special Credit Fund. HSBC has a €4mn exposure to Prax Petroleum that is expected to be largely covered by cash collateral. The Quintar Kimura fund provided Prax Petroleum with a financing facility and hedging account in late 2023, according to separate corporate records. Prax Petroleum said in its financial statements for the year ending February 29, 2024, that it had trade finance facilities from “various financial institutions”, although letters of credit outstanding had an underlying value of US$4.3mn, down from US$19.5mn a year earlier. “Creditor pressure” The Prax group began as a petrol station operator but later expanded into imports, trading and storage of fuel, through organic growth and acquisitions. In 2021, the company purchased the Lindsey oil refinery in Lincolnshire, northern England, from TotalEnergies. The administrators say Prax invested in the refinery, but the “level of maintenance and intervention required has led to more downtime than expected” and a combination of lower refining margins and hefty capital outlays “led to a deterioration of the financial position”. The Prax group faced escalating liquidity pressures in the weeks leading up to the insolvency, according to the Teneo document. A “significant sum” owed to the UK tax authorities “increased creditor pressure” and pushed the group to explore alternative financing and acquisition options. At around the same time, the receivables securitisation facility was cancelled after “material irregularities” were reported to the board of directors of State Oil Limited, a Prax entity. The liquidity crunch meant a Prax entity was unable to service its exclusive crude oil supply agreement with Glencore, and the trader later “elected to crystallise its security” over refined oil products being produced by the group. Glencore agreed to provide oil to the Lindsey refinery while a new owner was sought and would be repaid by the government, The Guardian reported, but the facility ended production earlier this month because no buyer had been found. This story was updated on August 28 to add the note purchasing financial institutions. https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba (இதன் கீழே இடப்பட்டு உள்ள கருத்துக்களை பார்க்கவும். இது தமிழ் களம் என்பதால் ஆங்கிலத்தில் உள்ள கருத்துக்க இணைக்கப்படவில்லை.) Too big too fast: how $10bn UK energy challenger Prax unravelled Collapse of Lindsey refinery owner is a cautionary tale of a company lacking financial heft to manage its sprawling operations Sanjeev Kumar Soosaipillai, left, and Arani Kumar Soosaipillai of Prax Group © FT montage/Alamy/Getty Images As recently as November, the publicity-shy owner of Prax Group wanted investors to know that his $10bn challenger company was fast becoming a “formidable force” in the energy industry. “Twenty-five years on from when we started, we are a much bigger, stronger, better business in all kinds of ways,” founder and chief executive Sanjeev Kumar Soosaipillai said in the introduction to Prax’s glossy annual report. Those ambitions came crashing down this week when the sprawling company’s parent entity, and its Lindsey oil refinery in north-east England, plunged into insolvency, putting more than 400 jobs at risk. The move provoked a fierce backlash from the UK government, which demanded an investigation into Prax’s “wealthy owner”, whose conduct left authorities “with very little time to act”. The collapse of the owner of the Lindsey refinery — which produces about a tenth of the UK’s fuel and is one of only five such facilities left in the country — is a cautionary tale of a company that grew too big too fast, say insiders, and of a critical industry that has been overlooked by government. “Prax didn’t have the right people in place to manage a risk as big as a wholly owned refinery,” said a person familiar with Prax’s operations. The person also said that the group run by Soosaipillai and his wife Arani — who started out with a single petrol station — lacked the financial heft to manage such a cash-hungry business. UK government officials were informed of the commercial difficulties at the Lindsey refinery at the end of April © Lindsey Parnaby/AFP/Getty Images UK government officials were informed of the commercial difficulties at Lindsey at the end of April and energy secretary Ed Miliband met Soosaipillai in mid-May to discuss how the government could provide support. Yet Prax was still insisting until last week that the facility on the river Humber was not at risk of closure, according to UK under-secretary for energy Michael Shanks. Industry executives familiar with Prax described a company that was “a bit smoke and mirrors”, struggling to balance its books for several years, even as it completed acquisition after acquisition. “There are very few people who are shocked this happened,” said a senior commodity industry executive. “Why was Prax, who owned a refinery that was struggling, always on the bid for fancy assets in other jurisdictions? It never made sense.” Winston Sanjeev Kumar Soosaipillai — who goes by Sanjeev — met Arani at the University of Kent, where they both studied accountancy. The Sri Lankan-born pair, then still in their twenties, bought their first filling station in 1999 near St Albans, north of London. Over the next decade, they sold their homes and mortgaged the houses of family members to help acquire more outlets and eventually a storage site in east London. In 2015, they completed a transformative deal, acquiring struggling Harvest Energy and its network of UK forecourts for $22.6mn. Four years later, Prax brokered an agreement to operate petrol stations for TotalEnergies under the French major’s brand. It was a relationship that left the UK company in a strong position when Total decided to sell the Lindsey facility in 2020 amid a collapse in oil prices during the coronavirus pandemic. Prax swooped, paying $167.6mn in a deal that also gave it control of the Fina oil pipeline, which runs through the east of England. It was a big acquisition but, within a year, Prax had revalued the refinery assets in its accounts at $667.8mn, booking a $500mn gain based on “synergies” with the rest of its business and improved refining margins — a move that immediately raised eyebrows in the industry. “In effect, Prax was saying it could run the refinery better than the much larger Total,” said one industry executive. It was “one of the big red flags” in the company’s operations, the person added. The Soosaipillais acquired Harvest Energy in 2015 © Peakscape/Alamy Refining is a high-volume business with generally thin margins. Lindsey can process up to 113,000 barrels a day of oil, which is bought from a supplier and processed before being sold on to customers. Lindsey is supplied by commodities trading company Glencore under a deal signed last year. At current prices, that means Prax requires access to an estimated $400mn of working capital to keep the facility running. Prax’s group turnover ballooned from $3bn in 2020 to more than $10bn in 2024. Maintaining adequate liquidity is crucial to any refinery’s success, and this became harder for Prax as it continued to expand. In 2023, Prax announced the acquisitions of a North Sea oil producer, a European petrol station network and a minority stake in a refinery in South Africa. But even as the deals continued, inside the business executives were concerned. In autumn 2023, Deloitte seconded a partner, David Sharman, to work directly with Soosaipillai for several months as part of an exercise known as Project King, according to people familiar with the contract. Referred to internally by some executives as project “cash is king”, the exercise was intended to “reduce costs, streamline processes, increase efficiencies and enhance our effectiveness”, Soosaipillai wrote in the 2024 annual report. “There were multiple phases [of Project King] as things got more desperate,” one of the people said. Around the same time, Prax changed its accountant from KPMG to the lesser-known PKF Littlejohn, company filings show. KPMG and Deloitte declined to comment, while PKF did not respond. In the year ending February 2024, Prax’s parent company State Oil Ltd and the refinery’s operating unit Prax Lindsey Oil Refinery Ltd reported losses after tax of $28.7mn and £40mn, respectively. Despite the losses, State Oil paid a dividend of $5.2mn to the Soosaipillai family, the accounts published in November 2024 show. Sanjeev and Arani Soosaipillai each own 40 per cent of State Oil, with the remaining 20 per cent held by two trusts, one for each of their daughters, according to corporate records and a person familiar with the structure. Although UK refineries face challenges ranging from carbon costs to competition from larger foreign rivals, the sector has been performing reasonably well, and Lindsey’s collapse was not inevitable. “It’s not like margins have suddenly collapsed,” said Alan Gelder, refining expert at Wood Mackenzie. However, a lack of refining expertise on Prax’s senior leadership team contributed to operational and commercial mis-steps that exacerbated Lindsey and the wider group’s liquidity problems, one of the people familiar with the company’s operations said. Rather than rely on expensive bank credit facilities, Soosaipillai preferred to provide counterparties with cross-group guarantees often from State Oil, the person added. Such guarantees are one reason that the parent company and several subsidiaries, including Lindsey, Prax Petroleum, Harvest Energy and Harvest Energy Aviation, have all entered administration at the same time. Recommended News in-depthOil & Gas industry Rivals cast eye over BP crown jewels even as Shell walks away Prax’s UK and European retail business, Axis Logistics, and its upstream and international operations are all excluded from the insolvency process, according to a statement on Prax’s website. Glencore’s supply agreement gives it security over some of the oil on site at Lindsey and a potential claim over some of the entities involved, according to people familiar with the situation. Glencore said it was working with stakeholders to support “a safe and responsible outcome for the refinery”. Sanjeev and Arani Soosaipillai, who rarely give interviews, did not respond to an emailed request for comment. Neither they nor their company has issued a statement since State Oil entered insolvency. “I wouldn’t be surprised if he’s heartbroken and working his you-know-what off to salvage anything from this business,” said one person who has worked with Soosaipillai. “This is his life,” the person added. “What for you and me is breathing, for him is Prax.”
1 week 5 days ago
இந்தியா இலகுவாக வெல்லப் போகுது. மழை வராட்டிச் சரி. கிராந்தி முதலாவது விக்கட்டைக் கைப்பற்றினார். தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
1 week 5 days ago
நீங்கள் ஒவ்வாமை அல்ல! பாதிக்கப் பட்டவன் (victim) தான் வலி இல்லாமல் போய் விட்டதா என்று உறுதி செய்ய வேண்டுமேயொழிய, பாதிப்பைக் கொடுத்தவர்களின் தரப்பு (perpetrator) அல்ல. இதை சிங்களவர்களுக்கும், இந்தியாவிற்கும் நாம் சொல்லிக் கொண்டு, "வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் வலி முடிவுக்கு வந்தது"😎 என்று எழுதுவதை என்னவென்று சொல்வது?
1 week 5 days ago
உண்மையாகவா😂? தமிழ் நாட்டின் பொருளாதார, கல்வி, சமூக நிலை வலதுசாரித்தனத்தாலும், மத - இன வாதங்களாலும் பாதிக்கப் பட்ட பிரிப்பரசியல் செய்யும் ஏனைய இந்திய மாநிலங்களின் நிலையை விட பல மடங்கு மேலாக இருக்கிறது - இதற்கான ஆதாரங்களும், தரவுகளும் நீங்கள் "கண்களை" திறந்து பார்த்தால் மட்டும் தான் உங்களுக்குத் தெரியும். சீமான் போன்ற வலதுசாரித் தமிழர்களின் சமூகவலை ஊடகங்களின் வர்ணங்களில் கண் மங்கிப் போனால் "திராவிடம் எதுவும் சாதிக்கவில்லை" என்ற புரிதல் மட்டும் தான் எஞ்சும்!
1 week 5 days ago
சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில் Published By: Digital Desk 3 23 Oct, 2025 | 05:34 PM பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார். அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே! மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை. சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை! முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன! 2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே. சுகாதார அமைச்சர் அவர்களே! சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன. வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது. எனது முதலாவது கேள்வி! இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கை நெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள். மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன? படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா? படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா? அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார். இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில், கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது. அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம். இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம். மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர். இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர். எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம். அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/228481
1 week 5 days ago
சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனந்தொடர்பில் சுகாதார அமைச்சரிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார் ரவிகரன் எம்.பி; நவம்பரில் 304பேருக்கு நியமனம் வழங்கப்படுமென - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதில்
Published By: Digital Desk 3
23 Oct, 2025 | 05:34 PM

பட்டப்படிப்பையும் உள்ளகப்பயிற்சியையும் முடித்து வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சுதேச மருத்துவப் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் மிகக் கடுமையான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2009, 2010, 2011ஆகிய கல்வியாண்டுகளில் ஆயுர்வேத, சித்த மற்றும், யுனானி ஆகிய சுதேச மருத்துவத்துறைகளில் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பட்டதாரிகள் 304பேரை ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 03ஆம் திகதி நியமனம் செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
அதேவேளை தற்போது நாட்டிலுள்ள சுதேச வைத்தியசாலைக் கட்டமைப்பிலே அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஆளணியைவிடவும் அதிகமான அளவில், சுதேச பட்டதாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இவ்வாறு சுகாதார அமைச்சரிடம் மிகக் கடுமையாக கேள்வி எழுப்பியநிலையில் சுகாதார அமைச்சரால் மேற்கண்டவாறு பதிலளிக்கப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
மேலைத்தேய மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி, சுதேச மருத்துவ சேவை வழங்கல் என்றாலும் சரி எமது வன்னி மாவட்டத்திற்கான மருத்துவ சேவை வழங்கலை, சமச்சீராக அணுகுங்கள் என்பதே எம் கோரிக்கை.
சுதேச மருத்துவ துறையில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு காணப்படவேண்டிய 14 சமூக நல மருத்துவர்களில் ஒருவர் மட்டுமே பணியாற்றுகிறார். 13 பணி வெற்றிடங்கள் உள்ளன. மாவட்டம் முழுதும் ஒரேயொரு சமூக நல மருத்துவரைக்கொண்டு எவ்வாறு வினைத்திறனான சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்? இது எத்தகைய சமச்சீரற்ற நிலை!
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐந்து சித்த மருத்துவ சேவை வழங்கும் மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த அனுமதிக்கப்பட்ட ஆளணி 64. தற்போது இங்கு 40 பணி வெற்றிடங்கள் உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஊழியர் அணியுடனே முல்லைத்தீவு மாவட்ட சித்த மருத்துவ அலகுகள் பணிபுரிகின்றன!
2025 இன் முதல் எட்டு மாதங்களிலும் சராசரியாக 1000 நோயாளிகளுக்கு மேல் மேற்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இன்னமும் அதிகமாக நோயாளிகளை உள்ளீர்த்து சேவை வழங்குவதில் உள்ள முதன்மையான மட்டுப்பாடு குறித்த மருத்துவமனைகளில் உள்ள ஆளணிப்பற்றாக்குறையே.
சுகாதார அமைச்சர் அவர்களே!
சுதேச மருத்துவத் துறையில் மருத்துவர் வெற்றிடங்களுடன் மருத்துவமனைச் சூழலுக்கு மிகவும் இன்றியமையாத சுகாதாரத் தொழிலாளர்கள், சுகாதார உதவியாளர்கள், சுகாதார தூய்மை பணியாளர்கள், மர்த்தனவியலாளர் உள்ளிட்ட ஊழியர் வெற்றிடங்களும் உள்ளன. வடமாகாணம் முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான பணி வெற்றிடங்கள் சித்த மருத்துவத்துறையில் உள்ளன. மருத்துவ சேவை வழங்கலின் தரத்தை அதிகரிப்பதற்கு, மேற்படி சேவை நிலையங்களில் உள்ள ஆளணி வெற்றிடங்களை நிரப்புதலும் இன்றியமையாதது.
எனது முதலாவது கேள்வி!
இதுவரை ஆயுர்வேத, சித்த, யுனானி பட்டக்கற்கை நெறிகளைக் கற்று, உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்து பணிநியமனங்களுக்காக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது பல்கலைக்கழங்களில் மேற்படி கற்கைநெறிகளை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கற்று வருகின்றனர். இவர்களும் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பை தரும் என்றே நம்பி கற்கின்றார்கள்.
மேற்படியாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டுள்ள இப்பெரும் எண்ணிக்கையிலானவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உறுதி மொழி என்ன?
படியுங்கள்- அரசிடம் வேலை வாய்ப்பை கோரவேண்டாம் என்பதா?
படித்து நீங்களாக தனியார் மருத்துவ சேவை நிலையங்களை நடாத்துங்கள் என்பதா?
அல்லது ஒவ்வோர் ஆண்டும் இத்தனை எண்ணிக்கையிலான அரச பணி வெற்றிட வாய்ப்பு தான் வழங்கப்படும் என்பதா? ஏனெனில், இது தொடர்பில் ஒரு தெளிவான அறிவித்தலை அரசு இதுவரை அவர்களுக்கு வழங்கவில்லை என்றே எண்ணுகிறேன் - என்றார்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதற்குப் பதிலளிக்கையில்,
கடந்த 2025.06.30ஆம் திகதிய நிலவரப்படி இலங்கையின் சுதேசமருத்துவசேவையில், குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, சித்தம் மூன்று மருத்துவத்துறைகளுக்குமாக 2567 அனுமதிக்கப்பட்ட சுதேச மருத்துவர் ஆளணிகள் காணப்படுகின்றன. இருப்பினும் தற்போது 2065 சுதேசமருத்துவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் 502 சுதேசமருத்துவர்களின் வெற்றிடங்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
இந்நிலையில் இலங்கை சுதேசமருத்துவசேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முகாமைத்துவசேவைகள் திணைக்களத்திற்கு அனுமதிகிடைத்துள்ளது.
அந்தவகையில் தற்போது நாட்டில் காணப்படும் 502 சுதேச மருத்துவர் வெற்றிடங்களில், 304 ஆரம்ப சுதேச மருத்துவ அலுவலர் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான அமச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அதற்கமைய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
குறிப்பாக இந்த 304 சுதேச மருத்துவர் பதவிவெற்றிடங்களும் 2009, 2010, 2011ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பினை நிறைவுசெய்தவர்களைக்கொண்டே நிரப்புவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர்மாதம் 03ஆம்திகதி குறித்த 304 சுதேசமருத்துவ நியமனங்களையும் வழங்கவிருக்கின்றோம்.
இவ்வாறு 304பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டபின்னர் மிகுதியாகவுள்ள வெற்றிடங்களுக்கும் நியமனங்களை வழங்குவோம்.
மேலும் சுதேச மருத்துவத்தில், அதாவது ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் 2021தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1990பேர் பட்டப்படிப்பினை நிறைவுசெய்து வேலையை எதிர்பார்த்துள்ளனர்.
இதேவேளை குறித்த 2021 தொடக்கம் 2025வரையான காலப்பகுதியில் ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி ஆகிய மருத்துவ பட்டப்படிப்பிற்கென கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரச பல்கலைக்கழகங்களால் மொத்தம் 2,709மாணவர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் நாட்டிலுள்ள எமது சுதேச வைத்தியசாலைக்கட்டமைப்பிற்குள் தற்போதுள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவர் ஆளணியைவிட அதிகமான அளவில் சுதேச பட்டதாரிகள் காணப்படுகின்றனர்.
எனினும் தற்போதுள்ள சுதேசமருத்துவர் வெற்றிடங்கள் கணக்கீடுசெய்து அதற்கமையவே ஆட்சேர்புக்கள் செய்யப்படவிருக்கின்றன. பொது அட்டவணைக்கு அமையவே அந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளோம்.
அத்தோடு சுதேச மருத்துவத்துறையின் பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதுதொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கோரிக்மைகளை முன்வைத்துள்ளார். குறித்த பணியாட்தொகுதிகளை நியமனஞ்செய்வதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நியமனங்களை மேற்கொள்வதற்கென விண்ணப்பங்களைக்கோருதல், உள்ளீர்த்தல் என்பதற்கு அப்பால் அவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டிய தேவையுமுள்ளது. பயிற்சிக்காலம் முடிவுற்றபின்னர் முரண்படுகளின்றி அந்த நியமனங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
https://www.virakesari.lk/article/228481
1 week 5 days ago
குதிரைத் திறன் (HP) என்பது திறனை (Power) அளவிடும் ஒரு அலகு ஆகும். இது குறிப்பாக இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் வாகனங்களின் திறனை அளவிடப் பயன்படுகிறது. குதிரைத் திறன் என்றால் என்ன? * திறன் (Power): திறன் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் வேலையின் வீதம் ஆகும். * வரையறை: ஒரு குதிரைத் திறன் (1 \ HP) என்பது, ஒரு குதிரை தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய சராசரி வேலையின் அளவை அடிப்படையாகக் கொண்டது. * இதன் அசல் வரையறையின்படி: 550 பவுண்டுகள் எடையுள்ள பொருளை ஒரு வினாடியில் 1 அடி தூரம் தூக்குவதற்கு ஒரு குதிரை பயன்படுத்தும் திறனுக்குச் சமம். * வாட்ஸுடனான தொடர்பு: குதிரைத் திறனின் சர்வதேச அலகு (SI) அமைப்பில் உள்ள அலகான வாட்ஸ் (Watts) உடன் ஒப்பிடும்போது, * 1 \ HP \ \approx \ 746 \ \text{வாட்ஸ்} \ (W) அல்லது 0.746 \ \text{கிலோவாட்} \ (kW) ஆகும். குதிரைத் திறன் ஏன் என்று அழைக்கப்படுகிறது? (வரலாறு) * ஜேம்ஸ் வாட்: ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் வாட் (James Watt) என்பவரால் 18-ஆம் நூற்றாண்டில் இந்த அளவீடு உருவாக்கப்பட்டது. இவர் தான் நீராவி இயந்திரத்தையும் மேம்படுத்தியவர். * தேவை: நீராவி இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோது, அந்த இயந்திரங்களின் திறனைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்குப் பழக்கப்பட்ட ஒரு அளவுகோல் தேவைப்பட்டது. * ஒப்பீடு: அப்போது, சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றுவது போன்ற வேலைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைகளின் வேலை செய்யும் திறனுடன் தனது நீராவி இயந்திரத்தின் திறனை வாட் ஒப்பிட்டார். * பெயர் காரணம்: ஒரு சராசரி குதிரை எவ்வளவு வேலை செய்ய முடியுமோ, அந்த அளவைத் தரநிலையாகக் கொண்டு, அதற்குச் சமமான இயந்திரத்தின் திறனைக் குறிக்க "குதிரைத் திறன் (Horse Power)" என்ற பெயரைத் தேர்வு செய்தார். இந்த வரலாற்றுப் பின்னணியின் காரணமாகவே, நவீன வாகனங்கள், மோட்டார்கள் போன்றவற்றுக்கு வேறு எந்த விலங்கின் பெயரையும் பயன்படுத்தாமல், இன்றளவும் குதிரைத் திறன் (HP) என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது. Sujath ############### ###################### அதுமட்டுமல்ல : முக்கியமான ஒரு பாயிண்ட்டை நீங்கள் விட்டுவிட்டீர்கள். *சிறுத்தை உணவு க்காக தனது இரையை துரத்திக் கொண்டு ஓடும். *மான் தனது உயிரை காத்துக் கொள்வற்காக தலை தெறிக்க ஓடும்.ஆனால்! இவையெல்லாம் முதுகில் அதிக எடைகளை சுமந்து கொண்டோ, அல்லது இழுத்துக்கொண்டோ ஓடுவதில்லை. ஆனால்! குதிரை அப்படியில்லை. தனியே வேகமாய் ஓடும் திறனும் உண்டு. மனிதர்களை முதுகில் சுமந்து கொண்டு ஓடும் திறனும் உண்டு.வண்டியில் பூட்டி ஒட்டினாலும் அதில் வைத்த கனமான எடையையும் இழுத்துக் கொண்டு ஓடும் திறனும் உண்டு. அதனால் தான் மோட்டார், எஞ்சின், வண்டி, வாகனங்களை புல்லிங் பவர் அடிப்படையில் குறிப்பிடும் போது... இத்தனை "குதிரை சக்தி", அதாவது இவ்வளவு "horse power" என்று கெப்பாசிட்டி அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள். நசிகேதன் நடராஜன்
1 week 5 days ago
இக் கட்டுரையை எழுதியவர் எப்படியெல்லாம் யோசித்துள்ளார் 😂 https://ta.wikipedia.org/wiki/குதிரைத்_திறன்
1 week 5 days ago

அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்!
மிக அருமையான வினா!
குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்!
இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்!
ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ?
ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ?
அப்போதும் உதைக்கிறதே!
குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்?
ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும்.
இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை!
குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்!
மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு!
சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு!
எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது!
வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை.
Umamahesvari Ck
1 week 5 days ago
அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும். இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை! குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்! மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு! சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு! எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது! வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை. Umamahesvari Ck
1 week 5 days ago
ரெட் அலர்ட் கொடுத்த இடங்களில் ஏன் அதி கனமழை பெய்யவில்லை? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்திருந்தது. ரெட் அலர்ட் (அதி கனமழை) என்பது 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதை குறிக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கனமழை முதல் மிக கனமழை (ஆரஞ்ச் அலர்ட்) வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images திரும்பப் பெறப்பட்ட ரெட் அலர்ட் ஆனால் அக்டோபர் 22-ஆம் தேதி காலை இந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. புதன்கிழமை வெளியான தகவலின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கே ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் வழங்கப்பட்டது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. பட மூலாதாரம், X@ChennaiRmc அக்டோபர் 22-ஆம் தேதி மழை நிலவரம் அக்டோபர் 22ம் தேதி காலை 8.30 மணி முதல் அக்டோபர் 23ம் தேதி காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டம் அரூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. நாமக்கல்லில் மோகனூர், நீலகிரியில் விண்ட் வர்த் எஸ்டேட், திருப்பூரில் வெள்ளக்கோயில் ஆகிய இடங்களில் 9 செ.மீ மழை பதிவாகியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, நீலகிரியில் க்ளென்மார்கன், விழுப்புரம் ஆவலூர்பேட்டை ஆகிய இடங்களில் 8 செ.மீ மழை பதிவாகியது. சென்னை புறநகர் பகுதிகளில் மேடவாக்கத்தில் 4 செ.மீ மழையும் நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ மழையும் பதிவானது. பட மூலாதாரம், Getty Images வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் என்று அக்டோபர் 21-ஆம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அன்றே அது வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது. அப்போது அது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது புயலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அக்டோபர் 22-ஆம் தேதி கூற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அக்டோபர் 22-ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதன் அடுத்த நிலையான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டது. பட மூலாதாரம், imd.gov.in எச்சரிக்கை கொடுத்த இடங்களில் ஏன் கனமழை பெய்யவில்லை? வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை பொய்யாகி போவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களில் கனமழையை எச்சரிக்க தவறியது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அதே போன்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த தினங்களில், எச்சரித்த இடங்களில் மழை பெய்யாமல் போனதும் உண்டு. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கைக்கும் வானிலை நிகழ்வுக்கும் இடையில் உள்ள இடைவெளியை பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பிபிசி தமிழிடம் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் விளக்கமாக பேசினார். வானிலை நிகழ்வுகளை 100% யாராலும் முழுமையாக கணிக்க முடியாது என்பதை முதலில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார். "வானிலை எச்சரிக்கைகள் எப்போதுமே 80-85% சரியாக இருக்கும். 100% சரியாக யாராலும் கணிக்க முடியாது" என்றார். இந்த முறை என்ன நடந்தது என்று விளக்கி பேசிய அவர், "வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்று முதலில் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அது வலுவிழந்து கரையை கடந்தது என்று கூற முடியாது, நகர்ந்து சென்றது என்றுதான் கூற வேண்டும். எனவே புதன்கிழமை மதியம் முதலே மழை குறைய தொடங்கியது" என்றார். பட மூலாதாரம், Y.E.A. Raj படக்குறிப்பு, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் ஒய்.இ.ஏ. ராஜ் முதலில் இருந்த வானிலை நிகழ்வில் அடுத்தடுத்த நேரத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுட்டிக்காட்டும் அவர், "இந்த வானிலை நிகழ்வு தமிழ்நாட்டின் மேல் நிலவினாலும் இதன் மேகங்கள் ஆந்திராவின் பக்கம் குவியத் தொடங்கின. அதனால்தான் இப்போது ராயலசீமா பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும். வானிலை நிகழ்வு ஒரு புறமும் அதன் மேகங்கள் மறுபுறமும் என சீரான நிலை இல்லாமல் இருப்பது வட கிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக் கூடும்.'' என்றார் மேலும், ''புயல் போன்ற நிகழ்வில் அதன் மையம் எங்கு உள்ளது என்று தெளிவாக கூற முடியும். எனவே அது குறித்த கணிப்புகளும் சரியாக இருக்கக் கூடும். ஆனால் காற்றழுத்த தாழ்வுப் பகுதி போன்ற நிகழ்வுகளில் அதன் மையம் எங்குள்ளது என்று மிக தெளிவாக கூற முடியாது. எனவே சில மாற்றங்கள் இருக்கும். சென்னையிலிருந்து சுமார் 65 கி.மீ தள்ளி உள்ள அரக்கோணத்தில் 15 செ.மீ மழை பதிவாகியிருந்தது" என்றார். மேலும் வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகள் முழுவதும் தவறு என்று கூற முடியாது என்கிறார் ஒய்.இ.ஏ. ராஜ். "புதன்கிழமை பரவலாக ஆங்காங்கே மழை பெய்துள்ளது. சென்னையை சுற்றி பல இடங்களில் 3 முதல் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது." என்கிறார். ''வானிலை கணிப்புகளை பொருத்தவரை கடலில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்க வழியில்லை. தரையில் உள்ள நிகழ்வுகளை கண்காணிப்பது போல கடலில் கண்காணிக்க முடியாது. கடல் நிகழ்வுகளை பொருத்தவரை செயற்கைக்கோள் தரவுகளை நம்பியிருக்க வேண்டும். அது நிலத்தை நெருங்கி வரும் போதுதான் ரேடார் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியும்" என்றார் ஒய்.இ.ஏ. ராஜ். பட மூலாதாரம், B.Amudha படக்குறிப்பு, வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா இந்த குழப்பத்துக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி. அமுதா பிபிசி தமிழிடம் பேசுகையில், "நாங்கள் கொடுத்த ரெட் அலர்ட்டை திரும்பப் பெற்றதில் தவறு இல்லை. மக்களின் பாதுகாப்பு கருதி, அப்போதிருந்த தரவுகள் அடிப்படையில் அதிகனமழை எச்சரிக்கை கொடுத்தோம். ஆனால் நிலைமைகள் மாறிய போது அதை திரும்பப் பெற்றோம்" என்றார். தென் மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான அதே நேரத்தில் மேலும் மூன்று வானிலை நிகழ்வுகள் இருந்தன என்று சுட்டிக்காட்டும் அமுதா, "ஒரு கட்டத்தில் வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் இரண்டு பகுதிகளிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. இது மட்டுமல்லாமல் தெற்கு அரைக்கோளத்தில் மேலும் இரண்டு நிகழ்வுகள் நிலவின. அது புயலாக வலுப்பெற்ற போது, தனது ஆற்றலைக் கொண்டு மேகங்களை தன் பக்கம் இழுக்க தொடங்கியது." என்றார். மேலும், ''பிறகு இதிலிருந்து முழுவதும் விலகி வேறு பக்கம் சென்று விட்டது. அப்போது இங்கிருந்த வானிலை நிகழ்வு வலுப்பெற முடியவில்லை. இந்த நிகழ்வை, இது இப்படி நடக்கும் என்று முன்கூட்டியே 100% கணிப்பது என்பது சாத்தியமில்லை. கடல் மீது இந்த நிகழ்வுகள் நடப்பதால் நாம் செயற்கைக்கோள் தரவுகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது" என்றார். பட மூலாதாரம், Getty Images கணிப்புகளை துல்லியமாக்க என்ன செய்ய வேண்டும்? வானிலை கணிப்பு மாதிரிகள் (weather prediction models) என்பவை கணினி அடிப்படையிலான கணிப்புகளே. எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் வெவ்வேறு தகவல்கள் கணினிக்கு வழங்கப்படும். அதை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து ஒரு கணிப்பை கணினி வழங்கும். வானிலை ஆய்வாளர்கள் அந்த கணிப்பை புரிந்து கொண்டு தங்கள் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தின் மூலம் வானிலை அறிக்கைகள் தயாரிக்கின்றனர். கணினிகளுக்கு வழங்கப்படும் தரவுகளை துல்லியமாக்குவது, வானிலை கணிப்புகளை மேலும் துல்லியமாக்க உதவும். "வானிலை கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும், அதன் மூலம் கணிப்புகளை மேம்படுத்த முடியும். இந்திய வானிலை மைய மாதிரிகள் போலவே, Joint Typhoon Warning Centre (JTWC), Global Forecast System (GFS), European Centre for Medium-Range Weather Forecasts (ECMWF) என பல்வேறு வானிலை கணிப்பு மாதிரிகள் உள்ளன. இந்த கணிப்புகளுக்கு இடையே சில வித்தியாசங்கள் இருக்க தான் செய்யும்" என்றார் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் அமுதா. 2021-ஆம் ஆண்டு வெள்ளத்துக்கு பிறகு பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வகையிலான வானிலை மாதிரிகளை அமைக்க அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு ரூ.10 கோடியை 2022-23 பட்ஜெட்டில் ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் சூப்பர் கணினிகள், வானிலை பலூன்கள், இரண்டு ரேடார்கள், 100 தானியங்கி வானிலை நிலையங்கள், 400 தானியங்கி மழை அளவிடும் நிலையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. "இந்தியாவில் 559 கண்காணிப்பு மையங்கள் இருந்த காலம் மாறி தற்போது 1000க்கும் மேற்பட்ட மழை அளவிடும் நிலையங்கள் மற்றும் வானிலை கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 65 தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் 80 மழை அளவிடும் நிலையங்கள் உள்ளன. சென்னையில் முதலில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் மட்டுமே கண்காணிப்பு மையங்கள் இருந்தன. அந்த தரவுகளை வைத்து மட்டுமே கணிப்புகளை தயாரிக்க வேண்டும். ஆனால் சென்னையிலேயே பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் இருப்பதால் பரவலான தரவுகள் கிடைக்கின்றன, எனவே கணினி மாதிரிகள் மேம்பட்டுள்ளன" என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kpvgdjz8yo
1 week 5 days ago
கனேமுல்ல சஞ்சீவ என்பவன் யார்..? ஏன் கொலைசெய்யப்பட்டார்..? கனமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயல்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. *திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் இவர் கைதானவர். சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான “பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்” ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார். அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயட்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார். எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயற்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார். ஆனால் சமிந்தவின் தம்பி ருவன், சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உட்பட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர். ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உட்பட அவரது குழு. அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார். மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான “அஜா மற்றும் சூளா” என்பவரையே பாவித்தார். இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இன்னுமொரு கொலைவழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார். குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர். எவ்வராயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அதுதான் நிறைவேறியுள்ளது. Thenral MH ·
1 week 5 days ago
இந்தியா 340/3
1 week 5 days ago
மழை வராம விட்டு இருக்கனும் 350 ரன்ஸ் இந்திய மகளிர் அடிச்சு இருப்பினம்👍....................... மீண்டும் அதிக மழை பெய்யிது போட்டி இன்று நடப்பது சந்தேகம்☹️.................
1 week 5 days ago
ஆடடித்து தீபாவளி கொண்டாடி விட்டீர்கள் அருமை (வரிகள்) கொன்றால் பாவம் தின்றால் போச்சு.என்பார்கள்.
1 week 5 days ago
49ஓவர் இரு அணிகளுக்கும் கொடுத்து இருக்கு இன்னும் 42நிமிடத்தில் போட்டி மீண்டும் தொடங்கும்................... மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப் பட்டு இருக்கு என நினைக்கிறேன்.................
1 week 5 days ago
49 ஓவர்தான் விளையாட போகினம். இந்தியாவுக்கு இன்னும் 1 ஓவர் இருக்குது .
1 week 5 days ago
மழை நின்று விட்டது மைதானத்தில் இருக்கும் மெதுவான தண்ணீர மிசின் மூலம் வெளியில் எடுக்கனும்...........இந்தியா 50 ஓவர் விளையாடுவினம் என நம்புகிறேன் , இன்னும் 2இரண்டு ஓவர் தான் இருக்கு.....................