Aggregator

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks ago
தற்போதைய சூழ்நிலையில் யாருமே பணத்தைக் கொடுத்து ரிக்கட் வாங்குவார்களா தெரியவில்லை. எப்படியும் கடனட்டையை பாவித்து வாங்கவே செய்கிறோம். எனவே அந்த கடனட்டை பாவிப்பதில் பிரச்சனை இருப்பதாக தோன்றவில்லை. இது முக்கியமா இடைத்தங்கலில் கொஞ்சம் வசதியாக இருந்துவிட்டு போகலாம். உங்களை யாரும் கட்டாயப்படுத்தி எதையும் தரப் போவதில்லை.

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks ago
ஒருவர் கட்டிக் கொடுத்தவர், மற்றையவர் கட்டி எடுத்துப் போனவர் 😂. நீங்கள் ஒரு டசின் கிட்கட்டை பொக்கெட்டுக்குள்ள போட்டதை பெரிசு படுத்தினம் 😂

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

2 weeks ago
பாதாள உலக ஆட்களை முன்னைநாள் பிலிபைன்ஸ் அதிபர் பாணியில் ஜேவிபி என்கவுண்டர் பண்ணுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் இது அரசியல் எதிரிகள் மீதும், விமர்சனம் செய்வோர் மீதும் திரும்பும்.

குட்டிக் கதைகள்.

2 weeks ago
தினமும் ஒரு வரி தத்துவம் · ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம். எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம். "அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்: "சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை. நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசகர்களின் நெஞ்சைத் தொடும்படியாக எழுத வேண்டும். அவர்கள் நீக்க வேண்டிய மைகள் வறுமை, ஏழ்மை, கல்லாமை, மடமை, அறியாமை." படித்து பகிர்ந்து Voir la traduction ***..வாழ்க்கை தத்துவங்கள் ..*** · Jino Sivaji ·edSoportns7c8b9545g1gu7 58c3um1l2gm31 ,ct579r2e8umu9o51:0t8o · ஆப்பிரிக்காவிலே ஹம்மாஸ் என்ற நீதிபதி இருந்தார். ரொம்ப எளிமையான மனிதர். தான் செய்கின்ற பதவிக்காக அரசாங்கத்திடமிருந்து ஊதியம் கூட வாங்குவதில்லை. சரி அப்படி என்றால் குடும்பச் செலவுக்கு என்ன செய்கிறார்? இரவு நேரங்களில் புத்தகங்கள் எழுதுவார். அதை விற்று அதிலிருந்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினார். வீட்டு வேலைக்கும் யாரையும் வைத்துக் கொள்வதில்லை. தினமும் ஆற்றுக்கு போய் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டியது இவருடைய வேலை. மக்கள் எந்த நேரத்தில் வந்தாலும் விசாரித்து தீர்ப்பு வழங்குவார். இரவு என்றாலும் சரி கதவை தட்டினால் தீர்ப்பு வழங்குவார். இதனால் மக்களுக்கு அவர் பெயரில் மிகவும் மரியாதை. அந்த ஊர் முதல் மந்திரி அவருக்கு ஒரு பணமுடிப்பை பரிசாக கொடுக்க முன் வந்தார். இவர் அதை மறுத்து விட்டார். சரி உங்களுக்கு ஒரு உதவியாளரையாவது ஏற்பாடு செய்கிறேன் என்றார். அவர் அதுவும் வேண்டாம் என்றார். சரி ஒரு வேலையாளையாவது அனுப்புகிறேன் என்றார். தேவையில்லை என்றார் இவர். நீங்கள் வெளியே போக வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்கிறேன். அதுவும் வேண்டாம் என்றார். நீதித்துறையில் நீங்கள் பல பொறுப்புக்களை வகிக்கிறீர்கள். அதனால் இரவு நேரத்தில் நீங்கள் நூல்கள் எழுதுவதற்கு அது தடையாக இருக்கும். அரசாங்க நிதியில் இருந்து சிறு தொகையாவது சம்பளமாக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். நான் மக்களுக்கு பணியாற்றுகிறவன். மக்கள் தொண்டுக்கு ஊதியம் எதையும் நான் வாங்க விரும்பவில்லை என்றார். முதலமைச்சர் பார்த்தார் சரி இதுக்கு மேல் இவரை வற்புறுத்தினால் இவர் பதவியில் இருந்து விலகினாலும் விலகி கொள்வார். ஒரு நல்ல நீதிபதியை நாம் இழக்கக்கூடாது என்று நினைத்து அதோடு விட்டு விட்டார். அந்த ஊரில் ஒருத்தர் ஆடு மாடு வைத்திருந்தார். அவைகளை எல்லாம் ஓட்டிக்கொண்டு போய் புல் வெளியிலே மேய விடுவார். இவர் உட்கார்ந்து அதை கவனிப்பதற்கு ஒரு நிழலான இடம் தேவைப்பட்டது. அந்தப் புல்வெளி பக்கத்தில் இருந்த ஒரு நடைபாதை ஓரமாக தன்னுடைய நண்பன் ஒருவனுடைய வீட்டை ஒட்டி ஒரு குடிசை போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தார். நண்பன் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இது நடைபாதை. இதிலே குடிசை போடக்கூடாது என்றான் நண்பன். இரண்டு பேருக்கும் தகராறு வந்துவிட்டது. சரி இதற்கு மேலே நமக்குள் வம்பு வேண்டாம். பேசாமல் நீதிபதியிடம் போய் முறையிடுவோம் என்று முடிவு செய்தார்கள். இரண்டு பேரும் நீதிபதியை தேடி போனார்கள். நீதிபதி யார் என்று அவர்களுக்கு தெரியாது. நீதிமன்றத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். எதிரில் ஒருவர் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டு வந்தார். அவரைப் பார்த்து ஊர் நீதிபதியை பார்க்க வேண்டும். எங்கே இருப்பார்? என்று கேட்டார்கள். நான்தான் நீதிபதி. உங்களுக்குள் என்ன தகராறு? என்று கேட்டார் அவர். ஐயா வணக்கம்! எங்கள் பிரச்சனையைச் சொல்கிறோம். ஆனால் நீங்கள் தண்ணீர் குடத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அதை கொஞ்சம் கீழே இறக்கி வையுங்கள். பின்னர் நிதானமாக நாங்கள் சொல்வதை கேளுங்கள் என்றார்கள். அதற்கு நீதிபதி இது மக்கள் நடந்து போகிற நடைபாதை. அதனால் நான் வைத்திருக்கிற குடத்தை இங்கே இறக்கினால் இந்த வழியாக போகும் ஜனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படும். எனவே நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நீங்கள் சொல்லுங்கள் என்றார். சரி ஐயா நாங்கள் போயிட்டு வருகிறோம் என்று இரண்டு பேரும் புறப்பட்டார்கள். என்ன இது உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லவில்லை. நான் அதற்கு தீர்க்கும் சொல்லவில்லை. அதற்குள் கிளம்பி விட்டீர்களே என்றார் நீதிபதி. நீங்கள் தீர்ப்பு சொல்லி விட்டீர்கள். அதனால்தான் புறப்பட்டு விட்டோம் என்றார்கள் இவர்கள். உண்மை தானே தன் கையிலே இருக்கிற குடத்தை தரையிலே வைக்க விரும்பாத ஒருவர் நடைபாதையில் குடிசை போடுவதை எப்படி சரி என்று ஒத்துக் கொள்வார்? நீதிபதிக்கு நன்றி சொல்லிவிட்டு தன் நண்பனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு கிளம்பி விட்டார் அந்த ஆள். Voir la traduction

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

2 weeks ago
நீங்கள் சொன்னத அந்த அமெரிக்கர் வந்து சொல்லட்டும் பாப்பம்... யோவ் பெரிசு கலியாணவீடு சாமத்தியவீடுகளில் பெட்டி பெட்டியாக அமுக்கியதை எல்லாம் சொல்லவா?படங்களைப் போடவா? கண்ணாடி வீட்டுக்காரன் கல்லெறியக் கூடாது கண்டியளோ!

கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!

2 weeks ago
குஞ்சு குருமான் உட்பட இறந்த அனைவரும் சாக வேண்டியோரே என அண்ணன் அநாகரிகன் ஒரு அருமை முத்தை உதிர்ர்துள்ளார். வழமையா வாண்டடா வந்து தலையை கொடுக்கும் எந்த தம்பியையும் இந்த பக்கம் காணோம். திருந்தீடாய்களோ😂

இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்

2 weeks ago
இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச் Mohanraj ThangavelPublished: Wednesday, October 22, 2025, 18:29 [IST] சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது. Also Read Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே! அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது. கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது. Recommended For You Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர் பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. https://tamil.filmibeat.com/news/dude-movie-director-keerthishwaran-notable-speech-at-thanksgiving-meet-dude-success-165641.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards

இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்

2 weeks ago

இதுக்கே நடுங்குனா எப்படி.. பெரியார் சொன்னது இன்னும் இருக்குது பாஸ்.. டியூட் பட இயக்குநர் கூல் ஸ்பீச்

Mohanraj ThangavelPublished: Wednesday, October 22, 2025, 18:29 [IST]

சென்னை: இந்த தீபாவளிக்கு வெளியான தமிழ் படங்களில் ஒன்று டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம். இந்த படத்தில் சரத்குமார், ரோகிணி, மமிதா பைஜு, டிராவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் வெளியாகி முதல் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. படம் 100 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இப்படி இருக்கையில் படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 17ஆம் தேதி படம் வெளியானதிலிருந்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட மீம் என்பது ஒன்றுதான். அதாவது டியூட் படத்துடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மற்ற இரண்டு படங்களில் ஒன்று, பைசன். பைசன் படம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் என்பதால் அந்த படத்தில், சாதிக்கு எதிரான கருத்துக்கள் இருக்கும் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். இப்படி இருக்கையில் வழக்கமாகவே மாரி செல்வராஜ் படத்தில் பேசப்படும் சாதி ஒழிப்புக்கு எதிரான கருத்துக்களை எதிர்ப்பவர்கள், இந்த தீபாவளிக்கு டியூட் படத்தைப் பார்க்கலாம் என்று தியேட்டருக்குச் சென்றிருந்தால், அவர்களை அல்லையில் போட்டு குத்தியுள்ளார் டியூட் பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்ற மீம்கள் அதிகம் பகிரப்பட்டது.

Dude Movie Director Notable Speech At Thanksgiving Meet Dude Success

Also Read

Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே!

Bison Vs Dude Vs Diesel Box Office Day 1: முதல் நாளே பந்தயத்தில் வென்றது எந்த படம்? கோடிகளை அள்ளுறாங்களே!

அதாவது இந்த படத்தில் பெண்ணடிமை தனத்திற்கு எதிரான கருத்துக்களை போட்டு தாளித்து எடுத்துள்ளார் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் என்றுதான் கூறவேண்டும். பிற்போக்குத்தனத்தில் திளைத்து உள்ளவர்களுக்கு சாதிய அடக்கு முறைகளை எதிர்ப்பவர்களை எதிர் கொள்வதைக் காட்டிலும் பெண் அடிமைத்தனத்தை எதிர்ப்பவர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் பதற்றம் இருப்பதை இயல்பாகவே பார்க்க முடியும். அந்த பதற்றம் தான் இந்த படத்திற்கான எதிர்ப்பாக, எதிர்வினையாக இணையதளத்தில் வெளிப்பட்டது.

கீர்த்தீஸ்வரன்: இந்நிலையில் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், தனது படத்தை பார்த்து பதற்றமடைந்த அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " டியூட் படத்திற்கு இப்படி ஒரு ஓப்பனிங்கை கொடுத்த அனைவருக்கும் நன்றி. படம் 5 நாளில் ரூபாய் 95 கோடிகளை வசூலித்துள்ளது. 100 கோடிகளை எளிதில் கடந்துவிடும். இதைப் பார்க்கும்போது, இந்த படத்திற்கு இந்த அளவுக்கு மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

Dude Movie Director Notable Speech At Thanksgiving Meet Dude Success

Recommended For You

Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர்

Dude Day 3 Box Offie - தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதன்தான் டாப்.. டியூட் 3வது நாள் வசூல் சூப்பர்

பெரியார்: டியூட் படம் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. யாருமே சொல்லாத விஷயத்தை நாங்கள் சொன்னதாக கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு பெரியவர் ( தந்தை பெரியார்) இருந்தார், அவரைப் போன்றவர்கள் சொன்னதைதான் அடுத்த தலைமுறையாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாட்டில் இவ்வாறு சொல்வது ஒன்றும் புதிதல்ல. இன்னமும் சொல்லுவோம் என்று பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

https://tamil.filmibeat.com/news/dude-movie-director-keerthishwaran-notable-speech-at-thanksgiving-meet-dude-success-165641.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 weeks ago
இதை கண்டும் காணாமல் கடந்து போவது சரியில்லை. நீங்கள் ஜேர்மனியில் வந்து இறங்கிய நேரம் தொட்டு சான்சிலராகவா வேலை பார்த்தீர்கள்? அல்லது யூகேயுக்கு மாறி வரும் போது பக்கிங்காம் அரண்மனையில் பிரதானி பதவிக்கா வந்தீர்கள்? இந்த கேள்வி உங்கள் கருத்துக்கு சிரிப்புகுறி இட்டவருக்கும்தான். புலம்பெயர் தேசத்தில் மொழி அறியாமல் நாய் பிஸ்கெட்ட்டை மனித உணவு என சாப்பிட்ட யாழ்ப்பாணத்தமிழன், இன்னொரு இனத்தை செருப்புதைப்பவன் என கிண்டல் அடிக்கலாமா? 90 க்கு முன் அவர்களும் கணிசமான வியாபார நிலையங்கள் யாழ் நகரில் நடத்தினார்கள். முண்ணனி பாடசாலைகளிலும் படித்தார்கள். சிலவேளை நாளைக்கு ஒரு பஸ் வரும் ஊரில் இருந்தவர்களுக்கு செருப்பு தைக்கும் முஸ்லிமை மட்டும்தான் தெரிந்திருக்கலாம்.

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 weeks ago
தலைவரும் அஸ்ரப்பும் ஒன்றாக இருந்து பேசியவுடனே அந்த முரண்பாடு மற்றும் வலி முடிவுக்கு வந்தாயிற்று. அப்புறம் சிங்களவனை சொறிய அல்லது நக்க வேண்டிய தேவை வரும்போதெல்லாம் பலமற்ற ஆதரவற்ற தமிழருக்கு முதுகில் குத்துதல் மட்டுமே அவர்களுக்கு இலகுவாக கிடைக்கும் அல்லா தந்த வரம். இத்தனை நடக்கும் இஸ்ரேலை இவர்கள் மறந்து மன்னித்து விடுவதால் தானே என்னவோ இத்தனை அழிவுகள் பாலஸ்தீனத்தில் நடக்கிற போதும் என் மனம் உருகுதில்லை.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

2 weeks ago

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

சீரற்ற காலநிலை காரணமாக நாகை காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்துக்கிடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் நிறுத்தப்படும் எனவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழமை போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்றும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

சுபம் கப்பல் நிறுவனம் நாகை துறைமுகம் இலங்கையின் காங்கேசன்துறைக்கிடையே சிவகங்கை பயணிகள் கப்பலை இயக்கி வருகிறது. இந்தக் கப்பலில் கடந்த ஓராண்டில் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர்.

நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிற நிலையில் புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்காக புதிய கப்பல் சீனாவில் இருந்து புறப்பட்டுள்ளது எனவும் அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை சில நாள்களில் தொடங்கவுள்ளதால், பருவநிலை மாற்றம் ஏற்படுவதுடன் இதனால், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது என அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளின் காலநிலையினை அடிப்படையாகக் கொண்டு, நிகழாண்டு நவம்பர் மாதத்தை தவிர்த்து, டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம் போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்!

யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!

2 weeks ago

21 Oct, 2025 | 07:48 PM

image

யாழில் பொழிந்த மழையுடன் மீன்களும் சேர்ந்து விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் தொடர்ச்சியாக யாழில் மழை பொழிந்தது. இந்த மழையுடன் சேர்ந்து மீன்களும் விழுந்தன. அந்த மீன்களை மக்கள் பிடிப்பதை அவதானிக்க முடிந்தது. 

கடந்த காலங்களிலும் இவ்வாறு மழையுடன் மீன்கள் விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VID-20251021-WA0085_1_.jpg

VID-20251021-WA0085.jpg


யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்! | Virakesari.lk

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்!

2 weeks ago

22 Oct, 2025 | 12:13 PM

image

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 18 இலட்சத்து 28 ஆயிரத்து 985 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 404,752 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 170,422 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 127,613 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 113,293 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 109,653 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 91,694 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 82,328 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 54,437 சுற்றுலாப் பயணிகளும்  , அமெரிக்காவிலிருந்து 50,737 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வாண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ஒக்டோபரில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 29,460 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 

ஒக்டோபரில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்! | Virakesari.lk

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு

2 weeks ago

22 Oct, 2025 | 04:35 PM

image

கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பணியகத்திற்கு வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்கு வரவழைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் இன்று புதன்கிழமை (22) ஆஜராகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறியுள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வீட்டிற்கு கடந்த 18ஆம் திகதி சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர், முகநூலில் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளின் தலைவர் ஆகிய இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றியதாகவும் அது தொடர்பான விசாரணைக்கு கொழும்புக்கு வருமாறும் கடிதத்தை வழங்கினர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணியகத்துக்கு இன்று காலை சென்ற அவரிடம் சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாகவும் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அங்கிருந்து மாலை 3 மணியளவில் வெளியேறியுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

தர்மலிங்கம் சுரேஸ் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலை - ஐந்து மணிநேர விசாரணையின் பிறகு விடுவிப்பு | Virakesari.lk

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

2 weeks ago
காணொளி: 👉 https://www.facebook.com/reel/1573701207336196 👈 சுட்டுக் கொல்லப் பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர்.... மிதிகம லசா.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

2 weeks ago
தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா..! மாத்தறை, வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்துள்ளார். பிரதேச சபை தவிசாளர் அறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டதாக முதற்கட்ட தகவல். லசந்த விக்கிரமசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர். அவரது மரணம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச, பொதுப்பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்கின்றனர். 🔴 வெலிகம பிரதேச சபை சார்ந்த சில பின்னணிகள். * வெலிகம பிரதேச சபையின் கன்னி அமர்வு 27.06.2025 அன்று கூடியபோது சபை வளாகத்தில் உறுப்பினர்கள் மோதல் இடம்பெற்றது. - அன்று தவிசாளர் தெரிவுக்காக சென்ற இரு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருந்தனர். * வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின்மீது 16.07.2025 அன்று துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. 🔴 யார் இந்த மிதிகம லசா (Midigama Lasa)? * தெற்கின் பாதாள உலகில் அறியப்பட்ட 38 வயதான ஒரு நபர். * ஹரக் கட்டா எனப்படும் பாதாளகுழு தலைவனின் நெருக்கத்துக்குரிய ஒருவர். * 2020 செப்டெம்பரில் கொலைச்சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட ஒருவர். * 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் உள்ளது. 🔴 வெலிகம பற்றிய அண்மைய செய்திகள் * சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் (22.09), ரஸ்ய நபரின் வழிகாட்டலில் இயங்கிய இடத்தில் மீட்கப்பட்ட மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்ட பிரதேசமே வெலிகம. அங்கே மோல்டா நாட்டவரும் கைதாகியிருந்தார். * 24.09 அன்று, துப்பாக்கிகள், ரவைகள், போதைப்பொருட்களோடு பெண் உட்பட 2 பேர் வெலிகமவில் கைதாகினர். * முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெலிகம பகுதியில் ஹோட்டல் அருகில் 2023ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 🔻 ஆக மொத்தத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் அதிகார கதிரையில் இருந்த ஒரு குற்றப்பின்னணியான நபர் இன்று சுடப்பட்டு இறந்துள்ளார். இத்தகைய பின்னணியுள்ள ஒருவரை தவிசாளராக மட்டுமல்ல வேட்பாளராக நியமிக்கவேண்டிய தேவை ஏன் ஐ. ம. சக்திக்கு ஏற்பட்டது? நீதிமன்ற வழக்கும், பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்த போதும் அவரது பதவியை பறிக்காகததும், உறுப்பினர் பதவியை வறிதாக்காமல் விட்டதும் ஐ. ம. சக்தியின் பெரும் தவறு. பொதுப்பாதுகாப்பு குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித்தலைவர், இவற்றுக்கும் பொறுப்பேற்று அதே சபையில் விளக்கமளிக்க வேண்டியது கட்டாயமானது. Janakan Sivagnanam

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

2 weeks ago
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு! வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார். வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது. பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர். https://athavannews.com/2025/1450861

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

2 weeks ago

New-Project-226.jpg?resize=750%2C375&ssl

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர உயிரிழந்தார்.

வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள், தவிசாளரிடம் கையொப்பம் பெற வந்ததாகக் கூறி, பிரதேச சபை வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளமை தெரியவந்துள்ளது.

பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகர நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

https://athavannews.com/2025/1450861

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks ago
தமிழருக்கு எதுவும் நடக்காது ஆனால் நாடு ஒட்டுமொத்தமாக நல்லாக இருக்கிறது அதுவே எனக்கு போதும் - என்ற இந்த நேர்மை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இங்கே பலரிடம் இது இல்லை. அனுரவுக்கும் ஆதரவு… ஆனால் தாம் தமிழ் தேசிய ஆர்வலர் என காட்டி கொள்ளவும் வேண்டும்…. ஆகவே அனுர கட்டம் கட்டமாக இனவாத பேய்க்கு முடிவாரி பூச்சூடுவார் என கதை அளப்ப்போர் மீதுதான் என் விமர்சனம். பிகு வெள்ளவத்தை ஓவர் கிரவுடட், அங்குலான வரை இப்போ எங்கள் ஆட்கள் போகிறார்கள். இனி பாணதுற தான்😂. கொஞ்சம் விலை அதிகம் ஆனால் வாதுவ போன்ற இடங்களில் அதி சொகுசு மாடிகள் கடற்கரையோடு கட்டுகிறார்கள். ஸ்பா, சுவிம்பூல் எல்லாமும் இருக்குமாம். பாப்பம் சஞ்சீவ் சூசைபிள்ளை மாதிரி ஏதாவது மெகா ஊழல் செய்துவிட்டு ஓடிவிட வேண்டியதுதான்😂.