Aggregator

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

1 week 5 days ago

17 Dec, 2025 | 03:13 PM

image

இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது.

அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது.

ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன.

இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp_Image_2025-12-17_at_13.21.55.jp

WhatsApp_Image_2025-12-17_at_13.21.36.jp

இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk

மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு

1 week 5 days ago
17 Dec, 2025 | 05:21 PM மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் இன்று புதன்கிழமை (17) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு விசாரணை 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு | Virakesari.lk

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

1 week 5 days ago
17 Dec, 2025 | 05:08 PM கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!

1 week 5 days ago

17 Dec, 2025 | 05:08 PM

image

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

1 week 5 days ago
Turkish Airlines flight from Colombo to Istanbul, which was forced to return to Bandaranaike International Airport (BIA) due to a technical issue with its landing gear, departed again this evening after repairs were completed, Airport and Aviation Services (Sri Lanka) (Private) Limited said. They said the flight departed BIA at 5.41 p.m today. Flight TK 733 had taken off from BIA at 10.00 p.m. last night carrying 51 passengers, but developed a landing gear malfunction shortly after departure from Katunayake. As a precaution, the pilot returned the aircraft to BIA, where the runway was prepared for an emergency landing with fire engines, ambulances and emergency response teams placed on standby. The aircraft, which was carrying 202 passengers and 10 crew members at the time, carried out a precautionary fuel dump over the sea prior to landing to reduce risk. It subsequently landed safely at BIA. Airport authorities said several outbound flights experienced delays due to the incident. All passengers were safely evacuated after landing and accommodated at nearby hotels while arrangements were made to repair and reposition the aircraft. https://www.dailymirror.lk/breaking-news/Turkish-Airlines-flight-resumes-journey-after-technical-issue-at-BIA/108-328118 முதலில் 202 பயணிகளுடன் போன விமானத்தில் திருத்த வேலைகள் முடிந்து போகும்போது 51 பயணிகளே போயுள்ளனர். மிகுதிப் பயணிகள் என்ன ஆனார்கள்?

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்

1 week 5 days ago
கந்தையா அண்ணா அவா புர்க்கா போடாத பெண் ஆனபடியயால் பயப்பட வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கிறேன் படத்தை இணைக்க முயற்ச்சித்தேன் முடியவில்லை.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்

1 week 5 days ago
இனி. சுவிஸ. முஸ்லிம். நாடாக. மாறிவிடும். வாழ்த்துகள்.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 5 days ago
தலைப்பு. நோட்டோ வில். இணையமாட்டோம். என்றிருக்கிறது. ஆனால். அதன். கீழ் வரும். செய்தி. நோட்டோ. பாதுகாப்பு. வழங்கினால். நோட்டோ வில் இணையமாட்டோம். என்று. உள்ளது. இதையே. நோட்டோவிலுள்ள. எல்லா. நாடுகளும். சொன்னால் நோட்டோ. என்ற. ஒன்றே இருக்காது. அப்படி. என்றால். யார். பாதுகாப்பு. வழங்குவது ? மேலும் உக்கிரேன். அதிபரின் முடிவு. அமுல்படுத்தப்படுவது. நோட்டோ. தான் தீர்மானிக்க. முடியும் மாறாக. உக்கிரேன். அதிபர் இல்லை. அதை. அவரே. மறைமுகமாக. சொல்லி. உள்ளார். தலைப்பு. பிழையாக. இருக்கும் போது. அதனைப்பார்த்து. எழுதும் கருத்துகளும். பிழையாகத் தான். இருக்க. முடியும் மொத்ததில். உக்கிரேன். நோட்டோவில். இணைவது அல்லது இணைவதில்லை. என்பதை. நோட்டோ. தான். தீர்மானிக்க. முடியும். மாறாக. உக்கிரேன். அதிபர். இல்லை. அவரால். நோட்டோவின். பாதுகாப்பு. தேவையில்லை. என்று. சொல்ல முடியுமாயின். நோட்டோவில. இணையவில்லை என்று கூற. முடியும். பாதுகாப்பு. தாருங்கள் என்று கூறும்போது. நோட்டோவில. இணையவில்லை. என்று. கூறும். தகுதியை. உக்கிரேன் அதிபர். இழந்துவிட்டார். அது. நோட்டோவிடம். ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இதற்க்கு. சரியான. தீர்வு. பழைய. சோவியத் யூனியனை. உருவாக்குவது. தான். அவ்வாறு. உருவாகும்போது புட்டினின். வேலிக்குள். நோட்டோ. இருக்க மாட்டாதா ? இன்று. உக்கிரேன். நோட்டோவில். இணந்தால். வேலிக்குள் நோட்டோவந்து விடும் என்று. கூறுவது. ஏன். ?

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

1 week 5 days ago
மருந்துகள் ஒருபுறம் மருத்துவர்கள் மற்றும் தாதியரின் தவறுகள் மறுபுறமாக மனிதநலவாழ்வுக்கான மருத்துவத்துறை நிச்சயமற்றதாகி வருகிறது. சில தினங்களின் முன் கிளிநொச்சியில் ஒரு உயிரிழப்பு. அது தாதியரின் தவறால் என்று உரையாடல் இடம்பெற்றதாக இறந்தவரது உறவுகள் ஊடாக அறிந்தேன். எல்லாம் பணமயமாகிவிட்டது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 5 days ago
மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம். போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்?? அ. திட்டமட்ட கருத்தடை ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள் உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம் எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல் ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை. இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

1 week 5 days ago
இது இரண்டிற்குள்ளும் நானில்லை. பட்டறிவிலிருந்து கற்ற பாடம். அகதியாக ஓடி வந்து நான் படும் வேதனை. ஒரு மண்ணில் இருந்து ஒருவரை அடியோடு புடுங்கி...... அதுவும் அவர் அதை கேட்காதபோது...?? சுமந்திரன் இதை சொன்னார் என்று அதை நான் பார்க்கவில்லை. ஆனால் இங்கே சுமந்திரன் சொன்னதால் தான் என்று வாதிடுவோர் நான் இதை சொவ்லியிருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொடுத்தது போதாதா? இவர்களையுமா ...? என்று தான் முடித்திருப்பார்கள்.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 week 5 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 66 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 3 இந்தியாவில் நடந்த முதல் பௌத்த பேரவையைப் பற்றியது, அது இலங்கையுடன் நேரடி வரலாற்றுத் தொடர்பு இல்லை. புத்தர் இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு, அதாவது பரிநிர்வாணத்திற்குப் பிறகு, இந்த சபை தொடங்கப்பட்டது. இந்த முதலாம் பேரவை ஏழு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. இந்த பேரவை அல்லது சபை பிம்பிசாரரின் [Bimbisara] மகனான அஜாதசத்துரு (Ajatashatru) மன்னனின் [the king Ajatasattu, the son of Bimbisara] தலைமையில் நடந்தது. இங்கே 3-1 & 2 இப்படி கூறுகிறது: இணையிலாதவராகிய பகவான் - ஐந்து கண்களேப் பெற்றிருந்த அண்ணல் - எண்பத்து நான்கு வருடங்கள் வாழ்ந்து உலகில் தமது கடமைகள் அனைத்தையும் எல்லாவிதத்திலும் நிறைவேற்றி முடித்ததும், குஸிகாகரத்தில் இரண்டு சால விருட்சங்களுக்கு இடையேயுள்ள புனிதமான இடத்தில், வைசாக பெளர்ணமி தினத்தன்று உலக ஜோதி அணையலாயிற்று. இங்கு வைசாக பெளர்ணமி என்பது, புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளாகும் இங்கே ஐந்து கண்கள் என்பது, [1] சாதாரணக் கண் – மனிதர்களுக்கு பொதுவான கண், உட்புற உலகைப் பார்க்கும் திறன். [2] தெய்வீகக் கண் – இது ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன் ஆகும், இது தொலைதூர இடங்கள், மறைக்கப்பட்ட விடயங்கள் மற்றும் இருப்பின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள உயிரினங்கள் உட்பட மனித உலகத்திற்கு அப்பால் பார்க்க அனுமதிக்கிறது. இது கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளைப் பார்க்கவும் உதவும் சக்தி. [3] ஞானக் கண் – ஞானம் வாய்ந்த பார்வை, எல்லா விடயங்களின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளும் திறன். [4] அகில பார்வைக் கண் – பிரபஞ்சத்தில் உள்ள மற்றும் நடக்கும் அனைத்தையும் அறியும் புத்தரின் திறமை இதுவாகும். இது முழுமையான மற்றும் வரம்பற்ற அறிவைக் குறிக்கிறது. [5] முத்திக் கண் – முத்தியின் (நிர்வாணம் / மோட்சம்) உண்மை பாதையை அறிந்து, மற்றவர்களுக்கும் வழிகாட்டும் அறிவு. என்றாலும், மகாவம்சத்தின் தொடர்ச்சியான சூளவம்சம் அல்லது சூலவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தின் படி, புத்தர் எண்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார் என்று கணக்கிடுகிறது [624 - 544 = 80]. எனினும் புத்தர் எண்பது அல்லது எண்பத்து நான்கு ஆண்டுகள் வாழ்ந்தாரா என்பது இந்த ஆய்வின் நோக்கம் அல்ல. ஆனால் ஒரு முரண்பாடு இங்கு தெரிகிறது. எது என்னவென்றாலும், புத்தர் எண்பது வயது வரை வாழ்ந்தார் என்பது பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. அத்தியாயம் 4 & 5 இரண்டாவது மற்றும் மூன்றாவது பௌத்த சபை பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பௌத்த பேரவை நடைபெற்றது. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் பல தந்தை கொலைகள் [parricides] பதிவாகியுள்ளன. அத்தியாயம் 4 இப்படி ஆரம்பிக்கிறது: 1,அஜாதசத்துருவினுடைய [Ajatashatru / Ajatasattu] மகன் உதயபத்ரகன் [Udayin or Udayabhadra அல்லது உதயணன்], இத் துரோகி தந்தையைக் கொன்றுவிட்டு பதினறு வருடம் ஆண்டான். 2. உதயபத்ரகனுடைய மகன் அனுருத்திரன் [Anurudhha] தனது தந்தையைக் கொன்றான். அனுருத்திரனுடைய மகன் முண்டன் [Munda] என்பவனும் அதே போல் செய்தான். 3. துரோகிகளும் முட்டாள்களுமான இந்த குமாரர்கள் ஆட்சி நடத்தினர். இந்த இரண்டு பேர்களுடைய ஆட்சியில் எட்டு வருடங்கள் கழிந்தன. 4. முண்டனுடைய மகன் நாகதாசகன் [Nagadarshaka ] தனது தந்தையைக் கொன்றான். இந்தக் கொடுமையைச் செய்தவன் பிறகு இருபத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினன். 5. பிரஜைகள் வெகுண்டெழுந்தனர். "தந்தையைக் கொல்பவர்கள் வம்சமாக அரசு இருக்கிறதே" என்று. பிறகு, சிசுநாகன் [Shishunaga] என்ற பெயருடைய மந்திரியை அரசனாக்கினார். அவருடைய மகனும் பின் அரசனுமான கலாசோக [கலாசோகர் / Kalashoka or Kakavarna] தலைமையில் தான் இரண்டாவது பௌத்த பேரவை நடந்தது, மேலும் அது எட்டு மாதங்கள் தொடர்ந்தது. எனினும் இந்திய வரலாற்று ஆதாரங்கள் எதிலும், உதாரணமாக, சமகால இந்திய கல்வெட்டுகளோ அல்லது நூல்களோ கலாசோகர் என்ற பெயரில் ஒரு அரசனைக் எங்கும் குறிப்பிடவில்லை . சில அறிஞர்கள் கலாசோகனை ஒரு கற்பனை அரசராகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இந்த அத்தியாயம் இலங்கைக்கு எந்த வரலாற்றுத் தொடர்பும் இல்லை. Part: 66 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 3 is about the First Buddhist Council that took place in India, and it has no direct historical connection with Lanka. This council commenced four months after the Buddha’s death, Mahaparinirvana, and continued for seven months. The Council took place under aegis of the king Ajatasattu, the son of Bimbisara. Here 3-1 says: WHEN the Conqueror the incomparable, he who has the five eyes [The five eyes possessed by the Buddha are the bodily eyes (mamsacakkhu), the heavenly eye (dibba ) by which he sees everything that comes to pass in the universe, the eye of understanding (knowledge), the eye of omniscience, and finally the Buddha-eye by means of which he beholds the saving truth.] / had lived eighty-four years and had fulfilled all his duties in the world. The detail given in the Culavamsa, the continuation of the Mahavamsa, works out that the Buddha lived for eighty years [624 - 544 = 80]. It is irrelevant to the purpose of this analysis whether the Buddha lived for eighty or eighty four years, but there is an anomaly. It is generally agreed that the Buddha lived to the age of eighty. Chapter 4 & 5 are about second and third Buddhist Council. The Second Buddhist Council was took place in India one hundred years after the Buddha’s death. Many parricides are reported at the start of this chapter. [Chapter 4 / WHEN Ajatasattu's son Udayabhaddaka had slain him he, the traitor, reigned sixteen years. Udayabhaddaka's son Anuruddhaka slew (his father) and Anuruddha's son named Munda did likewise. Traitors and fools, these (sons) reigned over the kingdom; in the reign of these two (kings) eight years elapsed. Hun-la's son Nagadasaka slew his father and then did the evildoer reign twenty-four years. & so on] This council took place under the aegis of the king Kalasoka, and continued for eight months. There is no reference to a king by the name Kalasoka in any of the Indian sources. Some scholars consider Kalasoka a fictitious king. However This chapter also has no historical relevance to Ceylon. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 67 தொடரும் / Will follow துளி/DROP: 1943 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 66 https://www.facebook.com/groups/978753388866632/posts/32868952312753325/?

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

1 week 5 days ago
இந்திய உபகண்டத்தில் தயாரிக்கப்டும் மருந்துகளை பாவித்தால்…. அல்ப ஆயுளில், போய் சேர வேண்டும் போலுள்ளது.

நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி

1 week 5 days ago
பெரும்பான்மையான உக்கிரேனியர்கள் (சமூக ஊடகத்தினடிப்படையில்) உக்கிரேன் இராணுவத்தினரே நிலம் தொடர்பான முடிவு எடுக்கவேண்டும் என கருதுகிறார்கள், அரசியல்வாதிகளுக்கு இதில் பங்கிருக்ககூடாது என கருதுகிறார்கள். அரசியல்வாதிகள் தமது பிள்ளைகளை போர்களத்திற்கு அனுப்புவதில்லை எனவும் பல முன்னால் அரசியல்வாதிகள் பலரை அவர்கள் முன்னர் பேசிய பேச்சுக்களினடிப்படையில் தற்போது போருக்கு போகலாம் என கூற அதற்கு பதிலாக அவர்கள் நாட்டிற்கு ஏற்கனவே பணியாற்றி விட்டதாகவும் இராணுவத்தில் சேரவில்லை என குறிப்பிடும் வாதங்கள் சமூக ஊடகங்களில் பார்க்கமுடிகின்றது. உக்கிரேன் அரசியல்வாதிகள் எமது தமிழ் அரசியல்வாதிகள் போலவே இருக்கிறார்களோ என எண்ணும் வகையில் இந்த கருத்துக்களை பார்க்கும் போது தோன்றுகிறது. 2050 இல் உக்கிரேனின் சனத்தொகை 40% வீழ்ச்சியுறும் என கூறுகிறார்கள், மறுபுறம் சிறுபான்மை யூத பின்புலம் கொண்ட அரசியல்வாதிகள் இந்த போரின் மூலமான பலனை அனுபவிக்கிறார்கள், நாட்டினை கொள்ளை அடிக்கிறார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு சிக்கலான நிலை நிலவும் போது ஆக்கிரமிப்பு பயன்படுத்தும் பிரித்தாளும் உத்தி இங்கும் பிரயோகிக்கப்படுகிறது என கருதுகிறேன், உக்கிரேனியர்கள், பெலருசியர்கள் மற்றும் இரஸ்சியர்கள் ஒரே அடிபடையில் இருந்து வந்தவர்கள் என கூறுகிறார்கள் அதற்கு காரணமான மொழி (3 மொழிகளும் கிழக்கு சிலாவிய) மற்றும் வரலாற்று காரணிகளினடிப்படையில் ஒரு உளவியல் யுத்தம் மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன். போர் முடிவிற்கு வந்தாலும் மேற்கு மற்று கிழக்கு ஐரோப்பாவிற்கிடையேயான வேறுபாடுகளை கருத்தில் கொண்டு உக்கிரேன் ஒரு ஐரோப்பிய இராணுவ பலமாகவும் தொடர்ச்சியான் இரஸ்சிய தேய்மானமாகவும் இருக்கலாம், இதனாலேயே 800000 இராணுவத்தினை உக்கிரேனில் பேண ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஆனால் முன்னரங்க போர் முனைக்கு செல்லும் ஒரு உக்கிரேனிய போர் வீரர் உக்கிரேனிய இராணுவ மனநிலையினை போர் விரைவில் முடிந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதனையே பிரதிபலிக்கின்றது. ஆரம்பத்திலிருந்தே உக்கிரேனை இரஸ்சியாவிற்கெதிராக கொம்பு சீவிய அமெரிக்கா போரில் இராணுவ தோல்வி தவிர்க்க முடியாத நிலையில் முழு வகிபாகத்தினையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் தள்ளி விட்டுள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்தினை அமெரிக்கா தனது அச்சுறுத்தலாக பார்க்கிறதா? ஐரோப்பிய நாடுகளுக்கு தனியான நேரடி உறவினை மேம்படுத்தவே அமெரிக்கா விரும்புகின்றது போல் உள்ளது. இந்த ஆர்டிகள் 5 இற்கு நிகரான உத்தரவாதத்தினை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இது ஒரு பரிசோதனை முயற்சி என கருதுகிறீர்களா?

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்

1 week 5 days ago
பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/