Aggregator

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

2 weeks ago

யாழில் போதைக்கு அடிமையான யுவதி உயிர்மாய்ப்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது.

இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

https://akkinikkunchu.com/?p=345520

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

2 weeks ago
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை… October 22, 2025 முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன. அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது. குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். https://www.ilakku.org/வட-மாகாண-முதலமைச்சர்-வேட-2/

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

2 weeks ago

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார்? – தேசிய மக்கள் சக்தி தீவிர ஆலோசனை…

October 22, 2025

முதலமைச்சர் வேட்பாளர் யார் என பிரதான கட்சிகள் தீவிர ஆலோசனை நடாத்தி வரும் நிலையில், வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பிலும் பிரதான கட்சிகள் தீவிர கவனம் செலுத்தியுள்ளன.

அந்த வகையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி, 9 மாகாணங்களிலும் தேசிய மக்கள் சக்தியாக திசைக்காட்டி சின்னத்தின் கீழ் களமிறங்கவுள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பது பற்றி தேசிய மக்கள் சக்தி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. உத்தேச முதலமைச்சர் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலனின் பெயர் முன்னணியில் இருப்பதாகத் தெரியவருகின்றது. ஏனைய சிலரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போது இவர், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண முதலமைச்சரைத் தெரிவு செய்யும் பொறுப்பு அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தயார் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார்.

https://www.ilakku.org/வட-மாகாண-முதலமைச்சர்-வேட-2/

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

2 weeks ago
போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் 22 Oct, 2025 | 11:21 AM இஸ்ரேல் - காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228355#google_vignette

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

2 weeks ago

போர் நிறுத்தத்தையும் மீறி காசாவில் மீண்டும் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

22 Oct, 2025 | 11:21 AM

image

இஸ்ரேல் -  காசா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னும், நேற்று (21) காசாவின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் இராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் போர் விமானங்கள் காசாவில் குண்டு வீசி தாக்கியதாகவும் அங்கு தரைவழி தாக்குதலும் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

காசாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாகவே தாமும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இஸ்ரேல் இராணுவத்தின் மீது தாம் எந்த வகையிலும் தாக்குதல் நடத்தவில்லை என ஹமாஸ் மறுத்துள்ளது. 

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான பதிலடி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

போர் நிறுத்தம் அமுலில் உள்ள சூழ்நிலையில் காசாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தகை சந்தர்ப்பத்தில் பாலஸ்தீனத்தில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் குறித்து உலக நீதிமன்றம் ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது. 

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் ஐ.நா. சபை, பிற சர்வதேச அமைப்புகள் மற்றும் மூன்றாம் நாடுகளின் இருப்பு மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இஸ்ரேலின் கடமைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் இன்று (22) ஆலோசனைக் கருத்தை வெளியிடவுள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

காசாவில் இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போர் முடிவுக்கு வந்து கடந்த 10ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.  இதனால் காசாவை விட்டு வெளியேறியிருந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். போர் முடிவுக்கு வந்ததையிட்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/228355#google_vignette

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks ago
செவ்வந்தி விவகாரம்: ஐவர் கைது திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கிளிநொச்சியில் உள்ள வீட்டின் உரிமையாளர், சந்தேக நபரை தப்பிச் செல்ல ஏற்பாடு செய்தவர் என்றும், படகை வழங்கியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இஷாரா செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட ஒன்பது பேரை பொலிஸார்இதுவரை கைது செய்துள்ளனர். பிப்ரவரி 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த பின்னர், தொடங்கொட மற்றும் மித்தெனிய பகுதிகளில் இருந்த சந்தேக நபரான செவ்வந்தி, மே 6 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நாளில் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வழங்கிய நபருக்கு அதற்காக 2.5 மில்லியன் ரூபாய் பணம் கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக, படகை வழங்கிய நபர் மூன்று இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியிருப்பது விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது. https://www.tamilmirror.lk/செய்திகள்/செவ்வந்தி-விவகாரம்-ஐவர்-கைது/175-366642

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks ago
வெளிநாட்டு ஈழத்தமிழர்கள் கொழும்பில் அப்பாட்மெற் வாங்கவும் யாழ்பாணத்தில் புது வீடு கட்டவும் , கொலிடேஸ்சில் செல்வதற்கும் 10 - 12 வருடங்களுக்கு முன்பே தொடங்கி விட்டார்கள். அதற்கு அநுரகுமார திசாநாயக்க ஆட்சி வேண்டியது இல்லை.

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2 weeks ago
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்! கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சொகுசு பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1450843

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2 weeks ago

New-Project-224.jpg?resize=750%2C375&ssl

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த  தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியின் வவுனியா, பரையநாளன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செட்டிக்குளம் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சொகுசு பேருந்து  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரையநாளன் குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2025/1450843

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 weeks ago
நான் அந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை, ஆனால் பல கள உறவுகள் அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்; அவர்களுக்கு தெரிந்திருக்கும், அக்கால கட்டத்தில் யாழ் கோட்டையில் முற்றுகையில் இருந்த இராணுவத்தினை மீட்பதற்காக முற்றுகையினை உடைத்து மண்டைதீவிலிருந்து வந்த இராணுவத்தினர் யாழ் கோட்டையினை சென்றடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தினை இராணுவம் கைப்பற்ற போகிறது எனும் ஒரு செய்தி உலாவியது, விடுதிகளில் தங்கியிருந்த வெளியூர் மாணவர்கள் தமது இடங்களுக்கு திரும்பினர், அப்போது ஒரு பதற்றமான நிலை உருவாகியிருந்ததின் பின்னணியில் குறிப்பிட்ட சமூக்கத்திற்கெதிராக வன்மத்தினை தூண்டும் விதமான செய்திகள் பரவியதாக நினைவுள்ளது ( வதந்திகள் தூரம் அதிகரிக்க அதிக்ரிக்க பல திரிபுகள் அதிகரிக்கும்). அதன் பின்னர் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம் என கருதுகிறேன், நேரில் பார்க்காத சம்பவம் அத்துடன் நீண்ட காலமானதால் நினைவுமில்லை, உண்மையிலேயே ஒரு சிறு பிரிவினர் செய்யும் தவறுக்காக பொதுவாக எப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் தண்டிக்க முடியும் (அதனாலேயே இதனை இனச்சுத்திகரிப்பு என கூறுகிறார்கள்). மண் மீட்பு நிதி என தங்கம் கோரியது இக்கால கட்டத்தில் என கருதுகிறேன், பல உண்மையான வறுமையான மக்களை நோயாளர்கள் வயதானவர்கள் என பாராது கூட்டம் என அழைத்து ஒரு சிறு இடத்தில் அடைத்து வைத்த நிகழ்வும் நிகழ்ந்துள்ளது. இதில் முக்கியமானது இவ்வாறானவர்களை சிலர் திட்டமிட்டே பொய்யான தகவலை கொடுத்து மாட்டி விடும் மனநிலை கொண்டவர்கள் இருந்தார்கள், இந்த விடயத்தில் தமக்குள் உள்ள பொதுவான ஒற்றுமைகளை பார்ப்பதில்லை, ஆனால் இவ்வாறு தவறான தகவலால் பாதிக்கப்பட்டவர்கள் கூட மதம், இடம் என வரும் போது மற்றவர்களின் வலி புரியாது மாறாக ஒரு குழு மனநிலையிலேயே அதனை பார்ப்பார்கள் இதற்கு நானும் விதி விலக்கில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம் தேவைப்படுகிறது அதுதான் பிரச்சினை. ஆனால் தங்கதிற்காக வெளியேற்றினார்கள் என்பது உண்மையாக இருக்காது என கருதுகிறேன், இது தமது தவறுகளை மூடி மறைக்க எடுக்கப்படும் ஒரு புதிய முயற்சியாக இதனை நான் கருதுகிறேன். நீங்கள் கூறுவது போல இருதரப்பும் முதலில் உண்மைகளை ஒத்து கொள்ள முயற்சிக்க வேண்டும், அதுதான் முதல் படி அதனை விட்டு ஆராய்ச்சி செய்கிறோம் என புதிய புதிய காரணங்களை தேடுவதால் எந்த நன்மையும் ஏற்படாது.

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

2 weeks ago
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன் adminOctober 21, 2025 யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர். அதன் பின்னர் காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக உறுதியளித்தார். https://globaltamilnews.net/2025/221808/

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

2 weeks ago

தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்

adminOctober 21, 2025

00112-1.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வசாவிளானில் உயர் பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கும் தனியார் காணியில் சட்ட விரோதமான முறையில் இராணுவ வைத்தியசாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில் காணி உரிமையாளரின் கோரிக்கையை அடுத்து தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடமாகாண சபை அவைத்தலைவருமான  சி.வீ.கே சிவஞானம் மற்றும் வலி வடக்கு தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் காணி உரிமையாளருடன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி அமைந்துள்ள பகுதிக்கு நேரில் சென்று , உயர் பாதுகாப்பு வலய எல்லையுடன் நின்று , வைத்தியசாலையின் கட்டட வேலைகளை நேரில் பார்வையிட்டனர்.

அதன் பின்னர்  காணி உரிமையாளருடன் கலந்துரையாடிய எம்.ஏ. சுமந்திரன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வைத்தியசாலை கட்டட வேலைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக  உறுதியளித்தார்.

00112-2.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2025/221808/

இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.

2 weeks ago
எனக்கு ஜெவிபி யை ஆரம்பித்தில் இருந்தே பிடிப்பதில்லை, ஆனால் இப்போது அவர்களின்நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிகிறது. எல்லா அரசியல் கடசிகளையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது. இருந்த தேய்வுகளில் அனுர சிறந்த தெரிவு. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு வரப்போவதில்லை. செம்மணிக்கு நீதி கிடைக்கப்போவதில்லை, காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை. இப்போதைய நிலையில் மக்களின் பொருளாதாரம் மேம்பாட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்குவதே தேவையானது. காலா காலமாக புரையோடிப் போயிருந்த ஊழல் கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. போலீஸ் உட்பட தவறு செய்தாலும் முறையிட முடிகிறது. நீதித்துறை ஓரளவு சுயாதீனமாக இயங்குகிறது. சுற்றுலாத்துறை உட்பட நாட்டின் அந்நிய செலாவணி நன்கு அதிகரித்திருக்கிறது. நாட்டை விட்டுப் போன பலர் திரும்ப வருகிறார்கள். அந்நிய முதலீடுகள் வருகின்றன. நாடு முன்பை விட சுத்தமாக இருக்கிறது. காசிருந்தா வெள்ளவத்தையில் ஒரு பிளட் எடுத்து விடுங்கோ, ஓய்வு காலங்களை ஊரிலயும் கொழும்பிலயும் கழிக்கலாம்

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு

2 weeks ago
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பாதிப்புகளின் விவரங்கள் 30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன. 12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நீண்டகால நிலப் போராட்டம் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. Tamilwinகிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வ...கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போர...

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு

2 weeks ago

கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பாதிப்புகளின் விவரங்கள்

30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன.

12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு | 30 Cows Targeted Slaughter Grazing Land In Kinniya

வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்டகால நிலப் போராட்டம்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு | 30 Cows Targeted Slaughter Grazing Land In Kinniya

எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


Tamilwin
No image previewகிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வ...
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போர...

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

2 weeks ago
“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை” - முஸ்லிம்கள் ஆதங்கம் தமிழீழ விடுதலை புலிகளால் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டிருந்தாலும் அவர்கள் காலத்தில் இப்படியான ஓர் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை என்கின்றனர் வடக்கு முஸ்லிம் மக்கள். கடந்த 21ஆம் தேதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்டுள்ள இன்னல்கள் தொடர்பில் தனது ஆதங்கத்தினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொள்கிறார் வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர். யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் வசிக்கும் முகமட் தாகீர் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, மீளவும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோது முதலாவதாக வருகை தந்தவருமாவார். விடுதலை புலிகளும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களும் படக்குறிப்பு,வணிகரும், யாழ் முஸ்லிம் பேரவையின் தலைவருமான முகமட் தாகீர். தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தில் வெல்வதற்கு சில வழிமுறைகளை கையாண்டனர். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக யாழ் மாவட்டத்திலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களை வெளியேற்றினாலும் விடுதலைப்புலிகள் எமது மதம் சார்ந்த விடயங்களில் தலையிடவில்லை. முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கும் விடுதலைப் புலிகள் தடை போட்டதில்லை என்கிறார் முகமட் தாகீர். ஆனால் தற்போது நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களையும் பழிவாங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறுகின்றார். வடக்கிலே விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் யுத்தம் நடந்த காலத்தில் விடுதலை புலிகள் மற்ற மக்களுடன் எப்படி நடந்து கொண்டார்களோ அவ்வாறு முஸ்லிம் மக்களுடனும் நடந்து கொண்டனர். அதனால் எங்களை வெளியேற்றியமைக்காக அவர்களை மனவருத்ததுடன் மன்னித்துள்ளோம் எனக் கூறும் முகமட் தாகீர், 1997க்கு பிறகு நாம் இந்த பூமியில் காலடி வைக்கும்போது முதன்முதலில் வந்தவன் என்ற வகையில் எங்களை யாழ். பேருந்து நிலையம் முன் இரு கைகூப்பி வரவேற்ற காட்சி இன்னமும் என் கண்களில் உள்ளது என்று கூறியவர், அவர்கள் கொண்டு வந்த குளிர்பானங்களை குடிக்க வைத்தது அவர்களின் பாசம் எனவும் கூறுகிறார். விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர். இன்று என்ன நடக்கிறது? யாரோ ஒரு பயங்கரவாதிகள் செய்த குற்றத்திற்காக ஒட்டுமொத்த இலங்கையில் உள்ள முஸ்லிம்களை வதைப்பதும், பள்ளிவாசல் மீது கல்லெறிவதும், தீ வைப்பதும், வீதியில் செல்கையில் ஏளனமாக பார்பதும் முஸ்லிம் மக்களின் இன்றைய நிலையாகிவிட்டதாக முகமட் தாகீர் கூறுகிறார். சில இடங்களில் வியாபார நடவடிக்கையினை தடுப்பதுமாக செயற்படுகின்றனர். இவ்வாறு ஒரு கீழ்தரமான செயலை தமிழ் மக்கள் எமக்கு செய்யவில்லை என்கிறார் முகமட் தாகீர். யாழ்ப்பாணத்தில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தமிழ் மக்களுடன் இணைந்து தொழில் செய்து பொருளாதாரத்தை விஸ்தரித்துள்ளோம். அவர்களும் தமது புரிந்துணர்வுடன் தமது அன்பை வெளிப்படுத்துகின்றனர் எனக்கூறும் அவர், எம்மீதான விடுதலை புலிகளின் செயற்பாட்டுக்காக சில கல்விமான்களும் மன்னிப்பு கேட்டதும் நம் மனதில் நிற்கின்றது. நாம் யாழ்ப்பாணத்தில் உள்ள வரை தமிழ் மக்களுடன் நெருக்கமாக இருப்போம் எதிராக செயற்படமாட்டோம் என உறுதிபட கூறுகிறார் முகமட் தாகீர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்களின் நிலை முஸ்லிம் சமூகத்தை பயங்கரவாத சமூகம் என்பது கவலை அளிக்கிறது எனவும், பெண்கள் அணியும் முகத்திரையினை தடை செய்தவர்கள் ஒன்றை விளங்கிகொள்ள வேண்டும். ஒருசிலர் செய்த இந்த தாக்குதலுக்கு அதன் ஒட்டுமொத்த சமூகத்தையும் பழிவாங்கும் செயற்பாடுதான் இடம்பெற்றுகொண்டு இருக்கிறது எனவும் தெரிவித்த அவர், இதற்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் சிறுபாண்மையினரால்தான் தாங்கள் தோற்றுள்ளோம் என்பதனால் இவ்வாறு செயற்பட்டு சிறுபான்மையினரை தம்வசம் திருப்புப முயற்சிக்கின்றனர் என குற்றஞ்சாட்டுகிறார். அதைதான் கிறிஸ்தவ பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கூறியுள்ளதாகவும் அவருக்கு பின்னால் முஸ்லிம் மக்கள் எமது ஆதரவை கொடுப்போம் எனவும் தெரிவித்தார். பெண்கள் முகத்திரை தொடர்பில் நம் மத தலைவர்கள் தமது தலைமை போட்டி காரணமாக இவ்வாறு செய்திருக்கின்றனர் என கூறிய முகமட் தாகீர், இது தனக்கு மிகவும் கவலையாகவும் மனவருத்தமாக உள்ளதாகவும் கூறிகிறார். பட மூலாதாரம்,Getty Images அண்மையில் கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம் பெண்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது அவர்களை இறங்கும்படி அரசு படை கூறியுள்ளது என்ற தகவலை தெரிவித்த முகமட் தாகீர், ஊடகங்களும் முஸ்லிம் சமூகம் என்று கூறி எம்மை பயங்கரவாதிகள் போல் சித்திரிக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். "என்னதான் நடந்தாலும் நாம் மீண்டும் ராஜபக்ஷ குடும்பத்தை ஆதரித்து அவர்களை ஆட்சியில் ஏற்றுவோம் என கனவில் கூட நினைக்க வேண்டாம். நாம் வாக்களிக்கமாட்டோம்" என உறுதிபட பேசினார் முகமட் தாகீர். நோன்பு காலத்தில் நாம் பெரும் இன்னல்களை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். இந்த குண்டுதாரிகளின் சரியான பின்னணி கண்டறியப்படாவிட்டால் இந்த நாடு பயங்கரவாதத்தினால் முற்றாக அழிந்து போகும் என்பதை திட்டவட்டமாக கூறினார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு தவுஹீத் ஜமாத் என்று கூறி முஸ்லிம்களுக்கு எதிரான நிலையை உருவாக்கி இருக்கின்றனர் என கூறும் இவர், இலங்கையில் ஜம்மியத் உலமா என்ற சபை உள்ளதாகவும், இதுதான் முஸ்லிம்களின் மிக உயர்ந்த சபை அந்த சபையில் தவுஹீத் ஜமாத், ஜபிலிக் ஜமாத், ஹரிகா என்ற அங்கங்ளை கொண்டதுதான் இந்த அமைப்பு என்றார். ஆகவே தவுஹீத் ஜமாத் அமைப்பை மட்டும் தடை செய்து அவர்களை மட்டும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது தலைவர்கள் தமக்குள் உள்ள போட்டியை சாதகமாக பயன்படுத்தி முஸ்லிம்களை பழிவாங்கும் செயலாக உள்ளதாகவும், இதை ஒரு சூழ்ச்சியாகவே பார்பதாகவும் முகமட் தாகீர் தெரிவித்தார். ஜம்மியத் உலமா சபை சரியான முறையில் நடந்துகொள்ளாததால்தான் தவுஹீத் ஜமாத் அமைப்பின் விடயங்களை இவர்கள் பெரிதுபடுத்தி கிழக்கில் முஸ்லிம்களை பழிவாங்கிகொண்டு இருக்கின்றனர் என்றார் முகமட் தாகீர். தவுஹீத் ஜமாத் அமைப்பு ஒரு நேர்வழிகாட்டும் அமைப்பு. பயங்கரவாதிகள் இல்லை என்கிறார் அவர். "இங்கு ஆயுதங்களுடன் பிடிக்கபட்டவர்களை பயங்கரவாதிகளாக தண்டிக்கப்படுவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் தமிழ் மக்கள் ஆயுதங்களுடன் பிடிபட்டால் அது விடுதலை புலிகள் என்று கூறுபவர்கள் ஏன் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எங்களை மட்டும் ஒட்டுமொத்த முஸ்லிம்களாக பறைசாற்றுகின்றனர்" எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார். அவர்களின் நோக்கமே இலங்கையில் முஸ்லிம் மக்களை ஒடுக்கி உயர்ந்த இடங்களுக்கு வரவிடாமல் தடுப்பதும்தான் என குற்றஞ்சாட்டும் இவர், பொருளாதாரத்தை இல்லாமல் செய்வதே இவர்களின் முக்கிய விடயம் என்கின்றார். முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் எவரும் இவ்வாறான செயலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் முஸ்லிம்களுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் பயங்கரவாதத்தை முற்றாக எதிர்கின்றோம். இஸ்லாமில் பயங்கரவாத்திற்கு இடமில்லை எனவும் கூறும் முகமட் தாகீர், தற்கொலைக்கும் இடமில்லை; அவ்வாறு தற்கொலை செய்பவர்களை முஸ்லிம் என நாம் ஏற்றுகொள்ளப்போவதில்லை எனவும் உறுதியாக தெரித்தார். BBC News தமிழ்“விடுதலை புலிகள் காலத்தில் கூட இப்படியான அச்சுறுத்தலை எதி...விடுதலை புலிகள் இயக்கம் எம்மை வெளியேற்றியதற்காக தமிழ் மக்கள் எம்மை வெறுக்கவில்லை, அதுபோல் விடுதலை புலிகள் எம்மை வெளியேற்றியதற்காக நாமும் தமிழ் மக்களை வெறுக்கவில்லை என்கிறார் அவர்.

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 

2 weeks ago
எனக்கு பிடித்த கதையும், கானமும், நடிப்பும், காட்சியும் நிறைந்த காட்சி...............💔 https://www.youtube.com/watch?v=s4MME4U6ScE துரோகத்தாலும் பழிகளாலும் வீழ்ந்த உண்மைகளும் நியாயங்களும் அடுத்த தலைமுறைக்கும்.கடத்தப்படும்.