Aggregator

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks 2 days ago
விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும் விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர். அனைவரும் அரசாங்கம் மீது வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது. நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும். யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது. பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்கு கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார். விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தமது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றியும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmf18gnkd0060o29nzt3gx8mr

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

2 weeks 2 days ago
‘வாழ்வாதாரமே பாதிக்கும் அபாயம்’ - போராட்டத்தில் இறங்கிய தமிழர்கள்; மன்னாரில் என்ன பிரச்னை? இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் 2020-ஆம் ஆண்டில் காற்றாலை செயல்பாடு தொடங்கியது. மன்னார் தீவுப் பகுதியில் 36 காற்றாலைகள் தற்போது இயங்கி வருகின்ற நிலையில், புதிய காற்றாலைகளை பொருத்துவதற்கான ஆயத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனவே, மக்கள் 25 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றாலை மின்சாரம் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக போரட்டகாரர்கள் தெரிவிக்கின்றனர். #Colombo #Mannar #WindForm இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 2 days ago
யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர். https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae

கச்சத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

2 weeks 2 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

யாழ்ப்பாணத்தில் இன்று (01) பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கச்சத்தீவுக்கான விஜயத்தினையும் மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி இதன்போது கச்சத்தீவில் கண்காணிப்பு விஜயத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் வடக்கு கடற்படைத் தளபதி ரியர் அத்மிரல் புத்திக லியனகே உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cmf1be60u005qqplpqv1px4ae

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

2 weeks 2 days ago
யாழ். பொதுநூலகத்திற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் மேயர் மதிவதனி விவேகானந்தராஜா வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் உரையாற்றினார். அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமயப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதனை யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் பிரதம நூலகர் நெறிப்படுத்தினார். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, க.இளங்குமரன், ஜெ.றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகர சபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர். https://web.facebook.com/Deranatamil/posts/1331807308948546?ref=embed_post -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf123tn1005gqplpajgipsnp

சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

2 weeks 2 days ago

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?

சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது.

மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது.

மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு'

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன.

"தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது.

சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த்.

சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த்.

மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர்.

மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா?

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.

மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர்.

மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர்.

அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த்.

தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czjmrr3n3m9o

சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

2 weeks 2 days ago
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது? சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது. மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது. மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு' பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன. "தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது. சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த். சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த். மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர். மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர். மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர். அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த். தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjmrr3n3m9o

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 weeks 2 days ago
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்து விட்டேன் ஆண் : உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன் காலடி தேடி வந்தேன் ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக் கண்டதும் கண்டு கொண்டேன் எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து இரு கண்விழி பிதுங்கி நின்றேன் ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி ஆண் : காத்திருந்தால் எதிா் பாா்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி கண்களெல்லாம் எனைப் பாா்ப்பதுபோல் ஒரு கலக்கமும் தோன்றுதடி ஆண் : இது சொா்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும் உன் வாா்த்தையில் உள்ளதடி ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன் கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ஆண் : என் காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் ...... ! --- என்னவளே அடி என்னவளே ---

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks 2 days ago
யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானம்... 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் 40,000 இருக்கைகளுடன் கட்டப் படவுள்ளது. 3 ஆண்டுகளில் கட்டடப் பணியை நிறைவேற்றத் திட்டம். #################### ################## முதலில் ஒரு தமிழனுக்கு தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் குடுங்க. Dushy Fly

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 weeks 2 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 24 B பகுதி: 24 B / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'நாகவில் [Naga] முடிவடையும் பெயர் தமிழர்களைக் குறிக்குமா?' [தமிழ் விரிவாக்கம் தொடர்கிறது] மேலும் மூத்த பிளினி தனது குறிப்பில், அங்கு இருந்த மக்கள் சேரர்களுடன் வர்த்தகம் செய்தனர் என்றும் [and that the people had commercial dealings with a race called the Seres —], மற்றும் மன்னர் தனது உயர்வான அதிகாரத்தின் [இறையாண்மை] மேல் ஏதேனும் அட்டூழியம் செய்தால், குற்றவாளியென்று தீர்மானித்து அவரை உலகளாவிய வெறுப்பால், வருந்த விடுவர் [If the king committed any outrage against his duty as a sovereign, he was condemned to suffer ” (not by the hand of violence, as, for example, in the case of Charles I. of England) “by the universal detestation which he experienced. Every individual avoided his company, and he was left to perish in silence and solitude] என்கிறது. இதே காலத்தை ஒட்டிய தமிழரின் சங்க இலக்கியமும் இவ்வாறான தகல்வல்களையே தருகின்றன. உதாரணமாக, புறநானூற்றுப் பாடல் ஒன்று "பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்" (புறம்-182) என்று கூறுகிறது. பொதுமறை இன்னும் ஒருபடி மேலே சென்று விடுகிறது. தானே பழிக்குரியனவற்றைச் செய்யா விடினும், தன்னுடன் தொடர்புடையார் செய்த பழியும் அதற்கும் அஞ்சுவதே நாணுடைமை என்று கூறுகிறது. "பிறர் பழியும் தம்பழி போல் நாணுவர் நாணுக்கு உறைபதி என்னும் உலகு." (குறள்-1015) எனவே, [அரசனே] பழிக்குரியவற்றைச் செய்யினும் அல்லது [அரசன்] தான் செய்யவில்லை, எனவே தனக்கு அதில் தொடர்பில்லை என்றிருந்து விடாமல், அதையும் தானே செய்தது போலக் கருதியும் [அரசன்] நாண மடையும் பண்பாட்டையே உலகம் போற்றும். இதை மனதில் கொண்டே பெருங்கதை,"வடுநீங்கு அமைச்சர்" (பெருங்கதை 484) என்ற அடைமொழியைத் தருகிறது எனலாம். மேலும், பழைய நூல்கள் பழியஞ்சும் இயல்பை அமைச்சனுக்கு இன்றியமையாது வேண்டப்படும் இயல்பாகவே விதிக்கிறது. உதாரணமாக, மதுரைக்காஞ்சி 494 - 498 "நன்றும் தீதும் கண்டாய்ந்து அடக்கி, அன்பும் அறனும் ஒழியாது காத்து, பழிஒரீஇ உயர்ந்து,பாய்புகழ் நிறைந்த" என்கிறது, அதாவது, அமைச்சர்கள் மக்களின் நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு,மேலும் ஆய்ந்து அன்பு நெறியிலும் அறச்செயலிலும் ஒழுக எக்காலமும் மாறாதவாறு தன்னைக் காத்து, பழி தம்மிடத்து வராமல் அதனாலேயே ஏனையோரினும் உயர்ச்சி அடைந்து..., என்று பாடுகிறது. இது ஒன்றே அங்கு தமிழர் பண்பாடு, அதன் ஆதிக்கம், சந்த [சந்திர] முகன் மன்னர் அவையில் ஓங்கி இருந்ததை காட்டுகிறது. முகம் என்பது, முகத்தல் - முகர்தல் என்ற வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்த ஒரு தமிழ் சொல். இது மன்னனுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது மற்றும் சந்திரமுகன் சிவா, ஒரு சைவன் என்பதையும் காட்டுகிறது. நாக மக்கள் ஒரு காலத்தில் இலங்கையிலும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த பழங்கால பழங்குடியினர் என்று சிலரால் நம்பப்படுகிறது. மகாவம்சம், மணிமேகலை போன்ற பல பண்டைய நூல்களில் நாகர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. யாழ்ப்பாணக் குடாநாடு தமிழ் இலக்கியத்தில் நாக நாடு என்றும், பாலி இலக்கியத்தில் நாகதீபம் என்றும், கிரேக்க வர்த்தமானி [Greek gazetteer / வர்த்தமானி என்பது ஒரு வரைபடம் அல்லது நிலவரைத் தொகுப்பு இணைந்து பயன்படுத்தப்படும் புவியியல் அகராதி ஆகும் / A gazetteer is a geographical dictionary or directory used in conjunction with a map or atlas.] நாகதிபா [Nagadiba] என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாகபூமி என்ற பெயர் யாழ்ப்பாணம், உடுத்துறையில் இருந்து எடுக்கப்பட்ட பிராமி பொறிக்கப்பட்ட நாணயத்திலும், யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிக்கும் தமிழ்நாட்டின் புதுக்கோட்டையிலிருந்து ஒரு தமிழ் கல்வெட்டிலும் காணப்பட்டது. நாக வழிபடும் பாரம்பரியம் இன்னும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. இந்த வார்த்தைக்கு பல மூலங்கள் உள்ளன. தமிழில் "நாகரிகம்" என்றால் பண்பட்ட மக்கள் என்றும் பொருள் படும். சமஸ்கிருதம், பாலி மற்றும் தமிழ் மொழியில் "நாக" என்பது "பாம்பு" அல்லது "அரவம்" என்று பொருள்படும். க.இந்திரபாலா போன்ற அறிஞர்கள், இவர்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைத்துக் கொள்ளத் தொடங்கிய பழங்கால பழங்குடியினராகக் கருதுகின்றனர். தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளர் வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒளியர், பரதவர், மறவர், பறையர், கள்ளர், பள்ளி மற்றும் எயினர் [Oliyar, Parathavar, Maravar, Paraiyar, Kallar, Palli and Eyinar] ஆகியவர்கள் நாக பழங்குடியினர் என்கிறார். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம். சங்க இலக்கியத்திற்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாக முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு!. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 24 C தொடரும் / Will Follow https://www.facebook.com/groups/978753388866632/posts/31112551158393458/?

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks 2 days ago
யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!; இவ்வாண்டு இறுதிக்குள் முதல் போட்டி நடைபெறுமென தெரிவிப்பு 01 Sep, 2025 | 06:21 PM யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (1) பிற்பகல் ஆரம்பித்துவைத்தார். யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு என்பதையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 3 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பாராட்டினார். https://www.virakesari.lk/article/223967

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 2 days ago
தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கில் கிஞ்சித்தும் அரசியல் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது. உளுத்துப் போன பழைய அரசியல் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் மக்கள முற்றாக நிராகரிக்கப்பட போகின்றனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 2 days ago
மாற்றத்தின் முன்னுதாரணம்! வாசிக்க: “பொதுமக்களின் நிதியை பயன்படுத்தி” மற்றும் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படவில்லை! மக்கள் பணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் சிறு சிறு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஜனாதிபதிகள் வரையிலும் தமது பெயரை பொறித்தலும் இடங்களுக்கு தம் சுயப்பெயரை சூட்டுதலும் இருந்த கலாசாரத்தில் எத்தனை மாற்றம்… இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கடவுச்சீட்டு அலுவலகத்தில் இந்த மாற்றம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. Vaanam.lk ################# ################## ################ நல்லவைகளை பாராட்டுவோம். யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழியை முதல் மொழியாகவும், எந்தவொரு எழுத்துப்பிழைகளும் இன்றி, சனாதிபதி பெயர் குறிப்பிடாது அமையப்பெற்றுள்ளமை நாட்டின் தலைவர் ஓர் கல்வியாளன் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. Prashanthan Navaratnam

குட்டிக் கதைகள்.

2 weeks 2 days ago
ஒரு அரசன், நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். நாட்டின் பல பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால் அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தார். அந்த ஏழை சொன்னான், ''அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் இன்று இங்கு நான் வந்தேன். ''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.'' நீ பொய் சொல்கிறாய்.. நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?' என்று கத்தினான். உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் கொண்டுவிட்டீர்கள், நான் சரியான பொய் சொன்னேன் என்று. எனவே போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்தான். உடனே சொன்னான், ''இல்லை,இல்லை, நீ பொய் சொல்லவில்லை.'' என்று அவசரமாக மறுத்தான். ஏழை சொன்னான்,''நல்லது அரசே, நான் சொன்னது பொய் இல்லை, உண்மைதான் என்றால், எனக்கு தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,' 'அரசன் அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். கதை கருத்து காமெடி

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 2 days ago
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு! குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது. https://athavannews.com/2025/1445545

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

2 weeks 2 days ago

64acc981-dbb9-4b3a-a21f-9f8f89ab0cbb.jpg

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

New-Project-1-1.jpg?w=600&ssl=1

38a93d63-0467-41b5-aa5c-36471d178116.jpg

e486a539-9e8b-4b94-b057-1856a68824be.jpg

ec18e68f-9de1-4365-98f0-8dd43de20783.jpg

00df9220-667a-46ea-8d85-903b556da52a.jpg

New-Project-2-1.jpg?w=600&ssl=1

https://athavannews.com/2025/1445545

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

2 weeks 2 days ago
இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்! கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன. கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள். https://athavannews.com/2025/1445565

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

2 weeks 2 days ago

New-Project-18.jpg?resize=750%2C375&ssl=

இஷார செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்!

கடந்த பெப்ரவரி 19 அன்று வாழைத்தோட்டம் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதற்கு உதவியதாகக் கூறப்படும் தப்பியோடிய பெண் ‘இஷார செவ்வந்தி’ நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்ததாக சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை குறிவைத்து இலங்கை பொலிஸார், இந்தோனேசிய பொலிஸார் மற்றும் இன்டர்போல் நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தக் கைதுகள் நடந்தன.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் பேக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.

https://athavannews.com/2025/1445565

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2 weeks 2 days ago
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு! யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தை ஆரம்பிக்க உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இதேவேளை, எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது. https://athavannews.com/2025/1445596