Aggregator

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை வம்சாவளி தமிழ் பெண்

1 week 5 days ago

https://dailynews.lk/wp-content/uploads/2025/12/Untitled-60-2.jpg

பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள்.

https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை

1 week 5 days ago
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு Rekhas Sri Jewellery 5 மில்லியன் ரூபா நன்கொடை 17 Dec, 2025 | 11:57 AM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தொடர்ச்சியாக நன்கொடைகள் கிடைத்து வருகிறது. அதன்படி, Rekhas Sri Jewellery யினால் 05 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. Rekhas Sri Jewellery சார்பாக, அதன் பணிப்பாளர் ரெங்கசாமி சசிஹரன் (Rengasamy Sasiharan) மற்றும் முகாமையாளர் கே.கே. கேதீஸ்வரன் (K.K. Kedheeswaran ) ஆகியோர் இந்த நன்கொடைக்கான காசோலையை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://www.virakesari.lk/article/233614

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி

1 week 5 days ago
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி Published By: Digital Desk 3 17 Dec, 2025 | 11:19 AM டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும். அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர். இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார். இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.” மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார். நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில், “கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது. இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது. தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார். இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/233603

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி

1 week 5 days ago

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு லிந்துலை டிலிகூல்றி தோட்டத் தொழிலாளர்கள் நிதி உதவி

Published By: Digital Desk 3

17 Dec, 2025 | 11:19 AM

image

டித்வா சூராவளியைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகள் பாரிய அனர்த்தத்திற்கு உள்ளாகின. இதில் பலர் உயிரிழந்ததுடன், பெறுமதிமிக்க சொத்துகளும் முற்றாக சேதமடைந்தன. பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் வீடுகள் இடிந்து விழுந்தும், முழுமையாக நாசமாகியும் உள்ளன. மண்ணில் புதையுண்டவர்களை மீட்க முடியாமல் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இதன் விளைவாக, பல குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்நிலையில், பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் பல சவால்களை எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனுடன், அரசாங்கம் மற்றும் வெளிநாடுகளின் உதவியுடன் பாரிய அளவில் மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்புவதற்காக தேசிய நிதியம் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் நிதி மற்றும் நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

மலையகத்தில் பல அரசியல் தலைவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் கோடிக்கணக்கான சொத்துகள் இருந்த போதிலும், இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட வழங்க முன்வராத நிலை காணப்படுகிறது. இதற்கு மாறாக, எந்தவித வசதி வாய்ப்புகளும் இன்றி, ஒருநேர உணவுக்கே போராடி வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் நேர்மையான உழைப்பிலிருந்து ஒரு பகுதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் வழங்க முன்வந்தமை பாராட்டத்தக்கதாகும்.

அந்த வகையில், நுவரெலியா மாவட்டம், லிந்துலை – நாகசேன டிலிகூல்றி தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் இணைந்து தேசிய நிதியத்திற்கு நிதி உதவி வழங்கியுள்ளனர்.

இதன்படி, 114 பேர் இணைந்து ரூ. 1,81,100 இலங்கை வங்கி திறைசேரி கணக்கில் வைப்பு செய்துள்ளனர். இது குறித்து சிலர்  தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

20251216_152549.jpg

இது தொடர்பில் நிதி பங்களிப்பு செய்த எம். சத்யானந்தன் கருத்து தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி அவர்கள் பெரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறார். மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர அவர் கடுமையாக உழைத்து வருகிறார்.

இந்த நிலையில், தோட்டத் தொழிலாளர்களாகிய நாமும் நிதி உதவி வழங்கி ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.

உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு எங்களால் இயன்ற அளவில் உதவி செய்ய கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டில் அனைவரும் நலமாக இருந்தால்தான் நாங்களும் நிம்மதியாக வாழ முடியும். பெரிய உதவி செய்ய இயலாவிட்டாலும், சிறிய உதவியையாவது செய்ய முடிந்ததற்கு இறைவனுக்கு நன்றி.”

மேலும், “தோட்ட மக்களிடம் உதவி கேட்கும் போது யாரும் மறுக்கவில்லை. அவர்களால் இயன்ற அளவு மன நிறைவோடு பங்களிப்பு செய்தனர். ஒவ்வொருவரின் பெயரிலும் வங்கியில் வைப்பு செய்து, ரசீதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய அரசியல் சூழலில் பலர் மக்களின் பணத்தை தனிப்பட்ட சுகபோக வாழ்க்கைக்குப் பயன்படுத்தும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வழங்காதது மன வேதனையை ஏற்படுத்துகிறது. இருப்பினும், ஜனாதிபதி மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளோம். நாடு நன்றாக இருந்தால்தான் எங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.

20251216_155128.jpg

நிதி பங்களிப்பு செய்த கலைச்செல்வி கருத்து தெரிவிக்கையில்,

“கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கள் தோட்டத்தில் பெரிய அனர்த்தம் ஏற்படவில்லை. ஆனால், எங்கள் உறவுகள் பலர் இன்று தங்கள் உறவுகளை இழந்து நிராதரவாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தது.

இந்த நிலையில், தோட்ட இளைஞர்கள் வீடு வீடாக வந்து உதவி கோரிய போது, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக எங்கள் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை வழங்கினோம். இது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் வருமான ரீதியாக எப்போதும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும், உதவி செய்யும் மனம் எங்களிடம் உள்ளது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் எங்கள் நாட்டுக்கு உதவி செய்கிறார்கள் என்றால், நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. எங்களால் முடிந்த சிறிய உதவியை செய்துள்ளோம்” என்றார்.

இன்றும் பல பகுதிகளில் மக்கள் ஒருநேர உணவுக்கே போராடி, உறவுகளை இழந்து கண்ணீருடன் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவுவது தங்களுக்கும், தங்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்தாலும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்படும் தோட்டத் தொழிலாளர்கள், நாட்டிற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகின்றனர். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தங்களின் உழைப்பிலிருந்து நிதி பங்களிப்பு வழங்கிய தோட்ட மக்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/233603

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!

1 week 5 days ago
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்! 17 Dec, 2025 | 11:07 AM அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (16) தீர்மானித்துள்ளது. சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படும். அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளுவதற்காக இலங்கைக்கு இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இந்த அவசர கால நிதியுதவி மூலம், உணவு மற்றும் உணவு அல்லாத ஏனைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த அவசர கால நிதியுதவிக்கு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும், உலக உணவுத் திட்டம் (WFP) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மூலம் 500,000 அமெரிக்க டொலரும், ஜப்பான் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. சர்வதேச புலம்பெயர் அமைப்பு [International Organization for Migration (IOM)], ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் [United Nations Children's Fund (UNICEF)] மற்றும் உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நன்கொடைகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது. IOM மூலம் கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, சமையலறைப் பொருட்கள், கழுவும் பாத்திர பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை 615 தங்குமிடங்களுக்கு ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும். கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, WFP மூலம் ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உணவு உதவியை வழங்கும். இந்த உதவியின் கீழ், குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும். இவற்றுக்கு மேலதிகமாக , யுனிசெஃப் மூலம், ஜப்பான் மத்திய, ஊவா, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 500 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கும். இந்த அவசர கால நிதியுதவி மூலம், நீர் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குதல், நீர்வழங்கல் வசதிகளில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கச் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், சுத்தமான நீரை வழங்குதல், தொற்றுநோய்களைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு முன்னரும், ஜப்பான் அரசாங்கம் கூடாரங்கள் , போர்வைகள், படுக்கை விரிப்புகள், நீர் சுத்திகரிப்பான்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை கண்டி, மாத்தளை, பதுளை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கியது. மேலும், ஜப்பான் அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த 31 உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழுவையும் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியது. ஜப்பான் அவசரகால மீட்புக் குழு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சிலாபத்தில் கள வைத்திய முகாமை அமைத்து 1,250 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தது. இந்த உதவிகள், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் வலுவான நம்பிக்கை மற்றும் நட்புறவுக்கான சான்றாகும். இது தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. https://www.virakesari.lk/article/233607

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!

1 week 5 days ago

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்ப உதவும் ஜப்பான்!

17 Dec, 2025 | 11:07 AM

image

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஜப்பான் அரசாங்கம் தொடர்ந்து பல உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த வகையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கால நிதி உதவியை வழங்க ஜப்பான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (16) தீர்மானித்துள்ளது. 

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தால் இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படும்.

அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளுவதற்காக இலங்கைக்கு இந்த அவசர கால நிதி உதவி வழங்கப்படவுள்ளது.

இந்த அவசர கால நிதியுதவி மூலம், உணவு மற்றும் உணவு அல்லாத ஏனைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

இந்த அவசர கால நிதியுதவிக்கு, சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு (IOM) மூலம் 1 மில்லியன் அமெரிக்க டொலரும்,  உலக உணவுத் திட்டம் (WFP) மூலம்  1 மில்லியன் அமெரிக்க டொலரும்,  ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) மூலம் 500,000 அமெரிக்க டொலரும், ஜப்பான் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

சர்வதேச புலம்பெயர் அமைப்பு [International Organization for Migration (IOM)], ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் [United Nations Children's Fund (UNICEF)] மற்றும் உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசர நன்கொடைகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளது.

IOM மூலம் கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, சமையலறைப் பொருட்கள், கழுவும் பாத்திர பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை 615 தங்குமிடங்களுக்கு ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கும்.

கண்டி, பதுளை, நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதுகாப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, WFP மூலம் ஜப்பான் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உணவு உதவியை வழங்கும். இந்த உதவியின் கீழ், குடும்பங்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும்.

இவற்றுக்கு மேலதிகமாக , யுனிசெஃப் மூலம், ஜப்பான் மத்திய, ஊவா, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு நீர், சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக 500 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கும். 

இந்த அவசர கால நிதியுதவி மூலம், நீர் மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்குதல், நீர்வழங்கல் வசதிகளில் உள்ள கோளாறுகளைச் சரிசெய்தல் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கச் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துதல், சுத்தமான நீரை வழங்குதல், தொற்றுநோய்களைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதற்கு முன்னரும், ஜப்பான் அரசாங்கம் கூடாரங்கள் , போர்வைகள், படுக்கை விரிப்புகள், நீர் சுத்திகரிப்பான்கள் போன்ற அவசரகால நிவாரணப் பொருட்களை கண்டி, மாத்தளை, பதுளை உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கியது.

மேலும், ஜப்பான் அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த 31 உறுப்பினர்களை கொண்ட மருத்துவக் குழுவையும்  ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பியது. 

ஜப்பான் அவசரகால மீட்புக் குழு டிசம்பர் 3 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை சிலாபத்தில்  கள வைத்திய முகாமை அமைத்து 1,250 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியிருந்தது.

இந்த உதவிகள், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவும் வலுவான நம்பிக்கை மற்றும் நட்புறவுக்கான சான்றாகும். இது தேவைப்படும் நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டைக் காட்டுகிறது.

https://www.virakesari.lk/article/233607

சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம்

1 week 5 days ago
சகோதரி திருமணத்திற்காக வைரம் தேடிய இரு நண்பர்களுக்கு 20 நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டியபோது கிடைத்த வைரங்களுடன் சஜித் முகமது (இடது) மற்றும் சதீஷ் காதிக். கட்டுரை தகவல் விஷ்ணுகாந்த் திவாரி பிபிசி செய்தியாளர் 16 டிசம்பர் 2025 தன் சகோதரிக்காக ஒரு சகோதரனால் என்ன செய்ய முடியும்? மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு நண்பர்களின் கதை இந்தக் கேள்வியுடன் தொடங்குகிறது. டிசம்பர் 9-ஆம் தேதி, குளிர்ச்சியான காலை நேரம். பன்னா வைர அலுவலகத்தின் வெளியே பெரிதாக எந்த நடமாட்டமும் இல்லை. ஆனால், பல அடுக்கு காகிதத்தில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சஜித் முகமது மற்றும் சதீஷ் காதிக் ஆகிய இருவருக்கும் இது ஒரு சாதாரண நாள் அல்ல. அந்தப் பொட்டலத்திற்குள் 15.34 காரட் வைரம் இருந்தது. அதனுள், பலர் வைரத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையும் இருந்தது, ஆனால் அது ஒரு சிலருக்கே நிஜமாகிறது. சஜித் ஒரு சிறிய பழக்கடை வைத்திருக்கிறார். சஜித்தும் சதீஷும் கடைக்கு எதிரில் அமர்ந்திருக்கிறார்கள். பிபிசியிடம் பேசிய சஜித், "நீங்கள் ஒரு வைரத்தைக் கண்டால், அது தானாகவே உங்களுக்குப் புரியும். அது ஒரு மின்னல் போல இருக்கும். உங்கள் உடல் சிலிர்க்கும், ஆம், இது ஒரு வைரம் தான் என்று நினைப்பீர்கள்" என்று கூறினார். பன்னா வைர அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள அரசாங்க வைர நிபுணர் அனுபம் சிங், பிபிசி-யிடம் பேசுகையில், "சதீஷ் காதிக் மற்றும் சஜித் முகமது கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் கொண்டது. சுரங்கம் சதீஷ் பெயரில் இருந்தது, இருவரும் சேர்ந்து இந்த வைரத்தைக் கண்டுபிடித்தனர்" என்று கூறினார். வைரத்தைக் கண்டெடுத்த தருணத்தை நினைவு கூர்ந்த சதீஷ், "இவ்வளவு பெரிய தொகை இவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு கிடைக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்போது எங்களால் எங்கள் சகோதரிகளுக்கு நன்றாகத் திருமணம் செய்து வைக்க முடியும்" என்கிறார். 'வைர நகரத்துக்குப்' பின்னால் உள்ள கதை பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL படக்குறிப்பு,பன்னாவில் வைரங்களைத் தோண்டுவது வெறும் வேலையல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் எடுக்கப்படும் ஒரு முடிவு. பண்டேல்கண்ட் பகுதியில் அமைந்துள்ள பன்னா, நாட்டின் 'வைர நகரம்' (Diamond City) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த அடையாளத்திற்குப் பின்னால், வறுமை, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வேலைவாய்ப்பின்மை பற்றிய நீண்ட வரலாறும் உள்ளது. இங்கு, நிலத்தை தோண்டுவது என்பது ஒரு வேலை மட்டுமல்ல, நம்பிக்கைக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் இடையே எடுக்கப்படும் ஒரு முடிவு. சஜித்தும் சதீஷும் வைரத்தைக் கண்டுபிடிக்கும் ஆவலில் அதே பாதையைத் தான் தேர்ந்தெடுத்தனர். பன்னாவில் பலரும் தங்கள் முழு வாழ்க்கையையும் வைரங்களைத் தேடுவதிலேயே செலவிடுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு நண்பர்களும் வெறும் 20 நாட்களில் இந்த வெற்றியை அடைந்துள்ளனர். சஜித்தும் சதீஷும் சிறுவயது முதலே நண்பர்கள். அவர்களின் வாழ்க்கையும் ஒரே போல் இருக்கிறது. இருவரது வீடுகளும் பன்னாவின் ராணிகஞ்ச் பகுதியில் உள்ளன. இவர்களின் முந்தைய தலைமுறையினர் வைரங்களைத் தேடுவதிலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்துள்ளனர். சதீஷ் பன்னாவில் ஒரு சிறிய இறைச்சிக் கடை நடத்தி வருகிறார், அதே சமயம் சஜித்தின் குடும்பம் பழக்கடை நடத்தி வருகிறது. சகோதரிகளின் திருமணத்திற்கான செலவு குறித்து நீண்ட காலமாக இரு குடும்பங்களுக்கும் கவலை இருந்தது. பெரும்பாலும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் இந்த பொறுப்பு குறிப்பிடத்தக்க சவாலாக மாறுகிறது. "எங்கள் தந்தையும் தாத்தாவும் பல ஆண்டுகளாக நிலத்தைத் தோண்டினார்கள், ஆனால் ஒரு வைரத்தைக் கூட கண்டுபிடிக்கவில்லை"என்று சஜித் கூறுகிறார். சதீஷின் குடும்பக் கதையும் வேறுபட்டதல்ல. ஆனால் ஒவ்வொரு முறை அவர்கள் ஒரு மண்வெட்டியை எடுக்கும் போதும், இந்த முறை தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கக் கூடும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒரு புறம் உயர்ந்துவரும் குடும்பச் செலவுகளும், சகோதரிகளின் திருமணத்தைப் பற்றிய கவலைகளும் நவம்பர் மாதத்தில் இந்த இரண்டு நண்பர்களையும் வைரங்களைத் தேடுவது என்ற முடிவுக்கு இட்டுச் சென்றன. பன்னாவைப் பொறுத்தவரை, இந்த முடிவு ஆச்சரியமான ஒன்றல்ல. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வைரங்களைக் கண்டுபிடிக்க போராடி வரும் ஒரு பகுதியில், இரண்டு இளம் நண்பர்களின் முடிவு ஆச்சரியமல்ல. ஆனால் 20 நாட்களுக்குள் அவர்கள் எல்லா இடங்களிலும் பேசப்படத் தொடங்கினர். பன்னாவில் வைரம் கண்டுபிடிக்கப்படுவது எப்படி ? பட மூலாதாரம்,AMIT RATHAUR படக்குறிப்பு,சுரங்கத்தில் தோண்டிய போது சஜித் முகமது மற்றும் சதீஷ் காடிக் கண்டுபிடித்த வைரம் 15.34 காரட் எடை கொண்டது, இதன் சந்தை விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம். பன்னாவில் உள்ள தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தால் (NMDC) இயக்கப்படும் மஜ்கவான் வைரச் சுரங்கம், நாட்டின் ஒரே ஒழுங்கமைக்கப்பட்ட வைர உற்பத்தி மையமாகும். கூடுதலாக, பன்னாவில் உள்ள எவரும் மாநில அரசிடம் இருந்து 8x8 மீட்டர் நிலப்பரப்பை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டி எடுக்கலாம். இதற்கான ஆண்டு கட்டணம் 200 ரூபாய். தோண்டிய பிறகு உங்களுக்கு நிச்சயமாக வைரம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சஜித்தும் சதீஷும் அது போன்ற ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தோண்டத் தொடங்கினர். கிட்டத்தட்ட இருபது நாட்கள் கடின உழைப்புக்குப் பிறகு, டிசம்பர் 8ஆம் தேதி காலையில், அவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்ட அந்த கல்லைக் கண்டுபிடித்தனர். மறுநாள் வைரம் பன்னா வைர அலுவலகத்திற்கு வந்தபோது, அது பரிசோதிக்கப்பட்டு 15.34 காரட் எடை கொண்டதாகக் கண்டறியப்பட்டது. அதன் விலை குறித்த கேள்விக்கு, அனுபம் சிங் பதில் கூறுகையில், "வைரத்தின் சரியான விலையைக் கூறுவது கடினம், ஏனெனில் இது சர்வதேச சந்தையைப் பொறுத்தது. ஆனால் தற்போதைய மதிப்பீடுகளின்படி, அதன் விலை ரூ. 50 முதல் 60 லட்சம் வரை இருக்கலாம்"என்றார். அவரைப் பொறுத்தவரை, பன்னாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட விலையுயர்ந்த வைரம் 2017-18 ஆம் ஆண்டில் மோதிலால் பிரஜாபதி என்பவரால் கண்டெடுக்கப்பட்டது. அந்த வைரம் 42.58 காரட் எடை கொண்டது மற்றும் ஏலத்தில் காரட் ஒன்றுக்கு ₹6,00,000 விலையைப் பெற்றது, அதன் மொத்த மதிப்பு ₹2.5 கோடிக்கும் அதிகமாகும். ஏலத்தில் விற்கப்படாமல் எஞ்சியிருக்கும் வைரங்கள் குறித்து கேட்ட போது, பெரும்பாலான வைரங்கள் ஐந்து ஏலங்களுக்குள் விற்கப்படுகின்றன என்று அனுபம் சிங் கூறினார். ஒரு வைரம் விற்கப்படாவிட்டால், அதைக் கண்டுபிடித்தவர் அரசாங்கத்திடம் நிர்ணயிக்கப்பட்ட உரிமத் தொகையை (royalty) செலுத்தி அதைத் திரும்பப் பெற்று, பின்னர் தனியார் சந்தையில் விற்கலாம். ஏலத்திலிருந்து பெறப்படும் மொத்தத் தொகையில் 12 சதவீதத்தை அரசாங்கம் வைத்துக் கொள்கிறது. மீதமுள்ள தொகை வைரத்தைக் கண்டுபிடித்தவர்களுக்குச் செல்லும். பட மூலாதாரம்,SIDDARTH KEJRIWAL படக்குறிப்பு,பன்னாவில், மாநில அரசிடமிருந்து 8x8 மீட்டர் நிலத்தை ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து, எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமாக வைரங்களை வெட்டியெடுக்கலாம். சஜித் மற்றும் சதீஷின் சகோதரிகள், முதல் முறையாக தங்கள் வாழ்க்கை மாறப் போகிறது என்று உணர்வதாகக் கூறுகிறார்கள். சஜித் மற்றும் சதீஷ், தங்களின் மாத வருமானம் சில ஆயிரம் ரூபாயைத் தாண்டாததால், இந்தக் தொகை கற்பனைக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறார்கள். வைரத்தைக் கண்டுபிடித்த செய்தி முதல்முறையாக குடும்பத்தில் புதிய நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளது என்று சஜித்தின் சகோதரி சபா பானு கூறுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என் தந்தைக்கும் தாத்தாவுக்கும் இந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததில்லை. என் சகோதரரும் சதீஷ் அண்ணாவும் எங்கள் திருமணங்களை ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளனர். எங்கள் குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். "வைரத்தைக் கண்டுபிடித்த அன்றைய இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. பணத்தை விட, ஒரு பாதுகாப்பான எதிர்காலம், என் சகோதரிகளின் திருமணம், ஒரு வீடு மற்றும் வாழ்க்கையில் ஒருவித நிலைத்தன்மை பற்றியதாகவே என் கனவுகள் இருந்தன" என்று சஜித்தும் சதீஷும் கூறுகிறார்கள். "இங்கே, கல்வி முதல் வேலைவாய்ப்பு வரை பெரும்பாலான வழிகள் மூடப்பட்டுள்ளன. எனவே பல தலைமுறைகளாக அதிர்ஷ்டம் மட்டுமே மிகப்பெரிய ஆதரவாக உள்ளது"என்று சதீஷ் கூறுகிறார். பன்னாவில் ஒரு வைரத்தைத் தேடுவது என்பது நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையில் ஊசலாடும் ஒரு பயணம். பெரும்பாலான மக்கள் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள், ஆனால் ஒருவர் வைரத்தைக் கண்டுபிடிக்கும் போது, அதன் மகிழ்ச்சி ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பரவுகிறது. அடுத்து மற்றொருவருக்கு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விடுகிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2k488j5ewno

குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல்

1 week 5 days ago
குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல் 17 Dec, 2025 | 09:31 AM குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு (சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை (17) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார். இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார். https://www.virakesari.lk/article/233597

குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல்

1 week 5 days ago

குச்சவெளி பிரதேச சபைத்தலைவரின் அலுவலகம் முத்திரையிட்டு மூடல்

17 Dec, 2025 | 09:31 AM

image

குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்கின் உத்தியோகபூர்வ அலுவலக அறை நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை 7.00 மணிக்கு திருகோணமலை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரால்,கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் ஆலோசனைக்கு அமைய முத்திரையிட்டு (சீல் வைத்து) மூடப்பட்டுள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இலஞ்சம் பெற்றார் என்ற குற்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதேச சபைத்தலைவர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று புதன்கிழமை (17) பிரதேச சபையின் இந்த வருட வரவு செலவு திட்டத்தை முன்வைக்க சபைக்கு வர உள்ளார். இந்த சூழலில் வழக்கு விசாரணை முழுமையாக முடியவில்லை என்பதால் அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்திற்குள் அவர் செல்வதை தடுப்பதற்காக இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் பிரதேச சபைத்தலைவர் தமது கடமைகளை ஆற்ற தற்காலிகமாக வேறு ஒரு அறையை அவருக்கு வழங்கும்படி சபையின் செயலாளருக்கு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பணித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/233597

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

1 week 5 days ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை இலகுவாக வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ் Published By: Vishnu 16 Dec, 2025 | 03:17 AM (நெவில் அன்தனி) துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண பி குழு போட்டியில் நேபாளத்தை மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றி கொண்ட பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 31.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அபிஷேக் திவாரி 30 ஓட்டங்களையும் அஷிஸ் லூஹர் 23 ஓட்டங்களையும் பெற்றனர். உதிரிகளாக 23 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது. பந்துவீச்சில் மொஹம்மத் சோபுஜ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாஹ்ரியர் அஹ்மத் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸிஸுல் ஹக்கிம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாத் இஸ்லாம் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் இரண்டு விக்கெட்கள் 29 ஓட்டங்களுக்கு வீழந்தன. எனினும், ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர். கலாம் சித்திக்கி 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஸவாத் அப்ரார் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 70 ஓட்டங்களுடனும் ரிஸான் ஹொசெய்ன் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகன்: ஸவாத் அப்ரார். https://www.virakesari.lk/article/233457

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்

1 week 5 days ago
சிஎஸ்கே ஒரு சர்வதேச போட்டி கூட ஆடாத இரு இளம் வீரர்களை ரூ.28 கோடிக்கு வாங்கியது ஏன்? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/GAURAV படக்குறிப்பு,பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா 16 டிசம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அபுதாபியில் நேற்று (டிசம்பர் 16) நடந்த ஐபிஎல் 2026-க்கான ஏலத்தில், ஆச்சரியமூட்டும் சில விஷயங்கள் நடந்துள்ளன. இந்த முறை, பெரிய சர்வதேச வீரர்களுக்குப் பதிலாக, சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் சாதனை அளவிலான தொகைகளுக்கு ஏலம் போய் வரலாறு படைத்துள்ளனர். புதிய வீரர்கள் மீது கோடிக்கணக்கான பணம் கொட்டப்பட்டது. ஏலமும் மிகப் போட்டி நிறைந்ததாக இருந்தது. அதோடு, வேறு பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமலும் போயுள்ளார்கள். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீன், இதுவரை நடந்த ஏலங்களில் மிக விலையுயர்ந்த வெளிநாட்டு வீரராக உருவெடுத்தார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25.20 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட பதிரணா இலங்கை வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பதிரணாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு வாங்கியது. ரவி பிஷ்னோய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.7.20 கோடிக்கும், வெங்கடேஷ் ஐயர் ராயல் பெங்களூரு அணியால் ரூ.7 கோடிக்கும் வாங்கப்பட்டார். ஏலம் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்குடன் தொடங்கியது. இருப்பினும் அவர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதற்குப் பிறகு, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் 2026 ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வீரர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் ஆவார். பட மூலாதாரம்,Getty Images அதிக தொகைக்கு வாங்கப்பட்ட பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடியிராத வீரர்களான பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா ஆகியோர் ரூ.14 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சர்வதேச போட்டிகளில் விளையாடாத பிரஷாந்த் வீரை ரூ.14.20 கோடிக்கு வாங்கியதன் மூலம் வரலாறு படைத்தது. மேலும், கார்த்திக் சர்மாவையும் ரூ.14.20 கோடிக்கு அந்த அணி வாங்கியது. இவை, ஐபிஎல் வரலாற்றில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள் பெற்றிராத அதிகபட்ச தொகையாகும். அது மட்டுமின்றி, சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் மற்றொருவரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஆகிப் டார், டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.8.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி முகுல் சௌத்ரியை ரூ.2.60 கோடிக்கு வாங்கியது. நமன் திவாரியையும் அந்த அணி ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கியது. இன்று (டிசம்பர் 16) 369 வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். இருப்பினும், சர்பராஸ் கான், பிருத்வி ஷா, லியாம் லிவிங்ஸ்டோன் போன்ற வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்தனர். கிரீனை வாங்குவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதியில் ஷாருக்கான் உரிமையாளராக இருக்கும் கேகேஆர் அணி அவரை ரூ.25.20 கோடிக்கு வாங்கியது. கேமரூன் கிரீன் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர் ஆனார். தற்போது ஐபிஎல் 2024இல் கேகேஆர் அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை அவர் இதன் மூலம் முறியடித்துள்ளார். யார் இந்த பிரஷாந்த் வீர்? பட மூலாதாரம்,GAURAV படக்குறிப்பு,பிரசாந்த் வீர் இளம் ஆல்-ரவுண்டரான பிரஷாந்த் வீர், உத்தர பிரதேச டி20 லீக்கில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியபோதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை முதன்முதலில் ஈர்த்தார். இந்த ஆண்டு அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். குறிப்பாக, சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அவரது விளையாட்டு பாராட்டை பெற்றது. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரவீந்திர ஜடேஜாவின் வாரிசாகக் கருதி சோதனை அடிப்படையில் தேர்வு செய்தது. இடது கை வேகப்பந்துவீச்சாளரான பிரஷாந்த் வீரை தேர்வு செய்வதில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், சிஎஸ்கே அவரைத் தன்வசப்படுத்தியது. சிஎஸ்கே அணியில் தோனிக்கு பதிலாக கார்த்திக் சர்மா வருவாரா? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA படக்குறிப்பு,கார்த்திக் சர்மா கார்த்திக் சர்மா ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார். மேலும் அவர் ஒரு விக்கெட் கீப்பர். ஐபிஎல் ஏலத்தின்போது, அதிக விலைக்கு வாங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர்களில் இவரும் ஒருவரானார். அவர் சமீபத்தில் ரஞ்சி கோப்பையில் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாகவே அவரால், உரிமையாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. கார்த்திக் நல்ல தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ரூ.14.20 கோடிக்கு ஏலம் போய், அதிக விலைக்கு வாங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத வீரர் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திர சிங் தோனிக்கு ஒரு மாற்று வீரரை நீண்டகாலமாகத் தேடி வருகிறது. அந்த அணி நிர்வாகம் கார்த்திக் சர்மாவை தோனிக்கு ஒரு மாற்றாகப் பார்க்கிறது. யார் இந்த ஆகிப் டார்? பட மூலாதாரம்,AQUIB NABI DAR FAMILY படக்குறிப்பு,ஆகிப் டார் ஆகிப்பின் அடிப்படை விலை முப்பது லட்சம் ரூபாயாகும். அவரை வாங்குவதற்காக டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் கடுமையாகப் போட்டியிட்டன. இறுதியாக, டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகிப் டார், சமீபத்தில் நடைபெற்ற துலீப் கோப்பையில் சிறப்பான பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தினார். துலீப் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஜம்மு-காஷ்மீர் ஆல்ரவுண்டரான ஆகிப், சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 29 வயதான அவர் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகமாகவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரில் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராக இருக்கிறார். வேறு யாரெல்லாம் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்? ஐபிஎல் ஏலத்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் பிரிவில், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் ஆன்ரிச் நோக்கியாவை லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர்கள் தவிர, நியூசிலாந்தின் மேட் ஹென்றி, இந்தியாவின் ஆகாஷ் தீப் மற்றும் ஷிவம் மாவி, தென்னாப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸி, ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன், ஆப்கானிஸ்தானின் ஃபசல்ஹக் ஃபரூக்கி ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0je53l3zwlo

19இன் கீழ் ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர்

1 week 5 days ago
19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இலங்கை Published By: Vishnu 15 Dec, 2025 | 10:01 PM (நெவில் அன்தனி) துபாய், ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. விரான் சமுதித்த குவித்த அரைச் சதம், சாமிக்க ஹீனட்டிகலவின் சகலதுறை ஆட்டம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன. 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. திமன்த மஹாவித்தான (27), விரான் சமுதித்த ஆகிய இருவரும் 9.3 ஓவர்களில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், மஹாவித்தான, கித்ம வித்தானபத்திரன (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் விரான் சமதித்த, கவிஜ கமகே ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினர். கவிஜ கமகே 34 ஓட்டங்களையும் விரான் வித்தானபத்திரன 62 ஓட்டங்களையும் பெற்று சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 38ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், அணித் தலைவர் விமத் தின்சார (15), ஆதம் ஹில்மி (3), துனித் சிகேரா (22), செத்மிக்க செனவிரத்ன (1) ஆகிய நால்வரும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (217 - 8 விக்.) எனினும் விரான் சமுதித்த, ரசித் நிம்சார ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 21 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தனர். விரான் சமுதித்த 51 ஓட்டங்களுடனும் ரசித் நிம்சார 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது. ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 42 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்ததால் அதன் மொத்த எண்ணிக்கை 240 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் கடைசி 5 விக்கெட்கள் 27 ஓட்டங்களுக்கு சரிந்தன. துடுப்பாட்டத்தில் ஒஸ்மான் சதாத் 52 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 39 ஓட்டங்களையும் அஸிஸுல்லா மியாக்கில் 31 ஓட்டங்களையும் நூரிஸ்தான் ஓமர்ஸாய் 29 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாய், அணித் தலைவர் மஹ்பூப் கான் ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் பெற்றனர். பைசால் ஷினோஸதாவுடன் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாயுடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் ஒஸ்மான் சதாத் பகிர்ந்ததாலேயே ஆப்கானிஸ்தான் இளையோர் அணி நல்ல நிலையை அடைந்தது. பந்துவீச்சில் துனித் சிகேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் செத்மிக்க செனவிரத்ன 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சார 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: சாமிக்க ஹீனட்டிகல https://www.virakesari.lk/article/233455

நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்திய விமானம்.. 200 உயிர்களை காப்பாற்றிய விமானியின் சாமர்த்தியம்!

1 week 5 days ago
பல மணி நேரம் ஆகாயத்தில் வட்டமிட்ட துருக்கி விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் : பயணிகள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பு! 17 Dec, 2025 | 07:47 AM கொழும்பில் இருந்து, துருக்கி, இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த துருக்கி ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம் இலங்கை வான் பரப்பில் பல மணிநேரம் வட்டமிட்டபின் இன்று அதிகாலை 12.27 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் எவருக்கும் எவ்வித சேதங்களும் இல்லையென விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விமானத்தின் தரையிறங்கும் கியரில் (Landing Gear) ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது இன்று அதிகாலை (டிசம்பர் 17, 2025) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குறித்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. TK-733 என்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் 202 பயணிகள் மற்றும் 10 பணியாளர்களுடன் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 10.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் கண்டறிந்தனர். இதனையடுத்து, விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கத் தயார்படுத்தும் நடைமுறைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன. அவசரமாகத் தரையிறங்கும் முன் எரிபொருளை எரிப்பதற்காக (Fuel Burn) குறிப்பிட்ட நேரத்தில் வானில் விமானமானது பல மணி நேரம் வட்டமடித்தது. அதன்படி, விமானம் சிலாபம் கடல் பகுதியின் வான் பரப்பில் இரண்டு மணி நேரமாக 4 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, விமானத்தில் இருந்த எரிபொருள் அகற்ற விமானி நடவடிக்கை எடுத்தார்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலையத்தில் தீயணைப்புப் படை மற்றும் மருத்துவ அவசர சிகிச்சைக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. விமான ஊழியர்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்துடன் (Air Traffic Control) தொடர்ச்சியான தொடர்பில் இருந்ததுடன், நிலையான அவசர கால நெறிமுறைகளைப் பின்பற்றினர். அனைத்து அவசர ஏற்பாடுகளுக்கும் மத்தியில், TK 733 விமானம் அதிகாலை 12:27 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அம்பியூலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ ஊழியர்கள், மீட்புப் பணியாளர்கள், நீர்கொழும்பு கடல் பகுதியில் சிறப்பு படகுகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். குறித்த விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விமானத்தை பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/233591

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

1 week 5 days ago
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம் Published By: Vishnu 16 Dec, 2025 | 08:47 PM (எம்.மனோசித்ரா) வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்டன் செட்ரோன் - Ondansetron (வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து) என்ற மருந்தினைப் பயன்படுத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. 37 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 12ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் இந்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த மருந்து முழுமையாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாட்டுக்கு விநியோகிக்கும் 11 பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் உள்ளனர். தேசிய ஒளடத கட்டுப்பாட்ட அதிகாரசபையில் ஆகக் கூடியது 15 விநியோகத்தர்கள் பதிவு செய்ய முடியும். இங்கு 11 விநியோகத்தர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 விநியோகத்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும், ஏனையோர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும் விநியோகிக்கின்றனர். எனினும் இவ்வனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.பி. (United States Pharmacopeia ) சான்றுக்கமையவே மருந்தினை விநியோகிக்கின்றனர். மாறாக இந்திய சான்றுக்கமைய அல்ல. அந்த வகையில் இந்த மருந்து குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/233578

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

1 week 5 days ago

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

Published By: Vishnu

16 Dec, 2025 | 08:47 PM

image

(எம்.மனோசித்ரா)

வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒன்டன் செட்ரோன் - Ondansetron (வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து) என்ற மருந்தினைப் பயன்படுத்தியதால் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து பாவனையால் உயிரிழப்பு ஏற்பட்டடிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இவ்வாறு சந்தேகிக்கப்படும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன.

37 மற்றும் 33 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் கடந்த 12ஆம் திகதி கண்டி வைத்தியசாலையில் இந்த மருந்தை வழங்கிய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதன் பின்னர் குறித்த மருந்து முழுமையாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை நாட்டுக்கு விநியோகிக்கும் 11 பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் உள்ளனர். தேசிய ஒளடத கட்டுப்பாட்ட அதிகாரசபையில் ஆகக் கூடியது 15 விநியோகத்தர்கள் பதிவு செய்ய முடியும்.

இங்கு 11 விநியோகத்தர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 விநியோகத்தர்கள் பங்களாதேஷில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும், ஏனையோர் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தினையும் விநியோகிக்கின்றனர். எனினும் இவ்வனைத்து நிறுவனங்களும் யு.எஸ்.பி. (United States Pharmacopeia ) சான்றுக்கமையவே மருந்தினை விநியோகிக்கின்றனர். மாறாக இந்திய சான்றுக்கமைய அல்ல. அந்த வகையில் இந்த மருந்து குறித்த பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/233578

போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.

1 week 5 days ago
சிட்னியில் ஆயுததாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்று பலியான தம்பதி பட மூலாதாரம்,GoFundMe படக்குறிப்பு,ஜனவரி மாதம் தங்களது 35வது திருமண நாளைக் கொண்டாடவிருந்த நிலையில், போரிஸ், சோஃபியா தம்பதி துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைத் தடுக்க முயன்று இறந்தனர் கட்டுரை தகவல் ஃபிரான்செஸ்கா கில்லெட் & ஆன்னா லாம்ச்சே ‎16 டிசம்பர் 2025 ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தம்பதி, தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவரின் துப்பாக்கியைப் பிடித்து தடுக்க முயன்றுள்ளனர் என்பதை டேஷ்கேம் காட்சிகள் காட்டுகின்றன. போரிஸ் குர்மன் (69 வயது) மற்றும் அவரது மனைவி சோஃபியா (61 வயது), தாங்கள் சுடப்படுவதற்கு முன்பு, மற்றவர்களைப் பாதுகாக்க தைரியமாக முன்வந்து முயற்சி எடுத்ததாக அவர்களது குடும்பத்தினர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளனர். பணி ஓய்வு பெற்றவரான போரிஸ் குர்மன், தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருடன் சண்டையிடுவது, அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறித்துக்கொண்டு, இருவரும் சாலையில் விழுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து எழுந்த குர்மன், அந்தத் துப்பாக்கியால் சந்தேகத்திற்குரிய நபரைத் தாக்குவது போலத் தெரிகிறது. அதன் பிறகு அந்த நபர் மற்றொரு துப்பாக்கியை எடுத்து அவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளார். பட மூலாதாரம்,Jenny 'கொல்லப்பட்ட முதல் இரண்டு நபர்கள்' "போரிஸ் மற்றும் சோஃபியாவை இழந்த வலியை எதனாலும் குறைக்க முடியாது என்றாலும், அவர்களுடைய வீரம் மற்றும் தன்னலமற்ற பண்பு குறித்து நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம்," என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், "இதுதான் அவர்கள் யார் என்பதை முழுமையாக அடையாளம் காட்டுகிறது. அவர்கள் தன்னலமின்றி பிறருக்கு உதவ முயன்றவர்கள்" என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். யூதர்களான குர்மன் தம்பதி, ஞாயிற்றுக் கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் இரண்டு நபர்கள் என்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் குறிக்கும் ஒரு நிகழ்வின்போது நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. குர்மன் தம்பதியின் குடும்பத்தினர் தங்கள் அறிக்கையில், அவர்கள் 34 ஆண்டுகளாகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், "எங்கள் அன்புக்குரிய போரிஸ் மற்றும் சோஃபியாவின் திடீர் இழப்பால் நாங்கள் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். போரிஸ் ஓய்வுபெற்ற மெக்கானிக். அவர் தனது தாராள குணம், அமைதியான மன உறுதி மிக்க பண்பு, தேவைப்படும் எவருக்கும் உதவிக்கரம் நீட்டும் மனப்பான்மை ஆகியவற்றுக்காக அறியப்பட்டவர். சோஃபியா ஆஸ்திரேலியா போஸ்ட்டில் பணியாற்றினார். அவர் தனது சக ஊழியர்கள் மற்றும் சமூகத்தினரின் ஆழமான அன்புக்கு உரித்தானவர்" என்று குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,Getty Images 'வீரர்' அதோடு, "போன்டை பகுதியைச் சேர்ந்த இவர்கள், நேர்மையான, கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அவர்கள் சந்தித்த அனைவரையும் கருணை, பாசம் மற்றும் மரியாதையுடன் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவர்களாக, குடும்பத்தின் இதயமாக இருந்தனர். அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது," என்றும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள், போரிஸ் குர்மனை ஒரு "வீரர்" என்று வர்ணிக்கின்றனர். டேஷ்கேம் காட்சிகளை வைத்திருக்கும் பெண், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது, "குர்மன் ஓடி ஒளியவில்லை. அவர் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி துப்பாக்கியைப் பறிக்க முயன்றும், மரணம் வரை போராடியும் ஆபத்தை நேராக எதிர்கொண்டார்" என்று கூறியுள்ளார். "எனது கேமராவில் பார்க்கும்போது அந்த முதியவர் இறுதியில் சுடப்பட்டு சரிந்து விழுவதைக் காண முடிந்தது. அந்தத் தருணம் என் இதயத்தை நொறுக்கியது," என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் கண்டதாகக் கூறிய மற்றொருவர் 9 நியூஸ் செய்தி நிறுவனத்திடம், "அவர் ஒரு ஹீரோ. அவர் முயற்சி செய்தார். இதை நாங்கள் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்க வேண்டும். அவர் செய்ததை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், அவர் இந்தச் சம்பவத்தின் தொடக்கத்திலேயே தன்னைத் தானே ஆபத்தின் முன்பாக நிறுத்திக்கொண்டார். அப்போதே துப்பாக்கியில் இருந்து குண்டுகள் சுடப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல் தன்னை ஆபத்தின் முன்பாக நிறுத்திக்கொண்டார்," என்று தெரிவித்தார். இந்தத் தாக்குதலை யூத சமூகத்தின் மீது குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு "பயங்கரவாத சம்பவம்" என்று காவல்துறை விவரித்துள்ளது. படக்குறிப்பு,நவீத் அக்ரம் போராடிய மற்றொரு நபர் அகமது அல் அகமது என்று 43 வயதுடைய மற்றொரு வழிப்போக்கர், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்ததற்காக 'வீரர்' என்று பாராட்டப்பட்டார். அவர் பலமுறை சுடப்பட்டாலும் உயிர் பிழைத்தார். அவரது காயங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது தந்தை பிபிசி அரபி சேவையிடம் பேசியபோது, தனது மகன் தனது 'மனசாட்சியால்' உந்தப்பட்டு, 'பாதிக்கப்பட்டவர்களையும், ரத்தத்தையும், தெருவில் கிடந்த பெண்கள் மற்றும் குழந்தைகளையும் கண்டு செயல்பட்டதாக" கூறினார். இந்தத் தாக்குதலை ஐம்பது வயதான சஜித் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகன் நவீத் அக்ரம் நடத்தியதாக காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. பட மூலாதாரம்,FACEBOOK/CHRIS MINNS படக்குறிப்பு,துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த அகமது அல் அகமது தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் ஆஸ்திரேலிய ஊடகங்களின்படி, நவீத் அக்ரம் கோமாவில் இருந்து மீண்டும் மருத்துவமனையில் சுயநினைவுடன் இருக்கிறார். சஜித் அக்ரம் ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குச் சில வாரங்களுக்கு முன்பு இந்த இருவரும் பிலிப்பின்ஸிக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அவர்கள் ஏன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. உறுதி செய்யப்படாத ஊடக செய்திகளின்படி, இந்த இரண்டு சந்தேக நபர்களும் பிலிப்பின்ஸில் இருந்தபோது "ராணுவ பாணியிலான பயிற்சியை" பெற்றனர். அவர்கள் நவம்பர் 1ஆம் தேதியன்று பிலிப்பின்ஸ் வந்ததாகவும் நவம்பர் 28ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அந்நாட்டின் குடிவரவுப் பணியகம் பிபிசியிடம் உறுதி செய்துள்ளது. சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாகனத்தில் ஐ.எஸ் குழுவின் கொடிகளையும், மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளையும் கண்டெடுத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு, இந்த இருவரும் ஐ.எஸ் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c208j97vzepo

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

1 week 5 days ago
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு! 17 Dec, 2025 | 10:54 AM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர். எழுவைதீவு ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார். அத்தோடு அண்மையில் ஏற்பட்ட "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில் சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233604

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

1 week 5 days ago

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் எழுவைதீவிற்கு விஜயம் செய்து பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வு!

17 Dec, 2025 | 10:54 AM

image

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) எழுவைதீவு பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

எழுவைதீவு  ஆரம்ப பாடசலைக்கு களவிஜயம் மேற்கொண்டு அதன் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு மேலும் எழுவைதீவு முருகவேள் வித்தியாலய ஆசிரியர்கள் ,மாணவர்களோடும் கலந்துரையாடி அவர்களது பாடசாலையின் குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் எழுவைதீவு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் பொருட்டு அங்குள்ள ஐந்து கிணறுகளை அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு அவற்றை மீண்டும் மக்களின் பாவனைக்காக புனரமைப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

தற்போது நிதி ஒதுக்கீட்டின் கீழ் எழுவைதீவில் நடைபெற்று வருகின்ற வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களினையும் நேரடியாக பார்வையிட்டார்.

அத்தோடு அண்மையில் ஏற்பட்ட  "டித்வா" புயலினால் கண்ணகி அம்மன் இறங்குதுறை பாரியளவில்  சேதமடைந்து ஆபத்தான நிலைமையில் காணப்படுவதை அவதானித்த அரசாங்க அதிபர் இது தொடர்பாக மதிப்பீடு தயாரித்து வீதி அபிவிருத்தி திணைக்களத்தோடு தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இக் களவிஜயத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர் ,உள்ளக கணக்காய்வாளர் , உதவி பிரதேச செயலாளர், கிராம அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FB_IMG_1765936610437.jpg

FB_IMG_1765936613903.jpg

FB_IMG_1765936599261.jpg

FB_IMG_1765936594046.jpg

FB_IMG_1765936590236.jpg

FB_IMG_1765936629792.jpg

FB_IMG_1765936623264.jpg

FB_IMG_1765936579141.jpg

FB_IMG_1765936620572.jpg


https://www.virakesari.lk/article/233604

மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு

1 week 5 days ago
மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு நிதர்ஷன் வினோத் மண்டைதீவு புதைகுழி வழக்கு அறிக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், செவ்வாய்க்கிழமை (16) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து புதன்கிழமை (17) சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்பதாக யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்,மண்டைதீவு புதைகுழி வழக்கின் சாட்சிகள் மற்றும் சான்றுகளை திரட்டி நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதாக திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16) அன்று குறித்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சுபாஸ்கரன் நாளினி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த வழக்கு தொடர்பாக அப்பிரதேச மக்கள், கடற்படை மற்றும் படையினரிடம் பெற்ற சாட்சிகள் மற்றும் சுட்டிக்காட்டப்பட்ட கிணறு தொடர்பான கிடைக்க பெற்ற சான்றுகள் உள்ளிட்டவற்றின் அறிக்கையை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தனர். கையால் எழுதிய குறித்த அறிக்கையையாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி சமர்ப்பித்து, விளக்கத்தை நீதிபதிக்கு சமர்ப்பணம் செய்த நிலையில் குறித்த அறிக்கையை தட்டச்சில் பிரதியாக்கம் செய்து (17.12.2025) அன்று மீண்டும் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். முன்பதாக மண்டைதீவு புதைகுழி தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கடந்த செப்டம்பர் மாதம் 04 ஆம் திகதியன்று குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர் மற்றும் வேலணை பிரதேச சபையின் உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், கருணாகரன் நாவலன் திருநாவுக்கரசு சிவகுமாரன், செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரின் பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்தி அந்தக் கிணறுகளை சட்ட ரீதியாக அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 17.09.2025 புதன் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, ஊர்காவற்றுறை பொலிஸாரினால் அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கான வசதிகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து இவ் வழக்கு யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால் பல வருடங்கள் கடந்த விஷயம் என்பதால் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரியமையால் வழக்கு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு டிசம்பர் 16 ஆம் திகதியான இன்று மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நாளை தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/மண்டைதீவு-புதைகுழி-வழக்கு-தட்டச்சு-வடிவ-அறிக்கைக்கு-உத்தரவு/175-369659