Aggregator

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட்.

1 week 6 days ago

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர், பாடல் திறமையுள்ள கலைஞர்களுக்கு தங்களது திறமையை வெளிக்காட்டும் மேடையாக உள்ளது.

பெரியவர்கள், சிறியவர்கள் என மாறி மாறி எபிசோடுகள் ஒளிபரப்பாகும், இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அவ்வப்போது புதிய கான்செப்டுடன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள், ஆனால் சமீபத்தில் தொடங்கப்பட்ட சூப்பர் சிங்கர் 11வது சீசனின் கான்செப்ட் மொத்தமாக மாற்றப்பட்டது.

4 குரூப், அதற்கு 4 நடுவர்கள் என வித்தியாசமான கான்செப்ட், நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஹிட்டாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது.

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நடந்த ஸ்பெஷல் எபிசோட் | Super Singer Season 11 6Th 7Th September 2025

ஸ்பெஷல் எபிசோட்

இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு சூப்பர் எபிசோட் இடம்பெற உள்ளது. அதாவது மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் நினைவாக இந்த வார எபிசோட் அமைந்துள்ளது.

இந்த ஸ்பெஷல் நிகழ்ச்சியில் வெற்றிமாறன், சீமான் போன்ற கலைஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர்.

Cineulagam
No image previewபாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்காக சூப்பர் சிங்கரில் நட...
Super Singer Season 11 | 6th & 7th September 2025 - Promo 1

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 6 days ago
அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 6 days ago
செம்மணிக்கு வந்த என் பி பி அமைச்சரையும் எம்பிகளையும் அவமதித்து அடிக்காத குறையாக விரட்டிவிட்டு அவர்களின் சப்பாத்துகளை கைப்பறிவிட்டதாக முகநூல்களலும் ஏன் பராளுமன்றத்திலும் கூட வெட்டி வீரம் பேசியவர்கள் ஜனதிபதி பார்கக வரவில்லை என்று புலம்புகிறார்கள்.

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்

1 week 6 days ago
மறைந்த யாழ்கள உறவின் பெயர் மாதிரி இருக்கிறதே? மோகன் இதை உறுதிப்படுத்த முடியுமா?

பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம்

1 week 6 days ago
Posted inBook Review பி.எச்.டேனியல் (தமிழில்: இரா. முருகவேள்) எழுதிய *எரியும் பனிக்காடு (Red Tea)* – நூல் அறிமுகம் Posted byBookday02/09/20252Posted inBook Review எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) 1969 இல் ஆங்கிலத்தில் Red Tea என்னும் தலைப்பில் வெளிவந்தது இந்நவீனம்.. தேயிலை மலைகளில் பல்லாயிரம் உழைக்கும் மக்கள் பலியாக காரணமாகயிருந்த அடக்குமுறைக்கும், நோய்களுக்கும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளை உழைக்கும் மக்களின் நண்பர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பது நம்பகத்தன்மையற்றது என்று மனித நேயம் கொஞ்சமும் இல்லாத ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தையும் தென்னிந்தியாவில் தேயிலைத் தோட்டத் தொழிலை உருவாக்குவதில் ஆயிரம் ஆயிரம் முகம் தெரியாத தொழிலாளர்களுக்கு நேர்ந்த விபரீதங்களை உலகிற்கு உணர்த்த எழுத்தாளர் கையாண்ட கோலாக இப்புத்தகம் எரியும் பனிக்காடு.. ஆதவன் தீட்சண்யாவின் உணர்வு பூர்வமான வரிகளோடு துவங்குகிறது இந்நவீனம், *ஆனைமலைக் காடுகளில் தழைத்திருக்கும் ஆங்கிலேயர்களின் தேயிலை தோட்டங்களில் அடியுறமாயிடப்பட்டவை எமது உயிர்கள் நீங்கள் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் ஒவ்வொரு துளி தேநீரிலும் கலந்திருப்பது எமது உதிரம்* என்னும் மனதை கசக்கும் வரிகள், *தோட்டியின் மகன், தூப்புக்காரி* போன்ற சமூக அவலங்களை முன்னிலைப்படுத்திய நாவல்களை என் கண்முன் நிறுத்தியது.. இந் நவீனம் முழுவதும் திருநெல்வேலியில் மயிலோடை என்னும் குக்கிராமத்தில் வசிக்கும் கற்பனைக் கதாபாத்திரங்களான கருப்பன் , வள்ளி என்னும் தம்பதியினரின் வறுமையின் பிடி, அவல நிலை மற்றும் தேயிலைத் தோட்டங்களின் பசுமைக்கு பின்னால் அதை உருவாக்கிய மனிதர்களின் எலும்புகள் புதையுண்டு கிடந்து பிழைக்க வந்த அவர்களை அங்கேயே சாகடித்த நூற்றுக்கணக்கான மக்களின் வலிநிறைந்த குரல்கள் நம் கண்களில் பிரதிபலிக்கும் நீரூற்றாய் இப்புத்தகத்தை வாசிக்கும் பொழுதே… ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின்போது வால்பாறையில் உள்ள ஒரு தேயிலை எஸ்டேட்டின் தலைமை மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தான் எழுத்தாளர் பி எச் டேனியல் அவர்கள்.. 1920 முதல் 1930 வரை அப்பகுதியில் வேலை பார்த்த மக்களின் கொடூரமான அவல நிலையையும் மிருகங்களை விட கீழ்த்தரமாக நடத்தப்பட்ட பரிதாப சூழ்நிலைகளையும் இந்நவீனத்தில் தோலுரித்து காட்டியுள்ளார் ஆசிரியர்.. பிழைப்பிற்காகவும், ஒருவேளை சாப்பாட்டிற்காகவும் மனிதர்கள் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என்பதற்கு இந்த நாவலில் வரும் வேறு சில கதாபாத்திரங்களின் அடக்குமுறையும், உயிரியல் ரீதியாக பார்த்தால் *விலங்குகளிலேயே வேட்டையாடுவதில் மிகவும் திறமை வாய்ந்தவன் மனிதன் தான். திட்டமிட்டு தனது சொந்த இனத்தை வேட்டையாடும் ஒரே விலங்கும் மனிதன் தான்* என்ற வில்லியம் ஜேம்ஸின் மேற்கோள் தான் இந்நாவலின் மொத்த சாரமும்.. “கூரையாக வேயப்பட்டிருந்த பனையோலைகள் ஏறக்குறைய இறுதி மூச்சு விடும் நிலையில் இருந்தன” “மூலையில் கிழிந்த நாராக கிடந்த அம்மாவின் உருவம்” போன்ற ஆசிரியரின் மொழி நடை நாவலின் கூக்குரலுக்கு மெருகூட்டுகிறது… மேஸ்திரி சங்கரபாண்டியின் ஆலோசனைக்கிணங்க கண்கள் நிறைய கனவுகளுடன் வால்பாறை தேயிலை எஸ்டேட்டுக்கு கருப்பனும், வள்ளியும் ரயிலில் பயணிக்க அவர்களுடன் வாசகியாக நானும் பயணிக்க ஓரிரு தினங்களுக்குள் மயக்கம் தெளிய, வேலை ஆரம்பிக்க, கருப்பன் விறகு வெட்ட, வள்ளி தேயிலை கிள்ள, தீப்பெட்டி அளவே உள்ள தகர வீட்டில் இன்னொரு குடும்பத்தினருடன் தங்கள் இருப்பிடத்தை பகிர்ந்துகொள்ள, வேலை பார்க்கும் இடத்தில் கண்காணிப்பாளர்களின் பாலியல் தொந்தரவுக்கு இடம் கொடுக்காது வரும் பிரச்சனைகளினால் மனம் துவள, ஆளுக்கொரு போர்வையென மழையில் நனைந்துவிட்டால் அடுப்பில் சூடுசெய்து பயன்படுத்திக்கொள்ள, மாற்று போர்வை கிடைக்காது என்று மேஸ்திரி எச்சரிக்க, பனி, மழை, குளிர், உடல் வலி எதற்கும் விடுமுறை கிடையாது. அதிகாலை எழுந்து, சாப்பிட்டு கிளம்பிவிடவேண்டும். இருட்டிய பிறகே வீடு திரும்பலாம். கழிப்பறை கிடையாது, மருத்துவ வசதி கிடையாது, வலிக்கும் வேலைக்கும் தொடர்பு எதுவுமில்லை. நின்றுகொண்டே கிள்ளமுடியாவிட்டால், இடையிடையே அமர்ந்துகொள். நடுங்கும் குளிர் என்றால் போர்த்திக்கொண்டு விறகு வெட்டு. அட்டைப்பூச்சிகள் கடித்து ரத்தம் வடிந்தால், காட்டு இலைகளைப் பறித்து தேய்த்துவிட்டு, தொடர்ந்து வேலையைச் செய், என வெள்ளை துரைகளுக்கும் மேஸ்திரிகளுக்கும் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்க எழுத்தாளரின் எழுத்தாணி வால்பாறையின் பனிக்காட்டில் எரியும் மக்களின் குமுறல்களை படமிட்டு காட்ட, நாம் குடிக்கும் ஒவ்வொரு கோப்பைத் தேநீருக்கு பின்னால் முகம் தெரியாத மனிதர்களின் வியர்வையும், கண்ணீரும் கலந்திருக்கிறது என்பதை இந்த நாவல் சுவைக்குப் பின் கசப்பின் நியதியை அழகாகப் பதிவு செய்திருக்கிறது.. மக்கள் மலைக்கு போவதற்கான கட்டாயம் என்ன? அங்கே சென்றாலும் அவர்களுடைய கனவுகள் பலித்ததா? அவர்களது சொல்லொன்னா அடிமைத்தன வாழ்வு எப்படியாய் இருந்தது? என்ன அடக்குமுறைகளுக்கெல்லாம் உள்ளானார்கள்? அடிமைத்தன வாழ்க்கை முறையின் அனுபவங்கள் என்னென்ன? சாதிவெறி யின் தாக்கங்கள் என்னென்ன? கதையின் ஊடாக அவர் காட்டும் இருளும்வெளிச்சமும் மிக முக்கியமானது. குறிப்பாக நாவல் முடியும் போது ஏற்படும் மனவெழுச்சியை நம்மால் கட்டுப்படுத்தவே இயலாது அவ்வளவு துயரமிக்க காட்சிகளை நம் மனக்கண் முன் வெளிச்சமிட்டு காட்டியுள்ளார் ஆசிரியர்.. இந்நூலை வாசிக்க வாசிக்க Shakespeare’s *Merchant of Venice* ல் வரும் *எவ்வளவு அழகான முகமூடி பூண்டி இருக்கிறது இந்த நரகம்* என்னும் வரிகள் நம் எண்ண ஓட்டத்தில் வந்தே தீரும்.. குறிப்பாக ஒவ்வொரு தலைப்பிற்கு முன்னும் ஆசிரியர் கொடுத்திருக்கும் மேற்கோள்களின் ஒப்பீடு மிக அருமை.. வால்பாறை மண்ணையும், மக்களையும் அறிமுகப்படுத்திய இந்நூலில் இடம் பெறும் உரையாடல்கள் முழுக்க முழுக்க நம் திருநெல்வேலியின் மண்வாசம் வீசுவது கூடுதல் சிறப்பு.. புத்தக பிரியர்கள் தினமன்று புத்தகப் புழுவாகிய எனது நண்பரின் அன்பளிப்பாக பெற்றேன் இப்புத்தகத்தை பெற்ற நாள் முதற்கொண்டு வாசிக்க வாசிக்க கண்களில் நீர் கோர்க்காத நாளில்லை அப்பேர்ப்பட்ட மன வலிகள் மிகுந்த நவீனம் தான் *எரியும் பனிக்காடு*.. *சமூக அவலங்களை அறிந்ததோடு நில்லாது அதனை அப்புறப்படுத்தும் நோக்கில் எழுத்தாளருடன் இணைவோமா??* நூலின் விவரங்கள்: நூல் :எரியும் பனிக்காடு (Eriyum Panikadu) ஆசிரியர்: பி.எச்.டேனியல் (P.H.Daniel) | தமிழில்: இரா. முருகவேள் வெளியீடு: ஐம்பொழில் பதிப்பகம் விலை: ரூ. 250 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/ எழுதியவர் : ✍🏻 சுகிர்தா அ, நெல்லை. https://bookday.in/eriyum-panikadu-book-reviewed-by-sugirtha-gunaseeli/

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 6 days ago
செம்மணியை கண்டும் கானாமல்போனதும் ...புதுகுழி இருக்குமிடத்தில் அத்திவாரம் போடலையும் சொன்னேன்...இது உங்களுக்கு குத்தினால் நான் என்ன செய்வது...அபிவிருத்தியை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை...அநீதிக்கும் தீர்வை காணும்படி சொன்னேன் ....இது என் தனிப்பட்ட கருத்தே...அத்திபாரம் போட்டவுடன் அபிவிருத்தி அடைந்த்ததாக சந்தோசப் படவேண்டாம் என்றுதான் சொன்னேன்....

'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?

1 week 6 days ago
நாய்கள் என்றாலே என்றும் பிரச்சனைதான்.அது வீட்டு வளர்ப்பு நாயாக இருந்தாலும் சரி தெரு நாயாக இருந்தாலும் சரி அதற்கென ஒரு தனிக்குணம் இயற்கையாகவே உண்டு. ஜேர்மனியில் வீட்டுக்கு வீடு நாய்கள் பெரும்பாலும் உண்டு. அவை பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களாகவே இருக்கும். கடி நாய்களாக இருந்தலும் அதுகளுக்கு பயிற்சி கொடுக்கப்படிருக்கும். கடி நாய்களை களவாக வளர்ப்பவர்களும் உண்டு. ஏனென்றால் கடி நாய்களுக்கு அனுமதி பத்திரம் வாங்கியிருக்க வேண்டும்.அதற்குரிய கட்டணங்களும் அதிகம்.அது துப்பாக்கி வைத்திருப்பதற்கு சமம். நாய்கள் என்றுமே வில்லங்கமானவை.ஊரில் எல்லாம் அதை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருப்பார்கள்.நடு வீட்டுக்குள் எல்லாம் அனுமதிப்பதில்லை. மேற்குலகில் அப்படியல்ல. அளவு மிகுந்த பாசமும் அன்பும் கொடுக்கின்றர்கள். செலவுமும் அதிகம். நல்ல காலம் ஜேர்மனியில் தெருநாய்கள் இல்லை. அதற்கு அனுமதிகளும் இல்லை. வீட்டு நாய் வெளியில் தனியாக வருவதுமில்லை. தனியே எஜமானுடன் மட்டுமே வெளியே வர அனுமதியுண்டு. நாய் அது ஐந்தறிவுள்ள ஒரு மிருகம். அதனை மனிதனுக்கு சமனாக ஒப்பிடுவது தவறு.வீட்டுக்கு வீடு நாய் இருக்கலாம்.ஆனால் தெருவுக்கு தெரு நாய்கள் என்றும் ஆபத்தானது.

நெடுந்தீவு – கச்சத்தீவு ஒன்றிணைக்கும் வகையிலான சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ஆராயப்படுகின்றது ; அமைச்சர் சந்திரசேகர்

1 week 6 days ago
இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்கு கச்சதீவு பேசு பொருள் அல்ல. அத்துடன் மீன் பிடி பிரச்சனைகளும் ஈழத்தமிழர் பிரச்சனைக்குள் அடங்கவில்லை என நினைக்கின்றேன். சிறு செய்திகளுக்கெல்லாம் கொலரை தூக்கி காட்டியதால் தான் தமிழினம் இன்று இந்த நிலையில் நிற்கின்றது.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 6 days ago
அது தானே! எல்லா மரண புதைகுழிகளையும் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் தண்டித்து, சர்வதேச விசாரணைகளை அனுமதித்து அவற்றின் தீர்ப்பும் வந்த பிறகுதானே தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்? அதுவரைக்கும் ஊர்ச் சனம் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காய்ந்து கருவாடாகத்தானே போகத்தான் வேண்டும்...!

விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளருக்கு என்ன நடந்தது? 16 ஆண்டுகளாக தொடரும் பாசப் போராட்டம்

1 week 6 days ago
ஒருவரா இருவரா?ஆயிரக் கணக்கில் கூட்டிக் கொண்டு போனவர்களில் ஒருவரைத் தன்னும் உயிருடன் காட்டவில்லை. பதில்கள் எல்லாமே திமிருடன் கூடிய தான்தோன்றித்தனமான பதில்கள். அரசும் இராணுவத்தை காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதற்காக இரட்டை வேடம் போடுகிறது.

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 week 6 days ago
வணக்கம் வாத்தியார் . ......... ! இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : { அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல அவ நெறத்த பாா்த்து செவக்கும் செவக்கும் வெத்தல அவ அழக சொல்ல வாா்த்த கூட பத்தல அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில } (2) ஆண் : ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிா் பிச்சி பிச்சித் திண்ணா அவ ஒத்த வாா்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா ஆண் : அடங்காக் குதிரைய போல அட அலஞ்சவன் நானே ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால ஆண் : எதுவோ எங்கள சோ்க்க இருக்கே கயித்துல கோா்க்க ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபாா்த்தோமே துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி இன்னும் தேடுறன் அவள தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ ஆண் : வாழ்க்க ராட்டினம் தான்டா தெனம் சுத்துது ஜோரா அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா ஹா மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன் ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன் யாரோ கூடவே வருவாா் யாரோ பாதியில் போவாா் அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே ஆண் : வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டுல நிறுத்தி ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ ......... ! --- அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல ---

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

1 week 6 days ago
சில மரணப் புதை குழிகளை மூட சர்வதேச கிரிக்கெட் ஸ்ரெடியமும் சர்வதேச விமான நிலையமும் அவசரமாக தேவை படுகிறது