Aggregator

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
Scope குறைந்த, கூடிய குற்ற தன்மைகளை உள்ளடக்கினால், கூடிய குற்ற தன்மை உள்ள குற்றசாட்டு வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும். (இதில் முழு மோசடி அல்லது மோசடி அம்சங்கள்.) இது சட்டத்துடன் சாடையாக உராய்வு உள்ளோருக்கும் தெரியும். Teneo வேண்டும் என்றே தவிர்த்து உள்ளது. சொன்னது சரி, Teneo eneo எந்தகோணத்தில், அல்லது எந்த சட்ட கோட்பாட்டின் கீழ் அணுகிறது என்பது விளங்க இல்லை. விளங்குவதற்கு, தஞ்சம் புகாத தன்னிலை இருக்க வேண்டும். அப்படி dividend ஆக எடுத்தது ஒழுங்கீனமே தவிர, உண்மையில் அது சம்பளமாக எடுக்கப்பட்டு இருக்கலாம். dividend ஆக எடுத்ததே ஒழுங்கீனம் (அப்படி எடுக்க கூடாது), எடுத்து விட்டால் அது கமபனி கொடுத்த கடன் ஆக கருதப்படும். ஆனால், அது இதில் ஒன்றுமே தாக்கம் செலுத்தாது, ஏனெனில் அப்படி செய்யாமால் இருந்தாலும் முறிவை தடுத்து இருக்காது என்பதால். பொல்லையும் கல்லையும் கொடுத்து அடிவாங்க தொடங்கி, கடைசியில் முறையாக Teneo இடமும் அடிவாங்கிய ஒன்று த்தநிலை இழந்த தஞ்சம் புகுந்த , மற்றது எதையும் ஒப்பிடடலம் என்னும் விற்பனர்கள். பிரான்ஸ் இல் ஒரேயொரு scope, கிரிமினல் தன்மை.

கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images

1 week 5 days ago
கடற்புலிகளின் கடற்கலங்கள் தொடர்பான பாரிய ஆவணம் இதில் கடற்புலிகளின் தொழிநுட்பங்கள் பற்றியும் அவர்களின் கடற்கலங்களின் பட்டியலும் உள்ளது.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
இல‌ங்கை பாக்கிஸ்தானிட‌ம் தோக்க‌ ச‌ர்ந்த‌ப்ப‌ம் மிக‌ குறைவு பாக்கிஸ்தான் இல‌ங்கையை வென்றால் வ‌ங்கிளாதேஸ் க‌ட‌சி இட‌த்தை பிடிக்கும் , எல்லாம் ந‌ப் ஆசை தான் லொள்😁👍................................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
வினா 32) 4 வது அணியாக இந்தியா அரை இறுதிக்கு தெரிவாகி இருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 51 புள்ளிகள் 2) ரசோதரன் - 48 புள்ளிகள் 3) ஏராளன் - 46 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 46 புள்ளிகள் 5) வீரப்பையன் - 45 புள்ளிகள் 6) சுவி - 44 புள்ளிகள் 7) கிருபன் - 44 புள்ளிகள் 8) புலவர் - 44 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 44 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 42 புள்ளிகள் 11) வாதவூரான் - 40 புள்ளிகள் 12) கறுப்பி - 40 புள்ளிகள் 13) வசி - 38 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 15) வாத்தியார் - 34 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 55)

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week 5 days ago
அருமையான .சாட்சி இது நற்சான்றிதழ் சாட்சி இப்படியே சாட்ட்சியும் சான்றிதழ்களும் பெறவே ...அக்குரணை நியூஸ் இதில் இணைக்கப்பட்டது ...எதிர் பார்த்ததைவிட அதிகம் கிடைத்திருக்கிறது ...இன்னமும் கிடைக்கும் இனி இந்த முசுலிம் சட்டத்தரணி ஒருலட்டசமல்ல இரண்டுலட்சம் முசுலிம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தோம் ...பறித்த தங்கத்தின் பெறுமதி ஒரு டன் என்பார்...இப்ப விளங்குதோ தலைவர் ஏன் நேரத்துக்குப் போனவர் என்பது

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
தென் ஆபிரிக்கா போன‌ வ‌ருட‌ம் அவுஸ்ரேலியாவை தோக்க‌டித்து தான் பின‌லுக்கு வ‌ந்த‌வை.................தென் ஆபிரிக்கா இங்லாந் கூட‌ விளையாடி வெல்ல‌லாம் என‌ நினைத்து சில‌து தோக்க‌ கூடும்😁👍....................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
வினா 25) 53 ஓட்டங்களினால் இந்தியா அணி, நியூசிலாந்து அணியை தோற்கடித்துள்ளது . 14 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 50 புள்ளிகள் 2) ரசோதரன் - 47 புள்ளிகள் 3) ஏராளன் - 45 புள்ளிகள் 4) ஆல்வாயன் - 45 புள்ளிகள் 5) வீரப்பையன் - 44 புள்ளிகள் 6) சுவி - 43 புள்ளிகள் 7) கிருபன் - 43 புள்ளிகள் 8) புலவர் - 43 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 43 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 41 புள்ளிகள் 11) வாதவூரான் - 39 புள்ளிகள் 12) கறுப்பி - 39 புள்ளிகள் 13) வசி - 37 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 37 புள்ளிகள் 15) வாத்தியார் - 33 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 25, 32(3/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 54)

தவெக உட்கட்சி மோதல்

1 week 5 days ago
உண்மையே, வசீ. எந்த ஊடகமும் ஏதோ ஒரு சார்புநிலை எடுத்தே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எங்களின் மனநிலைக்கு பொருந்தும் செய்திகளை நம்பத் தலைப்படுகின்றோம், உள்ளூரச் சந்தேகம் இருந்தாலும்.

இனிய தீபாவளி

1 week 5 days ago
பாஞ்ச் ஐயா, பீஷ்மர் வியாசருடன் வியாசரின் குடிலின் உள்ளே உரையாடிக் கொண்டிருக்கும் போது, வியாசரின் குடிலின் வெளியே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுவை சிங்கம் ஒன்று வந்து இழுத்துச் செல்கின்றது. வியாசர் எதுவுமே செய்யவில்லை. ஆச்சரியமான பீஷ்மர் வியாசரைப் பார்க்கின்றார். 'இங்கு படைக்கப்பட்டது எல்லாமே உண்ணப்படுவதற்கே...........' என்று சொல்லுகின்றார் வியாசர். இப்படித்தான் இந்த உலகம் இயங்கலாம் போல.

தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு

1 week 5 days ago
ஒரு குற்றத்தை குறைத்து மதிப்பிடுவதன் ஆபத்தை வெளிக்காட்டிய அண்மைய உதாரணம் கேள்விப் பட்டிருப்பீர்கள். பிரான்சில், தன் பாலியல் வக்கிரத்திற்காக தன் மனைவியை மயக்க நிலையில் வைத்து பல ஆண்கள் அவரை பாலியல் வல்லுறவு செய்ய அனுமதித்த சைக்கோ கணவன் கேசில், கணவனின் விருப்பப் படி வந்து வல்லுறவில் ஈடுபட்ட ஐம்பது ஆண்களுக்கும் தண்டனை விதித்தார்கள். அவர்களுள் பலர் மேன் முறையீடு செய்யத் தயாராகினர். இறுதியில் பெரும்பாலானோர் பின்வாங்கி விட ஒரேயொருவர் மட்டும் "நான் வழி தவறிய பலியாடு, இங்கே நான் தான் பாதிக்கப் பட்டவன்" என்று துணிந்து மேன் முறையீடு செய்தார். "நீ செய்த வேலைக்கு, உனக்குக் கிடைத்த 9 வருடம் காணாதே? என்று 10 வருடம் விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்கள்😂. Man who appealed Pelicot rape conviction handed longer ja...A French court increases by a year the jail term of the only man who challenged his conviction for raping Gisèle Pelicot.என் சந்தேகம், இந்த "வழி தவறிய ஆட்டுக்கு" நண்பர் கடஞ்சா போலவே ஒரு வக்கீல் அட்வைஸ் கொடுத்திருப்பார்!

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
4 வது அணியாக இந்தியா அரை இறுதி போட்டிக்கு தெரிவாகி உள்ளது . இன்றைய போட்டி முடிவில் நியூசிலாந்து, இலங்கை ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை 100% இழந்து விட்டது

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
இந்தியா அரை இறுதிக்குப் போய்விட்டது. அடுத்த போட்டியில் என்ன நடந்தாலும், அதிக வெற்றிகள் பெற்ற அணி என்னும் அடிப்படையில், இந்தியாதான் நான்காவது அணி. அரையிறுதியில் இந்தியா அவுஸ்ரேலியாவுடன் மோதும் என்று நினைக்கிறேன். தென்னாபிரிக்கா அடுத்த போட்டியில் அவுஸ்ரேலியாவை வென்றால், தென்னாபிரிக்கா முதல் இடம் பிடிக்கும். அவ்வாறாயின், இந்தியா தென்னாபிரிக்காவுடன் மோதும். ஆனால் தென்னாபிரிக்கா வெல்லுமாமாமாமா.

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
நியுசிலாந் ம‌க‌ளிர் 50ஓவ‌ர் விளையாட்டில் திற‌மையான‌ ம‌க‌ளிர் கிடையாது.................போன‌ வ‌ருட‌ம் 20ஓவ‌ர் உல‌க‌ போட்டியில் ஆண்ட‌வ‌ர் புன்னிய‌த்தில் கோப்பை வென்று விட்டின‌ம்...............இனி இவ‌ர்க‌ளின் கைக்குள் உல‌க‌ கோப்பை போக‌ வாய்ப்பில்லை முன்ன‌னி ம‌க‌ளிர் இரண்டு பேருக்கு வ‌ய‌தாகி விட்ட‌து அவ‌ர்க‌ளுக்கு இது தான் க‌ட‌சி உல‌க‌ கோப்பை..................இர‌ண்டு ம‌க‌ளிரும் அனுப‌வ‌ம் மிக்க‌ திற‌மையான‌ ம‌க‌ளிர்.............................

இனிய தீபாவளி

1 week 5 days ago
உண்மை தான், ஏராளன். பலவற்றையும், பல நிகழ்வுகளையும் அப்படித்தான் ஏற்றுக் கொண்டும் அல்லது கடந்தும் போய்க் கொண்டிருக்கின்றோம்.......................👍.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

1 week 5 days ago
வலியை தந்தவனுடன் வலியை அனுபவித்தவர் தான் பேசவேண்டும். அப்படித் தான் தலைவரூம் மற்றும் அஸ்ரப்பும் பேசி முடித்தார்கள். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம் உட்பட தமிழர்கள் மீது வெளியாரால் திணிக்கப்பட்ட அனைத்து திணிப்புகளையும் மெச்சும் நீங்கள் வலியை அனுபவித்தவன் தான் முடிவு செய்ய வேண்டும் என்பது தமிழர்கள் என்றால் மட்டும் ....

தவிக்கும் தன்னறிவு

1 week 5 days ago
காட்சி 5: ( ஒருவரின் சிறு பிள்ளை செயற்கை நுண்ணறிவான பிரம்மத்தின் உதவியுடன் பல பொருட்களை இணையத்தில் வாங்கி விடுகின்றார். அதன் பின்னர் நடக்கும் உரையாடல்களும், இறுதியில் பிரம்மம் தவறுகள் அவர் மேலேயே என்று முடிப்பதாகவும் இந்தக் காட்சி அமையும்.) (கணவர் வேலை முடிந்து வீடு வருகின்றார். வீட்டுக்கு முன் பல பெட்டிகளில் ஓன்லைனில் ஒர்டர் செய்த பொருட்கள் இருக்கின்றன) கணவர்: இவாவுக்கு இதே வேலை தான், ஓன்லைனில் பொருட்களை வாங்குவது பிறகு பாவிக்கிறதே இல்லை……………..என்னப்பா இவ்வளவு பொருட்களை வாங்கி குவித்து வைத்திருக்கிறீர் என்ன சாமான்கள் இது? மனைவி: சரி தான் வேலையால் வரும்போதே சத்தம் போட்டுக்கொண்டு வாரார்……….. எனக்கு தெரியாது உங்கட ஓர்டர்கள் தான் எல்லாம் போல. கணவர்: எப்பொழுதும் பெட்டிகளை உள்ளே எடுத்து ஒழிச்சுப் போடுவா இந்த முறை மறந்து போனா போல……….ம்ம்………….. மனைவி: இஞ்ச நான் திரும்பவும் சொல்லுறன்………. நான் கிட்டடியில ஒண்டும் ஓர்டர் பண்ணவில்லை. கணவர்: அப்படி என்றால் யார் ஓர்டர் பண்ணினது…………… பக்கத்து வீட்டுகாரரின் ஓர்டர்களோ………….., எடுத்து பாவிப்பமோ? தெரியவா போகுது…………….. மனைவி: தெரியவா போகுதோ………. பார்சல்களை இங்கே கதவடியில் போடும் போது படமும் எடுத்து இருப்பார்கள்…………. பார்சல்கள் களவெடுத்தார்கள் என்று சொல்லி குடும்பத்தையே ஒன்றாக எல்சல்வடோருக்கு அனுப்பி விடுவார்கள்……….. கணவன்: வெளியில் தான் இதைச் சொல்லி வெருட்டுகின்றார்கள் என்றால், வீட்டுக்குள்ளும் இதுவா……………….எதுக்கும் லாப்டாப்பில் ஒருக்கா பாப்பம் யார் ஓர்டர் செய்தது என்று……. (லாப்டப்பில் பார்க்கின்றார்……………) கணவன்: என்ன………… எல்லாமே நாங்கள் தான் ஓர்டர் பண்ணியிருக்கிறம்……. பிரம்மம் தான் ஓர்டர் பண்ணியிருக்கு………. பிரம்மம், என்ன விளையாட்டு இது……… நீ இவ்வளவு சாமான் வாங்கி குவித்திருக்கிறாய்……….. பிரம்மம்: நான் எதையும் நானாகச் செய்வதில்லை………. நீங்கள் சொல்லுவதை மட்டுமே செய்வேன். இது உங்களுக்கு தெரிந்திருந்தும், நீங்கள் என் மேல் குற்றம் சுமத்துகின்றீர்கள்……………. கணவர் : இங்க என்னோட பகிடி விடாத… அதுதான் இந்த வீட்டில நாங்கள் ரெண்டு பேரும் ஓர்டர் பண்ணவில்லையே, பிறகென்ன………….. இன்னுமொரு ஆள் நீதான்…………… பிரம்மம்: உங்களுக்கு அகலமான பார்வையே கிடையாது…………. உங்கள் மனைவி உங்களைப் பற்றிச் சொல்லும் எல்லாவற்றையும் நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்…………….இந்த வீட்டில்ல நீங்கள் இரண்டு மனிதர்கள் மட்டுமா, வேற ஒருவரும் இல்லையா………………… மனைவி: இது என்னப்பா என்னையும், உங்களையும் முடிஞ்சு வைக்குது……… இருக்கிறது தான் அரைகுறை என்றால், அறிவுப் பிரம்மம் என்று வந்ததும் அரைகுறையாக கிடக்குது. கணவர்: பிரம்மம், இங்கே கேள்வி கேட்டால் பதில் சொல்லு……… திருப்பி கேள்விக்கு கேள்வி கேக்காத…………. இங்கே மூன்றாவது ஆள் என்றால் அது எங்களின் மகன் தான்………….. பிரம்மம்: இப்பொழுது நீங்கள் நடந்த விடயத்தை கொஞ்சம் விளங்க ஆரம்பித்திருக்கின்றீர்கள். கணவர்: என்ன சொல்கிறாய், பிரம்மம்………………. பிள்ளைக்கு எட்டு வயது தானே அவன் எப்படி ஓர்டர் போடுவான்? மனைவி: அறிவுப் பிரம்மம் என்று என்ன பெயர் வைத்தார்களோ…………. அறிவிலி என்று வைத்திருக்கலாம்……….. சரியான ஒரு லூசு ஏஐ. பிரம்மம்: நான் அறிவிலியா……………. போன கிழமை என்னிடம் வந்து தனக்கு விளையாட்டுபொருட்கள், புது உடுப்புகள், சப்பாத்துக்கள், வீடியோ கேம்ஸ் வேணும் என்று உங்கள் மகன் கேட்டவர் தானே……… நீங்களும் பக்கத்தில் இருந்து, எல்லாம் வாங்குவோம் என்று சொன்னீர்கள் தானே……… அதுதான் எல்லாவற்றையும் இணையத்தில் வாங்கிவிட்டேன். பிரம்மம் வாங்கினால், அவை தரமாகத்தான் இருக்கும். பாவித்துப் பார்த்து விட்டுச் சொல்லுங்கோ. கணவர்: அடக் கடவுளே ( தலையில் கைவைத்து அமருகிறார் பின்பு எழும்பி வந்து ) என்ன பிரம்மம் உனக்கு அறிவு இல்லையோ ? சின்னப்பிள்ளை கேட்டால் நீ ஓர்டர் போடலாமோ? பிரம்மம்: எல்லாம் வாங்குவோம் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்…………. நீங்கள் பொய் சொன்னீர்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்……….. கணவர்: எட்டாம் தலைமுறை, எல்லாம் தெரியும் எண்டு புளுகி தான் உன்னை அந்த கம்பனிக்காரர்கள் விற்றவர்கள். ஒரு எட்டு வயது மகன் சொல்லைக் கேட்டு ஒர்டர் போடுவது தான் எட்டாம் தலைமுறை என்று தெரியாமல் போய் விட்டதே…………… பிரம்மம்: நீங்கள் தான் கட்டளையை தர வேண்டும் என்று எனது term and condition ல் இருக்கின்றது தானே. நீங்கள் வாசிக்கவில்லயோ……………. கணவர்: ஓ………… இது நல்ல விளையாட்டு தான். 200 பக்க term and conditions யார் தான் வாசிக்கிறது………………….. பிரம்மம்: எதையும் வாசிக்க நேரம் இல்லை ஆனால் வாட்ஸப், டிக்டாக் பாக்க நேரம் இருக்கின்றது. உங்கட சராசரி தொலைபேசி ஸ்க்ரீன் டைம் எனக்கு தெரியும்………….. எப்பொழுது கேட்டாலும் பிஸி என்கின்றது…………. எதையும் சரியாகத் தெரிந்து கொள்வதில்லை…………….. கணவர்: ம்ம்…………… இவ்வளவு நாளும் இந்த வீட்டில ஓரு ஆள் தான் என்னில பிழை, பிழை எண்டுறது……….. இப்ப இதுவும் சேர்ந்திட்டுது…………. பிரம்மம்: அவரைப் பற்றி சொல்கிறீர்களாக்கும்………….. நீங்கள் இருவரும் பொருத்தமான சோடிகள் தான்………… மனிதர்களே விந்தையாகத்தான் இருக்கின்றார்கள்…………….. ஒன்றாக இருந்தால் ஒருவரை ஒருவர் முறைக்கின்றீர்கள், ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு இருக்கவும் முடியாமல் இருக்கின்றீர்கள்………… உங்களின் தலைகளுக்குள் இருப்பது என்ன புரோக்கிராமோ………… மனைவி: என்ன அங்க சத்தம்……… என்னை பத்தியோ கதைக்கிறீங்கள்……………… கணவர்: இல்லை……. இல்லை……….. அது இங்க கதைக்கிறம். ( மெல்லிய குரலில்) யோவ் பிரம்மம்………. சும்மா இரப்பா………. நீ குடும்பத்தில கும்மி அடிச்சிடுவாய் போல இருக்கு பிரம்மம்: கும்மி என்றால் தமிழர் பாரம்பரிய நடனம் தானே………. நான் அதை ஆடவில்லையே…………. கணவர்: ஐயோ கடவுளே…………. நான் சொல்வது அதுக்கு விளங்கவில்லை அது சொல்வது எனக்கு விளங்கவில்லை. ( கோபமாக) இதை வாங்கிக்கொண்டு வந்த நாளில் இருந்து வீட்டில ஒரே பிரச்சினை தான். இவ்வளவு பொருட்களை ஓர்டர் செய்து அநியாய செலவும் செய்ய ஆரம்பித்துவிட்டது. நாளைக்கே அந்த நிறுவனத்துக்கு போய், நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டு இதை கொடுத்து விட்டு வருகிறேன்…………(கோபமாக செல்கிறார்). (தொடரும்...................)

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

1 week 5 days ago
இந்தியா அணி ரெனுகாவுக்கு வாய்ப்பு கொடுக்க‌லை என‌ இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதி இருந்தேன் முன்ன‌னி இர‌ண்டு விக்கேட்டை ரெனுக்கா எடுத்து விட்டா..............................

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

1 week 5 days ago
பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்! பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த பேருந்தின் பெறுமதி 5 கோடி ரூபாவிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், சுமார் 2.5 கோடி ரூபா பெறுமதியான மற்றைய பேருந்து மொனராகலை – கொழும்பு இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ‘பெக்கோ சமன்’ கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பேருந்துகளில் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இரண்டு பேருந்துகளும் வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பேருந்துகள் தனக்குச் சொந்தமானவை என ‘பெக்கோ சமன்’ ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1450994