1 week 5 days ago
உங்கள் தன்னிலை விளக்க்கத்தை முற்றாக ஏற்று கொள்கிறேன். அவருக்கு நானா பட்டம் அளித்தவரும், நான் ஏனைய திரிகளில் சகஜமாக பேசும் உறவுதான் (சீமான் திரி தவிர😀). உங்கள் மூவர் இடையிலான பல விடயங்களை கண்டும் தலையிடாமல்தான் இருந்தேன். ஆனால் ஒரு ஆதாரமற்ற கருத்து, மீள மீள சொல்லப்படுவதால் உண்மை ஆகி விடக்கூடாது என்பதாலேயே என் கருத்தை பகிர்ந்தேன். தனிப்பட்டு உங்களை சீண்டும் அல்லது கருத்தை முடக்கும் நோக்கில் அல்ல. அவரும் எனக்கு உங்களை ஒத்த சம தூரத்தில் உள்ள உறவுதான். அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும், சில இடங்களில் அவர் அளவைதாண்டி விமர்சனம் செய்யும் போது அதையும் விமர்சித்துள்ளேன்( குசா அண்ணை மொழியில் - எல்லா பக்கமும் சுழண்டு சீன அடி 😀) . குறிப்பாக போராடி இருக்கவே தேவையில்லை அல்லது இலங்க அடையாளத்துள் கரையலாம் போன்ற கருத்துக்களை அவர் சொல்லும் போதோ, துரையப்பாவை விதந்துரைக்கும் போது, இப்படி பல சந்தர்பங்களில் என் எதிர்வினை காட்டமாகவே வந்துள்ளது.
1 week 5 days ago
கிரிக்கேட்டை பற்றி பலதை தெரிந்தும் தொடர்ந்து போட்டியில் பின் நிலையில் நிப்பது.............அது தான் எனக்கு புரிய வில்லை😁😄😃😛.....................
1 week 5 days ago
தற்போது வந்த தகவல். பாகிஸ்தான் விளையாடுவதாக அறிவித்துள்ளது. மிகப் பெரிய போட்டி. பணம்தான்.
1 week 5 days ago
அந்த “நானா”, கனடா என்ற படியால்…. உங்களது படமும், அவரின் கமெராவில் இருக்கலாம். 🤣
1 week 5 days ago
டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀 படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.
1 week 5 days ago
இது உண்மையான பெயரும் ..படமும் என்பதை உறுதிப்படுத்தவும் ...எந்தப் பத்திரிகையும் அப்பட்டமாக பெயரை வெளியிட தயங்குமே...🤣
1 week 5 days ago
@goshan_che @ரசோதரன் சுமை தாங்கி போட்டியில் உங்கள் இரண்டு பேரில் வெல்வது யார்😄😃...........................
1 week 5 days ago
போட்டி நடக்குமானால் கொழும்பு மைதானத்தில் நடக்கும் பெரியப்பு புள்ளிய எப்படி போடப் போகிறார் போட்டி நடந்தால் தெரியும் உண்மையான பலம்மான அணி எது என்று.................. விளையாட்டில் எதுவும் நடக்கலாம்........................
1 week 5 days ago
இரண்டு அணிகளும் விளையாடினால் தான் பண மழை கொட்டும்.....................
1 week 5 days ago
பாகிஸ்தானை இந்தியாவுடன் விளையாட வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடந்தவண்ணம் உள்ளன. வங்காளதேசமும் கலந்து கொண்டிருக்கினம். வங்காளதேசமும் அவர்களை விளையாடும்படி கோரியுள்ளது. இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிப்பதாக பாகிஸ்தான் தெரிவாளர் மோக்ஸின் கூறியுள்ளார்.
1 week 5 days ago
இலங்கை அணியில் நிரந்தரமாய் ஒரு தமிழனை விளையாட விடனும்............................. தொடர்ந்து சிங்களம் விளையாடினால் தோல்வி தான் முரளிதரன் விளையாடின காலத்தில் இலங்கை அணி அதிக வெற்றி............... இப்ப இருக்கும் சின்ன அணிகளே இலங்கை அணிக்கு சவால் விடும் நிலைக்கு வந்து விட்டினம்..........................
1 week 5 days ago
நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும் முதல் மைச்சில் சுதப்பின மாதிரி சுதப்பாம விளையாடினால் எளிதில் வெற்றி................. அமெரிக்க அணியின் மட்டையடி நல்ல நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் கப்டன் சரினா நேரத்தில் சரியான வீரர்களிடம் பந்தை கொடுத்தால் நல்லம்........................
1 week 5 days ago
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள் Published By: Vishnu 09 Feb, 2026 | 08:17 PM நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். https://www.virakesari.lk/article/238259
1 week 5 days ago
நாட்டில் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு – தினமும் 100 புதிய நோயாளிகள்
Published By: Vishnu
09 Feb, 2026 | 08:17 PM

நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், 20–40 வயதினருக்கு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
https://www.virakesari.lk/article/238259
1 week 5 days ago
செம்மணி புதைகுழிக்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் - அகழ்வுப் பணிகள் மார்ச்சில்! Published By: Vishnu 09 Feb, 2026 | 07:02 PM செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நின்றது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை (09) நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது. மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால் அடுத்த கட்ட அகழ்வுபணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அன்றைய தினத்திற்கு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது. அதேவேளை புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் இன்றையதினம் சென்று பார்வையிட்டனர். மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக கடந்த ஆண்டு நீதி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியுள்ளமையால் இவ்வாண்டுக்கு புதிய பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு, நிதியினை மீள பெற வேண்டியுள்ளமையால் புதிய பாதீட்டை மன்றில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/238256
1 week 5 days ago
ஒன்பதாவது போட்டியும் இனிதே முடிந்தது. நாளைக்கு பாகிஸ்தான் அமெரிக்கப் போட்டி. பாகிஸ்தானுக்கு முதல் சோதனை.
1 week 5 days ago
வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி கட்டும் பணி நிறைவு பெற்றது. வெள்ளை அடிக்க வேண்டும். வட்டு தெற்கு நா.பரராஜசிங்கம் ஐயா வீட்டு மலசலகூடம், குழி வெட்டிக் கட்டும் செலவு விபரம். @goshan_che அண்ணை, @வாத்தியார் அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா, பரராஜசிங்கம் ஐயாவிற்கு நாம் ஒத்துக்கொண்ட மிகுதி 50000 ரூபாவை வழங்கட்டுமா? பொன்னாலை வேலைகள் சீலனுடைய தாமதத்தால் (வைத்தியசாலையில் நெருங்கிய உறவினர் இருந்ததால்) பிந்துகிறது. நாளை எஞ்சியுள்ள 3 பைக்கற், குறைப் பைக்கற் சீமந்தில் கல் அறுப்பதாக கூறினார்.
1 week 5 days ago
கனடா படு தோல்வி அடைய வில்லை கவுரவமானதோல்வி...................................
1 week 5 days ago
நான் 135ரன்ஸ் தாண்ட வாய்ப்பு இருக்கேன கனித்தேன் போர போக்கை பார்த்தால் கனடா அணி150அடிக்கும் போல் தெரியுது......................
1 week 5 days ago
ஓமானை வீழ்த்தி அணிகள் நிலையில் இலங்கையை முந்தியது ஸிம்பாப்வே Published By: Vishnu 09 Feb, 2026 | 07:33 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக ஸிம்பாப்வே வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் நிகர ஓட்ட வேகம் அடிப்படையில் இலங்கையை முந்திக்கொண்டு ஸிம்பாப்வே முதலிடத்தில் இருக்கிறது. ப்ளெசிங் முஸராபனி, ரிச்சர்ட் எங்கரவா, ப்றட் இவான்ஸ் ஆகியோர் துல்லியமாக பந்துவீசி தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஸிம்பாப்வே இலகுவாக வெற்றி பெற வழிவகுத்தனர். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஓமான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதல் ஐந்து வீரர்களில் இருவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்ததுடன் மற்றைய மூவரும் 5 ஓட்டங்களுக்கு அப்பால் பெறவில்லை. ஸிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் ஓமான் சார்பாக விநாயக் ஷுக்லா (28), சுபியான் மெஹ்மூத் (25), நதீம் கான் (20) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். சுபியான் மெஹ்மூத், விநாயக் ஷுக்லா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களைப் பகிர்ந்திராவிட்டால் ஓமானின் நிலைமை இதைவிட மோசமாகி இருக்கும். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸராபனி 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரிச்சர்ட் எங்கரவா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் இவான்ஸ் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு 104 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 13.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் ஸிம்பாப்வேயின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர்களில் ஒருவரான டியொன் மயர்ஸ் (0), தடிவனாஷே மாருமணி (21) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கை 30 ஓட்டங்களாக இருந்தபோது ஆட்டம் இழந்தனர். மற்றைய ஆரம்ப வீரர் ப்றயன் பெனெட், ப்றெண்டன் டெய்லர் ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை அண்மிக்க உதவினர். எனினும் அவர்கள் இருவரும் 68 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ப்றெண்டன் டெய்லர் உபாதை காரணமாக ஓய்வு பெற்றார். ஓட்டங்கள் பெறுகையில் அவர் நொண்டியவாறு ஓடியதை அவதானிக்க முடிந்தது. ப்றெண்டன் டெய்லர் 31 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஓட்டங்களை ஸிம்பாப்வெ சிரமப்படாமல் பெற்றது. ப்றயன் பெனெட் 48 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஆட்டநாயகன்: ப்ளெசிங் முஸராபனி https://www.virakesari.lk/article/238257