யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் இந்தியாவில் பரோடா அணிக்காக 2021 இல் விளையாடி இருக்கிறார். இதனால் 2022 ஐபிஎல் இல் பஞ்சாப் அணியில் இந்தியா uncapped வீரராக தெரிவு செய்யப்பட்டார். ஆனால் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. பிறகு கனடாவுக்கு புலம் பெயர்ந்து இருக்கிறார். ஐபிஎல்லில் இனிமேல் இவர் சேருவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஐபிஎல் ஏலத்தின் ஒரு அணி அதிக பட்சம் 8 வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்யமுடியும். அவர்களில் ஒரு போட்டியில் அதிக பட்சம் 4 வெளிநாட்டு வீரர்கள்தான் விளையாட முடியும். ஆனால் இந்தியர்கள் என்றால் ஒரு அணியில் ஏலத்தில் குறைந்தது 17 வீரர்களை தெரிவு செய்யமுடியும்.